sivaselvaraj லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sivaselvaraj லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 மார்ச், 2012

சன்மார்க்கம் நடத்துவது யார்?


"உலகமெலாம் போற்ற ஒளிவடிவனாகி
இலக அருள் செய்தான் இசைந்தே - திலகன் என
நானே சன்மார்க்கம் நடத்துகிறேன் நம் பெருமான்
தானே எனக்குத் தனித்து" - திருவருட் பிரகாச வள்ளலார்


இறைவன் ஒளிவடிவானவர்! அருள் பெருஞ்சோதி ! பிறந்து
வாழ்ந்து ஞான தவம் செய்து அந்த எல்லாம் வல்ல
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நிலையாகவே - ஒளியாகவே
ஆனவர் நமது திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்!!

1865  சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் வடலூரில் ஆரம்பித்த வள்ளல்
பெருமான் வேறு யாரிடமும்  அதை ஒப்படைக்கவில்லை ! நானே சன்மார்க்கம் என் பறை சாற்றுகிறார்!

அறிந்த - உணர்ந்த ஆன்ம நேய ஒருமைப்பாடுடைய திவ்ய ஆத்மா  சொரூபிகளுக்கு கூடவே இருந்து, தோன்றும் துணையாக துலங்கி வழி நடத்துகிறார்! கண்ணுள்ளவர் நோக்கக் கடவர்! நம் பெருமான் அருட்பெருன்ஜோதியின் அருளே எல்லாம்!
 

-புரட்டாசி சித்திரையை வள்ளலார் பிறந்தநாளை குருபூஜையாக
கொண்டாடாமல் விட்டீரே  ஏன்?

வெள்ளி, 30 டிசம்பர், 2011

துவிஜன் - மறுபடியும் பிறப்பவன்!


இந்த பிறவியே வேண்டாம் என்கிறோம்  மறு பிறவியா? என யோசிக்காதீர்கள்! இந்த பிறவியோடே பிறவிப்பிணி முடிவுக்கு வரவே மறுபிறவி!?

இங்கு சொல்லப்படும் மறுபிறவி என்பது இந்த பிறவி முடிந்து  இனியும்  பிறப்பது அல்ல!?

இந்த பிறவி இறுதியாக இருக்க வேண்டும்! அதற்குதான் நம் ஞானிகள் வழி
கூறுகிறார்கள்.

அது என்ன? எப்படி? நாம் ஞான குரு ஒருவரை பெற்று
உபதேசம் பெற்று சூட்சும நிலையில் பிறப்பதே  மறுபிறவியாம்! அதாவது
உடலால் பிறந்த நாம் உணர்வால் நம் சூட்சம உடலை பிறப்பிக்க ஒரு
குருவை பெற்றே ஆகவேண்டும்!

யார் நம்மை, சூட்சம சரீரத்தை பிறப்பிக்க செய்கிறாரோ அவரே குரு!
நம் வாழ்வின் பெரும் பேறே இதில்தான் இருக்கிறது!  ஞானமடைய
இதுவே வழி!


நம் ஸ்தூல தேகத்தை போலவே, நம் உடலினுள் ஒளிவடிவில் சூட்சும
தேகம் உள்ளது! முதலில் அதை உணரவேண்டும்! குருவானவர் தீட்சையின்
மூலம் சூட்சும சரீரத்தை பிறப்பிக்க செய்கிறார்!

ஸ்தூல தேகத்தில் பிறந்த நாம் சூட்சுமதேகத்தில் பிறப்பதே மறு பிறவி!
பிறந்த இப்பிறவியிலே மீண்டும் பிறப்பது என்பது இவ்வாறு தான்!
இதை யார் உணர்கிறார்களோ அவரே ஞானம் பெறுகிறார்!

வேதங்களில் சொல்லபடுவது "துவிஜன்" இரு பிறப்பாளன் என்பதே!

மறுபிறப்பு பற்றி பைபிளில் தெளிவாக கூறப்படுகிறது!

"மறுபடியும் பிறவாதவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்"
மறுபடியும் பிறந்தால் தான் பரலோக ராஜ்யம்!? எப்படி?
எவன் ஒருவன் அக்னியலும் பரிசுத்த ஆவியாலும் ஞானஸ்நானம் பெறுகிறானோ?  அவனே மறுபடியும் பிறந்தவன். அவன்தான் பரலோக ராஜ்யத்தை அடைவான்!

அக்னியால் ஞானஸ்நானம் என்பதுதான் அக்னியை பெருக்க வழி கூறும் உபநயனம்!

வெவ்வேறு பாசையில் சொல்லப்பட்ட ஒரே விஷயம்! 

துவிஜன் - மறுபடியும் பிறப்பவன்!

பிரம்மமாகிய ஒளியை - கடவுளை அடைய - உணர , பிரம்மத்தின் தன்மையாகிய ஒளி நம் கண்களில் துலங்குவதை அறிந்து உணர்ந்து , இரு கண்கள் வழி ஞான  தீட்சை பெற்று, அக்னியால் ஞானஸ்நானம் பெற்று, தியானம் செய்வதே மறுபிறவி பெரும் வழி! இறைவன் அருள்வார்!


குரு   மூலமாக உபநயனத்தில் தீட்சை பெற்று  தவம் செய்தால் பிறப்பு அறுக்கலாம்.

"மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை"  என அகஸ்தியர் கூறுவதும் இதுவே!

பிறந்த இப்பிறப்பில் குரு மூலம் தீட்சை பெறுவதே மாற்றி பிறப்பதாகும்! 

சனாதன தர்மம் - சற்குரு சிவசெல்வராஜ்.
http://www.vallalyaar.com


----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

வியாழன், 29 டிசம்பர், 2011

உடலென்ற கூட்டை தூக்கி சுமப்பது யார்?

உடலென்ற கூட்டை தூக்கி சுமப்பது யார்?

நாம் படுத்தால் நம்மை தூக்க  நாலு பேர் வேண்டுமே! நாலுபேர் தூக்க சிரமப்படும் உடலை நாமே தூக்கி கொண்டு நடப்பது எப்படி? நோய் வந்து படுக்கையில் படுத்துவிட்டால் கை கால்களை கூட அசைக்க  முடியாதே!

நன்றாக இருக்கும் போது நம்மை நாமே தூக்கி கொண்டு பாரமின்றி
திரிவது எப்படி? நம்முள் இருக்கும் உயிரான  இறைவன் தானே சதா காலமும் நம்மை சுமந்து திரிகிறார்! சுமப்பவனுக்கு கூலிஆகாரம் நைவேத்தியம்! நம்மை சுமப்பவனை பஞ்சமாக பாதகங்கள் செய்து துன்புறுத்தாமல் அடிபணிந்து சும்மா இருந்தாலே அரவணைப்பான்!

மெய்கொண்டு போனாலே மெய்யான பரமனை நம் மெய்யிலே காணலாம்
உணரலாம் மகிழலாம்! இதுவே மெய் !

நான் மெய். என் உடல் மெய். என் பெற்றோர் சொந்த பந்தங்கள்  மெய் தான்.
பலநூறு வருடங்களாக பல ஆயிரம் வருடமாக  பல ஆயிரம் வருடமாக
மன்னர்கள் பலர் ஆட்சி புரிந்தனர். இது சரித்தரம் கூறும் மெய்! நாம் இருக்கும்
பூமி  உருண்டை தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனை சுற்றி வருகிறது.
இது விஞ்ஞானம் கூறும் மெய். இப்பிரபஞ்சத்தில் நவ கோள்கள் அவற்றின்
சஞ்சாரங்கள் எல்லாமே உண்மை தானே! யார் இதை எல்லாம் படைத்தது!
நடத்துகிறது ? ஏன் இப்படிஎல்லாம் நடக்கிறது? ஏன் இந்த நாடகம்!
இயற்கையில் நானும் ஒரு அங்கமா? இது எல்லாம் மெய் தானே!
இதை எல்லாம் நம்பும் நான் அறிவது எப்படி? உணர்வது எப்படி?  இந்த
மெய்யை மெய்யாலுமே நம் மெய்யில்  உணர காண முடியுமா?  முடியும்
என்கின்றனர் மெய் ஞானிகள்!! ஆம் தவத்தின் மூலம் உணரலாம்! 


பக்தியில் பலர் உடலை வருத்தி பல சாதனைகள் செய்கின்றனர்!
மனோதிடம் இல்லாத கடினமானவர்கள் செய்யவேண்டியது தான்!
ஆனாலும் இது சரியல்ல! அன்பே வடிவான இறைவனை, கருணை
கடலான கடவுளை, அருள்மயமான ஆண்டவனை அடைய கடின
போக்கு தேவை இல்லை!  அன்பே கடவுள் என்றனர் ஆன்றோர்!
கடவுளை அடைய அன்பு ஒன்றே வழி! மெய்யுனுள் மெய்பொருள்
அன்பால் நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து தவம் செய்வதே சும்மா
இருக்கும் நிலையே ஒப்பற்ற ஞானம்!  மெய்யை வருத்தாது,
மெய்யில் உள்ள மெய்பொருளை மெய்ஞான சற்குரு மூலம்
அறிந்து உணர்ந்து மேன்மை பெறலாம்! இதுவே மெய்!


புத்தகம்

----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

Popular Posts