ஞாயிறு, 15 டிசம்பர், 2013

ஒன்றவன் தானே

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே

ஒன்றவன் தானே - இறைவன் ஒருவரே

இரண்டவன் இன்னருள் - பரமாத்மாவாகிய ஏக இறைவன் ஜீவாத்மாவாக எல்லா ஜீவராசிகளில் துலங்குகிறான் ஏக இறைவன் இரு விதமாக அருள் பாலிக்கின்றான்! ஒன்று அறக்கருணை மற்றொன்று மறக்கருணை! நன்னெறி நடக்க வைத்து அருள் புரிந்து ஆட்கொள்வது அறக்கருணை. தீய நெறி நடக்கும் அசுர குணத்தவரை அழித்து ஆட்கொள்வது மறக்கருணை! நமது உடலில் உயிர் ஒன்று. அதை அடைய வழியாகிய  விழிகள் இரண்டு ஆக இறைவன் அருள் விளங்குவது இரு கண்களில் !

நின்றனன் மூன்றினுள்  - உடலில் உயிராகி துலங்கும் இறைவன், சூரிய கலையாக சிவமாக இடது கண்ணில், சந்திர கலையாக சக்தியாக இடது கண்ணிலும், இருகண்ணும் உள்ளே சேரும் இடத்தில் அக்னி கலையாகவும் ஆக மூன்று நிலையாக விளங்குகிறார்! சர்வ வல்லமை படைத்த இறைவன் முக்காலமும் மூவுலகமும் விளங்கும் பரம்பொருளாகும்.

நான்கு வேதங்கள் ஆகிய ரிக் யஜுர் சாம அதர்வண வேதம் ஆகியவற்றால் உணர்த்த படுபவனே இறைவன்! அவை சரியை கிரியை யோகம் ஞானம் எனும் நான்கு வழி முறைகளை போதித்து ஜீவர்களை பக்குவிகளாக்குகிறது. அவைகளை அந்த கரணம் நான்கு வழி அதாவது மனம் புத்தி சித்தம் அகங்காரம் வழிஉணரவைத்து முக்தியை தருகிறது!

ஐந்து வென்றனன் - இறைவன் பஞ்சகீர்த்தியம் புரிபவன்! படைத்தல் காத்தல் மறைத்தல் அருளல் அழித்தல் என்ற   ஐந்தொழிலையும் செய்து உயிர்களை கடை தேற்றுகிறான். மனிதன் ஐம் புலன்கள் வழியே சென்றால் துன்பமே! ஐம்புலன்களை இறைவன் வழியில் திருப்பினால் மட்டுமே பேரின்பம் பெறலாம்!

ஆறு
விரிந்தனன் சிவம் ஐந்து முகத்தோடு ஆறாவது  அதோமுகத்துடன்  ஒளியை நெற்றி கண்ணில் இருந்து வெளியாக்கி ஆறுமுக கடவுளானார்! நமது உடல். நமது உடலில் ஆறு ஆதாரமாகி உடல் இயக்கத்துக்கு காரணமாக   விளங்குகின்றார்!

நமது இரு கண்களாகி வெள்ளை விழி கரு விழி கண்மணி என மூன்று இரண்டு ஆகி ஆறுமுக - இருகண் ஒளியாகவும் துலங்குகிறார்.

இரு கண் உள் ஆறுபோல் ஒளி பாய்ந்து செல்லும் தன்மையாக உள்ளார்! நெருப்பாறு! நமக்கு ஆறாவது பகுத்தறிவாக துலங்குவதும் அந்த இறைவனின் ஒளியே!

ஏழு உம்பர் சென்றனன் - ஆறு ஆதாரங்களையும் கடந்து ஏழாவது சகஸ்ரதளத்தையும் ஊடுருவி நடுவில் துலங்குபவன்!  ஈரேழு உலகத்தையும் தாண்டி அதற்க்கு அப்பாலும் எல்லையில்லா பெருவெளியில் பேரொளியாக துலங்குபவன்! எழு வகை பிறவிகள் எல்லாவற்றிக்கும் உள்ளிருந்து ஒளிர்ந்து அருள் மழை பொழிந்து மோட்சம் அருளும் பிறப்பு இறப்பு இல்லாத பெருந்தகை!

நம்முள் இருக்கும் நம் ஜீவனாகிய அந்த இறைவனை நாம் எட்டி பிடிக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி "எட்டேயாகும்!" எட்டு என்றால் என்னில் எட்டு எழுத்தில் அ நமது கண்களே எட்டு. அதை நீ எட்ட வேண்டும்!

எதற்கு? உன்னுள் ஒளியான ஜீவாத்மாவான அந்த இறைவனை எட்டி பிடித்திடவே!

கட்டிப்பிடி நம் திருவடியாகிய நம் கண்களை!  இறுக பற்றிப்பிடி இறைவன் திருவடியாகிய நம் கண்களை ! இறுக பற்றிப்பிடி இறைவன் திருவடியாகிய நம் கண்களை! நம் கண்களிலில் ஒளியாக துலங்குவதை உணர்ந்து தவம் செய்தாலே, உள்ளே நம் ஜீவனாக அந்த பரமனே இருப்பதை உணரமுடியும்! திருமந்திரத்தின் மூவாயிரம் பாட்டும் முதிர்ந்த ஞானத்தையே ஊட்டுகிறது என்பதற்கு இந்த முதல் பாடலே போதுமான சாட்சியாகும்!

திங்கள், 9 டிசம்பர், 2013

கண்ணன் காளிங்க நர்த்தனம்




எட்டு என்பது " 8 " என்றும் தமிழில் "அ" என்றும், "சூரியன்" என்றும், வலது கண் என்றும் மறைபொருளாக உணர்த்தியதாகும்.

இரண்டு என்பது " 2 " என்றும், தமிழில் "உ" என்றும், "சந்திரன்" என்றும், இடது கண் என்றும் கூறுவர்.

இந்த எட்டும் இரண்டும் பத்து. 8 + 2 =10 , அ + உ = ய, சூரியனும் சந்திரனும் நம் சாதனையால் ஒன்று பட்டு உள்முகமாக சென்று பத்தாகிய. "ய" ஆகிய அக்னியோடு சேர்ந்தாலே திருவடியை. ஜோதியை, ஜீவனை பாதத்தை நாம் தரிசிக்க முடியும். இந்நிலையைத் தான் "முச்சுடரும் ஒன்றை முடிந்ததோர் ஜோதி பாதம் அச்சுதனும் அயனும் காண அனந்தமாபாதம்" என சித்தர்கள் கூறுவர்.

யமுனையில் கண்ணன் காளிங்க நர்த்தனம் புரிந்தான் என்பது புராணம். இதன் தத்துவம் பற்றி கொஞ்சம் சிந்தித்து பார்போம்.

"ய" - முனை "ய" என்ற கலை சேர்ந்த எழுத்தில் மூன்று முனை - சூரியன் சந்திரன் அக்னி என மூன்று கலை சேர்ந்த இடத்தில் - விஷத்தைக் கக்கும் காளிங்கன் - காம குரோதாதிகளை கொடுக்கும் பஞ்சேந்திரியங்களை வென்று அதன் மேல் ஏறி - ஒளியாகிய இறைவன் - கண்ணின் ஒளி - கண்ணன் ஆனந்த நடனமாடினான் என்பதே மெய்ஞான விளக்கம். "ய" - முனை மூன்றாக உள்ளது,

அதை ஒன்று சேர்த்தாலே ஞானசாதனை . அப்படி சேர்க்கும்போது சூலாயுதம் போல் மூன்று கூறாக உள்ளது. வேல்போல் குவிந்து ஒன்றாகி விடும். முருகனுக்கு சக்தி கொடுத்தது ஞானவேல் அல்லவா? நாம் ஒவ்வொருவரும் ஞான வேலாக மிளிர வேண்டும்! ஒளிவிட்டு பிரகாசிக்க வேண்டும்!


அனுபவிப்போம் - உண்மை அறிவோம் !

இந்த ரகசியத்தை யாரவது சுட்டிக் காட்டினால்தான் நமக்குப் புரிய முடியும். அதனால்தான் "சுட்டிக்காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது" என்ற பழமொழி நிலவுகிறது. பற்பல நூற்களையும் ஞானவான்கள் கூற்றையும் படிக்கும்போது பரம்பொருள் - ஒளி - கண் - என நினைத்து பாருங்கள் - படியுங்கள் - உண்மை விளக்கங்கள் அழகாக புரியும் !

சிந்திப்போம் தெளிவு கிடைக்கட்டும். பரம்பொருள் ஒளியாக - கண்ணில் காரியப்படுவதை நாம் உணர்வதுதான் ஞானத்தின் முதல்படி. திருவடி தீட்சை என்றும் சட்சு தீட்சை என்றும் இதைத்தான் குரு உபதேசம் செய்வார்.

இதுபோலவே, நாம் இறைவன் குடிகொண்டிருக்கும் இந்த உடலின் உட்புகு வாசலை-கண்ணை-கண்மணியில்-நினைவால்-தட்ட வேண்டும். தட்ட வேண்டிய இடத்தில் தட்டவேண்டிய முறைப்படி தட்டிக்கூப்பிட்டால் எங்கு இருந்தாலும் இங்கே வந்து வாசலை திறந்து நம்மை உள்ளே அழைத்துச் செல்வான். கேட்டதெல்லாம் தருவான். அருள்வான். அருளாளன் அல்லவா இறைவன்!

நம் கடன்-கடமை இறைவன் இருக்கும் வீட்டு வாசலில்-கண்ணில் நினைவை நிறுத்தி பணி-சாதனை -செய்து கிடப்பதே. நம்மை உள்ளே அழைத்துச் சென்று அருள் கொடுப்பவன் எல்லாம் வல்ல இ றைவன் செயலே.

வாசல் கதவை தட்டிக் கூப்பிட்டால் போதும்! நாம் செய்ய வேண்டியது இவ்வளவே! இந்த சின்ன வேலையைக் கூட நம்மால் செய்ய முடியாவிட்டால் எப்படி?! தட்டுங்கள் - திறக்கப்படும்.

நல்ல குருவைப் பெற்று சாதனை செய்யுங்கள், சத்சங்கம் கூடுங்கள். அப்பொழுதுதான் ஒருவருக்கொருவர் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தித்துக் கொள்ளலாம்.

"யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ஊண் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்தான் பற்றப் பற்ற தலைப்படுந்தானே". நமது ஊண் உடலைப்பற்றி நிற்கின்ற உணர்வுறு மந்திரமாகிய கண்ணில் ஒளியாக துலங்கும் ஜீவனை நாம் சாதனையால் பற்றப் பற்ற - சிக்கெனப் பற்றினால் - நமக்கு கைவல்யப்படும். "சுடரடி தொழுது எழு என் மனனே" என ஒரு பக்தர் பாடுகிறார்.

இறைவன் திருவடியாகிய சுடரை தொழு என் மனமே என்கிறார். திருவடியே - சுடர் என் ஜோதியே எவ்வளவு அழகாக கூறுகிறார் பாருங்கள்.!

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு"


திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.

வெள்ளி, 6 டிசம்பர், 2013

தனித்திரு! விழித்திரு!

நன்றாக சாப்பிட்டு விட்டு  தனிடிருக்கவா சொன்னார்? உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டல்லவா?

பட்டினி கிடந்தாலும் மயங்குவான்.
சாப்பிடாலும் மயங்குவான். தூங்குவான்!!

இல்லாததாலும் மயக்கம் இருந்தாலும் மயக்கம்!

இந்த மயக்கம் – மாயை அகல சத்விசாரம் செய்!

கூடியிருந்து செய்வது சத்சங்கம்!

தனித்திருந்து செய்வது சத்விசாரம்.

நீ யார் என சிந்தி! இது பற்றி சிந்திப்பதே சத்விசாரம்.

அதற்கு தனித்து தான் இருக்க வேண்டும்.

கூட்டமே ஆகாது ஐயா!

ஆன்ம பசியோடு பசித்திரு! அறிவு பசியோடு தனித்திரு!

கிட்டுமா? ஞானம்? ஜீவகாருண்யம் வேண்டும்! உன் ஜீவனை கருணையோடு பார்!

பரிதவிக்கும் உன் ஆன்மா இளைப்பாற தூங்காமல் தூங்கு! சும்மா இரு! ஆன்மா துலங்கும் உன் இரு விழியில் ஒளியை பார்!

ஞானம் பெற விழி விழி என விழித்திருந்து தவம் செய்! கண்ணை திறந்து விழிதிறந்து தான் ஞானதவம் செய்யணும்! ஞானம் பெற “விழித்திரு”.

பசித்து தனித்து விழித்தால் தான் மோட்ச பதவி கிட்டும். அதற்கு தேவை ஜீவ காருண்யம். உன் ஜீவனை கருணையோடு பார்த்து ஞான தவம் செய்வதே ஜீவ காருண்யம்.

ஆன்ம சாதனை. எத்தனையோ விதங்களில் நாம் மற்றவருக்கு உதவலாம். அதில் ஒன்று தான் சாப்பாடு. சாப்பாடு போட்டால் ஞானம் வரத்து. ஓரளவு அன்பு அற்றார் அழி பசியாற்றலால் கிட்டும். ஓரளவு போதாதே? அன்பு மிகுதியாகி இரக்கம் உருவாகானும். இரக்கம் தானே கருணையாக வெளிப்படும்.

இரக்கம் உள்ளதால் தானே வாடிய பயிரைக் கண்டு வாடினார்?! தர்ம சாலை கட்டினார்! கருணை இருந்ததால் தானே சத்திய ஞான சபை உருவாக்கி திருஅருட்பாவை தந்து மரணமில்லா பெருவாழ்வு பெற நமக்கு வழி காட்டும் விழியை காட்டிய ஞான சற்குருவாக விளங்குகிறார் திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்! நாம் செய்த புண்ணிய பலனால் தான் இதை அறிகிறோம்.



திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.

பசித்திரு


                                                           :: பசித்திரு::

தர்ம சாலை கட்டி சாப்பாடு போட்ட வள்ளலார் “பசித்திரு” என்றாரே என்ன பொருள்? சாப்பிடாமல் பட்டினி கிடக்க சொல்ல வில்லை.

யாரும் சாபிடாமல் இருக்காதீர்கள்! அது நம் ஜீவனை வதைப்பதாகும் என்றும், தேவை அறிந்து சுத்த சைவ உணவு உட்கொள்ளுங்கள் என்றார்.

அப்படியானால்! வயிற்று பசியை பற்றி வள்ளலார் பசித்திரு என்று சொல்லவில்லை? பின் எதை பற்றி? ஆன்ம பசியை பற்றியே!

எத்தனையோ பிறவி எடுத்து துன்பப்படும் ஆத்மா ,என்று தான்? இந்த பிறவிச் சுழலில் இருந்து விடுதலை கிடைக்குமோ என ஏங்கி
தவிக்கும் !

அதன் தேவை விடுதலை பேரின்பம் ! இது தான் ஆன்மாவின் பசி ! அதற்கு உணவு கொடு !

ஏ மனிதா உனக்கு தேவை ஆன்ம பசி !நீ உன் ஆன்மாவை உணா் !

பேரின்பம் பெற வழிபாரு !

ஆன்மபசியோடு இருக்கும் உனக்கு வயிற்றுப்பசி ஒரு பொருட்டாக இருக்கக் கூடாது என்பதற்காக கட்டினார் தர்மசாலை.

ஆக தர்ம சாலையும் சத்திய ஞான சபை போல ஆன்ம பசி நீக்கவே கட்டினார்.

திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 

வடலூர் “ஜோதி தரிசனம்” விளக்கம்




  வடலூர் சத்திய ஞானசபை  “ஜோதி தரிசனம்”   விளக்கம்



வள்ளல் பெருமான் சத்ய ஞான சபையை 1872 ம் ஆண்டு நிறுவினார்.


ஞான உபதேசங்களை அருட்பாகளால் கூறி அருளிய வள்ளலார் பாமாரகளும் புரிந்து கொள்ளும் படியாக ஞான அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்க கட்டியதே ஞான சபை.
.
சத்ய ஞான சபை எண் (8) கோண அமைப்பு உடையது. சத்ய ஞான சபை நம் தலை அமைப்பை போன்றது. முன்புறம் உள்ளே இருபுறமும் சிற்சபை , பொற்சபை உள்ளது. நடுவே உள்ளே – ஞானசபை உள்ளது

முன்வாசலில் உள்ள சிற்சபை , பொற்சபை நம் கண்களை குறிப்பது. ஞான சபை நம் அக்னி கலை உள்ள ஆன்ம ஸ்தானத்தை (நம் இரு கண்கள் உள் சேரும் இடம்) குறிப்பது.
.
  1. ஆணவம்
  2. கன்மம்/கர்மம்
  3. மாயை 

எனும் மும்மலங்களால் ஆன நமது கர்ம வினைகள் எழு திரைகள் போன்று ஆத்மா ஜோதி தெரியாதபடி மறைத்து கொண்டிருக்கும். இவ்வேழு திரைகள் விலகினால் தான் ஜோதி தரிசனம்.

நம் உயிரை பற்றி உள்ள வினைகள் நம் இரு கண்மணியில் நடுவில் உள்ள ஊசி முனை அளவு துவாரத்தை மூடியுள்ளது.

வள்ளலார் கண்ணாடி கூண்டின் உள் விளக்கினை ஏற்றி வைத்ததன் பொருள் இதுவே.

இவ்வினைக்கு தகுந்தபடியே நம் மனம் வேலை செய்கிறது. நம் உடல் அமைப்பு, சுற்றம் போன்ற அனைத்தையும் நிர்ணயிப்பது இவ்வினைகள் தான்.


இவ்வினாக்கள் கண்ணாடி போல் உள்ளதால் நம்மால் பார்க்க முடிகிறது. கண் இல்லாதவர்களுக்கு இவ்வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளதால் பார்வை சக்தி அவர்களுக்கு இல்லை.

குருவிடம் தீட்சை பெற்று- நம் கண்மணியில் உணர்வு பெற்று இந்த கண்மணி உணர்வில் நம் மனதை இருத்தி நினைந்து, உணர்ந்து தவம் செய்தால் நம் கண் ஒளி பெருகி அந்த வெப்பத்தால் வினை திரை கரையும். வினைகள் கரைய கரைய நம் துயர் நம்மை விட்டு நீங்கும். பின்னர் உள்ளே உள்ள ஜோதி தெரியும்.


குருவிடம் தீட்சை பெறுவதையே வள்ளல் பெருமான் “தகுந்த ஞான ஆசிரியரிடம் உங்கள் நடு கண் புருவ பூட்டை திறந்து கொள்வது நலம்” என்கிறார்.
.
தைபூசம் அன்று ஞானசபையில் ஒவ்வொன்றாக எழு வர்ண திரைகள் விலக்கப்பட்டு முடிவில் ஜோதி காண்பிக்க ஏற்பாடு செய்தார்.மேலும் தை பூச தினதன்று ஜோதி காண்பிக்கப்படும்

நேரத்தில் வலது பக்கம் சூரியனும் , இடது பக்கம் சந்திரனும் நேர் கோட்டில் இருக்கும். நமது உடலில் வலது கண் சூரியனையும் இடது கண் சந்திரனையும் குறிக்கும்.நமது உடலிலும் வலது கண் ஒளியும், இடது கண் ஒளியும் உள் சென்று அக்னி கலையோடு சேர்வதை குறிக்கவே இவ்வேறுபாடு. எட்டும் , இரண்டும் என்று நமது கண்களையே கூறிப்பிடுவர் சித்தர்கள், ஞானிகள்.
.
இதையே அகஸ்தியர் தனது துறையறி விளக்கத்தில் “சுடு கொண்ட திருஆடு துறையை நோக்கில் சூரியனும் சந்திரனும் தோற்றமாமே” கூறிபிடுகிறார்

“சத்ய ஞான சபையை என்னுள் கண்டனன்” என்று வள்ளல் பெருமான் அனைவரும் தங்களுள் ஜோதி தரிசனம் காண வேண்டும் என்று கூறிப்பிடுகிறார்.

சத்ய ஞான சபையில் வெளியே வாசலில் வள்ளலார் பொரிந்த வாசகம் “புலால் கொலை தவிர்த்தவர் மட்டுமே உள்ளே வரவும்” என்று. இதன் மூலம் நம் வினையை வெல்ல, நம்மை உணர, ஆண்டவனை அடைய முதல் செயல் புலால் கொலை முற்றும் தவர்க்க வேண்டும் என்பதே. இவ்வாறு புலை, கொலை தவிர்த்தவர் தான் தம்முள் உள்ள ஆன்ம ஜோதியை தரிசிக்க தகுதி பெற்றவர் ஆவர்.
.
அன்புடையீர் எனவே புலால் உணவை தவிர்த்து , மது , புகை போன்ற போதை பழக்கத்தை விட்டு வள்ளல் பெருமான் கூறியபடி ஆகவினத்தாராக மாறுங்கள். வடலூர் வந்து சத்ய ஞான சபையில் ஜோதி தரிசனம் காணுங்கள்.
.
குருவிடம் தீட்சை பெற்று தவம் செய்து வினை திரையை விலக்கி உங்களுள் ஆன்ம தரிசனம் பெறுங்கள். வள்ளல் பெருமான் தங்களிடம் இருந்து காத்து வழிநடத்துவார்


எல்லா உயிரும் இன்புற்று வாழ்க.
 

கொல்ல நோன்பு குவளையமெல்லாம் ஓங்குக.

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.



திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 

புதன், 4 டிசம்பர், 2013

நம் உயிர் உடலில் எங்கு இருக்க முடியும்?


இவ்வுயிர் அழிவற்றது என்றும் நாம் யார் என்ற கேள்விக்கு “நாம் என்பது” நம் உடலில் தங்கியுள்ள உயிர்

அதாவது ஜீவாத்மா தான் நான் என்று கூறிப்பிடுகின்றனர். இவ்வுயிரை அறிந்து , தெரிந்து, உணர்ந்தாலே நாம் யார் என்பதை தெளிவாக முற்றிலும் உணர முடியும்.

இவ்வுயிரை அறிய முதலில் இவ்வுயிர் நம் உடலில் எங்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எங்கு இருக்கிறது என்று தெரிந்தால் தான் நாம் உடலில் அங்கு சென்று அதை உணர முடியும்.

நம் உயிர் உடலில் எங்கு இருக்க முடியும் என்பதை முதலில் நமது சிற்றறிவால் சிந்தனை செய்து அறிவோம்? அதன் பின் நம் அடைந்த முடிவை ஞானிகளின் பாடல்களின் மூலம் உறுதி செய்து கொள்வோம்.

உயிரின் தன்மை என்ன என்று தெரிந்து கொண்டு பின் அது எந்த இடத்தில் இருக்கும் என்று பார்போம். உயிரின் தன்மை அறிய இறந்த உடலுக்கும் உயிர் தங்கியுள்ள உடலுக்கும் உள்ள வித்தியாசத்தை கொண்டு பார்போம்.

எல்லா உயிர் உள்ள மனித உடலும் ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பம் உள்ளதை அறியலாம். இறந்த உடலில் இவ்வெப்பம் இல்லாமல் குளிர்ந்து போய் இருப்பதை நாம் பார்க்கலாம். அதனால் உயிரின் ஒரு தன்மை வெப்பம் (அ) ஜோதி என்று அறிந்து கொள்ளலாம்.

 ஆன்மா ஜோதி மயமானது என்ற ஞானிகளின் கூற்றின்படி உயிரின் மற்றொரு தன்மை ஒளி என்பதை அறியலாம்.

இவ்விரு முக்கியமான தன்மையினை கொண்டு உயிர் இருக்ககூடிய இடத்தை ஆராய்வோம்.முதல் படியாக ஒரு மனிதன் எந்த உறுப்பு இல்லாமல் உயிர் வாழ முடியாது என்பதை பார்போம்? கை, கால் இல்லாமல் உயிர் வாழ முடியும். நம் உடலில் இருதயம் கூட இல்லாமல் ஒரு கருவியின் உதவி கொண்டு நாம் உயிர் வாழ்கிறோம். இதனால் இவ்வுருப்புகளில் உயிர் இல்லை என நாம் முடிவு செய்து கொள்ளலாம்.
தலை இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியாது.

தலையே உடலில் பிரதான உறுப்பாக இருக்கிறது. “எண் சான் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்பது சித்தர்கள் வாக்கியம்.

இதிலிருந்து உடலில் உயிர் தலையில் தான் இருக்கிறது – இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது அல்லவா?

நமது தலையில் எங்கு உயிர் இருக்க முடியும்? ஒரு சிறு உதாரணம் கொண்டு இதை ஆராய்வோம். நமது தலையினை ஒரு அறையாக பாவிப்போம். ஒரு விளக்கினை (ஒளி) ஏற்றி நடு அறையில் வைத்தால் தான் அவ்விளக்கின் ஒளி சமமாக எல்லா இடங்களுக்கும் பரவும். அது போலவே நமது உயிரானது சிரசின் நடுவில் அதாவது தலையின் உள் நடுவில் இருந்தால் தான் உயிர் ஆற்றல் தலையில் உள்ள ஐந்து உறுப்புகளுக்கும் சமமாக ஆற்றல் கொடுக்கும்.

அதனால் நமது சிந்தனையின் படி தலையின் நடுவில் தான் உயிர் இருக்க வேண்டும் என்று புலனாகிறது. நமது இந்த முடிவை ஞானிகளின் பாடல்களை கொண்டு சரியா என்று பார்போம்.

திருமூல நாயனார் தமிழ் மறையான திருமந்திரத்தில் அப்பட்டமாக இந்த ஞான இரகசியத்தை கூறியுள்ளார்.

நமது சிரசில் இருந்து உச்சியிலிருந்து ஒரு நாடி கீழே இறங்குகிறது! அது நமது கண், காது, மூக்கு உள்ளே சேரும் மத்தியில் , வாயின் உள் அண்ணாகுவின் சற்று மேல் வந்து நிலை கொண்டு , அங்கிருந்து இருநாடியாக பிரிந்து இரு கண்களில் வந்து சேர்கிறது. இவ்விடமே சிரநடு.

மற்றுமொரு சித்தர் “உச்சிக்கு கீழ் அண்ணாவுக்கு மேல் அணையா விளக்கு நித்தம் எரியுதடி ஞான பெண்ணே” என்று உயிர் உள்ள இடத்தை சுட்டி காட்டுகிறார். இதன் மூலம் உயிர் உள்ள இடம் நமது தலை மத்தி என்று புலனாகிறது.

அடுத்தாக தலையின் நடுவில் உள்ள உயிரை எவ்வாறு சென்று அடைவது என்று பாப்போம். இது மிகவும் எளிது. நமது தலையில் உள்ள எந்த உறுப்பில் ஒளி துலங்குகிறது? கண் அல்லவா?

ஆம் கண்ணே நமது ஜீவ ஒளியினை பிரதிபளிக்கிறது.

ஒளியாக உள்ள அந்த இறைவனின் அம்சமான உயிரை – ஒளியை கொண்டே தான் அடைய முடியும். அதனால் கண்களே நாம் நமக்குள் உட்புகும் வாசல். கண் ஒளியே இறைவன் திருவடி. மெய்யான ஒளியினை தாங்கி உள்ளதால் கண்ணே மெய்பொருள். இறைவன் திருவடியான கண்களை பிடித்தாலே நம்மை அறிந்து இறைவனை அறிய முடியும்.

கண்ணை பற்றி பாடாத ஞானிகளே இல்லை எனலாம். பரிபாசையாக , நேரடியாக, குறிப்பாக கண்ணையே ஞானிகள் , இறைவனை அடையும் வழி என்று கூறி உள்ளனர். கண்ணை பற்றி சொல்லியுள்ள சில ஞானிகளின் பாடல்களை பாப்போம்.


திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 

வெள்ளி, 22 நவம்பர், 2013

பாவங்கள் தீர புனித நீராடு! எங்கே ?

பாவங்கள் தீர புனித நீராடு!  எங்கே ?


நெக்கு நெக்கு உள் உருகி உருகி
நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும்
நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி
நானா விதத்தாற் கூத்தும் நவிற்றிச்
செக்கர் போலும் திரு மேனி
திகழ நோக்கிச் சிலிர் சிலிர்த்துப்
புக்கு நிற்ப தென்று கொல்லே என்
பொல்லா மணியை புணர்ந்தே

நமது கண்மணியில் உணர்வை வைத்து தவம் செய்தால் நெகிழ்ச்சி உருவாகும்! நெகிழ்ந்து கண்ணீர் அருவியில் நாம் குளிக்கனும். நாம் செய்த பாவங்கள் தீர புனித நீராட வேண்டும் !

உண்மையான புனித நீராடல் ஒவ்வொருவரும் அவரவர் கண்ணீர் அருவியில் குளிப்பதே!!

இப்படிப்பட்ட தவம்

           நின்று கொண்டே செய்யலாம்!
          இருந்து கொண்டே செய்யலாம்,
          படுத்துக்கொண்டே செய்யலாம்
          நடந்து கொண்டே செய்யலாம்

இது தான்  ஒப்பற்ற ஞான சாதனை!

வேறு எந்த சாதனையும் இருந்து-ஆசனம் அமைத்து கொண்டுதான் செய்ய வேண்டும் என்பர்! எங்கும் இருக்கும் கடவுளை எல்லா காலத்திலும் இருக்கும் கடவுளை எங்கே இருந்து எப்படி கும்பிட்டால் என்ன?! இராகு காலம் எமகண்டத்திலும் கும்பிடலாமே!? எந்த திசையை பார்த்தும் கும்பிடலாமே!

நின்றோ இருந்தோ படுத்தோ நடந்தோ தவம் செய்யலாமே!

உன்னுள் இருக்கும் இறைவனை வணங்க எந்த தடையும் இல்லை!
எதுவும் யாரும் நம்மை தடுக்க முடியாது !அதுதான் ஞானம்! இறைவனை நாடி நம் மெய்யுள்ளே கூடி பாடலாம் ஆடலாம் வாழ்த்தலாம் மகிழலாம் யார் நம்மை தடுக்க முடியும்?! இப்படி எதையாவது செய்யுங்கள்.


உங்கள் கண்கள் திருவடி சிவந்து கோவை பழமாக வேண்டும். தவத்தால் கண்களில் சுத்த உஷ்ணம் மிகுதிப்பட வேண்டும்! உங்கள் உடல் சிலிர்க்க வேண்டும். கண்ணீர் மழை பொழிய வேண்டும். உள்ளே போக
கண்மணியோடு நீங்கள் சேர வேண்டும்!

உங்களுக்கு தேவை விழிப்புணர்வு!  அதாவது விழியில்
புணர்ச்சி! அப்போது தான் ஆனந்த அனுபவங்கள் கை கூடும்! விழியில் உணர்வை வையுங்கள்!

 விழிப்புணர்ச்சி பெறுவீர் பெற்று பேரின்பம் அடைவீர் !

திருவாசக மாலை எட்டாம் திருமுறை


திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.



விழித்திரு

விழித்து விழித்திமைத்தாலும் சுடர் இலையேல்
விழிகள் விழித் திளைப்பதலால் விளை வொன்றும் இல்லையே



குரு இல்லாமல் நூற்களை படித்து  கண்டவர்
பேச்சை கேட்டு தான்தோன்றித்தனமாக செயல்படும் ,தியானம் செய்பவர்கள் துன்பத்தையே அடைவர்!!  என்கிறார்!

குருவைப்  பெற்று ஞான சற்குருவை பெற்று திருவடி உபதேசம் தீட்சை பெற்று கண்மணியில் உணர்வு பெற்றுவிழித்திருந்து  தவம்  செய்பவரே உய்வர்! ஞான சற்குரு வழி திருவடி தீட்சை பெற்றாலே நம் கண்ணில் சுடர் உதயமாகும்!

வலது கண்ணில் சூரிய சுடர் உதயமாகும்! இடது கண்ணில் சந்திர சுடர் உதயமாகும் இரு கண்களிலும் சூரிய ஜோதி சந்திர ஜோதி தோன்றியே விழித்திருந்து கண்களை விழித்து விழித்து நோக்க நோக்க இரு சுடரும் பெருகி  ஒன்றாகி  உள்ளே பாயும்!

இரு  கண்ணும் உள்ளே சேரும் இடத்தை  சென்றடையும்! அந்த இடத்தில் அக்னி சுடர் உதயமாகும் பெருகும்! பெருகணும் அதுவரை நாம் விழித்து உற்றுப்பார்த்து உணர்ந்து ஒளிப்பெருக்கு ஒளி பெருக்கி தவம் செய்து கொண்டயிருக்க வேண்டும்!!

"உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடும்  மந்திரம்" என சித்தர் பெருமகனார் கூறுகிறார்! இதுவே ஞானம் பெற ஞானிகள் கூறிய தந்திரம்! விழித்திரு-விழிப்புணர்வுடன் இரு- விழியிலேயே இரு! வீழாமல் இரு !
"சும்மா -இரு"


திருவருட்பாமாலை -  நாலாஞ்சாறு


திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.

ஞாயிறு, 17 நவம்பர், 2013

குரு


 

குருவே தெய்வம்! 
குரு வார்த்தையே வேதம்!
 குரு தரிசனம் பாவ விமோசனம்!
குருவின் திருவடியே பரம பதம்! 
குருவின் வார்த்தையே மந்திரம் ! 
குரு சேவையே
உன்னத இறைபணி! 
குருவை பணிந்தவனே ஞானம் பெறுவான்!
 குருவை போற்றுபவனே அறிவு பூரணமாக பெறுவான்!
 சர்வமும் குருவே! சகலமும் குருவே!  
என்று சும்மா இருப்பவனே இறைவனை அடைவான்! 

புதன், 23 அக்டோபர், 2013

அவரவர் நந்தியே குருவாக அமையும் அகத்திலே!!


நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிருந் தேனே----------திருமூலர்

நந்தி அருளாலே என்கிறாரே சிவன் அருளால் என்று கூறவில்லையே ஏன்? சிவனை விட பெரியவரா நந்தி?! இறைவனை கும்பிட வேண்டுமா? அவர் வாகனத்தை கும்பிட வேண்டுமா? குழம்பாதீர்கள்!?

திருமூலர் ஒரு ஞானி! அவர் உரைத்தது அனைத்தும் ஞானம்! அறிவுபூர்வமானது. சிந்தித்து அறிய வேண்டும்! மேலோட்டமாக பார்த்தால் பொருள் புரியாது! குரு உபதேசம் பெற்றவர்களுக்கு மட்டுமே தெரியும்! குரு உபதேசம் பெற்றவரே அறிவர் ஏனெனில் மெய்ப்பொருள் உணர்ந்தவர் அல்லவா? ஞானநூல் விளக்கம் குருமார்களிடந்தான் கேட்க வேண்டும்.

நந்தி என்றால் நம் "தீ" என்று பொருள்! நம் உடலில் உள்ள "தீ". அது தான் நம் உயிர் - பிராணன் - ஆன்மா என்பது அதாவது மெய்ப்பொருள் உணர்ந்து தவம் செய்து நம் தீ நம் உடலினுள் உள்ள ஜோதியான நம் ஜீவனை பற்றி அதையே குருவாக பெற்றவர்கள் நந்தி அருள் பெற்ற நாதாக்கள் ஆவார்கள்.!

அங்ஙனம் பரம்பொருளே ஆதிகுருவாக தட்சிணாமூர்த்தியாக வந்து மெய்ப்பொருள் உபதேசம் உணர்த்தியது சனகாதி முனிவர் நால்வருக்கு!!! தவத்தால் தம் தீயை அறிந்தனர் உணர்ந்தனர் உய்வடைந்தனர் சனகாதிமுனிவர் நால்வருமே!

நம் தீயை உணர்ந்த சனகாதிகள் நால்வர் சிவயோகமுனிவர் அகத்தியர் பதஞ்சலிமுனிவர் வியாக்ரபாத முனிவர் திருமூலர் ஆகிய எண்வரும் நந்தியை உணர்ந்து அருள் பெற்று "நாதர்" ஆனார்கள்! நந்தி அருள் பெற்றவர்கள் நாதர் என்று அழைக்கப்பட்டனர்.

நந்தியை உணர்ந்து நம் தீயை உணர்த்து தீயாகவே நான் அதுவாகவே மாறிவிடுவதே மோட்சம்! முக்தி! ஞானம்! நந்தி அருள் பெற்று நந்தியாகிவிட்டனர்! திருமூலரும் அங்ஙனம் நந்தி அருள்பெற்று நாதராகி அவர் உள் தீ வழிகாட்ட பரம்பொருளை எல்லாவற்றிக்கும் மூலவஸ்துவை நாடினார்! பெற்றார் அருள்! ஞானம்! அவர் உள் தீ - நந்தி வழிகாட்ட இறந்து கிடந்த இடையன் மூலன் உடலினுள் கூடுவிட்டு கூடுபாய்ந்து புகுந்து திருமூலரானர்!

நந்தி அருள் பெற்றால் அட்டமாசித்தியும் கை கூடுமன்றோ! திருமூலரால் திருமந்திரம் உரைக்கப்பட வேண்டும் என்பது திருமூலரின் நந்தி திருமூலரின் உள் தீயான பரம்பொருளின் சித்தமஅன்றோ!

எந்தீ - நந்தியே என் ஒரே வழிகாட்டி!

ஒவ்வொருவருக்கும் அவரவர் தீயே அவரவர் நந்தியே குருவாக அமையும் அகத்திலே!! நந்தி அருள் பெற்றவனே சிவனருள் பெற இயலும்! நந்தி வழிகாட்டிட கைலாயதுள் பிரவேசிக்க சிவதரிசனம் பெறலாம்! சிவனருள் பெறலாம்! கதைக்கு போய்விடாதீர்கள்.

உடலிலேயே மெயஞனத்திலேயே நில்லுங்கள். நந்தியாகிய ஆன்மாவை உணர்ந்தாலே அறிந்தாலே அடைந்தாலே சிவனாகிய பரமாத்மாவை நாம் அடையலாம்! வேறு வழியே கிடையாது.

வியாழன், 10 அக்டோபர், 2013

தமிழ் அறிந்தவர்கள் பாக்கியசாலிகள்

நமக்காக  நமது முன்னோர்கள் எத்தனையோ ஞான பொக்கிசங்களை தந்தருளியுள்ளனர்.

தமிழ் அறிந்தவர்கள் உண்மையில் மிகவும் பாக்கியசாலிகள் .

இங்கே ஞான நூல்கள் வேறு எங்கும் இருப்பதாக தெரிய வில்லை.

இங்கே இருக்கும் ஞான பெருமக்கள் வேறு எங்கு இருப்பதாக
 தெரிய வில்லை.

தமிழ் நாட்டில் தடுக்கி விழுந்தால் ஒரு சமாதியின் மேல் விழ வேண்டி உள்ளது.  தமிழ் நாட்டில் ஆங்கங்கே குரு பூஜை  நடக்கும். அங்கே சமாதி கொண்டிருக்கும் மகானுக்கு நடக்கும் விழாதான் குரு பூஜை.

ஒரு சில கோயிலில் சித்தர் பெருமக்கள் சமாதி மேல் தெய்வ திரு உருவங்கள் பிரதிஷ்டை செய்ய பட்டு உள்ளது.

பல கோயிலில் படிக்கட்டுகளிலும் , சுற்று புறங்களிலும் மலையிலும் சமாதிகள் நிறைய இருக்கின்றனர்.

இதன் மூலம் ஒன்றை மற்றும் புரிந்து கொள்ளுங்கள். இறைவனாம் ஆதிக்கு சமமானவர்கள் அதிகம்.

ஆதியை நெருங்க துடிப்பவர்களும் அதிகம். இது தான்  இந்த மண்ணின் மகத்துவம்.

இது ஞான பூமி.


திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.

புதன், 2 அக்டோபர், 2013

யாருக்கு இறைவன் அருள் இல்லை?


புகை பிடிப்போர்
 
மாமிசம் சாப்பிடுவோர்
 
மது அருந்துவோர்
 
பலி கொடுப்போர்

 
இவை எல்லாம் செய்வோருக்கு 
 இறைவன் அருள் கிட்டாது
இது சத்தியம்.

தங்க ஜோதி ஞான சபை - கன்னியாகுமரி 

புதன், 25 செப்டம்பர், 2013

அகத்தியர் சொல்லும் குரு

சொல்பிறந்த விடமெங்கே முப்பாழ்
எங்கே

துவாரபாலகர் எங்கே முதற்பாழ்
எங்கே

நல்லசங்கு நதிஎங்கே வைகுந்தம்
எங்கே

நாரணனும் ஆலிலைமேல் படுத்த
தெங்கே

அல்லப்படும் ஐம்புத மொடுக்கம்
எங்கே

ஆறஞ்சுயிதழ் இரண்டு முளைத்த
தெங்கே

சொல்லவல்லார் உண்டாணல் அவரை
நாமும்

தொழுது குரு எனப் பணிந்து
வணங்களாமே



{அகத்தியர் ஞானம்]
அகத்தியர் அடுக்குநிலை போதம் என்ற நூலில பத்துப் பாடல்களைப் பாடியுள்ளார்,அப்பாடலில் வரும் வினாக்களுக்கு ஒரே பொருளில் பதில் கூறுபவர் எவரோ? அவரே குருவாக இருக்க முழுத்தகுதி பெற்றவர் ஆவார் எகிறார்.


முப்பாழ்
துவாரபாலகர்
நல்லசங்கு நதி
வைகுந்தம்
ஐம்புத மொடுக்கம்
நாரணனும் ஆலிலை
இறைவன் திருவடி?

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

ஓசூரில் மெய் ஞான உபதேசம்


திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானின் 191வது அவதார திருநாளை முன்னிட்டு ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்களின் மெய் ஞான உபதேசம் - ஆன்மீக சொற்பொழிவு

திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானின் 191-வது குருபூஜை.

இரகசியம் இரகசியம் என மறைக்கப்பட்ட ஞானம் இங்கே பரசியம்! யாவரும் அறியலாம்!

இந்தியாவில் நிலவும் சனாதன தர்மம்!
வள்ளலார் உரைத்த சன்மார்க்கம்!
சித்தர்கள் ஞானிகள் கூறிய ஞானம்!
உலகர் யாவருக்கும் பொதுவான நெறி!
ஜாதி மத இன பேதமற்ற தர்ம வழி!
உன்னை அறிய! உணர! ஒரு பாதை!
இறைவன் எங்கே? அறியலாம்! வாங்க!
சுருதி வாக்கியம் அறிய வாருங்கள்!
யுக்தியினால் பரிபாஷை விளங்க வருக!
ஞானம் மட்டுமே இங்கு உபதேசம்!
இறைவன் உரைத்த ஞானம் “சும்மா இரு”!
உன்னுள் உன்னைக் காண “சும்மா இரு”!
உன்னை கண்டு இறைவனை காண வழி!

ஆன்ம பசியுள்ளவரே வருக!
தனித்திருக்க விரும்புவோரே வருக!
விழிப்புணர்வு பெற விரைந்து வருக!







View Larger Map

குருவைப் பணி

ஒருவன் குருவிடமிருந்து திருவடி உபதேசம் பெறும் போது குருவின் உடலில் இருந்து உள்ளத்தில் இருந்தும் தெய்வீக சக்தியானது சிஷ்யனுடைய உடலுக்கும் உள்ளத்திற்கும் பாய்கிறது!? தெய்வத்தின் குரல் மனித உருவிலே குருவாக இருந்து பேசும்.



குருவை சாதாரணமாக கருதாமல், உலகிலேயே ஒப்பற்ற ஞானோபதேசம் ஞான தீட்சை அருளிய மகானுபாவன் எனக்கருதி பணிந்தால் சரணடைந்தால் எப்போதும் குருவை நினைந்து வாழ்ந்தால் ஞானம் வழங்கிய சூட்சும ஞானசற்குரு வள்ளலாரும் ஞானத்தாய் வாலையும் கூடவே இருந்து காத்தருள்வார்கள்! ஞானம் பெறலாம்! மோட்சம் பெறலாம்! ஸ்தூல குருவை பணிவதே சூட்சும குருவை பணிவதாம்! குருவை போற்று! நற்குணமெலாம் வாய்க்கப்பெறுவாய்! குருவே சகலம் என வாழ்! வாலையருள் பூரணமாக கிட்டும்! கன்னி 'ய' விலே தோன்றுவாள் குமரியாக!

திங்கள், 16 செப்டம்பர், 2013

சரியை கிரியை யோகம் ஞானம்

சரியை   - அங்கம் துலக்கி ஆலயம் தொழுவது
                     அதன் முடிவு சாலோகம்
                     பக்தன் - தாச மார்க்கம்

கிரியை  - அஷ்டாங்க  பூசை முதலியன செய்தல்
                     அதன் முடிவு - சாமீபம்
                      கர்மவான் - சத்புத்திர மார்க்கம்.

யோகம் - பிராண வாயுவை கட்டுப்படுத்தி சாதனை புரிதல்
                    அதன் முடிவு - சக மார்க்கம்
                    யோகி - சகமார்க்கம்

ஞானம்  - தான் இன்னது என்று அறிந்து அம்மயமாதல்
                    அதன் முடிவு சாயுச்சியம்
                    ஞானி - சன்மார்க்கம்



வியாழன், 5 செப்டம்பர், 2013

ஒளி நெறி அடைந்திட வாருங்கள்


சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
தங்க ஜோதி ஞானசபை


ஆன்மநேய ஒருமைப்பாடுடையீர் வணக்கம்
உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இறைவனை தேடி புறத்திலும்,அகத்திலும் அலைந்த சான்றோர் பெருமக்கள் மூல முழு உண்மையை கண்டு ஆய்ந்து இதுதான் என்று சாட்சி கூறி வெளிப்படுத்தி வைத்தார்கள் .

பிரபஞ்ச பெருவெளியெங்கும் ஒலி ,ஒளியாக விரிந்திருப்பினும் தேகம் என்ற ஆலயத்திற்குள்தான் அது முழுமையாக வெளிப்பட முடியும் என்று உணர்ந்தனர் .அந்த உணர்வின் அடிப்படையே சகல வேதங்களிலும் சர்வ மதங்களும் ,மதங்களின் வழி வெளிப்பட்ட சாஸ்திர சடங்குகளும் ஒன்றையே குறிவைத்து ஞான குறியீடாக பேசி உள்ளன .அந்த ஒன்றுதான் ஆதிமூலம் .சித்தர்கள் வழிபடும் ஜோதிமூலம் அந்த ஆதியை அறிந்து கொள்ளவும் ,ஜோதியை உணர்ந்து கொள்ளவும் வேதாந்தங்களும் சர்வ -சகல -ஜாதி -மத -இன -மொழி -பேதங்கள் கடந்த பிரம்மப்பிரகாச ஜீவசிம்மாசன ஞானப்பெரும் பிரணவப்பீடம் அறிந்து கொள்ளவும்.

ஆன்மீகசெம்மல் ஞானசற்குரு சிவ  செல்வராஜ்  ஐயா அவர்களின் உபதேசமும் ஆதி பொருளை உணர்த்தும் திருவடி தீட்சையும் பெறலாம்
இந்த உன்னதமான உயிர் ஞான சேவையை பிறப்பெடுத்த அனைவரும் பயன்படுத்தி பிறவா வரம் என்ற ஒளி நெறி அடைந்திட வாருங்கள் என்ற நம்பிக்கையில் வாழ்த்தி வரவேற்கின்றோம் .வந்தால் சாகா வரம் பெறலாம்
எல்லாம் செயல் கூடும் !   வாழ்வாங்கு வாழலாம் !

புதன், 28 ஆகஸ்ட், 2013

புண்ணிய விளக்கம் - அடியார் பணி அருளவேண்டல்


பாடற் கினிய வாக்களிக்கும்
பாலும் சோறும் பரிந்தளிக்கும்
கூடற் கினிய அடியவர்தம்
கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும்
ஆடற் கினிய நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தேடற் கினிய சீர் அளிக்கும்
சிவாய நமஎன் றிடுநீறே.

பாடும் திறன், பஞ்சமில்லா எப்போதும் கிட்டும் உணவு, நல்ல தவம் செய்யும் அடியவர் கூட்டம் தரும் சத்சங்கம், நல்ல குணவானாக திகழ்வான்...பயப்படாதே இதெல்லாம் நடக்கும்...என் மேல் ஆணை என்கின்றார் வள்ளல்பெருமான்! சிவாயநம என இறைவன் நமக்கு வழங்கிய சீர் - கண்மணி ஒளி! அதைத் தேடிக் காண்பதே இனிமையான அனுபவம்.


அடியார் பணி அருளவேண்டல்

எப் பாலவரும் இறைஞ்சும் தணிகை இருந்தருள் என்
அப்பா உன் பொன்னடிக் கென் நெஞ் சகம் இடமாக்கிமிக்க
வெப்பமான நஞ்சன வஞ்சகர் பாற் செலும் வெந்துயர் நீத்த
இப்பாரில் நின்னடி யார்க்கேவல் செய்ய வெனக்கருளே

எவ்வுலகில் உள்ள எவரும் வணங்கும் தணிகையான கண் மணி ஒளியான என் அப்பா! உன் பொன்னடிக்கு என் நெஞ்சகத்தில் இடங்கொடுத்து அருள் புரிவாயாக! தீயவர்கள் பக்கம் நான் போகாமால் தடுத்து என் வினையகற்றி உன் மெய்யடியார்க்கு தொண்டு செய்ய அருள் புரிவாயாக!

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

இறைவன் எங்கே?

உடம்பூர் பவத்தை ஒளித்தருளும் மேன்மைக்
கடம்பூர்வாழ் என்இரண்டு கண்ணே

எத்தனையோ பிறவி எடுத்து உடம்பைப் பெற்று மனிதனாகப் பிறந்து இறந்து பிறந்து செய்யும் வினைகளை ஒளித்தருள்பவன் இறைவன் ஒருவனே. அவனை எங்கும் தேடி அலைய வேண்டாம். பார்க்கும் இடத்திலேதான் உள்ளான். மேன்மை வாய்ந்த கடம்பூர் தான் இறைவன் இருக்கும் ஊர். கடம்பூர் - கடம் ஆகிய ஊர் ! கடம் என்றால் உடல். கடத்தில் உள்ளே இருப்பதால் தான் கடவுள் என்று பெயர். உடலில் இரண்டு கண்களில் கண்மணியில் மத்தியில் ஊசிமுனை துவாரத்தின் ஒளியாக (தன்னைக் காட்டாது மறைந்து நின்று) துலங்குகிறான் இறைவன்...!

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

பிரம்ம முகூர்த்ததில் ஆத்ம விசாரம்


மூலமாம் குளத்திலே முளைத்தேழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலு கட்டு அருப்பீறேல்
பாலனாகி வாழலாம் பரப் பிரம்மமாகலாம் 



மூலம் என்றால் கண். அங்கே நீர் இருக்கிறதல்லவா ?
அதனால் தான் கண்ணை மூலமாகிய குளம் என்கிறார். இந்த குளத்தில் வேண்டாத  கோரைப்புற்கள் முளைக்கின்றன. அதை நாலு கட்டு அறுத்து தள்ளச் சொல்கிறார். காலையில் எழுந்து செய்ய வேண்டுமாம் ?

 நமது மனம் புத்தி சித்தம் அகங்காரம் எனும் அந்தகரணம் நான்கினாலும் எழும் காம குரோததிகளாகிய துர்குணங்களையே விசாரித்து ஆத்மா விசாரம் புரிந்து நான்கையும் அறுத்து வெளியேற்றவேண்டும்.


மனம் சித்தம் புத்தி அகங்காரமாகிய இந்நாலு கட்டுகளும் நம்மை பற்றாது
இருக்க தினம் தினம் காலை பிரம்ம முகூர்த்ததில் எழுந்து ஆத்ம விசாரம் -சாதனை செய்ய சொல்கிறார். அங்ஙனம் நாம் நம்மிடம் உருவாகும் கோரையாகிய துர்குணங்களை அகற்றுவோமானால் பாலனாகி வாழலாம் என்றும் இளமையோடு வாழலாம். பரப் பிரம்மமாகி வாழலாம் என்கிறார்.

கண்மணிமாலை - ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.

பொன்விழாவின் போது அன்பர்கள் வழங்கிய வாழ்த்துப்பா

பூரணமாய்ப்  பூத்தெழுந்த புண்ணியமெய்  மாமலரின்

புகழ்விளங்க வந்த அய்யனே

புருவநடுப் பொட்டினிடைப்  புத்தமுதப் புனல்பெருகப்

புதையலான ஞான மெய்யனே

மாரணத்தை வெல்லுகின்ற மாமணியின் சாட்சிதனை

மானுடர்க் களிக்க எண்ணியே

மாதவத்தி லாழ்ந்துஞான மன்றிலேறி  கனிபறித்த

மாகுரு சிவசெல்வராஜரே

காரணமாய் நான்குயுகக் காரியமும் ஆற்றிடவே

கருமணியுள்  கனலு மாகியே

கருவரையும் கல்லரையும் காத்தருளும் கடவுளெனக்

கண் கலந்த வான வட்டமே

ஆரணமாய்ச் சிரசிடையில் அகரமாகி நின்றொளிரும்

ஆஃத்துணர்த்த வந்த வந்த செல்வமே

அடிபிடிக்க அமரமென்ற அறிவுணர்த்தி ஞானமீயும்

அற்புத மெய்ஞான குருபரா ! 

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

பிறப்பின் ரகசியம்


"வினை விதைத்தவன் வினை அறுப்பான்"

சுவற்றில் எறிந்த பந்து அதே போல் திரும்பி வந்தே தீரும்!

எத்தனையோ பிறவிகளாக நாம் செய்த நல்வினை தீவினைகள் இப்படி மூட்டை மூட்டையாக இருக்கின்றது!!

ஆனால் இறைவன் நம் மீது இரக்கம் கொண்டு, கருணை கொண்டு அவ்வளவு வினைகளையும் நம்மிடம் தராமல் நல்வினை தீவினை இரண்டிலும் கொஞ்சமாக எடுத்து நம் உயிரோடு இணைத்து பிராரத்துவ கர்மத்துடன் விதிக்கப்பட்ட கர்மத்துடன் நம்மை மனிதனாக இப்பூவுலகில் பிறப்பிக்கச் செய்துள்ளார்! பிறப்பின் ரகசியம் இது !

"பற்றித்  தொடரும் இருவினையன்றி வேறொன்றில்லை பராபரமே"  என்று சித்தர் பெருமகனார் கூறியுள்ளார்!

பிராரத்துவ வினைகளோடு பிறந்த மனிதன் புரியும் கருமங்கள் ஆகான்மியம் எனப்படும். பிராரத்துவம் - விதி ஆகான்மியத்தோடு சேர்ந்து வினை கூடவோ குறையவோ , அதாவது புண்ணியம் நிறைய செய்து நல்வினை கூடலாம்,  அல்லது பாவம் நிறைய செய்து தீ வினை கூடலாம். இப்படி எதாவது செய்து எதையாவது பெற்று அந்த வினைகளோடு மரிக்கிறான்!

ஓவ்வொரு மனிதனும் செத்து உடன் கொண்டு போவது அவனவன் செய்த வினை பயன்கள் மட்டுமே!  ஆக பிறக்கும் போது உயிரோடு வரும் வினை !, வாழ்ந்து இறக்கும்போது அந்த  உயிரோடு போய் விடுகிறது!!  பிறக்கும் போது வந்ததை விட கூடவோ குறையவோ செய்யலாம்!

விதியில் இருந்து வினையில் இருந்து தப்பித்த ஞானிகள் உபதேசப்படி நம் வாழ்கையை செம்மைபடுதிக் கொண்டால் !! வினைகளை அழித்துவிட்டால் !! சாகாமல் இருக்கலாமல்லவா ?! வினையிருந்தால் தானே சாவு ! வினையிருந்தால்  தானே மீண்டும் பிறப்பு ஏற்படும் ?! வினை இல்லாமல் செய்துவிட்டால் ?! பிறந்த நமக்கு முதலில் இறப்பு கிடையாது ? இறப்பு இல்லையெனில் ஏது பிறப்பு ?!

திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.

ஸ்தூல சூக்கும உடலை பிரிக்க முடியும்!??

நமது ஸ்தூல உடல் தான் அழிய கூடியது.

ஸ்தூல உடலுக்குள் சூக்கும உடல் பரு உடல் என்பர் இறைவன் படைப்பில் அற்புதம்  இதுவே !

நமது ஸ்தூல உடலில் பிணைக்க பட்டதே சூக்கும உடல் ஆகும்!

தவத்தால் தான் ஸ்தூல சூக்கும உடலை பிரிக்க  முடியும்!

பிரிந்தால்  தான்  வினையில்  இருந்து விடு பட முடியும்!
 

"வினை போகமே தேகம் கண்டாய்  "
உடம்பு ஆக காரணமானதும் உடல் நன்றாக பிரிக்க முடியாத
படி பொருந்தி இருக்கிறது!

தவம் செய்து தான் பிரித்து சக்தியூ ட்ட  முடியும்.

குருவிடம் திருவடி தீட்சை பெற்று கண்ணில் மணியில் மனதை சரண் செய்து தவம் செய்து வர இது நடக்கும்!

திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 

நல்ல தவ சீலரை எரித்தால் நாட்டுக்கு கேடு!

"புண்ணிய மாமவர்  தம்மை புதைப்பது  "

நல்ல தவம் செய்து வரும் ஒரு சாதகன் இறந்தால் அவர் உடலை எரியூட்டாமல் புதைப்பதே சாலச் சிறந்ததாகும்!

ஒரு வேலை அவர்  சமாதியில் ஆழ்ந்திருக்கலாம்!

சமாதி நிலை அறியாத பாமரர்கள் உணர்வு ஒடுங்கிய நிலையிருக்கும் அவரை செத்து விட்டார் என கருதி  சுடுகாட்டில் சுட்டெரித்து விடுவர். அது கொலைக்கு சமம்!

தவம் செய்யும் சீலர்களை புதைப்பது நல்லது என்றார் திருமூல நாயனார்!

இதைதான் வள்ளல் பெருமானும் சமாதியில் வைத்து விடுங்கள் என்றார்! இந்த நிலையில் இருப்பவரைத்தான் புதைக்க வேண்டும்!

சாதாரண மனிதரை சுட்டுவிடுங்கள் அதற்க்கு தான் சுடுகாடு உள்ளது! நல்ல தவ சீலரை  எரித்தால் நாட்டுக்கு கேடு! நல்ல தவ சீலரை முறைப்படி சமாதி செய்தால் பூஜித்தால் நமக்கு நல்ல காலம் வரும்!

திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 

திருமந்திரம் - முட்டை இரண்டு

"இம்  முட்டை  இரண்டையுங் கட்டிட்டு
  ஊன்றி  இருக்க  உடம்பழியாதே"

முட்டை யிரண்டையுங் கட்டிட்டு - முட்டையை உடைத்து  சாப்பிடச்  சொல்லவில்லை ! கட்ட  வேண்டும்  என்கிறார் !

முட்டை  என்றால்  கண் ! முட்டை  போல்  இருப்பதால்  முட்டையிலே
கரு  இருப்பதைப்  போல்  கண்மணியே  கருவிலே  உருவான  முதல்  உறுப்பு  அதில்  ஒளி  இருக்கிறது  அதுவே  கரு !

இரு  கண்ணான  முட்டையையும்  புறத்தே பார்வை செல்லாமல் கட்டி  அகத்தே செலுத்துவதாகும் !

இரு  கண்களையும்  சூரிய  சந்திர  ஜோதிகளை இணைப்பதே  கட்டுவதாகும் !

இங்ஙனம்  இரு  கண்  ஒளியிலும்  நினைவை  நிறுத்தி  உணர்ந்து  உள்கொண்டு  சேர்த்தால் இவ்வுடம்பு  அழியாமல்  இருக்கும் !

சிரஞ்சீவியாக  வாழலாம் !

சனி, 17 ஆகஸ்ட், 2013

சோம்பல் தூக்கம் தவசீலர்களுக்கு ஆகாது!

இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றி
துதிக்கையால் உண்பார்க்கு சோரவும் வேண்டாம்
உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்
கிறக்கவும் வேண்டாம் இருக்கலு  மாமே

இடக்கை இடது கண் வலக்கை  வலதுகண் இவ்விரண்டு கண்களாலும் உணர்வோடு ஒளியோடு   உள் செல்ல இரண்டும் சேர்ந்து ஒன்றாகி ஆத்ம ஸ்தானத்தில் ஒளி பெருகும் உணர்வு உண்டாகும். யானையின் துதிக்கை  போன்று உள்ளிருந்து நீண்டு வெளியே  வந்து அனுபவங்கொள்ளும்இதுவே துதிக்கையால் உண்பதாகும். துதிக்கை உருவாக வேண்டும்
நீண்டு வளரவும் வேண்டும்! பின்னரே துதிக்கையால் உண்பது! கண்மணி ஒளியிலே நிற்க நிற்க சோர்வு வரும் ஆரம்பத்தில்! தூக்கம் வரும்! சோர்ந்து போகாதீர்! தூங்காதீர் ! ஆத்மஸ்தானத்தை பற்றி துதிக்கை வளர்ந்து விட்டால் சோர்வு இல்லை! தூக்கம் இல்லை! உணர்வோடு இருந்து தூங்காமல் தூங்கி இருப்பதே தவம் ! அங்ஙனம் இருந்தால் இறப்பு இல்லை! சோம்பல் தூக்கம் தவசீலர்களுக்கு ஆகாது! தூக்கத்தை குறைத்து  சோம்பலின்றி
தவம் செய்க! அருள் பெருக !

திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 

ஞாயிறு, 28 ஜூலை, 2013

குருவருள் எப்போது கிட்டும்?



நமக்கு ஞான-நயன  தீட்சை அருளிய குருவை தேசிகரை அறிந்து கொண்டு அவர் மனம் கோணாது தொண்டு செய்து வந்தால், அவரின் ஞான தானமே உன் செயல் என கருதி நீயும் குரு கட்டளை படி ஞான தானம் புரிந்து வந்தால் 12 வருடம் ஞான சேவை செய்து வந்தால் குருவருள் கிட்டும்!! இது சத்தியம்!

உலக குருமட்டுமல்ல உன்னுள் குருவாக துலங்கும் உன்
ஜீவனும் உனக்கு பரிபூரண கடாட்சம் அருளும்! காக்கும் ! எல்லா வித்தைகளும் கற்பிப்பார்!

ஒப்பற்ற சீடனாவாய்! ஒப்பற்ற சீடனே உண்மை குருவாவான் பின்னர்! அந்த குருவுக்கு நீ கொடுக்கும் பாத காணிக்கை உன் உடல் பொருள் ஆவியே!


திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 

சோமாஸ்கந்த தத்துவம்

"உச்சிக்குக்  கீழது உண்ணாக்கு மேலது
வைச்ச பதமிது வாய் திறவாதே




என்று திருமூலர் கூறி வாய்திறவாதே சும்மா இரு என்றார்! இடது கண்ணில் தவத்தை ஆரம்பித்து சக்தியில் தொடங்கி வலது கண்ணிலே  தவத்தை தொடர்ந்து சிவத்தோடு சேர்ந்தால் பிறக்கும் நம் இரு கண்ணொளி! ஆறுமுக இரு கண்ணொளி அதுதான் முருகன்!

இதுதான் சிவனும் சக்தியும் முருகனும் சேர்ந்த சோமாஸ் கந்த தத்துவம்! வள்ளலாரின் முதல் அனுபவம் ஞான தவம் இதுவே! கண்ணாடியில் தன் கண்ணை பார்த்துத்தானே தவம் செய்தார்! தன் உருவம் மறைந்தது! ஒளி பொருந்திய இரு கண் மட்டுமே தெரிந்தது! ஆறுமுகங் கொண்ட திருத்தணிகை முருகன் தோன்றினார்! நம் இரு கண்ணே ஆறுமுகம்! எல்லோர்க்கும் கிடைக்கும் முதல் ஞான அனுபவம் இது !

தத்துவத்தையும் அனுபவத்தையும் போட்டு குழப்பிவிடாதீர் !
அனுபவத்தை கூறவே தத்துவம்! 

சிந்தித்தாலே தவம் செய்தாலே தத்துவம் புரியும்! தவம் செய்யாதவருக்கு கதையே! புராணமே ! தவம் செய்யாதவர்கள் உடல் வளர்ந்த குழந்தையே ஆவர்!

மூலாதாராம் கீழே என்றால் அவனுக்கு காமமே மிச்சம்! கடைதேருவது கடினம்!

நாம் இடகலையில் ஆரம்பித்து வலக்கலையில் ஸ்திரமாக நிற்கணும்! நடராஜர் இடது காலை ஊன்றி நிற்பது போலே! நின்றால்; மேலே ஒளியும் ஒலியும் காணலாம் கேட்கலாம் ! நம் ஞான தவ நிலையை குறிப்பதே நடராஜ தத்துவமாம்! இதுவும் சிதம்பர ரகசியம்தான்!

தவத்தால் கண்ணில் மணியில் ஒளியை நினைத்து உணர்பவருக்கு அக்னி உருவாகும் !

அந்த உஷ்ணம்  சுத்த உஷ்ணம் ! அந்த சூடால் உடல் பாதிக்காது ஜோதி சூழ்ந்து வரும் ! குளுர்ச்சி பொருந்திய நெருப்பு! சந்திர ஒளி போல!

இந்த ஜோதியால் சகஸ்ராரம் பூரித்தால் நம்மும்மலம் மட்டுமல்ல உச்சியில் உள்ள  கோழை என்கின்ற மலமும் கழியும்! வினையகலும் அமுதம் பருகலாம்! ஞானம் பெறலாம்!

திருமந்திரம் மட்டுமல்ல எல்லா சித்தர்களும் ஞான அனுபவங்களை தெளிவாக கூறி நாமும் ஞானம் பெற வழி காட்டியுள்ளனர்!



- ஞான சற்குரு சிவசெல்வராஜ்

இறைவனுக்கு ஓரவஞ்சனையா?

 பற்பல காலம் தவம் செய்து உடலை வருத்தி செய்யும் தவ முனிவர்கள் பலர் இருக்க இறைவன் மாணிக்க வாசகருக்காய் இரங்கி அருள் புரிந்து ஆட்கொண்டாராம். ஏன் ? இறைவனுக்கு இந்த ஓர வஞ்சனையா?




யார்?எப்படி? தவம் செய்தார்கள்? என இறைவன் பார்க்கிறார்?! பூடம் தெரியாமல் ஆடுகிறார் என எங்கள் ஊரில் சொல்வார்கள்! இறைவன் எங்கு இருக்கிறார் எப்படி இருக்கிறார் எப்படி அடைவது என தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு தவம் செய்பவருக்கு(இது தவமா?) எப்படி இறைவன் அருள் கிட்டும்!


குருட்டு பூனை கிணற்றிலே விட்டத்தை தாண்டிய மாதிரி தான்! இப்படி கண்னை  மூடி - கண்மூடித்தனமாக தவம் செய்பவர்களை தான்  திருமூலர் இவ்வாறு கூறுகிறார் 'எண்ணாயிரத்தாண்டு தவம் செய்யினும் கண்ணார் அமுதினை கண்டவாரில்லை' கண்ணார் அமுதினை அறிந்து கண்டுணர்ந்து கண் திறந்து நீதவம் செய்தாலே காண்பாய் கடவுளை!

அதற்க்கு நீ முதலில் கட-உள்ளே , உன் கடமாகிய உடம்பினுள்ளே புக வேண்டும்! எப்படி கண்மணி வழி! அது தான் ஒரே வழி! அது அறிய ஞான சற்குருவை நாடு ! காவி உடுத்து உடலெல்லாம் திருநீறு பூசி  நீண்ட சடாமுடி, தாடி வளர்த்து , உத்திராட்சமாலை அணிந்து , உடலை வெறுத்து, பட்டினி கிடந்து , காய் கனி புசித்து இருப்பதால் யாதொரு பயனுமில்லை !

"ஜீவ ஒடுக்கம் பூதவொடுக்கம் ஒரு சேர உதிக்கும் சீதள பத்மம் தருவாயே"என  அருணகிரிநாதர்  முருகப்பெருமானை திருப்புகழ் பாடி வேண்டி பணிகிறார்!

வேஷம் போட்டு ஏமாற்றுபவர் தான் அதிகம் பேர் உலகிலே! நம் ஜீவன் ஒடுங்கியிருக்கும் இடம்  ஐம்பூதங்களும் ஒன்று சேரும் இடம் சீதள பத்மம் - குளிர்ச்சி பொருந்திய  தாமரை மலர் போன்ற உன் திருவடி தருவாயே! இரு கண்களில் தானே ஐம்பூதங்களும் உள்ளது. இறைவன் திருவடி தானே நம் இருகண்கள் ! இரு கண்வழி தானே உள்ளே நம் ஜீவன் ஒடுங்கியிருப்பதை காண முடியும்!

ஞான சற்குரு மூலம் கண்ணை அறி  - உன்னை அறி! அதை விடுத்து வேறு எதை செய்தாலும் கிட்டாது ஞானம்! இல்லை, இறைவன் தான் வர வேண்டும்! இறைவன் இறைவனே உன்னை தேடி வரவேண்டுமெனில் மாணிக்க வாசகரை போல உத்தம பக்தனாக சதா சர்வ காலமும் இறைவனையே எண்ணி வாழ்!  நிச்சயம் வருவார் நம்புங்கள்! தேவரும் மூவரும் காண திருவடியை நீ காண உத்தமனாகு!

உண்மை அறி ! உன் மெய் அறி! மெய் என்றால் சத்தியம் - நித்தியம் - அழியாது - அது மெய்ப்பொருள்! அதுவே இறைவன்! உற்றுப்பார் உன்னிலே !




- ஞான சற்குரு சிவசெல்வராஜ்

திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.

திங்கள், 22 ஜூலை, 2013

காமம் 2

சித்திபெற விந்து நிலை மூலந்தனை 
சிதறாமல் கட்டினவன் சித்தன் சித்தன்
சத்தியமே தவறாம லிருக்க வேணும்
தன்னுயிர் போல்  மன்னுயிரை காக்க  வேணும்.


தவ  சீலர்கள் விந்துவை பாழிலே  விடக்கூடாது ! பாழாய் போவர்!  பிரமச்சர்யம் மிக மிக அவசியம்! கல்யாணம் பண்ணாமல் இருக்க சொல்லவில்லை! கல்யாணம் பண்ணுவது வரை உத்தம பிரமச்சாரியாக  இருக்க வேண்டும்! கல்யாணத்திற்கு பின் தன் மனைவியோடு மட்டும் கூடலாம். சந்தான விருத்திக்கு மட்டுமே விந்து விடலாம்! இல்லற வாசிகள் ஆபாச பட்ட சுக்கிலத்தை 15 நாள் ஒரு முறை மட்டுமே நீக்கலாம்!   


தன்  மனைவியைத்  தவிர ஏனைய பெண் கள்  அனைவரையும் தாயாகவே பாவிக்க வேண்டும். அப்படி பட்டவனே உத்தமன்! கல்யாணம் பண்ணியும் இது மாதிரி பிரமச்சாரியாக வாழலாம்! 

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்" என வள்ளலார் கூறுவதை கவனிக்க!

"காமமகற்றிய தூயன் சிவகாமி நேயன்" இறைவன் திருவடியை பற்றியவர்கள் இரட்சிக்க படுவார்கள்! நாம் காமம் கொள்ள வேண்டியது சிவத்தின் மீதே! சிவமாகிய ஒளியின் மீதே தீரக்காமம் வேண்டும்! அப்படி இருந்தால் நாம் தான் சிவகாமியாவோம்! வாலையான சிவகாமி நம்முள் துலங்குவாள்!

காமத்தை ஆட்சி செய்யும் அவளே காமாட்சி!  தாயாக - குழந்தையாக பார்த்தால் காமம் வருமோ? அபிராமி பட்டார் பார்த்தர்  எல்லா பெண்களையும் தாயாக! 

அப்படி விந்து கட்ட கட்ட மணியாகி ஒளியாக அற்புத ஆற்றலை பெறுவான்! அவனே சித்தன்! அது மட்டும்  போதாது சத்தியநெறி தவறாமல் வாழ வேண்டும். எவ்வுயிரும் தன்னுயிர் போல கருத வேண்டும். அப்படிப்பட்ட பரோபகாரியே வாலை  அருள் பெறுவான்! சிந்தை தடுமாற சித்தன்  ஆவான்


ஞான சற்குரு சிவசெல்வராஜ் 
தங்க ஜோதி ஞான சபை
கன்னியாகுமரி  

ஞாயிறு, 21 ஜூலை, 2013

காமம் - 1


சுக்கிலம் மேலேற்றும் பழக்கத்திற்கு பத்தியம் தூக்கம் சோம்பல் ஆகாது. விந்து மேலேறுவதே ஊர்த்துவரேதஸாம். சுக்கிலம் மேலே ஏறுவதாவது கீழே சுக்கில பயில் சேர்வது குறைந்து மேலே பிரமரந்திரத்தில் சேர்வது மிகுதி படுத்தலாம்.

சப்த தாதுக்களுள் அஸ்தி-மூலாதாரத்திற்க்கும் மேதை-சுவாதிஷ்டானதிற்கும், மாமிசம்-மணிபூரகத்திற்கும், உதிரம்-அனாகதத்க்கும்  துவக்கு-விசுதிக்கும் மச்சை-ஆகினைக்கும் சுக்கிலம்-சகஸ்ராரதிர்க்கும் உரியன.

உற்பத்தியாகும் சுக்கிலத்தில் இரண்டரை வராகன் எடைக்கு ஒரு வராகன் எடை கோச நுனியிலும் ஒரு வாராகன் எடை நாபியிலும் அரை வராகன் எடை   பிரமரந்திரத்திலும் சேர்க்கிறது. கோசத்தில் சேர்வது புணர்ச்சியால் வெளிப்பட்டு கருத்தரிக்க செய்வது.

பிரமரந்திரத்தில் சேர்வது அமுதமாகிறது. காமத்தால் கீழிறங்கும் விந்து ஞானத்தால் மேலேறும்.


(கண்மணிமாலை)

காமம் - 0

காமம் தலைகேறியவன் கடைமடையனாவான் ! விந்து விட்டவன் நொந்து கேட்டான்! 72000 நாடி நரம்புகள் அதிர ஒழுகும் விந்தால் பெறுவதே சிற்றின்பம் ! காண நேர இன்பம்! அதன் பின்னர் துன்பமே! இழந்த சக்தியை மீட்க வேண்டாமா?  இதிலும் அளவோடு இரூ! அறிவோடு இரு! என ஞானிகள் பகர்ந்துள்ளனர் !

காமத்தால் விந்து கீழே இறங்கும் பிராண நஷ்டம் உண்டாகும் ! திருவடி தவத்தால் விந்து மேலேறும் ஒஜசாகும்! பிராணன் நிலைபெறும்! ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் உடல் நலமாகும் !

காம வயப்பட்டு தகாத செயல்கள் புரிந்தால் கொடூர நோய்கள் வந்து காலமெல்லாம் துன்பமுற்று முடிவில் இறக்க நேரிடும்! மெய் ஒழுக்கமும் மன நற்குணங்கள் இருந்தால் தான் மரணமில பெருவாழ்வு கிட்டும்! இது மெய்!

நம் உடல் உறுதி பெற உடல் என்றும் நிலைக்க பிரமச்சர்யம் அவசியம் தேவை! இல்லறம் புகும் வரை கட்டுபாடு நூறு பங்கு கண்டிப்புடன் இருக்க வேண்டும், இல்லறத்தான் 15 நாட்கள் ஒரு முறை மனைவியோடு மட்டுமே சுகித்திருக்கலாம்! எவன் ஒருவன் தன் மனைவியை தவிர மற்றெல்லா பெண்களையும் தாயாக கருதுகிறானோ அவனே ஞானம்
பெற தகுதி உள்ளவனாவான்! இதுவே மெய்!

இல்லறத்தானுக்கு விந்து உற்பத்தி ஊற்று கேணி ஞாயத்தை ஒத்தது என வள்ளல் பெருமான் கூறியாருள்கிறார்! பிரமச்சாரி தன் மனம் சலனமஅடையும் இடம் பொருட்களை தவிர்த்து சதா காலமும் இறை சிந்தனையோடு வாழ்வதே உத்தமம்!

திங்கள், 8 ஜூலை, 2013

இறைவனை அடைய உதவும் படிநிலைகள்




இறைவனை உணர்ந்த, அடைந்த ஞானிகள் இறைவனை உணரும் படிகற்களாக 4 முக்கிய நிலைகளை கூறிப்பிடுகின்றனர் .அவை முறையே சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு வகை படும்

இவைகள் குறிப்பதையும் அதன் அர்த்தத்தினையும் இந்த பதிவில் பார்ப்போம். இவைகள் எங்கள் ஞான குரு திரு  சிவா செல்வராஜ் அவர்களின் அருளால் , வள்ளல் பெருமானின் ஆசியால் வெளியிடுகிறோம்.

சரியை, கிரியை, யோகம், ஞானம் பற்றிய தெளிவுகளை மக்களுக்கு உணர்த்துவதே இப்பதிவின் நோக்கம். பதிவினை முழுமையாக படிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

சரியை   -  கோயிலுக்கு சென்று விக்ரகத்தை வணங்குதல்

கிரியை  -  கோயிலில் பார்த்த விக்ரகத்தை , பூஜை முறைகளை நம் வீட்டில் செய்தல்.

யோகம் -   பிரணாயாமம் , வாசி போன்ற பயிற்சிகளில் இடுபடுதல். யோகம் என்பதற்குரிய சரியான அர்த்தம் ஒன்றுதல்.

ஞானம்நான் யார் என்று தன்னை அறியும் முயற்சிபரிபூரண அறிவே ஞானம்.

இந்த நான்கு நிலைகளும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து 16 நிலைகளாகிறது. இந்த 16 நிலைகளும் என்ன வென்று பார்போம்.

இந்த எல்லா படிகளிலும் முதல் நிலை என்பது சரியை வருகிறது. இந்த அர்த்தம் யாதெனின் அந்த அந்த நிலைகளில் தேர்ச்சி பெற்ற ஒருவரை கொண்டு அந்த நிலைகளை அறிவது. அதாவது ஒரு குருவினை கொண்டு தெரிந்து கொள்வதுகுருவை நாடி சென்று அந்த படிகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

அதே போல் இரண்டாவதாக எல்லா நிலைகளில் வரும் கிரியை என்பது நாம் செய்ய வேண்டியதை குறிக்கும். குரு மூலம் சரியையில் தெரிந்து கொண்டதை செய்வது. சீடன் செய்ய வேண்டிய கிரியைகள் குறிக்கும்.
இதே போல் மூன்றாவதாக எல்லா நிலைகளில் வரும் யோகம் குறிப்பது குருவின் மூலம் தான் கற்றதில் முழுதாக ஒன்றுவதுஇவ்வாறு ஒருவன் அந்த படிநிலைகளில் குரு உபதேசத்தின் படி ஒன்றும் போது அந்த படி நிலைகளின் ஞானம் கிட்டுகிறது.

மேல் கூறியவற்றை கொண்டு  கீழ் வரும் படி நிலைகளை பற்றி ஆழமாக பார்ப்போம்.

1. சரியையில் சரியைகோவிலுக்கு சென்று வழிபாடும் முறைகளை பூசாரியின்  (சரியையில் குருமூலம் அறிவது. உதரணத்திற்கு எந்த சந்தியில் முதலில் வழி பட வேண்டும், எத்தனை  முறைகள் வலம் வர வேண்டும் போன்ற விதி முறைகளை அறிந்து கொள்வது. இதை தெரிவித்து பூஜை செய்யும் பூசாரியே சரியை நிலையில் குரு ஆவார்.

2. சரியையில் கிரியை : சரியையில் சரியை நிலையில் அறிந்து கொண்டதற்கு ஏற்ப கோவிலில் சென்று முறையாக வழிபாடு செய்தல். நம் செய்யும் செயலே கிரியை இங்கு.

3. சரியையில் யோகம் : கோயில் வழிபாட்டில் பரிபூரணமாக ஒன்றுவது

4. சரியையில் ஞானம் : பரிபூரணமாக ஒன்றி கோயில்  வழிபாடு செய்வதன் பலனாக நமக்கு கிட்டும் அறிவு. கோவில் வழிபாட்டின் நோக்கம் தெரிகிறது. இது முடிந்த பின் கிரியைக்கு செல்லும் புண்ணிய பலன் (தகுதி ) பெறுகிறான் சாதகன். இதில் ஒன்றி ஒருவன் பெரும் முக்தி - சரியையின் ஞானத்தின் பலன் -       "சாலோக முக்தி".

---- அடுத்து கிரியையின் நிலைகளை பார்போம் ----
1. கிரியையில் சரியை : நம் வீட்டில் செய்ய வேண்டிய பூஜை முறைகளை , விக்ரகங்களை தகுந்த  ஆசான் மூலம் அறிவது. இதை தெரிவிப்பவரே  கிரியையில் குரு.

2. கிரியையில் கிரியை : விட்டில் ஸ்தாபித்த விக்ரகங்களை குருவின் மூலம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொண்டதற்கு ஏற்ப நாம் செய்யும் பூஜை.

3. கிரியையில் யோகம் : நாம் செய்யும் பூஜையில்  பரிபூரணமாக ஒன்றுவது.

4. கிரியையில் ஞானம் : நாம் செய்த பூஜையில் நாம் பெரும் பலன். கிரியையில் நாம் பெரும் அறிவு. நாம் செய்த பூஜையின் நோக்கம் அறிந்து கொள்வது. கிரியின் ஞானத்தின் முடிவு சாமீப முக்தி.

----அடுத்து யோகா நிலைகளை பார்போம்-----

1. யோகத்தின் சரியை : தகுந்த யோகா ஆசிரியரின் மூலம் யோகா பயிற்சிகளை அறிவது.

2. யோகத்தில் கிரியை : பயிற்சிகளை முறைப்படி ஒழுக்கதொடு செய்வது.

3. யோகத்தில் யோகம் : யோகத்தின் கிரியையின் முடிவு. நாம் செய்யும் பயிற்சிகளில் முழுதாக ஒன்றுவது.

4. யோகத்தில் ஞானம் : யோகத்தில் ஒன்ற நாம் பெறுவது சமாதி நிலை. யோகத்தில் முக்தி பெறுவது சாமீபம் என்பர்.

இவ்வாறு மூன்று முக்கிய படி நிலைகளும் ஞானத்திர்கே ஒருவனை கொண்டு வரும். ஞானமே இறைவனை அடைய, இறை நிலை எய்த வழி காட்டும்ஞானமே முடிந்த முடிபான "சாயுச்சிய முக்தி" யை ஒருவனுக்கு தரவல்லது. வள்ளலார், ஆண்டாள், பத்ரகிரியார் போன்றோர் பெற்ற ஒளி நிலை. ஊன உடலே ஒளி உடலாக மாறும் தன்மைஒவ்வொரு சாதகனும் சரியை,கிரியை,யோகம் முடித்து ஞான நிலைக்கு வர வேண்டும். ஆனால் இதற்கெல்லாம் காலம் போதாது என்று ஞான நிலைக்கு நேரடியாக வள்ளலார் நம்மை அலைக்கிறார்ஞான நிலை ஞான சாதனை என்றார் என்ன? இறைவன் நம் உடலில் எத்தன்மையில் உள்ளாரோ அதன்மையிலே ஒன்றுவதுஇறைவன் எத்தன்மையில் உள்ளான்?

இறைவன் பேரோளியாக உள்ளான் என்று எல்லா மதங்களும் , ஞானிகளும் ஒப்பு கொள்கின்றனர்நாம் இறைவனின் பிள்ளைகள் எனின் நாமும் (நம் உயிரும்) ஒளி அம்சம் அல்லவா. நம் உயிர் அந்த பேரொளியின் சிறு அம்சம் அல்லவா? இந்த சிறு ஒளியை அறிந்தால் அந்த பேரொளியை அறிந்து கொள்ளலாம் அல்லவா? இந்த சிறு ஒளி (ஜீவா ஒளி) அறிய முற்படுவதே அதாவது நாம் யார் என்ற கேள்விக்கு பதில் அறிய முற்படுவதே ஞானம். இந்த ஞானத்திலும் நான்கு நிலைகள்.

1.      ஞானத்தில் சரியை : ஒரு ஞான சற்குருவை பெற்று அவர் மூலம் திருவடி உபதேசம், திருவடி தீட்சை பெறுவது. நம் உயிர் நம் தலை நடுவில் இரு கண்களும் உள் சேரும் இடத்தில உள்ளது என்பதை அறிந்து அது துலங்கும் (வெளிப்படும்) இடமா கண்ணே என்பதை உபதேசத்தின் மூலம் அறிந்து கண்ணில் உணர்வு பெறுவதே ஞானத்தில் சரியை. ஞானத்தில் செய்யும் சாதனையை வள்ளல் பெருமான் "நினைந்து, நினைந்து " என்ற ஞான சரியை பாடலில் குறிப்பிடுகிறார்.

2.      ஞானத்தில் கிரியை : சற்குருவினால் பெற்ற  உயிர் உணர்வை பெருக்குவது. இந்த உணர்வில் நாம் ஒன்ற நாம் செய்யும் பயிற்சி. சும்மா இருபதற்கு நாம் செய்யும் பயிற்சி இதுஇப்பயிற்சி தொடர தொடர நம் வினைகள் நம் உயிர் ஒளியால் சுட்டு எறிக்கபடும். வள்ளலார் நம்முடன் இருந்து தலைக்கு வரும் வினைகள் தலை பாகையோடு விலக செய்வார்.

3.      ஞானத்தில் யோகம் : நம் உயர் உணர்வை பெருக்க பெருக்க நம் உயிர் ஒளி பெருகி நம் மனம் உயிர் உணர்வில் முழுமையாக ஒன்றும். இவ்வாறு ஒன்றுவதே ஞானத்தில் யோகம்.


4.      ஞானத்தில் ஞானம் : நம் ஆன்ம சாதனை முந்தைய நிலைகளில் தொடர நம் வினைகள் நீங்கும். ஆன்ம ஜோதி தரிசனம் கிட்டும். நம் ஆன்மாவே குருவாக அமையும். நம் ஆன்மாவே குருவாக அமைந்து நம்மை இறைவனிடம் அழைத்து செல்லும். அன்னை வாலை அமிர்தம் வழங்கி நம்மை ஆண்டவனிடம் கொண்டு செல்வாள்முடிந்த முடிபாக ஞானம் கிட்டும்.



Popular Posts