திங்கள், 26 ஜூன், 2017

கண்மணி ஒளியால் தூண்டுவதே தீட்சை.

புருவமத்தி எதென்றாக்கால் பரப்பிரம் மானதொரு அண்ட் உச்சி
பரப்பிரம்மம் ஆகிய ஒளியாகிய அண்ட உச்சி, அண்டம் போல்
அழகியதாம் - பட்டினத்தார் பாடல். அண்டம் போல் உள்ளது
கண்மணி. அதன் உச்சி என்பது மத்திய பகுதி. புருவமத்தி
எது எனில் கண்மணியின் ஒளிபொருந்திய மத்திய பகுதி.
நமது நெற்றியில் இரு புருவங்களுக்கு இடைப்பட்ட ஆக்னா
சக்கர இடமில்லை!

ஒத்த இடத்தில் நித்திரைகொள்
இது - நம் கண்மணி ஒளியில் நிலைத்து
தூங்காமல் தூங்குவதே ஞானம்.
திருவடி தவம்

சக்கர நெறிநில் - ஒளவையார் கூறியது சக்கரம்போல்
உள்ள கண்மணியைப் பற்றிதான்! வெட்டாத சக்கரம்
என இன்னொரு ஞானி கூறியதும் இதுவ

தீட்சை - தீக்கை என்றும் கூறுவர். அட்சத்தில் உள்ள
தீயை உணர்த்துதல் தீட்சை! அட்சம் என்றால் கண்!
தீ உள்ள கையில் - கண்ணில் உணர்வு கொடுப்பது தான்
தீக்கை!  சீடன் கண்மணியில் உள்ள தீயை குரு தன் கண்மணி
ஒளியால் தூண்டுவதே தீட்சையாகும்.

சூட்சும சாரீரமே ஆன்ம சரீரம். ஆன்ம சரீரம் பிறப்பது
தீட்சையில் தான்!  முதலில் பிறக்கணும்! பிறகு பக்குவம் ஆகணும்!
பின்னரே கல்யாணம்! வாருங்கள் தீட்சையின் மூலம் மீண்டும் பிறக்க!

வெள்ளி, 2 ஜூன், 2017

வள்ளலார் கருங்குழியில் தண்ணீரில் விளக்கெரித்தது


திருவருட்பிரகாச வள்ளலார் கருங்குழியில் தண்ணீரில் விளக்கெரித்தது

திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க ஸ்வாமிகள் வடலூர் அருகே கருங்குழி என்னும் ஊரில் அன்பர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்த சமயம் ஒருநாள் இரவு வழக்கம் போல் அருட்பெருஞ்சோதி ஆண்டவரை நினைத்து பாமாலைகள் எழுதிக் கொண்டிருந்தார். பக்கத்திலே அகல் விளக்கு மண் விளக்கு ஒளி தந்து கொண்டிருந்தது. இரவு முழுவதும் எழுதினார் வள்ளலார். விளக்கில் எண்ணெய் தீர தீர அருகில் மண்கலயத்தில் இருந்த நீரை எண்ணெய் எனக் கருதி ஊற்றி கொண்டிருந்தார். சுத்த ஞானி கைபட்ட தண்ணீரும் அங்கே எண்ணெய் ஆயிற்று. அருட்பெரும் ஜோதி ஆண்டவர் அருளால் இராமலிங்கர் கையால் ஊற்றிய தண்ணீரால் இரவு முழுவதும் விளக்கு ஒளி விட்டு பிரகாசித்தது. மறுநாள் வீட்டுக்கார அம்மா வந்து தான் எண்ணெய் வைக்க மறந்ததும் , மண் கலயத்தை பழக்குவதற்காக தண்ணீர் விட்டு வைத்ததையும் கூறிய பிறகே இராமலிங்கர் தான் இரவு முழுவதும் தண்ணீர் விட்டே விளக்கெரித்தோம் என அறிந்தார். இச்செய்தியை தன் சென்னை நகர அன்பர்களுக்கு எழுதி அருளினார். அருட்பெரும் ஜோதி ஆண்டவரின் அருள் செயலை அறிந்து ஆனந்தம் அடைந்தார். நெய் விட்டு விளக்கெரித்தால் எத்தனை பிரகாசமாக எரியுமோ அது போன்று தண்ணீர் விளக்கும் எரிய செய்தான் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் என வள்ளலார் மகிழ்ந்து கூறியருளினார்.


இதிலே ஞான இரகசியமும் உள்ளது. திருவருட்பிரகாச வள்ளலார் கருங்குழி ஊரில் ஒரு நாள் இரவில் தண்ணீரால் விளக்கெரித்தார் என்பது நடந்த நிகழ்ச்சி. இதில் ஞானம் என்னவென்றால் "கருங்குழியில் தண்ணீர் விளக்கெரித்தார்" என்பதே. கருங்குழி என்பது வடலூர் அருகில் உள்ள சிற்றூர். நமது உடலிலே கருங்குழி - கண்மணியே. வெள்ளை விழி அடுத்து கருவிழி அடுத்திருக்கும் குழியிலே தான் கிருஷ்ணமணி - கண் மணி அமைந்துள்ளது. அந்த கருங்குழியில் கண்மணியின் மத்தியில் ஊசிமுனை துவாரத்தினுள் ஊசிமுனை அளவு ஒளி துலங்குகிறது. அந்த ஒளி எப்படி எரிகிறது தெரியுமா? நாம் உண்ணும் உணவு சக்தியாக பிரிந்து பல பகுதிகளுக்கும் செல்கிறது. ஒரு பகுதி கண்ணில் கருங்குழியில் பிராணநீராக வருகிறது. அதில் தான் நம் உயிர் ஜோதி துலங்குகிறது. அந்த பிராண நீரே அதற்கு சக்தி ஊட்டுகிறது. அதாவது நீர் மேல் நெருப்பாக மிளிர்கிறான் கண்மணி ஒளியான இறைவன். நம் கண்ணாகிய கருங்குழியினுள் விளக்கு நீரால் தான் எரிகிறது. இது மாபெரும் ஞான இரகசியம்.


அகஸ்தியர் "பிராண நீரானதில் உருண்டு திரண்டதை கண்டு அறிந்திடு நீ" என்கிறார். அது நம் கண்ணினுள் பிராண நீரில் மிதக்கும் கண்மணியேயாகும். கண்மணி மத்தியில் ஜோதி துலங்குகிறது. - யாருமே சொல்லாத ஞான இரகசியங்களை அனுபவ நிலைகள் பலவற்றையும் வள்ளல் பெருமான் அருளால் அடியேன் இந்நூலில் சொல்லியிருக்கிறேன். எல்லோரும் ஞானம் பெற எல்லா இரகசியங்களையும் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறேன்.

உண்மை உபதேசம் பெற தங்க ஜோதி ஞான சபைக்கு வருக.













இன்றைய உலகில் குறிப்பாக இந்தியாவில் எத்தனையோ ஆஷ்ரமங்கள் எத்தனையோ குருமார்கள் எத்தனையோ வழிமுறைகளை கூறுகிறார்கள்! ஞானத்தை தவிர. ஆனால் வேதகாலத்திலிருந்து இன்று வரை வழங்கி வரும் தர்ம நெறி , வாழ்க்கை நெறியே "சனாதன தர்மம்" அதுவே சன்மார்க்கம். எல்லோரும் மறைத்ததை அடியேன் வெளிப்படுத்தியுள்ளேன். இதுவரை யாரும் செய்யாத மாபெரும் சாதனை. இன்றும் இரகசியம் இரகசியம் என்று கூறி காலம் கடத்துகிறார்கள். அடியேன் வள்ளல் பெருமான் கொடுத்த அருளால் ஸ்ரீ ராமானுஜர் கொடுத்த ஆசியால் உண்மை ஞானத்தை உலகறிய செய்துள்ளேன். படியுங்கள். வாருங்கள். ஞானம் பெற நலமடைக.













- ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் - திருவருட்பா நாலாஞ்சாறு நூலில்

புதன், 3 மே, 2017

காமனை வெல்லலாம்!

39, நெடுமொழி வஞ்சி
வார்கொண் மங்கையர் முலைமலைக் கேற்றி
மறித்தும் அங்கவர் மடுவினில் தள்ளப்
பார்க்கி றாய்எனைக் கெடுப்பதில் உனக்குப்
பாவ மேஅலால் பலன்சிறி துளதோ
ஈர்க்கின் றாய்கடுங் காமமாம் புலையா
இன்று சென்றுநான் ஏர்பெறும் ஒற்றி
ஊருக்குள் மேவிய சிவன்அருள் வாளால்
உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே

காமம் எனும் புலையன் நம்மை பெண் மோகத்தில் அழுத்தி
கெடுத்து விடுவான்! ஆனானப்பட்ட விசுவாமித்திரரே மேனகையால்
வீழ்த்தப்பட்டாரே! நாம் எம்மாத்திரம்! மீண்டும் மீண்டும் திரும்பத்திரும்ப
காமம் எனும் புலையன் எப்படியாவது நம்மை வீழ்த்தப்பார்ப்பான்! நாம்
நம் கண்மணி ஒளி அழகில் தான் மயங்க வேண்டும்~! உலக பொருட்கள்
எதற்கும் மயங்க கூடாது. கண்மணியை சிக்கென பிடித்தால் ஒளிபெருகும்.
அந்த ஒளியாகிய வாளால் காமத்தை வெட்டி வீழ்த்தலாம்! பெண்ணால் தானே
காமம் வரும்! பெண்ணை தாயாகப்பார்த்தால் காமம் வராதல்லவா? எல்லா
பெண்களையும் தாயாக பாருங்கள்! வாலை தாயை பணியுங்கள்!

காமத்தை வெல்ல காமத்தை - மாயையை ஆட்சி செய்பவளை  தாயாக
காண்பதே தப்பிக்கும் ஒரே வழி! காமத்தை ஆட்சி செய்பவளே காமாட்சி!
காமாட்சி தாயை வழிபடு! முதலில் காமனை வெல்லலாம்! காமனை
வென்றால் தான் காலனை வெல்ல முடியும்! அதற்க்கு ஒரே வழி தாயை
சரணடைதலே!

காமம் கோபம் லோபம் மோகம் மதம் ஆணவம் இன்னும் பல துர்க்குணங்களால் மனிதன் கெட்டுப்போகிறான். அனைத்திலிருந்தும் விடுபட ஒரேவழி இறை அருள்
பெறுவதுதான்! இறை அருளால் தான் நாம் தப்ப முடியும்.


ஞான சற்குரு சிவசெல்வராஜ்

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

விதியினை வெல்ல வாலை அன்னை கூறும் வழி




“அதுஇது என்னும் அவாவினை நீக்கித்
துதியது செய்து சுழியுற நோக்கில்
விதியது தன்னையும் வென்றிட லாகும்
மதிமல ராள்சொன்ன மண்டல மூன்றே”

திருமந்திரம் பாடல் – 1186

உலகத்தவர் கதை கதையை விதம் விதமாய் என்னவெல்லாமோ கூறுவார்!? இவை அனைத்தையும் தூரத் தள்ளி விடுங்கள்!

இறைவனை துதி செய்யுங்கள். குருவை நாடி இறைவன் நம் உடலில் கண்ணில் மணியில் ஒளியாக இருக்கிறன் என்பதை ஓர்ந்து தெளிந்து தவம் செய்யுங்கள்.

அப்போது கண்மணி சுழற்சி கூடும். இதுவே தவப்பயன்.
நோக்கு, பார், உணர்! அங்கேயே நில். ஒளி பெருகி முச்சுடரும் ஒன்றாகி விதியை வென்றிடலாம். முக்கர்மங்களையும் (பிராரத்துவம், சஞ்சிதம், ஆகாமியம்) மும்மலங்களையும் இல்லாமல் ஆக்கி இன்புறலாம்.
சந்திரனில் இருக்கும் தாய் சொன்ன மூன்று ஜோதிகளையும் அடைவதே பெரும் பேறாகும்.

மண்டலம் மூன்று என்றது மூன்று ஜோதியே! சூர்யா மண்டலம் – வலது கண். சந்திர மண்டலம் – இடது கண். அக்னி மண்டலம் – உள் ஆத்ம ஸ்தானம்.
மதிமலராள் – மதி என்றால் சந்திரன். மலராள் – கண் மலரில் உள்ளவள்.
சந்திரனில் உள்ள சக்தி தாய்! இதையே அவ்வையாரும் “மூன்று மண்டலத்தில் முட்டிய தூணை …” என விநாயகர் அகவலில் பாடியுள்ளார். உணர்க!

- ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யா
மந்திர மணி மாலை நூலில்

ஞாயிறு, 12 மார்ச், 2017

நெஞ்சு கனகல்லும் நெகிழ்ந்துருக


ஒக்க நெஞ்சமே ஒற்றி யூர்ப்படம்
பக்க நாதனை பணிந்து வாழ்த்தினால்
மிக்க காமத்தின் வெம்மை யால்வரும்
துக்க மியாவையும் தூர ஓடுமே

மனமே மனிதர்கள் காமத்தால் ஏற்படும் உடல் சூட்டையும்
அதன் பின்னால் வரும் துன்பங்கள் யாவையும் நீங்க தன்
உடலில் ஒற்றியிருக்கும் -கண்மணியின் உள் ஒற்றியிருக்கும்
அந்த ஒளியை பற்றி, மேலும் மேலும் பற்றி வளர்ச் செய்தால்
தவம் செய்தால் தப்பலாம்! இன்பமாக வாழலாம். மும்மலமாகிய
விஷத்தை கொண்டநாதன் கண்மணி ஒளி -படம் பக்கநாதன்!

கல்லை யொத்த என் கன்ம நெஞ்சமே - பாடல் 7

கல் போன்றது என் கன்ம நெஞ்சம் - கல்மனம். நம் மனம் - கன்ம நெஞ்சம்.
அதாவது நாம் இப்பிறவியில் கொண்டுவந்த பிராரத்துவ கர்ம வினை நம்
மனம் மூலமாக அரங்கேறுகிறது. பிறந்து நடத்தும் ஆகான்மிய கன்மமும்
நம் மனம் மூலமே நடக்கிறது.  

'தவத்தால் இவ்விரண்டும் இல்லாது போகையில் வரும் சஞ்சித கர்மமும்
வரும் இடம் மனம் தான். வினையை தாங்குவதால் சராசரி மனிதனின் மனம்
கல்லாகி விடுகிறது. "நெஞ்சு கனகல்லும் நெகிழ்ந்துருக" என ஒரு ஞானி பாடுகிறார்.

மனம் கல்லான மனிதன் தான் யார் என உணரத்தான் நம் முன்னோர்கள் கோயிலில் கல்லால் இறை உருவத்தை பலவாராக வடித்தார்கள்! கல்லான மனம் படைத்த  மனிதன் மனம் உருக உருக கடவுள் காட்சி அனுபவம் பெறுவான்! கோவிலில் கல்லாக வடிக்கப்பட்ட கடவுள் சிலை முன் இவன் போய் கல்லாக உட்கார்ந்து இருப்பானேயானால் கர்ப்பகிரகத்தில் உள்ள கல் பேசும். கல் போல் அமர்ந்த மனிதன் காணுவான் கண்ணாலே!

உடல் கல்லாகிவிட்டால் கன்மட்டுமே உணர்வோடு இருப்பதை அனுபவத்தில்
உணரலாம்! கல்லான மனம் கரைய கண்குளிர தவம்  செய்ய வேண்டும்.
உடல் கல்லாக வேண்டும். மனம் இல்லாது போக வேண்டும்! மனம் இல்லாது
போனால் வினை இல்லாது போக வேண்டும்! மனம் இல்லாது போனால்
வினை இல்லாது போகும்! வினை இல்லாது போனால் பிறப்பு இறப்பு
இல்லாது போகுமே! அதுதானே வேண்டும்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

பொருள் / அருள் இல்லார்க்கு?

2.16 எழுத்தறியும் பெருமான் மாலை

பொன்னைமதித்தையா நின் பொன்னடியை போற்றாத ஏழைகட்கும் ஏழை கண்டாய் - பாடல்19

பொன்னை பெரிதாக மதித்து அதனை பெற அல்லும் பகலும் பாடுபடும் இவ்வுலகில் பொன் பொருள் இல்லாதவரை ஏழை என்பர்! ஆனால் இறைவனின் பொன்னடியை - தங்க ஜோதியை உணராதவன்
தான் உண்மையிலே ஏழையிலும் ஏழை!! பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை! அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை!

பொருள் என்றால் பொன் பணம் அல்ல!? மெய்ப்பொருள்! மெய்ப்பொருள் உணராதவன் தவம் செய்யாதவன் இவ்வுலகில் வாழ முடியாது!

வினைகளுக்குட்பட்டு ஜனன மரண பிணியில் மாட்டிகொள்வான்!
 இவ்வுலகம் சிறப்பாக வாழ வேண்டுமானால்
தன்னிலே இருக்கும் பொருளை - மெய்ப்பொருளை அறிய வேண்டும். குரு மூலமாக உணர வேண்டும். இவ்வுலகமே இல்லையெனில் அவ்வுலகம் எங்ஙனம் கிட்டும்! இவ்வுலகில் பொருள் அறிந்து குரு மூலமாக உணர்ந்து தவம் செய்பவர்க்கே அவ்வுலகம்
கிட்டும். அ + உலகம் = அவ்வுலகம் கிட்டும் இறைவன் இருக்கும் உலகம் கிட்டும்!  அதைவிட பெரும்பேறு உண்டுமா?!


ஞான சற்குரு சிவசெல்வராஜ்

தூக்கத்தை ஒழி

தூக்கமில்லா ஆனந்ததூக்கம் - பாடல் 22

தூக்கம் என்பது மனிதனின் உடல் உள் உறுப்புக்கள்
சோர்வடையும் போது தேவையான ஒன்று உள் உறுப்புகள்
அயர்ந்து ஓய்வு கொள்வது தூக்கம்! தூங்கும் போது உயிர் ஆதாரத்தில்
ஒடுங்கும்! சராசரி மனிதனுக்கு தூக்கம் இன்றிமையாதது! ஆனால்
தவம் செய்வோர்க்கு தூக்கம் ஒரு தடை! "தூங்காமல் தூங்கி " சுகம்
பெறுவது எக்காலம் என ஒரு சித்தர் பாடியுள்ளார்!

நாம் கண்மணி ஒளியில் உணர்வை வைத்து தவம் செய்ய செய்ய ஒளிபெறுகி உயிர் ஆற்றல் பெருகி  உடல் உள் உறுப்புகள் அதிக சக்தி பெறும், சோர்வடையாது, உற்சாகம் கூடும் உணர்வு பெருக பெருக  ஆனந்தம் மேலிடும் அதுவே ஆனந்த தூக்கம் என வள்ளலார் கூறுகிறார்.

சும்மா சும்மா தூங்கி தூங்கி வழிபவன் முடிவில்
மீளாத தூக்கத்தில் ஆழ்ந்துவிடுவான்! இறந்து விடுவான்! தூக்கத்தை
ஒழித்தவனே! உடலை, உணர்வுடையவனாக உற்சாகமாக வைத்திருப்பவனே
நெடுநாள் வாழவான்! அதற்க்கு தவம் தேவை! "ஒருவன் ஒரு நாளைக்கு
ஒருமணி நேரம் தூங்க பழக்கம் செய்வானாகில் அவன் ஆயிரம் வருடம்
ஜீவித்திருப்பான்" என வள்ளலார் கூறுகிறார்! வள்ளலார் சொன்ன தூக்கம்
ஆனந்த தூக்கம்! தூங்காமல் தூங்கி சுகம் பெரும் தவ நிலை! உடல்
தூங்காமல் மனம் மயங்காமல் உணர்வுறு நிலையில் சும்மா இருப்பதே
தூங்காமல் ஆனந்தமாக தூங்குவது ஆகும்! ஒருநாளைக்கு ஒரு மணிநேரம்
தூக்கமில்லா ஆனந்த தூக்கம் கொள்வார் ஆயிரம் வருடம் ஜீவித்திருப்பார்
இதுதான் வள்ளலார் வாக்கு!

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

சத்திய ஞான சபை - ஞான அனுபவம்











வள்ளல் பெருமான் தானே முன்னின்று கட்டியது சத்திய ஞான சபை, ஞான உபதேசங்களை அருட்பாக்களால் கூறியருளிய வள்ளலார் பாமரர்களும் புரிந்து கொள்ளும் படியாக ஞான அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கக் கட்டியதே ஞான சபை.

சத்திய ஞான சபையில் பிற கோவில்களில் உள்ளது போல் தெய்வத் திருவுருவங்கள் கிடையாது. பூசை வழிபாடு கிடையாது.

இறைவனை நாடி தவம் செய்யும் நமக்கு கிட்டும் முதல் பேறு, ஆத்ம ஜோதி தரிசனம் எல்லோரும் அறிய ஏற்படுத்தினார்.

சத்திய ஞான சபை நம் தலை அமைப்பை போன்றது. முன்புறம் உள்ளே இருபுறமும்  சிற்சபை பொற்சபை உள்ளது. நடுவே உள்ளே - ஞானசபை உள்ளது. தைப்பூசம் அன்று ஞான சபையில் ஒவ்வொன்றாக ஏழு வர்ண திரைகள் விலக்கப்பட்டு முடிவில் பெரும் ஜோதி காண்பிக்க ஏற்பாடு செய்தார்.

இதுவரை யாரும் கட்டாத கோயில்!? எனவே இதை கோயில் என்று
அழைக்காமல் சத்திய ஞானசபை என்றார் வள்ளலார்.







இதுவரை யாரும் செய்யாத புதுமையான வழிபாடு!? பிற கோயில்கள் போன்று தெய்வ திருவுருவங்கள் இன்றி, ஒளி ஒன்றே பரமாத்ம நிலை என விளக்க ஞான சபை உள்ளே ஒளியை ஏற்றி காண்பிக்க செய்தார். ஒளியை காண வேண்டுமானால் அதை மறைத்து கொண்டிருக்கும் ஏழு திரைகள் விலக வேண்டும். அது என்ன?

ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மலங்களால் நமது கர்மவினைகளுக்கு
தகுந்த படி திரைகள் போன்று ஆத்ம ஜோதி தெரியாத படி மறைத்து கொண்டிருப்பதாகும்.

திரைகள் விலகினால் தான் ஜோதி தரிசனம். இது தான் வள்ளல் பெருமானின்
மிகப்பெரிய சாதனை?

இதுவரை வந்த ஞானிகள் பலர் உபதேசம் செய்துள்ளனர். ஞானிகள் பலர் கோவில் அமைத்தனர். இன்னும் பல ஞானிகள் ஞான உபதேசம் பரிபாசையாகவே செய்துள்ளனர். வேதம் இதிகாசம் புராணம் இன்னும் எவ்வளவோ?! இவை அனைத்துக்கும் மேலாக  அனுபவ ரீதியாக நம் முன் உருவாக்கி நிலை நிறுத்தியது தான் சத்திய ஞான சபை!

இறைவன் பேரொளி. அவனை காண உன்னிடமுள்ள அஞ்ஞான திரைகளை அகற்று என்பதே! எப்படி? புறத்திலே உள்ளதை புரிந்து கொள்வது?

சிற்சபையும் பொற்சபையும் சொந்தமெனதாச்சு - சிற்சபை வலது கண். பொற்சபை இடது கண் இரு கண் மணியிலுள்ள ஒளியை பெருக்கினால் உள்ளே அக்னிகலையை ஞான சபையில்  ஆத்ம ஜோதியை  மறைத்து கொண்டிருக்கும் நம் கர்ம பந்தத்தால் ஏற்பட்ட திரைகள்
அதாவது கண்மணியின் ஊசிமுனை துவாரத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது ஜவ்வு. இந்த ஜவ்வு தான் 7 நிலை திரைகளாகும். நாம் தவம் செய்யச் செய்ய நினைந்து உணர்ந்து  நெகிழ கண்ணீர் பெருகும். கண்ணில் கனல் எழும்பும் அக்கனல் ஞானக்கனல் உள்ளிருக்கும்
ஜோதியை மறைத்துக்கொண்டிருக்கும் ஜவ்வை சூடாக்கி உருக்கி விடும். கொஞ்சங் கொஞ்சமாக திரை போன்ற ஜவ்வு உருகி கரைந்து விடும். பின்னர் உள்ளே உள்ள ஜோதி தெரியும். இதை சொல்வதற்குதான் வள்ளல் பெருமான் சத்திய ஞான சபை கட்டி அங்கே ஜோதி தரிசனமும் காண வைத்தார்கள். ஜோதி தரிசனம் - ஞான அனுபவ நிலை.

இங்கே கண்ணை மூடி கொண்டிருந்தால் எப்படி ஜோதியை தரிசிக்க முடியும்.? இதற்குத்தான்  பெருமான் விழித்திரு என உபதேசம் செய்தார்.

கலையுரைத்த கற்பனையை நிலை என கொண்டாடும் கண்மூடி பழக்கமெல்லாம் மண்மூடி போக என வள்ளலார் கூறினார்.

இழிச் செயலையே, கண்மூடித்தனம் என்கிறோம். கண்மூடிதனம் என்பது அறியாமையால் செய்வது. இதுவல்லாமலால் நாம் கண்ணை திறந்து பார்த்தல் தானே எல்லாம் தெரியும்! கண்ணை மூடி கொண்டால் ஒரே இருளாகத்தானே இருக்கும்.

சரியை கிரியை யோகம் அனைத்தும் கண்ணை மூடிக் கொண்டு செய்வது
சொற்ப பலனே மிஞ்சும். முழுமை கிட்டாது.

ஞானத்தில் கண்ணை திறந்து கொண்டுதான் தவம் செய்ய வேண்டும். கண்ணை மூடினால் இருள் கண்ணை திறந்தால் ஒளி. நாம் ஒளியை பேரொளியை தானே தவம் செய்ய வேண்டும்.

கண்திறந்து  காண்பதே உண்மை. கண்ணை மூடிக்காண்பது அனைத்தும் மாயை! கண் திறக்க வேண்டும்! ஞான சாதனைக்கு. கண் இமைகளை திறக்க வேண்டும். என்பது ஒன்று. கண்மணியை மறைத்து கொண்டிருக்கும் திரையை அகற்ற வேண்டும். அடைப்பட்ட வாசல் திறக்க வேண்டும்.என்பதும் ஆகும்.

கண் திறப்பது என்பது கண்மணியில் அடைத்து நிற்கும் வாசல் போன்ற திரைகள் நீங்க வேண்டும் என்பதே. அப்போது தான் ஜோதி தரிசனம் ஆத்ம ஜோதி தரிசனம் கிட்டும். ஞானம் பெறலாம். தன் புறக்கண் இமைகளை விட்டு அகக்கண் மணித்திரை திறப்பதே ஞானம்.  திருக்கதவம் திறவாயோ திரைகளெல்லாம் நீக்கியே -மணிக்கதவம் திறவாயே என வள்ளல் பெருமான் பாடியுள்ளார்.

ஒரு ஓவியம் ஒரு சிற்பம் இவை செய்து முடித்த பின் முடிக்குமுன் கடைசியாக செய்வது கண் திறப்பது என்றேயாகும். கண் திறந்தால் பூர்த்தியாயிற்று என்று பொருள்.

அதுபோலவே ஒரு மனிதனுக்கும் அகக்கண் - மணித்திரை திறப்பதே பிறவியின் லட்சியம். பிறப்பில் மிக மிக முக்கியமான நிகழ்வு நாம் மனிதனாக பிறந்த பயன் பெற நம் க திறக்கப்பட வேண்டும். கண் திறந்தால் தான் ஜோதி தரிசனம், இறைவன் அருள் அடியேனுக்கு வள்ளல் பெருமான் அருள், குரு பீடமேறி, நயன தீட்சை மூலம் அகக்கண்களை திறந்து வைக்க அருள் பாலித்திருக்கிறது.

மாதா பிதா பெற்ற மனிதர் குருவை பெற்று தன் அகக்கண்களை திறந்து கொண்டு தவம் செய்து மேன்மையடைய வேண்டும். அதற்குத்தான் வள்ளல் பெருமான் படாத பாடுபட்டார், படுகிறார்.

www.vallalyaar.com

சித்தி வளாகம்

Image result for சித்தி வளாகம்

வள்ளல் யார் எனும் ஆராய்ச்சி செய்ய நம் பெருமான் பலகாலம் இருந்த இடமே சித்தி வளாகம்.

சனாதனதர்ம நெறி தழைத்தோங்க சமரச சுத்த சன்மார்க்க சங்கத்திற்கு கொடி அமைத்தார்.

அதன் விளக்கமும் ஞான அனுபவம் என்று உரைநடை பகுதியில் தெளிவாக குறிப்பிட்டு அன்பர்களுக்கு வழிகாட்டினார்.

இன்றும் தைப்பூச ஜோதிதரிசனம் கண்ட மூன்றாம் நாள் நம் வள்ளல் பெருமான் திருக் காப்பிட்டுக் கொண்டு, ஒளியாகி கரைந்த வெளியிலே கலந்த, திருஅறை தரிசனம் காணலாம். சித்தி வளாகத்திலே சித்தியெலாம் பெற்றனன் என பெருமானார் குறிப்பிடுகிறார்.

சித்தி வளாகத்தில் அன்பர்களை கூட்டி சன்மார்க்க சங்கம் நடத்திய நம் பெருமான் நமக்கு கொடுத்த உபதேசம் என்ன தெரியுமா? தனித்திரு என்பது தான்! சாதுக்கள் சங்கத்தில் இரு என்ற வள்ளலார் தனித்திரு என்றே உபதேசித்தார்.

நான் ஆன்மா - சீவன் என்கிற தனி நிலையில் இருக்க வேண்டும். எப்போதுமே தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் என்ற ஆவா மிகுதியால் சத்விசாரம் செய்து கொண்டே தனித்திருக்க வேண்டும் என்றார்.

சனாதன தர்மம் - வள்ளல் பெருமான் உரைத்த சன்மார்க்கம்.


பரமாத்மா சீவாத்மாவாகி நம் கண்மணி ஒளியில் இரு
நிலைகளாக உள்ளது!

அந்த இரண்டையும் ஒன்று சேர்ப்பதே தவம்.

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து
அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீராதனால் உடம்பு
நனைந்து
- இப்படி செய்ய வேண்டும் என்கிறார் வள்ளலார்.
கண்களை நினைத்து கண்மணியின் உள் ஒளியை நினைத்து உணர்ந்து
உணர்ந்து அதிலேயே நினைவை நிறுத்தி நிறுத்தி பழக பழக
நெகிழ்ச்சி உண்டாகும், நெகிழ்ச்சி அதிகரிக்க அதிகரிக்க அதுவே
கருணையாக மலரும். கண்மணி ஒளியில் மனதை நிறுத்தும் போது
கடுப்பு உண்டாகும் கனல் பெருகும் கண்ணீர் தாரை தாரையாக கொட்டும்.
இப்படியே தொடர்ந்து தவம் செய்ய செய்ய கண்மணி ஒளி பெருகும்.
கொஞ்சங் கொஞ்சமாக உடல் முழுவதும் பரவும் ஊன உடலே விரைவில்
ஒளிவுடல் ஆகும்,

இதுவே உன்னதானமான தவம். சீவனை சிவமாக்கும் ஒப்பற்ற கலை.
இந்த கலையை உலக மக்கள் அனைவரும் பயிலவேண்டும். பேரொளியாகிய
பரமாத்மாவாகிய இறைவன் சிற்றொளியாகிய - சீவான்மாவாகிய நாம் அடைய
இது ஒன்றே வழி!

எல்லோருக்கும் பொதுவான - மனிதன் மனிதனாக வாழ்ந்து இறையோடு கலக்க  வழி காட்டி கூட்டி செல்வதே சனாதன தர்மம். அதுதான் வள்ளல் பெருமான் உரைத்த  சன்மார்க்கம்.

சிதம்பரத்தில் நடராஜர் ஆடுவதை நிறுத்தினால் உலகம் அழிந்து விடும் ???


சிதம்பரத்தில் நடராஜர் ஆடிக் கொண்டு இருக்கிறார். அவர் ஆடுவதை நிறுத்தினால் இந்த உலகம் அழிந்து விடும் என இன்றும் ஊரில் பலர் சொல்லிக்கொண்டேஇருக்கிறார்கள்!?
சிதம்பரம் போனேன் அங்கே நடராஜர் ஆடவில்லையே!

அப்படியானால் இதன் விளக்கம் யாது? சிதம்பரம் என்றால் சின்ன-அம்பலம் - அம்பரம்,சிற்றம்பலம், நடராஜன் நடனமிடும் - ராஜன் - இறைவன் - பேரொளியின் அம்சம் சிற்றொளி -ஒளி ஆடிக்கொண்டு தானே இருக்கும்.

அதாவது எங்கும் நிறைந்த இறைவன் நம் உடலில் சின்ன அம்பலாகிய எல்லோருக்கும் தெரியும்படியாக அம்பலமாக கண்ணில் ஒளியாகி ஆடிட் கொண்டிருக்கிறான் என்பதாகும்.

நம் கண்ணில் ஒளி ஆடிக்கொண்டிருந்தது. நம் கண் எப்போது ஆடாமல் அசையாமல் நிலைகுத்தி நிற்கும்? இறந்தால் தானே! கண் ஒளி ஆடாமல் இருந்தால் உயிர் பிரிந்து விட்டது என்று தானே பொருள். கண் அசைவு ஆட்டம் இருந்தால் உயிர் இருக்கிறது
என்று பொருள்.

இதைத்தான் நம் கண்ணில் ஆடிக்கொண்டிருக்கும் ஒளி நின்றால் நாம்
இறந்து விடுவோம் என்பதைத்தான் சிதம்பரத்தில் நடனமிடும் நடராஜர் ஆட்டம் நின்று விட்டால் உலகம் அழிந்து விடும் என பரிபாசையாக மறைமுகமாக சொன்னார்கள் முன்னோர்கள்!

இராமலிங்க வள்ளலார்


ஒத்த இடத்தில் இருந்து தூங்காமல் தூங்கி மோன
நிலையில் ஆன்ம பசியோடு இறைவன் திருவடியிலே
மட்டுமே மனதை இருத்தி விழி மலர்களை மலர்த்தி
விழித்திருந்து தவம் செய்தார், பலன் மனிதனான இராமலிங்கர்
புனிதன் ஆனார். தன்னுள் இருக்கும் அது தான் எங்கும் நிறைத்த
எல்லாம் வல்ல இறைவன் அம்சம் என்பதை உணர்ந்தார்.
தன்னை போலவே எல்லோர் உள்ளிலும் அதுதான் என்பதையும்
உணர்ந்தார். அதுதான் அண்டம் பகிரண்டம் எலாம் நிறைந்து எனவும்
கண்டார்.

தான் அதுவாக மாறிவிட்டார்! தனக்கு கிடைத்த சத்து சித்தாக மிளிரக்கண்டார்!
அதனால் கிடைத்த ஆனந்தம் அளவிலாதது என உணர்ந்தார்.

அதை அறிந்ததால் தான் உணர்ந்ததால் அதுவாக மாறியதால் அதன் இயல்பை
பெற்றார்  இராமலிங்க வள்ளலார்! ஆம் ராமலிங்கர் வள்ளலாரானார்!

எவ்வுயிரும் தானாக கண்டார். பயிர் வாடிய வாட்டம் அவர் பெற்றார்.

அறியாமையில் உழல்கின்ற உயிர்களை கண்டு மனம் வெதும்பினார்.
தீச்செயல் புரியும் மனிதர்களைக்கண்டு உளம் புதைத்தார். ஆணவத்தால்
அடாது செயும் மனிதர்களைக் கண்டு பயந்தார். பிற உயிர் படும் துன்பம்
அவர் பட்டார். அதுதான் ஒருமை.

ஆன்மநேய ஒருமை. வள்ளல் தன்மையை பெற்றவர் தன்மை இதுவே.
குறைந்த பட்சம் பசியாவது நீக்குவதே மனித இயல்வு என்றார்.

உணவால் மனித உயிர் வாழும் பின் தேறிவிடும் என்றுரைத்தார்.
அதன்பின் வள்ளல் யார் என்ற ஆராய்ச்சியில் இறங்குவார் என்றார்.
வள்ளலாகிய இறைவன் யார்? யார்? என்று இறைஞ்சுபவன்
ஏழைக்கு இரங்குவான். கருணையே உருவாவான்.

வள்ளல் யார்?
ஞான சற்குரு சிவசெல்வராஜ்

மனம் போன போக்கிலே போக வேண்டாம்

சென்னை - திருவெற்றியூர் இரத வீதியிலே ஒரு நிர்வாண சந்நியாசி
அமர்ந்திருந்து அவ்வழியே வருவோர் போவோரையெல்லாம் நாய் போகிறது
நரி போகிறது பண்ணி போகிறது பாம்பு போகிறது என கூறிக்கொண்டு இருந்தார்

இராமலிங்கர் அவ்வழியே வந்தபோது இதோ ஓர் உத்தமமான 'மனிதன்' வருகிறான் என்றார். அவரவர் குணத்தை வைத்து மக்களை அழைத்துக் கொண்டிருந்த திகம்பர சாமியார் இராமலிங்கரை மனிதன் - உத்தமமான மனிதர் என்றார்.
மனிதனாக பிறந்து மிருகங்களாக வாழும் மாக்கள் மத்தியில் இராமலிங்கர் மனிதனாக வலம்வந்தார்.

மனதை இதம் பண்ண தெரிந்தவர், மனம் போன போக்கிலே போகாமல் மனதை இறைவன்பால் செலுத்தி பக்குவப்படுத்தியவர்.

மனம் போன போக்கிலே போக வேண்டாம் என்ற மூதுரைக்கொப்ப வாழ்ந்தவர்
இராமலிங்கர். 'மனம் அடங்கும் ஓர் இடந்தனில் இருந்தும் அறியேன்' என்ற ஞானக் கூற்றுப்படி மனம் அடங்கும் இடத்தில் இருந்தவர் இராமலிங்கர்.

1823 அக்டோபர் 5ம் நாளில் பிறந்த இந்த மனிதன் 51 வயது வரை
பூதவுடலை ஒளியுடலாக்கி இப்பூவுலகில் வாழ்ந்தார். நம்மை போலவே
இராமலிங்கரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த சாதாரண மனிதனே!

சதா சர்வ காலமும் இறைவனை எண்ணி மோன நிலை கூடி வாழந்தார்.

மாயையான இவ்வுலகு நம் மனதில் பற்றாமல் பற்றற்று வாழ்ந்தார்.

மனதை இறைவன் திருவடியில் ஒருமைப்படுத்தியதால் அறிவு
பிரகாசமானது! ஓதாதே உணர்ந்தார்.


வள்ளல் யார்?
ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

சனி, 14 ஜனவரி, 2017

போகி பண்டிகையின் ஞானம்




உச்சி முதல் உள்ளங்கால் வரை உடம்பில்
அழுக்குதான் உள்ளது, இந்த அழுக்கு அனைத்தும்
நீக்க ஒரே வழி அக்னி. ஞான அக்னி பெருக்கின்றது தான்.
போகி பண்டிகை கொண்டாடுகிறோம் அல்லவா
வீட்டில் உள்ள வேண்டாத கழிவு எல்லாம் எரித்து
சுத்த படுத்துகிறோம் அல்லவா? முதலில் தீயில் இட்டு
எல்லாவற்றையும் எரித்து  சுத்தம் செய்கிறோம், அடுத்து தண்ணீர்
விட்டு கழுவி இன்னும் தூய்மை படுத்துகிறோம்.

அக்னியை பெருக்குங்க கண்ணீரால் சுத்த படுத்துங்க.
(திருவடி தவம்)

Popular Posts