புதன், 12 டிசம்பர், 2018

இரு உதயம் - இருதயம்! (இதயம்)


திருமூலர் - திருமந்திரம்
"இருதயந் தன்னில் எழுந்த பிராணன் "
                                               -  பாடல் - 2761


இரு உதயம் - இருதயம்! (இதயம்)
வலது கண்ணில் சூரிய உதயம்
இடது கண்ணில் சந்திர உதயம்!
இரு கண்களே இருதயம் எனப்படும்.

இதுவே ஞான விளக்கம்! மார்பல்ல இருதயம்?

 "இருதயத்தில் சுத்தமுடையவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள் " இது பைபிள் வாசகம்!

 இருதயமான இரு கண்ணிலும் ஒளியை தூண்டி தூண்டி கண்ணீர் விடவிட கண்மணி ஊசிமுனை துவாரத்தை மூடியிருக்கும் அழுக்கு மும்மலம்  அகன்று இரு - கண்ணும் - இருதயம் சுத்தமாகும்! அவரே உள் ஒளியை தேவனை தரிசிப்பர்!


எவ்வளவு உயர்ந்த ஞானம் இது! உலகில் தோன்றிய எம்மத ஞானியும் இதைத்தானே கூறுகின்றனர்! பின் ஏன் அடித்துக் கொள்கிறீர்கள்?!  இரு கண்மணி ஒளியைத் தூண்டி ஞான சாதனை செய்யச்  செய்ய ஞானக் கனல் எழும்பும் பிராணன் ஏழும்பும் உள் ஒளியோடு கூடும்!
ஆத்ம  ஜோதி தரிசனம் கிட்டும்!

பிராணன் என்றால் உயிர் சக்தி! பிராண வாயு வல்ல! ஒளிசக்தி!

திருமூலர் பக்தி கர்மம் யோகம் ஞானம் எல்லாம் சொல்லியிருக்கிறார்! ஞானமே முடிந்த முடிவாம் | ஞானமே பெறுவதே பேரின்பம் தரும்!

ஞானத்துக்கு நாம் நாட வேண்டியது ஒளியையே! இறைவன் பேரொளியல்லவா !

ஞானசற்குரு
சிவ செல்வராஜ் ஐயா,

நூல் : மந்திரமணி மாலை,
பக்கம் எண் : 202
Www.VallalYaar.Com 

திருமூலர் ஞான இரகசியம்

"நோற்று தவம் செய்யார் நூலறியாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே"
...................பாடல்−1642



இங்கே திருமூலர் ஞான இரகசியத்தையும் கூறுகிறார்!

நமது கண்மணி சுழல்கின்றதல்லவா? நம்  உடலில் உயிர் இருப்பதின் அடையாளம் சக்தி இருப்பதின் அடையாளமே மணியின் சுழலும் தன்மை!

நாம் உண்ணும் ஆகாரம் சக்தியை பெருக்கி சக்தியையூட்டி கண்மணி சுழற்சி இயல்பாக நடக்கிறது!

சோற்றுக்கு நின்று−நாம் உண்ணும் ஆகாரத்தால் நின்று கண்மணி சுழல்கின்றது என்கிறார் திருமூலர்!

கண்மணி உள் அக்னிகலை வரை இருகண் உள்ளேயும் நூல் போல் மெல்லிய நாடி உள்ளது.

தவம் செய்து நோன்பிருப்பவர் அறிவர்!

குருவருளினால் வைராக்கியத்துடன் கண்மணி ஒளியை பெருக்கி உள் நூல் போன்ற−மயிர்பாலம் வழி ஒளி பெருகி ஓடும் நெருப்பாறு பாயும்!

அக்னிகலையை ஆத்மஸ்தானத்தை அடையும்!

இடைப்பட்ட நூல் போன்ற நாடியையே நோன்பு தவம் செய்யாதவர் அறிய
மாட்டார்கள் என்று திருமூலர் கூறுகிறார்!

எவ்வளவு பெரிய ஞான அனுபவம் இரகசியம் இது தெரியுமா?!

புறத்தே செயல்பாடற்றவர்களுக்கு சம்மட்டி அடி!
அகத்தே தவம் செய்பவருக்கு அருளாசி!

ஞானசற்குரு திருசிவ செல்வராஜ் ஐயா..
நூல்:மந்திர மணிமாலை
பக்கம்:132

மலங்க மலங்க விழித்தேன் செய்வதறியாது!



மலங்க மலங்க விழித்தேன் செய்வதறியாது!
உலகச் சேற்றிலே வீழ்ந்து உழலும் மனிதன் இப்படித்தான் பேந்தப் பேந்த மலங்க விழிப்பான்!
சரியான வழிகாட்டுதல் இல்லையேல் அதோகதிதான்! வழிகாட்டுபவர் குரு!
ஞானத்துக்கு வழிசொல்லி விழியை திறந்து உணர்வூட்டி தவம் செய்யும் முறை சொல்லித் தருவார்!
ஞானசற்குரு!

ஞானதவம் செய்யும்போதும் செய்வதறியாது இறைவா என கண்ணீர் பெருகி உள்ளம் உருகி இருக்கையிலே இரு - கையிலே கழுக்குன்ற பெருமான் பெருந்துறையான் நீரை மாற்றி ஒளியை பெருக்கி மும்மலங்களை நீக்கி நம்மை காத்தருள்வான்!

ஞான அனுபவம் இது!
முதலில் கண்ணீர் ஆறாக பெருகி ஓடும்.
பின் நீர்வற்றி மலங்கழியும் மும்மலம் அகல ஆரம்பிக்கும்!
இப்படியே தவம் தொடர தொடர நம் ஆன்மா தூய்மையாகும்.
பிறவா பெருநிலை பெறலாம்! குருவருளால்!


ஞான சற்குரு திரு சிவ செல்வராஜ் ஐயா
நூல் : திரு மணி வாசக மாலை
பக்கம் : 122
குருவின் திருவடி சரணம்

Popular Posts