புதன், 28 ஜூலை, 2021

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் - இயேசு

கண்மணி மாலை நூலிலிருந்து : 

28 🔥 இதைச் சொல்லவில்லை இயேசு. 🔥 
 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். 
அவர்கள் தேவனை தரிசிப்பார்கள் என்பது பைபிள் வாசகம். இதற்கு என்ன விளக்கம் ?     

❌ சாதாரணமான உண்மை அறியாத அப்பாவிகள். நாம் நெஞ்சத்தில் தீமை நினைக்காமல் நல்லதை நினைத்து வாழ்ந்தால் பாக்கியவான்களாகி தேவனாகிய ஆண்டவரை தரிசிக்கலாம் என்பர்.    - இதைச் சொல்லவில்லை இயேசு.             
❌  நமது நெஞ்சு இரத்தத்தை சீராக்கும் ஒரு உறுப்பு அவ்வளவே. 

 ஞானிகள் ஞானத்தைத்தான் முதன்மையாக சொல்கிறார்கள். அதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.     

👀   நமது கண்களில், வலது கண்ணில் சூரியன் உதயம் என்றும், இடது கண்ணில் சந்திரன் உதயம் என்றும், இரு கண்களிலும் இரு உதயம் என்றும் அதுவே இருதயம் என்றும் கூறுகின்றனர்.      

 👀  இந்த இரு கண்களில் இரு உதயத்தில் நினைவை செலுத்தி நினைந்து அழுது அங்குள்ள அழுக்காகிய மும்மலங்களை நீக்கி அதை சுத்தப்படுத்துபவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆண்டவனை தரிசிப்பார்கள் என்றே விளக்கம், 

 🙏 சிந்தித்து உணர்க. 🙏 

 🔥விசுவாசம் கொண்டால்தான் இரட்சிக்கப்படுவீர்கள்.🔥
 
 இறைவன் திருவடிகளே நம் கண்கள்!! 

 - ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா 
 www.vallalyaar.com

ஞாயிறு, 25 ஜூலை, 2021

இரு கை கூப்பி அரை கும்பிட! முழு கும்பிடு??


சேர்ந்தறியாக் கையானை எங்கும் செறிந்தானை - இருகை சேர்ந்தால் கும்பிடுவது போலாகும்! 

இரு கை கூப்பி வணங்குதல் அது. அது அரை கும்பிடே ! 

 நம் இரு கையான கண்களை சூரிய சந்திர கலைகளை சேர்த்து உள்ளே சிவனை வணங்குவதை முழு கும்பிடு!! 

எங்கும் செறிவாக - நிறைவாக இருப்பவன் இறைவன்! அவனை கண்களாகிய இருகை கொண்டு கும்பிடுவதே உண்மையான .! வணக்கமாகும்! 

 ஞான தீட்சை பெறாத எவரும் திருவாசகத்திற்கு உரை எழுத முடியாது! ஞானிகள் பாடல்கள் எதற்கும் பொருள் தெரியாமல் மழுப்பலான கருத்துக்களையே கூறுவர்! 

 குருவிடம் தீட்சை பெற்றவனுக்கே எல்லாம் வெட்ட வெளிச்சமாக பட்டப்பகல் போல் தெரியும்! 
 பல்கலைகழக பட்டம் பெற்றவருக்கு ஞானத்திற்கும் சம்பந்தமே கிடையாது!? 

 -ஞான சற் குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

சனி, 24 ஜூலை, 2021

உண்மையான அடியார்?

மெய்யடியார்க் கருட்டுறை யளிக்கும் சோதியை - எண்ணப்பதிகம் மெய்யடியார் என்றால் உண்மையான அடியார் என்றால்ல பொருள்! 

 மெய் - உடல் - நம் உடலில் மெய்ப்பொருளாக இறைவன் கண்மணி ஒளியாக துலங்குவதை அறிந்தவன் உணர்ந்தவன் தான் மெய்யடியார்! 

அவர்களுக்கு அருள்பொழியும் துறையாகிய கண்மணி மலரை மணி ஒளியை தெரியவைக்கும் ஒளியை! 

சீவனை அறிய அறிய அருளும் சிவத்தை புரிந்து தவம் செய்க!

ஞானசற்குரு சிவ செல்வராஜ் ஐயா  

Popular Posts