கர்மம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கர்மம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 நவம்பர், 2012

விதி படி வாழ்வது அல்ல மனித வாழ்க்கை

விதியை மதியால் வெல்லலாம்! எப்படி?

விதிக்கப்பட்ட பிராரப்த கர்மம்(~50 % கர்மம்) மூலம் பிறவி எடுத்தோம், நாம் சேர்த்து வைத்த கர்ம வினையால் எடுத்த பிறவி.நாம் பிறந்து வந்தது நாம் முடிவு பண்ணியது அல்ல, நமது தாய் தந்தை முடிவு பண்ணி வந்தது அல்ல.நாம் இப்பிறவி எடுத்து வந்து, நம் மதியால் நமது கர்ம வினையை அழித்து "நாம் யார்" என்று தெரிந்து கொள்ளவேண்டியது.எப்படி தன்னை அறிவது? தவம் செய்யவேண்டும்.

விதி படி வாழ்வது அல்ல மனித வாழ்க்கை!  விதியை வெல்ல கூடியவன் மனிதன். இறைவன் நமக்கு ஒரு சான்ஸ் கொடுத்து உள்ளார். 50% கர்மத்தை கொடுத்து மனிதனாக பிறப்பிக்க வைத்தான். மனிதனாக பிறந்த நாம் அதை உணர்ந்து , இந்த விதி வினையில் இருந்து எப்படி விடுதலை அடையவேண்டும் என்று பார்க்க வேண்டும். அதுவே புத்திசாலித்தனம்! பிறந்து. மேலும் மேலும் வினையை சேர்த்து இன்னும் இறந்து பிறக்க கூடாது. நாம் செய்ய வேண்டியது ஏற்கனவே கொண்டு வந்தது ப்ராப்த கருமத்தை தீர்த்து வினை இல்லாத நிலையை தேடவேண்டும். நம் வாழ்வை வினை இல்லாத தன்மைக்கு அமைத்து கொள்ள வேண்டும். 



மேலும் அறிய .....

வியாழன், 22 மார்ச், 2012

மரணம் - ஆகாமிய கர்மம் என்ன தொடர்பு?



மரணம் எப்படி இருக்கும்?! மயக்கம்-தூக்கம்-மரணம் என மூன்று
நிலை உள்ளது. மயக்கம் என்பது நம் உணர்வு பிசகும் நிலை. உயிர்
நிலை கொள்ளாமல் தடுமாறுவதே மயக்கம். மிகக்குறுகிய காலம் உணர்வு
இல்லாமல் போவது.

தூக்கம் - நம் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கும் நேரம். உயிர் நிலை
கொள்ளும் நேரம், ஒடுங்கும் நேரம். நாடு உடலில் ஒடுங்கும். மிக குறைந்த
அளவில் உணர்வு இருக்கும்.

மரணம் என்பது உயிர் உடலில் இருக்க முடியாமல் உடலை விட்டு
வெளியேறுதல்.

மரணம் நம் கையில்!? தடுக்கலாம்!?

மரணம் வர காரணமான ஆகாமிய கர்மம் பாதிக்காத தன்மை பெறவேண்டும்.

உடலை விட்டு உயிர் பிரியாமல் மிக மிக கவனமாக பார்த்து கொள்ளவேண்டும்.

உடலில் உயிரை இறைவன் எங்கு பத்திரமாக வைத்திருக்கிறானோ?! அங்கேயே அதை பத்திரப்படுத்துவது தான் புத்திசாலித்தனம்!

அங்கே இருக்கச்செய்து விட்டால் அது தான் ஞான சாதனை! தவம்!!

பிறந்தது இறப்பதற்கல்ல! இறப்பை வெல்வதற்கு! அதுவே ஞானம்.

இதை உரைத்ததுவே சனாதானதர்மம். எல்லா மனிதர்களும் மரணம் வராமல்
தடுக்க பாடுபட வேண்டும்.

"தூங்கி விழிக்க மறந்தவன்" என இறந்தவனை வள்ளலார் குறிப்பிடுகின்றார்.

இன்றைய உலகில் மனிதன் சாப்பாடு  சாப்பாடு என அலைகிறான்.

சாப்பிடதான் வாழ்கிறான் அதற்குதான் உழைக்கிறான் பணம் சேர்க்கிறான்.

ஒவ்வொரு மனிதனும் தெரிந்தோ தெரியாமலோ சாப்பாட்டுக்காகவே வாழ்கிறான்! பிறப்பதே சாப்பாட்டுக்காகத்தான்!

சாப்பாடு அல்ல! சாவுக்கான பாடு சா- பாடு!? சாவதற்காக படாத பாடுபடுகிறான்.  எப்படியோ சாகிறான்!

சாககூடாது என்பதே சித்தர்கள் உபதேசம்!
சாகாதவனே சன்மார்க்கி!




சனாதன  தர்மம்
ஞான சற்குரு சிவசெல்வராஜ் 




1  வினை கழிந்து தன்னை உணர!!


யார் குரு?


3 தானம் தவம் (ஞான தானம்)






Popular Posts