ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

எந்த அளவுக்கு பக்தி?

நாம் எந்த அளவுக்கு பக்தி காட்டுகிறோமோ அந்த அளவுக்கு தெய்வம் நம்மை  
பற்றியுள்ள பாசமாகிய மாயையை நீக்கி நமக்கு ஞானத்தை கொடுத்தருளும், சத்தியம்.

"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று"

நாம் செய்த பாவங்களை போக்கி நம் கூடவே இருந்து நம்மை காத்தருளும்.
என் சொந்த வாழ்க்கை அனுபவம். தெய்வமே நேரில் வந்து காட்சி கொடுத்து அருள் புரிந்தது! 
கண்ணியனானேன்! அன்பு என்றால் காதலல்ல! காமமல்ல!
 
காமத்தை வெல்லும் அன்பு. கருணையை தரும் அன்பு. உடலால் ஏற்படுவது அல்ல.
ஆன்மாவால் ஏற்படுவதுதான் அன்பு. ஆன்மாவுக்கு ஆன்மா நேசம் பரிவு காட்டுவது.
மனிதரிடம் மட்டும் ஏற்படுவது அல்ல.
எல்லா உயிரினங்களிடமும் ஏற்படுவது தான் அன்பு.அதற்கு ஈடு ஒன்றுமில்லை.
அன்பு ஏற்பட்டால் வருவது உள்ள நெகிழ்ச்சி. மன மகிழ்ச்சி. பேரானந்தம்.

ஞான சற்குரு திருசிவ செல்வராஜ் ஐயா.
நூல்:அருள்மணிமாலை
பக்கம்:53

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts