புதன், 31 அக்டோபர், 2012

சும்மா இரு! இதுவே ஞான சாதனை

கர்மம் முற்றிலும் அழிந்தால் ஞானம்.
கர்மம் இருக்கும் வரை மனம் இருக்கும்.
மனம் வேலை செய்ய வேலை செய்ய கர்மம் இருக்கும்.
மனம் கடந்த நிலை எப்படி செல்வது?

சும்மா இரு, மனதை சும்மா இருக்க வை.

எப்படி? எங்கே வைப்பது?

இறைவன் திருவடியில். குருவின் பங்கு என்ன?

சுட்சுமத்தில் நடப்பது என்ன?

 வீடியோ வை முழுமையாக பாருங்கள்





------------------------------------------------------------------------

குருவை சந்தித்து உபதேசம் தீட்சை பெருக!
ஞான தவம் செய்யவும். ஞான தானம் செய்யவும்!
Contact http://www.vallalyaar.com/contact-us/

சனி, 27 அக்டோபர், 2012

சிறு தெய்வ வழிபாடு கூடாது, ஏன்?

சிறு தெய்வ வழிபாடு கூடாது என்றார் வள்ளலார் ! சித்தர்களும் ஞானிகளும் சிறு தெய்வங்களை வழி பட்டதே இல்லை!? சிறு தெய்வங்கள் எல்லாம் சித்தர்களுக்கும் ஞானிகளுக்கும் ஏவல் செய்யும் மெய்க்காப்பாளர்களே! ஏவளர்களே! இறைவனின் செல்ல பிள்ளைகளான சித்தர்களும் ஞானிகளும் இட்ட கட்டளை படி பணிகளை செவ்வனே செய்பவை தான் சிறு தெய்வங்கள்! உலக நலன் கருதியே இப்பணி நடக்கும்! என் நண்பர் ஒருவர் தெய்வத்தில் பெரிசாவது சின்னதாவது ! ஒரே தெய்வம் தானே, நான் என் குல தெய்வத்தை தான் வணங்குகிறேன்! எனக்கு எல்லாமே அதுதான் என்றார்!? அவர் குல தெய்வம் 'சுடலைமாடன்'. இங்கே குமரி மாவட்டத்தில் உள்ள சுடலை காப்போன் சுடலை மாடன்! பெரிதாக வில்லுபாட்டு கதைகள் எல்லாம் உண்டு! ஒவ்வொரு ஊர் எல்லையிலும் இசக்கியம்மன் முத்தாரம்மன் என தேவதைளும் உண்டு! எல்லை காவல் தெய்வங்களே இவைகள்! ஊர் புறங்களிலே இது போல் தேவதைகள் எல்லாம் வைத்து வழி படுகிறார்கள் மக்கள்! இதில் கொடுமை என்றால்; உயிர் பலி தான்! வாய் இல்லா பிராணிகளை அந்த தேவதைகளுக்கு பலி கொடுக்கிறார்கள்! சுற்று புற ஊர்களிலே நடக்கும் இது போன்ற உயிர் பலியை வடலூரில் இருந்த போது வள்ளலார் தடுத்து நிறுத்தி நல்வழி காட்டியிருக்கிறார்!

ஆதி சங்கரர் காஞ்சி வந்த போது அப்போது மட மக்கள் ஏராளமான ஆடு, மாடுகளை காமாட்சி அம்மனுக்கு பலி கொடுத்து தான் வழிபட்டனர்! மிகவும் வருந்திய சங்கரர் காமாட்சியம்மனை துதித்தி மக்களுக்கு நல்ல புத்திமதி கூறி திருத்தினார். ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்து சாந்த சொரூபியாக்கினார்! பலி கொடுத்ததால் உக்ர ரூபமாய் இருந்தாள்! பாயாசம் படைத்தால் சாந்த ரூபமாய் அருளும் தாயாகிறாள்! இப்படி பற்பல ஊர்களிலும் யாரோ வழிகாட்டி மக்கள் தெய்வத்தை வணங்குவதை விட்டு தேவதைகளை வழி பட ஆரம்பித்து விட்டனர்.


அரபு நாட்டிலே முன்னூறுக்கும் மேல் உருவங்களை வைத்து வழி பட்டவர்களை திருத்தி, எல்லா வல்ல இறைவன் ஒருவனே அவனே "அல்லாஹ்"! அவனை மட்டுமே, ஒளியான அந்த ஒரே இறைவனை வழிபட வழிகாட்டினார்! முகமது நபி பெருமான்! தான் கண்ட ஒளியான எல்லோருக்கும் கூறி அவர் வழங்கிய திரு குரானை ஓதினார்! இயேசு பெருமானும் அவர் காலத்தில் மக்களிடையே இருந்த மூட பழக்க வழக்கங்களை மாற்றி தேவன் ஒருவரே அவர் ஒளியானவரே அவர் எல்லா மக்களுக்கு பிதா! அவரை தூய்மையான அன்பால் வழிபடுங்கள் என்று கூறி அருளினார்!


"துள்ளும் மரியாமனதை பலி கொடுத்தேன் துட்ட கன்ம தேவதைகளில்லை" என தாயுமான சுவாமிகள் நம் மனதை தான் பலி கொடுக்க வேண்டும் பிற உயிர்களை யல்ல! என்றும் துட்ட தேவதைகளை வழிபட வேண்டாம் என்றும் தெளிவாக கூறியுள்ளார். நமது பாரத பழம் பெரு நாட்டிலே தோன்றிய ஒவ்வொரு மகானும் சிறு தெய்வ வழிபாடு செய்ததேயில்லை?! ஆக உலகில் உள்ள எந்த மத ஞானி யானாலும், எல்லாம் வல்ல, அந்த பேரொளியை, இறைவனை, ஒரே கடவுளை, பரம் பொருளை, பரமாத்மாவைதான் அன்பால் வழிபட சொன்னார்கள்! தவம் செய்து இறைவனை அடையுங்கள் என்று கூறி,அடையுங்கள் என்று கூறி, அடைய வழியாக விழியையும் காட்டி சென்றுள்ளனர்! ஞானம் பெற விழி உள்புகு!

பாகவதத்தில் கிருஷ்ணபரமாத்மா இந்திர பூஜை செய்ய வேண்டாம் என கோகுல வாசிகளை தடுத்தார். கோவர்த்தன மலையை குடையாக பிடித்து எல்லோரையும் காத்தான். கடவுளை பணித்தால் தேவதைகள் ஒன்றும் செய்யாது.

சிறு தெய்வங்கள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவை! தந்திரத்தில் அடங்குவபவை! மனிதன் வசபடுத்தி விடலாம்! நல்லது கெட்டது நடக்கலாம். சிறு சிறு தேவதைகள் யார் என்றால், இறைவனால் இந்த பிரபஞ்சத்தை பரிசீலிக்க நிர்மாணிக்கபட்டவர்கள். தாம்!

சர்வ வல்லமை படைத்த இறைவன்

படைப்பு தொழில் புரிகையில் - பிரம்மா
காக்கும் தொழில் புரிகையில் - விஷ்ணு
மறைத்தல் தொழில் புரிகையில் - மகேஸ்வரன்
அருளல் தொழில் புரிகையில் - சதாசிவன்
அழிக்கும் தொழில் புரிகையில் - ருத்ரன்

என பஞ்சமூர்த்திகளாக விளங்குகிறார்! அந்த ஏக இறைவனின் அருள் அம்சங்களே! பஞ்ச பூதங்களான உலகை பரிபாலிக்க நவகிரகங்களை அஷ்டதிக் பாலகர்கள் ஒவ்வொரு காரியத்திற்கும் அதி தேவதைகள், இப்படி கடைசி வரை பூதகணங்கள் எல்லைக்காவல் தெய்வங்கள் வரை போகிறது!!

 நீ படைத்தவனை வணங்க வேண்டுமா ? இறைவனால் படைக்க பட்டவர்களை வணங்க வேண்டுமா? நாம் வணங்கி வழி படவேண்டியது சர்வ வல்லமை படைத்த எங்கும் நிறைந்த அந்த அருள் மயமான பெருஞ்சோதியை தானே!? அதை விடுத்து மாடன் கருப்பன் முனியன் என்று போனால் இந்த ஜென்மத்தில் விமோசனம் இல்லை! எல்லவற்றுக்கும் மேலான பரம்பொருளைப்பார்!

அது உன்னிலே உன் மெய்ப்பொருளாக விழியாக உள்ளதே! உன் கண்ணிலே மணியிலே ஒளியாக துலங்கும் எல்லாம் வல்ல இறைவனை பார்ப்பதை உணர்வதை விடுத்து ஊர் உலகெங்கும் தேடுகிராயே, உனக்கு அறிவு இருக்கிறதா? கையில் வெண்ணை இருக்க நெய்க்காக ஊரில் அலையாதே!
மதம் கிடையாது? ஜாதியே கிடையாது! நாடு மொழி வேற்றுமை கிடையாது?

ஒரு உண்மை சம்பவம் கூறினால் உங்களுக்கு புரியும்? என் சிறு தெய்வ வழிபாடு கூடாது என்று!? கேரளத்தில் ஓர் பித்தன் சித்தன் இருந்தான். மலையாள மொழியில் பிராந்தன் என்றனர் அவரை. அவர் பெயர் நாராயணன்! பிராந்தன் என்றால் பைத்தியகாரன்! உலக மக்களாகிய பைத்தியகார பயல்கள் அந்த ஞானிக்கு வைத்த பெயர் நாரணத்து பிராந்தன்! எப்படி? ஒரு நாள், எப்போது போல சுடுகாட்டிலே நம் நாரணத்து இருத்த போது திடீர் என்று காளி தோன்றினாள்! நம்மாள் கண்டுக்கவே இல்லை! காளியே கூப்பிட்டாள், நான் தோன்றினால் தரிசனம் பெற்றவருக்கு எதாவது வரம் கொடுக்கவேண்டும். உனக்கு என்ன வரம் வேண்டும் என்றால் காளி! அதிபயங்கர ரூபிணியாக! எனக்கு ஒன்றும் வேண்டாம் நீ போ என்றார் நாரணத்து பிராந்தன்! இல்லை எதாவது வரம் தந்து தான் தீர்வேன் என காளி மீண்டும் கூற , நாரணத்து தன் ஒருகால் வீங்கி இருப்பதை காட்டி இன்னொரு காலுக்கு மாற்று என்றார்! உடனே காளி அது உன் கர்மம்! நீ அனுபவித்து தான் என்று கூற, போய்விடு ஓடிவிடு என்று கத்தினான் நம் நாரணத்து பிராந்தன்! ? காளி போய் விட்டது நம்புங்கள்! இது சத்தியம்! உண்மை! கோவண துணி ஒன்றே சொந்தமென கொண்ட கேரளத்து நாரணத்து பிரான்தன் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்?! ஞானியை விட தேவதைகள் ஒன்றுமில்லாதது தான்?

 இதோடு ஒப்பிட்டு இன்னொரு உண்மை சம்பவம் கூறுகிறேன், நமது திருஅருபிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள், வேட்டவலம் ஜாமீன் தார் மாளிகைக்கு சென்றார்! அவர் வீட்டு வாசல் படியை மிதித்தது தான் தாமதம், வேட்டவலம் ஜாமீன் மனைவியை பிடித்த பிரம்ம ராட்சசன் ஐயோ நான் போகிறேன் என்று ஓடி விட்டது! வள்ளலார் ஒன்றும் செய்யவில்லை! அவர் காற்று பட்டதுமே காத்து கருப்பு எல்லாம் காத தூரம் ஓடிவிட்டது?! இது தான் ஞானி லட்சணம்! அங்கே காளியால் கர்ம வினை தீராது என்று கூறப்பட்ட விஷயம் இங்கே ஞான சற்குருவால் வள்ளலாரால், வள்ளலாரை கண்டதுமே தீர்ந்தது! "குரு பார்க்க கூடி வினை தீரும்" அதற்க்கு இது ஒரு உதாரணம்! அது மட்டுமா? வேட்டவலம் ஜமீன் மனைவிக்கு தீராத மகோரதம் வியாதி வள்ளலார் விபூதி கொடுக்க உடனே குணமானது! சுத்த ஞானிகள் கைபட்ட கால்பட்ட மண்ணே பொன் ஆகும்போது? பேய்கள் ஓடாதா? நோய்கள் தீராதா? இப்போது புரிந்ததா? சிறு தெய்வங்களால் நமக்கு ஒரு பிரயோஜனம் இல்லை!?


ஞானியை பணிந்தால் அவரே நம் குருவாகி தாயாகி தந்தையாகி நம் கர்மவினைகளை போக்கி நம்மை கடவுளிடம் சேர்ப்பார்! இது சத்தியம்! 

மகாகவி காளிதாசனுக்கு அருளினாள் மாகாளி! அம்பிகை! மூடன் மகாகவி யானான்! அம்மாவசையன்று நிலவும் வந்தது! அருட்கவியானான் மகாகவி காவி காளிதாசன்! என்ன பயன்? முடிவு ஒரு பெண்ணாலே மாண்டானே! வேதனை வேதனை! வாலை தாயின் ஆதி சக்தியின் பரிவார தேவதைகளில் ஒன்று காளி! பரிவார தேவதைகளையும் காவல் தெய்வங்களையும் கும்பிடுவதை விட்டு, கண்ணான கடவுளை, கண்ணில் துலங்கும் கடவுளை , கண் உள்ளே விளங்கும் வாலையை பணிந்தாலே மோட்சம் கிட்டும்!! சிந்தித்து தீர்க்கமாக முடிவெடு! அறிவில்லாமல் அயோக்கிய சாமியார்கள் பின்னே போய்விடாதே! ஏமாறாதே! வேதனை படுவாய்?!



ஞான சற்குரு சிவசெல்வராஜ்

வாலை - கன்னி-ய-குமரி - ஞானம் பெற விழி 

 ------------------------------------------------------------------------------

குருவை சந்தித்து உபதேசம் தீட்சை பெருக!
ஞான தவம் செய்யவும். ஞான தானம் செய்யவும்!
Contact : http://www.vallalyaar.com/contact-us/

புதன், 24 அக்டோபர், 2012

தவம் செய் - கர்மத்தை அழி



பறக்கும் யானை தெரிந்தது என்று சொன்னதற்கு...

உள்ளே இருபது தான் வரும். கற்பனை எல்லாம் கிடையாது.
பல யுகங்கள்(பல லட்ச வருஷம்) உள்ளது. அதை பற்றி எல்லா தகவலும் நம்முள் உள்ளது. சித்தர்கள் ஞானிகள் சொல்வது எல்லாம், நடந்தது பற்றி ஒன்றும் கவலை படவேண்டாம்.மறந்து விடு. இதை ஆராய்ச்சி பண்ண வேண்டாம். அதை ஆராய்ச்சி பண்ணினால், அதை பார்க்க ரசிக்க எத்தனையோ வருஷம் வேண்டும்.

தன்னை உணர்ந்த தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்
பின்னை வினையை பிடித்து பிசைவர்
சென்னியில் வைத்த இறைவன் அருளாலே-

வினைகளை எப்படி கை ஆழனும் என்று சொல்லி இருக்கிறார்கள். அது ஒன்றுமே நமக்கு வேண்டாம். அதை(வினை) இல்லாமல் பண்ண வேண்டும். அதை பற்றி பேசி நினைத்து இந்த ஜென்மமே பாழ் ஆகிவிடும்.

இப்ப நீ தவம் செய்.(திருவடி) அவ்வளவு கர்மத்தையும் தீர். அதை அலசாதே, பார்த்து ரசிக்காதே. கால விரயம் தான். அதை எல்லாம் நிறுத்து, புராணத்தில் எவ்வளவோ கதை உள்ளது, ராமர் காலத்தில் மனிதனாக நாயாக , சோல்ச்சர் ஆகா இருந்து இருப்போம். இப்போ அதை பேசி என்ன பிரயோஜனம்?


நீ யார் என்று பார். உன் உயிர் எங்கு உள்ளது என்று பார்... அதுவே உன் வாழ்வின் முதல் வேலை.


-ஞான சற்குரு சிவசெல்வராஜ்.


குருவை சந்தித்து உபதேசம் தீட்சை பெருக!
ஞான தவம் செய்யவும்.
ஞான தானம் செய்யவும்!

Contact : http://www.vallalyaar.com/contact-us/


ஞாயிறு, 21 அக்டோபர், 2012

தன்னை அறிதல் - குருவின் விளக்கம்

உடல் அல்ல மனம் அல்ல. நாம் உயிர்!!

இது உள்ளது நமக்கு தெரியும். எங்கோயோ நமது உடலில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

நம் இயல்பு, நாம் இருக்கும் இடம் நமேக்கே தெரியவில்லை என்பது கொஞ்சம் அசிங்கமாக உள்ளது! நம்மை நாம் தெரியாமல் வாழ்வது ஒரு குருட்டு வாழ்க்கை.

சரி எப்படி தெரிந்து கொள்வது எப்படி ?

மனம் என்பது கர்ம வினையின் வெளிபாடு. கர்ம வினை என்பது நாம் சிறுவயதில் இருந்து சேர்த்து வாய்த்த விஷயங்கள். இது நமது உயிரை மறைத்து கொண்டு உள்ளது.

எப்படி?  எழு திரைகளாக!!

சத்திய ஞான சபையை என்னுள் கண்டனன். சத்தியஞான சபையில் உள்ளது என்ன? 7  திரை , ஜோதி. உயிர் ஜோதியாகவும், திரை நமது கன்மம் மாயை அகங்காரம் இதை எப்படி விளக்குவது?

வீடியோவை பாருங்கள். தெளிவான விளக்கம் உள்ளது. திருவடி தீட்சை பெறுங்கள். ஞான தானம் செய்யுங்கள். உலகில் ஒவ்வொருவரும்
தன்னை உணரவேண்டும்.

குரு சாத் சாத் பர பிரம்மா....




குருவை சந்தித்து உபதேசம் தீட்சை பெருக!
ஞான தவம் செய்யவும். ஞான தானம் செய்யவும்!
Contact : http://www.vallalyaar.com/contact-us/

வியாழன், 18 அக்டோபர், 2012

குருவின் புதிய புத்தகங்கள்

குரு பூஜை அக்டோபர் 15 (புரட்டாசி - சித்திரை) வள்ளல் பெருமான் பிறந்த நட்சத்திரத்தில் வெளியிட்ட புத்தகங்கள்.

 
மூவர் உணர்ந்த முக்கண் - ஞான சம்பந்தர், சுந்தரர், அப்பர் அருளிய தேவார திருவடி மெய் பொருள் பாடல்களுக்கு குரு எழுதிய உரை.



வாலை - அமுதம் கொடுக்கும் வாலை தாய் பற்றி குரு எழுதிய புத்தகம்



ஜீவகாருண்யம்  - உன் ஜீவனை கருணையுடன் பார்-

பல சன்மார்க்க சங்க அன்பர்கள் உணவு கொடுப்பது மட்டுமே ஜீவகாருண்யம் என்று சொல்லி வருகின்றனர், சாப்பாடு போடுவது மட்டும் ஜீவகாருண்யம் அல்ல, நாம் யார் என்று தெரியாமல் வாழ்கிறோம். நம் யார்? என்பதை உணர்ந்து மற்றவர்களை யார் என்று தெரிந்து கருணையுடன் வாழ்வது.  இதை உணர்த்துவதே சத்திய ஞான சபை.


குருவை சந்தித்து உபதேசம் தீட்சை பெருக!
ஞான தவம் செய்யவும். ஞான தானம் செய்யவும்!
Contact : http://www.vallalyaar.com/contact-us/


Popular Posts