சன்மார்க் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சன்மார்க் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 செப்டம்பர், 2011

சன்மார்க்க கொள்கை

சன்மார்க்க கொள்கை (இராமலிங்க வள்ளலார்)

சர்வசித்தியை உடைய தனி தலைமை பதியாகிய ஆண்டவரை
வேண்டித் தபசு செய்து சிருஷ்டிக்குஞ் சித்தியைப் பெற்றுகொண்டவன்
பிரமன் ; சிருஷ்டி, திதி ஆகிய சித்தியைப் பெற்று கொண்டவன் விஷ்ணு;
சிருஷ்டி, திதி , சங்காரம் ஆகிய சித்தியைப் பெற்று கொண்டவன் ருத்திரன்.

இவர்கள் ஏற்படுத்திய சமய மார்கங்களை அனுடிக்கின்றவர்கள் இவர்களை
அந்தந்த
சமயங்களுக்குத் தெய்வங்களாக வணங்கி வழிபாடு செய்து வந்தார்கள்,

இம் மூர்த்திகளுடைய சித்திகள் சர்வ சித்தி யையுடைய கடவுள் சித்தியின்
இலேசங்கள்,
அதில் ஏகதேசம் கூட அல்ல. ஆகையால், இவர்கள் அந்த
சர்வ சித்தியையுடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள் ; கோடி கோடிப் பங்கு
தாழ்ந்த தரத்தில் இருகின்றார்கள், ஆகையால் சமய தெய்வங்களை
வழிபாடு செய்து, அந்த சமய தெய்வங்களிடம் பெற்று கொண்ட
அற்ப சித்தியில் அவர்கள் மயங்கி மகிழ்ந்து அகங்கரித்து மேலேற
வேண்டிய படிகள் எல்லாம் ஏறிப் பூரண சித்தி அடையாமல்
தடைப்பட்டு நிற்றல்போல நில்லாமல்,

சர்வ சித்தியை உடைய கடவுள் ஒருவர் உண்டென்றும் அவரை
உண்மை அன்பால் வழிபாடு
செய்து பூரண சித்தியைப் பெறவேண்டும்
என்றும் கொள்ள வேண்டுவது சன்மார்க்க சங்கத்தவர்களுடைய கொள்கை.

இதை ஆண்டவர் தெரிவித்தார்.

சுத்த சன்மார்க்கதின் முடிபு

சாகாத கல்வியைத் தெரிவிப்பதே அன்றி வேறில்லை . சாகிறவன் சன்மார்க
நிலையை பெற்றவனல்ல. சாகாதவனே சன்மார்க்கி
.



Popular Posts