சனி, 16 டிசம்பர், 2023

இல்லறம்

  "இல்லறம்" என்றால், இல் - அறம் என்பது இல்லாகிய வீட்டில் அறநெறியோடு வாழ்வதை குறிப்பது ஒன்று! மற்றொன்று இல் என்றால் வீடுபேறு! வீடு என்பது நாம் குடியிருக்கின்ற வீடு என்பது உலக விளக்கம்.

 ஆன்மீக விளக்கம் என்னவென்றால், நம் ஆன்மா குடியிருக்கும் வீடு - நம் உடல். நம் உடலாகிய இல்லத்தில் ஆன்மாவாக விளங்கும் இறைவனை, நல்நெறிநின்று வாழ்ந்து சாதனைகள் புரிந்து நிரந்தரமாக தங்க வைக்க வேண்டும். அதாவது இறைவன் குடிகொண்ட கோயிலாக நம் உடல் விளங்க வேண்டும். 

அதற்குரிய அறநெறிப்படி வாழவேண்டும். அதுவே உயர்ந்த இல்லறம்!

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்" என்ற திருமந்திரம் இதை விளக்கும். இந்த இல்லறம் தான் ஒவ்வொருவரும் கண்டிப்பாக கைக்கொண்டேயாக வேண்டும்.


gnana sarguru 

www.vallalyaar.com


ஞாயிறு, 10 டிசம்பர், 2023

Telegu Thiruvadi Message


అరుట్ పెరుంజోతి             అరుట్ పెరుంజోతి    

 తనిపెరుంకరుణై             అరుట్ పెరుంజోతి





కుడి కన్ను  
సూర్యుడు 
శివమ్ 
అ 
8
చక్రం 


ఎడమ కన్ను 
చంద్రుడు 
శక్తి 
ఉ 
2
శంఖు 


అన్ని జీవజంతువులు పరమసుఖం తో  జీవించుగాక

దైవం ఒక్కడే

శరీరం లో పవిత్రుడైన పరమాత్మ ఒక ఆలయం వలె నివశించెను

- తిరుమందిరం చెప్తారు


అంతటా వ్యాపించి ఉన్న, అత్యంత శక్తివంతమైన భగవంతుడు మన శిరస్సు మధ్యలో జ్ఞానేంద్రియాల కేంద్ర బిందువు వద్ద  ఆత్మజ్యోతి వలె నివసిస్తున్నాడు. అక్కడ నుండి అతను రెండు నాడుల ద్వారా రెండు నేత్రములవలే ప్రకాశిస్తూ ఉంటాడు . ఇది దైవ రహస్యం. ఇదే వేదాల యొక్క వివేకము. మన రెండు నేత్రములు భగవంతుని యొక్క రెండు దైవ పాదములు. 


జ్ఞానానికి అర్హత గల గురువు ద్వారా మన జీవితపు కాంతిని అనుభవించాలి . ధ్యానం కండ్లు తెరిచి చేయవలెను. కండ్లలో దైవిక కాంతిపై దృష్టి ఉంచి, కన్నీళ్ళు  రాలుతాయి. ఒకరు దైవిక కాంతి మరియు దయ తమరిలోపల నుండి అనుభూతి పొందవచ్చు. మనం దైవానుగ్రహం గురించి ఆలోచిస్తూ  కృతజ్ఞతతో  కన్నీళ్లు పెట్టుకుంటాం. పూర్వ జన్మ నుండి వచ్చే కర్మ ఖాతా తుడిచివేయబడుతుంది మరియు మనలోని ఉన్న దేవుని ద్యోతకాన్ని చూడగలుగుతాం.  ఇది మన జీవితం యొక్క ఉద్దేశ్యం. ఇది జీవ కారుణ్యం యొక్క సారాంశం. సన్మార్గం. మీ ఆత్మ వైపు సానుభూతి చూడుము. ఇది శుభకర మార్గం. ఇది దేవుని ఆరాధన, తిరువరుత్ ప్రకాశ వళ్ళలార్  చెప్పినారు. 


ధ్యానం, తపస్సు అనగా మన కండ్లను మూసుకొనుట కాదు. దాని అర్థం ఏమనగా మన కళ్ళలో జీవం యొక్క మెరుపును జ్ఞానానికి అర్హత గల గురువు ద్వారా గ్రహించాలి. ఆపై మన కళ్ళతో తేజస్సు యొక్క ప్రకాశాన్ని మెరుగుపరచాలి(మన కళ్ళతో ఆత్మజ్యోతి  యొక్క ప్రకాశాన్ని మెరుగుపరచాలి). ఆ మెరుగు పరచడం నిజమైన ధ్యానం మరియు తపస్సు. బయట దేవుడిని వెతకడాన్ని భక్తి అంటారు. బాహ్య ఆరాధన -అది ప్రారంభ పద్ధతి.  శరీరం లోపల ఉన్న దేవుణ్ణి వెతకడం -ఇది వివేకం - అంతర్గత ఆరాధన ముక్తి . 


జ్ఞానులు, ఋషులు, సిద్ధజ్ఞానులు అందరూ మన దృష్టితో భగవంతుని సాక్షాత్కారానికి మార్గం మన కండ్ల ద్వారా చూపారు. నిన్నటి వరకు ఏమి అయినదో దాన్ని పట్టించుకోనక్కరలేదు. ఈ రోజు నుండి ఏ విధమైన చెడు అలవాట్ల జోలికి పోరాదు . ఏ జీవరాసులను  హతమార్చరాదు. మాంసాహార భోజనాన్ని భుజించరాదు.  భక్తి కలిగి ఉండండి, వినయం కలిగి ఉండండి. తగిన గురువు ద్వారా తిరువడి ఉపదేశ దీక్షను స్వీకరించి, తపస్సు చేసి భగవంతుడిని పొందవచ్చు. ఇది ప్రతి ఒక్కరికి సందేశం.


ఎల్లప్పుడూ మీ నిజమైన,

జ్ఞాన సత్ గురు శివ సెల్వరాజ్

కన్యాకుమారి


செவ்வாய், 28 நவம்பர், 2023

🔥அம்மையப்பனை காண வேண்டாமா ?🔥



நூல் : சநாதனதர்மம் 30

🔥அம்மையப்பனை காண வேண்டாமா ?🔥

நாம் எல்லோரும் - உலகமக்களாகிய 700 கோடி மக்களாகிய நாம் அனைவரும் அந்த ஒரே அம்மையப்பனின் பிள்ளைகளே !

அப்படியாயின் உலகமக்களாகிய நாம், 700 கோடி பேர்களும் சகோதரசகோதரிகள் தானே !?

பேரொளியாகிய அருட்பெருஞ்ஜோதியாகிய நம் அம்மையப்பனாகிய அந்த இறைவன்தான் சின்ன ஒளியாக நம் அனைவரின் கண்மணியிலும் ஒளிர்கிறார் !? எவ்வித வித்தியாசமுமின்றியே.

நம் அம்மையப்பனை நாம் காண வேண்டாமா ? உணர வேண்டாமா ?!

எல்லாம் வல்ல இறைவன், எங்கும் நிறைந்த இறைவன், அணுவுக்குள்ளும் அணுவாக இருப்பவன் நம் உடலில் இல்லாமலிருப்பானா ?

நம் உடலில் கண்ணில் மணியாக ஒளியாக இருக்கிறான். இந்த உலகிலுள்ள எல்லா ஞானிகளும் இதைத்தான் கூறியிருக்கிறார்கள்.

கண்தான் வெட்டாத சக்கரம் !
கண்தான் பேசாதமந்திரம் !
கண்தான் வேறொருவர்க்கும் எட்டாத புஷ்பம் !
கண்தான் கட்டாத லிங்கம் !

சிவலிங்கத்தை மேலிருந்து பார்த்தால் 3 வட்டம்தானே தெரிகிறது. 
கண் அதுபோலத்தானே உள்ளது.

கண்தான் கரும்பு -கரும் - பூ !

உலகில் எவ்வளவோ கலர்களில் பூக்கள் இருக்கின்றனவே, 
கருப்பு பூ உண்டா ? கண்தான் கருப்பு பூ !

அண்டம்போல் அழகியது கண் !

அண்டம் என்றால் உலகம் - பூமி நாமிருக்கும் பூமி உருண்டையாக 
இருப்பது போலவே நம் கண்மணி உள்ளது !

பூமி தன்னைத் தானே சுற்றுவதுபோல கண்மணியும் சுற்றுகிறது !

பூமி சுழல்வதற்கு ஆதாரம் அதன் உள் மத்தியில் கனன்று கொண்டிருக்கும் நெருப்புதான்.

கண்மணியும் அதன் மத்தியில் உள்ள, ஊசிமுனை துவாரத்தினுள் உள்ள சிறு ஜோதியால்தான் சுழல்கிறது !

பூமி எப்படி அந்தரத்தில் உள்ளதோ அதுபோலவே கண்மணியும் கண்ணின் கரு விழிக்குள் பிராண நீரில் மிதந்து கொண்டுதான் இருக்கிறது !


" பிராண நீரானதில் உருண்டு திரண்டதை கண்டு அறிந்திடு நீ "

என சித்தர் உரைத்தது கண்மணியைத்தான் !


" காளத்தியான் அவன் என் கண்ணில் உள்ளான் காண்"

என திருநாவுக்கரசர் உரைத்ததை உணர்வீர்.

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

வள்ளல்பெருமான் திருவடி போற்றி !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

செவ்வாய், 14 நவம்பர், 2023

சமரச சன்மார்க்கம் "வாழ்வாங்கு வாழலாம்"

 ஆன்மநேய ஒருமைப்பாடுடையிர்,

வந்தனம்! எண்ணிலடங்கா ஞானிகள் தோன்றிய இந்திய புண்ணிய பூமியில் பிறந்த நீவிர் தமிழ்நாட்டில் பிறந்த நீவிர் மனித உருவில் பிறந்த நீவிர் நிச்சயம் புண்ணிய ஆத்மா தான்! அதிலும் எக்குறையுமின்றி, மானிடராக பிறந்த தீவிர் பிறந்த பலனை அடைய வேண்டாமா?

ஏன் பிறந்தோம்? எதனால் வாழ்கிறோம்? எப்படி வாழவேண்டும்? எங்கிருந்து வந்தோம்? நமது பிறப்புக்கு முன்னால் நம் பெற்றோர்,  அவர்கள் பெற்றோர்கள் பிறந்தார்கள் பெற்றார்கள் வாழ்ந்தார்கள் வீழ்ந்தார்கள்? நாம் பிறப்பதற்கு முன்பும் உலகம் இருந்தது நம் அப்பா, தாத்தா மற்றும் மூதாதையர்கள் வாழ்ந்தாரே?!

நாம் இறந்த பின்பும் நம் மகன் நம் பேரன் நம் மகளின் போனும் வாழத்தான் போகிறார்கள்! இப்படியே போகின்ற வாழ்க்கை ஓட்டத்தில் நாம் இருப்பது பூரண ஆயுள் என்றால் 120 வருடந்தான்?! ஆனால், இன்றைய உலகில் விஞ்ஞான வளர்ச்சியால் மனிதன் கூடாத பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி, மாமிச உணவு உண்டு கிட்டத்தட்ட மிருகமாகவே வாழ்கிறான்!? இப்படிப்பட்ட மாக்களின் வாழ்வு அற்ப ஆயுளே! 70 வயதை தாண்டுப்பர் அரிதிலும் அரிதே!

"பாவிகளே மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமிபத்திலிருக்கிறது" இது பைபிள் வாசகம். இவ்வாசகமே இந்து மத வேதங்களும் கூறும் உண்மை!? மனிதன் பிறப்பது பூர்வஜென்ம பாவ புண்ணிய கர்ம வினைப்படிதான் என்பதே உண்மை! சத்தியம்! வேதவாக்கு! பாவ புண்ணிய வினைப்படி பிறந்த மனிதன் பாவி தான் பைபிள் கூறுவதும் உண்மை தான்! எல்லா ஞானிகளும் கூறும் உண்மை இதுவே!

கர்மவினை ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறது. அவரர் வினைக்கேற்ப அவரவர் பிறப்பும் வாழ்வும் அமைகிறது?!  யாருடைய கர்மமும் யாருக்கும் வராது! அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்! முந்தின பிறவிகளில் பட்ட கடன் வசூலிக்கவே இந்த பிறவியிலே பிள்ளையாக சொந்த பந்தங்களாக வந்து சேர்கிறார்கள்!? கடன் வசூல் ஆனதும் விட்டு நீங்கி விடுகிறார்கள். அப்பனுக்கும் பிள்ளைக்கும் சம்பந்தம்  இல்லை!  இதுதான் வாழ்வு! இதுவே விதிக்கப்பட்ட கர்மம்! சுருக்கமாக "விதி" என்றார் ஆன்றோர்! 

இறைவன் அருளால் தான் நாம் பிறந்தோம்! இறைவன் தான் உலக மக்கள்  அனைவருக்கும் அம்மா  அப்பா அம்மையப்பன் ஆவர்! நமக்கு உடல் கொடுத்தது நம் தாய்  தந்தை பூர்வ ஜென்ம பந்தப்படி!  உயிர் கொடுத்தது இறைவன்! கருணையே வடிவான கடவுள் நாம் உய்வடைய நமக்கு கொடுத்த ஒரு வாய்ப்பு இம்மானுட பிறவி! இப்பிறவியிலேயாவது இவன் உருப்படுகிறானா என்று நம்மை பிறப்பித்தான்!? அம்மையப்பன்! 

கர்ம வினையால், உலக மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம்  தான்! உடலால் ஆண் பெண் என இரண்டாக பிரித்த இறைவன், உயிராக ஒன்றாகவே உள்ளான்! உலகமக்கள் அனைவரும், ஆத்மாக்கள் அனைவரும் எல்லாம் வல்ல அந்த இறைவனின், பரமாத்மாவின் அம்சமே!

கர்மாவால் வித்தியாசப்பட்ட மக்கள் அனைவரின் - ஆத்மாவும் - உயிரும் -ஜீவனும்  ஒன்றே! வித்தியாசம் கர்மாவால் நமக்குள்ளே தான்! இறைவன் ஒருவரே! பரமாத்மா! அவரே ஜீவாத்மாவாக எல்லா உயிராகவும் துலங்குகிறார்! 

உலகமாந்தரே  வினைகளால் வேறுபட்ட நாம் ஆத்மாவால் ஒன்றானவர்கள் என்று உணரவேண்டாமா? ஒன்றான  நம் ஜீவனை உணர தடையான நம் பாவ வினைகளை அகற்ற பாடுபட வேண்டாமா?! உலகில் ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லித்தர  ஒவ்வொருவருக்கும் ஒருவர்  தேவையல்லவா? நாம் பிறந்ததில் இருந்து அம்மா அப்பா உற்றார் சுற்றம் இப்படி பலரும் சொல்லித்தானே பேசாமல் எதுவும் தெரியாமல், புரியாமல் பச்சை மண்ணான நாம் வளர்ந்தோம்?! வாழ்கிறோம்?  'அழ மட்டுமே தெரிந்த குழந்தையாக பிறந்த நாம், அழுது அழுது தான் ஞானக் குழந்தையாக வேண்டும்" என நம்மை எவ்வளவு  அற்புதமாக  படைத்திருக்கிறார் கடவுள் பாருங்கள்?!

நமக்கு உயிர் தந்த இறைவனை, நம் உயிராகவே இருக்கும் இறைவனை, நாம் அறிய வேண்டாமா? உணர வேண்டாமா? நம் பிறப்பின் நோக்கமே இது தானே!? நாம் பிறந்தது இனி பிறவாதிருக்கவே! பிறந்த இப்பிறப்பில் தானே இறவாதிருப்பதே! மரணமிலாது வாழ்வதே! என்றும் இருப்பதே! சிரஞ்சீவியாவதே! எல்லோரும் ஒப்புக்கொண்ட ஒரே இறைவன் பேரொளியானவர் தானே! அந்த பேரொளியான பரமாத்மாதான் நம் ஆத்மாவாக, சிற்றொளியாக, நம் உயிராக நமக்குள் துலங்குகிறார்! உண்மைதானே!

எங்கும் நிறைந்த இறைவன், ஒவ்வொரு அணுவுக்குள்ளும் ஒளிரும் இறைவன், நம் உடலில் தலையில், உள்ளே மத்தியில் நம் உயிராக ஒளியாகி மிளிர்கிறார்!? இதுவே வேதங்கள் எல்லாம் கூறும் உண்மை!! சிரநடு உள் ஒளிரும் அந்த இறைவன் நம் இருகண்களிலும் வெளிப்பட்டு அருள்கிறார்! “கண்ணே சரீரத்தின் விளக்கு" இது பைபிள் கூறுவது! "மனித தேகத்தில் கண்ணில் புகையில்லாத ஜோதியாக துலங்குகிறான் இறைவன்" இது கடோபநிஷத்து கூறும் இரகசியம்!

எல்லோரும் மறைத்து வைத்த இந்த இரகசியங்களை, சத்தியத்தை திருவருட்பிரகாச வள்ளல் அருளால் எல்லோரும் அறிய யான் உரைக்கின்றேன்! எல்லோரும் ஞானம் பெறட்டுமே! எல்லோரும் பிறந்த பலனை அடையட்டுமே! எல்லோரும் இறைவனடி சேரட்டுமே! என்ற உயர்ந்த நோக்கமே வள்ளலாரின் இலட்சியம்! "வம்மின் உலகியலீர் மரணமிலா பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்" என உலக மக்கள் அனைவரையும் கூவி அழைக்கிறார்!.

எந்த விஷயத்தையும் சொல்லித் தர ஒரு ஆள் வேண்டும் என்ற போது, இந்த ஒப்பற்ற ஞானத்தை சொல்லித் தர ஒரு ஆள் வேண்டாமோ?! இந்த ஞானத்தை,  நாம் யார் என அறியும்

அறிவை போதிக்க நமக்கு அவசியம் ஒருவர் வேண்டும் அவரே "குரு"! உலக மக்கள் ஞானம் பெற உலகில் நான்கு வேதங்கள், பைபிள், குர்ஆன், திருமந்திரம், திருவருட்பா என எண்ணிலடங்கா ஞான நூற்கள் உள்ளன! எல்லா நூற்களும் ஒரே இறைவனை, பேரொளியை அடையவே வழிகாட்டுகின்றன

சொல்லித்தர ஒரு குரு இருந்துவிட்டால் கேட்க  நாம் தயார்தானே! அறியாமல் இருக்கும் நமக்கு அறிவிக்க வருபவர் தானே ஞானகுரு! அறியாமை இருளை அகற்றி நம்முள் ஞான ஒளியேற்றுபவரே ஞானசற்குரு! வாருங்கள்! கன்னியாகுமரி தங்க ஜோதி ஞான சபைக்கு!

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளால், ஆயிரம் பேர்களுக்கு சாப்பாடு கொடுப்பதை விட ஒரு ஆத்மா கடைத்தேற வழிகாட்டுவதே உன்னதமான சேவை என்பதை உணர்ந்ததால் அடியேன் ஞானதானம் செய்து வருகிறேன்! வயிற்றுப்பசிக்கு உணவு கொடுப்பதைவிட, கோடி பங்கு மேலானது ஆன்ம பசிக்கு உணவு கொடுப்பதே!! உலகத்திலேயே மிக மிக உயர்ந்த, உன்னதமான சேவை ஒவ்வொருவரையும் தன்னை உணரச்செய்ய வழிகாட்டுவதே! அடியேன் செய்கிறேன்!

வள்ளலார் உரைத்த "சமரசம்", ஜாதி மதம் இனம் மொழி எதுவும் இல்லாது உலக மக்கள் அனைவரும், "நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே" என ஒன்றுபடுவதே! வள்ளலார் உரைத்த "சன்மார்க்கம்”, எவ்வித பேதமுமின்றி, எல்லோரையும் அரவணைத்து எல்லோரையும் ஏற்றுக்கொண்டு இறைவனை அருட்பெருட்ஜோதியை அடைய முயலுவதேயாகும்! "முயற்சி திருவினையாக்கும்"!

5 நான்கு வேதம் புகல்வது சமரச சன்மார்க்கம்! பைபிள் கூறுவதும் சமரச சன்மார்க்கம்! குர்ஆன் உரைப்பதும் சமரச சன்மார்க்கம்! திருமந்திரம் திருவாசகம் திருவருட்பாவும் இதுவே! "எல்லோரும் கூறுவது எல்லோரும் வாழவே!


ஆன்மீகச் செம்மல் ஞானசற்குரு சிவசெல்வராஜ் 

கன்னியாகுமரி தங்க ஜோதி ஞானசபை

வியாழன், 9 நவம்பர், 2023

இறைவனோடு ஒன்றுவது எவ்வாறு?


‐----------------------------------------------------------------

இறைவனோடு ஒன்றுவது எவ்வாறு?

‐----------------------------------------------------------------


இறைவன் திருவடியாகிய தன் கண்களை எண்ணி ஞான தவம்
செய்வோருக்கு தித்திக்கும் சுவைமிகு இனிக்கும் கரும்பு போன்றவர் இறைவன்!

இறைவனை, கண்மணி மத்தியிலே, நம் மனதை ஊன்றி உணர்ந்து, நெகிழ்ந்து உருகுவார், ஞானதவம் செய்வாருக்கு எல்லா இன்பமும் தருவார் கடவுள் ! அவர் உறையும் இடம் கண்மணி மத்தி உச்சியேயாகும்!

கண்மணி உச்சியான ஊசிமுனை துவாரத்தைப் பற்றி, இரு கண்ணும் ஒன்றும் படி விடாது தொடர்ந்து ஞானதவம் செய்பவர் ஒன்றலாம் இறையோடு!


ஞானசற்குரு திரு சிவ.செல்வராஜ் அய்யா திருவடிகளே சரணம் சரணம்!
புத்தகம்: மூவர் உணர்ந்த முக்கண்
பக்கம்: 57

செவ்வாய், 31 அக்டோபர், 2023

தனிஒருவன் மாறனும் ! - சநாதனதர்மம்

நூல் : சநாதனதர்மம் 20

🔥 தனிஒருவன் மாறனும் ! 🔥

 அறியாமையில் உழலும் மக்களை மிருக நிலையில் வாழும் மக்களை திருத்தி மனிதனாக வாழ வைப்பதே ஞானிகளின் ஒரே செயல். அதற்கு அவர்கள் குருவை பற்றிக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.

நல்வழி காட்டும் நல்ல ஒரு குரு தேவை.
நன்னெறி நடத்தும் வல்ல ஒரு குரு தேவை.
ஞான குரு வேண்டும் !
இறைவனை உணர்த்தும் குரு வேண்டும் !

எவன் ஒருவன் பேதம் பார்க்கிறானோ
அவன் இறைவனை அடைய முடியாது !
எவன் ஒருவன் தீயபழக்கம் உடையவனோ
அவன் இறைவனை அடைய முடியாது !

எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணுபவன் எவனோ எல்லாவுயிரும் இன்புற்றிருக்க 
எண்ணுபவன் எவனோ எல்லாவுயிரிடத்தும் அன்பு காட்டுபவன் எவனோ 
அவனே இறைவனை அடைவான் !

அவனே ஞானவான் !

அரபியில் சொன்னாலும், ஹீப்ரூவில் சொன்னாலும், சமஸ்கிருதத்தில் சொன்னாலும் தமிழில் சொன்னாலும் எல்லோராலும் சொல்லப்பட்டது - இறைவனைப் பற்றி மட்டுமே !

மொழியை பார்க்காதீர்கள் !
உபதேச மொழியை பாருங்கள் !?

இனத்தை நாட்டை பார்க்காதீர்கள் !
மனித இனம்தான் என உணருங்கள் !?

ஒவ்வொருவரும், நான் மனிதன் ! உலகிலுள்ள அனைவரும் என் 
சகோதர சகோதரிகள் என என்றைக்கு உணருகிறார்களோ அன்றுதான் உலகம் சுபிட்சமடையும் !

மதத்தை பரப்ப நினைக்காதீர்கள் !
மதம் எனும் ஆணவம் கொண்டு அலையாதீர்கள் மனிதனாக பாருங்கள் !

மனிதகுலம் தழைக்க பாடுபடுங்கள் !
எல்லோரிடமும் அன்பாக இருங்கள்.

🔥 இதெல்லாம் வர வேண்டுமானால் அதற்கு ஒவ்வொரு வரும் தன்னை 
உணர்வதுதான் ஒரே வழி ! இறைவனை உணர்வதுதான் !🔥

தனி ஒருவன் மாறினாலே, சமுதாயம் மாறும் !
திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

தனிமனிதன் மாறவே தவஞானிகள் அருள்புரிகிறார்கள். காப்பாற்றுகிறார்கள்.

நான் நல்லவனாக இருக்க வேண்டும் !
என எல்லோரும் எண்ண வேண்டுமே !? இதற்கெல்லாம் தான் குரு வேண்டும்!

உலகுக்கே ஆதி குரு முதல் குரு "ஸ்ரீ தட்சிணாமூர்த்தி"தான் !
இதுவே உண்மை !

அதன்பின் தந்தைக்கே உபதேசித்தான் தனயன் !? ஆறுமுகங் கொண்டவன் !

அகத்தியருக்கும் உபதேசித்தான் !

அருணகிரிக்கும் உபதேசித்தான் ! அழகனே !

இந்த வழிவந்த, வாழையடி வாழையென வந்தவர்தான் 
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

வெள்ளி, 27 அக்டோபர், 2023



நூல் : சநாதனதர்மம் 19

🔥 இப்பிறவி ஆண்டவனை அடையவே! 🔥

இராமலிங்க சுவாமிகளை சத்குருவாக கொண்டுதான் அடியேன் வாழ்கிறேன்.


இராமலிங்க சுவாமிகள் உரைத்த திருவடி ஞானத்தைத் தான் எங்குரு ஜோதி இராமசாமி தேசிகர் எமக்கு உபதேசித்தார், தீட்சை வழங்கினார்.
 
கடந்த இருபத்தைந்து ஆண்டாக சாதனைகள் செய்து, இராலிங்க சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்டு கண்ணியனானேன் !
 
எமக்கு இராமலிங்க சுவாமிகளை சுட்டிக்காட்டி, உணர்த்திய ஞானசித்தர் திருச்சி ஜோதி இராமசாமி தேசிகர் அவர்கள் சமாதி கொள்ளுமுன் அடியேனை அழைத்து குரு பீடத்தை அளித்தார்கள்.
 
அடியேனை பக்குவபடுத்தி, முதல் 12 ஆண்டு முடிவில் " கண்மணி மாலை " எழுதி வெளியிட வைத்தார்கள் !
 
அடுத்த 12-வது ஆண்டிற்குள் என்னை குருபீடத்தில் இருத்தி விட்டார் வள்ளலார்."குச்சண்டி - குச்சண்டி" என்று பாபாவும் அருள்வாக்கு கூறினார்.

 பாலாவின் கோயிலிலேயே அடியேனை குருவாக அமர வைத்தனர்."வலிந்து என்னை ஆட்கொண்டார் வள்ளலார்"

இப்போது 5 வருடங்களாக குருவாக அமர்ந்து எல்லா ஞானிகளும் உரைத்த திருவடி ஞானத்தை உபதேசித்து வருகிறேன், தீட்சை வழங்கி வருகிறேன் இறைவன் அருளால் !

"எல்லாம் அவன் செயல்"
"பாட்டுவித்தால் பாடுகிறேன் பணிவித்தால் பணிகிறேன்"
 "என் செயலாவது யாதொன்றுமில்லை"
 அடியேனை குருவாக இருத்தி, உள் இருந்து தீட்சை வழங்குவதும் அவர்களே !
 சென்னையிலும் நெய்வேலியிலும் பலநூறு அன்பர்கள் அடியேனிடம் தீட்சை பெற்றுள்ளனர்.
 கன்னியாகுமரிக்கு வந்து அடியேனிடம் தீட்சை பெற்றவர்களும் பலர்.
 அடியேன் செய்த புண்ணியம் ! ஞானவான்களின் அருள் கிட்டி இன்று ஞானகுருவாக இருக்கிறேன் அவர்கள் இட்ட பணியை செவ்வனே செய்கிறேன். செம்மையாக செய்ய வைப்பதும் அவர்களே !
 
உலகோரே வாருங்கள் !
உபதேசம் பெறுங்கள் !
தீட்சை பெறுதல் அவசியம் !
 
அரிதான இப்பிறவி ஆண்டவனை அடையவே !
காலந் தாழ்த்தாதீர் கண் திறக்க வாருங்கள் !

குரு யார் என தேர்ந்தெடுப்பதில் பலருக்கும் குழப்பம்.


 🔴தன் ஜாதியில் உள்ள சாமியாரை போற்றுகிறது ஒரு கூட்டம்.

 🔵தன் மதத்தில் உள்ள சாமியாரை கொண்டாடுகிறது மற்றொரு கூட்டம்.

 🔴தன் மொழி பேசும் ஒருவனை பாராட்டுகிறது இன்னொரு கூட்டம்.

 🔵சிற்சில காரியங்கள் நடந்ததை வைத்து ஏமாந்து விடுகிறது பிறிதொரு கூட்டம்.

பணத்துக்காக ஒரு கூட்டம்
புகழுக்காக ஒரு கூட்டம்
நோய்நீங்க ஒரு கூட்டம்
பொழுது போக்கவும் ஒரு கூட்டம்

இப்படியாக உலக மாந்தர்கள் அறியாமையால் அங்கங்கே சிக்கி அல்லலுறுகிறார்கள் !
 ஏமாந்தவர்களை திட்டம் போட்டு ஏமாற்றும் போலிகள்தான் ஏராளமாக இருக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும்.அறியாமையில் உழலும் மக்களை மிருக நிலையில் வாழும் மக்களை திருத்தி மனிதனாக வாழ வைப்பதே ஞானிகளின் ஒரே செயல்.

அதற்கு அவர்கள் குருவை பற்றிக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!\
வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

வெள்ளி, 13 அக்டோபர், 2023

🔥 ஆன்மநேயம் ? 🔥 சநாதனதர்மம்


நாம் செய்த முற்பிறவி பிராரத்துவ வினையால் பிறந்த நாம்,,,

இப்பிறப்பில் மேலும் மேலும் பாவஞ்செய்யாமல், நல்ல குருவை பணிந்து, திருவடி தீட்சை பெற்று இப்போது செய்கின்ற கர்மங்களை பகவான் பாதத்தில் அர்ப்பணித்து எல்லாம் நீயே என பரிபூரண சரணாகதி அடைந்து வாழ்வோமானால் ஆகாமியகர்மம் நம்மை சேராது.

இப்படி வாழ்வதுதான் வாழ்க்கை !
" கர்மாவை செய் பலனை என்னிடம் விட்டுவிடு "

என பகவத் கீதையில் கண்ணன் உரைத்ததை சிந்திக்கவும்.

" எல்லாம் அவன் செயல் "
என்பதை முழுமையாக உணர்ந்து வாழ்வதே வாழ்க்கை !

" என் செயலாவது யாதொன்றுமில்லை "
என முழுமையாக இறைவனிடம் - திருவடியில் சரணடைந்து வாழ்வதுதான் வாழ்க்கை.

" நான் யார் "
என்பதை அறிய முற்படுவதே அதற்காக பிரயர்த்தனபடுவதே வாழ்க்கை !

சமுதாயத்தில் ஒவ்வொருவரும் அவரவர் கடமையை செவ்வனே செய்ய வேண்டும். எல்லோரும் சேர்ந்ததுதான் சமுதாயம். பெரியவன் சிறியவன் எல்லாம் கிடையாது.

எல்லாதொழில் செய்பவரும் வேண்டும் !

எல்லோரும் எல்லா தொழிலையும் செய்ய முடியாது ! எல்லோரும் தத்தம் கடமையை சரிவரச் செய்தாலே நாடு சுபிட்சமடையும், மனித வாழ்க்கை மேம்படும்.

இப்போது நமக்கு கிடைத்த வாழ்க்கை எப்படிபட்டதாயினும் சரி, அதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்து சிறப்புடன், அர்ப்பணிப்பு மனபாவத்துடன் வாழ்ந்தால் ! யாரும் வாழ்வாங்கு வாழலாம் !

நமக்கு சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எதுவும் செய்துவிட முடியுமா ?

போலீஸ், கோர்ட்டு இதெல்லாம் எதற்கு ?

நம் சுதந்திரம் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். பிறரை துன்புறுத்தாத செயல்களை செய்யத்தான் நமக்கு சுதந்திரம் இருக்கிறது.

நம்மால் ஒரு சிறு உயிருக்கும் எப்போதும் எந்த துன்பமும் வராமல் வாழ்வதுதான் உன்னதமான வாழ்க்கை !

இன்றைய உலகில் எல்லோரும் மனிதநேயம் வேண்டும். மனிதநேயம் உலகம் முழுவதும் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

இந்திய ஞானிகள் என்றோ இதைவிட மேலாக உபதேசித்துள்ளனர்.


"ஒன்றேகுலம் ஒருவனே தேவன்"
"எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க"
"எவ்வுயிரும் தம்முயிர் போல் கருதுக"


இப்படி மனிதநேயத்தைவிட மிக உயர்ந்த ஆன்ம நேயத்தை போதித்தனர் !

மனிதனை மட்டும் நேசிக்க சொல்லவில்லை !
எல்லா ஜீவராசிகளையும் உன் உயிர்போல் அன்புகாட்டு என்பதே ! சிறந்தது.

உலகுக்கே இந்திய நாடு ஆன்மநேய ஒருமைப்பாட்டை வலியுறுத்துகின்றது.
இதுவே இந்தியாவின் பெருமை.

மனம் விரிந்து பரந்து இருக்க வேண்டும். எல்லா ஆத்மாவும் இறை சொரூபந்தான் என்பதை உணர வேண்டும்.

அதுதான் வாழ்க்கை.


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

புதன், 27 செப்டம்பர், 2023

சநாதனதர்மம் 🔥 வாழ்க்கை ! 🔥



மனிதர்களாகிய நாம் வாழ பிறந்தவர்கள். சந்தோஷமாக வாழ வேண்டும். நோய் நொடியின்றி நலமுடன் சிறப்புடன் வாழ வேண்டும். அதுதான் வாழ்க்கை !


ஏழையாக பிறந்தாலும், பணக்காரனாக பிறந்தாலும் எல்லோரும் எங்கும் சுகமாக வாழ சனாதன தர்மம் வழிகாட்டுகிறது.

எப்படியோ ? பிறந்து விட்டோம் !

 
பிறந்தபின் நாம் வாழ்கின்ற வாழ்வை நெறிப்படுத்தி வாழ்வாங்கு வாழ வேண்டும்.

 
நமது நாட்டில் வாழ்ந்த ஞானிகள் வாழ்க்கை வரலாறுதான் நமக்கு பாடம். நல்லதை படிக்க வேண்டும், பிடித்துக்கொள்ள வேண்டும்.
 
ஒவ்வொரு ஞானியின் நூலுமே நமக்கு ஒவ்வொரு பாடந்தான் ! பொக்கிஷந்தான்.
 
“என் வாழ்க்கையே என் செய்தி" என மிக அழகாக ஒரு ஞானி கூறியிருக்கிறார்.
 
பெரியபுராணம் 63 நாயன்மார் வரலாறை கூறும் நூல்.

 நன்றாக சிந்தித்து பாருங்கள். நமது நாட்டில் இறைவன் அடியார்கள் மொத்தம் 63 பேர்கள் தானா ?

 தூய்மையான, ஒப்பற்ற, உன்னதமான இறையடியார்கள் நம் நாட்டில் லட்சோபலட்சம் பேர்கள் !

 சேக்கிழார் ஏன் 63 பேரை மட்டும் எடுத்துக்கொண்டார் ?
 
பெரியபுராணத்தில் வரும் 63 பேரும் பற்பல ஜாதிகளில் பிறந்தவர்கள். பற்பல தொழில் செய்தவர்கள். பற்பல நிலைகளில் இருந்தவர்கள். இறைவனை அடைவதில் மட்டும் அனைவரும் ஒரே ரகம். தீவிர பக்தி அன்பு ஒழுக்கம் நெறிப்படி வாழ்ந்தார்கள்.
 
"எத்தொழிலை செய்தாலும் ஏதவஸ்தைபட்டாலும் முத்தர் மனம் இருக்கும் மோனத்தே" என்ற சித்தர் வாக்கு பரிபூரணமான முழு உண்மை.
 
இதுதான் நமக்கு பாடம் ! படிப்பினை ! நீ எந்த நிலையில் இருந்தாலும் சரி, இறைவன் உன்னை காத்தருள்வார் என பறைசாற்றுகிறது. இப்படியேதான் நம் புராணங்கள் எல்லாம்.
 
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

திங்கள், 25 செப்டம்பர், 2023

சநாதனதர்மம் - 🔥 மரணம் எப்படி இருக்கும் ?! 🔥

 நூல் : சநாதனதர்மம் 10

🔥 மரணம் எப்படி இருக்கும் ?! 🔥


மரணம் எப்படி இருக்கும் ?! 

மயக்கம் - தூக்கம் - மரணம் என மூன்றுநிலை உள்ளது. 

மயக்கம் என்பது நம் உணர்வு பிசகும் நிலை. உயிர் நிலை கொள்ளாமல் தடுமாறுவதே மயக்கம், மிகக்குறுகிய காலம் உணர்வு இல்லாமல் போவது.

தூக்கம் - நம் உடல் உறுப்புக்களுக்கு ஓய்வு கொடுக்கும் நேரம். உயிர் நிலைகொள்ளும் நேரம், ஒடுங்கும்நேரம், நடு உடலில் ஒடுங்கும். மிகக் குறைந்த அளவில் உணர்வு இருக்கும்.

மரணம் என்பது உயிர் உடலில் இருக்க முடியாமல் உடலை விட்டு வெளியேறுதல்.

மரணம் நம் கையில் !? தடுக்கலாம் !?

மரணம் வர காரணமான ஆகாமிய கர்மம் பாதிக்காத தன்மை பெறவேண்டும். உடலை விட்டு உயிர் பிரியாமல் மிக மிக கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

உடலில் உயிரை இறைவன் எங்கு பத்திரமாக வைத்திருக்கிறானோ ?! அங்கேயே அதை பத்திரபடுத்துவது தான் புத்திசாலித்தனம் !

அது அங்கேயே இருக்கச்செய்து விட்டால் அதுதான் ஞான சாதனை ! தவம் !

பிறந்தது இறப்பதற்கல்ல ! 

இறப்பை வெல்வதற்கு ! அதுவே ஞானம்.

இதை உரைத்ததுவே சனாதனதர்மம். எல்லா மனிதர்களும் மரணம் வராமல் தடுக்க பாடுபட வேண்டும். 

"தூங்கி விழிக்க மறந்தவன்" என இறந்தவனை வள்ளலார் குறிப்பிடுகின்றார்.

இன்றைய உலகில் மனிதன் சாப்பாடு சாப்பாடு என அலைகிறான்.

சாப்பிடத்தான் வாழ்கிறான் அதற்குத்தான் உழைக்கிறான் பணம் சேர்க்கிறான். 

ஒவ்வொரு மனிதனும் தெரிந்தோ தெரியாமலோ சாப்பாட்டுக்காகவே வாழ்கிறான் ! 

பிறந்ததே சாப்பாடுக்காகத் தான்!

சாப்பாடு அல்ல !

சாவுக்கான பாடு சா-பாடு !?

சாவதற்காக படாத பாடுபடுகிறான்.

எப்படியோ சாகிறான் !

சாகக்கூடாது என்பதே சித்தர்கள் உபதேசம் ! 

சாகாதவனே சன்மார்க்கி !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !! 

வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி !! 

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

அவன் துயரறு சுடரடி தொழுது எழு

          உயர்வற உயர்நலம் உடையவன் யவன்? அவன்

         மயர்வற மதிநலம் அருளினன் யவன்? அவன்

         அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்?அவன்

         துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே.

            -ஸ்ரீ நம்மாழ்வார் 


என்மனமே எம்பெருமானைக் காட்டிலும் உயர்ந்த கல்யாண குணங்கள் எவரிடமும் 

கிடையாது? தன்னை நிந்திப்பவர்களுக்கும் சரணடைந்தவர்களுக்கும் அருள் புரியும் 

உயர் நலம் கொண்டவன்! என்னிடமிருந்த மந்த புத்தியை அகற்றி சிந்தைக்கு விருந்தாகும்

ஞானத்தையும் பக்தியையும் அருளியவனும் அவன்தான்! நமது துயரங்களை போக்கி பரம பதம் 

கிட்ட செய்யும் பிரகாசமான ஒளி பொருந்திய அவனது திருவடிகளை தொழுது பிறவி 

கடலில் இருந்து கரை ஏறுவாயாக ! கண்ணன் கழலடி தான்   திருவடிதான் நம்கண்கள்! 

பற்றுங்கள்! நம்மை பற்றி இருக்கும் மும்மலப்பற்று கழன்று விடும்! பரிசுத்தனாகலாம்! 

கண்ணனை சரணடையுங்கள் கடைத்தேறலாம்! காத்தருளவான்!  


Gnana Sarguru 

www.vallalyaar.com






செவ்வாய், 5 செப்டம்பர், 2023

🔥 பிறவிக்கு வித்து எது ? 🔥 நூல் : சநாதனதர்மம்

நூல் : சநாதனதர்மம் 4

🔥 பிறவிக்கு வித்து எது ? 🔥

அங்கமதில் முதல்முதலாய் தோன்றிய தலம் எது ? அதை சொல்லி, அதில் உயிர் இருக்கும் தன்மையை சொல்பவனே உண்மையான குரு என அகஸ்தியர் கூறுகிறார்.

தாயின் கருப்பையிலே முதன்முதலாக உருவாவது கண். தந்தையின் சுக்கிலமும் தாயின் சுரோணிதமும் சேரும்போது முதலில் உருவாவது ஒரு கண்.

அது இரண்டாகி இரு கண்களாகிறது. சுக்கில சுரோணித ஒளியே இருகண்களில் துலங்கி, அந்த ஒளியே வெதுப்பி வெதுப்பி பிண்டம் வளருகிறது.
பிண்ட உற்பத்தி ஓரளவு வளர்ச்சியடைந்த பின்னரே,
உயிர் வினையால் மூடப்பட்டு இறைவனால் உடலில் சேருகிறது.

பிறப்பின் இரகசியம் இதுவே !?
உடல் வளர்ந்து உயிர் சேர்ந்த பின்னரே மனிதன் பிறக்கிறான் வினைகளுக்கு தகுந்தபடி !
பிறவிக்கு வித்து கர்மவினைகளே !
கர்ம வினைகள் இருக்கின்றவரை பிறவி உண்டு !
பிறப்பு நிகழக் கூடாதென்றால் கர்மவினை இருக்கக்கூடாது !

வினையால் உயிர் பிறக்கிறது !
பிறப்பறுக்க வந்ததுவே இம்மானிட பிறவி !
ஏன் பிறந்தோம் ? இனி பிறவாமல் இருக்க !

பிறப்புக்கு காரணமான வினைகளை தெரிந்து அதை இல்லாமலாக் குவதே சாதனை !

வினைகளை அழிக்க வேண்டுமாயின், அதை கொடுத்த உயிரான அந்த இறைவனை சரண் அடைவதைத்தவிர வேறு வழிகிடையாது !?

எல்லாம்வல்ல, எங்கும் நிறைந்த சர்வமுமான அந்த இறைவனே ஊசிமுனை அளவு நெருப்பாக - ஜோதியாக - நம் உடலில் கண்களில் உயிராக துலங்கு கின்றான் !

ஞானிகள் உரைத்த சத்திய வார்த்தை இது !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
வள்ளல்பெருமான் மலரடிகள் போற்றி !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலர்

மந்திர மணி மாலை

"ஆயத்துள் நின்ற அறுசமயங்களுங்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலர்
மாயக் குழியில் விழுவர் மனைமக்கள்
பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே"
பாடல் - 1530 (pg-121)


வெறும் சடங்கு சம்பிரதாயங்களைக் கூறும் ஆயக்கட்டுகளான
அறு சமய நூற்கள் உலக மக்களுக்கு பிரயோஜனமில்லை! 
நேரம் போகாதவர்கள் பேசலாம் படிக்கலாம்!
இது போன்று இன்றைக்கு உருப்படாத சாமியார்கள்
பலர் உள்ளனர்! கேடு கெட்ட ஆசிரமங்கள் பல உள்ளன! கஷ்டம்!

காயமாகிய உடலில் நம் உயிராக இருப்பது அந்த இறைவன். பேரொளிதான் நம் கண் வழி தவம் செய்து காண முடியும் என்பதை அறியாதவர்கள் அவர்கள்!

கண்ணிருந்தும் குருடர்களே! அப்படிப்பட்ட அறிவிலிகள் மாயை எனும் மும்மல சகதியில் வீழ்வர்! வினையால் அலை கழிக்கப்படுவர்!வீடுவாசல் மனைவி மக்கள் என்று பாசம் வைத்து நாசம் அடைவர்!

அறியாமையில் ஊழலும் அவர் பதைபதைப்புடன் பரிதவிப்புடன் தான் வாழ்வர் நிம்மதி என்பதே இருக்காது!

உண்மை ஞானம் அறியாத வரைக்கும் சன்மார்க்க நெறி நடக்காத வரைக்கும் துன்பமே சோகமே அவர் வாழ்க்கை!

www.vallalyaar.com

🔥 ஞானிகள் கண்டறிந்த உண்மை ?🔥



நூல் : சநாதனதர்மம் 3

🔥 ஞானிகள் கண்டறிந்த உண்மை ?🔥

இந்த உலகில் பிறக்கும் நாம் அனைவரும் மனிதன் என்ற நிலையில் ஒரு குலம்.
ஆனால் 700 கோடி மக்கள் உள்ள இந்த உலகில் குணத்தால் 700 கோடி விதமாக இருக்கிறோம்.
உடல் ஒரே மாதிரிதான் !
உயிர் எல்லோருக்கும் ஒன்றுதான் !

பின் ஏன் இந்த வேறுபாடு ? எதனால் ? எப்படி ?
இதற்கு விடை இந்திய ஞானிகள் கூறுகிறார்கள்.

ஒரு மனிதன் பிறக்கிறது, அவன் இந்த பெற்றோருக்கு பிறப்பது இந்த ஊரில், இந்த சூழலில் என எல்லாம் நிர்ணயிக்கிறது ஒரு சக்தி !

ஒவ்வொருவரும் செய்த பாவ புண்ணிய வினைகளுக்கு தக்கபடி பிறவி அமைகிறது.
பிறப்பை தீர்மானிக்கின்ற அந்த மாபெரும் ஒப்பற்ற சக்தியே உயிரை கொடுக்கின்றது !
பிறப்புக்கு காரணம் கர்மவினை !
எத்தனை பிறவி எடுத்தோமோ ?
எவ்வளவு பாவ, புண்ணியம் செய்தோமோ ?

இதை அறிய, பிறப்பைப் பற்றி நாம் அறிய, பிறப்புக்கு காரணமான வினையோடு உயிரை கொடுத்த இறைவனிடம் கேட்க வேண்டும்.

வினைகளோடுதான் பிறப்பு !?
வினைக்கு தகுந்தபடிதான் பிறப்பு !
யாருமே இதற்கு விதிவிலக்கல்ல !


" வினைபோகமே ஒரு தேகங்கண்டாய்
தினை போதும் நில்லென்றால் நில்லாய்"
என ஞானிகள் அழகாக கூறியிருக்கிறார்கள்.

பிறக்கும்போது நாம் கொண்டு வருவது நாம் முற்பிறவிகளில் செய்த கர்மத்தில் ஒரு பகுதியே !


1. பிறப்பில் வரும் கர்மம் பிராப்தம் - பிராரத்துவம் என்பதாகும்.
2. பிறந்து நாம் செய்வது ஆகாமியம் !
3. பிறப்பில் வந்த பிராரத்துவம் போக மீதி இருப்பதே சஞ்சித கர்மம் !
ஆக மூன்றுவிதம்.

இந்த கர்ம வினைகளில் பிராரத்துவமே எல்லா பிறப்பிலும் எல்லோருக்கும் வருவது.

அதாவது நாம் பல பிறவிகளில் செய்த பாவம் கொஞ்சம், புண்ணியம் கொஞ்சம் இரண்டையும் சேர்த்து இறைவன் நாம் பிறக்கும்போது உயிரோடு இணைத்து, சூட்சும நிலையில் வைத்து பிறப்பிக்க வைக்கிறார்.


உயிர் பிண்டத்தில் வரும்போது தான் கர்மவினையும் கூடவே வருகிறது.
பிண்ட உற்பத்தியில் முதன் முதலாக உருவாகும் உறுப்பில்தான் உயிர் சேர்கிறது !
இதுவே ஞானிகள் கண்டறிந்த உண்மை !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
வள்ளல்பெருமான் மலரடிகள் போற்றி !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

புதன், 30 ஆகஸ்ட், 2023

🔥 பிறவி ? 🔥 நூல் : சநாதனதர்மம்



நூல் : சநாதனதர்மம் 1

🔥 பிறவி ? 🔥

மனிதனாக பிறக்கவே மாதவம் செய்திடல் வேண்டும் என்றார்கள்.
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்பது ஒளவையார் வாக்கு.
மனிதனாக பிறந்த நாம்தானே மற்றெல்லா உயிர்களையும் அடக்கி ஆள்கிறோம்.
நாம் பிறந்த தேதி மாதம் வருடம் தெரியும் எங்கிருந்து பிறந்தோம் ?
தாயின் கருப்பையில் 10 மாதம் இருந்தது தெரியுமா நமக்கு ?

பிறந்து வளர வளரத்தானே ஒவ்வொன்றாக அறிகிறோம்.
தாய் தந்தை சுற்றம் உலகம் இப்படி ஒவ்வொன்றாக அறிந்து வளருகிறோம்.
அறிவிக்கப்படுகிறது. தெரிவிக்கபடுகிறது. சூழ்நிலையாலும் மாறுபடுகிறது.
அறிவிப்பவர் அறிவுக்கு தகுந்தபடி ! புகட்டப்படுகிறது. இவையெல்லாம் எப்படி நிகழ்கிறது ?
ஆணும் பெண்ணும் சேர்ந்தால் கரு உருவாகிறது !
உருவாகும் கரு எல்லாம் உருப்பெறுவது இல்லை !

கல்யாணமாகி குழந்தையில்லை என ஏங்குவோர் கோடி கோடியாக உள்ளனரே !
ஆணும் பெண்ணும் சேர்ந்தால் பிண்ட உற்பத்தி மட்டும் தான் !
உடல் என்னும் அற்புதமான இயந்திரத்தை உருவாக்கியவன் யார் ?
உடல் இயங்க அதற்கு உயிர் அவசியமல்லவா ? உயிரை கொடுத்தது யார் ?
மனிதனால் உயிரை கொடுக்க முடியுமா ? உயிர் என்றால் என்ன ?
கருவிலிருந்து வெளிவரும் குழந்தைக்கு உயிர் இருந்தால் தானே நாம் மகிழ்வோம்.

பிறக்கின்ற குழந்தை அழுதால் நாம் மகிழ்வோம் !
பிறக்கின்ற குழந்தை அழவில்லையெனில் நாம் அழுவோம் !
கருவிலே உருவாகும் பிண்ட உற்பத்தி, அதன்பின் உயிர் சேர்தல் எப்படி நடக்கின்றது ? யாரால் ?
உருவானால் !? பத்திரமாக வளர்க்கத்தான் நம்மால் முடியுமே தவிர உருவாக்க முடியாது !?
நமக்கு அப்பார்ப்பட்ட ஒரு சக்தி இதையெல்லாம் நடத்துகிறதல்லவா ?
அந்த சக்தி எது ? எதன் அடிப்படையில் நடக்கின்றது ?
இதற்கெல்லாம் விடை, உலகில் ஞானபூமியாக விளங்கும்
இந்திய நாட்டின் ஞானிகள் தெளிவாக கூறியிருக்கிறார்கள்.

இந்த உலகம் எப்போது தோன்றியதோ ! மனிதன் எப்போது தோன்றினானோ ?!
கணக்கிட முடியாத காலத்திற்கும் முன்னது இங்கே இருந்த ஞானிகள் வாழ்க்கை !
உபதேசம் ! நூல்கள் !

உலகமனைத்திற்கும்,,,
ஒரே நெறி ! ஒரே வாழ்க்கைமுறை ! ஒரே கடவுள் ! ஒரே பண்பாடு !

அதுவே "சநாதனதர்மம் !"
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

தெய்வத்தால் ஆகாது ??


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
 
தெய்வத்தால் ஆகாது - எல்லாம் அவன் செயல் என்று சொல்கிறோம். அப்போ திருவள்ளுவர் தெய்வத்தால் ஆகாது என்று சொல்லுகிறார். நம்ம கிட்ட இருக்கு(தெய்வம்) உள்ளே இருக்குது அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏன்? வினையில் act பண்ணி கொண்டு இருக்கிறோம். உள் இருக்கும் தெய்வத்தால் ஆகாமல் வினை ஆட்டுவிக்கின்றது. அப்போ இந்த வினையை தீர்த்தால்
முயற்சி செய்து தவம் செய்து தீர்த்தால் .. தெய்வத்தால் எல்லாம் ஆகும். இதுதான் திருக்குறளுக்கு விளக்கம். யாராவது சொல்லி இருக்காங்களா? இதுதான் ஞானம். உண்மை பொருள் மெய்ப்பொருளை சிந்திக்க வேண்டும். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. மெய்ப்பொருள் என்றால் கண் ஒளி தான். இறைவன் துலங்க கூடிய இடம் தான் கண்ணை தான் மெய்ப்பொருள் என்பது..


ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
www.tamil.vallalyaar.com

ஞாயிறு, 18 ஜூன், 2023

🔥 சத்தியஞானசபை - ஞானவிளக்கம் 🔥



நூல் : உலககுரு வள்ளலார் 30

🔥 சத்தியஞானசபை - ஞானவிளக்கம் 🔥


திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் பல்லாண்டுகளாக பல்வேறு உபதேசங்கள் வாயிலாகவும், ஆறாயிரத்துக்கும் மேற்ப்பட்ட பாடல்கள் மூலமாகவும் மரணமிலா பெருவாழ்வுக்கு வழிகாட்டினார்கள் !!

அப்போதும் வள்ளலார் திருப்தியடையவில்லை !

உலகுக்கு ஞானத்தை இன்னும் எப்படி சொல்லலாம் தெளிவுபடுத்தலாம் என்று சிந்தித்தார். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வழிகாட்டினார் !

உலகுக்கு வள்ளலார் வழங்கிய அருட்கொடை "சத்திய ஞான சபை" உதயமானது !

இதுவரை இவ்வுலகில்,திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் பெருமான் திருப்பெருந்துறையிலே கட்டிய ஆவுடையார் கோவில் தான் மிகப்பெரும் ஞானவிளக்கமாய் இருந்தது. கருவறையிலே ஆவடை மட்டுமே !? இறைவன் உருவங்கடந்த நிலையிலே ஒலிஒளியாக திகழ்கிறான் என்பதால் லிங்கம் ஸ்தாபிக்கவில்லை ?! பீடம் மட்டுமே இருக்கிறது. இதன் உண்மை உணராத மூடர்கள் லிங்கத்தை கொண்டு வைத்தனர். ஆவடை மட்டுமே பீடம் மட்டுமே உள்ளதால் தான் அக்கோவில் ஆவுடையார் கோவில் ஆனது ஊர்பெயரும் ஆவுடையார் கோயிலே !

இன்றும் ஆவுடையார் கோவிலிலே திருவிழா மாணிக்கவாசகருக்கே !

மாணிக்கவாசகரை தெய்வமாகவே போற்றிய வள்ளலார் அவர் ஆசியோடு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளோடு உலகருக்கு வழங்கிய ஞானதானமே "சத்திய ஞான சபை". 25-01-1872 பிரஜோற்பத்தி வருடம் தை மாதம் 13-ம் நாள் வியாழக்கிழமை பூச நட்சத்திரத்தன்று முதன்முதலாக சத்திய ஞானசபையில் வழிபாடு தொடங்கப்பெற்றது.

நாம் செய்த தவப்பயன் திருவருட்பிரகாச வள்ளல் இராமலிங்க சுவாமிகள் தமிழ்நாட்டில் வடலூரில் சத்திய ஞான சபையை உருவாக்கியது !! ஒரு ஆண்டாக தானே முன்னின்று சபையை உருவாக்கினார்.

"சத்திய ஞான சபையை என்னுட் கண்டனன் சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்" என்று பாடுகிறார் !

நம் தலையின் அமைப்புதான் சத்திய ஞானசபை ! உள்ளே நடுவே சுடர்விட்டு பிரகாசிக்கும் அருட்பெருஞ்ஜோதி ! முன் இருபுறமும் சிற்சபை பொற்சபை !

வள்ளல்பெருமான் சத்திய ஞான சபை இயற்கை விளக்கம் என்பார் !
நம் அகத்தே தலையின் உள் நடுவே விளங்கும் நம் ஆத்மஜோதியை காணுதற்குரிய அனுபவத்தைப் புறத்தே அடையாளமாகக் காட்டுவதே சத்திய ஞானசபை !! நாம் ஜோதி தரிசனம் காண முடியாமல் அசுத்த மாயா திரைகள் ஏழு மறைத்துள்ளது !

வடலூரில் சத்தியஞானசபையில் ஏழு திரை நீக்கிய பின் தானே ஜோதிதரிசனம் காண்கிறோம் ?
அதுபோல, நம் கண்களை மறைத்துக் கொண்டிருக்கும் மும்மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை ஏழு நிலைகளாக ஏழு திரைகளாக உள்ளது !

நாம் சிற்சபை பொற்சபையாகிய நம் இரு கண்மணி ஒளியை நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து தவம் செய்யச் செய்ய இருகண் சூரியசந்திர ஜோதி உட்புகுந்து ஆத்மஜோதியை அடையும் அம்முயற்சியின் போது ஒவ்வொரு திரையாக விலகும் !

என்னென்ன கலர் ஒளி தெரியும் என்றும் நம் உலககுரு வள்ளலார் தெளிவாக கூறுகிறார் ! முடிவில் நம் ஆத்மஜோதி தரிசனம் நாமே காணலாம் !!

ஒவ்வொருமனிதனும் இப்படித்தான் ஞான தவம் செய்யணும் !

இன்னின்ன மாதிரி அனுபவம் கிட்டும் என வள்ளல் பெருமான்மிகமிக தெளிவாக ஞான அனுபவங்களை புட்டு புட்டு வைக்கிறார் !

"சிற்சபையும் பொற்சபையும் சொந்தமெனதாச்சு"

என்றும் அகவலில் ஒவ்வொரு திரையின் தன்மையும் கூறி நம்மை பரவசத்திலாழ்த்துகிறார் !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

காமத்திலிருந்து எப்படி மீள்வது?


காமம் படர்நெஞ் சுடையோர் கனவினும் காணப்படா... பாடல் 9

காமமாகிய பேய் பிடித்தாட்டும் மனிதனுக்கு கனவிலும் காணக்கிடைக்காது அம்பிகை வடிவம்! மாயை - மகாமாயைதான் காமமாதிய துர்க்குணங்களை வினைப்படிதந்து நம்மை ஆட்டுவிக்கிறாள்!? காமத்தை ஆட்சி செய்பவளே அம்பிகைதான்! அதனால்தான் அவளை காமாட்சி என்றனர். காமமில்லாத மனிதனே இல்லை! காமத்திலிருந்து எப்படி மீள்வது? இந்த உலகத்திலேயே யாருக்காவது தாயிடம் காமம் வருமா? எந்த ஒரு பெண்ணையும் தாயாக பார்த்தால் காமம் வராதே!? எல்லா பெண்ணையும் தாயாக பாருங்கள்! அம்பிகையின் வடிவமாக பாருங்கள்! அபிராமி பட்டர் எல்லா பெண்ணையும் அபிராமியாகவே பார்த்தார். அதனால் தான் அமாவாசை அன்று நிலவை காட்டினாள் அம்பிகை. மகா கவி காளிதாசனும், தனக்கு காளியருள் கிடைக்க காரணமான மனைவியையே தாய் என்று அழைத்தான். மகாகவி காளிதாசனுக்காகவும் அமாவாசை அன்று நிலவை காட்டினாள் காளித்தாய்!

ஒரு வயது பெண்ணையும் அம்மாதாயே என்றுதான் அழைக்கணும்! 16 வயது பருவப்பெண்ணையும் அம்மாதாயே என்றுதான் அழைக்கணும்! எந்தப்பெண்ணையும் அம்மா என்றே பார்த்தால், அம்பிகையின் அருள்கிட்டும். காமத்திலிருந்து மீளலாம்! அம்மா தாயே நீயே சரணம் என அம்பிகையின் பாதத்தில் சரணடைந்தால்! அந்த தாய் இந்த பிள்ளையை காத்தருள்வாள்!

இந்த உடலை கொடுத்த தாய் தானே நமக்கு பாலூட்டி சீராட்டி வளர்ப்பாள்! இந்த உடலுக்குள் இருக்கும் உயிர் கொடுத்ததாய் இறைவியே அமுதூட்டி உயிர் வளர்ப்பாள்!? பின்னர்தான் பரம்பொருள்! முக்திகிட்டும்!

தாயைப் பணியாதவன் தறுதலையாவான்! தாயை பணிந்தால், தாயைப்போல் நம்மை அரவணைப்பவர் இவ்வுலகில் வேறு யார் உளர்?! தாயில்லாமல் நானில்லை! யாருமில்லை!? தாயின் மகத்துவம், பெருமை அறிந்தவனே ஞானம்பெறுவான்!

திருஞான சம்பந்தருக்கு 3 வயதில் அமுதூட்டிய தாய்! வள்ளலாருக்கு அண்ணி உருவில் வந்து அமுதூட்டியதாய்! எல்லா சித்தரும் ஞானியரும் போற்றும் தாய் "வாலை! இந்தியாவின் வடக்கே காஷ்மீரிலே வைஷ்ணவி தேவியாய் வாலை! இந்தியாவின் கிழக்கே கல்கத்தாவில் காளியாய் வாலை! இந்தியாவின் மேற்கே பம்பாயில் லட்சுமியாய் வாலை! இந்தியாவின் தெற்கே கன்னியாகுமரியில் கன்னியாகுமரியாய் வாலை! எங்கெங்குகாணினும் சக்தியடா! தாய்ப்பால்தானே பிறந்த குழந்தைக்கு சிறந்தஉணவு! இனி பிறவாமலிருக்க "வாலை" தரும் அமுதம் பருகவேண்டும்! எல்லா

பெண்களையும் தாயாக பார்த்து, வாலையை பணிந்து பக்தியுடன் தவம் செய்தால் கிட்டும் வாலை தரிசனம்! தருவாள் அமுதம்! முக்தியை தர சக்தியின் அருளே அவசியம் தேவை! பிறந்த குழந்தைக்கு தேவை தாய்ப்பால்! இனி பிறவாமலிருக்க நமக்கு தேவை வாலை அமுதம்!

எல்லாம் வல்ல மகாமாயை, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி, எவ்வுயிர்க்கும் தாய், ஆதிசக்தி "வாலை" எண்ணிலா ஊர்களில் கோயில் கொண்டிருந்தாலும், பற்பல பெயர்களில் உருக்கொண்டிருந்தாலும் வாலை வாலையாகவே கோயில் கொண்ட புண்ணியதலம்தான், முக்கடலும் சங்கமிக்கும் இந்தியாவின் தென்கோடிமுனையான கன்னியாகுமரி!

அடியேனை இங்கே வரவழைத்து வாழ்வு தந்து குருவாக்கி காட்சி தந்து அருள் புரிந்து படியளக்கும் தாய் கன்னியாகுமரி "வாலை!" இதுவரை இவ்வுலகில் எல்லோராலும் மறைத்து இரகசியம் என்று சொல்லப்பட்ட ஞானத்தை வெட்ட வெளிச்சமாக்கி 26 நூற்களில் ஞானரகசியங்களை வெளிப்படுத்தவைத்து வெளியிடவைத்து

என்னை எங்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறாள் "வாலை"! வாலையின் பாதத்தில் சரணடைந்ததால் புண்ணியம் பெற்றேன்! கண்ணியனானேன்!

அந்த வாலைத்தாயை நீங்களும் காணவேண்டாமா? வாருங்கள் கன்னியாகுமரிக்கு! வாலை அருள்பெறலாம்! வரம்பல பெறலாம்! வாழ்வாங்கு வாழலாம்!


🙏 ஓம் ஶ்ரீ சிவ செல்வராஜ் அய்யா திருவடிகளே சரணம் 🙏

திருவருட் பாமாலை- பக்கம் 44 - 45


திங்கள், 5 ஜூன், 2023

தொடர்ந்து நின்றானைத் தொழுமின்

"முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த அடிகள் உறையும் அறனெறி நாடில்" 

திருமூலர் பாடல் - 20

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த ஒவ்வொரு மனிதனும் என்று பிறக்க வேண்டும் எப்படி அதன் முடிவு அமைய வேண்டும் என்பதை முன்னரே வகுப்பவன் யாராக இருக்க முடியும்? எல்லாவற்றையும் நடத்துபவன் இயக்குபவன் தானே இறைவன்! இதுவே தேவ இரகசியம்! நாம் என்று? எங்கு? யாருக்கு? பிறக்க வேண்டும் என தீர்மானித்து நம்மை இந்த உலகில் பிறப்பிக்க அருள்பவன் இறைவன் அல்லாமல் வேறு யார்? அடிகள் உறையும் அறனெறி நாடு - அடிகள் - திருவடிகள் இறைவனின் திருவடிகள் தான் நம் கண்கள் என பற்பல ஞானிகள் பகர்ந்துள்ளனர். வேதங்களும் அவ்வாறே கூறுகின்றன. அங்ஙனம் திருவடியாகிய நம் கண்களில் உறையும் ஜோதியை உணர்ந்து தவம் செய்வதே உத்தமம்! கண்களில் ஜோதி இருப்பதை உணர்ந்து அதை நினைத்து உணர்ந்து நெகிழ நெகிழ தவம் செய்வதே தூய நெறி என அற நெறி என இறைவனை அடைய வழி காட்டும் ஒப்பற்ற வழி நெறி என்று திருமூலரும் தெளிவாக உரைக்கின்றார்.

 "தொடர்ந்து நின்றானைத் தொழுமின்" 

திருமூலர் பாடல்-26

நாம் எத்தனை பிறவி எடுத்தோமோ தெரியாது? பிறவி தோறும் நம்மோடு உடனிருந்தவன்! தொடர்ந்து ஒவ்வொரு பிறவியிலும் நம்முடனேயே நம் உடலுள்ளேயே நம் உயிராக இருந்தவன் அவன் தானே! அந்த இறைவன் தான்! எல்லா பிறப்பிலும் நமக்கு உற்ற துணை பரம் பொருளான நம் உயிர் அல்லவா? அதை தொழ வேண்டாமா? அதை அறிய, வேண்டாமா? இப்பிறப்பிலுள்ள அப்பா அம்மா மனைவி மக்கள் சொந்தம் பந்தம் நட்பு எதுவும் நம்முடன் இல்லை! அப்பன் எத்தனை அப்பனோ? அம்மை எத்தனை அம்மையோ இன்னும் எத்தனை பிறவியோ, முன்னும் எத்தனை ஜன்மமோ? யாரறிவார்? ஒன்றுமட்டும் உண்மை எல்லா பிறவியிலும் உயிராக இருந்தது இறைவன் தானே! அப்படியானால் எல்லாம் அவர் அறிவார் அல்லவா? அவரை சரணடைந்தால் நாம் உண்மை அறிய முடியுமல்லவா? எல்லாம் அறிந்த அவரால் நம்மை வழி நடத்த முடியும்? அந்த பரம்பொருளை சரணடைந்தால் தானே நாம் உருப்பட முடியும்! உன்னுள் இருக்கும் ஒண்பதத்தை தொழு! நீ கதி மோட்சம் பெற இது ஒன்றே வழி!

(ஒண்பதத்தை தொழு!)

இறைவன் திருவடியாக விளங்குகின்ற நமது கண்மணியில் உணர்வுடன் தவம் செய்.  

ஞான சற்குருவின் திருவடியே சரணம்  🙏🙏🙏


www.tamil.vallalyaar.com

செவ்வாய், 14 மார்ச், 2023

நம் உடலினுள் புகுவது எங்ஙனம் ?

நம் உடலினுள் புகுவது எங்ஙனம் ? 🔥 ஆதாரம் - திருமந்திரம்(பாடல் 6)🔥 

“அவனை ஒழிய அமரரும் இல்லை 
  அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
  அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை  
  அவனன்றி ஊர்புகு மாறறி யேனே"

 அவனை ஒழிய அமரரும் இல்லை : 

     அவன் - சிவம் - பரமாத்மா - இறைவன். ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக அந்த இறைவன்தானே ஒளியாக துலங்குகிறார் ! அப்படியிருக்க அவனின்றி யாரும் இல்லையே ! 
எதுவும் இல்லையே ! பின் அமரர் மட்டும் இருப்பாரா என்ன ? சுருங்கக் கூறின் இறைவன் அவன் இல்லாத இடமேயில்லை ! அவன் இன்றி யாருமேயில்லை ! 

 அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை : 
 
     "அவன்" தான் இறைவன் - நம் உடலினுள் உயிராக - நம் ஜீவாத்மாவாக துலங்குகிறான் என்றும் அவனாகிய இறைவன் நம் சிர உள் நடுவிருக்கும் இடத்தையடைய நம் கண்களே வாசல் என்றும் நம் கண்களில் துலங்கும் ஒளியை பெருக்கும் தவம் செய்யும் முறையை சற்குரு மூலம் உபதேசம் தீட்சை பெற்று உணர்ந்து செய்யும் தவமே தவமாகும் ! 

     வேறு என்ன செய்தாலும் பலனில்லை ! அவன் உள் இருப்பதை உணர்ந்து உடலினுள் கடக்க நாம் செய்யும் இத்தவம் ஒன்றே ! அருந்தவமாகும் ! உண்மை ஞான வழி இது ஒன்றே ! 

 அவனின்றி மூவரால் ஆவதொன்றில்லை : 

    இறைவனாகிய பரமாத்மாவின் அருளாக்ஞைப் படியே சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுமே செயல்படுகிறார்கள் ! அப்படியிருக்க வேறுயாரால் என்ன செய்ய முடியும் ?
அவனின்றி ஓர் அணுவும் அசையாது ! 

     அவன் தான் நம் ஜீவனாகவும் உள்ளான். நம் உடலை கடந்து உள்ளே போனால்தான் அந்த கடவுளை காணலாம் ! 

 அவனின்றி ஊர்புகு மாறறியேனே : 

     அவனின்றி இறைவனின்றி - அவன் அருள் துலங்கும் இரு கண் ஒளியின்றி நாம் எப்படி அவன் இருக்கும் ஊர் - நம் உடலினுள் புகுவது எங்ஙனம் ? 

     நம் உடலாகிய இறைவன் குடியிருக்கும் ஊரினுள் புகு வழி நம் விழியேயாகும் என்பதை உணர வேண்டும். 

     இறைவன் இருப்பது நம் உடலூர் ! உடலூரில் வடக்கில் வடலூரில் பார்வதிபுரத்தில் - பார்வை துலங்கும் இடத்தில் உள்ளே சத்தியமான ஞான சபையில் ஒளியாக தங்கஜோதியாக துலங்குகிறார் ! போக வழி எட்டாகிய விழிகளே ! 

அறியுங்கள் ! 
இதுவே உண்மை ! 
இதுவே ஞானம் !

 இறைவன் திருவடிகளே நம் கண்கள் !! 
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா


ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

குரு சொல் கேட்டு நட

குரு/இறைவன் ஒரு விசயத்தை செய்யணும் என்று சொல்லுகிறார். அதை சரியாக follow பண்ணனும். செய்யணும்.

தவம் செய்து அந்த நிலையில் நாம் இருந்தால் அவர்களும் கூடவே இருந்து, தலைக்கு வருவதை 

தலைப்பாகையுடன் போக்கி காப்பாற்றுவார்கள். அவர்கள் ஒன்றையும் நாம் செய்யாமல் ஆண்டவன் என்னை 

காப்பாற்ற மாட்டானா எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டம் என்று புலம்பினால் என்ன அர்த்தம். தப்பு செய்வது எல்லாம் நீ 

ஆண்டவனை குறை சொன்னால் எப்படி?  அதை மாற்ற வழியம் சொல்லி தந்து  உள்ளார்கள். அதை செய்தீர்கள் என்றால் 

கரெக்ட்டாக இருந்தால் எல்லாவற்றுக்கும் விதி விலக்கு உண்டு, குருவை பற்றினால் மட்டுமே. 

கடவுளிடம் சென்றால் law அண்ட் order படி நடப்பார். குருவிடம் சென்றால் தாய் மாதிரி எல்லாவற்றையும் மன்னித்து 

ஆட்கொள்வார். யாராக இருந்தால் சரி எப்படி இருந்தால் சரி, குரு அருள் இருந்தால் அவன்தான் பெரியவன். 

குரு சாத் சாத் பர பிரம்மா ..இதற்க்கு மேல் சொல்ல என்ன இருக்கு, 




(முதலில் குரு சொல் கேட்டு நட)

சனி, 7 ஜனவரி, 2023

கட்செவி

பாம்பு என்றால் கட்செவி!
எட்டாம் தந்திரம்

"அழிகின்ற ஒருடம் பாகும் செவிகண்"
திருமந்திரம் பாடல் - 2140

காம வசப்பட்டு மனிதன் கண்ணிருந்தும் குருடனாய்! செவியிருந்தும் செவிடனாய் வாழ்கிறான்! நல்ல சற்குருவை நாடி வேதபுராண உபதேசம் செவியில் கேட்க மாட்டான் பாவி! சற்குருமூலம் திருவடி தீட்சை கண்களில் பெற மாட்டான்! மெய்ஞ்ஞானம் உணராமல் உடம்பை அழிகின்ற உடம்பு தானே சாகும் வரை இஷ்டம்போல் வாழலாம் என முட்டாள்தனமாக கருதி தன் உடலை புண்ணாக்கி கெட்டு குட்டி சுவராகி செத்தும் போவான்! "

அழியுடம்பை அழியாமையாக்கும் வகையறியீர்" என ஒரு ஞானி மனிதனை எச்சரிக்கிறார்! ஆம், இந்த மானுடர் யாக்கை அழியக்கூடியது தான் மனம்போனபடிவாழ்ந்தால்! மனதை செவிகண்ணில் நிறுத்தி தவம் செய்தால், மனதை இறைவன் திருவடியில் ஒப்படைத்து தவம் செய்தால், செவிக்கண் ஒளிர்ந்து நாதத்தொனி கேட்டு, விண்ணிலே விளங்கும் நாதத்தொனி, ஓம் கேட்டு, தன்னிலும் ஒலிக்கக்கேட்டு, உடலில் ஒளிவியாபித்து உடலும் அழியாது உயிரும் பிரியாது பேரானந்த நிலை பெறுவர்! மெய்ஞ்ஞானியாவார்! செவிக்கண் - நம்கண் பார்க்க மட்டுமல்ல! கேட்கவும், உள்ளேபோனால் நாதத்தொனி, தசவித நாதம் கேட்கவும் செய்யும்! பாம்புக்கு செவி - காது கிடையாது! கண்ணே பார்க்கவும் ஒலியை கேட்கவும் செய்கிறது அதனால் தான் பாம்பின் கண்ணை "கட்செவி" என்பர்!

பாம்பிற்கு மற்றொரு பெயர் "அரவம்"! ஏன் எனில் அது சப்தத்தை அரவத்தை உணர்ந்து செயல்படுவதால் தான்! கண்ணால் பார்க்கவும் சப்தத்தை அரவத்தை உணரவும் ஆண்டவன் கட்செவி தந்துள்ளான்! இது ஒரு ஞான ஜீவன்! எல்லா தெய்வங்களுடனும் பாம்பு சம்பந்தப்பட்டிருக்கும்! ஒருவர் கழுத்திலே பாம்பு! ஒருவர் பாம்பணையில் படுத்திருக்கிறார்! ஒருவர் பாம்பை இடுப்பில் கட்டியிருக்கிறார்! ஒருவர் பாதத்திலே பாம்பு! ஒருவருக்கு பாம்பு கிரீடமாகிறது! இது போதாதென்று பாம்பாட்டி சித்தர் என்றொருவர்! பாம்பு என்றால் கட்செவி!

கண்ணும் செவியும் சேர்ந்தது. கண்ணில் மணியில் ஒளியை நினைந்து நீ தவம் செய்தால் கண் உள்ளேயே தசவித நாதமும் ஓங்காரமும் கேட்கலாம்! இதை உணர்த்தவே, மனிதன் அறியவே இந்த பாம்பு புராணமெல்லாம்! கண்ணின் - செவிகண்ணின் மகத்துவத்தை இப்போதாவது புரிந்து கொண்டீர்களா? ஞானம் பெற கண்ணை அறி!

படியுங்கள்! பண்படுங்கள்!

பரம்பொருள் அருள் கிட்டும்!

 

🔥அருளியவர்🔥:

ஆன்மீக செம்மல், ஞானசித்தர், ஞானசற்குரு சிவ செல்வராஜ் அய்யா

நூல் - மந்திரமணி மாலை
www.tamil.vallalyaar.com

திங்கள், 2 ஜனவரி, 2023

பரமபதம்

கிருஷ்ணன் கண்ணன் கதைகூறும் பாகவதம் கேட்டே முக்தியடைந்தவர்
ஏராளம்! பிரேமை ! பரமாத்மா ஜீவாத்மா ஐக்கியத்தை உணர்த்த வந்ததே
கிருஷ்ணவதாரம்! இராமன் பக்தியை ஊட்டினான்! கிருஷ்ணன் ஞானத்தை ஊட்டினான்! மந்திரத்தால் மனம் ஒன்றி கண்ணனிடம் லயமானால் ஞானம்! மந்திரம் - மனதின் திறம் வெளிப்படும் இடம் கண்ணே! அந்த கண்ணனிடம் கண்ணில் லயமானால் கிட்டும் ஞானம்! இதைப்பற்றி பாடினார்கள் ஆழ்வார்கள் நாலாயிர திவ்ய பிரபந்தமாக! அடியேன் மெய்ஞ்ஞான உரை எழுத உட்கார்ந்த போது அருளினான் கண்ணன்!!

Popular Posts