செவ்வாய், 26 ஜூலை, 2022

மும்மலம் நெஞ்சக்கனகல்லு நெகிழ்ந்து உருக



"கல்லை உந்திவான் நதி கடப்பவர்......" பாடல்-8


கல்லை தெப்பமாக கொண்டு கரைசேர முடியாதல்லவா?
உலகத்தில் முடியாததெல்லாம் அருளாளர்கள் வாழ்வில் இறையருளால் நடந்துள்ளது!

திருநாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் ஆழ்த்தினான் கொடியவன் ஒருவன். நமச்சிவாயமாகிய கண்மணி ஒளியைபற்றி கல்லை மிதக்கச் செய்து தெப்பமாக்கி கரைசேர்ந்தார். இது சரித்திரம்! நடந்த உண்மை?!

இறைவன் திருவடியை சரணடைந்தால் எதுவும் நடக்கும்!

"எல்லாம் செயல்கூடும்" என வள்ளல் பெருமான் என கூறுகிறார்?

இங்கே வள்ளல்பெருமான் கூறுவது தியான அனுபவம் கல் என கூறியது மனதை
"நெஞ்சக்கன கல்லும்" அருணகிரிநாதரும் கூறுகிறார்.

நமது நெஞ்சம் அஞ்சு பூதமும் ஒருமித்த இடம்!

ஐம்பொறிகளும் கூடும் இடம்! அஞ்சும் இணைந்த இடமே நெஞ்சு!

அது நமது கண் அல்லவா?! நமது நெஞ்சமாகிய கண்ணில் கல்போல இருப்பது நம் வினையாகிய திரை!

மும்மலம் நெஞ்சக்கனகல்லும் நெகிழ்ந்து உருக கண்மணி ஒளியை நினைந்து உணர்ந்து தவம் செய்யச் செய்ய நெகிழ்ச்சி ஏற்பட்டு கல்போன்ற கரைய ஆரம்பித்து விடும்!

அந்நிலை வரவேண்டும். வளர வேண்டும். அந்த கல்லான மனம் இருக்கும் கண்மணியை உந்தி உந்தி உள்முகமாக வான் - பரவெளி நதியாகிய ஒளிவெள்ளம் கடந்து போக வேண்டும். இதுதான் சாதனை! தவம்! தவம் செய்ய குருவை நாடு!


திருவருட்பா மாலை பக்கம் -24
குருவின் திருவடி சரணம்

சனி, 9 ஜூலை, 2022

இல்லறமல்லது நல்லறமன்று



சீடன் கண்மணியில் உள்ள தீயை, குரு தன் கண்மணி ஒளியால் தூண்டுவதே தீட்சையாகும்!
தொடாமல் தொடுவது! உணர்வால் உணர வைப்பது!

கண்மணியில் உணர்வை கொடுப்பது! தீட்சை பெறுவதுதான் மறுபிறப்பு!

தீட்சை பெற்று பிரம்மமாகிய பரம்பொருளை பெருஞ் ஜோதியை எண்ணி எண்ணி அதிலேயே லயித்திருப்பவனே அதை சார்ந்திருப்பவனே பிராமணன்!

பிரம்மச்சாரி என்பவனும் இவனே! கல்யாணம் செய்யாமல் இருப்பவன் பிரம்மச்சாரி இல்லை!

"இல்லறமல்லது நல்லறமன்று

திருமண வாழ்க்கை வேண்டாம் என்று, விரும்பி துறவற

வாழ்க்கை மேற்கொண்ட ஒளவையார் சொல்வதுதான்!

"இல்லறமல்லது நல்லறமன்று"


ஒளவையார் கூறிய இல்லறம் எது தெரியுமா? இல் என்றால் இல்லம். நமது இல்லம் நமது உடல்தானே!

நமது இல் ஆகிய உடலில் குடிகொண்டிருக்கும் இறைவனோடு - உடலில் கண்மணியில் ஒளியில் நல்ல நெறியோடு அறத்துடன் வாழ்வதுதான் நல்லறம்!

ஆத்மாக்கள் அனைவரும் பெண். பரமாத்மா மட்டுமே புருஷன். ஆத்மாக்களாகிய நாம் புருஷோத்தமனான பரமாத்மாவோடு கூடுவதே இல்அறம் என சிறந்த இல்லறம் என ஞானிகள் கூறுகின்றனர்.

ஜீவன் பிரம்மத்தோடு ஐக்கியமாவதே ஜீவ பிரம்ம ஐக்கிய வேதாந்தம் உரைக்கிறது.

கண்மணி ஒளியாக! கண் ஜீவன் இருக்குமிடம் ஒளியை பெருக்கி நாம் பக்குவமாகிய பின்னரே; 
அதாவது பெண் ஆகிய நாம் பூப்பெய்திய பின்னரே பூ கண்மலர், எய்துவது அடைவது பரமான்மாவை! பூப்பெய்திய பின்தானே கல்யாணம்!?

எல்லாமே ஞானந்தான்!

நம் நாட்டில் சொல்வது அனைத்தும் ஞானமே! அதனால் தான் இது ஞான பூமி என்கிறோம்!

பெண் ஆகிய ஆன்மா ஆகிய நாம் பக்குவம் பெறுவதே கண் திறப்பதே தீட்சையின் பலன்!

சூட்சும சரீரமே ஆன்மசரீரம்; ஆன்ம சரீரம் பிறப்பது தீட்சையினால்தான்!

முதலில் பிறக்கணும்! பின்னர் பக்குவமாகணும்! பின்னரே கல்யாணம்!



நூல் : சநாதன தர்மம்

குருவே சரணம்🙏🙏🙏

Popular Posts