வெள்ளி, 23 ஜனவரி, 2015

தை பூசம்(பிப்ரவரி 3/4/5) வடலூர் வருக.

வள்ளல் பெருமான்
மற்றும் எல்லா சித்தர்கள்
ஞானிகளின் அருள் பெற

தை பூசம்(பிப்ரவரி 3/4/5) வடலூர்  வருக.  

144 வது தை பூசம்
வள்ளல் பெருமான் ஒளி நிலை பெற்று 141 வருடம்.







வள்ளல் பெருமான் அமைத்த

1 சத்திய தரும சாலையில் (ஜீவகாருண்யம்) உணவு இலவசம்.
2 சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்க.
3 சித்திவளாகம்(மேட்டுகுப்பம்) வள்ளல் பெருமான் ஒளியான இடத்தை தரிசனம் செய்க.






வள்ளல் பெருமான் உரைத்த மரணமிலா பெரு வாழ்வு வாழ
1. சுத்த சைவ உணவு உட்கொள்க.
2. புகை பிடிக்க வேண்டாம்
3. மது அருந்த வேண்டாம்.
4. உயிர் பலி கூடாது.

செவ்வாய், 20 ஜனவரி, 2015

இந்த ரகசியத்தை அறியாமல் ..


இறைவன் சிறு ஜோதியாக ந ம் உடலில் உயிராக இருக்கிறான் என்பதை
அறிந்தவன், தகுந்த குரு மூலம் உணர்ந்தவன் தான் ஞானம் பெறுவான்!
அறிந்தால் மட்டும் போதாது! குரு மூலம் திருவடி தீட்சை மூலம் உணரவும்
வேண்டும்! தவம் செய்யவும் வேண்டும்! அப்போது தான் ஞானம் கிட்டும்!
இறையருள் பெறலாம். இந்த ஞான ரகசியத்தை அறியாமல் இந்த உலகில்
நீங்கள் வேறு எது செய்தாலும் ஞானம் கிட்டாது!?

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

வேதங்களில் சொல்ல பட்ட இறை ரகசியம்

பிறப்பிக்க வைத்த அந்த  இறைவனே எல்லா உயிர்களுக்கும் வாழ்வில் பல சந்தர்பங்களில் தன்னை  வெளிபடுத்து காட்டுகிறான்! ஆனால் அறிவோர் உணர்வோர் வெகு சிலரே!

மனிதனை படைத்து காத்து மறைத்து அருளும் எல்லாம் வல்ல பரம்பொருளே அவரவர் வினைக்கேற்ப வாழ்வை முடித்தும் வைக்கிறான்! அதாவது உடலை அழித்து அல்லது மாற்றி அவரவர் பரிபக்குவத்திற்கு ஏற்ற நிலையை தந்து அருள்கிறார்.

அவனின்றி ஒரு அணுவும் அசையாது! அணுவுக்கு அணுவாக இருந்து எல்லாம் புரிந்து ஆள்வதும் அருள்வதும் அவன் திருவிளையடல்களே ! அற்புதங்களே!

அணுவுக்கு அணுவாக ஒளிர்பவன் மனித உடலில் இல்லாமல் போவானா?
எங்கும் இருக்கும் இறைவன் நம் உடலினுள்ளும் உள்ளான் உயிராக!!!

இதுவே ஆதி காலந்தொட்டு நமது ஞானிகள் எல்லோரும் உரைத்த உண்மை!
வேதங்களில் சொல்ல பட்ட இறை ரகசியம்! "அகம் பிரம்மாஸ்மி"

இறைவன் பரமாத்மா பரம்பொருள் பெரும்ஜோதி ஆண்டவன்
தானே சிறும் ஜோதியாக தன்னை குறுக்கி கொண்டு ஜீவாத்மாவாக
உயிராக பிராணனாக நம்முள் இருக்கிறார்! நம் உள்  மனம்
கடந்த நிலையில் இருப்பதால் தான், உள் கடந்து இருப்பாதால் தான்
ஆன்றோர் கடவுள் என்றனர் 

Popular Posts