வெள்ளி, 12 அக்டோபர், 2018

பத்தாமிடம் இருக்கும் வாலையை பற்ற முடியுமா?

பத்தாமிடம் இருக்கும் வாலையை பற்ற முடியுமா? பக்தியோடு
அவள் திருவடியை பற்றனும்!

பற்ற வைக்கணும் திருவடியாகிய கண்மணி ஒளியை!
குருவருளால் பற்றவைத்து நம் தவத்தால் பற்றின ஒளியை பெருக வைக்கணும்!

ஒளி பெருகப் பெருக நம் திருவடி மெய்ப்பொருளை பற்றப் பற்றவே நம்முள் ஒளி
பெருகி உட்புகுந்து பத்தாமிடத்து தாயிடம் வாலையிடம் பணிவுடன் சேரும்!

புறப்பற்றை விட்டு அகப்பற்றுடன் பத்தை அடைய வேண்டும் என்ற ஒரே வைராக்கியத்துடனே
தவம் செய்தால் பற்றி விடலாம்!

வேறு யோகங்கள் செய்து பூஜைகள் செய்து ஊர் ஊராக சென்று
தீர்த்த யாத்திரைகள் செய்து அலைந்து பணம் பொருள் செய்தும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை!

தாயை காண தவம் தான் செய்ய வேண்டும்! தாயை காண திருவடியான நம் கண்மணி ஒளியை
பற்றித்தான் தவம் செய்ய வேண்டும்! முதலில் வாலை தாயின் திருவடியை சிக்கென பிடி! பிறகு
உன்னிடம் உள்ள வாலைத்தாயின் திருவடியான உன் கண்ணைப்பிடி! பக்தியோடு தாயை
பணிந்து பணிவோடு உறுதியோடு உன் உள்ளே இருக்கும் வாலைத்தாயின் பாதம் சேர்!

இதை தவிர எந்த மார்க்கமும் கிடையாது!  இருப்பதாக சொல்வர் அறியாமையில் சொல்வர்!
இருப்பாதமே கதி என இருந்தாலே ஞானம்!

அபிராமி பட்டரும் மகாகவி காளிதாசரும் பக்தியில்
ஊறி ஞானத்தில் திளைத்தவர்கள்! நம் வள்ளலாரும் அப்படிதான்! பிறக்கும் போது யாரும்
ஞானி அல்ல!!? பிறந்து கடுமையாக தவம் செய்து பக்தி செய்து ஞானம் பெற்றவர்களே எல்லோரும்!!

எனவே உலகத்தாயாம் வாலைத்தாயின் பாதம் பணி!!
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts