வியாழன், 4 அக்டோபர், 2018

மரண அவஸ்தை! ஞான தவம் செய்வோருக்கு கிடையாது!


*ஸ்ரீ நாலாயிர திவ்யப்பிரபந்தம்*
" எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி தமர் பற்றும் போது "

பாடல் -425

ஊர் எல்லை என்பது போல நமது உடல்! எல்லை அது தான் தொடக்கமும் ஆகும்! எது? கண்மணி மத்தியே! உள்ளே இருக்குது உயிர்! எமன் வந்து எல்லை வழியாக உள் நுழைந்து உயிரை பற்றி இழுக்கும் போது கண்மணி ஓட்டை சிறிதல்லவா?

வலிக்கும் இது தான் மரண அவஸ்தை! நாம் தவம் செய்யச் செய்ய கண்மணி மத்தியிலுள்ள
ஓட்டை சற்று பெரிதாகி திரை அகன்று சுலபமாக போக வர வழிவகுத்துவிடும்! மரண அவஸ்தை ஞான தவம் செய்வோருக்கு கிடையாது!

கண்மணியை பற்றிய நமக்கு காலன் ஒரு பொருட்டேயல்ல! காலன் வரும் முன்னே கண்பஞ்சடையுமுன்னே கண்ணனை நினை! உணர்! தொழுது அந்த திருவடியை சிக்கென பற்றிக் கொள்! இரட்சிப்பான்! பரமபதம் சேர்ப்பான்! தமர்- ஓட்டை கண்மணி மத்தியிலுள்ள ஓட்டை. இறைவன் அது வழியாகத்தான் உயிர் கொடுத்தார்! எமன் அது வழியாகத்தான் எடுக்க வருவான்! ஜாக்கிரதை ஒளியை பெருக்கி உயிரை வளர்த்தால் எமன் வரமாட்டான்! செய் அல்லது செத்துமடி!


உடலை விட்டு உயிர் பிரிந்து, எம தூதர்களால் புதிதாக யாதனா சரீரம் பெற்று நரகம் கொண்டு சேர்ப்பர்! உன்னடி யாரான எனக்கு இந்நிலை வரலாமா? பரம்பொருளே காப்பற்று!


*ஞானசற்குரு சிவ செல்வராஜ் ஐயா*
*பரமபதம்*
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts