புருவமத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புருவமத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 நவம்பர், 2022

நடுக்கண் புருவபூட்டு - வள்ளலார்

சாகாக்கல்வி நூலிலிருந்து : 30
🔥 புருவமத்தி - வள்ளலார் 🔥


வள்ளல் பெருமான் புருவம் கண் என்று தெளிவாக கூறி விட்டார்.
"கையற விலாத நடுக்கண் புருவபூட்டு கண்டுகளி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு” என வெட்ட வெளிச்சமாக்கி விட்டார் ! "நடுக்கண் தான் புருவபூட்டு"

இதற்கு விளக்கமும் வேண்டுமோ ?!
 
“பூட்டை திறப்பது கையாலே மனப்பூட்டை திறப்பது மெய்யாலே"
 என்றொரு சித்தர் பாடுவார். நடுக்கண் புருவபூட்டை திறக்க வேண்டும் !

எப்படி ? கையாலே இங்கே கை என்பதும் நமது கண்களே ! கண்கள் தான் நமக்கு கை !
 
கண்கள்தான் இறைவனின் திருவடி - கால்கள் !
 
இந்த சித்தர் கண்ணாலே பூட்டை திறக்க கூறியுள்ளார்.

அங்கே மனமாகிய பூட்டும் உள்ளதாம் அதை மெய்யாலே திறக்கணுமாம் !

இங்கே இன்னொரு இரகசியமும் வெளிப்பட்டது.

மனம் இருப்பதும் கண்ணில் தான் !
அதை மெய் கொண்டு திறக்கணுமாம் !

மெய் எது உண்மை. சத்தியம் அழியாதது. ஒளி ஒன்றுதானே !
அதாவது கண்மணியில் உள்ள மனதை அகற்ற கண்மணியின் உள் உள்ள ஒளியை பிடி !
ஒளியை வைத்து மனதை திற !

கண்மணி வாசலை திறந்துவிடலாம் என்பதே ஞான இரகசியம் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

செவ்வாய், 8 நவம்பர், 2022

🔥 புருவ-மத்தி 🔥



சாகாக்கல்வி நூலிலிருந்து : 29

🔥 புருவ-மத்தி 🔥


புருவ மத்தியில் தியானம் செய் என எல்லோரும் கூறுவர்.
புருவமத்தி எது என தெரிய வேண்டாமா ?

சாதாரணமாக யாரிடம் கேட்டாலும் புருவமத்தி நாம் நெற்றியில் பொட்டு
வைக்கும் இடத்தையே காட்டுவர் ! அதாவது இரு புருவங்களுக்கிடையே தான் காட்டுவர்.

ஞானிகள் இரு புருவ மத்தி எனக் கூறவில்லையே !
புருவமத்தி என்று ஒருமையில் தானே கூறினர்.
ஒரு புருவம் அதன் மத்தி ஒன்றுமில்லை,

அதன் கீழேயிருப்பது கண்.
இப்படி சிந்திக்க வேண்டும், யூகிக்க வேண்டும்.

புருவமத்தி என்று சொன்னார்களே அதன் கீழ் உள்ள கண்ணைப் பற்றித்தான்
சொல்லியிருப்பர். அதன் விளக்கம் இதுவாகத்தான் உள்ளது என சிந்தித்து அறியவேண்டும்.

கண்ணின் தன்மையை அறியவேண்டும்.

புருவமத்தி என்றால் கண்தான் என மற்றொரு சித்தர் உண்மையை போட்டு உடைக்கிறார்.

ஒரு சித்தர் போட்ட பூட்டை இன்னொரு சித்தர் திறந்துவைக்கிறார் ! இப்படியேதான் எல்லா சித்தர்களும் ஞானிகளும் மெய்ப்பொருளை பரிபாஷையாக சூட்சுமமாக பலப்பலவிதமாக கூறி அருளியிருக்கிறார்கள் !

" புருவமத்தி ஏதென்றக்கால் பரப்பிரம்மமானதோர் அண்ட உச்சி ".
எவ்வளவு சிறந்த சூட்சுமமான - பரிபாஷை சங்கேத வார்த்தை ! - படிக்கப் படிக்க பேரானந்தம் !
புருவமத்தி பரப்பிரம்மமான அண்ட உச்சி !

அண்டம் போல் அழகான, பூமிபோல அழகான கண்மணி, உச்சி என்றால் கண்மணி மத்தியாகும் !
அது பரப்பிரம்மமானது. அதாவது ஒளியானது.

புருவமத்தி கண்மணி மத்தியிலுள்ள ஒளி !
இப்படியே தான் எப்பொருளும் மெய்ப்பொருளே !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

செவ்வாய், 22 மே, 2018

நடுமூக்கு – இது பரிபாசை.

மெய்ப்பொருள் பரிபாஷை விளக்கம் :-->
திருமூலர் திருமந்திரத்தில்

                 “நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
                  வாட்டம் இல்லை மனைக்கும்  அழிவில்லை “

                               என்கிறார்.

இங்கு திருமூலர் நமது நாட்டம் நடுமூக்கில் வைக்கணும் என்கிறார்.

ஒரு சித்தர் புருவமத்தி என்றார், இங்கு திருமூலர் நடுமூக்கு என்கிறார்.

எது சரி.?

நடுமூக்கு – இது பரிபாசை. ஞானத்திற்கு பொருள் காணனும்.! மேலோட்டமாக பார்த்து மூக்கு என்று ஏமாந்து போகாதீர். மூக்கை பார்த்து மோசம் போனவர் ஏராளம். இதன் விளக்கம் என்ன?

தண்ணீர் ஊற்றும் பாத்திரம் உண்டல்லவா அதில் நீர் வரும் பகுதியை மூக்கு என்று தானே சொல்வோம். நமக்கு கண்ணீர் வரும் கண்ணே மூக்கு அதன் நடுபகுதியே ஊசிமுனை துவாரம் உள்ளதாகும் அதனுள் தான் ஊசிமுனை அளவு ஜோதி உள்ளது! இதில் தான் நம் நாட்டம் இருக்க வேண்டும். கண் என நேரடியாக சொல்லாமல் நடுமூக்கு என்றது நாம் சிந்தித்து தெளிய வேண்டும். குரு மூலம் உபதேசம் பெற்று தெளிய வேண்டும் என்பதற்காக. தான்.

மேல் கூறிய விளக்கத்திற்கு சான்று மற்றும் ஒரு திருமந்திர பாடலே

                           “நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்

                           தோட்டத்து மாம்பழந்தூங்கலு மாமே” 

நயனம் என்றால் கண். இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை.

மேலும் பார்க்க Www.VallalYaar.Com

Popular Posts