ஊசிமுனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊசிமுனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 நவம்பர், 2023

இறைவனோடு ஒன்றுவது எவ்வாறு?


‐----------------------------------------------------------------

இறைவனோடு ஒன்றுவது எவ்வாறு?

‐----------------------------------------------------------------


இறைவன் திருவடியாகிய தன் கண்களை எண்ணி ஞான தவம்
செய்வோருக்கு தித்திக்கும் சுவைமிகு இனிக்கும் கரும்பு போன்றவர் இறைவன்!

இறைவனை, கண்மணி மத்தியிலே, நம் மனதை ஊன்றி உணர்ந்து, நெகிழ்ந்து உருகுவார், ஞானதவம் செய்வாருக்கு எல்லா இன்பமும் தருவார் கடவுள் ! அவர் உறையும் இடம் கண்மணி மத்தி உச்சியேயாகும்!

கண்மணி உச்சியான ஊசிமுனை துவாரத்தைப் பற்றி, இரு கண்ணும் ஒன்றும் படி விடாது தொடர்ந்து ஞானதவம் செய்பவர் ஒன்றலாம் இறையோடு!


ஞானசற்குரு திரு சிவ.செல்வராஜ் அய்யா திருவடிகளே சரணம் சரணம்!
புத்தகம்: மூவர் உணர்ந்த முக்கண்
பக்கம்: 57

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

ஆன்மீகத்தில் - பெருந்துறை எங்கு உள்ளது?


நம் பெருந்துறை கண்மணி ஊசி முனை வாசலே!

உள்ளே சிவமான ஒளி!ஊசிமுனை வாசல் என்ன பெருந்துறையா?
மிக மிக சிறிய இடம்தானே! ஏன் பெருந்துறை என்று சொன்னார்கள்?

வாசல் ஊசிமுனை அளவு சிறியது தான்!


உள்ளே போனால் பிரபஞ்சமே அங்கேதான் பெரிய அளவிடமுடியாத பெரும் வெட்டவெளி!

அங்கே போகும் வாசலுக்கு அதனால் தான் பெருந்துறை எனப்  பெயர்!

இந்த பெருந்துறையில் என்றும் பிரியாமல் இருக்கும் இறைவனைப் பற்றி பாடு! ஆடு!

வாய் மணக்க அவன் புகழையே பேசு!

பேசிக்கொண்டே இரு!

அடியேன் பரம்பொருளின் பெரும்புகழையே பாடுகிறேன், எழுதுகிறேன்!!

ஞான சற் குரு சிவசெல்வராஜ்



Popular Posts