புதன், 12 டிசம்பர், 2018

இரு உதயம் - இருதயம்! (இதயம்)


திருமூலர் - திருமந்திரம்
"இருதயந் தன்னில் எழுந்த பிராணன் "
                                               -  பாடல் - 2761


இரு உதயம் - இருதயம்! (இதயம்)
வலது கண்ணில் சூரிய உதயம்
இடது கண்ணில் சந்திர உதயம்!
இரு கண்களே இருதயம் எனப்படும்.

இதுவே ஞான விளக்கம்! மார்பல்ல இருதயம்?

 "இருதயத்தில் சுத்தமுடையவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள் " இது பைபிள் வாசகம்!

 இருதயமான இரு கண்ணிலும் ஒளியை தூண்டி தூண்டி கண்ணீர் விடவிட கண்மணி ஊசிமுனை துவாரத்தை மூடியிருக்கும் அழுக்கு மும்மலம்  அகன்று இரு - கண்ணும் - இருதயம் சுத்தமாகும்! அவரே உள் ஒளியை தேவனை தரிசிப்பர்!


எவ்வளவு உயர்ந்த ஞானம் இது! உலகில் தோன்றிய எம்மத ஞானியும் இதைத்தானே கூறுகின்றனர்! பின் ஏன் அடித்துக் கொள்கிறீர்கள்?!  இரு கண்மணி ஒளியைத் தூண்டி ஞான சாதனை செய்யச்  செய்ய ஞானக் கனல் எழும்பும் பிராணன் ஏழும்பும் உள் ஒளியோடு கூடும்!
ஆத்ம  ஜோதி தரிசனம் கிட்டும்!

பிராணன் என்றால் உயிர் சக்தி! பிராண வாயு வல்ல! ஒளிசக்தி!

திருமூலர் பக்தி கர்மம் யோகம் ஞானம் எல்லாம் சொல்லியிருக்கிறார்! ஞானமே முடிந்த முடிவாம் | ஞானமே பெறுவதே பேரின்பம் தரும்!

ஞானத்துக்கு நாம் நாட வேண்டியது ஒளியையே! இறைவன் பேரொளியல்லவா !

ஞானசற்குரு
சிவ செல்வராஜ் ஐயா,

நூல் : மந்திரமணி மாலை,
பக்கம் எண் : 202
Www.VallalYaar.Com 

திருமூலர் ஞான இரகசியம்

"நோற்று தவம் செய்யார் நூலறியாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே"
...................பாடல்−1642



இங்கே திருமூலர் ஞான இரகசியத்தையும் கூறுகிறார்!

நமது கண்மணி சுழல்கின்றதல்லவா? நம்  உடலில் உயிர் இருப்பதின் அடையாளம் சக்தி இருப்பதின் அடையாளமே மணியின் சுழலும் தன்மை!

நாம் உண்ணும் ஆகாரம் சக்தியை பெருக்கி சக்தியையூட்டி கண்மணி சுழற்சி இயல்பாக நடக்கிறது!

சோற்றுக்கு நின்று−நாம் உண்ணும் ஆகாரத்தால் நின்று கண்மணி சுழல்கின்றது என்கிறார் திருமூலர்!

கண்மணி உள் அக்னிகலை வரை இருகண் உள்ளேயும் நூல் போல் மெல்லிய நாடி உள்ளது.

தவம் செய்து நோன்பிருப்பவர் அறிவர்!

குருவருளினால் வைராக்கியத்துடன் கண்மணி ஒளியை பெருக்கி உள் நூல் போன்ற−மயிர்பாலம் வழி ஒளி பெருகி ஓடும் நெருப்பாறு பாயும்!

அக்னிகலையை ஆத்மஸ்தானத்தை அடையும்!

இடைப்பட்ட நூல் போன்ற நாடியையே நோன்பு தவம் செய்யாதவர் அறிய
மாட்டார்கள் என்று திருமூலர் கூறுகிறார்!

எவ்வளவு பெரிய ஞான அனுபவம் இரகசியம் இது தெரியுமா?!

புறத்தே செயல்பாடற்றவர்களுக்கு சம்மட்டி அடி!
அகத்தே தவம் செய்பவருக்கு அருளாசி!

ஞானசற்குரு திருசிவ செல்வராஜ் ஐயா..
நூல்:மந்திர மணிமாலை
பக்கம்:132

மலங்க மலங்க விழித்தேன் செய்வதறியாது!



மலங்க மலங்க விழித்தேன் செய்வதறியாது!
உலகச் சேற்றிலே வீழ்ந்து உழலும் மனிதன் இப்படித்தான் பேந்தப் பேந்த மலங்க விழிப்பான்!
சரியான வழிகாட்டுதல் இல்லையேல் அதோகதிதான்! வழிகாட்டுபவர் குரு!
ஞானத்துக்கு வழிசொல்லி விழியை திறந்து உணர்வூட்டி தவம் செய்யும் முறை சொல்லித் தருவார்!
ஞானசற்குரு!

ஞானதவம் செய்யும்போதும் செய்வதறியாது இறைவா என கண்ணீர் பெருகி உள்ளம் உருகி இருக்கையிலே இரு - கையிலே கழுக்குன்ற பெருமான் பெருந்துறையான் நீரை மாற்றி ஒளியை பெருக்கி மும்மலங்களை நீக்கி நம்மை காத்தருள்வான்!

ஞான அனுபவம் இது!
முதலில் கண்ணீர் ஆறாக பெருகி ஓடும்.
பின் நீர்வற்றி மலங்கழியும் மும்மலம் அகல ஆரம்பிக்கும்!
இப்படியே தவம் தொடர தொடர நம் ஆன்மா தூய்மையாகும்.
பிறவா பெருநிலை பெறலாம்! குருவருளால்!


ஞான சற்குரு திரு சிவ செல்வராஜ் ஐயா
நூல் : திரு மணி வாசக மாலை
பக்கம் : 122
குருவின் திருவடி சரணம்

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

திருவடியை பணியாதவரை கண்டு பெருமான் அஞ்சுகிறார்

இறைவன் திருவடியை பணியாதவரை கண்டு பெருமான் அஞ்சுகிறார்
(தில்லையில் அருளியது - அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)

புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு
அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 516

வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம்
திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 517

வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 518

கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு
அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 519

பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 520

வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன்
தாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 521

தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 522

தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா
அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 523

மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது
அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 524

கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 525

திருச்சிற்றம்பலம்

குரு வணக்கம் - பாம்பாட்டி சித்தர்


காற்று உடன் பொருள் ஆவி தத்த மாகவே
தானம் வாங்கி நின்ற எங்கள் சற்குருவினைப்
போற்றி மனம் வாக்குக் காயம் மூன்றும் பொருந்தப்
புகழ்ந்து புகழ்ந்து நின்று ஆடுபாம்பே 

பொய் மதங்கள் போதனை செய் பொய்க் குருக்களை
புத்தி சொல்லி நன்னெறியில் போக விடுக்கும்
மெய்ம் மதந்தான் இன்னதென்று மேவ விளம்பும்
மெய்க்குருவின் பாதம் போற்றி ஆடுபாம்பே

வேதப்பொருள் இன்னதென்று வேதம் கடந்த
மெய்ப்பொருளை கண்டு மனம் மேவி விரும்பிய
போதப் பொருள் இன்னதென்றும் போதனை செய்யும்
பூர்ண சற்குரு தாள் கண்டு ஆடுபாம்பே

உள்ளங்கையில் உள்ள பொருளை
உண்மையுடன் காட்டவல்ல உண்மைகுருவை
கள்ள மனந் தன்னை தள்ளி கண்டுகொண்டு
அன்பாய் களித்து களித்து ஆடுபாம்பே

அங்கையிற் கண்ணாடி போல ஆதி வத்துவை
அறிவிக்கும் எங்கள் உயிரான குருவை
சங்கையற்  சந்ததமும் தாழ்ந்து பணிந்தே
தமணியப் படம் எடுத்து ஆடுபாம்பே

காயம் நிலை அழிகையைக் கண்டு கொண்டு பின்
கற்புநிலை யுள்ளிற் கொண்டு எக்காலமும் வாழும்
தூய நிலை கண்ட பரிசுத்த குருவின் 
துணையடி தொழுது நின்று ஆடுபாம்பே

கூடுவிட்டு கூடுபாயும் கொள்கை யுடைய
குருவின் வல்லபம் எவர் கூற வல்லவர் ?
வீடு பெரும் வகையை மேன்மேலும் காட்டும்
மெய்க்குருவை பணிந்து நின்று ஆடுபாம்பே

அட்ட திக்கும் அண்ட வெளியான விடமும்
அடக்கிய குளிகையோடு ஆடிவிரைவாய்
வட்டமிட்டு வலம் வரும் வல்ல குருவின் 
மலரடி தஞ்சம் என்று ஆடு பாம்பே

கற்பகாலம் கடந்தாதி கர்த்தாவோடுன்
கடமழி யாது வாழுங் காரண குரு 
பொற்பாதமே தஞ்சமென்று போற்றுதல் செய்து
பூரணச் சிந்தையோடு ஆடு பாம்பே!

வச்சிரத்திற் கோர் பழுது வாய்க்கு மாயினும்
வல்லுடம்புக் கொருமுறை வாய்த்திடாது
மெச்சுகட மமுள்ள எங்கள் வேத குருவின் 
மெல்லடி துதித்து நின்று ஆடு பாம்பே 


வெள்ளி, 19 அக்டோபர், 2018

கணபதி தாசர் - நெஞ்சறி விளக்கம்

தந்தை தாய் நிசமுமல்ல
சனங்களும் நிசமுமல்ல
மைந்தரும் நிசமுமல்ல
மனைவியும் நிசமுமல்ல
இந்த மெய் நிசமுலல்ல
இல்லறமும் நிசமுலல்ல
சுந்தர நாகை நாதர்
துணையடி நிசமுமென்பர் நெஞ்சே


எட்டுடன் இரண்டு மாகி இருந்ததோர் எழுத்தை காணார்
விட்டதோர் குறியுங் காணார் விதியின்றன் விவரங் காணார்
தொட்டதோர் குறியுங் காணார்
சோதி மெய்ப்பொருளும் காணார்
கிட்டுமா நாகை நாதர் கிருபை தானுரைப்பாய் நெஞ்சே!!!

உடலினை நிசமென் றெண்ணி உலகெலாம் ஓடியாடி
கடல் மரக் கலப்பாய் கம்பக் காகம் போல் கலக்கமுற்றாய்
திடமருள் குருவின் பாதஞ் சிக்கென பிடித்து நின்றால்
நடமிடு நாகை நாதர் நற்பதம் பணிவாய் நெஞ்சே


தண்ணீரில் இருக்கும் மீன்கள் தண்ணீரிற் கருவைப் பித்திக்
கண்ணினாற் பார்க்கும் போது கயலுரு வானற் போல
நண்ணிய குருவை கண்டு நாதனால் உருவை சேர்த்து
விண்ணின் மேல் நாகை நாதர் மெல்லடி வெளிப்பர் நெஞ்சே

சூரிய காந்தம் பஞ்சைக் சுட்டிடுஞ் சுடரே போலக்
கூறிய அடிமூலத்தின் குண்டலிக் கனலை மூட்டி


கணபதி தாசர் - நெஞ்சறி விளக்கம் 

குணங்குடியார் மெய்ப்பொருளே


கண்ணே
கருத்தே
என்
கண்மணியே
கண்ணிறைந்த
வண்ணடங்கா
வெட்ட
வெளியே
பராபரமே
குணங்குடியார்


கண்ணே
கருத்தே
என்
கண்மணியே
கண்ணிறைந்த
வண்ணடங்கா
வெட்ட
வெளியே
பராபரமே
குணங்குடியார்


நற்பவளக் கொம்பே
நவின்ற மணிப் பெட்டகமே
கைப்பொருட்கு
மெய்ப்பொருளே கண்ணே
பராபரமே

துன்பக் கடலைத்
தொலைத்தோர்
துயர் தீர்க்குங்
கம்பமற்ற
பாற்கடல்
கண்ணே
பராபரமே

மூலக் கனல் மூட்டி மூட்டிவரு
காலரையுங் காலால் உதைத்
அருளாய் கண்ணே பராபரமே 

வியாழன், 18 அக்டோபர், 2018

பத்திரக்காளி - மகாமாயை


"ஆகின்ற சக்தியின் உள்ளே கலைநிலை
ஆகின்ற சக்தியின் உள்ளே கதிரெழ
ஆகின்ற சக்தியின் உள்ளே அமர்ந்தபின்
ஆகின்ற சக்தியின் அத்திசை பத்தே"
............பாடல்−1732


சக்தியின்−இடதுகண் ஒளிபெருகி உள்ளே பதினாறு கலையும் எழ−தவம்

செய்வதால் ஏற்படும் அனுபவம்−வலது கண் ஒளியும் பெருகி சூரிய கலையும் சந்திரகலையும் ஊடுருவிப்பாயும்!

இதையே ஔவையார் குறளிலே "சக்தியாம் சந்திரனை செங்கதிரோன் 
ஊடுருவ முக்திக்கு மூலமது" என்று பாடியுள்ளார்!காண்க!

அங்ஙனம் சக்தி பெருகி சக்தி கலையாகிய சந்திர கலையை சிவகலையாகிய 
சூரியகலை ஊடுருவி உள்பாய்ந்து அக்னிகலையில் போய் நிற்கும்!!

சூரிய சந்திர கலைகள் இணைந்து அக்னிகலையில் போய் சேரவும்
மூன்று சுடரும் ஒன்றாகி ஜீவஸ்தானம் ஆத்மஜோதி ஒளிரும்!

அந்த இடத்திலே திசை பத்தையும் ஆள்கின்ற,அண்டமெல்லாம் நிரம்பிய 
சக்தி அமர்ந்து நம்மை காக்கின்றாள்.

எட்டாகிய வலதுகண் இரண்டாகிய இடதுகண் சேர்ந்து உள்ளே பத்தாகிய 
மூன்றாம் கண் திறக்கும்!

பத்து அறையில் வீற்றிருப்பவள் அந்த சக்தி! காளி!

அதனால்தான் பத்திரக்காளி!!பத்தாகிய அறையில் வீற்றிருக்கும் 
காளிதான் "வாலை" மகாகவி காளிதாசனுக்கு அருளிய பத்திரக்காளி!மாகாளி!
மகாமாயை!உலகன்னை!

எங்கும் நிறைந்த அவள் திசை பத்தையும் ஆக்கிரமித்த அவள் குழந்தையாக கன்னியாக கன்னியாகுமரியிலே "வாலை"யாக தவக்கோலத்தில் நின்றருள்கிறாள்!

"ய"−பத்து!கன்னி"ய"குமரி!

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

ஆன்மீகத்தில் - பெருந்துறை எங்கு உள்ளது?


நம் பெருந்துறை கண்மணி ஊசி முனை வாசலே!

உள்ளே சிவமான ஒளி!ஊசிமுனை வாசல் என்ன பெருந்துறையா?
மிக மிக சிறிய இடம்தானே! ஏன் பெருந்துறை என்று சொன்னார்கள்?

வாசல் ஊசிமுனை அளவு சிறியது தான்!


உள்ளே போனால் பிரபஞ்சமே அங்கேதான் பெரிய அளவிடமுடியாத பெரும் வெட்டவெளி!

அங்கே போகும் வாசலுக்கு அதனால் தான் பெருந்துறை எனப்  பெயர்!

இந்த பெருந்துறையில் என்றும் பிரியாமல் இருக்கும் இறைவனைப் பற்றி பாடு! ஆடு!

வாய் மணக்க அவன் புகழையே பேசு!

பேசிக்கொண்டே இரு!

அடியேன் பரம்பொருளின் பெரும்புகழையே பாடுகிறேன், எழுதுகிறேன்!!

ஞான சற் குரு சிவசெல்வராஜ்



வாலையின் கடைக்கண் பார்வை

அபிராமியே காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி,காந்திமதி, கற்பகாம்பாள்,
வடிவுடை நாயகி, அகிலாண்டேஸ்வரி, இப்படி எண்ணிலா பெயரோடு
வடிவோடு விளங்குபவளே கன்னியாகுமரி பகவதியம்மனாக, பாலா,
வாலைக்குமாரியாகவும் விளங்குகிறாள்.  அருள்பலிக்கிறாள்!

மலையாக, அலையாக, கலையாக விளங்குபவளும் இவளே!

வாலையின் கடைக்கண் பார்வை பட்டாலே போதும்  நாம் கடைத்தேற
நம் இருகண்ணும்  உள் போகையில் ஒளி பெருகி உட்செல்லும் போது
கடைசியாக சென்றடைவது அக்னிகலை, ஆத்மஸ்தானம், அது தான்
மூன்றாவது கண். நெற்றிக்கண் ஞானக்கண்! அந்த இடமே
வாலையின் இருப்பிடம்.

அந்த கடைசியிலுள்ள கண் நம்மை பார்த்தால்
நமக்கு இடர் இல்லையே! பேரின்பமே! ஞானமே! மோட்சமே! 
வாலையின் கடைக்கண் பார்வை கிட்டிட ஞான தவம் செய்!
அம்பிகையிடம் யாசி!  வாலையை சரணடை! வெற்றி கிட்டும்!

காமாக்ஷி , மீனாக்ஷி, விசாலாக்ஷி என்பதில் "அக்ஷி"  என்ற
சமஸ்கிரத சொல்லுக்கு கண் எனப்பொருள்! காமாக்ஷி ஜோதியே,
 மீனாக்ஷி மெய் ஞானமே, விசாலாக்ஷி வினை அறுத்தலே தந்து
அருள் புரியும் தாயாம்!


www.vallalyaar.com

வெள்ளி, 12 அக்டோபர், 2018

பத்தாமிடம் இருக்கும் வாலையை பற்ற முடியுமா?

பத்தாமிடம் இருக்கும் வாலையை பற்ற முடியுமா? பக்தியோடு
அவள் திருவடியை பற்றனும்!

பற்ற வைக்கணும் திருவடியாகிய கண்மணி ஒளியை!
குருவருளால் பற்றவைத்து நம் தவத்தால் பற்றின ஒளியை பெருக வைக்கணும்!

ஒளி பெருகப் பெருக நம் திருவடி மெய்ப்பொருளை பற்றப் பற்றவே நம்முள் ஒளி
பெருகி உட்புகுந்து பத்தாமிடத்து தாயிடம் வாலையிடம் பணிவுடன் சேரும்!

புறப்பற்றை விட்டு அகப்பற்றுடன் பத்தை அடைய வேண்டும் என்ற ஒரே வைராக்கியத்துடனே
தவம் செய்தால் பற்றி விடலாம்!

வேறு யோகங்கள் செய்து பூஜைகள் செய்து ஊர் ஊராக சென்று
தீர்த்த யாத்திரைகள் செய்து அலைந்து பணம் பொருள் செய்தும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை!

தாயை காண தவம் தான் செய்ய வேண்டும்! தாயை காண திருவடியான நம் கண்மணி ஒளியை
பற்றித்தான் தவம் செய்ய வேண்டும்! முதலில் வாலை தாயின் திருவடியை சிக்கென பிடி! பிறகு
உன்னிடம் உள்ள வாலைத்தாயின் திருவடியான உன் கண்ணைப்பிடி! பக்தியோடு தாயை
பணிந்து பணிவோடு உறுதியோடு உன் உள்ளே இருக்கும் வாலைத்தாயின் பாதம் சேர்!

இதை தவிர எந்த மார்க்கமும் கிடையாது!  இருப்பதாக சொல்வர் அறியாமையில் சொல்வர்!
இருப்பாதமே கதி என இருந்தாலே ஞானம்!

அபிராமி பட்டரும் மகாகவி காளிதாசரும் பக்தியில்
ஊறி ஞானத்தில் திளைத்தவர்கள்! நம் வள்ளலாரும் அப்படிதான்! பிறக்கும் போது யாரும்
ஞானி அல்ல!!? பிறந்து கடுமையாக தவம் செய்து பக்தி செய்து ஞானம் பெற்றவர்களே எல்லோரும்!!

எனவே உலகத்தாயாம் வாலைத்தாயின் பாதம் பணி!!
  

திரிபுர சுந்தரி


திரிபுரம் என்றால் சூரியனாக விளங்கும் வலது  கண்
சந்திரனாக விளங்கும் இடது, இவ்விரண்டு கண்ணும் உள்ளே
சேரும் இடமான அக்னி நிலை! ஆக மூன்று இடமும் சேர்ந்தால்
முச்சுடரும் ஒன்றாகும் நிலையே திரிபுரமே சௌந்தர்ய தேவதையான
பாலாவின் இருப்பிடமாகும்! நடமாடும் கோயிலான மனித உடலில்
வாலை என்ற பாலாவிற்கு இடம் முச்சுடரும் ஒன்றாகும்,
நம் சிரநடுவே உள்விளங்கும் நம் ஜீவஸ்தானமே! அவளே மனோன்மணி
தாய் எனவும் சித்தர்களால் போற்றப்படுகிறாள்

ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா

வியாழன், 4 அக்டோபர், 2018

மரண அவஸ்தை! ஞான தவம் செய்வோருக்கு கிடையாது!


*ஸ்ரீ நாலாயிர திவ்யப்பிரபந்தம்*
" எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி தமர் பற்றும் போது "

பாடல் -425

ஊர் எல்லை என்பது போல நமது உடல்! எல்லை அது தான் தொடக்கமும் ஆகும்! எது? கண்மணி மத்தியே! உள்ளே இருக்குது உயிர்! எமன் வந்து எல்லை வழியாக உள் நுழைந்து உயிரை பற்றி இழுக்கும் போது கண்மணி ஓட்டை சிறிதல்லவா?

வலிக்கும் இது தான் மரண அவஸ்தை! நாம் தவம் செய்யச் செய்ய கண்மணி மத்தியிலுள்ள
ஓட்டை சற்று பெரிதாகி திரை அகன்று சுலபமாக போக வர வழிவகுத்துவிடும்! மரண அவஸ்தை ஞான தவம் செய்வோருக்கு கிடையாது!

கண்மணியை பற்றிய நமக்கு காலன் ஒரு பொருட்டேயல்ல! காலன் வரும் முன்னே கண்பஞ்சடையுமுன்னே கண்ணனை நினை! உணர்! தொழுது அந்த திருவடியை சிக்கென பற்றிக் கொள்! இரட்சிப்பான்! பரமபதம் சேர்ப்பான்! தமர்- ஓட்டை கண்மணி மத்தியிலுள்ள ஓட்டை. இறைவன் அது வழியாகத்தான் உயிர் கொடுத்தார்! எமன் அது வழியாகத்தான் எடுக்க வருவான்! ஜாக்கிரதை ஒளியை பெருக்கி உயிரை வளர்த்தால் எமன் வரமாட்டான்! செய் அல்லது செத்துமடி!


உடலை விட்டு உயிர் பிரிந்து, எம தூதர்களால் புதிதாக யாதனா சரீரம் பெற்று நரகம் கொண்டு சேர்ப்பர்! உன்னடி யாரான எனக்கு இந்நிலை வரலாமா? பரம்பொருளே காப்பற்று!


*ஞானசற்குரு சிவ செல்வராஜ் ஐயா*
*பரமபதம்*
 

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

எந்த அளவுக்கு பக்தி?

நாம் எந்த அளவுக்கு பக்தி காட்டுகிறோமோ அந்த அளவுக்கு தெய்வம் நம்மை  
பற்றியுள்ள பாசமாகிய மாயையை நீக்கி நமக்கு ஞானத்தை கொடுத்தருளும், சத்தியம்.

"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று"

நாம் செய்த பாவங்களை போக்கி நம் கூடவே இருந்து நம்மை காத்தருளும்.
என் சொந்த வாழ்க்கை அனுபவம். தெய்வமே நேரில் வந்து காட்சி கொடுத்து அருள் புரிந்தது! 
கண்ணியனானேன்! அன்பு என்றால் காதலல்ல! காமமல்ல!
 
காமத்தை வெல்லும் அன்பு. கருணையை தரும் அன்பு. உடலால் ஏற்படுவது அல்ல.
ஆன்மாவால் ஏற்படுவதுதான் அன்பு. ஆன்மாவுக்கு ஆன்மா நேசம் பரிவு காட்டுவது.
மனிதரிடம் மட்டும் ஏற்படுவது அல்ல.
எல்லா உயிரினங்களிடமும் ஏற்படுவது தான் அன்பு.அதற்கு ஈடு ஒன்றுமில்லை.
அன்பு ஏற்பட்டால் வருவது உள்ள நெகிழ்ச்சி. மன மகிழ்ச்சி. பேரானந்தம்.

ஞான சற்குரு திருசிவ செல்வராஜ் ஐயா.
நூல்:அருள்மணிமாலை
பக்கம்:53

www.vallalyaar.com

புதன், 26 செப்டம்பர், 2018

தீட்சை திருவடி என்பது என்ன?

மந்திர தீட்சை ? மந்திரம் சொன்னால் என்ன வரும்? ஒன்றும் வராது...
கையால் கண்ணை அழுத்தி விடுவதா?
தீட்சை பெறாமல் தவம் செய்ய முடியாது.

தொடாமல் தொட்டு உணர்வை ஏற்படுத்துவது தீட்சை...
தீ + அட்சம்  = அட்சம் கண் இருக்கும் தீயை தூண்டுதல்..

நினைவால்-உணர்வால் அட்சத்தில் இருக்கும் தீயை தூண்ட வேண்டும்.
அதை உணர்த்தி காட்டுவது தீட்சை.
உணர்வு எப்படி இருக்கும். உங்கள் கால் கட்டை இறைவன் என்று அதை எவ்வளவு நேரம்
நினைக்க முடியும்? கட்டை விரலை ஊசி வைத்து குத்துங்கள். உணர்வால் காலையே நினைக்க முடியும்.

அதுபோல் கண்மணி ஒளியை நினைக்க ஒரு உணர்வு வரும். உணர்வால் கண்மணி ஒளி பெருகி
உடல் முழுதும் பெருகும்....

கண்ணே சரீரத்தின் விளக்காக உள்ளது..


வியாழன், 16 ஆகஸ்ட், 2018

உயிரை வளர்ப்பதே உடம்பினை வளர்க்கும் உபாயம்!

உடல் பற்றின்றி உயிரை பற்றியே பரம்பொருளை அடைந்துவிடலாம்!
விட்டதடி ஆசை புளியம் பழத்தோட்டோடு என்பர்! நாம் உடலை வெறுக்க வேண்டாம்!

*உயிரை - உயிரொளியை ஓங்கச் செய்தாலே போதும்!*
*உடல் பக்குவமாகிவிடும்!*
இது புரியாத யோகிகள் உடலை அலட்சியபடுத்தி கெடுத்துக் கொள்வர்.
*இது மாபெறும் தவறு!*

பட்டினி கிடந்து உடலை வருத்தி கடுமையான யோகம் செய்வர்!

தவறு!

*உடலை புண்ணாக்காதீர்!*. உயிரை போற்றுங்கள்!

இன்னும் சிலர் உடல் மிக முக்கியம் எனக் கருதி காய சித்திக்காக கல்பங்கள் மூலிகை சாப்பிடுவர் இது அதைவிட முட்டாள்தனம்!

*வெறும் உடலை வைத்து என்ன செய்ய!*

*இதில் சூட்சுமம் என்னவென்றால், நீங்கள் உயிரை வளர்த்தால் போதும் உடல் பக்குவமாகிவிடும்!*

"உடம்பினை வளர்க்கும் உபயம் அறிந்து உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே"

- திருமூலர்

உயிரை வளர்ப்பதே உடம்பினை வளர்க்கும் உபாயம்!
அ - உ - வில் ஒளியை பெருகச் செய்வதே அந்த உபாயம்!
இதுவே மதியாகும்!
*ஞான சற்குரு சிவ செல்வராஜ் ஐயா*
நூல் : திரு மணி வாசக மாலை
பக்கம் : 107
குருவின் திருவடி சரணம்

www.vallalyaar.com

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

திருவடியை பற்றி ஸ்ரீஆண்டாள்

திருவடியை பற்றி ஸ்ரீஆண்டாள்
 
இறைவனைப் பற்றிக் கூறுவதே பக்தி இலக்கியம். இறைவனை பற்றிட வழிகாட்டுவதே ஞான நூற்கள். தமிழில் ஞானத்திற்கு பஞ்சமேயில்லை. தமிழ் வாழ்வதே ஞானிகளால் தான். தேவார , திருவாசக, திருமந்திர , திவ்ய பிரபந்தங்கள் சித்தர் பாடல்கள் தமிழின் பொக்கிஷம். காப்பியங்களும் இலக்கண இலக்கியங்களும் கூட இறைவனை தவிர்க்க முடியாது. உண்மையை மறைக்க முடியுமா? மெய்யை – மெய்ப்பொருளை ஒருவன் அறியவில்லை என்றால் அவனுக்கு அறிவு இல்லை என்றே பொருள்.







ஸ்ரீநாலாயிர திவ்யப் பிரபந்தம் தூய தமிழில் பாடப்பட்ட , பக்தி சுவை சொட்டச் சொட்ட பாடப்பட்ட உன்னதமான ஞானத்தை விளக்கி பாடப்பட்ட , ஆழ்வார்களின் – இறைவன் அருளில் ஆழ்ந்து அமிழ்ந்து போனவர்களின் அனுபூதியே. கண்ணா என்றாலே , கண்ணனை நினைத்தாலே , கண்ணான கண்ணனை உணர்ந்தாலே ஞான ஊற்று பொங்கி பாயுமே. அனந்தனை – அனந்தசயணனை, பத்மநாபனை , கோவிந்தனை – மகாவிஷ்ணுவை ஸ்ரீராமனை எண்ணித்துதிப்பவர் சேர்வார் வைகுண்டம்.
இறைவனை சைவர்கள் சிவன் என்றனர். வைஷ்ணவர்கள் நாராயணன் என்கின்றனர். இறைவனை முழுமுதற் கடவுளாகவே சைவர்களும் , வைஷ்ணவர்களும், சாக்தர்களும் , கிறிஸ்துவர்களும் , இஸ்லாமியர்களும் , சீக்கியர்களும், ஜைனர்களும் , சௌரம் , காணாபத்யம், கௌமாரம் இன்னும் எல்லோரும் ஆளுக்கொரு பெயர் வைத்து கொண்டாடுகிறார்களே தவிர இவர்கள் எல்லோரும் ஒன்றைத்தான் – ஒளியைத்தான் போற்றி வணங்குகிறார்கள்.
 
வைஷ்ணவர்கள் எல்லோருக்கும் ஒரு படி மேல். கண் ஆகா இருக்கும் கடவுளை கண்ணன் என்றே போற்றி துதித்தனர். கண்ணிலே மணியிலே ஒளியாக துலங்குபவனை – கிருஷ்ணமணியே அவன் உடலாக உருவமாக நிறமாக கருதி வர்ணித்தனர் உண்மை உணர்ந்த ஞானிகள். இறைவனுக்கு வேறு பெயர் எதற்கு – கண் அவன் தானே. கண்ணன் – கண் + அவன். கண்ணாக இருப்பவனே பரமாத்மா. கண்ணே உண்மை . உன் மெய். உன் மெய்யாகிய உடலில் இருக்கும் உண்மையான பொருள் மெய்ப்பொருள்.
 
கண்ணா , கண்ணே என கதறாத ஞானியரே இல்லை. கண் பெற்ற நாம் பாக்கியசாலிகள் அல்லவா. கண் ஒரு உறுப்பு மட்டுமல்ல. , இதே ஊனக்கண்ணே ஞானக்கண்ணாகவும் மாறும் என்பதை அறிந்தவன் பாக்கியசாலி.
 
கண்ணே – திருவடி. கண்ணைத்தான் கண்ணிலே மணியிலே ஒளியாக துலங்கும் அந்த கண்ணனைத்தான் – இரு கண்களைத்தான் இறைவனின் திருவடிகளாக திருப்பாதங்களாக ஞானிகள் பரிபாசையாக கூறி அருளினார்.
 
ஆழ்வார்கள் ஒருவரான ஸ்ரீஆண்டாள் தாயார் அவர்கள் அருளிய திவ்ய பிரபந்தங்கள் பாடல்களின் உண்மை ஞான விளக்கங்களை எங்கள் குருநாதர் ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள “பரம பதம்” என்ற புத்தகத்தில் இருந்து வெளியிடுகிறோம். முழுவதும் படியுங்கள்.
திருவடியை பற்றி ஸ்ரீஆண்டாள்

“மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் ” – பாடல் 477
 
மார்கழி – மார் – கழி. நம் மார்பு கண். கண்ணில் மத்தியில் இருக்கும் மும்மலத்திரை கழிக்க வேண்டும். விலக வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என ஆண்டாள் ஞானக்குழந்தை சொல்வது என்ன ? நீராடி மகிழ வேண்டுமாம்!?
எம்பாவாய் – என் பாவை – என் கண்மணிப் பாவை. என் பாவையை – கண்மணியை எண்ணி தவம் செய்தால் கண்ணீர் பெருகி வரும். அந்தக் கண்ணீரில் நீராட வேண்டும். இது தான் மார்கழி நீராடல். நீங்களும் நீராடி கண்ணன் அருள் பெறலாம்.
 
“ஆவாவென் றாராய்ந்து அருளேயோ ரெம்பாவாய்” – பாடல் 481
 
ஆவாவென்றாராய்ந்து – “அ” – வா – என்று ஆராய்ந்து! அவாகிய எட்டை , எட்டெழுத்தானவனை கண்ணனை “வா” என்று அழைத்து அருள் பெற வேண்டும். எப்படி? தகுந்த ஆச்சாரியனை பணிந்து ஞான உபதேசம் , ஞான தீட்சை பெற்று ஞான தவம் செய்து நம் கண்ணன் அருளை நாம் பெறலாம். “அ” விலிருக்கும் கண்மணி ஒளியை “வா” காட்சி தா, அருள்தா என வெளிப்பட செய்து ஞானம் பெறலாம். கண்மணி ஒளியை எண்ணி தவம் செய்தால் கிட்டும் கண்ணன் அருள்.
 
“மணிக்கதவம் தாள் திறவாய்” – பாடல் 482
கண்மணி ஊசி துவாரத்தை அடைத்துக் கொண்டிருக்கும் மும்மலமே கதவு போல் பூட்டிக் கொண்டுள்ளது. அந்த மணியின் மத்தியிலுள்ள கதவு – திரை திறந்தாலல்லவா கண்ணன் காட்சி கிட்டும். எனவே உங்கள் மணிக்கதவு திறக்க ஒளியை பெருக்க தவம் செய்.
 
“நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்” – பாடல் 489
மணிக்கதவம் எப்போது திறக்கும்? அதற்கு முதலில் நாம் தயாராக வேண்டும். நீராடி பிரம்ம முகூர்த்தத்தில் கண்ணனை எண்ணி தவத்தை ஆரம்பிக்க வேண்டும். கண்ணை மூடி செய்வதல்ல தவம்?! நிலை கதவு – இங்கே இமைகள். மூடிக்கிடைக்கும் இமைகள் முதலில் திறக்கட்டும். பின் கண்மணி ஒளியை நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து கண்ணீர் விட அந்த கண்ணீரில் நீராடி நம் வினை தீர மணிக்கதவம் திறக்கணும். தவம் செய்க. தவம் செய்க.
 
“செம்பொற் கழலடிச் செல்வா” – பாடல் 490
நாம் தவம் செய்யும் போது கண்கள் சிவந்து வெள்ளை விழி சிவப்பாகும். கண்ணாகிய திருவடிகளில் தோன்றும் ஒளி அந்தி மாலை சூரியனைப் போல தங்க ஜோதி போல காணும். இறைவனை செம்பொற் ஜோதி என்றே கூறினார். அந்த திருவடியே நமக்கு சகல செல்வங்களும் அருளும்.
 
“தழலுமிழ் சக்கரக்கை வேங்கடவர்” – பாடல் 504
தழல் உமிழ் சக்கரம் – நெருப்பை கக்குகின்ற சக்கராயுதம். நமது வலது கண்ணே சக்கரமாம். கண்ணில் மணியில் ஒளி – நெருப்பு உள்ளதல்லவா. தவம் செய்தால் ஒளி வெளியே வரும். அதைத்தான் தழல் உமிழ் என்றது. வலக்கையில் சக்கரம் கொண்ட வேங்கடவர். வலது கண் ஒளியை உமிழும். இடது கண் ஒலியை உமிழும். வலது கண் சக்கரம் இடது கண் சங்காகும். ஞானம்.
 
“வித்தகன் வேங்கட வாணனென்னும் விளக்கினில் புக என்னை” – பாடல் 506
ரொம்ப தெளிவாகவே இப்பாடல் கூறுகிறது. வித்தகன் வேங்கடவாணன் என்னும் விளக்கில் – ஒளியில் புக நாம் தவம் மேற்கொள்ள வேண்டும். நம் வலது கண் விளக்கு தான் ஒளி தான் நாம் உள் புக வேண்டிய இடம். இடது கண் தான் வேங்கடவன் இருக்கும் இடம்.
 
“கண்ண புரநகர் வாமனன் என்கைப் பற்றித்
தன்னொடும் கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே” – பாடல் 535
கண்ண புரநகர் – கண்ணாகிய நகரின் உள்ளே உள்ள ஒளியான வாமனன், சிறு ஜோதி. என் கைப்பற்றி – நமக்கு கை கண். அதுவே இறைவனின் கால் – திருவடி. நம் கைப்பற்றி தன்னொடும் – இறைவனோடு – கண்மணி ஒளியோடு ஞான தவம் நாம் நினைந்து உணர்ந்து நெகிழும் போது ஒளி தோன்றி நம்மை சேர்த்துக் கொள்ளும். இதைத்தான் நீ கூடிவிடு கோவிந்தனோடு என்கிறாள். கண்ணே – கண்ணபுரம் – உள் ஒளியே – கண்ணன். மனம் புறத்தே அலையாமல் அகத்தே கண்ணனோடு சேர வேண்டும். சேர்ந்தே இருக்க வேண்டும்.
 
“என்புரு கிஇன வேல்நெடுங் கண்கள்
இமைபொருந் தாபல நாளும்
துன்பக் கடல்புக்கு வைகுந்த னென்பதோர்
தோணி பெறாது ஊழல் கின்றேன்” – பாடல் 548
வைகுந்தம் என்பதோர் தோணி. வைகுந்தம் கைலாயம் என்பது எல்லாம் தோணியே. சம்பந்தமே இல்லாமல் இருக்கிறதா? சம்பந்தப்படுத்தி பார்ப்பதே புத்திசாலித்தனம். யூகித்து சிந்தித்து பொருள் காண்பதே அறிவுள்ளவன் செயல். ஒரு ஞானி பாடலை படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்றால் , மற்றொரு ஞானி பாடலே உதவியாகும். ஒரு சித்தன் சொன்ன பரிபாஷை விளக்கம் இன்னொரு சித்தர் பாடலிலே வரும். ஏன்னெனில் எல்லா சித்தரும் எல்லாம் வல்ல ஒரே இறைவனைப் பற்றியே கூறுகின்றனர். இறைவன் இருக்கும் இடத்தை பற்றி விட்டதனால் தான் அவர்களால் கூற முடிந்தது.
“தோணி போல காணுமடா அந்த வீடு” என பாடுகிறார் ஒரு சித்தர். நம் உடலில் இறைவன் இருக்கும் இடம் தோணி போல இருக்கிறதாம்.எப்படி? நமது கண்கள் தானே தோணி போல இருக்கிறது. இப்போது பாருங்கள் வைகுந்தம் என்பதோர் தோணி! கண்ணே! வைஷ்ணவர்கள் வைகுந்தமென்பர். சைவர்கள் கைலாயம் என்பர். இரண்டுமே கண்ணையே குறிக்கும். கண்ணின் மணியில் ஒளியாகத்தானே கண்ணன் – சிவம் இருக்கிறது. வைகுந்ததில் கண்ணன் , கைலாயத்தில் சிவம் ஆக கண்ணில் தான் சிவனும் விஷ்ணுவும். அரியும் சிவனும் ஒண்ணு என அறியாதவன் வாயிலே மண். வாயிலே மண் செத்த போது தானே. செத்துப் போவான். ஒரே கடவுள் வெவ்வேறு வடிவத்தில் பெயரில் விளங்குகிறார் என அறிந்தவர்களே ஞானிகள்.
 
தோணி என்பது கண்ணையே குறிக்கும். பரிபாஷை. சீர்காழி ஊரிலே கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானின் திருநாமம் தோணியப்பர். தோணியிலே இருக்கும் அப்பன். கண்ணிலே மணி ஒளியான கடவுள்.
 
தோணியிலே ஏறி – கண்ணில் ஏறி மணி ஒளியை அடைந்தாலே, பிறவியாகிய பெரிய கடலை தாண்டி போவது என்றனர் ஞானியர். அந்த முயற்சியிலே ஊனுருகி , எலும்பும் உருகுமே. கண்கள் தூக்கமின்மை போன்ற உடல் துன்பங்களும் தாண்டி தான் நம் கண்மணியை வைகுந்தநாதனை அடைய முடியும்.
 
“பொன்னடி காண்பதோர் ஆசையினால் என்
பொருகயற் கண்ணினை துஞ்சா” – பாடல் 549
இறைவனை – செம்பொற் ஜோதியை – கண்ணனை அவன் பொன்னடியை – திருவடியை காணும் ஆசையால் இரவும் பகலும் விடாது , தூங்காமல் , உடம்பும் சோர்ந்து போகும்படி ஞானதவம் செய்ய வேண்டும்.
 
“தீமுகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்” – பாடல் 607
தீமுகத்து – நம் கண்மணியில் ஒளி. முகத்தில் முகத்துக்கு முகமான கண்ணில் தீ. படுக்கை நாகணை கண்மணி மத்தியிலுள்ள திரை நாகத்தின் விஷம் போல நம் மும்மலத்திரை. திருவரங்கர் – திருவாகிய ஒளி அரங்கத்தில் – உள்ளே இருக்கிறார்.

“கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரிநீர்
செய்ப் புரளவோடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப்பொருளும் கொண்டாரே” – பாடல் 612
என் கை-கண். கைப்பொருள்கள் மும்மலத்திரை. ஞான தவத்தால் ஒளிபெருகி ஏற்கனவே இம்மும்மலத்திரையை கைக்கொண்டு விட்டார் இறைவன். கண்ணீர் பெருகி கால் வழிந்தோடிட கண்மணியில் திரு அரங்கத்திலே ஒளிர்கிறது செல்வம். எப்பொருளுக்கும் எட்டாதது, யாருக்கும் கிட்டாதவர். நான்கு வேத சொற் பொருள். எட்டாக – என் மெய்ப்பொருளாக என்னை ஆட்கொண்டு நின்றாரே. என் மெய்யிலே – உடலிலே உள்ள மெய்ப்பொருளாக அழியாப் பொருளாக உள்ளது ஒளியான இறைவன் மட்டுமே.
 
“கண்ணாலம் கோடித்து கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்
பெண்ணாளன் பேணும் ஊர் பேரும் அரங்கமே” – பாடல் 615
கண்ணிலே ஞாலம் இருப்பதை கோடித்து காட்டி, நம்மை கன்னியான ஜீவாத்மாவை சேர்த்துக் கொள்வான். நம் கை – கண்ணைப் பிடிப்பான் கண்ணன். அவன் ஜீவர்களாகிய பெண்களை ஆளும் பரமாத்மா. புருஷோத்தமன். அவன் இருப்பது நம் கண்ணாகிய அந்தரங்கத்திலே கண்மணி மத்தியில் உள்ளே ஒளியாக. அவன் உலகிலே இருக்கும் ஊர் பேரும் ஸ்ரீரங்கமே. அரங்கமே. அந்த அரங்கத்திலே கண்மணி உள்ளே இருப்பதால் அவன் பெயரும் அரங்கன். கண்ணாலம் செய்து ஞானம் அருள்வான்.
 
“செங்கச்சுக் கொண்டு கண்ணாடை ஆர்த்துச்
சிறு மானிடவரைக் காணில் நாணும்
கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர்
கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா” – பாடல் 620
சிவப்புகச்சு கொண்டு கண்ணாடை ஆர்த்துச் – ஞானதவம் – கண்ணில் மணியை உணர்ந்து செய்கையில் கண் சிவந்து கண்ணில் சிவப்பு ஆடை போர்த்தியது போல காணும். சாதாரண மனிதரை காண நாணி பார்க்கமாட்டார்கள். தவம் செய்வோர் மற்றவரை ஏறிட்டு பார்க்க மாட்டார்கள். கொங்கை தலம் – நம் குவிந்திருக்கும் கண்ணே. தவம் செய்வோர் கண்மணியை எண்ணியே நினைத்தே பார்பர். கண்மணி ஊசிமுனை வாசலினுள் உள்ள ஒளியான கோவிந்தனுக்கு அல்லாது வேறு யாரும் வாசலில் போக முடியாது. ஒளி ஒன்றே உட்புகும்.
 
“கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சிப்
பழகி கிடப் பேனை” – பாடல் 627
கண்ணன் என்னும் கருந்தெய்வம் – கண்மணி ஒளியான கண்ணன் – ஒளியான தெய்வம் தவம் புரிவோருக்கு அடிக்கடி காட்சி கொடுப்பதால் அதைப் பார்த்து பார்த்து பழகி அந்த ஆனந்தத்திலேயே மூழ்கி கிடப்பார்கள். கண்மணி கருப்பு ஆனதால் கருந்தெய்வம் என்றார். அந்த கருந்தெய்வம் தான் கண்ணன். நீலவண்ணன்.
 
“கடைக்கண் என்னும் சிறைக்கோலால் நெஞ்சூடுருவ
அவன் மார் வணிந்த வனமாலை” – பாடல் – 629
கடைக்கண் – கண் கடைசி – இரு கண்களும் உள்ளே போய் சேரும் கடைசி இடம் அதுவே கடைக்கண். அது சிறை கோலாம். கடைக்கண்ணால் பார்த்தல் நாம் அவன் அடியாராவோம். பக்தி சிறையில் அகப்படுவோம். நெஞ்சு என்பது கண். ஊடுருவ என்றால் கண்மணி வாசல் வழி உள் புகும் என்பதாம். அவன்மார் அணிந்த வனமாலை. இரண்டு நீள மாலை – நாடி உள்ளே ஒன்றாகும். அதையே வனமாலை உருவகிக்கப்பட்டது.
 
“கோவிந்தற்கோர் குற்றவல் இம்மைப் பிறவி
செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவந்தான் என்” – பாடல் – 635
கோவிந்தன் – கண்ணபிரானுக்கு பிறந்த இப்பிறவியிலேயே தொண்டு செய்யாமல் இனி வேறு என்ன தவந்தான் செய்து என்ன பயன்?!
 
நம் கண்மணி ஒளியை பற்றி தவம் செய்தும், கண்ணனைப் பற்றி உலகுக்கு உரைத்து எல்லோரையும் அவன் அடியாராக்கிட வேண்டும். பிறந்த இப்பிறவியிலேயே செய்து விட வேண்டும். இப்பிறவி தப்பினால் இப்பிறவி வாய்க்குமோ! யாரறிவார். அதனால் இன்றே இக்கணமே ஒளிக்கண்ணனை பிடி.
ஞான தானம் செய்க. ஞான தவம் செய்க.
மேலும் பார்க்க www.vallalyaar.com 👁️👁️

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

ஞானத்தாழிசை


சுழியாகிய முனைகண்டபின் உற்றாருற வற்றாய்
சூதும்பல பொய்பேசிய தொழிலும் பிறர்க்கிட்டாய்
வழியாகிய துறைகண்டபின் அனுட்டானமு மற்றாய்
வழங்கும் பலநூல்கற்றிடு நினைவும் பிறர்க்கிட்டாய்
விழியாகிய மலர்கண்ட பின் உயர்ச்சனை யற்றாய்
மெய்ந்நீறிடு திருமந்திரம் விட்டாய் சிவமுற்றாய்
அழியாப்பதி குடியேற்றினை அச்சம்பல வற்றாய்
யாரொப்பவர் நிலையுற்றவர் அலைவற்றிரு மனமே!

நெஞ்சிற் பொருளடி கண்டபின் நெஞ்சிற் பகையற்றாய்
நேசத்தோடு பார் மங்கையர் மேலும் நினைவாற்றாய்
மிஞ்சிச்சொலு முறையாண்மையும் வீம்பும் இடும்பற்றாய்
விரதங்களும் வேதங்களும் வீணாக மறந்தாய்
அஞ்சும் உடலாய் கண்டபின் ஆசைத்தொடர் பற்றாய்
ஆருந்திருக்கோயில் சிவம் அதுவும் தனில் உற்றாய்
தஞ்சம் எனும் ஞானக்கடல் மூழ்குந் திறமாகித்
தாள் சேர்ந்தனை குறைவேதினி சாலியாதிரு மனமே!

நாசிநுனி நடுவேதிருக் கூத்தாகிய நடனம்
ஞானக் கண்ணாலதனை நாடிச் செயல் கண்டு
சீசீயெனு முரையற்றனை சினமற்றனை உயிர்கள்
செய்யுமந் நினைவற்றனை நேசத்துடன் கூடிக்
கூசிக்கூல வரவற்றனை கோளற்றனை பாவக்
குடியற்றனை நலமுற்றனை குடியேறினை மேலாங்
காசிப்புனல் தனில்மூழ்கினை கரையேறினை காட்சி
கண்டாய் அரண் கொலுவாகிய சபை மேவினை மனமே

வெளிபெற்றிடு சொருபப்பொருள் வெளியாகிய ஒளியில்
விளையாகிய நாதத்தொனி விந்தின் செயல்கண்டு
களிபெற்றனை தயவுற்றனை பிறவிக் கடலென்னும்
தளையற்றனை உலகத்தினில் வரவற்றனை காணா
ஒளிபெற்றனை மயலற்றனை ஒழிவற்றனை ஓதும்
உரையற்றனை களிபெற்றனை பயனற்றனை ஊறல்
குளிபெற்றனை அரனுற்றிடு கொலுவுற்றனை கோமான்
கொடைபெற்றனை அறிவுற்றனை கோளற்றனை மனமே


பத்தோ டிருகலையாகிய பனிரெண்டில் நாலும்
பாழ்போகிட மீண்டேவரும் பதியின்கலை நாலும்
பெற்றோடி வந்திங்கேரிய பேரமைந்தனை கண்டு
பேசும் நிலையோடும் உறவாகி பிணக்கற்றாய்
கற்றோருடன் கற்றோமெனும் வித்தாரமு மற்றாய்
கானற்புன லோகப்பிடி மானத்தையு மற்றாய்
சித்தோடிரு சித்தாகிய சிற்றம்பல மீதே
சேர்ந்தாய் குறைதீர்ந்தாய் இனிவாழ்வாயிரு மனமே

அல்லற்படு மோரொன்பது வாயில் பெருவாசல்
ஆறுமறி வார்கள் அறியார்க ளொருவாசல்
சொல்லப்படு தில்லைச்சிறு வாசற்படி மீதே
சூழும்பல கரணாதிகள் வாழும் மணிவாசல்
தில்லைப்பதி யருகே யடையாள மெனலாகும்
சேருங்கனி காணும்பசி தீரும் பறந்தோடும்
சொல்லப்படு மல்லற்பல நூற்கற் றதனாலே
சின்னஞ்சிறு வாசல்புக லாமோசொலு மனமே

விண்டு மொருவர்க்கும் உரையாடப் பொருள்தானும்
பீஜாட்சர வீதித்தெருக் கோடிமுடிந் திடத்தே
கண்டு மிருந்தார்க்குள்  ளிருபன்னிரு காலற்
காணமது தானும் பனிரெண்டாங் குலம்பாயும்
பிண்டம் புகு மண்டம்புகு மெங்கும் விளையாடிப்
பீடமெனும் நிலைசேர்ந்திடு பெருமைதனைக் காண்பாய்
என்றும் மொழியாற்றார் பரத்தோடும் உறவாகி
ஏதும் உரையாமல் இருப்பார்க ளரிமனமே



அகத்தியர் - அடுக்கு நிலை போதம்

சொல் பிறந்த இடம் எங்கே?
முப்பாழ் எங்கே?
துவார பாலகர் எங்கே?
நல்ல சங்கு நதி எங்கே?
வைகுண்டம் எங்கே?
நாரணன் ஆழ் இலை மேல் படுத்தது எங்கே?
அல்லல்படும் ஐம்பூத ஒடுக்கம் எங்கே?
ஆறுஐந்து இதழ் இரண்டும் முளைத்தது எங்கே?
சொல்ல வல்லார் உண்டானால் அவரை
நாமும் தொழுது வணங்கி குருவென பணிந்து
வழங்கல் ஆமே


உந்தி எனும் நிலை எங்கே?
அறுகோணம் எங்கே?
ஓங்கார நிலை எங்கே?
உற்ற இடம் எங்கே?
மந்திரமும் சாத்திரமும் பிறந்தது எங்கே?
மறைநாலும் விரித்த அயன் தாணும் எங்கே?
முந்திவரும் கணபதியும் பிறந்தது எங்கே?
முக்கோண முளை எங்கே? அடிதான் எங்கே?
இந்த வகை பொருள் அறிந்து சொல்வார் தம்மை
இறைவன் என்றே கருதி இயம்பல் ஆமே

பலபதத்தில் பொங்கி வரும் வழிதான் எங்கே?
பரிந்து முறைகொண்டு நின்ற அறியும் எங்கே?
உற்பனம் ஆம் கரு நின்று விளைந்தது எங்கே?
ஒருபாதம் தூக்கி நின்ற அடையாளம் எங்கே?
தற்பரமாய் ஆகிநின்ற நிலைதான் எங்கே?
சர்வஉயிராய் எடுத்த சிவனும் எங்கே?
இப்பொருளை அறிந்து உரைக்கும் பெரியோர் தம்மை
இறைவன் என்றே கருதி இயம்பல் ஆமே

அடி முடியும் நடுவான நிலையும் எங்கே?
அறுசுவையும் கொண்டு ஒளித்த இடமும்  எங்கே?
 வடிவான ஐந்து தலை மாணிக்கம் எங்கே?
வரையான ஊமை எனும் எழுத்தும் எங்கே?
இடம் ஆக ஆடி நின்ற பாதம் எங்கே?
இச்சையுடன் பேசி நின்ற எழுத்தும் எங்கே?
அடைவு ஆகப் பொருள் அறிந்து சொல்வார் தம்மை
அடி தொழுது குரு என நம்பல் ஆமே 


சற்குருவும் சகநிதியும் ஆனது எங்கே?
சாகாத தலை எங்கே?
வேகாக்கால் எங்கே?
முப்பொருளும் ஒரு பொருளாய் நின்றது எங்கே?
முனை எங்கே  தலை எங்கே முகமும் எங்கே?
நன் கலம் ஆயிரத்து எட்டு இதழும் எங்கே?
நாலுகை ஒருபாதம் ஆனது எங்கே?
இப்பொருளை அறிந்து உரைக்கும் பெரியோர் தம்மை
இறைவன் என்று கருதி இயம்பல் ஆமே

அகத்தியர்



செவ்வாய், 22 மே, 2018

நடுமூக்கு – இது பரிபாசை.

மெய்ப்பொருள் பரிபாஷை விளக்கம் :-->
திருமூலர் திருமந்திரத்தில்

                 “நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
                  வாட்டம் இல்லை மனைக்கும்  அழிவில்லை “

                               என்கிறார்.

இங்கு திருமூலர் நமது நாட்டம் நடுமூக்கில் வைக்கணும் என்கிறார்.

ஒரு சித்தர் புருவமத்தி என்றார், இங்கு திருமூலர் நடுமூக்கு என்கிறார்.

எது சரி.?

நடுமூக்கு – இது பரிபாசை. ஞானத்திற்கு பொருள் காணனும்.! மேலோட்டமாக பார்த்து மூக்கு என்று ஏமாந்து போகாதீர். மூக்கை பார்த்து மோசம் போனவர் ஏராளம். இதன் விளக்கம் என்ன?

தண்ணீர் ஊற்றும் பாத்திரம் உண்டல்லவா அதில் நீர் வரும் பகுதியை மூக்கு என்று தானே சொல்வோம். நமக்கு கண்ணீர் வரும் கண்ணே மூக்கு அதன் நடுபகுதியே ஊசிமுனை துவாரம் உள்ளதாகும் அதனுள் தான் ஊசிமுனை அளவு ஜோதி உள்ளது! இதில் தான் நம் நாட்டம் இருக்க வேண்டும். கண் என நேரடியாக சொல்லாமல் நடுமூக்கு என்றது நாம் சிந்தித்து தெளிய வேண்டும். குரு மூலம் உபதேசம் பெற்று தெளிய வேண்டும் என்பதற்காக. தான்.

மேல் கூறிய விளக்கத்திற்கு சான்று மற்றும் ஒரு திருமந்திர பாடலே

                           “நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்

                           தோட்டத்து மாம்பழந்தூங்கலு மாமே” 

நயனம் என்றால் கண். இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை.

மேலும் பார்க்க Www.VallalYaar.Com

திங்கள், 21 மே, 2018

மரண அவஸ்தை!

*ஸ்ரீ  நாலாயிர திவ்யப்பிரபந்தம்*

" எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி தமர் பற்றும் போது "   பாடல் -425

  ஊர் எல்லை என்பது போல நமது  உடல்! எல்லை அது தான் தொடக்கமும் ஆகும்! எது? கண்மணி மத்தியே! உள்ளே இருக்குது உயிர்! எமன் வந்து எல்லை வழியாக உள் நுழைந்து உயிரை பற்றி இழுக்கும் போது கண்மணி ஓட்டை சிறிதல்லவா?

வலிக்கும் இது தான் மரண அவஸ்தை! நாம் தவம் செய்யச் செய்ய கண்மணி மத்தியிலுள்ள
ஓட்டை சற்று பெரிதாகி திரை அகன்று சுலபமாக போக வர வழிவகுத்துவிடும்! மரண அவஸ்தை ஞான தவம் செய்வோருக்கு கிடையாது!

கண்மணியை பற்றிய நமக்கு காலன் ஒரு பொருட்டேயல்ல! காலன் வரும் முன்னே கண்பஞ்சடையுமுன்னே கண்ணனை நினை! உணர்! தொழுது அந்த திருவடியை சிக்கென பற்றிக் கொள்! இரட்சிப்பான்! பரமபதம் சேர்ப்பான்! தமர்- ஓட்டை கண்மணி மத்தியிலுள்ள ஓட்டை. இறைவன் அது வழியாகத்தான் உயிர் கொடுத்தார்! எமன் அது வழியாகத்தான் எடுக்க வருவான்! ஜாக்கிரதை ஒளியை பெருக்கி உயிரை வளர்த்தால் எமன் வரமாட்டான்! செய் அல்லது செத்துமடி!

 உடலை விட்டு உயிர் பிரிந்து, எம தூதர்களால் புதிதாக யாதனா சரீரம் பெற்று நரகம் கொண்டு சேர்ப்பர்! உன்னடி யாரான எனக்கு இந்நிலை வரலாமா? பரம்பொருளே காப்பற்று!
 

*ஞானசற்குரு சிவ செல்வராஜ் ஐயா*
*பரமபதம்*

ஞாயிறு, 13 மே, 2018

கண்ணே இறைவன் பாதம் (திருவடி) என்பதை உறுதிபடுத்தும் .....




கண்ணே இறைவன் பாதம் (திருவடி) என்பதை உறுதிபடுத்தும் சிலவற்றை காண்போம்:-->


1. கடோபநிஷத்தில் எமதர்மனிடம் நசிகேதன் உயிர் பற்றி, கடவுள் பற்றி கேட்க அவர் கூறுகிறார்


“இறைவன் மனித தேகத்தில் சின்முத்திரை அளவான இடத்தில் புகையில்லாத ஜோதியாக விளங்குகிறான்.”


2. கீதையில் கிருஷ்ண பகவான் “மந்திரங்களில் நான் காயத்ரி” என்கிறார். காயத்ரி மந்திரத்தின் சாராம்சம் “எல்லாவற்றிற்கும் மேலான அப்பெரோளி கடவுளை தியானிப்போமாக என்பதே.”


3. திருமூலநாயனார் திருமந்திரத்தில் நமது நாட்டம் நடுமூக்கில் வைக்கணும் என்கிறார். தண்ணீர் ஊற்றும் பாத்திரத்தில் நீர் வரும் பகுதியை மூக்கு என்று சொல்வோம். நமக்கு கண்ணீர் வரும் கண்ணே மூக்கு . அதன் நடுபகுதியே ஊசிமுனை துவாரம் உள்ளதாகும். அதனுள் தான் ஊசிமுனை அளவு ஜோதி உள்ளது! இதில் தான் நம் நாட்டம் இருக்க வேண்டும் என ஞான ரகசியத்தை வெளிப்படுத்துகிறார் திருமூலர்.


4. “நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத் தோட்டத்து மாம்பழந்தூங்கலுமாமே” என்கிறார் திருமூலர். நயனம் என்றால் கண். இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை.


5. “பிராண நீரானதில் உருண்டு திரண்டதை கண்டு அறிந்திடு நீ.” என்கிறார்கள் சித்தர்கள். கருவிழிக்குள் பிராணநீர் உள்ளது. அதில் தான் கண்மணி மிதந்து கொண்டிருக்கிறது.


6. “ஊசிமுனை காட்டுக்குள் உலாவியே இருக்கலாம் வாரீர்” என்கிறார் ஒரு சித்தர்.


7. “கண்மணி ஊசிமுனை வாசலுக்குள் பிரவேசித்தால் அது பெருங்காடாமே” என்கிறார் ஒரு சித்தர்.


8. “அண்டம் போல் அழகியதாம் கண் மூன்றுடையதாம் ஒற்றி கடலருகே நிற்கும் கரும்பு” என்கிறார் பட்டினத்தார். கரும்பு என்பது கரும் - பு , கருப்பு பூ. அது கண்மலரையே குறிக்கும்.


9. கண்ணில் ஒளியை உணர்ந்து கண்ணை விழித்து பேசாது சும்மா இரு என்பதுவே ஆதிகுரு தட்சிணாமூர்த்தி சொல்லாமல் உணர்த்திய ஞான இரகசியம்.


10. சின்முத்திரை என்பது கண்ணையே குறிக்கும்.


11. ஒன்றான கடவுளோடு நான் ஒன்ற நம் கண் ஒளியில் சும்மா இருந்து விழித்திருந்து தவம் செய்வது ஒன்றே வழி.


12. விழி தான் ஞானம் பெற ஒரே வழி. விழித்திருந்து தவம் செய்வது ஒன்றே நம் கடமை.


13. பரப்பிரம்மமான, அண்டம் போல் அழகான கண்மணியின் உச்சியான புருவமத்தி கண்மணி மத்தியிலுள்ள ஒளி” என்கிறார் சித்தர் காகபுசந்தர்.


14. “கையற விலாத நடுக்கண் புருவபூட்டு கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு.” என்று புருவம் கண் என்று வெட்ட வெளிச்சமாக்கி விட்டார் வள்ளல் பெருமான். வள்ளலார் தான் இரு கண்களாலும் செய்த பெரும் தவத்தை தானே வியந்து போற்றுகிறார்.


15. அங்கமதில் முதன்முதலாய் தோன்றிய தலம் எது? சொல்ல வல்லார் உண்டானால் குரு என பணியலாமே என்கிறார் ஒரு சித்தர். (அங்கமதில் முதன்முதலாய் தோன்றிய தலம் கண்)


16. புருவமத்தி, நடுமூக்கு என பரிபாசையாக சொல்லப்படுவது கண்ணே.


17. பல ஞானிகள் புருவமத்தியான கண்ணை இருதயம் என்பர். இருதயம் என்பதை பிரித்து பாருங்கள். இரு + உதயம் . நம் உடலில் வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், ஆக இதைத் தான் இந்த சூரிய , சந்திர உதயத்தை தான் இரு உதயமாக (இருதயமாக) கூறி உள்ளனர் ஞானிகள். இதை சிவவாக்கியர் எந்த ஒளிவு மறைவு மில்லாமல் கூறி உள்ளார்.


18. கண்ணன் என்ற தமிழ் வார்த்தை நம் உடலில் இறைவன் துலங்குவதை குறிக்கும். கண் + அவன் = கண்ணன். இந்த கண்ணனை – கண் ஒளியைத் தான் நாம் தியானிக்க வேண்டும்.


19. வள்ளலார் திருவருட்பாவில் கண்ணே இறைவனை அடையும் வழி என பல்வேறு பாடல்களில் தெரிவிக்கிறார்.


20. “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” – திருக்குறள்


21. “கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான் மண்ணுமுயிர் பதியுமாறு” – காகபுசுண்டர்


22. “நேத்திரத்தை காகம்போல் நிச்சயமாய் நிற்க ஆத்துமத்தில் ஆனந்தமாம்” – காகபுஜண்டர்.


மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய் என்று எண்ணிக்கொண்டிருப்பது அறியாமையே!

இனியாவது உணர்வீரோ! அருட்பெருஞ்ஜோதி!

சனி, 21 ஏப்ரல், 2018

ஞானத்தில் ஞானம் பரிபூரண நிலை

அறுவகை சமயத் தறுவகை யார்க்கும்
வீடுபே றாய்நின்ற விண்ணோர் பகுதி
கீடம் புரையுங் கிழவோன்

ஆறு வகை சமயத்தோர்களும் பற்பல வழி செயல்படுபவர்களும் வீடுபேறடைந்தவர்கள்
எனும் இடம்  விண்ணின் ஒரு பகுதி அது எது தெரியுமா? சிவத்தின் முன் கண்ணுக்கு
புலப்படாத கிருமி போன்றதே என்று மாணிக்கவாசகர் இயம்புகிறார்! அப்படியாயின்?
பக்தியால் முக்தி, கர்மாவினால் முக்தி யோகத்தினால் முக்தி சாலோகம், சாமீபம், சாரூபம்
என்ற வீடுபேறுகளை தான் மாணிக்கவாசகர் சிவத்தின் முன் கண்ணால் பார்க்க முடியாத
அளவு மிகச்சிறிய அற்ப கிருமி புழு என்கிறார்! உண்மையான வீடுபேறு என்பது ஞானத்தில்
முக்தியே. அதுவே சாயுச்சிய நிலையாகும்! ஞானத்தில் ஞானம் பரிபூரண நிலை !  சிவத்தோடு
சிவமாக ,கலப்பதே! அதற்க்கு வழி ஞான சற்குருவை நாடி பணிந்து ஞானோபதேசம் ஞான
தீட்சை பெற்று தவம் செய்வது தான்!  அப்போது தான் கிழவோன் வயது முதிர்ந்தவர் சொல்ல
முடியாத காலத்திற்கு முற்பட்டவர், அதாவது நமது பழைய பரமசிவம் தான் அருள் தருவார்!
சீவனான நம்மையும் சிவமாக்குவார் 

ஞான சற்குரு சிவசெல்வராஜ்   அய்யா -         www.vallalyaar.com

வியாழன், 29 மார்ச், 2018

சிவனேன்னு சும்மா இரேண்டா

*உலகோரே ஞானதவம் "சும்மா இருப்பதே"!*

"சிவனேன்னு சும்மா இரேண்டா" என சுட்டித்தனம் பண்ணும் குழந்தைகளை அதட்டி இருத்துவார்கள்!

ஞானம் எங்கெல்லாம் எப்படியெல்லாம் போதிக்கப்படுகிறது பார்த்தீர்களா?

*ஆகையால் கண்ட கண்ட யோகங்கள் செய்து கெட்டுப் போகாதீர்கள்!*

*சும்மா இரு!*

இறைவன் உங்களை ஒன்றும் செய்யச் சொல்லவில்லை?

சும்மா இரு என்றுதானே சொல்கிறார்?

ஏன்?

எதையாவது செய்து மேலும் மேலும் பாவ மூட்டையை பெரிதாக்குகிறாய்?

ஒன்றும் செய்யாதே!

சும்மா இரு!

*ஞான சற்குரு சிவ செல்வராஜ் ஐயா*

நூல் : திரு மணி வாசக
          மாலை

பக்கம் : 129

குருவின் திருவடி சரணம்

புதன், 28 மார்ச், 2018

வேதங்கள் முடிவாக கூறுவது

ரிக்,யஜீர்,சாம,அதர்வண வேதங்கள் முடிவாக கூறுவதும்,இராமாயணம்,மகாபாரதம்,இதிகாசங்கள் இயம்புவதும்,பதினெட்டு புராணங்கள் கூறுகின்றதும்,ஆறு அந்தங்களும் எல்லா ஆகமங்களிலும் சொல்லப்படுவது இறைவனை பரம்பொருளைப் பற்றியே!
அப்படிப்பட்ட எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே−என்றே உரைக்கின்றன.!

அந்த ஒருவன் நம் மெய்யிலே−உடலிலே கண்மணியிலே ஒளியாக உள்ளான் என்பதாகும்!

நம் கண்மணி ஒளியில் மனதை வைத்து தவம் செய்தால் நாதத்தொனி கேட்கலாம்!

நாதமுடிவில் *வாலைத்தாய் அமுதம் தரக் காத்திருக்கிறாள்.*

அவளருளால் அமுதம் உண்டு நாயகன் பரம்பொருள் சந்நிதியை அடையலாம்.

"நாட்டம் இரண்டும் ஒளியானால் நமனில்லையே"

இறைவனை நாடுகின்றவர்க்கு இது எளிதே!"

*"கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்ததாம்"நாம் இறைவனை நாடிப்போனால் இறைவன் நம்மை நாடி வேகமாக வந்திடுவார்!*

ஞானசற்குரு திருசிவசெல்வராஜ் ஐயா..

🙏👁👁🙏..
நூல்:திருவருட்பாமாலை மெய்ஞான உரை
மூன்றாம் பகுதி..

பக்கம்:86

ஞாயிறு, 25 மார்ச், 2018

பயம்

வன்புலால் வேலும் அஞ்சேன்
வளக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத்தாடுகின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலாதவரைக் கண்டால் அம்மநாம்  அஞ்சுமாறே

வலிமையான உடல் கொண்டவன் கைவேலுக்கு அஞ்சமாட்டேன் !
பெண்களின் கடைக்கண் பார்வைக்கும் விழுந்து விடமாட்டேன் !
எலும்பும் உருகும் படியாக நோக்கிஇருந்து  - விழித்திருந்து
அம்பலத்தாடுகின்ற என் அற்புத திறம்மிகுந்த மணியை
போற்றி புகழ்ந்து தவம் செய்து பேரின்பம் தரும் இறையருளை
பருக மாட்டாதவரை அப்படிப்பட்டை அன்பில்லாதவரை கண்டால் தான் எனக்கு பயம் என்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்! தவம் செய்யாதவரை கண்டு தான் பயம். வேறு யாருக்கும் எதற்கும் பயமில்லை என்கிறார்!

ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யா

புதன், 21 மார்ச், 2018

இறைவன் இயல்பு!

"நாம் தேடா முன்னம் நமைத்தேடிப் பின்புதனை
நாம் தேடச் செய்கின்ற நற்றாய்"

இதுதான் இறைவன் இயல்பு!

கருணை!

இறைவன் தாயாகி முதலில் தன்னை உணரச் செய்கிறார்!

பின் நாம் பக்குவம் பெற்று நன்னெறியடைந்து தவம் செய்து நாம் தேடிக் கண்டடையச் செய்கிறார் தாய்!

உடலைதந்த தாயைத்தான் பெரிதாக சொல்கிறோம்!

உயிரைதந்த தயாபரனை நாம் நினைக்கிறோமா?

*அம்மையும் அப்பனுமான இறைவன் உயிர்தராவிட்டால் உடல் சவம்தானே!*

கொஞ்சமாக தன்னை காட்டும் தாய் ஆன இறைவனை பின்நான் கெஞ்சி கூத்தாடி *தவமியற்றி பரிபூரணமாக உணர வேண்டும்!*

*ஞான சற்குரு சிவ செல்வராஜ் ஐயா*

நூல் : திருவருட்பாமாலை
          மூன்றாம் பகுதி

பக்கம் : 51

குருவின் திருவடி சரணம்

இரு உதயம் - இருதயம்!

"இருதயந் தன்னில் எழுந்த பிராணன் "

பாடல்_ 2761

இரு உதயம் - இருதயம்! வலது கண்ணில் சூரிய உதயம் இடது கண்ணில் சந்திர உதயம்! இரு கண்களே இருதயம் எனப்படும் இதுவே ஞான விளக்கம்! மார்பல்ல இருதயம்? "இருதயத்தில் சுத்தமுடையவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள் " இது பைபிள் வாசகம்! இருதயமான இரு கண்ணிலும் ஒளியை தூண்டி தூண்டி கண்ணீர் விடவிட கண்மணி ஊசிமுனை துவாரத்தை மூடியிருக்கும் அழுக்கு மும்மலம்  அகன்று இரு -கண்ணும் - இருதயம் சுத்தமாகும்! அவரே உள் ஒளியை தேவனை தரிசிப்பர்! எவ்வளவு உயர்ந்த ஞானம் இது! உலகில் தோன்றிய எம்மத ஞானியும் இதைத்தானே கூறுகின்றனர்! பின் ஏன் அடித்துக் கொள்கிறீர்கள்?!  இரு கண்மணி ஒளியைத் தூண்டி ஞான சாதனை செய்யச்  செய்ய ஞானக் கனல் எழும்பும் பிராணன் ஏழும்பும் உள் ஒளியோடு கூடும்!
ஆத்ம  ஜோதி தரிசனம் கிட்டும்!

பிராணன் என்றால் உயிர் சக்தி! பிராண வாயு வல்ல! ஒளிசக்தி!

திருமூலர் பக்தி கர்மம் யோகம் ஞானம் எல்லாம் சொல்லியிருக்கிறார்! ஞானமே முடிந்த முடிவாம் | ஞானமே பெறுவதே பேரின்பம் தரும்!

ஞானத்துக்கு நாம் நாட வேண்டியது ஒளியையே! இறைவன் பேரொளியல்லவா !

ஞானசற்குரு
சிவ செல்வராஜ் ஐயா,

நூல் : மந்திரமணி மாலை,
பக்கம் எண் : 202

செவ்வாய், 20 மார்ச், 2018

கடவுளை காணும் வழி


கடவுளை காணும் வழி :–
திருஅருட்பிரகாச வள்ளலார்.
(Www.VallalYaar.Com)

இறைவனை அடைவதாக சொல்லி 
பலர் செய்யும் தவறான
செயல் முறைகளை கீழ்கண்ட
பாடலின் மூலம் விளக்குகிறார் திருவருட்பிரகாச வள்ளலார்.

"காண்பது கருதி மாலொடு மலர்வாழ்
கடவுளர் இருவரும் தங்கள்
மாண்பது மாறி வேறுரு எடுத்தும்
வள்ளல் நின் உரு அறிந்திலரே"
– திருவருட்பா *(தலைப்பு : அறிவரும் பெருமை)
இந்த பாடலின் மெய்ஞ்ஞான விளக்கத்தை ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் “திருவருட்பா” பாடல்களுக்கு எழுதி உள்ள உரையில் “திருவருட்பா பாமாலை“ முதல் பகுதி என்ற நூலில் விளக்கி உள்ளார்கள்.
இறைவனை காண வேண்டுமென , திருமால் பன்றி உருவெடுத்து அதல பாதாளம் போனார் காண வில்லை. பிரம்மன் அன்ன பட்சியாக உருவெடுத்து ஆகாயத்தில் மேலே மேலே போனார் காணவில்லை. இதுகதை!? இவைகள் நமக்கு தெரிவிப்பது என்ன?
நம் உடம்பில் , யோகம் – தவம் செய்கிறேன் என்று பலர் மூலாதாரத்தை நாடி குய்யத்துக்கும் குதத்திற்கும் மத்திய பகுதியில் நினைவை நிறுத்தியோ , பிரணாயாமம் செய்தோ இன்னும் பல வழிகளிலும் தவம் செய்வர். அங்கே காண முடியாது இறைவனை.
இன்னும் சிலர் நம் உடல் சிரசில் மேல் நினைவை நிறுத்தி தவம் செய்வர். பிராணாயாமம் செய்து காற்றை நிறுத்துவர் . அபாயம். மூடும் தலையையும் இல்லாமல் செய்யும் தவம் இது. பேராபத்துக்கள் இதனால் ஏற்படும். பிரம்மன் சிரசுக்கு மேலே போன கதை இதுதான். காணவே முடியாது கடவுளை.
இந்த இரு வழியிலும் செல்வோர் தான் அதிகம்.
கீழே போனாலும்(குண்டலினி-வராகர்) காண முடியாது.
மேலே போனாலும்(பிரம்மா-வாசி)
காண முடியாது.

நடுவிலே – கண்மணி நடுவிலே ஒளியான கடவுளை காண உணர வேண்டும். வழி காட்ட குரு வேண்டும். விழி காட்ட பெற்றால் விழியின் உள் சென்று இறைவன் – திருவடியை உணர்ந்து தவம் செய்தால் திருமுடி அறியலாம். உணரலாம். காணலாம்.
காலை பிடித்தால் தலை தாழ்ந்து வந்து விடும் அல்லவா. திருவடியை பிடித்தால் திருமுடி நம் கைக்கு வந்துவிடும். இறைவன் கருணை வடிவானவன் அல்லவா? திருவடியை தொட்டால் திருமுடியை காட்டுவான். காணலாம் கண்ணார கடவுளை கண்ணிலேயே. முதலில் திருவடி தரிசனம். பின்பு தான் திருமுடி தரிசனம்.
கண்ணில் தான் – கண்மணி ஒளியில் தான் தவம் செய்ய வேண்டும் என்று மற்ற பாடலிலும் வள்ளல் பெருமான் திருவருட்பாவில் கூறி உள்ளார்கள்.
கண்மணிக்குள் துலங்கும் கண்மணி ஒளியான இறைவன் திருவடியை காணவும் கண்மணி ஒளியை நினைந்து , குரு அருளால் பெற்ற ஒளி உணர்வை பற்றி கண்ணீர் பெருக தவம் செய்ய வேண்டும்.
இதுவே இறைவன் அடி – முடி காண ஒரே வழி.

தகுந்த ஆச்சாரியர் மூலம் உங்கள் நடுக்கண்ணைத்(கண்மணிமத்தி) திறக்கப் பெற்றுக் கொள்வது நலம் (அருட்பா)
👀

ஞானம் முடிந்த முடிவாம் |



"இருதயந் தன்னில் எழுந்த பிராணன் "
பாடல்_ 2761
இரு உதயம் - இருதயம்! வலது கண்ணில் சூரிய உதயம் இடது கண்ணில் சந்திர உதயம்! இரு கண்களே இருதயம் எனப்படும் இதுவே ஞான விளக்கம்! மார்பல்ல இருதயம்? "இருதயத்தில் சுத்தமுடையவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள் " இது பைபிள் வாசகம்! இருதயமான இரு கண்ணிலும் ஒளியை தூண்டி தூண்டி கண்ணீர் விடவிட கண்மணி ஊசிமுனை துவாரத்தை மூடியிருக்கும் அழுக்கு மும்மலம் அகன்று இரு -கண்ணும் - இருதயம் சுத்தமாகும்! அவரே உள் ஒளியை தேவனை தரிசிப்பர்! 

எவ்வளவு உயர்ந்த ஞானம் இது! உலகில் தோன்றிய எம்மத ஞானியும் இதைத்தானே கூறுகின்றனர்! பின் ஏன் அடித்துக் கொள்கிறீர்கள்?! இரு கண்மணி ஒளியைத் தூண்டி ஞான சாதனை செய்யச் செய்ய ஞானக் கனல் எழும்பும் பிராணன் ஏழும்பும் உள் ஒளியோடு கூடும்!
ஆத்ம ஜோதி தரிசனம் கிட்டும்!

பிராணன் என்றால் உயிர் சக்தி! பிராண வாயு வல்ல! ஒளிசக்தி!
திருமூலர் பக்தி கர்மம் யோகம் ஞானம் எல்லாம் சொல்லியிருக்கிறார்!
ஞானம் முடிந்த முடிவாம் |
ஞானம் பெறுவதே பேரின்பம் தரும்!
ஞானத்துக்கு நாம் நாட வேண்டியது ஒளியையே! இறைவன் பேரொளியல்லவா !


ஞானசற்குரு
சிவ செல்வராஜ் ஐயா,
நூல் : மந்திரமணி மாலை,
பக்கம் எண் : 202

செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

ஞானத்தை தரும் பழம்!

நாம் கண்மணியை எண்ணி தவம் செய்யச் செய்ய கண்கள் சிவந்து,
காய் கனியாவது போல,மும்மலத்தால் காயாக இருக்கும் பூ
கண்மணி தவத்தால் கனிந்து பழமாகிவிடும்.

அந்த பழம் ஞானப்பழம்!
ஞானத்தை தரும் பழம்!

அது இருக்குமிடம் மலை!கண் தான் மலை என்று சொல்லப்படும்!
உயர்ந்து விளங்குவதால் மலை எனப்படும்!

பரிபாஷை!

கண்ணாகிய மலை கனிந்து விடுவதால் பழமலை என்றார் வள்ளல் பெருமான்!


🙏🏻👁👁🙏🏻...



ஞானசற்குரு திருசிவ
செல்வராஜ் ஐயா
www.vallalyaar.com

சனாதன தர்மம்!

மரணமிலா பெருவாழ்வு பெற வழி காட்டுவதே சனாதன தர்மம்!


ஒவ்வொரு ஆத்மாவும் தன்னை உணர்ந்து மேன்மையடைய வழி காட்டுவதே சனாதன தர்மம்!


எவ்வித பாகுபாடுமின்றி எல்லோரும் எல்லா வல்ல அந்த பரமாத்மாவின் பிள்ளைகளே -
அம்சமே என உரைப்பதே சனாதன தர்மம்!


ஞானசற்குரு சிவசெல்வராஜ் ஐயாவின் "வடலூரில் சத்திய ஞானசபையில் தைபூச ஜோதி தரிசனம் காட்டப்படுவதன் உண்மையான மெய்ஞான விளக்கம் பற்றிய காணொளி"....தேடல் உள்ளோர் கண்டுகொள்வீர்...
https://www.facebook.com/saranam.guruve/videos/158417401611491/





ஞானசற்குரு
சிவ செல்வராஜ்
அய்யா


சனாதன தர்மம்
பக்கம் எண் 70

நாத்திகம் பேசும் மடையர்களுக்கும் அருள்பவனே கருணைக் கடலான இறைவன்



நாமெல்லாம் , இறைவனாகிய பெருங்கருணை ஒளிக்கடலின் ஒரு சிறு

அணு அளவு ஒளியிலும் ஒரு திவலையே! நம் எல்லோர் உள்ளிலும் ஒளியாக

துலங்கும் அந்த அருட்பெருஞ்சோதியே , வேண்டினவர் வேண்டாதவர் எல்லோருக்கும்அ ருள் கொடுக்கின்றது .


விருப்பு வெறுப்பு அற்றவன் அல்லவா இறைவன்! நாத்திகம் பேசும் மடையர்களுக்கும் அருள்பவனே கருணைக் கடலான இறைவன். ஏனெனில் எல்லா உயிர்களும் அவன்படைப்பல்லவா? எல்லோரும் அவன் பிள்ளையல்லவா?

எவ்வளவுதான் அயோக்கியனானாலும் உலகிலே பெற்றதாய் பிள்ளையைவெறுக்கமாட்டாள். உலகத்தையே பெற்ற தாயான கடவுளா வெறுப்பார்?! மூடனுக்கும் பஞ்சமா பாதகம் புரிபவனுக்கும் அருள் கொடுத்து வாழவைப்பவனே அருட்பெருஞ்ஜோதியான ஆண்டவன். மூடன்- கவி காளிதாசன் ஆனான்!

வேடன் - கண்ணப்பன்ஆனான்!


காடன் - வால் மீகி ஆனான்!


நாடன் - அருணகிரிநாதர் ஆனான்!






இன்னும் எத்தனையோ பேர் ஏற்றம் பெற்றனரே! எந்தை அருட்பெருஞ்சோதி அருளினாலே!

ஏழு ஆதாரங்களும் 72000 நாடி நரம்புகளும் -கண்மணி ஒளியில் அடக்கம்.



சத்தவுலக சராசரமும் தாளிலொடுக்கும் தனிப்பொருளே - பாடல் 4


ஏழு உலகமும் இந்த பிரபஞ்சமெலாம் திருவடியில் - தாளில் ஒடுங்கி நிற்கின்ற தனிப் பெரும்பொருளே கண்மணியே. ஏழு உலகம் - நம் உடலில் உள்ள ஏழு ஆதாரங்களும் - நம் உடலிலுள்ள 72000 நாடி நரம்புகளும் நம் கண்மணி ஒளியில் அடக்கம். கண்மணி ஒளியே அனைத்துக்கும் ஆதாரம்.

சீடனின் கண் ஆகிய விளக்கினை ஏற்றி வைக்கிறார்.



நம் கண்மணியின் மத்தியில் ஊசிமுனை அளவு ஒரு சிறு துவாரம் உள்ளது. இந்த துவாரத்தை துலங்கும் நம் ஜீவ ஒளியை நம் வினைகள் சுட்சமத்தில் 7 திரையாக அமைந்து மூடியுள்ளது.

தீட்சையின் போது சீடனின் இவ்வினை திரையை சற்குரு தன் கண் ஒளியால் பிளந்து சீடனின் கண் ஆகிய விளக்கினை ஏற்றி வைக்கிறார்.


https://www.facebook.com/saranam.guruve





உயிரின் ஆற்றலை ஒளித்தன்மையை உடலும் பெறும்!?

உடலை தந்த தாய்தந்தையரும் அழிந்து விடுவர்!

இறைவனை உயிர்தந்த அம்மையப்பனை சரணடைந்தால் உடலும் அழியாது!

உயிரின் ஆற்றலை ஒளித்தன்மையை உடலும் பெறும்!?

இதைத்தான் வள்ளல்பெருமான் உரைக்கின்றார்.

*உயிர்தந்த தாயும் தந்தையும் குருவுமான இறைவனை
அருட்பெருஞ்ஜோதியை உணர்பவனே முக்தியடைகிறான்!*

 மரணமிலா பெருவாழ்வு பெருகிறான்!

ஞானியாகிறான்!

சித்தனாகிறான்!


*ஞான சற்குரு சிவ செல்வராஜ் ஐயா*
நூல் : திருவருட்பாமாலை இரண்டாம் பகுதி
பக்கம் : 17
குருவின் திருவடி சரணம்

மனதை அடி அடி என அடித்து நொறுக்கி!!

"நையா நின்றுலைகின்ற மனத்தால்"−பாடல் 5

நம் மனமே வினைகளின் இருப்பிடம்!

வினைகளை செயலாற்றுவதே மனதின் வேலை!இந்த பொல்லா மனம் துன்பம் அறியாவிட்டால் உலக மாயையில் சிக்கி சுகபோகத்தில் உழன்று மேலும் மேலும் பாவத்தை சேர்க்கும்.

இந்த மனதை அடி அடி என அடித்து நொறுக்கினால்−நைய புடைத்தால் தான் புத்தி வரும்!

துன்பம் தான்−நாம் செய்த பாவம் தீர்ந்தால்தான்!

பேரின்பம் இறைவனை அடையும் பாதை திறக்கும்!


மகாபாரதத்தில் குந்தி தேவி கண்ணணிடம் கேட்டவரம்
"எனக்கு எப்போதும் துன்பத்தையே கொடு"என்று தானே!

அப்போது தானே சதா சர்வ காலமும் நாம் கண்ணணை நினைப்போம்.
அப்போது தானே கருணை கிட்டும்..


ஞானசற்குரு சிவசெல்வராஜ் ஐயா..
www.vallalyaar.com

 நூல்:திருவருட்பாமாலை மெய்ஞானஉரை முதல் பகுதி

🙏🙏🙏..

மூச்சுப் பயிற்சி

*மூச்சை இழுப்பது போன்ற மூச்சுப் பயிற்சி எதுவும் செய்யாதீர்கள்! ஆபத்து!
நீ பிறந்தது முதல் சீராக ஓடும் மூச்சை குழப்பாதீர்கள்!

ஒழுக்கமில்லாமல் சைவ உணவில்லாமல் நீ செய்யும் எந்த யோகத்தாலும் ஒரு பயனும் இல்லை!


சைவ உணவே சன்மார்க்க உணவு! (சைவ உணவே மனிதகுல சன்மார்க்க உணவு)

*ஒழுக்கமே ஞானத்துக்கு அஸ்திவாரம்!*
குருவின் திருவடி சரணம்


எண்ணாயிரத்தாண்டு யோகம்

எண்ணாயிரத்தாண்டு யோகம்
செய்யினும் கண்ணார்
அமுதினை கண்டறிவாரில்லை!”
– திருமூலர்


கண்ணார் அமுதினை அறிந்து கண்டுணர்ந்து *கண் திறந்து நீதவம் செய்தாலே காண்பாய் கடவுளை! அதற்கு நீ முதலில் கட – உள்ளே, உன் கடமாகிய உடம்பினுள்ளே புக வேண்டும்!
எப்படி கண்மணி வழி! அது தான் ஒரே வழி! குருவின் திருவடி சரணம்
நம் உடலில் ஜீவனாய் இறைவன் இருக்கிறான். நம் உடலில் கண்மணியில் ஒளியாக ஜீவன் உள்ளது. கண்மணியில் மனதை நிலை நிறுத்துக. இம்முறையில் சாதனை தொடர்ந்தால் அனுபவங்கள் தொடர்ந்து பெறுவீர்கள். மேனிலை அடைவீர்கள் உறுதி, சத்தியம்.

இதுதான் உண்மை. குருவின் திருவடி சரணம்

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்

“பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்: மற்று
நிலையாமை காணப் படும்.” – 349


பொதுவாக இந்த குறளுக்கு விளக்கம் எந்த பற்றும் இல்லாமல் இருந்தால் இறைவனை காண முடியும் (அ) பிறப்பறுக்க முடியும் என்று சொல்ல படுகிறது. இது எந்த அளவிற்க்கு மிக சரியான கருத்தோ அதே அளவு இந்த குறளில் இருக்கும் இன்னொரு விஷயமும் மிகவும் முக்கியமானது. எதன் மூலமாக பிறப்பறுக்க முடியும் என்று சொல்கிறார்.ஆம், முன்பு பார்த்த குறளில் பிறவி பெருங்கடலை நீந்த இறைவன் அடியை சேர வேண்டும் என்று சொன்னவர் இந்த குறளில் பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் என்று சொல்வதன் மூலம் எது இறைவன் அடி என்றும் சொல்கிறார். பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் – ஆம், கண் வழி மூலமாகத்தான் நாம் இறைவனை அடைய முடியும் (அ) பிறப்பறுக்க முடியும். இதைத்தான் இறைவன் திருவடி என்றும் சொல்கிறார்.


ஏன் இங்கு பற்றற்ற கண்ணே என்று சொல்கிறார் என்று சிந்தித்தால் அதுதான் ஞான பாதை. கண்ணின் மகத்துவத்தை மேலும் அது எப்படி நம் உடம்பில் இருக்கிறது என்பதைத்தான் திருவள்ளுவர் வெளிபடுத்தியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அதுதான் பிறப்பறுக்கும் என்று சொல்கிறார். ஏன் கண்ணை பற்றற்ற கண்ணே என்று சொல்கிறார்?
 
நமது கண் அமைப்பை நன்றாக பாருங்கள். வெள்ளை விழி – அதன் நடுவே கருவிழி – இந்த கருவிழியை தான் கருமை பெற்ற கடல் என்கிறார் திருஞான சம்பந்தர், வெள்ளை விழி தான் திருப்பாற்கடல் என்றார்கள் ஆழ்வார்கள். இந்த கருவிழியாகிய கருங்கடலிலே மிதக்கின்ற கலம் தான் நம் கண்மணி. எவ்வளவு ஒப்பற்ற உவமை இது. நம் கண்மணி வேறு எதையும் பற்றாமல் கருவிழியில் பிராணநீரில் மிதந்து கொண்டிருக்கிறது. இது தான் ஞான இரகசியம். தாயின் கருவினுள் சிசு பனிக்குடத்தில் இருப்பது போலவே கண்மணியும் “நீர் மேல் நெருப்பாக” மிதந்து கொண்டிருக்கிறது. கண்மணியின் மையம் ஊசிமுனை துவாரம் உள்ளது. அதனுள் ஊசிமுனை அளவு நெருப்பு. நம் கண்மணியின் மத்தியில் ஊசிமுனை அளவு ஒரு சிறு துவாரம் உள்ளது. இந்த துவாரத்தை துலங்கும் நம் ஜீவ ஒளியை நம் வினைகள் சூட்சுமத்தில் 7 திரையாக அமைந்து மூடியுள்ளது. இவ்வினைக்கு தகுந்தபடியே நம் மனம் வேலை செய்கிறது. நம் உடல் அமைப்பு, சுற்றம் போன்ற அனைத்தையும் நிர்ணயிப்பது இவ்வினைகள் தான். இவ்வினைகள் கண்ணாடி போல் உள்ளதால் நம்மால் பார்க்க முடிகிறது. கண் இல்லாதவர்களுக்கு இவ்வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளதால் பார்வை சக்தி அவர்களுக்கு இல்லை.

நம் கண்ணில் சூட்சமமாக உள்ள வினை திரையை நீங்கினால் தான் நம் கண் பற்றற்ற கண்ணாகும்.
இந்த வினை திரையை நீக்குவது எப்படி? அதற்கும் விடை அளிக்கிறார் வள்ளுவர் பெருந்தகை :
“பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு”
 
நாம் ஞான சற்குருவிடம் திருவடி தீட்சை பெற்று கண்களில் உணர்வு பெற்று தவம் செய்கையில் , மெய்ப்பொருளான நம் கண் சிவந்து செம்மையான கண்ணாகும். அதுவே செம்பொருள் என்கிறார் வள்ளுவர். அதாவது செம்பொருள் கைவல்யமானவரே பிறப்பை தவிர்பர். வினையை சுட்டெரிப்பர்
இதே போல மீதி உள்ள இந்த குறள்களை பார்த்தாலும் இதில் ஏன் வள்ளுவர் இத்தனை முறை சொல்கிறார் என்று பார்த்தாலும் இந்த இறைவன் திருவடி ஆன்மீகத்தில் எவ்வளவு முக்கியமானது என்பதை நிச்சயமாக புரிந்து கொள்ள முடியும்.


கீழே இருக்கும் இந்த குறளுக்கான விளக்கம் தெரிந்தால் போதும் அது நிச்சயமாக ஞான பாதைக்குள் நம்மை தள்ளும்....
ஞான சற்குரு சிவசெல்வராஜ் ஐயா.....


ஆத்மஞானத்தின் முதல் வெற்றி??

நாம் கண்மணி ஒளியை நினைந்து தவம் செய்யச் செய்ய உள் ஒளிப்பெருகி பெருகி கொஞ்சங் கொஞ்சமாக படலத்தை உஷ்ணத்தால் உருக்கி கரையச் செய்து விடும்.


*முற்றிலும் கரைத்த பின்னரே உள்ஒளி −கண்ஒளி நம் காட்சிக்குவரும்*.
ஆத்மஞானத்தின் முதல் வெற்றி இதுதான்!தத்துவ வெற்றி என்பது இதுதான்.


இந்த உலகில் எல்லா ஞானிகளும் பெற்ற பேரானந்தம் இவ்வாறுதான்.!
*உள்ஒளி தோன்றினால் எல்லாமே வெட்ட வெளிச்சமாகிவிடும்*!
பிரபஞ்ச ரகசியம் பட்டபகல் போல் வெளிப்படும்.
நாம் யார்?நம்மை படைத்த அந்த இறைவன் யார்?பிரபஞ்சம் எவ்வாறு என அறியலாம்...


ஞானசற்குரு திருசிவ செல்வராஜ் ஐயா..
நூல்:ஞானக்கடல் பீர்முஹம்மது
பக்கம்:35

குருவின் திருவடி சரணம்🙏👁👁🙏..

இறைவன் திருவடியை அடைய

"அமிர்தம் உண்ண முச்சுடரும் ஒன்றாகணும்!
......கண்ணொளி கண்டபேர்க்குச் சென்னமு மரணம்
நீங்கித் திருப்பதஞ் சேரலாமே" - பாடல் 12


யார் ஒருவர் தன் கண் ஒளியை காண்கிறார்களோ!
அவர்களுக்கு பிறப்பு−இறப்பு இல்லை.


அப்படிப்பட்ட உத்தமர்கள்தான் திருவாகிய இறைவனின் அடி பாதம்−சேரவார்கள்! திருவடியை அடைவார்கள்.


"இறைவன் திருவடியை அடைய கண்ணொளியை பார்".


இதை விட தெளிவாக சொல்ல என்ன இருக்கிறது!இறைவன் திருவடியை அடைந்தால் பிறப்பு இறப்பு இல்லை!இதைத்தானே எல்லா ஞானிகளும் கூறினர்.


திருவருட்பிரகாச வள்ளலாரும் மரணமிலா பெருவாழ்வு என இதைத்தானே கூறுகிறார்..


ஞானசற்குரு திருசிவ செல்வராஜ் ஐயா..
நூல்:ஞானக்கடல் பீர்முஹம்மது
பக்கம்:47


www.vallalyaar.com

ஞானகுரு பெற்றவனே பூரண மனிதன்!

"பக்தியாய் பணிந்த பேர்க்குப் பரவெளி காணலாமே"
பாடல் 18


ஞானம் ஞானம் என்று கூறிக்கொண்டு வறட்டு வேதாந்தம் பேசித்திரிவதில் அர்த்தமில்லை!தத்து பித்து என்று தத்துவ விளக்கம் கூறி பிரயோஜனமில்லை!


*குருபக்தி வேணும்*!குருவினடி பணிந்து கூடுவதல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம் என ஔவைக்குறள் கூறுகிறது.


குருவில்லா வித்தை பாழ்!சுட்டிக்காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது!


யார் ஒருவர் குருவை பெற்று−உபதேசம் பெற்று−திருவடி தீட்சை பெற்று குருவே சரணம் என பக்தியோடு சரணாகதியாகி இருப்பாரோ அவரே இறைவனை அடைவர்!


"பக்தியால் ஞானத்தை காட்டி ஞானத்தால் இறையை காட்டும்"!


*ஞானகுரு பெற்றவனே பூரண மனிதன்!*


பக்தி வேணும். *சரணாகதி வேணும்* அவனே இறைவன் திருவடியை அடைவான்!


ஞானசற்குரு திருசிவசெல்வராஜ் ஐயா...

நூல்:ஞானக்கடல் பீர்முஹம்மது

பக்கம்:48

Popular Posts