சனி, 7 ஜனவரி, 2023

கட்செவி

பாம்பு என்றால் கட்செவி!
எட்டாம் தந்திரம்

"அழிகின்ற ஒருடம் பாகும் செவிகண்"
திருமந்திரம் பாடல் - 2140

காம வசப்பட்டு மனிதன் கண்ணிருந்தும் குருடனாய்! செவியிருந்தும் செவிடனாய் வாழ்கிறான்! நல்ல சற்குருவை நாடி வேதபுராண உபதேசம் செவியில் கேட்க மாட்டான் பாவி! சற்குருமூலம் திருவடி தீட்சை கண்களில் பெற மாட்டான்! மெய்ஞ்ஞானம் உணராமல் உடம்பை அழிகின்ற உடம்பு தானே சாகும் வரை இஷ்டம்போல் வாழலாம் என முட்டாள்தனமாக கருதி தன் உடலை புண்ணாக்கி கெட்டு குட்டி சுவராகி செத்தும் போவான்! "

அழியுடம்பை அழியாமையாக்கும் வகையறியீர்" என ஒரு ஞானி மனிதனை எச்சரிக்கிறார்! ஆம், இந்த மானுடர் யாக்கை அழியக்கூடியது தான் மனம்போனபடிவாழ்ந்தால்! மனதை செவிகண்ணில் நிறுத்தி தவம் செய்தால், மனதை இறைவன் திருவடியில் ஒப்படைத்து தவம் செய்தால், செவிக்கண் ஒளிர்ந்து நாதத்தொனி கேட்டு, விண்ணிலே விளங்கும் நாதத்தொனி, ஓம் கேட்டு, தன்னிலும் ஒலிக்கக்கேட்டு, உடலில் ஒளிவியாபித்து உடலும் அழியாது உயிரும் பிரியாது பேரானந்த நிலை பெறுவர்! மெய்ஞ்ஞானியாவார்! செவிக்கண் - நம்கண் பார்க்க மட்டுமல்ல! கேட்கவும், உள்ளேபோனால் நாதத்தொனி, தசவித நாதம் கேட்கவும் செய்யும்! பாம்புக்கு செவி - காது கிடையாது! கண்ணே பார்க்கவும் ஒலியை கேட்கவும் செய்கிறது அதனால் தான் பாம்பின் கண்ணை "கட்செவி" என்பர்!

பாம்பிற்கு மற்றொரு பெயர் "அரவம்"! ஏன் எனில் அது சப்தத்தை அரவத்தை உணர்ந்து செயல்படுவதால் தான்! கண்ணால் பார்க்கவும் சப்தத்தை அரவத்தை உணரவும் ஆண்டவன் கட்செவி தந்துள்ளான்! இது ஒரு ஞான ஜீவன்! எல்லா தெய்வங்களுடனும் பாம்பு சம்பந்தப்பட்டிருக்கும்! ஒருவர் கழுத்திலே பாம்பு! ஒருவர் பாம்பணையில் படுத்திருக்கிறார்! ஒருவர் பாம்பை இடுப்பில் கட்டியிருக்கிறார்! ஒருவர் பாதத்திலே பாம்பு! ஒருவருக்கு பாம்பு கிரீடமாகிறது! இது போதாதென்று பாம்பாட்டி சித்தர் என்றொருவர்! பாம்பு என்றால் கட்செவி!

கண்ணும் செவியும் சேர்ந்தது. கண்ணில் மணியில் ஒளியை நினைந்து நீ தவம் செய்தால் கண் உள்ளேயே தசவித நாதமும் ஓங்காரமும் கேட்கலாம்! இதை உணர்த்தவே, மனிதன் அறியவே இந்த பாம்பு புராணமெல்லாம்! கண்ணின் - செவிகண்ணின் மகத்துவத்தை இப்போதாவது புரிந்து கொண்டீர்களா? ஞானம் பெற கண்ணை அறி!

படியுங்கள்! பண்படுங்கள்!

பரம்பொருள் அருள் கிட்டும்!

 

🔥அருளியவர்🔥:

ஆன்மீக செம்மல், ஞானசித்தர், ஞானசற்குரு சிவ செல்வராஜ் அய்யா

நூல் - மந்திரமணி மாலை
www.tamil.vallalyaar.com

திங்கள், 2 ஜனவரி, 2023

பரமபதம்

கிருஷ்ணன் கண்ணன் கதைகூறும் பாகவதம் கேட்டே முக்தியடைந்தவர்
ஏராளம்! பிரேமை ! பரமாத்மா ஜீவாத்மா ஐக்கியத்தை உணர்த்த வந்ததே
கிருஷ்ணவதாரம்! இராமன் பக்தியை ஊட்டினான்! கிருஷ்ணன் ஞானத்தை ஊட்டினான்! மந்திரத்தால் மனம் ஒன்றி கண்ணனிடம் லயமானால் ஞானம்! மந்திரம் - மனதின் திறம் வெளிப்படும் இடம் கண்ணே! அந்த கண்ணனிடம் கண்ணில் லயமானால் கிட்டும் ஞானம்! இதைப்பற்றி பாடினார்கள் ஆழ்வார்கள் நாலாயிர திவ்ய பிரபந்தமாக! அடியேன் மெய்ஞ்ஞான உரை எழுத உட்கார்ந்த போது அருளினான் கண்ணன்!!

Popular Posts