திருவடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 ஆகஸ்ட், 2026

13. திருப்பூவல்லி (thiruvasagam) - 1

13. திருப்பூவல்லி

திருவாகிய இறைவன் தங்கிய கண்மலரில் உள்ள அல்லி - பூவில் உள்உள்ள, நடுவிலுள்ள பகுதி கண்மணி - அதுவே திருப்பூவல்லி என்றார் மணிவாசகர்! தாமரைப்பூவின் உள்ளே உள்ள தாமரை மணி உள்ள அல்லி! அதுபோலவே கண்ணே தாமரையாகவும் மணியே அல்லியாகவும் கூறப்படுகிறது ஞானத்தில்!

“இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்”

இணையாக இரு திருவடித்தாமரையை என் சிரசில் கண்களாய் இறைவன் அருளி ஞானோபதேசம் ஞானதீட்சை அருளியதால் இந்த பிறவியே இரட்சைபட்டது! 

அதுவரை துணையாக இருந்த சுற்றங்கள் நண்பர்கள் சொந்த பந்தங்கள் அனைவரும் போய் தொலைந்தனர்! அப்பாடா நிம்மதி கிட்டியது! மாணிக்கவாசகர் சுற்றத்தை துறந்து துறவியானார் என்கிறார்! அடியேன் துறக்கவில்லை! சுற்றத்தார் சொந்தபந்தம் நண்பர்கள் அன்பர்கள் அனைவரும் என்னை துறந்தனர்? நான் தனியாக விடப்பட்டேன்! 

அப்போதுதான் பட்டினத்தார் கூறிய, “சுற்றத்தை வாழ்வை குடங்கவிழ் நீரொட்டமன்றேஇரு” என்பதன் உண்மை உணர்ந்தேன்! இறைவா நீயே கதி! என்ற நிலைக்கு என்னை எங்குரு தள்ளி எனக்கு இறைவன் வாலை அருள்பெற வழிவகை செய்தார்கள்!!? நான் யாரையும் வெறுக்கவில்லை! எல்லோரும் என்னை வெறுத்து ஒதுக்கினர்! “நாமாக தள்ளவில்லை! 

தன் பொல்லாங்கை கருதி தாமாகவல்லோ போய்விட்டார்கள்” என்ற சித்தர் பாடலே உண்மையாயிற்று! “அற்ற குளத்தில் அறுநீர் பறவைபோல” தண்ணீர் வற்றிய குளத்தில் பறவைகள் கூட வராது அதுபோல செல்வம் இழந்து துன்பப்பட்ட இந்த செல்லவத்தை எல்லோரும் ஒதுக்கித் தள்ளினர்!

 இறைவன் அன்போடு சேர்த்துக் கொண்டார்! இது என் வாழ்வில் நடந்த உண்மை! இன்று நல்லாயிருக்கும்போது சொந்தபந்தங்கள் நண்பர்கள் அன்று பேசக்கூட விரும்பாதவர்கள் தேடி வருகிறார்கள்! வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர் தஞ்சம் நீ எனக்கு சாமி என்றனர் சன்மார்க்க சங்கத்தவர்களே வென்றனர் என்று வள்ளலார் சொன்னபடி அன்று என்னை திட்டியவரெல்லாம் இன்று நாடி வருகிறார்கள்! இறைவா எல்லாம் உன் லீலை!!

 யாருமே உதவிக்கு இல்லையே என நடுத்தெருவில் குடும்பத்தோடு கலங்கி நின்றபோது நானிருக்கிறேன் என்று கன்னியாகுமரி வாலைத்தாய் கூப்பிட்டு அருள்புரிந்தாள்! காத்தாள்! வாழ வைத்தாள்! இன்றும் படிஅளக்கிறாள்! தாயல்லவா? கருணையின் வடிவம்! அன்பின் - இரக்கத்தின் இருப்பிடமே தாயல்லவா? துன்பத்தால் வேதனையால் துடிதுடித்த என்னை காத்தருளினாள்!! உறுதியான நம்பிக்கை!

 விடாப்பிடியான - வைராக்கியமான தவம்! வள்ளலாரின் - குருபிரானின் அன்பு என்னை காத்தது! திருவாசகத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு ஞானியும் கூறுவது தன் அனுபவமே! அதுவே தவம் செய்வோர் எல்லோரது அனுபவமும் ஆகும்! இப்படியெல்லாம் வரும் - நடக்கும், கலங்காதே! 

உறுதியாக இறைவன் திருவடியை பற்றி்க்கொள், விடாதே! என நமக்கு கூறுகிறார்கள்! அந்தந்த அனுபவம் பெற்றவர்களுக்கு ஞானப்பாதையில் முன்னேற ஊக்கமும் கிட்டும்! அதை நமக்கு தரவே ஞானநூல்களை நமக்குத் தந்தனர் ஞானியர்!


சனி, 3 ஜனவரி, 2026

அகஸ்திய மகரிஷி திருவடி கண்டேன் என்கிறார்


"பார்வையினாற் கயிறு கொண்டு கட்டு கட்டு"
செழியான சின்மயத்தின் சொரூபந்தன்னைத் தெரிசித்தேன் நாதலிங்க மூர்த்தி பாதம்
விழியான பொருள் தானே மனதிற் கொண்டு
கற்பூர தீபவொளி காட்சி கண்டேன்
அரகரா உச்சி முடி அகரந்தானே "


நம் தவம் மேலோங்க, பார்வையால் பார்த்து நீயும் படுமுடுச்சு போடடா " என்கிறார் சித்தர் பெருமக்கள் !! நீ பார்த்தால் வெளியே உன் முன்னால் உள்ளது தெரியும் ? பார்வையாகிய கயிற்றால் கட்டினால் உன்னால் வெளியே பார்க்க முடியாதே ! 

அப்போது பார்வை உள்ளே தான் போயாக வேண்டும் ! அகநோக்கம் வேண்டும் ! எப்படி பார்வையை வெளியே கட்டினால் அது உள்ளே தான் போகும் ! 
எவ்வளவு சூட்சமமாக சொல்லியிருக்கிறார் பாருங்கள் ! 

செழுமையான தவத்தால் நம் கண்கள் சிவந்து செங்கண்ணாகும் அது ஒளியேறி செழியான என்றது ! சின்மயம் - கண் ! தவம் செய்து நான் முதலில் தரிசித்தது என் கண்ணைத்தான் ! சின்மயம் ! கண்ணைத்தான் சின்மயம் - பரிபூரணம் மெய்ப்பொருள் திருவடி என பலவாக கூறினர் பரிபாஷையாகவே ! தெரிசித்தது எதை நாதலிங்க மூர்த்தி பாதம்! நாதமயமான லிங்கமூர்த்தி - ஒளிவடிவம் பாதம் திருவடி - கண்! 

அதாவது தவம் செய்து முதலில் பார்ப்பது நம் கண்ணையே ! எப்படி தவம் செய்வது ? "விழியான பொருள் தானே மனதிற்கொண்டு "நம் விழியிலே - அதுதான் நம் மெய்யிலே உள்ள பொருள் அதிலே மனதை கொண்டு ! விழியிலே மனதை வைத்தால் காணலாம் விழிகளையே ! 

முடிவில் கற்பூர ஜோதியும் காணலாம் ! முடிவில் எல்லாம்வல்ல பரம்பொருளை உச்சியிலே 'அ ' காரத்திலே தான் கண்டேன் ! அ வாகிய கண்ணாலே தான் எட்டாலே தான் கண்டேன் என்கிறார் அகஸ்திய மகரிஷி !




நூள் - ஞானம் பெற விழி
பக்கம் 123
குருவே சரணம்

சஞ்சித கர்மம் எப்படி தீரும்?


நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
நனைந்தனைய திருவடி யென் தலைமேல் வைத்தார் "



நினைந்து நினைந்து 
உணர்ந்து உணர்ந்து 
நெகிழ்ந்து நெகிழ்ந்து 
அன்பே நிறைந்து நிறைந்து 
ஊற்றெழும் கண்ணீரதனால் உடம்பு நனைய 
ஞான தவம் செய்யும் அடியாரை நைய வைத்தார்! நைய புடைத்து வாட்டி எடுப்பார். 

நையாத மனிதர்க்கு உய்யாது கண்டு கொள்ளும் என்றே நந்தனார் 
சரித்திரக் கீர்த்தனை உரைக்கிறது! 

நம் சஞ்சித கர்மம் உட்பட எல்லா கர்மமும் பின் எப்படி தீரும்! 
சிலருக்கு கையில் திருவோடும் கிட்டும் தெருவோடும் போவார் ! 
நம்மை நைய புடைத்தாலும் கைவிட மாட்டான் கடவுள்! 
நம் நம்பிக்கையின் ஆழம் பரிசோதிப்பான் ! 

உயிரே போவதாக இருந்தாலும் அவனை திருவடியை விடக் கூடாது !!
சிக்கெனப்பிடிக்க வேண்டும்! காப்பான்? அருள்வான்! கடவுள்! 
எல்லா மும்மல வினைகளையும் நீக்கி அரவணைத்துக் காப்பார்! 

நனைந்த திருவடி - நினைத்து நினைத்து தவம் செய்தால் கண்ணீரால் 
நிரம்பிய நனைந்த திருவடி - நம் கண் குளம் போல் எப்போதும் 
தள தளத்துக் கொண்டேயிருக்கும் ! இதுவே ஆத்ம சாதகன் தோற்றம்!


நூல் - ழூவர் உணர்ந்த முக்கண்
பக்கம் - 145
குருவே சரணம்

செவ்வாய், 30 டிசம்பர், 2025

100 வருடத்தில் நாம் எத்தனை நாள் இறைவனை நினைந்து உணர்ந்து வாழ்ந்தோம்!



"வேதநூல் பிராயம்நூறு மனிசர் தாம் புகுவரேலும் 
பாதியும் உறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு பேதை 
பாலகனதாகும் பிணிபசி மூப்புத் துன்பம் ஆதலால் 
பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே"
 
- பாடல் -874

அரங்கமாநகரமான கண்மணி உள் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமா!

வேதம் உரைத்த படி மனிதனின் ஆயுள் நூறு வருடம் என்றாலும் அதில் பாதி தூக்கத்தில் கழிந்து போகும்! மீதி 50 ஆண்டில் பதினைந்து ஆண்டுகள் குழந்தைப் பருவத்திலும் போய்விடும்! அதன்பின் ஆசையில் அலையும் வாலிபப்பருவம் விவரம் இல்லாத பருவம், பலகாலும் நோயால் பீடித்த நிலை, தினமும் மூன்று வேளையாவது உணவு உண்ணும் வேளை, வயோதிக பருவம் இப்படி பல்லாண்டுகள் கழிந்துவிடுமே!? கஷ்டம் நஷ்டம் துன்பம் வேதனை இப்படி காலம் வீணாகுமே!

நீ வாழ்ந்த நாள் எத்தனை?

100 வருடத்தில் நாம் எத்தனை நாள் இறைவனை நினைந்து உணர்ந்து வாழ்ந்தோம்!

இப்படிப்பட்ட வீணான மானிட பிறவி எனக்கு வேண்டாம்!

இப்படிப்பட்ட மானிடன் பாவச்செயல்கள் பல செய்து சாகும் நேரத்தை தேடி ஓடுகிறான்! நல்லோரை சார்ந்து 👁️கண்ணனை👁️ எண்ணி பொய்த்தேகமதை புண்ணிய தேகமாக மாற்றுங்கள்!
இறைவனை🔥 உணர்ந்து எவ்வுயிரையும் நேசியுங்கள்! பரமபதம் கிட்டும்!👁️🔥👁️

பக்கம் 100
உலக குருவின் திருவடிகளே சரணம்
ஞான சற்குருவின் திருவடிகளே சரணம்

புதன், 19 நவம்பர், 2025

இறைவன் திருவடி பற்றி ஞானிகள் மகான்கள் கூறுவது



1 காளத்தியான் என் கண்ணில் உள்ளான் கான் - அப்பர் பெருமான்

2 கண்ணே சரீரத்தின் விளக்காய் இருக்கிறது - பைபிள்

3 சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ - ஞான கவி பாரதியார்

4 விண்ணொளி யாக விளங்கும் பிரமமே. கண்ணொளி ஆகுமடி குதம்பாய். கண்ணொளி ஆகுமடி.

5 சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி நேத்திரங்கள் போற்காட்ட நேராவே - வள்ளலார்

6 விண்ணிறைந்து நின்ற சுடர்போலச் சீவர்கள்கண்ணிறைந்து நிற்குஞ் சிவம். - அவ்வையார்

7 கண்ணின் மணியை கருத்தின் தெளிவை, விண்ணில் நின்று விளங்கும் மெய்யினை

எண்ணி எண்ணி இரவும் பகலுமே நண்ணு கின்றவர் நாந்தொழுந் தெய்வமே" - தாயுமானசுவாமிகள்

சனி, 20 செப்டம்பர், 2025

அருள் வெளிப்படுவது கண்ணில்



"அருளெங்குங் கண்ணான தாரறிவாரே"


ஞானவிளக்கம் :

அருள் வெளிப்படுவது கண்ணில்தானே !
அன்பு வெளிப்படுவது கண்ணில் தானே !
கருணை வெளிப்படுவது கண்ணில் தானே !
காமகுரோதாதி எல்லாமே கண்ணில்தானே வெளிப்படுகிறது !

கண் பார்ப்பதால் தானே எல்லா செயலும் வினையும் நடக்கிறது !
கண்ணால்தானே எல்லாம் நடக்கிறது.
நமது கண் ! உலக மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியே கண்மணி உள்ளது !
கோலிகுண்டு போல, பூமியைப்போல உருண்டு திரண்ட சதைக்கோளமே கண்மணி !

உலகிலுள்ள 700 கோடி மக்களுக்கும் ஒரே மாதிரி இருக்கும் இந்த கண்மணியின் மத்தியில்தான் ஒளியாக இறைவன் துலங்குகிறான் !

இந்த ஒத்து இருக்கும் கண்ணை அறிந்தவனே உத்தமன் !

மற்றவன் செத்தவன் !
ஒத்ததறிவான் உயிர் வாழ்வான் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

ஞாயிறு, 24 நவம்பர், 2024

மனிதன் என்பவன் யார்?

 மனிதன் என்பவன் யார்?

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமாக போற்றுபவன் மனிதன்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று உணர்ந்து தொழுபவன் மனிதன்.
இணையாக உள்ள திருவடியை அறிந்து சாதனை செய்து வருபவன் மனிதன்.
ஈடில்லா இறைவனை அடைய விடாது தவம் செய்பவனே மனிதன்,
உலக மக்களனைவரையும் தன்னைப்போல் கருதுபவனே மனிதன்.
ஊன்றியிருந்து உள்ளே உறைபவனை தேடுபவனே மனிதன்.
எட்டும் இரண்டும் அறிந்து உணர்ந்து எட்டாமிடம் இருப்பவனே மனிதன்
ஏகாந்தவெளியிலே ஏகாந்தமாய் திரிபவனே, இருப்பவனே மனிதன்.
ஐந்தும் ஒன்றான விந்தையை பார்த்து அதன்கண் இருப்பவனே மனிதன்.
ஒளி ஒன்றே உள்தெளிவார்க்கு என உணர்ந்தவனே மனிதன். ஓங்காரமே உலகாழும் பரம்பொருள் என உரைப்பவனே மனிதன்.
ஒளஷதம் நீயே என இறைவனை சரணடைபவனே மனிதன்.
இப்படி மனிதனை நாம் அடையாளம் காணலாம். மனதை இதம் செய்ய தெரிந்தவனே மனிதன். மனம்போன போக்கில் போகாமல், நல்வழி செல்பவனே மனிதன்.
(அருள்மணி மாலை)


🔥 திருமூலர் கூறும் ஞானம் 🔥



🔥 திருமூலர் கூறும் ஞானம் 🔥

"திருவடியே சிவ மாவது தேரில்
திருவடியே சிவலோகஞ் சிந்திக்கில்
திருவடியே செல் கதியது செப்பில்
திருவடியே தஞ்சம் உள்தெளி வார்க்கே"

திருமந்திரம் - 138

இறைவனின் திருவடியே நமது கண்கள் !
சற்குரு உபதேசம் பெற்று தவம் செய்தால் நம் உள்ளம் புரிந்து கொண்டால் நம் கண்களே சிவமாகிய ஒளி உள்ளது என தெளிவாக உணரலாம் ! தேறிட்டாம்பா ! என நம் உறுதியை பார்த்து மற்றவர் கூற வேண்டும் !

திருவடியாகிய நம் கண்களே ஒளியுள்ள ஆத்ம ஸ்தானத்திற்கு நம்மை அழைத்துச் செல்லுமாதலால் அதுவே சிவலோகம் அல்லவா ?

எப்படிபோகும் ? நாம் கண்ணில் மணியில் ஒளியை வைத்து சிந்தித்தால் அல்லவா செல்லும் !
மணியில் மனதை இருத்து !

திருவடியே நமக்கு கதி மோட்சம் தருவதாகும்.
திருவடி மூலமாகத் தானே சிவலோகம் சேரலாம் !
சேர்ந்து சிவ நடனம் காணலாம் ! கண்டால் தானே கதி மோட்சம் !
திருவடியே தஞ்சம் என பரிபூரண சரணாகதியானாலே நம் உள்ளம் தெளிவாகும் ! அதாவது வினைகளற்று பரிசுத்தமாகும் ! அழுக்காகிய மும் மலம் அகன்று ஆத்மா தெளிவாக துலங்கும் !

▪️எல்லாவற்றுக்கும் தேவை திருவடி !
▪️எல்லாம் பெற தேவை திருவடி !
▪️நாம் நாட வேண்டியது திருவடி !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

திங்கள், 5 ஆகஸ்ட், 2024

 🔥திருவடிப் புகழ்ச்சி - திருஅருட்பா🔥 


பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம் 

   பதித்துவ பரோபரீணம்

பஞ்சகிர்த்திய சுத்த கர்த்தத்துவம் தற் 

   பரம் சிதம்பர விலாசம் 

பகர்சுபாவம் புனிதம் அதுலம் அதுலிதமம் 

   பராஅம்பர நிராலம்பனம் 

பரவு சாக்ஷாத்கார நிர் அவயவம் கற் 

   பனாதீத நிருவி காரம்


பரிபவ விமோசனம் - பரிபவம் + விமோசனம் அவரவர் பரிபக்குவத்திற்கு, வினைக்குதக்கபடி வாழ்வுக்கு தக்கபடி அமையும் நிலையிலின்று மீட்டு விமோசனம் உயர்வு கொடுப்பது நம் கண்மணியே ! 

குணரகிதம் - குணங்களின் தொடர்பு அற்றது ! 

விசுவம் - உலகம் ! 

பதித்துவம் - பதியாய் விளங்கும் தன்மை பெற்றது ! 

பரோபரீணம் - எண்ணிய உடனேயே உலகெங்கும் செல்லும் ஆற்றல் பெற்றது ! 

பஞ்சகிர்த்தியம் -படைத்தல் காத்தல் மறைத்தல் அருளல் அழித்தல் என்று இறைவன் தொழில் ஐந்து ! 

சுத்தகர்த் தத்துவம் - அனைத்தினுக்கும் கர்த்தாவான சுத்தபரம்பொருள் ! 

தற்பரம் - பரம்பொருளைவிட மேலானது இல்லை ! 

சிதம்பர விலாசம் - சின்ன இடத்தில் மேடையில் துலங்கி விளங்குவது ! வெளியிலே ஒளி !

பகர்சுபாவம் - தானாக சுயமாக தோன்றி துலங்கும் ஒளி எல்லோரும் சொல்வது ! 

புனிதம் - பரிசுத்தம் - தூய்மை ! 

அதுலம் அதுலிதம் - அது - பரம்பொருள் எதோடும் ஒட்டாதது. அது எதற்கும் ஒப்புமாகாது ! 

அம்பராம்பரம் - ஆகாயத்தையும் தன்னுள் கொண்ட அகண்டவெளி ! 

நிராலம்பனம் - நிர் + ஆலம்பனம் எவ்வித பற்றும் ஆதாரமும் இல்லாதது ஆனால் எல்லாவற்றிற்கும் ஆதாரமானது ! 

பரவுசாக்ஷாத்காரம் - சும்மா இருந்தால் சாக்ஷாத் அந்த பரம் பொருளையே நம்முன் எங்குமாய் பரந்து இருப்பதை காணலாம் ! 

நிர்அவயவம் - நம்போல் உருவம் அவயவங்கள் இல்லாதது ! ஒளிக்காட்சி ! 

கற்பனாதீதம் - கற்பனைக்கு எட்டாதது ! 

நிருவிகாரம் - விருப்புவெருப்பு அற்றவன் விகாரம் ஆசை அற்றவன் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !! 

 - ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா 

 www.vallalyaar.com

புதன், 26 ஜூன், 2024

நம் கண்களில் உறையும் ஜோதியை

🔥திருமந்திரம் 20🔥


"முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த

அடிகள் உறையும் அறனெறி நாடில்"



ஞானவிளக்கம் :

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த :


ஒவ்வொரு மனிதனும் என்று பிறக்க வேண்டும் எப்படி அதன் முடிவு அமைய வேண்டும் என்பதை முன்னரே வகுப்பவன் யாராக இருக்க முடியும் ? எல்லாவற்றையும் நடத்துபவன் இயக்குபவன் தானே இறைவன் ! இதுவே தேவ இரகசியம் !

நாம் என்று ? எங்கு ? யாருக்கு ? பிறக்க வேண்டும் என தீர்மானித்து நம்மை இந்த உலகில் பிறப்பிக்க அருள்பவன் இறைவன் அல்லாமல் வேறு யார் ?

அடிகள் உறையும் அறனெறி நாடு :

அடிகள் - திருவடிகள் இறைவனின் திருவடிகள் தான் நம் கண்கள் என பற்பல ஞானிகள் பகர்ந்துள்ளனர். வேதங்களும் அவ்வாறே கூறுகின்றன.

அங்ஙனம் திருவடியாகிய நம் கண்களில் உறையும் ஜோதியை உணர்ந்து தவம் செய்வதே உத்தமம் !

கண்களில் ஜோதி இருப்பதை உணர்ந்து அதை நினைத்து உணர்ந்து நெகிழ நெகிழ தவம் செய்வதே தூய நெறி என அற நெறி என இறைவனை அடைய வழி காட்டும் ஒப்பற்ற வழி நெறி என்று திருமூலரும் தெளிவாக உரைக்கின்றார்.


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

வியாழன், 4 ஏப்ரல், 2024

திருமந்திரம் ஞானவிளக்கம்


🔥திருமந்திரம் 373 - ஞானவிளக்கம்🔥


"வானே ழுலகுறும் மாமணி கண்டனை
யானே அறிந்தேன் அவன் ஆண்மையாலே"

வானேழுலகுறும் - இப்பிரபஞ்சம் எல்லையில்லாமல் விரிந்து பரந்த வான் வெளிதானே !
எல்லாமே வான் வெளியில் வெட்ட வெளியில் தானே கொட்டிக்கிடக்குது !
அப்படிப்பட்ட வான்வெளி எங்கும் நிறைந்திருக்கும் ஒவ்வொரு அணுவிலும் அணுவாக ஒளியாக இருப்பவனல்லவா ஆண்டவன் ! ஆண் - மகன் !

ஒவ்வொரு அணுவையும் ஆண்டு கொண்டு இருப்பவன் ! இப்பிரபஞ்சத்தின் ஒரே ஆண் ! புருஷோத்தமன் இறைவனே !

பரமாத்மாவாகிய இறைவனே ஆண் !
ஜீவாத்மாவாகிய நாமனைவருமே பெண் !

அந்த ஆணுடன், ஆண்- டவன், ஆண் அவனுடன் சேர்வதே பெண்ணாகிய நமக்கு பெருமை ! பெண்ணாகிய நம் வாழ்வும் பூரணமாகும் !

ஞானம் எவ்வளவு சுவையானது பாருங்கள் !

🙏இந்த ஆண்மகன் என் மணியிலும் கண்மணியின் உள்ளிலும் இருப்பதை யான்
அறிந்தேன் குரு உபதேசத்தாலே ! அறிவித்தான் என் கண்மணியான ஒளியே !🙏

அவன் அருளாலே அவன் திருவடியை என் கண்மணியை அறிந்து உணர்ந்து அவனையே அடைந்தேன் !

எல்லாம் அவன் செயல்தானே !

அவனே - சிவனே என் கண்ணாக இருந்து அறிவித்து தன்னோடு என்னை சேர்த்தும் கொண்டான் !

எல்லாம் அவன் செயலே தான் ! சந்தேகமேயில்லை !

"அவனருளாலே அவன் தாள் பணிந்து" என மணிவாசகர் மணிவாசகம் - திருவாசகத்தில் பகர்ந்ததை உணர்க !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

வியாழன், 9 நவம்பர், 2023

இறைவனோடு ஒன்றுவது எவ்வாறு?


‐----------------------------------------------------------------

இறைவனோடு ஒன்றுவது எவ்வாறு?

‐----------------------------------------------------------------


இறைவன் திருவடியாகிய தன் கண்களை எண்ணி ஞான தவம்
செய்வோருக்கு தித்திக்கும் சுவைமிகு இனிக்கும் கரும்பு போன்றவர் இறைவன்!

இறைவனை, கண்மணி மத்தியிலே, நம் மனதை ஊன்றி உணர்ந்து, நெகிழ்ந்து உருகுவார், ஞானதவம் செய்வாருக்கு எல்லா இன்பமும் தருவார் கடவுள் ! அவர் உறையும் இடம் கண்மணி மத்தி உச்சியேயாகும்!

கண்மணி உச்சியான ஊசிமுனை துவாரத்தைப் பற்றி, இரு கண்ணும் ஒன்றும் படி விடாது தொடர்ந்து ஞானதவம் செய்பவர் ஒன்றலாம் இறையோடு!


ஞானசற்குரு திரு சிவ.செல்வராஜ் அய்யா திருவடிகளே சரணம் சரணம்!
புத்தகம்: மூவர் உணர்ந்த முக்கண்
பக்கம்: 57

திங்கள், 27 ஜூன், 2022

அகஸ்தியர் கூறும் ஞானதவம்


🔥 அகஸ்தியர் கூறும் ஞானதவம் 🔥


"கண்ணில் நின்ற ஒளிபாரு வெளியைப் பாரு
காலடங்கி யாடுகின்ற கருவைப்பாரு
விண்ணில் நின்று பொருள்சொன்ன குருவைப் போற்றி”
- அகஸ்தியர் மெய்ஞ்ஞான சூத்திரம்




வெளிப்படையாகவே கூறிவிட்டார் அகத்தியர் !
கண்ணில் நின்ற ஒளிபாரு ! இதுவே ஞானதவம் !

கண் ஒளியை பார்த்து பார்த்து உணர்ந்து உணர்ந்து கண்மணி நடுவே ஊசி முனைவாசல் வழி உட்புகுந்து உள்ளே வெட்ட வெளியைப்பாரு !


நீ உள்முகமாய் உணர்வோடு சும்மா இருக்கும் போது வெளியே கண்இரண்டும் 
அடங்கிப்போகும் ! இரு கண்ணும் உள்ளே உள்ள உன் கருவாம் 
உன் உயிரைப் பார்த்து அதோடு லயிக்கும் !!
இதை விண்ணில் நின்று, எல்லாமே வெட்டவெளிதான் என உணர்ந்து 
அங்கிருந்து உபதேசம் தீட்சை செய்தகுருவை போற்று !

🙏உன் ஞானசற்குருவை எப்போதும் போற்றி பணிந்து தொண்டுசெய் !🙏
"குருவினடி பணிந்து கூடுவதல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம்"

- ஒளவைக்குறள் !

குரு நமக்கு அவர் உயிரை கொடுத்தல்லவா நம் உயிரை நமக்கு உணர்த்துகிறார் ?!

நமக்கு இரண்டாவது பிறப்பு தரும் குருவை வணங்காமல் 
இருப்பது கொடும் பாவமல்லவா ?

குருவைப் பணி !

குரு பார்க்க கோடிவினை தீரும் !


இறைவன் திருவடிகளே நம் கண்கள்!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

புதன், 4 மே, 2022

தட்சிணாமூர்த்தி - முயலகன்

"தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்" பாடல்-140 
' நமது ஐம்புலன்களும் மனம் போன போக்கிலே புறத்தே அலைந்து திரிகின்றன! என் செய்வது? "மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்" என ஒளவையார் கூறியுள்ளாரே! என் செய்வேன்?

 புலன்களை 'தன்னில்' நிறுத்தினால் நாய் மாதிரி வெளியே திரியாது! தன்னை - தன் தீயை உணர வழியான கண்ணில் தன்னில் மனதை நிறுத்தினால்? மனம் அடங்கும்! இறைவன் திருவடியில் நம் மனதை போட்டால் மட்டுமே மனம் அடங்கும்! 

இறைவன் திருவடி நம் கண்கள் தானே! கண் பார்த்து தானே மனம் செயல்படுகிறது. புறப்பார்வையை நிறுத்திவிட்டால்? அதற்காக கண்ணை மூடுவதல்ல! அது மனதுக்கு அதிக சக்தியூட்டி விடும்! கண் திறந்திருக்கணும் ஆனால் பார்க்கக்கூடாது எப்படி? கண்ணில் மணியில் உணர்வை, குருமூலம் தீட்சை மூலம் பெற்று இருத்தினால், மனம் கண்மணி உணர்விலே லயித்து நின்றால் மனம் வேறு எங்கும் போகாது! உணர்வு மணியிலே இருக்கும் வரை மனம் அதிலேயே இருக்கும்! இப்படியே இருக்க இருக்க புறப்பார்வை அற்று விடும்! அகப்பார்வை கிட்டும்! 

இதுவே மடை மாற்றம் என்பதாம்! புறப்பார்வையை அகத்தே திருப்ப இது ஒரு தந்திரம். திருமந்திரம் முதலாம் தந்திரம் கூறும் உபதேசம் இதுவே! இந்த மடைமாற்றம் "தன்னில்” தான் மாறும்!
இதுவே தவம் செய்வதும் ஏற்படும் நிலையுமாகும்! மனம் ஆகிய முயலகன் அரக்கனைத்தானே தட்சிணாமூர்த்தி தன் பாதங்களில் போட்டு மிதித்து வைத்திருக்கிறார். இறைவன் திருவடியில் நம் கண்களில் நம் மனதை போட்டால் தான் அது சேட்டை பண்ணாது! போகப் போக அடங்கும்! எந்த மனம் வினையாற்றுகிறதோ அதே மனம் இறைவனை அடையவும் உதவியாகிவிடும்! நம் விரோதியாகிய நம் மனமே நாம் ஞானம் பெறவும் உதவியாக இருக்கும்! இது ஒரு தந்திரம்! மந்திர மணி மாலை பக்கம்:41 குருவின் திருவடி சரணம் wwww.vallalyaar.com

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

சித்தர் போகர் பெண்ணோடு போகம் பண்ணியவரல்ல!

 "இலையா மிடையி லெழுகின்ற காமம்"

திருமந்திரம் பாடல் - 2141


மனிதன் பிறக்கிறான் - குழந்தை! ஒன்றுமே தெரியாது! பச்சை மண்! எந்த குசவன் கையில் அகப்படுகிறதோ அந்தவித மண் பாண்டமாகிறான்! ஆத்திக குடும்பத்தில் பிறந்தது ஆன்மீக சூழலில் வளர்வது ஆண்டவனை அறிய உணர வழிகாட்டும்! நாத்திக, குடும்பத்தில் பிறப்பது தான் பெரிய மேதை என கருதி முட்டாள்தனமாக வாழ்வது அந்த சூழ்நிலை இதுவரை யாரும் உருப்பட்டதேயில்லை! 

குழந்தை வளர்ந்து பாலனாகி பின் வாலிபனாகிறான் அப்போது நிகழும் உடல் வளர்ச்சி, பசி தாகம் தூக்கம் போல் காமமும் ஏற்படுகிறது மனிதனுக்கு! அந்த பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாலிப பிராயத்திலே ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் இந்த இனக்கவர்ச்சி, காமம் கட்டுப்பாடுடன் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்! வாழ்க்கையின் இடைப்பட்ட காலத்தில் - வாலிபத்தில் வந்து வயோதிகத்துக்கு முன்னால் முடிந்து விடுவது மட்டுமல்ல! நமது உடலின் இடையில் - இடுப்பு பிரதேசத்தில் ஏற்படும் உணர்வாலும் காமம் தலைதூக்குகிறது. இந்த இடையில் ஏற்படும் மாற்றமே, இடைப்பட்ட காலமே ஒரு மனிதன் பண்படும் காலமாகும்! 

நமது முன்னோர்கள் மனித வாழ்வை மேம்படுத்த சமுதாய அமைப்பை ஏற்படுத்தி ஒழுக்கம், பண்பை போதித்தார்கள்! பக்தியை ஊட்டினார்கள்! இயல் இசை நாடகமென முத்தமிழாலும் இறைவனை வழிபட, உணர வழிகாட்டினார்கள்! குருகுல வாழ்வை ஏற்படுத்தி பாலப் பிராயத்திலேயே நல்ல பண்போடு வளர வழி காட்டினார்கள்! மனிதன், மனிதப்பிறப்பெடுத்ததோடு நின்றுவிடாமல், மிருகம் போல் வாழாமல், மனிதனாக வாழவும்

வழிகாட்டினார்கள்! மனிதன் எப்போது மனிதனாவான்? பஞ்சமாபாதகமான பொய், கொலை, களவுகள், காமம் இவைகளை தன் வாழ்வில் சேர்க்காமல் இருந்தால்தான் மனிதன்! மனதில் எழும் மும்மலமான ஆணவம் கன்மம் மாயையின் செயல் ஆசை, காமத்தில் தான் உதயமாகிறது! "மாயை" மனிதனின் கர்ம வினைப்படி அவனை ஆட்டுவிக்கிறது! சிக்கிவிடாதே சீரழிந்து போவாய்! காமம் மனித

இயல்பு! சீராக்கிக்கொள்! திருமணமாகி ஏகபத்தினி விரதனாய் வாழு! மனைவியை காமக்கிளத்தி என்றும் சொல்வர்! மனைவியோடு மட்டும் காமம் வைத்துக்கொள்! பிற,உலக மாதரெல்லாம் தாய் என்று கொள்!

மனைவியோடும் மாதம் இருமுறை உறவு கொள்ளலாம்! அதுவே உத்தமம்! விந்துபலமே விந்துநாதம் பெற பேருதவியும் ஆகும்!

ஜாக்கிரதை! உடல் நலமாக, பலமாக, சீராக காம வசப்படாமல் இருக்க வேண்டும்! "காம சூத்திரம்" என்றொரு நூலை வாத்ஸ்யாயன மகரிஷி எழுதியுள்ளார்! ஒரு மகரிஷியே அதை எழுதி மக்களுக்கு நல்வாழ்வு வாழ வழிகாட்டியுள்ளார்! காமத்தை ஆபாசமாக்கி விடாதீர்கள் அழிந்துதான் போவீர்கள்! காமம் சாப்பாட்டில் சேர்க்கும் ஊறுகாய் போல இருக்க வேண்டும்! இலேசாக தொட்டுக் கொள்ளலாம்! ஊறுகாயை உணவாக கொண்டால் உயிர் தங்காது! திருமணமாகும் வரை ஆணும் பெண்ணும் ஆன்மீக உணர்வோடு வாழ வேண்டும்!

பக்தி ஞானஈடுபாடு உடையவராக திகழ வேண்டும்! நமது பாத பண்பாடு இதுவே! திருமணமான பின்னரே கணவன் மனைவி கருத்தொருமித்து  இல்லறநெறியோடு இறை உணர்வோடு வாழ வேண்டும்! சற்புத்திரர் பத்திரிகளை பெற்று பக்தியை ஊட்டி பண்போடு வளர்க்க வேண்டும் பாலபிராயமுடியு முன்னே தக்கதொரு ஆன்மீக குருவிடம் சேர்ப்பித்து பக்தி ஞான பாடம் படிக்கச் செய்ய வேண்டும்! பிள்ளைகளை பெற்றால் போதாது?!

தக்கதொரு சன்மார்க்ககுருவிடம் உபதேசம் பெறச் செய்ய வேண்டும்! மாதா பிதா தன் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக குருவை காட்ட வேண்டும்! குருவைக் காட்டாத பெற்றோர் வீண்! திருமணத்திற்கு பின்தான் காமம்! அதுவரை பக்தியுடன் ஒழுக்கத்துடன் பகவானை பணிய வேண்டும்! பண்பட்ட வாழ்க்கை அருள்வான் ஆண்டவன்! இந்த உலகில் எல்லோருக்குமே பெரிய சவாலாக இருப்பது காமமே! பெரிய பெரிய சாமியார்களெல்லாம் கூட தடம் புரண்டு போகிறார்கள்! சாமானியன் எம்மாத்திரம்! கடவுளே என்றிருந்தால், பெண்களையெல்லாம் தாயாக பார்த்தால் காமத்திலிருந்து தப்பிக்கலாம்! அபிராமி பட்டர் எல்லா பெண்களையும் தாய் அபிராமியாகவே பார்த்தார்! எல்லா ஞானிகளும் காமத்திலிருந்து மீண்டதால் தான் ஞானம் பெற்றனர்! காமத்தில் மூழ்கிகிடந்த அருணகிரி நாதர் காமத்தை விட்டார்-கடவுளை தொட்டார்! காமம் விலக கடவுளை நினை! கடவுளைப் பற்றி பேசும் சத்சங்கத்தில் சேர்! 

அசைவ உணவு காமத்தை உண்டாக்கும்! சைவ உணவே சன்மார்க்க உணவு! சாத்வீக குணம் சைவ உணவால் வரும்! அன்பு காட்டு! எல்லா உயிரையும் நேசி! எல்லா உயிரும் இறைவன்தான்! ஆசை கொள்ளாதே! காம உணர்வுக்கு அடிமையாகாதே! போகர்

சித்தர் பெண்ணோடு போகம் பண்ணியவரல்ல! பரம்பொருளோடு புருஷோத்தமனான இறைவனோடு எப்போதும் கலந்திருந்தவர்! அதனால் தான் போகர்! “பிறந்த இடத்தை நாடுதே பேதை மடநெஞ்சம்! கறந்த இடத்தை நாடுதே கடைகண்" என்றார் பட்டினத்தார்! இந்த பாட்டிற்கு படித்த முட்டாள்கள் எல்லாம் ஆபாசமாக பொருள் கொண்டனர்! பட்டினத்தார் மாபெரும் ஞானியல்லவா? அவர் உயர்ந்த ஞானத்தையல்லவா சொல்லியிருப்பார்?! அதை சிந்திக்க வேண்டாமா?

அடியேன் 1992-ல் முதன்முதலாக எழுதிய "கண்மணி மாலை" நூலிலேயே இதன் ஞான விளக்கத்தை சொல்லியிருக்கிறேன்! திருவருட்பிரகாச வள்ளலார் அருளால் அடியேன் எழுதி வெளியிட்டேன்! இதுவே மெய்ஞ்ஞானம்! பிறந்த இடம் - நாம் பிறந்தது பரமாத்மாவிலிருந்தல்லவா! நம்மை பேதை என்கிறார் -  பெண்ணின் பருவம் இது! ஜீவாத்மாக்களாகிய நாம் பெண் அம்சம் பேதைப்பெண்! சீவனாகிய பெண்பேதையாகிய நாம் நாட வேண்டியது எப்போதும் சிவனாகிய பரமாத்மாவாகிய நாம் பிறந்த இடத்தையே!

கறந்த இடம் - நாம் கண்மணி ஒளியை ஞானசற்குருமூலம் தூண்டி  பின் தொடர்ந்து தவம் செய்யச் செய்ய நம் கண் கடைசியில் உள்ளே போய் சேரும் இடம் கடைக்கண் இடம் ஆத்மஸ்தானம் அங்கே போனால் கிட்டும் அமுதம்! அந்த அமுதம் சாப்பிடவே ஜீவாத்மாக்களெல்லாம் துடித்துக் கொண்டிருக்கிறது! கடைசியில் கண்போய் கடைக்கண் சேர்ந்து நாடினால்தான் அமுதம் கிட்டும்! அதைத்தான் பட்டினத்தார் வெகு அழகாக கூறியுள்ளார்! காமம் நிறைந்த மனிதனுக்கு, மனம் படைத்தவனுக்கு எல்லாமே ஆபாசமாகத் தெரியும்! கடவுளை சதா சர்வ காலமும் சிந்தையில் நிறுத்தி தவம் செய்பவர் எங்கும் எதிலும் கடவுளையே காண்பர்! அறிவுடையோர் எப்பொருள் யார் சொன்னாலும் மெய்ப்பொருளாகவே காண்பர்! அறிவு தானே ஞானம்! "காமமகற்றிய தூயனடி சிவகாமி நேயனடி" என்று வள்ளலார் பாடுகிறார். நாம் சிவகாமி அம்மையை சரணடைய வேண்டும்! சதாகாலமும் சிவத்தை காமமுற்றவளே சிவகாமி! நமக்கு சிவத்தை காமிக்கின்றவளே, காண்பிக்கின்றவளே சிவகாமி! 

அந்த சிவகாமிதான் தாய் - வாலை - கன்னி'ய' குமரி! தாயை பணிந்தால் சரணடைந்தால் காமத்திலிருந்து விடுபடலாம்! பணியுங்கள்! பார்க்கலாம்?! அடியேன் பார்த்தேன்! பரவசமானேன்! பகவதி அம்மா பரிவுடன் எங்களை காத்தருள்கிறாள்! ஆன்மீக குருவாய் எம்மை அமர்த்தி நாடி வருபவர் ஞானம் பெற மெய்ப்பொருள் உபதேசம், திருவடி தீட்சை செய்யும் பணியை செய்ய வைத்து காத்தருள்கிறாள்! இந்த வாலைத்தாயின் கன்னியாகுமரியைவிட சிறந்த கோவில் இந்த உலகத்திலேயே இல்லை!!

                 படியுங்கள்! பண்படுங்கள்!  பரம்பொருள் அருள் கிட்டும்!

                       🔥அருளியவர்🔥: 

         ஆன்மீக செம்மல், ஞானசித்தர்,          ஞானசற்குரு சிவ செல்வராஜ் 

               www.vallalyaar.com

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

திருவாசகம் - சிவபுராணம் -2

             " ஏகன்  அநேகன்  இறைவ  னடிவாழ்க "

             ஏகன்  -  இறைவன்  ஒருவரே!  அநேகன்  -  எல்லா  ஜீவராசிகளிடத்தும் 
உயிராக,  அநேக  யோனி  பேதமாகவும்  இறைவன்  துலங்குகிறான்!  இப்படி 
எல்லாம்  வல்ல  இறைவன்  ஒருவரே,  எல்லா  உயிர்க்கும்  உயிராக  துலங்குகிறார்!
அப்படி  அவர்  துலங்கும்  இடமே  அவர்  திருவடியாக  கருதப்படும்.  அது  நமது 
கண்களே.  அது  வாழ்க  என்றுரைக்கிறது  மணிவாசகமான  திருவாசகம்!


              " வேகங்  கெடுத்தாண்ட  வேந்த  னடிவெல்க "

             நம்  மனமே  அதிவேகமாக  செயல்படுவது.  நாம்,  நமக்கெல்லாம் 
வேந்தனான -  அரசனான  அந்த  இறைவன்  திருவடியில்  சரணடைந்தால்,
நம்  மனதை  வேகத்தை  கட்டுப்படுத்தி,  பின்  இல்லாமலாக்கி  அருள்வான் 
அத்திருவடி  வெல்லட்டும்.

              " பிறப்பறுக்கும்  பிஞ்ஞகன்றன்  பெய்கழல்கள்  வெல்க "

             எண்ணிலா  பிறப்பெடுத்து  கர்மவினையால்  துன்புறும்  நம்மை  
மீண்டும்  பிறவாமல்  தடுத்து  காப்பது  இறைவன்  திருவடி -  கழல்களே 
-  கண்களேயாகும்!  அது  எப்படி  இருக்கிறது  தெரியுமா?  பிஞ்சாக  -
இளசாக -  பாப்பா  என  சொல்வோமல்லவா?  நம்  கண்மணிதான்  அப்படி 
உள்ளது.  அங்கே  தான்  கண்ணீர்  அருவியென  பெய்து  கொண்டே  இருக்கும் 
தவம்  செய்யும்  போது!  அது  வெல்லட்டும்.  வெற்றி  கிட்டட்டும்.

              " புறத்தார்க்குச்  சேயோன்றன்  பூங்கழல்கள்  வெல்க "

             திருவடியை  அடையாதவனுக்கு,  அறியாதவருக்கு  புறத்தார்க்கு 
எட்டாத  தூரத்தில்  இருப்பவன்  இறைவன்!  இறைவன்  திருவடியே  நம் 
கண்கள்  என  அறிந்தோர்க்கு  எட்டை  எட்டிப்  பிடித்தவர்க்கு  இறைவன் 
குழந்தையைப்  போலவே!  அவன்  கழல் -  திருவடி -  பூப்போன்ற  பாதமே!
அது  வெற்றி  பெறட்டும்.

               " கரங்குவிவார்  உள்மகிழுங்  கோன்கழல்கள்  வெல்க "

              இரு  கரங்கூப்பி  வணங்குதல்  புற  வணக்கம்.  இரு  கரம்  என்பது 
மெய்ஞானத்தில்  இரு  கண்களே!  இறைவனுக்கு  கால்  நமக்கு  கை  நம்  
இரு  கண்களே!  நம்  இரு  கரங்களை  -  கண்களை  உள்ளே  குவிப்பதே 
ஞான  தவம்!  அங்ஙனம்  தவம்  செய்வோருக்கு  மகிழ்வுடன்  பேரின்பம் 
அருளுவது  இறைவன்  -  தலைவன்  திருவடிகளே!  அது  வெல்க!

               " சிரங்குவிவார்  ஓங்குவிக்குஞ்  சீரோன்  கழல்  வெல்க "

              நமது  சிரசின்  உள்ளே  மத்தியில்  நமக்கு  சீர் -  கண்  கொடுத்த  
சீரோன்  இறைவன் -  ஆத்மாவாய்  இருப்பதை  அறிந்து,  சீர்கொண்டு -
கண்களை  அகமுகமாக  குவிப்பவரை -  திருவடி  ஒளியை  ஆத்ம  ஜோதியாய் 
ஓங்கச்  செய்வான்  இறைவன்!  அந்த  திருவடி  வெல்க. 

ஞான  சற்குரு  சிவசெல்வராஜ்  ஐயா 
www.vallalyaar.com


திருவாசகம் - சிவபுராணம் -1

           " நமச்சிவாய  வாஅழ்க  நாதன்தாள்  வாழ்க 
             இமைப்பொழுதும்  என்நெஞ்சில்  நீங்காதான்  தாள்வாழ்க "

             இறைவனை  வாழ்த்தி  நமச்சிவாய  வாழ்க  என்றும்,  நமச்சிவாயா  
என்னிடம்  வா!  என்னை  நீ  அள்ளுக -  அள்ளிக்கொள்  -  சேர்த்துக்கொள் 
என்பதனையே  வாஅழ்க  என்றது  மணிவாசகம்!

             இறைவனே  எவ்வுயிர்க்கும்  நாதன்  -  தலைவன்.  அந்த  நாதனுடைய 
தாள்  திருவடி  -  மெய்ப்பொருள்  -  நம்  கண்கள்.  நம்  கண்களே  நம்  நாதனாம் 
இறைவனின்  திருவடி  அது  வாழ்க  என்றது  மணிவாசகம்!

            இறைவன்  இமைப்பொழுதும்  நீங்காமல்  என்  நெஞ்சில்  -  நெஞ்சு 
என்பது  ஐஞ்சும்  சேர்ந்த  இடம்!  அதாவது  ஐம்பூதமும்  ஒத்த  இருக்கும் 
இடம்!  நமது  கண்ணிலே  தான்  இருக்கிறது.  கண்ணையே  நெஞ்சு  என்பதே 
மணிவாசகம்!  அப்படி  சதா  சர்வ  காலமும்  என்  நெஞ்சிலே,  என்  கண்ணிலே,
மணியிலே  ஒளியாக  ஒளிரும்  தாள்  -  திருவடி  வாழ்க!

            " கோகழி  யாண்ட  குருமணிதன்  தாள்வாழ்க "

             கோகழி  -  பெரிய  உப்பு  ஆறு.  அதாவது  கழிமுகம்  என்போமல்லவா?
அதாவது  ஆறு  கடலில்  கலக்கும்  இடம்!  இங்கே  பெரிய  கழிமுகமாக  நமது 
கண்ணே  விளங்குகிறது!  கண்ணீர்  உப்புதானே!  கோ  என்றால்  இறைவன் 
-  தலைவன்!  இறைவன்  உள்ளே  இருக்கிறார்  அதன்  அருகே  கழிமுகம்!
கடலாகிய  இறைவனின்  முன்  உள்ள,  ஆறு  கடலில்  கலக்குமிடம்  கழிமுகம்!
அதனை  ஆண்டு  கொண்டிருப்பவன்  தான்  குருவானவன்  அதுவே  நம்  மணி 
கண்மணி  அதுவே  இறைவன்  திருவடி  அது  வாழ்க  என்பதே  மணிவாசகம்.


           " ஆகமம்  ஆகிநின்  றண்ணிப்பான்  தாள்  வாழ்க "

            ஆகமம்  எல்லாம்  -  வேதங்கள்  ஆகமங்கள்  புராண  இதிகாசங்கள்  எல்லாம் சொல்வது  இறைவனைப்  பற்றித்தானே!  எல்லா  ஆகமப்  பொருளுமாகி  நிற்பவன் இறைவனே!  அவன்  வேறு  எங்கோ  தூரத்தில்  இல்லை!  நமக்கு  வெகு  அண்மையில்தான்! நம்  உடலிலே  கண்ணிலே  மணியோடு  ஒளியாகத்தான்  துலங்குகிறான்  அதுவே  இறைவன்  திருவடி!  வாழ்க!  என்கிறது  மணிவாசகம்!

ஞான  சற்குரு  சிவசெல்வராஜ்  ஐயா 
www.vallalyaar.com

திங்கள், 22 ஜூலை, 2019

சீடனாகாதவன் தெளிவில்லாதவன்

"தெளிவறி யாதார் சிவனை யறியார்
தெளிவறி யாதவர் சீவனுமாகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே"
                       பாடல்−1480
           
குருவிடம் உபதேசம் தீட்சை பெற்றாலே தெளிவு பெறலாம்!? குருஉபதேசம் தீட்சை பெறாதவர்களே தெளிவில்லாதவர்! அறிவில்லாதவர்! சீடனாகாதவன் தெளிவில்லாதவன் முட்டாள்! முட்டாள் எப்படி சிவனை இறைவனை அறிவான்?

இறைவனைப் பற்றிய தெளிவான கருத்து இல்லாதவன் எப்படி இறைவன் திருவடியை அறிவான்?! அறிந்தால் தானே தெளிந்தால் தானே, தான் தான் சீவன் அந்த சிவனின் அம்சம் என அறிவான்! சீவனான சிவனே நம் உள்ஒளி! ஒளியே சிவம்! என சிந்தை தெளியாதவன், குரு உபதேசம் பெறாதவன், சீடனாகாதவன் உணர மாட்டானே!

குரு உபதேசம் பெற்று சிந்தை தெளிந்து திருவடியறிந்து தவம் செய்து சீவனே சிவன் அவனே நம் உள்ஒளி என உணர்ந்தால்லவா பிறவிப் பிணிதீரும்! இந்த தெளிவில்லாதவன் இனியும் பிறப்பான்! சிந்தை தெளிய சீடனாகு!

மந்திரமணிமாலை
ஞான சற் குரு சிவசெல்வராஜ்

www.vallalyaar.com

சனி, 23 மார்ச், 2019

திருவடியை பற்றினால் திருமுடி

இந்த உலகில் உள்ள சுடர் எல்லாம் நாம் ஏற்றி வைக்கும் தீபங்கள்!
தூண்டி கொண்டிருக்க வேண்டும், இல்லை என்றால் அணைந்து விடும்!

ஆனால் நம் சிர நடுவுள் விளங்கும் விளக்கு தூண்டா விளக்கு! எப்போதும்
ஒளிவிட்டு பிரகாசிக்கும் விளக்கு!

அதன் சுடரே நம் இரு கண்களில்
துலங்குகிறது.

 கண்களில் துலங்குவதே இறைவன் திருவடி என்கின்றனர்
ஞானிகள்!

திருவடியை பற்றினால் திருமுடி நம்மை தேடி தாழ்ந்து வந்து
அருள்புரிந்து நம்மை நம்மை தூக்கி காத்து அருள்புரியும்!

அடியை பிடித்தால்
முடி வந்துவிடும்! அடிபணி பரமன் அருள் கிட்டும்! 

-ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா  

சனி, 12 ஜனவரி, 2019

பூ - தலத்திலே இறைவா நீ இருப்பதை அறிந்து

அத்தேவர் தேவர் அவரதேவர் என்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிக் புலம்புகின்ற புதலத்தே
பத்தேதும் இல்லாதென் பற்றற நான் பற்றி நின்ற
மெய்த்தேவர் - திருக்கூத்தும்பி



அந்த தேவர் - கடவுள்! அந்த தேவதை தான் கடவுள், என
உண்மையறியாமையால் தெய்வம் எது? தேவதை எது என்ற
விவரமில்லாமல் கண்ட கண்ட கோவிலை தேவதையை கொண்டாடும் உலகர்!
தான் சொல்வது தான், இந்த தெய்வம் தான், இதுதான் தெய்வம் என்று
பொய் பல பேசி புலம்புகின்றார்கள் இன்றும்!?

பூதலத்தே - உலகிலே! ஐம்பூதங்களால் ஆனது இவ்வுலகு ஆதலால் பூதலம் என்றார் மாணிக்கவாசகர்! இப்படிப்பட்ட உலகிலே எந்த பற்றும் இல்லாமல் எனை தடுத்து காத்து , இறைவனை அறியாத எனக்கு தன்னை அறிவித்து நான் வேறு பற்றின்றி அந்த இறைவனையே பற்றிட அருள்புரிந்தான் மெய்த்தேவன்!

இறைவன்! சிவம்! என் கண்ணிலே குடிகொண்ட ஒரே மெய்த்தேவன்! நம் தேவன் நம் மெய்ப்பொருளிளே உள்ள ஒளியே! வேறு தெய்வமில்லை! திருவடியை பணி !

பூ - தலத்திலே - பூ போன்ற கண்மலராகிய தலத்திலே இறைவா நீ இருப்பதை அறிந்து என் மெய்யிலே
உள்ள தேவராகிய உன்னை நான் பற்ற, பூதலத்தில் பற்றியுள்ள என் மும்மலப் பற்றை அறுத்த
இறைவா! உலகுக்கு நீ ஒருவனே தேவன்!


ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

Popular Posts