புதன், 31 ஆகஸ்ட், 2022

🔥 யாராலும் மறுக்கமுடியாத உண்மை 🔥

 சாகாக்கல்வி நூலிலிருந்து : 21 

ஜாதி மதம் இனம் மொழி தேவையில்லை. உலகிலுள்ள மனிதர்கள்
அனைவரும் எல்லாம் வல்ல அந்த பரமாத்மாவின் பிள்ளைகள் !
ஜீவாத்மாக்கள் ! அவ்வளவே ! 

நம் அனைவரிடத்திலும் ஒரே மாதிரி விளங்கும் கண்மணியில் ஊசிமுனை
அளவு ஒளியாகவே அந்த ஏக இறைவன் உள்ளான் !
இதை மட்டும் நம் மனதில் கொண்டால் போதும் !

"யாதும் ஊரே யாவரும் கேளீர் 

தீதும் நன்றும் பிறர்தர வாரா"


இந்த உலகமே மனித குலத்துக்கு சொந்தம். 

நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே ! 

நாம் அனைவரும் ஜீவாத்மாக்களே ! 

எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையும் இறைவனே ! 

உலகுக்கு இறைவன் ஒருவரே ! 

இதுவே சத்தியம் ! 

யாராலும் மறுக்கமுடியாத உண்மை !

இதை அறியாதவன் குழந்தை ! 

இதை புரிந்து கொள்ளாதவன் அறிவில்லாதவன் ! 

இதை ஒப்புக் கொள்ளாதவன் முட்டாள் ! 

இதை ஏற்றுக் கொள்ளாதவன் மனிதனேயல்ல !


ஒவ்வொருவருக்கும் வரக்கூடிய நல்லதுக்கும் கெட்டதுக்கும் அவரவரே
தான் பொறுப்பு ! வேறு யாரும் கிடையாது !


"தீதும் நன்றும் பிறர்தர வாரா"

அவரவர் செய்த செயல்களே புண்ணியம் என்றும் பாவம் என்றும்

 இருவினைகளாகி அதற்குரிய பலன்களை அவரவரே அனுபவிக்க செய்கிறது ! 

இதுவே இறைநியதி !

"பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்"

நாம் பிறர்க்கு செய்யும் நல்லதோ கெட்டதோ இனி ஒருநாள் நமக்கு வந்தே தீரும் !

"வினை விதைத்தவன் வினையறுப்பான்"

சுவற்றில் எறிந்த பந்து அதேபோல் திரும்பி வந்தே தீரும் !

எத்தனையோ பிறவிகளாக நாம் செய்த நல்வினை தீவினைகள் இப்படி மூட்டை மூட்டையாக இருக்கின்றது !! 

ஆனால்,,, 

      இறைவன் நம்மீது இரக்கம் கொண்டு, கருணை கொண்டு அவ்வளவு வினைகளையும் நம்மிடம் தராமல் நல்வினை தீவினை இரண்டிலும் கொஞ்சமாக எடுத்து நம் உயிரோடு இணைத்து பிராரத்துவ கர்மத்துடன் விதிக்கப்பட்ட கர்மத்துடன் நம்மை மனிதனாக இப்பூவுலகில் பிறப்பிக்கச் செய்துள்ளார் ! 

பிறப்பின் இரகசியம் இது !


 இறைவன் திருவடிகளே நம் கண்கள் ! 

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

🔥 வினைகளை அழிக்கும் வழி 🔥



சாகாக்கல்வி நூலிலிருந்து : 22

"பற்றித் தொடரும் இரு வினையன்றி வேறொன்றில்லை பராபரமே"

என்று தானே சித்தர் பெருமகனார் கூறியுள்ளார் !

இதுதானே உண்மை !

நாம் பிறக்கும்போது நம் உயிரோடு இறைவன் சேர்த்து அனுப்பியது பிராரத்துவம் !

பிராரத்துவ வினைகளோடு பிறந்த மனிதன் புரியும் கர்மங்கள் ஆகாமியம் எனப்படும்.

பிராரத்துவம் விதி ஆகாமியத்தோடு சேர்ந்து வினை கூடவோ குறையவோ, அதாவது புண்ணியம் நிறைய செய்து நல்வினை கூடலாம், அல்லது பாவம் நிறைய செய்து தீவினை கூடலாம். இப்படி ஏதாவது செய்து எதையாவது பெற்று அந்த வினைகளோடு மரிக்கிறான் !

ஒவ்வொரு மனிதனும் செத்து உடன் கொண்டு போவது அவனவன் செய்த வினை பயன்கள் மட்டுமே !

ஆக, பிறக்கும்போது உயிரோடு வரும் வினை !, வாழ்ந்து இறக்கும்போது அந்த உயிரோடு போய் விடுகிறது !!

பிறக்கும்போது வந்ததைவிட கூடவோ குறையவோ செய்யலாம் !

இந்த இடம்தான் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது !

விதியோடு இறையருளால் பிறந்த மனிதன், எதையெதையோ செய்து எஞ்சிய வினையோடு சாகாமல் ?! எதையெதையோ செய்யாமல், விதியிலிருந்து வினையிலிருந்து தப்பித்த ஞானிகள் உபதேசப்படி நம் வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொண்டால் !!

வினைகளை அழித்துவிட்டால் !!
சாகாமல் இருக்கலாமல்லவா ?!

வினையிருந்தால் தானே சாவு !

வினையிருந்தால் தானே மீண்டும் பிறப்பு ஏற்படும் ?!

வினைகளை இல்லாமல் செய்து விட்டால் ?!

பிறந்த நமக்கு முதலில் இறப்பு கிடையாது ?

இறப்பு இல்லையெனில் ஏது பிறப்பு ?!

இதுவே நல்வழி ! சிறந்த வழி ! ஒப்பற்ற வழி !

புத்திசாலித்தனமான வழி !

உலக ஞானிகள் அனைவரும் கூறியருளிய வழி !

ஞானவழி !

விழி வழி ! விழி ! விழி ! என விழிக்கும் வழி !

மெய்ப்பொருளான கண்மணியினுள் ஊசிமுனையளவு ஒளியாக இறைவன் இருப்பதை குருமூலம் அறிந்து உணர்ந்து, அந்த இறைவனை நம் உயிரை அடைய தவம் செய்ய வேண்டும் ! நம் உயிரான கடவுளை அடைய நாம் செய்த வினைகளே விதியாகி, உயிர் ஒளியை மறைத்துக் கொண்டிருக்கிறது !

ஞான சற்குருவால் உபதேசம் தீட்சை பெற்று தவம் தொடர்ந்து செய்து வந்தால்,

நமது உயிர் ஒளியை மறைத்துக் கொண்டிருக்கும் வினைகளை - ஜவ்வை - திரைகளை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிவிடலாம் !!

முடியும் ! எல்லோராலும் முடியும் !

இதற்காக தனியாக பிறவி ஒன்றும் எடுக்க வேண்டியதில்லை !

"முயற்சிஉடையார் இகழ்ச்சியடையார்"

உங்களுக்கு ஞானம் அருள, வினைநீக்க வள்ளல் பெருமான் உதவ காத்திருக்கிறார் !!

"வம்மின் உலகியலீர் மரணமிலா பெருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்" என திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் கூவி உலகரை அழைக்கிறார் ! வாருங்கள் தங்க ஜோதி ஞான சபைக்கு ! கன்னியாகுமரிக்கு !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

🔥 இதற்குத்தான் கூட்டம்! 🔥

 சாகாக்கல்வி நூலிலிருந்து : 20 

இன்றைய உலகில் குரு என சொல்லிக் கொண்டு பெரிய ஆசிரமங்களை உருவாக்குவதிலேயே முழுகவனம் செலுத்தி, பல்லாயிரம் மக்களை கவர்ச்சியான செயல்பாடுகளால் கவர்ந்து யோகாசனமும் பிராணாயாமமுமே சொல்லிக் கொடுத்து முடித்து விடுகிறார்கள் ! 

இப்படிப்பட்ட குருமார்கள் வாழ்க்கை முடிந்து போகிறதை நாம் கண்கூடாக காண்கிறோம் ! 

இன்னும் பலர் கடவுளை பற்றியே பேசாதவர்கள் ! 

ஞானம் என்ற வார்த்தை கூட அறியாதவர்கள் ! 

பலர் சிறு தெய்வ வழிபாடு செய்து அருள்வாக்கு கூறும் ஆசாமிகள் ! 

இதற்குத்தான் கூட்டம். 

இன்றைய இத்தகைய குருமார்கள் பள்ளிக்கூடம் கோயில் ஆஸ்பத்திரி கட்டி நல்ல வருமானத்திற்கு வழிதேடி தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள் !

இப்படிப்பட்ட குருமார்களிடம் சென்று ஏமாந்து போகாதீர்கள். 

எல்லோரையும் பாருங்கள். 

கடவுளை அடைய ஞானம் பெற யார் வழிகாட்டுகிறார் என அறியுங்கள். 

எல்லா மத நூல்களையும் படியுங்கள். 

எல்லா மகான்கள் வரலாறையும் பாருங்கள். 

உண்மையை உணருங்கள்.

எல்லா மதமும் இறைவனைப் பற்றித் தானே கூறுகிறது ?! 

எல்லா மதமும் அந்த ஏக இறைவனை அடைய அன்பைத்தானே, ஆன்மநேய ஒருமைப்பாட்டைத் தானே போதிக்கின்றது !? 

இறைவனை அடைய நமக்கு தேவை,,, 

நல்லொழுக்கம், 

நற்பண்பு, 

எல்லா உயிர்களிடத்தும் அன்பு, பணிவு, 

நல்ல ஒரு குரு, 

மகான்களோடு சத்சங்கம் 


இவைகள் தான் !


 இறைவன் திருவடிகளே நம் கண்கள் ! 

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

🔥 ஞானம் பெற உதவும் படிக்கட்டுகள் 🔥

 சாகாக்கல்வி நூலிலிருந்து : 19 

“மூர்த்தி - தலம் - தீர்த்தம் முறையாக ஆடின பேர்க்கு வார்த்தை சொல ஒரு சற்குரு வாய்க்கும் பராபரமே"  என தாயுமான சுவாமிகள் கூறுகிறார் ! 

ஒவ்வொரு மனிதனும் பக்தியோடு இருந்தால் நல்ல பண்போடு வாழ்ந்தால், நெறிபிறழாது வளர்ந்தால் நல்ல ஒரு குருவை அந்த ஆண்டவனே கொண்டு சேர்ப்பார் ! 

நன்றாக கவனியுங்கள்,,, 

நீங்கள் சிறந்த பக்திமானாக விளங்கினால் இறைவன் அருளால் உங்களுக்கு கிடைப்பது நல்ல ஒரு குருவே !

குரு மூலமாக தவம் செய்து தான் ஞானம் பெறவேண்டும் ! 

இதுவரை வாழ்ந்த மகான்களின் வரலாறை படித்துப்பாருங்கள், கஷ்டப்படாமல் துன்பப்படாமல் கடுமையான தவம் மேற்கொள்ளாமல் யாராவது ஞானம் பெற்றார்களா ? 

வேலை செய்யாமல் கூலி கிடைக்குமா ? 

ஞான சற்குருவை நாடி மெய்ப்பொருள் அறிந்து உணர்ந்து சதா காலமும் தவம் செய்தால் கிட்டும் இறையருள் !

     இன்றைய உலகில் மக்களுக்கு ஆன்மீகம் என்றால் கோவிலுக்கு போவது பூஜை செய்வது பஜனை பாடுவது அபிஷேகம் செய்வது தீர்த்தயாத்திரை போவது அன்னதானம் செய்வது யாகம் செய்வது பிராணாயாமம் செய்வது தியானம் செய்வது என ஏதாவது ஒன்றைத் தான் கருதுகிறார்கள் ! 

     இவையனைத்தும் ஞானம் பெற உதவும் படிக்கட்டுகளே ! 

     இவையனைத்தும் பக்தி கர்மம் யோகத்தில் அடக்கம் !

ஞானம் என்றால் தன்னை அறிவது ! 

நான் யார் ? என உணர்வது ! 

ஞானம் பெற இறையருள் பெற பக்தி தான் அஸ்திவாரம் ! 

பக்தியில் லாமல் ஞானமில்லை ! 

சிலர் வறட்டு வேதாந்தம் பேசுவர், விதண்டா வாதம் செய்வர், வித்யாகர்வம் மிக்கவர்களாயிருப்பர். இவர்களுக்கு ஞானம் கிலோ என்ன விலை ? என்ற கணக்குதான் ? 

பணிந்தவர்க்கே பரமனருள் கிட்டும் ! 

அன்பும் பணிவுமே ஞானத்தை தரும் !

 இறைவன் திருவடிகளே நம் கண்கள் ! 

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

🔥 குருவை பெற வேண்டாமா? 🔥

 சாகாக்கல்வி நூலிலிருந்து : 18 

ஓருயிரிலிருந்து ஆறுயிர் வரை 84 லட்சம் யோனி வகை பிறவிகளுள் மிகவும் அருமையான, பெறுதற்கரிய மானிட பிறவியை பெற்ற நாம், மாதா பிதாவினால் சரீரம் பெற்ற நாம், குருவை பெற வேண்டாமா ? 

குரு மூலம் தானே வினையற்று இறைவனை அடைய வழி பிறக்கும் ! 

இறைவன் 

கருணைக்கடல் ! 

அருட்கடல் ! 

அண்டினவர்க்கு அவனருள் நிச்சயம் கிட்டும் !

 "பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் 

செம்பொருள் காண்பது அறிவு" 

 திருவள்ளுவர் பிறப்பை பேதைமை என்கிறார். 

அறியாமை என்னும் இருள்சூழ்ந்தவரே பிறக்கிறார் மீண்டும் பிறக்கிறார். பேதை பெண்போல தடுமாற்றம் கொண்டு பிறந்து துன்புறாமல் பிறப்பு நீங்க அறிவு சிறக்க வேண்டும். 

குருவை நாடி மெய்ப்பொருள் கற்றுணர்ந்து தவம் செய்தால் மெய்ப்பொருள் - கண் சிவந்து செம்மையான கண் ஆகும். 

அதுவே செம்பொருள் என்றார் திருவள்ளுவர் ! 

அதாவது செம்பொருள் கைவல்யமானவரே பிறப்பை தவிர்ப்பர் !

🔥உயிர் தூக்கத்தில் ஒடுங்குகிறது ! 

🔥மரணத்தில் உடலைவிட்டு பிரிந்து விடுகிறது ! 

🔥மயக்கத்தில் தடுமாறுகிறது ! 

தடுமாறாமல் ஒடுங்காமல், பிரியாமல் உயிரை அதன் தன்மையில் பெருக்கி அதாவது ஒளியான உயிரை ஊசிமுனை அளவு ஒளியான உயிரை உடல் முழுவதும் பரவும் அளவு பேரொளியாக செய்து இந்த உடலிலேயே உயிரை நிலை பெறச் செய்வதுவே ஞானம் ! 

உயிர் தன்மையை உடல் பெற்று உடலும் ஒளிர்ந்து மிளிர்வதே ஞானம் ! 

ஊன உடலே ஒளி உடலாக பெறுவதே ஞானம் !

 இறைவன் திருவடிகளே நம் கண்கள்! 

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

சனி, 27 ஆகஸ்ட், 2022

🔥 மெய்ப்பொருளை - அறிந்தால் மட்டும் போதுமா? 🔥

 சாகாக்கல்வி நூலிலிருந்து : 16

இறைவன் படைத்து விட்டுவிட்டான் நம்மை இந்த உலகிலே ! 

         பிறப்பைப் பற்றி ஞானிகள் கூறுவது யாதெனில், ஒரு ஆத்மா, அது பற்பல பிறவிகளில் செய்த வினைகளின் ஒரு பகுதியை கொண்டு இறைவனால் பிறப்பிக்கச் செய்யப்படுகிறது. 

      விதிக்கப்பட்ட அளவு வினையுடன் "பிராரத்துவம்" பிறக்கிறது. இந்த ஊரில் இன்னாருக்கு இன்னநிலையில் பிறக்க வேண்டும் என அந்த இறைவன் தான் தீர்மானிக்கிறான் ! அந்தபடியே வந்து பிறக்கிறான் மனிதன் !

மனிதன் தன்னைப் பற்றி ஏதுமறியாமலே வளர்கிறான் ! வாழ்கிறான் ! காலம் போகிறது. காலன் வரநேரம் பார்க்கிறான். அப்போதைக்கப்போது நான் இருக்கிறேன். நான் இருக்கிறேன் என இறைவன் நம்முள் இருந்து வெளிப்பட்டு வெளிப்பட்டு தன்னை அறிய உணர மனிதனை தூண்டுகிறான் ! இதுதான் இறைவனின் பேரருட் செயல் ! 

இறைவன் இவ்வாறு தன்னை வெளிப்படுத்தவில்லையெனில் மனிதன் ஒருபோதும் இறைவனை அறியமாட்டான் !!

பூர்வஜென்ம புண்ணியம் இருந்து, இறைவன் அருளால் இறைவனை அறிய உணர முற்படுகிறான் மனிதர்களில் சிலரே ! 

பக்தியோகம், கர்மயோகம், இராஜயோகம் என சரியை கிரியை யோகத்தில் அலைந்து திரிந்து புண்ணியம் இருந்தால் முடிவில் சற்குருவை அடைகிறான் ! 

ஞான சற்குருவை பெற்றவனே பாக்கியவான் ! 

மெய்ப்பொருளை சுட்டி உணர்த்துபவரே ஞானசற்குரு ! மெய்குரு !!

மெய்ப்பொருளை அறிந்தால் மட்டும் போதாது ! 

ஞான சற்குரு மூலம் ஞான தீட்சை பெறவேண்டும் ! 

ஞான தீட்சை பெற்றவனே ஆத்ம சாதகன் ! சித்தர்களும் ஞானிகளும் உரைத்த ஞானபாதையில் நடப்பவன் அவனே !

 இறைவன் திருவடிகளே நம் கண்கள்! 

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

🔥ஞானநிலை🙏மோனநிலை 🔥



சாகாக்கல்வி நூலிலிருந்து : 15


வாழ்க்கை வாழ்வதற்கே !

நாம் பிறந்தது சிறப்பாக வாழவே !

சாவதற்கல்ல !

நல்லபடியாக வாழ்வதற்கே !

நாடு போற்ற வாழ வேண்டும் !

உற்றார் பெற்றார் கற்றார் நாட்டார் போற்ற வாழ வேண்டும் !

அப்படிப்பட்ட வாழ்வே மரணத்தைப் போக்கும் !


எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது முட்டாள்களின் வாதம் ! இப்படித்தான் வாழ வேண்டும் என்பதே ஆன்றோர் அறிவுரை ! ஆன்றோர் காட்டிய வழிதான் ஆண்டவனை காட்டும் !

பிறந்த நாம் எப்படி வாழ வேண்டும் என உபதேசித்தபடி வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, என்றும் வாழ ஞானிகள் அவர்கள் சுட்டிக் காட்டிய குருமார்க்கமாக சென்று மெய்ப்பொருள் உணர்ந்து தவம் செய்ய வேண்டும்.

உண்டு உறங்கி வாழ்வதல்ல வாழ்வு ! உண்டுவளந்தான் என்ற பெயரே மிஞ்சும் ! தூக்கம் தொலைத்தால் ஆயுள் விருத்தியாகும் !

"ஒருவன் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் தூங்கி பழகுவானானால் அவன் ஆயிரம் வருடம் ஜீவித்திருப்பான் ! என்று வள்ளலார் உரைத்துள்ளார்."


நாமெல்லாம் பல மணி நேரம் தூங்குகிறோம் ஏன் ?

நம் ஆகாரம், ஒழுக்கநிலை, உழைப்பு இவற்றையெல்லாம் பொறுத்து உடல் சோர்வடைகிறது. அப்போது உடல் உள் உறுப்புகளுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. தூங்கிவிடுகிறோம். தூங்கி எழுந்ததும் உற்சாகம் வந்து விடுகிறதல்லவா ?

கடுமையான தூக்கம் வந்தால் கண்ணை கட்டுகிறது என சொல்வோமல்லவா ? ஏன் ?

உயிர் கண்ணில் உள்ளதால் அது தூக்கம் என்று நிலைகொள்ள வேண்டியிருப்பதால் அந்நிலை !


தூங்கும்போது நம் உயிர் ஒடுங்கி விடுகிறது ! உயிர் ஒடுங்கிவிட்டால் நாம் செயலிழந்து விடுகிறோம் !

பல மகான்கள் தங்கள் உயிரை ஆதாரத்தில் ஒடுங்கச் செய்து விடுவதால் புறச்செயல் அற்று சமாதியில் ஆழ்ந்து விடுகின்றனர் ! இப்படி சமாதி கூடி அறிதுயில் கொள்வது ஒன்றும் மேலானதல்ல என வள்ளலார் கூறுகிறார் !


உயிர்அறியாது ஒடுங்குவது தூக்கம் !

உயிரை அறிந்து ஆதாரத்தில் ஒடுக்குவது சமாதி !

சாதாரண மக்களுக்கு தூக்கம் ஒரு வரப்பிரசாதம் ! ஓய்வு கிடைக்கிறது.

ஓய்வு என்றால் என்ன ?

சும்மா இருப்பது தானே ?!


சும்மா இருப்பதுதான் ஞானம் !

அறியாமல் சும்மா இருந்தால் ஓய்வு !


அறிந்து உணர்ந்து சும்மா இருந்தால் ஞானம் கிட்டும் ! அறிந்து உணர்ந்து சும்மா இருக்க குரு வழிகாட்ட வேண்டும் !


உயிரை அறிந்து ஆதாரங்களில் ஒடுங்கிவிடாமல் உணர்வோடு சும்மா இருப்பதுவே ஞானநிலை ! மோனநிலை !


"சமாதி பழக்கம் பழக்கமல்ல, சகஜ பழக்கமே பழக்கம்" என வள்ளலார் கூறுகிறார்.


சமாதியில் மூழ்குவது பெரிதல்ல, உயிர் அனுபவம் உணர்ந்து பெற்ற பேரின்ப நிலையிலேயே சகஜமாக எப்போதும் இருப்பதுவே சிறப்பு ! என்கிறார்.


சகஜ நிலையிலேயே எப்போதும் இருப்பதுவே மரணமிலா பெருவாழ்வுக்கு வழியாகும் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள்!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

வியாழன், 25 ஆகஸ்ட், 2022

🔥 ஆன்மீகவாதி🔥 சாகாக்கல்வி நூலிலிருந்து


🔥 ஆன்மீகவாதி🔥

உணவு உடலுக்கு இன்றியமையாதது. உயிர் வாழ உணவு நீர் காற்று அவசியமல்லவா ?
நீரை நன்றாக காய்ச்சியே குடிக்க வேண்டும் !

நாம் இருக்கும் வீட்டைச் சுற்றி அந்த பகுதிகளில் நிறைய மரங்களை நட்டு தூய்மையான காற்று கிடைக்க வழி ஏற்படுத்துங்கள்.

உணவு சுத்தசைவ உணவையே உட்கொள்ளவேண்டும் !


"கொல்லான் புலாலை மறுத்தானைக்
கைகூப்பி எல்லா உயிரும் தொழும்"


எவ்வுயிரையும் கொல்லாதவன் ! எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாதிருப்பவன் ! புலால் உணவு உண்ணாதவன் தான் மனிதன் ! அவனை இவ்வுலக உயிர்கள் அனைத்தும் கைகூப்பித் தொழும் !

எல்லா உயிரும் கும்பிட வேண்டாம் குறைசொல்லும் படி நாம் நடக்க வேண்டாமே !

எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி ஒழுகும் உத்தம சீலரே உண்மையான நல்ல ஆன்மீகவாதி !

ஆன்மநேய ஒருமைப்பாடு உடையவராவார் !

உயிர் இறைவனல்லவா ?

எல்லா உயிரும் இறைவன் தானே ! அப்படியாயின் எவ்வுயிரும் வணக்கத்திற்க்குரியது தானே ! இந்த உண்மையை உணர்ந்தவனே ஞானி ! சித்தன் !

ஆத்திச்சூடியில் ஒளவையார் உரைத்த வாழ்க்கைநெறியை கடைபிடித்தால் நாமும் மனிதனாகலாம் !


"நெய் உருக்கி நீர் கருக்கி மோர் பெருக்கி உண்பவர் தம் பேர் உரைக்கில் போமே பிணி"

என தேரையர் சித்தர் கூறுகிறார் !

நெய்யை நன்றாக உருக்கியே உபயோகிக்கணும். தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்தே பருகணும். தயிர் சாப்பிடக்கூடாது. தயிரில் எவ்வளவு அதிகமாக வேண்டுமானாலும் தண்ணீர் சேர்த்து மோர் ஆக்கி சாப்பிட சுகம் கிடைக்கும்.

இறைவன் திருவடிகளே நம் கண்கள்!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

🙏ஞான தீட்சை மறுபிறப்பு !🙏

 சாகாக்கல்வி நூலிலிருந்து : 17 

ஞான தீட்சை மூலம் கண்மணியில் உணர்வு பெற்று உயிரை நோக்கி தவம் செய்பவன் ஞானி ஒருவரின் நேரடி கண்காணிப்பில் வந்து விடுவான் ! 

ஞான தீட்சை கொடுத்து அந்த சீடனை ஆட்க்கொள்கிறார் ஞானி ! 

அப்படிப்பட்டவனே "துவிஜன்" ஆகிறான்! மறுபிறப்பாளன் ஆகிறான். 

ஒரு தாயின் மடியில் பிறந்த மனிதன் குருவின் கருணையால் சூட்சும சரீர பிறப்பு எடுப்பதே மீண்டும் பிறக்கும் நிலை ! 

இப்படி பிறப்பவரே ஞானம் பெற முடியும் ! பிறந்தவன் செத்து மீண்டும் பிறப்பதல்ல "துவிஜன்". சீடன் !'

"மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை" என அகஸ்திய மகரிஷி கூறுவதும் இதைத்தான் ! 

"மறுபடியும் பிறவாதவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் " என இயேசுபெருமான் கூறியதும் இதைத்தான் !

இப்படி துவிஜன் ஆனவனே ஆகாமிய கர்மம் அற்றுப் போகிறான் ! ஆகாமியம் அவன் ஆசானையே சாரும் ! சீடன் ஆத்ம சாதகனாகி தவம் செய்து வருங்கால் அவனை வினை எந்த விதத்திலும் பாதிக்காமல் குரு பார்த்துக் கொள்வார் !

பிராரத்துவ கர்மத்தோடு பிறந்த மனிதன் துவிஜனானால் ஆகாமிய கர்மம் பாதிக்காது அவன் ஆசான் பார்த்துக் கொள்வார் ! 

சாதனை தொடர தொடர வினைகள் அனைத்தும் தலைக்கு வருவது தலைப்பாகையோடு போகும்படி குரு செய்வார் ! 

மேலும் மேலும் புனிதம் பெறுவான் ! துவிஜன் பூரணத்தைநோக்கி பீடுநடை பயில்வான் !

பிராரத்துவமும் ஆகாமியமும் போனால் எஞ்சியிருக்கும் சஞ்சித கர்மும் வந்து தாக்கும் ! 

எது வந்தால் என்ன ? 

எது போனால் என்ன ? 

துவிஜன் சாதனை தொடருமானால் வினைமுழுவதும் அழிந்து போகும் ஆசானின் அருளாலே !

மாதா பிதாவினால் உடலெடுத்த மனிதன் குருவால் துவிஜனாகி முடிவில் ஞானம் பெற்று இறைவனை அடைகிறான் !

ஸ்தூல உடலோடு பிறப்பவன் தன்னுள் சூட்சும சரீரம் இருப்பதை குருவால் உணர்ந்து அடைகிறான் ! காரணமாயிருக்கும் கடவுளை அறிந்து உணர்ந்து மரணமிலா பெருவாழ்வு பெற்றவனாகிறான் !

இந்த ஒரு பிறப்பில் மீண்டும் பிறப்பவனே முக்தன் சித்தன் ஞானியாவான் ! 

எத்தனையோ பிறவிக்குபின் பெற்ற இந்த அருமையான மானுட பிறப்பை உதாசீனபடுத்துபவன் இன்னும் எத்தனையோ பிறவி எடுக்க நேரிடலாம் !?


 இறைவன் திருவடிகளே நம் கண்கள்! 

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

🔥 சாவாநிலை !🔥 - சாகாக்கல்வி நூலிலிருந்து


🔥 சாவாநிலை !🔥


செத்தால் தானே உயிர் மீண்டும் பிறக்கும் ?

சாவை தவிர்த்தால் இனி பிறப்பையும் தவிர்க்கலாமே !

சாவு ஏன் வருகிறது ? அது தெரிந்தால் தடுக்கலாமே !

சாவு கட்டாயமல்ல ! வாழத் தெரியவில்லை சாகிறான் !

எப்படி வாழ்வது ?

நமது ஞானிகள், காலையில் எழுந்திருப்பது தொடங்கி இரவு தூங்கப் போவது வரை அன்றாடம் நாம் செய்ய வேண்டிய நித்திய கரும விதிகளை சொல்லி வழிகாட்டியுள்ளனர்.
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்"

ஒரு மனிதனுக்கு மேன்மை தருவது நல்லொழுக்கமே ! நாம் நம் உயிரை விடவும் மேலாக ஒழுக்கத்தை கருதி கடைபிடிக்க வேண்டும் !

திருவள்ளுவர், கூறுவது யாதெனின், ஒருவன் உயிரை விட மேலாக ஒழுக்கத்தை கடைபிடிப்பானாகில் அந்த உயிரை - இறைவனை உணரும் அடையும் நற்பேறு பெறுவான் ! எல்லாவற்றிலும் ஒழுக்கமே சிறந்தது !

இந்த ஒழுக்கம்

உடல் ஒழுக்கம், உயிர் ஒழுக்கம் என இருவகைப்படும் !

உடலும் உயிரும் சம்பந்தப்பட்டதல்லவா ? உடலும் உயிரும் என்றைக்கும் சம்பந்தப்பட்டே இருக்க ஒழுக்கம் அவசியமாகிறது !


உயிர் ஒழுக்கத்தை வள்ளல் பெருமான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என விரிவாக தெளிவாக உபதேசித்துள்ளார்கள் ! எல்லாமே அதில் அடங்கிவிட்டது !


உடல் ஒழுக்கம் அதில் கூறப்பட்டுவிட்டது. நல் ஒழுக்கம் எது என்பதை விட, தீய ஒழுக்கம் எல்லாவற்றையும் தவிர் என்றால் சுலபமல்லவா ?

உடலைக் கெடுக்கும், உடலிலிருந்து உயிரை விரைந்து வெளியேற்ற துணைபுரியும் பஞ்சமா பாதகங்கள் செய்யாதே !

பொய், கொலை, களவு, கள், காமம் என்ற இந்த ஐந்தும் நம் வாழ்வில் வராது கவனமாக மிக மிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் !

அறிவை மயக்குபவை, கெடுப்பவை, உடலை கெடுப்பவை, மனதை மயக்குபவை எதுவாயினும் தொடாதே - நெருங்காதே ! மனதாலும் எண்ணாதே ! இவை கொண்ட தீயவர்களோடும் சேராதே !

"துஷ்டனை கண்டால் தூர விலகு !"

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

ஞானம் பெற உதவும் படிக்கட்டுகள்

 சாகாக்கல்வி நூலிலிருந்து : 19 

🔥 ஞானம் பெற உதவும் படிக்கட்டுகள் 🔥

“மூர்த்தி - தலம் - தீர்த்தம் முறையாக ஆடின பேர்க்கு வார்த்தை சொல ஒரு சற்குரு வாய்க்கும் பராபரமே"     என தாயுமான சுவாமிகள் கூறுகிறார் ! 

ஒவ்வொரு மனிதனும் பக்தியோடு இருந்தால் நல்ல பண்போடு வாழ்ந்தால், நெறிபிறழாது வளர்ந்தால் நல்ல ஒரு குருவை அந்த ஆண்டவனே கொண்டு சேர்ப்பார் ! 

நன்றாக கவனியுங்கள்,,, 

நீங்கள் சிறந்த பக்திமானாக விளங்கினால் இறைவன் அருளால் உங்களுக்கு கிடைப்பது நல்ல ஒரு குருவே !

குரு மூலமாக தவம் செய்து தான் ஞானம் பெறவேண்டும் ! 

இதுவரை வாழ்ந்த மகான்களின் வரலாறை படித்துப்பாருங்கள், கஷ்டப்படாமல் துன்பப்படாமல் கடுமையான தவம் மேற்கொள்ளாமல் யாராவது ஞானம் பெற்றார்களா ? 

வேலை செய்யாமல் கூலி கிடைக்குமா ? 

ஞான சற்குருவை நாடி மெய்ப்பொருள் அறிந்து உணர்ந்து சதா காலமும் தவம் செய்தால் கிட்டும் இறையருள் !

     இன்றைய உலகில் மக்களுக்கு ஆன்மீகம் என்றால் கோவிலுக்கு போவது பூஜை செய்வது பஜனை பாடுவது அபிஷேகம் செய்வது தீர்த்தயாத்திரை போவது அன்னதானம் செய்வது யாகம் செய்வது பிராணாயாமம் செய்வது தியானம் செய்வது என ஏதாவது ஒன்றைத் தான் கருதுகிறார்கள் ! 

     இவையனைத்தும் ஞானம் பெற உதவும் படிக்கட்டுகளே ! 

     இவையனைத்தும் பக்தி கர்மம் யோகத்தில் அடக்கம் !

ஞானம் என்றால் தன்னை அறிவது ! 

நான் யார் ? என உணர்வது ! 

ஞானம் பெற இறையருள் பெற பக்தி தான் அஸ்திவாரம் ! 

பக்தியில் லாமல் ஞானமில்லை ! 

சிலர் வறட்டு வேதாந்தம் பேசுவர், விதண்டா வாதம் செய்வர், வித்யாகர்வம் மிக்கவர்களாயிருப்பர். இவர்களுக்கு ஞானம் கிலோ என்ன விலை ? என்ற கணக்குதான் ? 

பணிந்தவர்க்கே பரமனருள் கிட்டும் ! 

அன்பும் பணிவுமே ஞானத்தை தரும் !

 இறைவன் திருவடிகளே நம் கண்கள் ! 

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

திங்கள், 15 ஆகஸ்ட், 2022

🔥 துவிஜன் / மறுபிறப்பாளன் 🔥


சாகாக்கல்வி நூலிலிருந்து : 17

ஞான தீட்சை மூலம் கண்மணியில் உணர்வு பெற்று உயிரை நோக்கி தவம் செய்பவன் ஞானி ஒருவரின் நேரடி கண்காணிப்பில் வந்து விடுவான் !

ஞான தீட்சை கொடுத்து அந்த சீடனை ஆட்க்கொள்கிறார் ஞானி !

அப்படிப்பட்டவனே "துவிஜன்" ஆகிறான்! மறுபிறப்பாளன் ஆகிறான்.

ஒரு தாயின் மடியில் பிறந்த மனிதன் குருவின் கருணையால் சூட்சும சரீர பிறப்பு எடுப்பதே மீண்டும் பிறக்கும் நிலை !

🙏குரு தீட்சையே மறுபிறப்பு !🙏

இப்படி பிறப்பவரே ஞானம் பெற முடியும் ! பிறந்தவன் செத்து மீண்டும் பிறப்பதல்ல "துவிஜன்". சீடன் !'

"மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை" என அகஸ்திய மகரிஷி கூறுவதும் இதைத்தான் !

"மறுபடியும் பிறவாதவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் " என இயேசுபெருமான் கூறியதும் இதைத்தான் !

இப்படி துவிஜன் ஆனவனே ஆகாமிய கர்மம் அற்றுப் போகிறான் ! ஆகாமியம் அவன் ஆசானையே சாரும் ! சீடன் ஆத்ம சாதகனாகி தவம் செய்து வருங்கால் அவனை வினை எந்த விதத்திலும் பாதிக்காமல் குரு பார்த்துக் கொள்வார் !

பிராரத்துவ கர்மத்தோடு பிறந்த மனிதன் துவிஜனானால் ஆகாமிய கர்மம் பாதிக்காது அவன் ஆசான் பார்த்துக் கொள்வார் !

சாதனை தொடர தொடர வினைகள் அனைத்தும் தலைக்கு வருவது தலைப்பாகையோடு போகும்படி குரு செய்வார் !

மேலும் மேலும் புனிதம் பெறுவான் ! துவிஜன் பூரணத்தைநோக்கி பீடுநடை பயில்வான் !

பிராரத்துவமும் ஆகாமியமும் போனால் எஞ்சியிருக்கும் சஞ்சித கர்மும் வந்து தாக்கும் !

எது வந்தால் என்ன ?

எது போனால் என்ன ?

துவிஜன் சாதனை தொடருமானால் வினைமுழுவதும் அழிந்து போகும் ஆசானின் அருளாலே !

மாதா பிதாவினால் உடலெடுத்த மனிதன் குருவால் துவிஜனாகி முடிவில் ஞானம் பெற்று இறைவனை அடைகிறான் !

ஸ்தூல உடலோடு பிறப்பவன் தன்னுள் சூட்சும சரீரம் இருப்பதை குருவால் உணர்ந்து அடைகிறான் ! காரணமாயிருக்கும் கடவுளை அறிந்து உணர்ந்து மரணமிலா பெருவாழ்வு பெற்றவனாகிறான் !

இந்த ஒரு பிறப்பில் மீண்டும் பிறப்பவனே முக்தன் சித்தன் ஞானியாவான் !

எத்தனையோ பிறவிக்குபின் பெற்ற இந்த அருமையான மானுட பிறப்பை உதாசீனபடுத்துபவன் இன்னும் எத்தனையோ பிறவி எடுக்க நேரிடலாம் !?

இறைவன் திருவடிகளே நம் கண்கள்!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

ஞான சற் குரு சிவசெல்வராஜ் அய்யா சாதனை





 தங்கஜோதி ஞான சபையின் ஸ்தாபகர் ஆன்மீக செம்மல் ஞான சற் குரு சிவசெல்வராஜ் புரிந்த முதல் ஆன்மீக புரட்சி 1992-ல் ஞான இரகசியங்களை  வெளிப்படுத்தி ' கண்மணி மாலை' எனும் மெய்ஞ்ஞான நூலை வெளியிட்டது.

இரண்டாவது ஆன்மீகபுரட்சி தொடர்ந்து 40 மெய்ஞ்ஞான நுற்களை வெளியிட்டது தான்! இதுவரை உலகில் வேறு எவரும் செய்திராத இமாலய சாதனை! 

மூன்றாவது ஆன்மீக புரட்சி ஆபத்பாந்தவன் அனுமன் ஜெயந்தியன்று 1-1-2014ல்  உலகுக்கு ஞான தீட்சை வழங்கிட 9 அருளாளர்களை ஞான சற்குருவாக்கியது தான் !

உலககுரு வள்ளலார் கருணை பரிபூரணமாய் கிட்டியது!

www.vallalyaar.com


Popular Posts