திங்கள், 24 டிசம்பர், 2012

செத்தபின் ஏதடா மோட்சம்!?


நம் உடலில் உள்ள தசவாயுக்களில் ஒன்று தனஞ்சயன்! ஒரு மனிதன் இறந்தபின் அவன் உடலில் இருப்பது தனஞ்சயன் வாயு மட்டுமே!  உயிர் போன உடல் வீங்க செய்து அழுகச் செய்து புழுக்கூடாக்கி அழிப்பதே தனஞ்சயன் வாயுவின் வேலை! பிணத்தை எரிக்கும் போது டமால் என்ற சத்தத்துடன் பிணம் எழும்பும்! அதன் சிரசு வெடித்து தனஞ்சயன் வெளியேறுவதே! பிணத்தை புதைத்தால் 3 நாட்களில் 72  மணி நேரத்தில் தனஞ்சயன் வெளியேறும்! 

சிலர் சாமியாராய் இருந்து காலத்தை ஓட்டிய பின், காலன் வந்து சீவனை கவர்ந்து செல்வான்! சீவன் போனால் அவன் சாமியல்ல! போலி சாமியாரின், செத்த சாமியாரின் அறியாமையில் மூழ்கிய சீடர்கள் சாமியாருக்கு  கபால மோட்சம் கொடுத்து விடுவர்?! எப்படி தெரியுமா? செத்த சாமியாரின் தலையில் தேங்காயை ஓங்கி அடித்து  கபாலத்தை பிளப்பார்  தனஞ்சயன் வெளியேறும் இரத்தமும் சிறிது வடியும் ! முட்டாள்தனத்திலும் முட்டாள் தனம் இது தான்! 

செத்தபின் ஏதடா மோட்சம்!? 

சாகாமலிருந்து ஞானம் பெற்றால் அல்லவா இறைவன் திருவடியை அடையலாம்! மோட்சம் கிட்டும்! 

ஞான தவம் செய்பவர், கண்மணி ஒளியால் 
கணை எய்துவது போல் ஒளி உள்  போகும் 
போன ஒளி அங்கே உள்ள கசடுகளை நீக்கும்!  

அழுக்கை போக்கும்! 
தனஞ்செயனும் போய் விடும்! 
உயிர் தூய்மை அடையும். 

ஒளி பெருகும் ஞானம் கிட்டும்! இரு கண்ணும் உள் சேரும் அக்னி கலை! சீவனாகிய சிவன் துலங்குமிடம்! வாலை இருப்பிடம் ! சுற்றிலும் அழுக்கு தனஞ்செயனும் ! ஞான தவம் செய்து கண் ஒளி உள் போனால் முதலில் சுத்த படுத்தும் ஒளி மிகுந்து முச்சுடரும் ஒன்றாகும் பின்னரே ஜீவகாட்சி தொடர்ந்து சிவனை அடைய வாலை அமுதம் சாப்பிடனும் இதெல்லாம் ஞான அனுபவம்! திருநாவுக்கரசர் எவ்வளவு உயர்ந்த ஞான அனுபவ நிலையை
கூறி இருக்கிறார் பாருங்கள்

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

ஜீவகாருண்யம் : ஒளியுடல் பெறுவது எப்படி ?


 

ஜீவ காருண்ய ஒழுக்கம் மனிதனுக்கு எவ்வளவு முக்கியமானது என வலியுறுத்தவே வள்ளலார் "ஜீவ காருண்ய ஒழுக்கம்" என்றொரு தனி நூலே இயற்றியுள்ளார். படியுங்கள்! முழுவதும் படியுங்கள்! ஆழ்ந்து படியுங்கள்! ஒவ்வொரு ஜீவர்கள்  மீதும் நீங்கள் காட்ட வேண்டிய அன்பு எப்படியிருக்கணும் என்று தெளிவாக விரிவாக கூறியிருக்கிறார் வள்ளலார்! பிற ஜீவர்கள் மீது மட்டும் அன்பு காட்டினால் போதுமா?! உன்ஜீவனை கருணையுடன் பார்!? என்கிறார் திருவருட்பிரகாசர்! கருணையோடு பார்!? என்கிறார் திருவருட்பிரகாசர்! சாப்பாடு போடுவதோ பிற பிற வகைகளில் பிற ஜீவர்களுக்கு சேவை செய்வது மட்டுமல்ல ஜீவகாருண்யம்!? உன் ஜீவனை பிறந்து பிறந்து செத்து செத்து துன்பப்படும் உன் ஜீவனை கருணையுடன்
பார்!! உன் ஜீவன் நித்திய ஜீவனே! பிறப்பும் இறப்பும் வாழ்க்கையில் படும் துன்பமும் ஏன்? எதனால்? எப்படி? என தெரிய வேண்டாமா? ஆக துன்பமே வாழ்வாகிறது பலருக்கு! ஏன் ? உன் ஜீவனும் இன்பமாக வாழ வழி காணக் கூடாதா?

பிற உயிர்போல கருதியாவது உன் ஜீவனிடம் கருணை காட்டு! இது தான் ஜீவகாருண்யம்! பிற ஜீவர்களிடம் கருணை காட்டுவது பரோபகாரம்! உன்ஜீவனை ரட்சிக்க அது ஒருவழி! உன் ஜீவனை கருணையோடு பார்!
உன் ஜீவன் கடைத்தேற யாது வழி? உன் ஜீவன் முக்தியடைய சத்விசாரம் செய்! நீ யார்? எங்கு இருந்து  வந்தாய்? எதனால் வந்தாய்? ஏனிந்த துன்பம்? இது தீர யாது வழி?


யாரிடம் போய் தெரிந்து கொள்வது? இதை சொல்ல வல்ல ஒரு ஞான சற்குருவை பணித்து உபதேசம் தீட்சை கேள்!  உன்  ஜீவனை ரட்சிக்க வழி தேடிக் கொள்! ஞானிகள் அனைவரும் உரைத்த ஜீவகாருண்யம் இதுதான்! ஓவ்வொரு ஞானியும் முதலில் தன் ஜீவனை நேசித்து இறையருள் பெற்றனர்! ஞான தவம் செய்து தன் ஜீவனை சக்தியுள்ளதாக்கினர்! பின்னரே  ஜீவர்களுக்கு
சேவை செய்தனர்! சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்!

முதலில் நீ உருப்படும் வழியை பார்? உன்னிடம் பொருள் இருந்தால் அல்லவா பிறருக்கு உன்னால் உதவமுடியும்!?  உன் ஜீவன் அருள் பெற்று இருந்தால் அல்லவா பிற ஜீவர்களை கருணையுடன் கண்டு உதவ முடியும்?!வள்ளலார்  என்ற ஜீவன் கடும்தவம் செய்து அருட்பெருஞ்ஜோதி யாகிய இறைவன் அருள் பெற்றதால் தான் இறைமயமானதால் தான் வாடிய பயிரை கண்டும் வாடினார்?!! அன்பும் கருணையும் தன்னுள் இருந்து தான் வெளிப்படனும்! அதற்க்கு முதலில் தன் ஜீவன் அன்புமயமாக கருணை இரக்கமே உருவாக, மலர நீ ஞான தவம் செய்! நீ உன் ஜீவனை கருணையுடன் பார்! வள்ளலார் தான் ஜீவனை பார்த்தார்! 9 வயதில் இருந்து ஆன்மீக சாதனை செய்தார் செய்தார் செய்து கொண்டே இருந்தார்! செய்த தவம் பலித்தது! பால் நினைத்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து இறைவன் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆட்க்கொண்டார்! அருள் பெற்றார்! ஊன உடலே ஒளியுடலாக ஓங்க பெற்றார்!


 ஞான சற்குரு சிவசெல்வராஜ் தங்க ஜோதி ஞான சபை






-ஞான சற்குரு சிவசெல்வராஜ்

வெள்ளி, 23 நவம்பர், 2012

விதி படி வாழ்வது அல்ல மனித வாழ்க்கை

விதியை மதியால் வெல்லலாம்! எப்படி?

விதிக்கப்பட்ட பிராரப்த கர்மம்(~50 % கர்மம்) மூலம் பிறவி எடுத்தோம், நாம் சேர்த்து வைத்த கர்ம வினையால் எடுத்த பிறவி.நாம் பிறந்து வந்தது நாம் முடிவு பண்ணியது அல்ல, நமது தாய் தந்தை முடிவு பண்ணி வந்தது அல்ல.நாம் இப்பிறவி எடுத்து வந்து, நம் மதியால் நமது கர்ம வினையை அழித்து "நாம் யார்" என்று தெரிந்து கொள்ளவேண்டியது.எப்படி தன்னை அறிவது? தவம் செய்யவேண்டும்.

விதி படி வாழ்வது அல்ல மனித வாழ்க்கை!  விதியை வெல்ல கூடியவன் மனிதன். இறைவன் நமக்கு ஒரு சான்ஸ் கொடுத்து உள்ளார். 50% கர்மத்தை கொடுத்து மனிதனாக பிறப்பிக்க வைத்தான். மனிதனாக பிறந்த நாம் அதை உணர்ந்து , இந்த விதி வினையில் இருந்து எப்படி விடுதலை அடையவேண்டும் என்று பார்க்க வேண்டும். அதுவே புத்திசாலித்தனம்! பிறந்து. மேலும் மேலும் வினையை சேர்த்து இன்னும் இறந்து பிறக்க கூடாது. நாம் செய்ய வேண்டியது ஏற்கனவே கொண்டு வந்தது ப்ராப்த கருமத்தை தீர்த்து வினை இல்லாத நிலையை தேடவேண்டும். நம் வாழ்வை வினை இல்லாத தன்மைக்கு அமைத்து கொள்ள வேண்டும். 



மேலும் அறிய .....

வெள்ளி, 9 நவம்பர், 2012

திருசிற்றம்பலம் எங்கு உள்ளது?



திரு - இறைவன்
சிற் - சிறிய
அம்பலம் - கோயில் 

இது நமது உடலில் எங்கு உள்ளது?  உள்ளம் ஒரு கோயில் ஊன் உடம்பு ஒரு ஆலயம் சொல்ல காரணம் என்ன? சத்யஞான சபை எங்கு உள்ளது?

  1. இறைவன் ஜோதி. அருட்பெருஞ்சோதி! உயிர் சிறு ஒளி!
  2. உயிர் எங்கு உள்ளது ? சிற்றம்பலம் எங்கு உள்ளது?
  3. திரைகள்/கர்ம வினை/மாயை /அகங்காரம் எங்கு உள்ளது?
  4. தவம் எப்படி செய்வது?
  5. சுத்த உஷ்ணம் என்பது எப்படி  உருவாகும்?
தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோ வை பாருங்கள் !!

திருச்சிற்றம் பலத்தே திரு நட ஜோதி

வெள்ளி, 2 நவம்பர், 2012

தன்னை உணர/ஞானத்திற்கு சரியான வழி எது?

தான் என்பது உயிர். இதை அறிய சரியான வழி எது?
பல குரு மார்கள் பல வழி சொல்லுகிறார்கள்.

எது சரி என்று தெரிந்து கொள்வது?

ஒரு பொருள் வாங்கும் போது எவ்வளவு ஆராய்ச்சி செய்கிறோம்.
ரிவ்யு படிக்கிறோம். தன்னை உணர அதை தானே செய்ய வேண்டும்.
எந்த வழி சரியான வழி, எப்படி செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வது?



புதன், 31 அக்டோபர், 2012

சும்மா இரு! இதுவே ஞான சாதனை

கர்மம் முற்றிலும் அழிந்தால் ஞானம்.
கர்மம் இருக்கும் வரை மனம் இருக்கும்.
மனம் வேலை செய்ய வேலை செய்ய கர்மம் இருக்கும்.
மனம் கடந்த நிலை எப்படி செல்வது?

சும்மா இரு, மனதை சும்மா இருக்க வை.

எப்படி? எங்கே வைப்பது?

இறைவன் திருவடியில். குருவின் பங்கு என்ன?

சுட்சுமத்தில் நடப்பது என்ன?

 வீடியோ வை முழுமையாக பாருங்கள்





------------------------------------------------------------------------

குருவை சந்தித்து உபதேசம் தீட்சை பெருக!
ஞான தவம் செய்யவும். ஞான தானம் செய்யவும்!
Contact http://www.vallalyaar.com/contact-us/

சனி, 27 அக்டோபர், 2012

சிறு தெய்வ வழிபாடு கூடாது, ஏன்?

சிறு தெய்வ வழிபாடு கூடாது என்றார் வள்ளலார் ! சித்தர்களும் ஞானிகளும் சிறு தெய்வங்களை வழி பட்டதே இல்லை!? சிறு தெய்வங்கள் எல்லாம் சித்தர்களுக்கும் ஞானிகளுக்கும் ஏவல் செய்யும் மெய்க்காப்பாளர்களே! ஏவளர்களே! இறைவனின் செல்ல பிள்ளைகளான சித்தர்களும் ஞானிகளும் இட்ட கட்டளை படி பணிகளை செவ்வனே செய்பவை தான் சிறு தெய்வங்கள்! உலக நலன் கருதியே இப்பணி நடக்கும்! என் நண்பர் ஒருவர் தெய்வத்தில் பெரிசாவது சின்னதாவது ! ஒரே தெய்வம் தானே, நான் என் குல தெய்வத்தை தான் வணங்குகிறேன்! எனக்கு எல்லாமே அதுதான் என்றார்!? அவர் குல தெய்வம் 'சுடலைமாடன்'. இங்கே குமரி மாவட்டத்தில் உள்ள சுடலை காப்போன் சுடலை மாடன்! பெரிதாக வில்லுபாட்டு கதைகள் எல்லாம் உண்டு! ஒவ்வொரு ஊர் எல்லையிலும் இசக்கியம்மன் முத்தாரம்மன் என தேவதைளும் உண்டு! எல்லை காவல் தெய்வங்களே இவைகள்! ஊர் புறங்களிலே இது போல் தேவதைகள் எல்லாம் வைத்து வழி படுகிறார்கள் மக்கள்! இதில் கொடுமை என்றால்; உயிர் பலி தான்! வாய் இல்லா பிராணிகளை அந்த தேவதைகளுக்கு பலி கொடுக்கிறார்கள்! சுற்று புற ஊர்களிலே நடக்கும் இது போன்ற உயிர் பலியை வடலூரில் இருந்த போது வள்ளலார் தடுத்து நிறுத்தி நல்வழி காட்டியிருக்கிறார்!

ஆதி சங்கரர் காஞ்சி வந்த போது அப்போது மட மக்கள் ஏராளமான ஆடு, மாடுகளை காமாட்சி அம்மனுக்கு பலி கொடுத்து தான் வழிபட்டனர்! மிகவும் வருந்திய சங்கரர் காமாட்சியம்மனை துதித்தி மக்களுக்கு நல்ல புத்திமதி கூறி திருத்தினார். ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்து சாந்த சொரூபியாக்கினார்! பலி கொடுத்ததால் உக்ர ரூபமாய் இருந்தாள்! பாயாசம் படைத்தால் சாந்த ரூபமாய் அருளும் தாயாகிறாள்! இப்படி பற்பல ஊர்களிலும் யாரோ வழிகாட்டி மக்கள் தெய்வத்தை வணங்குவதை விட்டு தேவதைகளை வழி பட ஆரம்பித்து விட்டனர்.


அரபு நாட்டிலே முன்னூறுக்கும் மேல் உருவங்களை வைத்து வழி பட்டவர்களை திருத்தி, எல்லா வல்ல இறைவன் ஒருவனே அவனே "அல்லாஹ்"! அவனை மட்டுமே, ஒளியான அந்த ஒரே இறைவனை வழிபட வழிகாட்டினார்! முகமது நபி பெருமான்! தான் கண்ட ஒளியான எல்லோருக்கும் கூறி அவர் வழங்கிய திரு குரானை ஓதினார்! இயேசு பெருமானும் அவர் காலத்தில் மக்களிடையே இருந்த மூட பழக்க வழக்கங்களை மாற்றி தேவன் ஒருவரே அவர் ஒளியானவரே அவர் எல்லா மக்களுக்கு பிதா! அவரை தூய்மையான அன்பால் வழிபடுங்கள் என்று கூறி அருளினார்!


"துள்ளும் மரியாமனதை பலி கொடுத்தேன் துட்ட கன்ம தேவதைகளில்லை" என தாயுமான சுவாமிகள் நம் மனதை தான் பலி கொடுக்க வேண்டும் பிற உயிர்களை யல்ல! என்றும் துட்ட தேவதைகளை வழிபட வேண்டாம் என்றும் தெளிவாக கூறியுள்ளார். நமது பாரத பழம் பெரு நாட்டிலே தோன்றிய ஒவ்வொரு மகானும் சிறு தெய்வ வழிபாடு செய்ததேயில்லை?! ஆக உலகில் உள்ள எந்த மத ஞானி யானாலும், எல்லாம் வல்ல, அந்த பேரொளியை, இறைவனை, ஒரே கடவுளை, பரம் பொருளை, பரமாத்மாவைதான் அன்பால் வழிபட சொன்னார்கள்! தவம் செய்து இறைவனை அடையுங்கள் என்று கூறி,அடையுங்கள் என்று கூறி, அடைய வழியாக விழியையும் காட்டி சென்றுள்ளனர்! ஞானம் பெற விழி உள்புகு!

பாகவதத்தில் கிருஷ்ணபரமாத்மா இந்திர பூஜை செய்ய வேண்டாம் என கோகுல வாசிகளை தடுத்தார். கோவர்த்தன மலையை குடையாக பிடித்து எல்லோரையும் காத்தான். கடவுளை பணித்தால் தேவதைகள் ஒன்றும் செய்யாது.

சிறு தெய்வங்கள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவை! தந்திரத்தில் அடங்குவபவை! மனிதன் வசபடுத்தி விடலாம்! நல்லது கெட்டது நடக்கலாம். சிறு சிறு தேவதைகள் யார் என்றால், இறைவனால் இந்த பிரபஞ்சத்தை பரிசீலிக்க நிர்மாணிக்கபட்டவர்கள். தாம்!

சர்வ வல்லமை படைத்த இறைவன்

படைப்பு தொழில் புரிகையில் - பிரம்மா
காக்கும் தொழில் புரிகையில் - விஷ்ணு
மறைத்தல் தொழில் புரிகையில் - மகேஸ்வரன்
அருளல் தொழில் புரிகையில் - சதாசிவன்
அழிக்கும் தொழில் புரிகையில் - ருத்ரன்

என பஞ்சமூர்த்திகளாக விளங்குகிறார்! அந்த ஏக இறைவனின் அருள் அம்சங்களே! பஞ்ச பூதங்களான உலகை பரிபாலிக்க நவகிரகங்களை அஷ்டதிக் பாலகர்கள் ஒவ்வொரு காரியத்திற்கும் அதி தேவதைகள், இப்படி கடைசி வரை பூதகணங்கள் எல்லைக்காவல் தெய்வங்கள் வரை போகிறது!!

 நீ படைத்தவனை வணங்க வேண்டுமா ? இறைவனால் படைக்க பட்டவர்களை வணங்க வேண்டுமா? நாம் வணங்கி வழி படவேண்டியது சர்வ வல்லமை படைத்த எங்கும் நிறைந்த அந்த அருள் மயமான பெருஞ்சோதியை தானே!? அதை விடுத்து மாடன் கருப்பன் முனியன் என்று போனால் இந்த ஜென்மத்தில் விமோசனம் இல்லை! எல்லவற்றுக்கும் மேலான பரம்பொருளைப்பார்!

அது உன்னிலே உன் மெய்ப்பொருளாக விழியாக உள்ளதே! உன் கண்ணிலே மணியிலே ஒளியாக துலங்கும் எல்லாம் வல்ல இறைவனை பார்ப்பதை உணர்வதை விடுத்து ஊர் உலகெங்கும் தேடுகிராயே, உனக்கு அறிவு இருக்கிறதா? கையில் வெண்ணை இருக்க நெய்க்காக ஊரில் அலையாதே!
மதம் கிடையாது? ஜாதியே கிடையாது! நாடு மொழி வேற்றுமை கிடையாது?

ஒரு உண்மை சம்பவம் கூறினால் உங்களுக்கு புரியும்? என் சிறு தெய்வ வழிபாடு கூடாது என்று!? கேரளத்தில் ஓர் பித்தன் சித்தன் இருந்தான். மலையாள மொழியில் பிராந்தன் என்றனர் அவரை. அவர் பெயர் நாராயணன்! பிராந்தன் என்றால் பைத்தியகாரன்! உலக மக்களாகிய பைத்தியகார பயல்கள் அந்த ஞானிக்கு வைத்த பெயர் நாரணத்து பிராந்தன்! எப்படி? ஒரு நாள், எப்போது போல சுடுகாட்டிலே நம் நாரணத்து இருத்த போது திடீர் என்று காளி தோன்றினாள்! நம்மாள் கண்டுக்கவே இல்லை! காளியே கூப்பிட்டாள், நான் தோன்றினால் தரிசனம் பெற்றவருக்கு எதாவது வரம் கொடுக்கவேண்டும். உனக்கு என்ன வரம் வேண்டும் என்றால் காளி! அதிபயங்கர ரூபிணியாக! எனக்கு ஒன்றும் வேண்டாம் நீ போ என்றார் நாரணத்து பிராந்தன்! இல்லை எதாவது வரம் தந்து தான் தீர்வேன் என காளி மீண்டும் கூற , நாரணத்து தன் ஒருகால் வீங்கி இருப்பதை காட்டி இன்னொரு காலுக்கு மாற்று என்றார்! உடனே காளி அது உன் கர்மம்! நீ அனுபவித்து தான் என்று கூற, போய்விடு ஓடிவிடு என்று கத்தினான் நம் நாரணத்து பிராந்தன்! ? காளி போய் விட்டது நம்புங்கள்! இது சத்தியம்! உண்மை! கோவண துணி ஒன்றே சொந்தமென கொண்ட கேரளத்து நாரணத்து பிரான்தன் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்?! ஞானியை விட தேவதைகள் ஒன்றுமில்லாதது தான்?

 இதோடு ஒப்பிட்டு இன்னொரு உண்மை சம்பவம் கூறுகிறேன், நமது திருஅருபிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள், வேட்டவலம் ஜாமீன் தார் மாளிகைக்கு சென்றார்! அவர் வீட்டு வாசல் படியை மிதித்தது தான் தாமதம், வேட்டவலம் ஜாமீன் மனைவியை பிடித்த பிரம்ம ராட்சசன் ஐயோ நான் போகிறேன் என்று ஓடி விட்டது! வள்ளலார் ஒன்றும் செய்யவில்லை! அவர் காற்று பட்டதுமே காத்து கருப்பு எல்லாம் காத தூரம் ஓடிவிட்டது?! இது தான் ஞானி லட்சணம்! அங்கே காளியால் கர்ம வினை தீராது என்று கூறப்பட்ட விஷயம் இங்கே ஞான சற்குருவால் வள்ளலாரால், வள்ளலாரை கண்டதுமே தீர்ந்தது! "குரு பார்க்க கூடி வினை தீரும்" அதற்க்கு இது ஒரு உதாரணம்! அது மட்டுமா? வேட்டவலம் ஜமீன் மனைவிக்கு தீராத மகோரதம் வியாதி வள்ளலார் விபூதி கொடுக்க உடனே குணமானது! சுத்த ஞானிகள் கைபட்ட கால்பட்ட மண்ணே பொன் ஆகும்போது? பேய்கள் ஓடாதா? நோய்கள் தீராதா? இப்போது புரிந்ததா? சிறு தெய்வங்களால் நமக்கு ஒரு பிரயோஜனம் இல்லை!?


ஞானியை பணிந்தால் அவரே நம் குருவாகி தாயாகி தந்தையாகி நம் கர்மவினைகளை போக்கி நம்மை கடவுளிடம் சேர்ப்பார்! இது சத்தியம்! 

மகாகவி காளிதாசனுக்கு அருளினாள் மாகாளி! அம்பிகை! மூடன் மகாகவி யானான்! அம்மாவசையன்று நிலவும் வந்தது! அருட்கவியானான் மகாகவி காவி காளிதாசன்! என்ன பயன்? முடிவு ஒரு பெண்ணாலே மாண்டானே! வேதனை வேதனை! வாலை தாயின் ஆதி சக்தியின் பரிவார தேவதைகளில் ஒன்று காளி! பரிவார தேவதைகளையும் காவல் தெய்வங்களையும் கும்பிடுவதை விட்டு, கண்ணான கடவுளை, கண்ணில் துலங்கும் கடவுளை , கண் உள்ளே விளங்கும் வாலையை பணிந்தாலே மோட்சம் கிட்டும்!! சிந்தித்து தீர்க்கமாக முடிவெடு! அறிவில்லாமல் அயோக்கிய சாமியார்கள் பின்னே போய்விடாதே! ஏமாறாதே! வேதனை படுவாய்?!



ஞான சற்குரு சிவசெல்வராஜ்

வாலை - கன்னி-ய-குமரி - ஞானம் பெற விழி 

 ------------------------------------------------------------------------------

குருவை சந்தித்து உபதேசம் தீட்சை பெருக!
ஞான தவம் செய்யவும். ஞான தானம் செய்யவும்!
Contact : http://www.vallalyaar.com/contact-us/

புதன், 24 அக்டோபர், 2012

தவம் செய் - கர்மத்தை அழி



பறக்கும் யானை தெரிந்தது என்று சொன்னதற்கு...

உள்ளே இருபது தான் வரும். கற்பனை எல்லாம் கிடையாது.
பல யுகங்கள்(பல லட்ச வருஷம்) உள்ளது. அதை பற்றி எல்லா தகவலும் நம்முள் உள்ளது. சித்தர்கள் ஞானிகள் சொல்வது எல்லாம், நடந்தது பற்றி ஒன்றும் கவலை படவேண்டாம்.மறந்து விடு. இதை ஆராய்ச்சி பண்ண வேண்டாம். அதை ஆராய்ச்சி பண்ணினால், அதை பார்க்க ரசிக்க எத்தனையோ வருஷம் வேண்டும்.

தன்னை உணர்ந்த தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்
பின்னை வினையை பிடித்து பிசைவர்
சென்னியில் வைத்த இறைவன் அருளாலே-

வினைகளை எப்படி கை ஆழனும் என்று சொல்லி இருக்கிறார்கள். அது ஒன்றுமே நமக்கு வேண்டாம். அதை(வினை) இல்லாமல் பண்ண வேண்டும். அதை பற்றி பேசி நினைத்து இந்த ஜென்மமே பாழ் ஆகிவிடும்.

இப்ப நீ தவம் செய்.(திருவடி) அவ்வளவு கர்மத்தையும் தீர். அதை அலசாதே, பார்த்து ரசிக்காதே. கால விரயம் தான். அதை எல்லாம் நிறுத்து, புராணத்தில் எவ்வளவோ கதை உள்ளது, ராமர் காலத்தில் மனிதனாக நாயாக , சோல்ச்சர் ஆகா இருந்து இருப்போம். இப்போ அதை பேசி என்ன பிரயோஜனம்?


நீ யார் என்று பார். உன் உயிர் எங்கு உள்ளது என்று பார்... அதுவே உன் வாழ்வின் முதல் வேலை.


-ஞான சற்குரு சிவசெல்வராஜ்.


குருவை சந்தித்து உபதேசம் தீட்சை பெருக!
ஞான தவம் செய்யவும்.
ஞான தானம் செய்யவும்!

Contact : http://www.vallalyaar.com/contact-us/


ஞாயிறு, 21 அக்டோபர், 2012

தன்னை அறிதல் - குருவின் விளக்கம்

உடல் அல்ல மனம் அல்ல. நாம் உயிர்!!

இது உள்ளது நமக்கு தெரியும். எங்கோயோ நமது உடலில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

நம் இயல்பு, நாம் இருக்கும் இடம் நமேக்கே தெரியவில்லை என்பது கொஞ்சம் அசிங்கமாக உள்ளது! நம்மை நாம் தெரியாமல் வாழ்வது ஒரு குருட்டு வாழ்க்கை.

சரி எப்படி தெரிந்து கொள்வது எப்படி ?

மனம் என்பது கர்ம வினையின் வெளிபாடு. கர்ம வினை என்பது நாம் சிறுவயதில் இருந்து சேர்த்து வாய்த்த விஷயங்கள். இது நமது உயிரை மறைத்து கொண்டு உள்ளது.

எப்படி?  எழு திரைகளாக!!

சத்திய ஞான சபையை என்னுள் கண்டனன். சத்தியஞான சபையில் உள்ளது என்ன? 7  திரை , ஜோதி. உயிர் ஜோதியாகவும், திரை நமது கன்மம் மாயை அகங்காரம் இதை எப்படி விளக்குவது?

வீடியோவை பாருங்கள். தெளிவான விளக்கம் உள்ளது. திருவடி தீட்சை பெறுங்கள். ஞான தானம் செய்யுங்கள். உலகில் ஒவ்வொருவரும்
தன்னை உணரவேண்டும்.

குரு சாத் சாத் பர பிரம்மா....




குருவை சந்தித்து உபதேசம் தீட்சை பெருக!
ஞான தவம் செய்யவும். ஞான தானம் செய்யவும்!
Contact : http://www.vallalyaar.com/contact-us/

வியாழன், 18 அக்டோபர், 2012

குருவின் புதிய புத்தகங்கள்

குரு பூஜை அக்டோபர் 15 (புரட்டாசி - சித்திரை) வள்ளல் பெருமான் பிறந்த நட்சத்திரத்தில் வெளியிட்ட புத்தகங்கள்.

 
மூவர் உணர்ந்த முக்கண் - ஞான சம்பந்தர், சுந்தரர், அப்பர் அருளிய தேவார திருவடி மெய் பொருள் பாடல்களுக்கு குரு எழுதிய உரை.



வாலை - அமுதம் கொடுக்கும் வாலை தாய் பற்றி குரு எழுதிய புத்தகம்



ஜீவகாருண்யம்  - உன் ஜீவனை கருணையுடன் பார்-

பல சன்மார்க்க சங்க அன்பர்கள் உணவு கொடுப்பது மட்டுமே ஜீவகாருண்யம் என்று சொல்லி வருகின்றனர், சாப்பாடு போடுவது மட்டும் ஜீவகாருண்யம் அல்ல, நாம் யார் என்று தெரியாமல் வாழ்கிறோம். நம் யார்? என்பதை உணர்ந்து மற்றவர்களை யார் என்று தெரிந்து கருணையுடன் வாழ்வது.  இதை உணர்த்துவதே சத்திய ஞான சபை.


குருவை சந்தித்து உபதேசம் தீட்சை பெருக!
ஞான தவம் செய்யவும். ஞான தானம் செய்யவும்!
Contact : http://www.vallalyaar.com/contact-us/


வியாழன், 27 செப்டம்பர், 2012

உலகில் மிக சிறந்தது ஞான தானம் தான்!







தவம் செய்வோம், குருவே கதி என்று இருப்போம். யாராக இருந்தாலும் சரி, குருவின் பாதத்தில் சரண் அடைந்து , கொடுத்த உபதேச தீக்ஷை படி ஒழுங்கா தவம் செய்தால் எல்லாமே நன்றாக இருக்கும். 

எல்லாம் குரு பார்த்து கொள்வார். சிறுவயதில் எப்படி அப்பா அம்மா தான் எல்லாம் பார்த்தார்கள்? நமக்கு கேட்க தெரியாது ,பேச தெரியாது அப்பா அம்மா தான் பாலூட்டி சீராட்டி படிக்க வைத்து, ஆள் ஆக்கி வளர்த்து எல்லாம் செய்தார்கள். 

அதை விட 1000 மடங்கு மேல் குரு பார்த்து கொள்வார்.  அதை விட 1000 மடங்கு மேல் இறைவன் நமக்கு அருள் புரிவார். 

குரு அருள் பெற்று தான் இறைவன் அருள் பெறனும். குரு அருள் இன்றி திரு அருள் உவாது. வள்ளல் பெருமான் சொன்னது  தகுந்த ஆச்சர்யான் மூலம் உங்கள் நடுக்கண்ணை திறக்க பெற்று கொள்வது நலம்.  அது தான் தீக்ஷை. 

அப்படி தீக்ஷை பெற்றால் தான் இந்த பிறவியில் அந்த மோட்சம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

தவம் செய்ய வேண்டும். தவம் செய்யாமல் உலகில் எதுவும் கிடைக்காது.  தவம் தான் முக்கியம். எனக்கு சம்பளம் மட்டும் வேண்டும் என்றால்??  வேலை செய்யாமல் இருந்தால் எப்படி? அதிக படியான வேலை செய்யுங்கள்.. உழைப்புக்கு தான் பலன். அது போலே தவம் செய்தால் தான் பலன். தவம் செய்தால் மட்டுமே முன்னேற்றம்.  வேறு எதனாலும் முன்னேற்றம் கிடைக்காது.

படித்தவன், ஜனாதிபதி எல்லோரும் சாமியார் காலில் விழுகிறான்!  கோடீஸ்வரன் எல்லோரும் சாமியார் காலில் விழுகிறான்.  சாமியார் யாரு பிச்சை காரன் தானே? உலக கோடிஸ்வரன் எல்லாம் சாமியார் காலில் விழுறான்?  அப்போ பணம் பெருசா? ப்ரைம் மினிஸ்டர், ஜனாதிபதி சாமியார் காலில் விழுறாங்க, அப்போ பதவி பெரியாதா?  

அவர் தெரிந்து உணர்ந்த அந்த ஆன்மீக நிலை ஆன்மீக உணர்வு , அது தான் எல்லோரும் அறிந்து கொள்ள கூடியது.  இறைவன் எல்லோரிடமும் ஒரே மாதிரி தான் இருக்கிறான். ஒருவரிடம் அதிகமாக, ஒருவரிடம் குறைத்து இல்லை.  இறைவன் அனைவருக்கும் சமம்.  எல்லோரும் ஒண்ணுதான். நாம் ஆன்மாக்கள். எந்த ஒரு பாகுபாடு இல்லை. அவுங்க அவுங்க கர்ம படி இங்கு வந்து இருக்கோம். கர்மத்தை எல்லாம் தீர்த்து விடலாம், தவம்  செய்தால்!!!

அதற்க்கு வள்ளல் பெருமான் துணை இருப்பார். உள்ளும் புறமுமாய் அவன்  இருக்க எனக்கு என்ன கவலை. நாம்  அப்படி இருக்கணும். உங்க கூடவே இருக்கிறார். எப்போ தீக்ஷை பெற்று கொண்டீர்களோ அந்த செகண்ட் இல் இருந்து வள்ளல் பெருமான் உங்களுடன் உள்ளார். அதை நீங்கள் நல்ல முறையில் பயன் படுத்தி கொள்ளுங்கள். அவர் உதவி செய்ய தயார், நீங்க 
பயன் படுத்தி கொள்ளுங்க. வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். தவம் செய்தால் போதும். எல்லோருக்கும் இந்த ஞானத்தை சொல்லி கொடுத்தால் போதும். 

இப்போ அவர் அருள் பெறனும்,  ஒரு ஈசி ஆனா வழி என்ன என்றால் அவர் விருப்பமான ஒரு காரியத்தை நாம் செய்தால் போதும். அவர் விருப்பமான காரியம் என்ன?  பாட்டு படிப்பது பூஜை பண்ணுவது இல்லை, அவர் விருப்ப மான காரியம் அவர் விருப்ப பட்ட அந்த மரணமிலா பெருவாழ்வை நாலு பேருக்கு நாம் சொல்லி கொடுப்பது தான். ஞான தானம் தான் !!! உலகில் மிக சிறந்தது ஞான தானம் தான்! நாலு பேருக்கு இந்த ஞானத்தை சொல்லி தரனும் . எவ்வளவு பேருக்கு சொல்லி தர முடியுமோ சொல்லி கொடுங்க.  அது தான் புண்ணியம்!! வேறு என்ன தானம் பண்ணினாலும் பிரயோஜனம் இல்லை. உலகத்தையே கொடுத்தாலும் பிரயோஜனம் இல்லை 

-ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா - 2010 குரு பூஜை அன்று அருளியது!! 
-----
குருவை சந்தித்து உபதேசம் தீட்சை பெருக!
ஞான தவம் செய்யவும். 

ஞான தானம் செய்யவும்!
Contact : http://www.vallalyaar.com/contact-us/


திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

ஆன்ம நேய ஒருமைப்பாடு - 28 பக்கம் கொண்ட புத்தகம்

இந்த புத்தகத்தில் என்ன உள்ளது? 

  • ஏன் 28 பக்கம்?
  • சன்மார்கம் என்றால் என்ன?
  • சன்மார்க்கம் நடுத்துவது யார்?
  • எப்படி வள்ளலார் நம்முள் வருவார்?
  • சத்தியஞான சபை எதற்கு?
  • தவம் என்றால் என்ன? எப்படி செய்வது?
  • குரு யார்?
  • திருவடி என்றால் என்ன?
  • நம் உடம்பில் எங்கு உள்ளது?
 

Aanmay Neya Orumai Paadu by shivamjothi

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

ஞான சற்குரு சிவ செல்வராஜ் பணியுரை



எங்கள் குரு திரு.சிவ செல்வராஜ் அவர்களை பற்றி அவர் எழுதிய நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டது.குருவை பற்றி அவரே கூறுவது.
பணியுரை!

வந்தனம். நன்றி. நலமே நிலவுக.எல்லாம்வல்ல அருட்பெரும் ஜோதி ஆண்டவர் அருளால், சற்குரு திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆசியால், அடியேன் திருச்சி ஞான சித்தர் ஜோதி இராமசாமி தேசிகர் அவர்கள் கருணையால்,1980ம் வருடம் விழி திறக்க பெற்றேன். வழி காட்டி ஆன்மிக பாதையில் நடை பயிலச் செய்தனர்.கண்ணியனானேன். கடைத்தேற வழி கிட்டியது.

குமரி மாவட்டம் தம்மத்துக்கோணம் எனும் ஊரில், அறிதுயில் கொண்ட அருகம்புல் சித்தர் நடராஜ சுவாமிகளை சமாதி வைக்கும் பெரும் பேறு அடியேனுக்கு கிட்டியது. 6 சென்ட் நிலம் காணிக்கையாக கொடுத்து புண்ணியம் தேடி கொண்டேன். அருகம்புல் சித்தர் பெருமகனாரோடு பலகாலமாக பழகும் பாக்கியம் கிட்டியதால் ஞான நிலைகள் பல அறியும் பேறு கிட்டியது.

 அடியேனுக்கு பீரப்பா பற்றி கூறி அருளியதும் அருகம்புல் சித்தரே. பாடினேன் அவர் மகிமையை. பார்த்துஅருளினார்.

அடியேனை அடியேனின் தீட்சா குருநாதர் ஞான சித்தர் ஜோதி ராமசாமி தேசிகர் அவர்கள் சமாதி ஆகும் சமயம் அடியனே அழைத்து குருவாக இருக்க பணித்தார்கள். குருவிற்கு சமாதி வைக்கும் பேறும் கிட்டியது. பெரும் பேறு பெற்றேன்.

குருவின் பரிபூரண அருள் பெற்றேன். ஆன்மிக அனுபவங்களை தந்து வள்ளல் பெருமான் அடியேனை மெருகேற்றினார்.

தேரூர் எனும் ஊரில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊரில், அருள்மிகு அழகிய மணவாள விநாயகர், அருள்மிகு ஹனுமான் கோயில் கொண்டுள்ள மடத்தில் ஆன்மிக பணிபுரிந்து வரும் குருமஹதேவ் அவர்களை சந்திக்கும் பாக்கியம் பெற்றேன். ஒரு வருடம் அவர் அருளுரைகளை கேட்டு அறிவு பெற்றேன்.

அடியேன் சிரஞ்சீவி ஆஞ்சநேயர் அருள் பெற குரு மகாதேவ் அவர்களே காரணமானார். குரு மகாதேவ்அவர்களை சமாதி வைக்கும் பெரும் பாக்கியம் அடியேனுக்கு கிட்டியது. பெரும் புண்ணியம் கிட்டியது.

1980 முதல் 1992 வரை 12 வருடம் தீவிர சாதனையின் பயனாக வள்ளல் பெருமானின் அருளால் “கண்மணி மாலை” எனும் கருத்தோவியம் ஆன்மிகபுரட்சி நூல் வெளியிட்டேன். வெளியிடவைத்தனர் சித்தர்கள் பலர். அருள் புரிந்தார் அம்மையப்பன். காலங்காலமாக பலரும் இரகசியம்என மறைத்த ஞானத்தை இந்நூல் பரசியமாக்கியது.
 
மரணமில்லா பெருவாழ்வு பெற்ற ஞானிகள் , சித்தர்கள் நம் நாட்டில் ஏராளம். ஒப்பற்ற இறைவனை உணர்ந்து ஒளி உடல் பெற்ற மகான்கள் ஏராளம். இந்தியாவின் பெருமையே இதுதான்.எந்தன் வாழ்வில் அருள் கூட்டிய ஞானிகள் பலர். வழி காட்டியோர் பலர். இன்னார் என்று அறிவிக்காமலேயே எனக்கு வழி காட்டிய தெய்வம் சற்குரு கோவிந்த சுவாமிகள். கன்னியாகுமரி பகவதி அம்மன் வாலை அருள் பெற சற்குரு கோவிந்த சுவாமிகளின் அருளாசியே காரணம்.

கோவிந்த சுவாமிகள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலே காட்சி தந்து கருணை புரிந்து வழி காட்டியதால் அடியேன் இன்று குருஸ்தானத்தில் இருந்து வழி காட்ட முடிகிறது. வள்ளல் பெருமான் கூடவே இருந்து நடத்துகிறார். சூட்சம நிலையில் இருந்து ஆன்மிக ஞானத்தை உலக மக்களுக்கு உணர்த்தி வருவதே கோவிந்த சுவாமிகளின் ஒப்பற்ற பணி.இந்த ஒப்பற்ற ஒளி நிலை அடைந்த ஞானியை பாடி “சற்குரு கோவிந்தா சுவாமிகள்” என்ற நூலை வெளியிட்டேன்.

திருச்செந்தூர் செந்திலாண்டவனும்,சுசீந்திரம் ஆஞ்சநேயரும் கன்னியாகுமரி பகவதியம்மனும் உயிர் காத்து உன்னத நிலை தந்து குருவாக்கி குவலயம் வணங்க வைத்தனர். பிறந்த பயனை பெற்றேன்.

உலகீன்ற அன்னை. எவ்வுயிருகும் தாய். எல்லா உயிரினுள்ளும் சக்தியாக ஒளிர்பவள். மகாமாயை. ஆதி சக்தி. அண்டமெல்லாம் நிறைந்த அகிலாண்டேஸ்வரி. சித்தர்கள் வணங்கும் வாலை குமரி.என்றும் கன்னி.
உலகை காக்கும் தாய்.அடியேனுக்கு காட்சி கொடுத்து கன்னியாகுமரியில்
அமர்த்தி,என்னைபக்குவபடுத்தி குருபீடத்தில் அமர்த்தியவள் இந்த வாலை.

வலிந்து எம்மை ஆட்கொண்டார் வள்ளல் இராமலிங்கர். அறிவிலா சிறு பருவத்தே எம்மை உடனிருந்து காத்த ஒளியான ஞானி. இன்று அடியேனை பரிபூரணமாக ஆட்கொண்டு சற்குருவாக அமர்த்தி , ஞான உபதேசம் திருவடி தீட்சை கொடுக்க அருள் புரிந்து வருகிறார் வள்ளல் பெருமான். நான் உரைக்கும்வார்த்தையெல்லாம் வள்ளல் பெருமான் எம் உள்ளத்திலிருந்து வெளிபடுத்துவதே. எம்மை, எம்குடும்பத்தை , எம் சீடர்களை காத்து அருள்வதும் மெய்ஞான சற்குரு வள்ளல் பெருமானே.

சற்குரு வள்ளல் பெருமானின் அருளால் இதுவரை 38 ஞான நூற்களை வெளியிட்டு உள்ளேன்.ஆனைத்தும் மெய் ஞான இரகசியங்களை வெளிப்படையாக கூறுவது. இதில் திருமந்திரம் , திருவாசகம்,திருவருட்பா, நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற ஞானிகளின் பாடல்களுக்கான மெய்ஞான விளக்கங்கள், ஞான மேதை தக்கலை பீர்முஹம்மது ஒலியுள்ள அவர்களின் பாடல்களும், இயேசு கிறிஸ்துவின் பைபிளின்உரைகளும் அடங்கும்.
அணைத்து ஞானிகள்கூறியுள்ள மெய்பொருள்ஒன்றே – “கண்களே” – என்றும், கண்கலே நம் உடலில் உள்ள இறைவனை காண நாம் உட்புகும் வாசல் என்பதை என் நூல்கள்மூலம் விளக்கி தெளிவுபடுத்தியுள்ளேன். காலம் காலமாக இரகசியம் என்று மறைத்து வைத்திருந்த இரகசியங்களை இநூல்கள் வெளியிடுகிறது.

இந்த ஞானத்தை உபதேசித்தும் , தீட்சை கொடுத்ததும் தங்க ஜோதி ஞான சபை கன்னியாகுமரியில் நடத்தியும் வருகிறேன். சீடர்கள் காணிக்கையால் வாழ்கிறேன். வள்ளல் பெருமான் வளமோடு வாழ்வாங்கு வாழ வைக்கிறார்.

சைவ உணவு உட்கொள்பவர்கள் மட்டுமே ஞானம் கிட்டும். சைவ உணவே சன்மார்க்க உணவு. வாருங்கள். உங்களுக்கும் ஞானம் கிட்டும் எட்டும்.
மரணமில்லா பெரு வாழ்வு வாழ முதலில் உபதேசம். அடுத்து தவம் செய்யும் முறை உணர்த்தி திருவடி தீட்சை. மெய்பொருளை எல்லோரும் அறிந்து உணர்ந்து எல்லோரும் இன்புற்று வாழ வழி காட்டுகிறார் வள்ளலார். அடியேன் ஒரு கருவியாகவே செயல்படுகிறேன்.

இப்பணி செய்ய வைத்த பரமனுக்கு நன்றி. பாமரன் அடியேனை பண்புள்ளவனாக மாற்றிய வாலை பொற்பாதமே சரணம். சரணம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.





















என்றும் உண்மையுள்ள
சிவ செல்வராஜ்

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

சாயுச்சிய நிலை!!

சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற்
சமாதி தா னில்லை தானவ னாகிற் "



நம்முடைய லட்சியம் இறைவனோடு இரண்டற கலப்பதேயாகும்! அது  எவ்வாறு எனில், 


இறைவன் பேரொளி 

நாம் ஆத்மாக்கள் சிற்றொளி! 

சிற்றொளியாகிய நம் ஆத்மஜோதியை  தவம் செய்து கண்மணி ஒளியை
பெருக்கி அக்னி கலையான ஆத்மஜோதியுடன்  இணைத்தால் பெரும் ஜோதியாகும்! 


இவ்வாறு தொடர்ந்து தவம் மேற்கொண்டால் ஒளி - ஆத்ம ஒளி மேலும் மேலும் பெருகி தலை உள் நடு ஜோதி உடல் எங்கும் வியாபித்து உச்சி முதல் உள்ளங்கால் வரை பரவி பல்கி பெருகி ஒளியுடலாகும்! அப்போது தான் நாமும் பேரோளியாவோம்! அப்படி பேரொளியாகியே நாம் பேரொளியான இறைவனுடன் இரண்டற கலக்க முடியும்! நான் அவனாவது அச்சமயமே!
 


சமாதி கூடி இருந்தால் போதாது! அதற்க்கு மேல் நிலை இந்த சாயுச்சிய நிலை!  ஒளியுடலாகும் நிலை!

நம் நாட்டில் அங்ஙனம் இறைவனை அடையும் முயற்சியில் தோல்வியுற்று சமாதி பெற்றவர்களும் கோடானகோடி பேர்கள்!! நல்ல சமாதி அனுபவம் பெற்றவர்கள் அவர்கள்! அவர்களெல்லாம் மீண்டும் பிறக்க வேண்டும்! இறைவனை இரண்டற கலப்பது வரை பிறவி தொடரும்! 


ஞானிக்கு உண்டு பிராரத்துவம்!! இறைவன் வகுத்த சட்டத்தில் ஓட்டை கிடையாது! இங்கே யாராயினும் சரி நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றால் தான் பட்டம்! அப்பழுக்கில்லாத, தூய்மையான பரிசுத்தமான ஆன்மாவே அன்பால் மட்டுமே ஆண்டவனை அடைய முடியும்?!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
தங்க
ஜோதி ஞான சபை - கன்னியாகுமரி

சனி, 14 ஜூலை, 2012

1008 இதழ் தாமரை எப்படி மலரும்?


 காலை எழுவது முதல் இரவு படுக்க போவது வரை ஒரு மனிதன்
எப்படி, எப்படி இருக்கவேண்டும் என்பதை நித்திய கரும விதி என்று
உபதேசம் செய்து உள்ளார்.




உடல் மலங்களை நீக்குபவன் ஆரோக்கியமாக வாழலாம்!? மன மலங்களை
போக்குபவனே, மரணமிலாது வாழலாம்!?

உடல் மலத்தில், ஏழாவது ஆதாரமாக சகஸ்ரதளமாக நம் உச்சந்தலையில் உள்ள கோழை சொல்லபடுகிறது.  இதை நீக்குவது தவம் செய்பவர்களுக்கு  மட்டுமே  சாத்தியம்! இந்த கோழை முழுவதும் நீங்கினாலே, நம் மூளை கொஞ்சம் கொஞ்சமாக இயங்க ஆரம்பிக்கும்.

தலையிலுள்ள கோழை நீங்க ஒரே வழி தவம் செய்வதுதான்! குரு உபதேசம் பெற்று நம் மெய்பொருளாகிய - திருவடியை நம் கண்களில் உள்ள ஒளியை குரு தீட்சை மூலம் உணர்ந்து , அந்த ஒளியை நினைந்து உணர்ந்து தவம் இயற்ற நெகிழ்ச்சி உண்டாகும், கண்ணில் கனல் பெருகும். அந்த ஞானக்கனல் உள்நாடி மூலமாக அக்னி கலையை அடைந்து அங்கிருந்து மேலே சகஸ்ரதளம் நோக்கி செல்லும் ஞானக்கனல் பெருக பெருக அந்த உஷ்ணத்தால் பல காலங்களாக உறைந்து போன கோழை மெல்ல மெல்ல உருகி   மூக்கு வழியாகவும் தொண்டை வழியாகவும் வெளியேறும் . எவ்வளவு கோழை உள்ளதோ அவ்வளவு காலம் நாம் கடுமையாக தவமியற்ற வேண்டும்.

"தவம் செய்வார்க்கு அவம் ஒருநாளுமில்லை"

நாம் செய்யும் தவம், நம் ஞானத்தீயை நம் கண்வழி பெருக்கி அதனால் அது
சகஸ்ரதளத்தை அடைந்து உணர்வு உண்டாகி  அனலால் இளகி கோழை
கரைத்து ஒழுகும். இது சாதனை அனுபவம்.

தலைப் பகுதியிலுள்ள கோழை முழுவதமாக வெளியேறும் பட்சத்தில் மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒளி அலைகளால் அதிர்வு ஏற்பட்டு கொஞ்சங் கொஞ்சமாக இயங்க  ஆரம்பிக்கும். கோழையால் கவிழ்ந்து இருந்த மூளை பகுதி கனம் குறைந்ததும் மலர ஆரம்பிக்கும்.  அதுவரை கவிழ்ந்து இருந்த தாமரை இதழ்கள் மலர ஆரம்பிக்கும். 1008  பகுதியாக சிறு சிறு  பகுதியாக மூளை இருப்பதால் தான் 1008  இதழ் தாமரை என்றனர். ஒளி - சுத்த ஒளி, பொன்னொளி எழும்பி பிரகாசிப்பதால் இதை வள்ளலார் 1008  மாற்று பொற்கோவில் என்றார்.

ஒவ்வொரு மனிதனும் தன் தலையிலுள்ள 1008  மாற்று பொற்கோவிலில், நடுநாயகமாக ஒளிவிட்டு பிரகாசிக்கும் அருட்பெருஞ்சோதியை தரிசிக்க வேண்டும். அவனே மரணமிலா பெருவாழ்வு பெறுவான்.

எத்தனையோ பிறவிகள் பிறந்து விட்டோம். இனிமேல் இந்த விளையாட்டு , வினை  ஆட்டுவிக்கும் பிறவி வேண்டாம்! பிறந்த இப்பிறப்பிலே தானே இனி  பிறவாமல் இருக்க இறவாமல் இருக்க வழி தேடுவோம்.  விழியிலே இருக்கும் ஒளியை உணர்ந்து மேன்மை அடைவோம். வாரீர் ஜெகத்தீரே!






ஞான சற்குரு சிவசெல்வராஜ்
தங்க ஜோதி ஞான சபை
கன்னியாகுமரி

வெள்ளி, 29 ஜூன், 2012

வாலையை பணியாமல் சித்தராக முடியாது!

"அவளை யறியா அமரரும் இல்லை
அவளின்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளின்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளின்றி யூர் புகு மாறறி யே னே"






அவள் - சக்தி - வாலை - தாய் - 'உ' இடது கண்மணி  ஒளி!
சக்தியை அறியாத தேவர் யாருமில்லை? ஏன் தெரியுமா?
சக்தி அருளால் அமுதம் உண்டு தான் அமரத்துவம் பெற முடியும்!
அப்படியாயின் அமரர் சக்தியை வாலையை அறியாமலிருப்பரா?
சக்தியில்லையேல் நம்மால் எதுவுமே செய்ய முடியாதே! உடலில் சக்தி
இருந்தால் தானே நடமாட முடியும்! பின்னரல்லவா தவம் செய்வது?!
ஆக சக்தி இல்லையெனில் ஒன்றும் செய்ய இயலாது! சக்தி - வாலை
துணையின்றி பஞ்சகிர்த்தியம் புரியும் மூர்த்திகளாலும் ஒன்றும் செய்ய
இயலாது!  பஞ்ச பூதங்கள் இயங்க சக்தி வேண்டும். நம் புலன்கள் இயங்க
சக்தி வேண்டும்!. ஏன்? சிவத்தோடு சக்தி இருந்தாலே இயக்கம்! எங்கும்
சிவமயம்! சிவம் சக்தி மயம்!



அவளே வாலை! தாய்! கன்னி 'ய' குமரியில் குடிகொண்டு முக்கடல்
தீரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் தாய்! பாலா பரமேஸ்வரி
சக்தியில்லையேல் ஒன்றுமில்லை! அசைவற்றிருக்கும் சிவம், அசையா
கல்போன்ற ஒளி களிநடம் புரிய சக்தி தான் தேவை! அந்த தாய் வாலை அருள்
தந்து அமுதம் ஊட்டி அவள் ஆசி பெற்றே சிவன் இருக்கும் ஊருக்கு போக முடியும்! சிவனருள் பெற முதலில் சக்தியருளே வேண்டும்! நம்மை கருவாய்
வயிற்றில் சுமந்து பெற்ற தாயை விட கோடி கோடி பங்கு நம்மை அன்புகாட்டி
அமுதூட்டி அரவணைபவள் வாலைதாயே! நமது உடலுக்கு சக்தி யூட்டிய தாய்!

 உலக அன்னை ! அண்டமெல்லாம் நிறைந்த அகிலாண்டேஸ்வரி ! ஆதிபராசக்தி! கன்னிகா பரமேஸ்வரி! நம் கண்ணுக்கு கண்ணாக விளங்குபவள் ! நம் உயிர் துலங்க உறுதுனையானவள் சக்தியே! தாயே!
தாயை வணங்கும் முதல் தெய்வம் தாயே என இன்று எல்லோரும் கூறுவது
உடல் கொடுத்த தாயை பற்றி! உயிராய் இருந்து வளர்க்கும் தாயை அறிவார்
இல்லை! இறைவனை அடைய அமுதூட்டி  வழிகாட்டும் உலகத்தாயை அறியவில்லை!

அவளை அறியாத பேர்க்கு மாயை! மகாமாயை அவளே! அறிந்து
பணிந்தவருக்கு அமுதூட்டும் அன்னை! வாலையை  பணியாமல் யாரும்
தேவராக முடியாது! சித்தராக முடியாது! ஞானியாக முடியாது! சிவமே சக்தியை தன்னோடு சரிபாதி யாக கொண்டார் எனில் சக்தியின் மகத்துவம்
புரியவேண்டாமா? அந்த சக்தி மாமாயை வாலை கன்னி 'ய' குமரி அடியேனை
கன்னியாகுமரி யிலே சற்குருவாக இருத்தி தங்க ஜோதி  ஞான சபை தந்து
இத்தனை ஞான நூற்களையும் எழுதி வெளியிட்டு உலகத்துக்கு சேவை செய்யும் அருள் புரிந்தவள்! தாயை பணிந்தால் தயவுடையவனானேனே! அதனால் தான் எல்லோருக்கும் ஞான இரகசியங்களை போதிக்கிறேன்!
எழுதுகிறேன்!

 
"சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
செம்பவள மேனி கொண்ட சக்தியவள் வாலையே!
முக்கடலும் சங்கமிக்கும் முக்தி யருள் தலமாம்
கன்னியவள் குமரி யிலே  கண்டு கொள் பணிந்தே"









புதன், 27 ஜூன், 2012

திருவடி தவத்தின் பயன் என்ன?




நம் கண்மணியில் வலது கண் சூரியன், இடதுகண்  சந்திரன் ஆகிய இரு
கண்மணிகளிலும் தவம் செய்வதால் பெருகும் ஒளி உட்புகுந்து அக்னி கலையில் சேரும் - அதுவே முச்சுடரும் ஒன்றான நிலை ! ஜோதி பாதம்! திருவடி!!

இந்நிலை பெரும் முயற்சியிலிருக்கும்  சாதகனுக்கு படிப்படியாக உச்சியில் இருந்து  உள்ளங்கால் வரை  உள்ள 72000 நாடி நரம்பிலும்  கொஞ்சம் கொஞ்சமாக ஒளி பரவும்!!

உடல் தூய்மையடையும்! நோய் நோடிவராது! உடல் உறுதி பெறும்! உள்ளம் பண்பாடும்!  இறை அருள் கிட்டும்! எல்லா ஞானிகளின்  ஆசிர்வாதம் பெறுவான்!!

ஜோதி தரிசனம் கிட்டும்!

திரைகள் விலகும் ஆன்மா பிரகாசிக்கும்! அங்கிருந்து ஜோதி ஊர்த்துவமுகமாக மேல் எழுந்து உச்சியை சகஸ்ராரத்தை அடையும்!

உச்சியை அடைந்தால் அறிவுப் பிரகாசம்! பரவெளி காணலாம்! வெட்ட வெளியில் உலவலாம்! பேரின்பம்! பேரின்பம்! பேரின்பமே!

இது தான் சனாதன தர்மம் உரைக்கிறது!







-ஞான சற்குரு சிவசெல்வராஜ்
தங்க ஜோதி ஞான சபை
கன்னியாகுமரி



புதன், 20 ஜூன், 2012

தவம் பற்றி கேள்விகள்.

1. தீட்சை பெற என்ன தகுதி வேண்டும்?

தீட்சை எல்லா மனிதர்களும் பெறலாம்.

தீட்சை பெற முக்கிய தகுதி :

1 . சைவ உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும்.
2 . போதை , புகை போன்ற பழக்கங்கள் அறவே விடு நீங்க வேண்டும்.
3 . ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.

சுருங்க கூற வேண்டுமானால் பஞ்ச மா பாதகங்கள் செய்யாதவராக இருத்தல் வேண்டும். இப்பழக்கங்கள் இருப்பின் உடனடியாக இவைகளை கைவிட்டு , இனி இவைகளை செய்வதில்லை என சங்கல்பம் செய்து கொண்டு பின் தீட்சை பெறலாம்.


2. தவம் செய்வது எப்படி?

  • தவம் என்றால் மந்திர ஜபம் அல்ல. 
  • தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்பதோ அல்ல. 
  • தவம் என்றால் பிரணாயாமமோ அல்ல. 
  • தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல.
  • கண்மூடி செய்யும் எந்த செயலும் தவம் ஆகாது. 

கண்களை திறந்து தான் “விழி திறந்து” தான் தவம் செய்ய வேண்டும்.


இறைவன் திருவடியில் (நம் கண்ணில்- கண் மணியில் – கண்மணி ஒளியில்) மனதினை நிறுத்துவதே தவமாகும். சும்மா இரு என்பதன் அர்த்தம் இதுவே.

அதாவது நம் மனதை திருவடியில் வைத்து இருப்பதே.

குரு தீட்சை பெற்று நம் கண்ணில் உணர்வு பெற்று அதை
நினைத்து நினைத்து உணர்ந்து உணர்ந்து அதனால் ஏற்படும் நெகிழ்ச்சியில் திழைத்து திழைத்து சும்மா இருக்க இருக்க நம் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து கொட்டும். இங்நனம் தவம் தொடர்ந்தால் பலவித அனுபவங்கள் நாம் பெறலாம்.

 நமது வள்ளல் பெருமான் ஞான சரியையில் கூறியபடி நாம் இவ்வாறு தவம் செய்தால் பெறலாம் நல்ல வரமே.

நம் வினைகள் எல்லாம் எரிந்து விடும். பெறலாம் மரணமிலா பெருவாழ்வே. பிறவாப்பெருநிலை. அருட்பெரும் ஜோதி இறைவனோடு அந்த பரமாத்மாவோடு பேரொளியோடு நாமும் ஒளியாகி இணையலாம்.
பேரின்பம் பெறலாம்.


3 குருடர்கள் ஞானம் பெற முடியுமா?

நம் உயிரை பற்றி உள்ள வினைதிரைகள் நம் கண்மணி மத்தியில் உள்ள ஊசி முனை அளவு உள்ள துவாரத்தில் துலங்கும் ஒளியை (இறைவன் திருவடி) மறைத்து கொண்டு உள்ளது.

இவ்வினைதிரை பார்வை சக்தி உள்ளவர்களுக்கு கண்ணாடி போல் அமைந்து உள்ளதால் கண் ஒளியை கொண்டு பார்க்க முடிகிறது.

இதில் மிக பெரிய பாவம் குருடராக பிறப்பது. இவர்களுக்கு வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளத்தால் கண் ஒளியை கொண்டு பார்க்க முடிவதில்லை.

இதை விட பெரிய துரதிஷ்டம் திருவடியான கண்ணை அல்லது கண் ஒளியை பற்றி தவம் செய்ய முடியாமல் போவதே.

ஆனாலும் இறைவன் கருணை வடிவானவர். குருடர்கள் நேரடியாக தம் ஆன்ம ஸ்தானத்தை நினைத்து , அதில் குரு தீட்சையின் முலம் உணர்வு பெற்று தவம் செய்ய வேண்டும். இவ்வாறு தவம் செய்வது கடினமே என்றாலும் விடா முயற்சியின் மூலமும், வைராக்கியதுடனும் சாதனை செய்தால் வினை திரை அகன்று ஞானம் பெறலாம்.

எங்கள் ஞான சற்குரு நாதர் திரு.சிவசெல்வராஜ் அய்யா 2 கண் இல்லா அன்பர்களுக்கு தீட்சை தந்து உள்ளார்.


www.vallalyaar.com

திங்கள், 18 ஜூன், 2012

வினை திரை எங்கு உள்ளது ?

காணாத கண்ணில் படலமே கண்ணொளி
காணாத வர்கட்கும் காணாதது அவ்வொளி
காணாத வர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்
காணாது கண்டார் களவொழிந் தாரே.


 நம் கண்மணியில் மத்தியில் ஊசிமுனையளவு ஓட்டை உள்ளது!?
அதை மறைத்து ஒரு மெல்லிய கண்ணாடி போன்ற ஜவ்வு-படலம் உள்ளது!?
இதெல்லாம் பெரும் ரகசியம்! இதை தக்கலை பீர் முகமதுவும் பல பாடல்களில் குறிப்பிடுகிறார்! இறைவா என் இரு கண் படலத்தை நீக்கியருள் என வேண்டுகிறார்? ஞானிகள் கூற்று என்பதற்கு இதுவும் சாட்சி!

இறைவனை-ஒளியை காணாத கண்ணில் உள்ளவர் ஒளி படலம் வழியாகவே வெளியே தெரியும்! படலம் தான் நம் மும்மல திரை! (ஆணவம் கன்மம் மாயை) படலம் வழி பார்க்கின்ற மனிதனின் படலம் - வினை எப்படி
உள்ளதோ அப்படி அவன் செயல்படுகின்றான்! பார்வையே வினையாய் செயல்படுத்துகின்றது! 

படலம் இருக்கும் வரை  வினையிருக்கும் வரை சராசரி மனிதனே! சற்குருவை சரணடைந்து உபதேசம் கேட்டு தீட்சை பெற்று படலமாகிய வினை திரை அகல கண்மணி ஒளிபெருக்க தவம் செய்யவேண்டும்! படலம் அகன்றாலே நம் கண்மணி ஒளி நாம் காண நம் கண்முன் தோன்றும்! காணாத காட்சி எல்லாம் கண்ணில் காணுமடா என்கிறார் காகபுசுண்டர் ! உலகில் உள்ள மனிதர் அனைவருக்கும் உள் ஒளியாக துலங்கும் அந்த இறைவனை எல்லோருக்கும் பொதுவில் விளங்கும் பேரொளி, இருகண்ணும் உள்
சேரும் இடத்தில் பெருங்கண்ணாக நெற்றி கண்ணாக  அக்னி ததும்பும் அருட் கண்ணாக துலங்குகிறார் ! அதை கண்டவர் தீச்செயலை விட்டுவிடுவர்! தீச்செயலை விட்டாலே அவ்வொளியை காண்பார்! இதுவரை காணாத அம்மானுடர் கண் படலம் நீங்க பெற்று கண்ணொளி கண்டு தண்ணொளி கண்டு பேரின்பம் அடைவர்! பெறுதற்கரிய பெரும் பேறு இதுவே! குருவை நாடு! கண்ணை மூடிய படலம் நீக்க வழியறி! விழித்திரு!




ஞான சற்குரு சிவசெல்வராஜ்
தங்க ஜோதி ஞான சபை
கன்னியாகுமரி

திங்கள், 11 ஜூன், 2012

இறைவன் திருவடி கண்மணியே


" மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த  
அணியே அணியும் அணிக் கழகே  அணுகாதவர்க்கு
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியே நொருவரைநின் பத்மபாதம் பணிந்த பின்னே"

அபிராமி பட்டர் அடியேனுக்கு உரைத்த அபிராமி அந்தாதி  பாடல்
இது! ஆசி வழங்கி அருள் பாலித்தார் பட்டர் பெருமான்!

மணியே என்பதற்கு இதுவரை உரை எழுதிய யாரும் சரியாக எழுதவில்லை!
மணியே என்றால் மாணிக்கமே என்று பொருள் சொல்லி இருக்கின்றனர். அப்படியல்ல!


மணியே - கண்மணியே, மணியின் ஒளியே கண்மணியில் உள்ள ஒளியே
ஒளிரும் மணி புனைந்த அணியே - ஒளி பொருந்திய மணியை உடைய கண்ணே, அணியும் அணிக்கழகே - கண்ணுக்கு அழகே, அதிலுள்ள மணியின்  ஒளியே, அணுகாதவருக்கு பிணியே - கண்மணி ஒளியை அணுகாதவருக்கு பிறவி பிணியே, பிணிக்கு மருந்தே - பிறவியாகிய பிணி தீர மருந்து கண்மணி ஒளியே, அமரர் பெரு விருந்தே - தேவர்களுக்கும் பெரிய விருந்தே இது தான், பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே - கண்மணி ஒளியை இறைவனின் தாமரை திருவடி என்பது அதை பணிந்த நாம் வேறொருவரை பணியேன் என்பதே இதன் பொருள்.


இதுவே ஞானப்பொருள். இந்த ஒரு பாடல் போதும் ஞானம் பெறுவதற்கு ! அபிராமி  பட்டர் பிணிக்கு மருந்தே என நம் பிறவிப்பிணி தீர நம் கண்மணி யிலுள்ள ஒளி தான் மருந்து என்றார். இதையே வள்ளலாரும் நல்ல மருந்து  இம்மருந்து சுகம் நல்கும்  வைத்திய நாத மருந்து, அருள்வடிவான மருந்து அருட்பெருஞ்சோதி மருந்து என்றார்.

அபிராமி பட்டர் இறைவன் திருவடிகளை பணிந்த பின் வேறொருவரை பணிய மாட்டேன் என்றார். இதையே திருநாவுக்கரசரும் நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்படோம் என்று உறுதிபட கூறுகிறார்.

ஞானிகள் எல்லோர் கூற்றும் ஒன்று தான்! நாம் ஞானம் பெற எல்லோரும் ஒன்றை தான் சொன்னார்கள்! நன்றை த் தான் சொன்னார்கள்!

"கண்ணின் மணியை கருத்தின் தெளிவை
விண்ணில் நின்று விளங்கும் மெய்யினை
எண்ணி எண்ணி இரவும் பகலுமே
நண்ணு கின்றவர் நாந் தொழு ந் தெய்வமே"

தாயுமான சுவாமிகள் உரைத்த ஞானம்! இறைவனை, கண்ணின் மணியில்
ஒளியாக இருப்பதை, எல்லாம் வல்ல இறைவனே விண்ணில் இருக்கும்
மெய்யானவரே அது என்பதை, கருத்தில் இருத்தி இரவு பகலாக எப்போதும்
எண்ணி எண்ணி தவம் செய்பவரே நான் கும்பிடும் கடவுள் என உரைக்கிறார்
தாயுமான சுவாமிகள்.

காளத்தியான்  அவன் என் கண்ணில் உள்ளான் காண்'
என்  திருநாவுக்கரசர் உரைத்ததை உணர்வீர்.

 சனாதன தர்மம்
ஞான சற்குரு சிவசெல்வராஜ்

புதன், 9 மே, 2012

ஐந்தொழில் புரியும் வள்ளலார்!!



இறைவன் ஒருவரே!! அவர் அருட்பெருஞ்சோதி!! 


வள்ளல் பெருமான் உலகில் இருக்கும் உயிர்கள் எல்லாம் ஒளி வழி
பெற்றிட ஐந்தொழில் செய்கிறார். இதை அகவலில் குறிப்பிட்டு உள்ளார்கள்.

ஐந்தொழில் என்பது

  1. படைத்தல்
  2. காத்தல்
  3. அழித்தல்
  4. மாயையில் இட்டு மறைத்தல்
  5. அருளல்


அவர்


படைக்கும் போது நான்முகன்

காக்கும் போது நாரணன்,

அழிக்கும் போது ருத்ரன்,

மறைக்கும் போது மகேஸ்வரன்,

அருளும் போது சதாசிவன்.




அதை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர்  ஐந்தொழில் எப்படி புரிகிறார்  என்று  வள்ளல் பெருமான் அகவலில் பாடிய வரிகள்..



சிருட்டித் தலைவரைச் சிருட்டி அண் டங்களை
அருட்டிறல் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

காவல் செய் தலைவரைக் காவல் அண்டங்களை
ஆவகை அமைத்த அருட்பெருஞ் ஜோதி

அழித்தல் செய் தலைவரை அவர் அண்டங்களை
அழுக்கற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

மறைத்திடு தலைவரை மற்றும்  அண்டங்களை
அறத்தொடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி

தெளிவு செய் தலைவரைத் திகழும் அண்டங்களை
அளிபெற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

அருள் பெறிற் துரும்பும்  ஓர் ஐந்தொழில் புரியும்
தெருள்(தெளிவு) இது எனவே செப்பிய சிவமே

உலகு உயிர்த் திரளெலாம் ஒளி நெறி பெற்றிட
இலகும் ஐந்தொழிலையும்  யான் செயத் தந்தனை

முந்துறு மைந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும்
ஐந் தொழிலளிக்கும் அருட்பெருஞ் ஜோதி



சன்மார்க்க கொள்கையில் ஐந்தொழில் பற்றி  வள்ளலார் உரைநடை
பகுதியில் என்ன சொல்லி உள்ளார்?
இங்கே சொடுக்கவும்



கன்னியாகுமரி அருகே பார்க்க வேண்டிய இடங்கள் !!


செவ்வாய், 8 மே, 2012

ஜோதி தரிசனம் கிட்டும்!



எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் ,
பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில்
உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுனை அளவு
நெருப்பாக இருக்கிறான்!!

நம் உடம்பில் உட்புகு வாசலாகிய இரு கண்மணியில் ஞான குருவால்  தீட்சை பெற்று கண்மணியில் உணர்வு பெற்று அதை
நினைந்து நினைந்து உணர்ந்து  உணர்ந்து தியானம் செய்ய வேண்டும்!!

தொடர்ந்து முயற்சி செய்யச் செய்ய நெகிழ்ச்சி ஏற்பட்டு கண்களில்
நீர் ஆறாக பெருகி பாயும். இப்படியே சாதனை தொடரவேண்டும்!!

அப்போது கண்மணியின் உள் உள்ள சிறுஜோதி கொஞ்சங் கொஞ்சமாக பெருகும்! கண்மணியின் சுழற்சி கூடுவாதால் இது நடக்கும்!!

மனம் அங்கே நிற்பதால் கை கூடும்!!

இரு கண்மணி வழி பெருகும் ஜோதி உள்புகுந்து சேர்ந்து அக்னி
கலையுடன் போய் சேரும், அந்த இடம் நம் தலை உச்சிக்கு
கீழ் , வாய் அண்ணாவுக்கு மேல் உள்ள இடமே!!

"விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் ருறுக்கியொ  ரோப்பிலா   ஆனந்தக்
கண்ணின்று காட்டி களிம்பறுத்  தானே " - திருமந்திரம்

சனாதன தர்மத்திற்கு விளக்கம் இந்த ஒரு பாடலே போதும்!!

நம் கண்மணியில், வலது கண் சூரியன் இடது கண் சந்திரன்
ஆகிய கண்மணிகளிலும் தியானம் செய்வதால் பெருகும்
ஒளி உட்புகுந்து அக்னி கலையில் சேரும் - அதுவே முச்சுடரும்
ஒன்றான நிலை ! ஜோதி பாதம்! திருவடி!!

இந்நிலைபெறும் முயற்சியிலிருக்கும் சாதகனுக்கு படி படியாக
உச்சியில் இருந்து உள்ளங்கால்வாரை உள்ள 72000  நாடி நரம்பிலும்
கொஞ்சம் கொஞ்சமாக ஒளி பரவும்.

உடல் தூய்மையடையும்! நோய் நொடி வராது! உடல் உறுதி பெறும்!
உள்ளம் பண்பாடும்! இறைஅருள் கிட்டும் ! எல்லா ஞானிகளின்
ஆசிர்வாதமும் பெறுவான்!

ஜோதி தரிசனம் கிட்டும்!

திரை விலகும் ஆன்மா பிரகாசிக்கும்! அங்கிருந்து ஜோதி ஊர்த்துவமுகமாக மேல் எழுந்து உச்சியை சகஸ்ராரத்தை அடையும்!

உச்சியை அடைந்தால் அறிவுப்பிரகாசம்! பரவெளி காணலாம்!
வெட்ட வெளியில் உலாவலாம் ! பேரின்பம்! பேரின்பம்! பேரின்பமே!

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

தர்மச்சாலை >> சத்திய ஞானசபை


தருமசாலை கட்டி சாப்பாடு போட்டார் வள்ளலார்! சரி!
ஊருக்கு ஊர் சன்மார்க்க அன்பர்கள் வள்ளலார் பெயரை சொல்லி
அன்னதானம் செய்கிறார்கள்! உலகெங்கிலும் சன்மார்க்க சங்க
அன்பர்களால் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது!
மிகவும் மகிழ்ச்சி! ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றால் சாப்பாடு போடுவது என்று மட்டுமே கூறுகின்றனர் அறிவிலிகள்!

வள்ளலார் என்ற ஞானக்களஞ்சியம் அறிவுப் பெட்டகத்தின் பெயர்
சொல்லி அறிவே இல்லமால் சாப்பாடு போடுவதை மட்டுமே செய்கிறார்கள்! ஏனய்யா, உன்னை சாப்பாடு போடு என  சொல்வதற்காகவா வடலூர் ஞானி வள்ளலார் அவதரித்தார்?  சற்று சிந்திப்பாய் சன்மார்க்கியே!!



ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றால் சாப்பாடு போடுவதல்ல!  வள்ளல்
பெருமான் ஜீவகாருண்ய  ஒழுக்கம் என்று ஒரு தனி நூலே வெளியிட்டார். அதை முதலில் படியுங்கள்!

தர்மச்சாலை அமைத்து சாப்பாடு போட்ட வள்ளலார் சத்திய ஞான
சபை எதற்கு அமைத்தார்?  "தை பூச ஜோதி  தரிசனம் காண தவறாதீர்கள்" என்று வள்ளல் பெருமான் சொல்ல காரணம் என்ன?  சிந்தித்தீர்களா? அதிதி போற்றும் அருங்குணம் நம் மக்களிடம் உண்டு! சாப்பாடு ஒரு பெரியவிசயமேயல்ல!

சாப்பாட்டை பற்றி நினைக்காமல், சாவுக்காக, பிறந்ததில் இருந்து
நீங்கள் படும்பாட்டை சற்று சிந்தித்து கடைத்தேற வழிதேடுங்கள்!
சாப்பிட்டு சாப்பிட்டு சாவை நோக்கியே காலத்தை போக்குகிறீர்கள்!

வாழ பிறந்த நாம் சாகாமல் வாழும் வழியை கூறிய வள்ளலார்
வழிநடப்போம்! வெறும் உபதேசம் மட்டும் செய்யாமல், தானும்
ஒளியுடலாகி மரணமிலா பெருவாழ்வு பெற்று இன்றும் நமக்கு
 தோன்றும், அருளும் துணையாக திகழ்கிறார்! இது சத்தியம்!
உண்மை!

150  வருடங்களுக்கு முன் வடலூர் பெருவெளியில் உலா வந்த
அந்த உத்தம ஞானியின் வழி நடப்போம்! அவர் திருவருட்பா
படிப்போம்! மரணமிலா பெருவாழ்வு பெற ஜீவகாருண்ய ஒழுக்க
நெறிப்படி நடப்போம்! அன்னதானமும் செய்வோம்! முக்கியமாக
ஞானதானம் தான் செய்யவேண்டும்!!

-ஞான சற்குரு சிவசெல்வராஜ் 
தங்க ஜோதி ஞான சபை 

திருவடியை

நினைந்து நினைந்து 

ணர்ந்து ணர்ந்து
நெகிழ்ந்து நெகிழ்ந்து 

ன்பே நிறைந்து நிறைந்து 
ற்றெழுங் கண்ணீரதனால்  
உடம்பு நனைந்து நனைந்து  
ருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துதும் 

நாம் வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் 
வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன்(கற்பனை) 
பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே! - ஞானசரியை




படிக்கவேண்டிய பதிவுகள் 

1   தானம் தவம் (ஞான தானம்)

குரு வார்த்தை!

3 தவம் - சும்மா இரு!

4 திருவடி தீட்சை(Self realization)

புதன், 25 ஏப்ரல், 2012

சன்மார்க்கிகளே ஒரு வேண்டுகோள் !



மாதந்தோறும் பூசம் கொண்டாடும் நீவீர்!
தை பூசம் விழா கொண்டாடுகிறீர்! மகிழ்ச்சி!
வைகாசி -11  தர்மசாலை விழா கொண்டாடி
அன்னதானம் கொடுக்கின்றீர்! மிக்க மகிழ்ச்சி!

 புரட்டாசி சித்திரையை வள்ளலார் பிறந்தநாளை
குரு பூஜையாக கொண்டாடாமல் விட்டீரே ஏன்?
இனியாவது
புரட்டாசி சித்திரை குரு பூஜை கொண்டாடுக!!
  மெய் அன்பர்களே
அன்னதானம் செய்யும் மனித நேயம் மிக்கவர்களே!
ஞானதானம் செய்து ஆன்மநேய ஒருமைப்பாடு கொள்க!

             உலககுரு - ஞானசற்குரு
            திருவருட் பிரகாச வள்ளலாருக்கு
       நாம் காட்டும் நன்றி
         நாம் ஆன்ம நேய ஒருமைப்பாடு உடையவர்
ஆவதுதான்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்.
தங்கஜோதி ஞானசபை
கன்னியாகுமரி 

திங்கள், 16 ஏப்ரல், 2012

பூஜ்யத்துகுள்ளே ஒரு ராஜ்யம்

எட்டை எல்லோரும் வெறுப்பர் உலகில். ஆனால் இந்த எட்டு தான் நம்மை ஆள்கிறது.
இன்று அஷ்டமி நல்ல காரியம் செய்ய கூடாது என்கின்றனர். அஷ்டமியில் தானே கண்ணன் பிறந்தான். கண்ணன் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடுகிறோமே!

எட்டாக உள்ள கண்கள் தான் கண்ணன் இருப்பிடம், இதுவே ஞானம்!
 நம் முன்னோர்கள் பலரும் இந்த எட்டை பலபல பரிபாஷையில் பாடி உள்ளனர். இரண்டு பூஜியத்தை தொட்ட படி போட்டால் அது எட்டு. நிமிர்ந்து நின்ற 8 ஐ படுக்க வைத்தால் போல் ! இரண்டு கண்கள் போல் உள்ளது அல்லவா?


 "பூஜ்யத்துகுள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமல் இருப்பன் ஒருவன் அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்" என கவியரசு கண்ணதாசன் பாடியுள்ளார்.

 என்ன ஞானம் பாருங்கள்! பூஜ்ய ஸ்ரீ என்று பெரிய மகான்களை அழைப்பார்கலவா? பூஜ்ய மகிமையை அறிந்தவர் என்று பொருள். நமது உடலில் பூஜ்யம் போலே இருபது கண்மணி தனே! அதன் உள் மத்தியினுள் ஊசி முனை வாசல் உள் ஒரு ராஜ்ஜியம் உண்டு! அதை தானே நாம் அறிய வேண்டும். அந்த ராஜ்ஜியத்தின் ராஜா நம் கண்ணன் தான்! கண் அவன் தான்!


கண் ஒளி தான் அவன்! கண்ணன் வாயை திறந்தான் எல்லா உலகமும் தெரிந்தது என்று தானே பாகவதம் கூறுகிறது.

நம் கண் அடைக்கப்பட்டு உள்ளதல்லவா? அந்த ஊசி முனை திறப்பதை தான் கண்ணன் வாய் திறந்தால் அந்த ராஜ்ஜியம் பூராவும் தெரியும் என்றதாகும்.

இந்த எட்டான இரண்டு கண்ணிலும் வலது கண் 'அ'  என்னும்
தமிழில் முதல் எழுத்து என்றும் தமிழ் எண்ணில் எட்டை(8) குறிக்கும்
என்று இலக்கணம் கூறும்.

'உ' என்பது தமிழ் எண்ணில் இரண்டை குறிப்பதாகும்.  இது இடது கண்ணை
குறிப்பதாகும்.  இதுதான்  பரிபாஷை!

"எண்ணும் எழுத்தும் கண் என தகும்" - இது ஔவையார் வாக்கு.  இதை திருவள்ளுவரும் ஆமோதித்தார்! இப்படி தான்!

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
"

எண்ணாகவும்  உள்ளது எழுத்தாகவும் உள்ளது - கண்.

எண்ணாகவும் எழுத்தாகவும் உள்ள ஒரே எழுத்து அ   இது தான், இரண்டு கண் என்று கூறும் வள்ளுவர் வாழும் உயிருக்குத்தான் இது என்றார்.

அதாவது உயிர் வாழ (இறக்காமல் இருக்க)  எண்ணாகவும் எழுத்தாகவும் உள்ள அ, உ என்ற இரண்டும் நம் கண்தான் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

இதை சொல்லி தருபவர் தான் குரு!

உபதேசித்து உணர்த்துபவர் தான் சற்குரு!

எட்டும்  இரண்டும்  அறிவித்தான் என் நந்தி என திருமூலர் கூறுகிறார்!

 இன்றைக்கும் ஊர் பக்கங்களில் சொல்லுவார்கள் கேட்டு இருக்கரீர்களா?

"அ. ன.உ.ன தெரியாத பயலோடு என்ன பேச்சு" என்பார்களல்லவா? நம் முன்னோர்கள்  எட்டாகிய அ இரண்டாகிய உ தெரியாத அறிவிலிகள் அவர்களோடு பேசாதீர் என்று கூறியிருக்கிறார்கள் ! எவ்வளவு பெரிய ஞானத்தை எவ்வளவு எளிமையாக கூறி இருக்கிறார்கள்
பாருங்கள்!?

நம் அறிவுக்கு எட்ட வேண்டும் என்பதற்காகதான் பலப்பல விதத்திலும் பரிபாசையாக கூறியருளினர் எல்லா ஞானிகளும்.

நம் உணர்வுக்கு எட்டவேண்டும் என்பதற்காக குரு உபதேசம் பெறுக தீட்சை பெறுக என வலியுறுத்தினர் ஞானிகள்!

இறைவன் எங்கோ  எட்டாத தூரத்தில் இல்லை! நமக்கு எட்டும் தூரத்தில் எட்டாக இரண்டாக கண்களாக உடலில் இருக்கிறான். அதை எட்டிப்பிடி  உணர்வாலே! ? என்று தான் கூறியருளினார்கள். ஊர் புறங்களில் வீட்டில் பெரியவர்கள் பிள்ளைகளை எங்காவது போய் எதாவது வாங்கி வர செல்ல மகனே "இரண்டு எட்டு போயிட்டு வா"  என்று சொல்லி கேள்வி பட்டு இருக்கிறீர்களா?  

"நான் இரண்டு எட்டு போயிட்டு வரேன்" என சொல்லவும் கேள்வி பட்டு இருகரீர்களா?

எப்படியாவது எட்டின் மகத்துவத்தை மக்கள் அறியவேண்டும் என்பதற்காக
நம் வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் இதை மறைமுகமாக பரிபாசையாக
பலவேறு விதமாக கூறியருளினார்கள் ஞான வள்ளல்கள்!

ஞான நூல்கள் - PDF

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

வினையறுக்க வந்ததே இப்பிறவி


மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற நம் பஞ்சேந்திரியங்களும் நம் உயிர் ஆற்றலினால் செயல்படுகிறது.

உணர்தல் பேசுதல் பார்த்தல் நுகர்தல் கேட்டல் அனைத்தும் ஆத்மாவின் செயலால் - உயிர் ஆற்றலால் தான் ஐம் புலன்களும் ஆத்மஸ்தானத்தில் - உயிர் இருக்கும் இடம் - ஓளி துலங்குமிடத்தில ஒடுங்கி விடுகிறது.

ஐம்புலன்களால் மனம் எண்ணி, புத்திக்கு அனுப்பி, சித்தத்தில் உறுதிப்பட்டு அகங்காரம் செயல்படுகிறது. ஒவ்வொரு காரியமும் இப்படியே நடக்கிறது.

எச்செயலும் ஏதாவது கர்மத்தை - வினையை உண்டாக்கி விடும்.  வினைகள் தீர்க்க படவேண்டும். இது தீரத்தான் தியானம் தவம் தேவை.

வினை இருக்கும் வரை பிறப்புண்டு, வினை இல்லமால் போனால் தான் பிறவி இல்லாது போகும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.  "வினை போகமே ஒரு தேகம் கண்டாய் " அவரவர் வினைகளுக்கேற்ப  பிறவி
அமைகிறது. வினை முழுவதும் தீர வேண்டும். அதற்குதான் தவம். வினையறுக்க வந்ததே இப்பிறவி.

வினைகள் பிராரத்துவம், சஞ்சிதம், ஆகாமியம் என மூன்று வகை படும்.

பிறப்போடு வருவது பிராரத்துவம், விதிக்கப்பட்டு வந்து பிறக்கிறோம். நல்லோரை சார்ந்து ஒழுக்கமாக  வாழ்ந்து சத்தியமாக நேர்மையாக வாழ்ந்தால் இறைவன் அருளால் சற்குரு கிடைக்கும். குருவே சரணம்
என்று இருந்தால் இப்போது நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும் கண்ணனிடம் நம் கண்மணி ஒளியிடம் சமர்பித்துவிடவேண்டும். கண் அவன் கணவன். ஆத்மாக்களுக்கு கணவன் பரமாத்மாதான். கண்ணன் நம்
கண்மணியில் உள்ள ஒளி. அதிலே சரணடைந்து விட்டால் நம் செயல்களை கண்ணன் திருவடியில் கண்மணி ஒளியில் விட்டால் நமக்கு ஆகான்மியம் இல்லை.

குருவை பெற்று, கண் திறக்கப் பெற்று, தவம் செய்யச் செய்ய இனி ஆகான்மியம் இல்லை! சாதனையில் இறங்கும் சாதகனின் பிராரப்தம் குருவருளால் தீரும்! ஆகான்மியம் இல்லாது போய் - பிராரப்தம் கரைஞ்சு போய் - சஞ்சிதமும் ஒவ்வொன்றாய் வெளிப்பட்டு தீரும். "தலைக்கு வரும் துன்பம் தலைபாகையோடு போகும்" குருவே கூட இருந்து காப்பாற்றுவார்.

வினை தீரத்தீர இறைவனை நெருங்கி விடுவோம்.

பஞ்சமா பாதகம் செய்பவனாயினும் குருவால் உபதேசம் பெற்று சாதனை செய்தால் உத்தமனாகலாம். வால்மீகி மகரிஷி, அருணகிரி நாதர் இன்னும் பலர் உதாரணத்திற்கு இருக்கிறார்கள். கண்ணன் திருவடியில்
சரணானாலே நமக்கு வினையில்லை என்றாகும்.

"நாம் செய்பவனல்ல சாட்சி மாத்திரமே"  என வாழ்ந்தால் வினைகளிடமிருந்து விடுதலை! பிறவி கடலில்
நீந்தி கரையேறாலாம்.

நம் கண்மணி ஒளியிலே நாட்டம் வைத்து எந்த காரியம் செய்தாலும் அதனின்று எந்த வினையும் நமக்கு வாராது.


ஞான சற்குரு சிவசெல்வராஜ்
வள்ளல் யார்

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

சித்தர்கள் போற்றும் வாலை


சித்தர்கள் போற்றும் வாலை


வாயு மனமுங் கடந்த மனோன்மணி
பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும்நல் தாரமு மாமே

- திருமந்திரம்

மனதை உன் மணியில் வைத்தால்! மனோன்மணித்தாய் கண்ணில் உள்ளாள் காட்சி கிடைக்கும்! மணம் அங்கே நிறுத்தி கண்மணியில் நிறுத்தி தவம் செய்யும்போது அங்குள்ள ஒளி வாயுவால் பெரிதாகும்! கண்மணி சுழல சுழல காற்று வேகமாகி ஒளியை பேருக்கும்! “மன்மணம் எங்குண்டு வாயு அங்குண்டு” இதுவும் ஞானியின் கூற்றே!

அந்த மனோன்மணிதாய்க்கு வாலைக்கு அகில லோக அன்னைக்கு சேவகம் செய்ய காத்திருக்கும் பேயும் பூதகணங்களும் 2 கோடியாகும்! அவ்வாறு உள்ள 2 கோடி பூதகணங்கள் தான் தாயின் கட்டளையை நிறைவேற்றும் சேவகர்கள்! மிகப்பெரிய இரகசியம் இது! சித்தர் சொன்ன இரகசியம்! ஆய்ந்து அறிந்து அறிய முடியாத மனோவாக்கு காயத்துக்கு அப்பாற்பட்ட அந்த அரணுக்கு இவளே எல்லாமாம்!



ஆதி சக்தியாக படைத்ததால் தாய்! சிவத்தோடு சக்தியாக ஒளியோடு ஒலியாக இரண்டற கலந்து நிற்பதால் சிவசக்தியாய் துலங்குவதால் மனைவி! உயிரெல்லாம் சக்தியம்சமல்லவா சிவம் படைத்தாரல்லவா எனவே உயிரை படைத்ததால் உயிராக உள் பாதியாக சக்தி துலங்குவதால் மகளுமாவாள்! ஆஹா அற்புதம்! எவ்வளவு பெரிய உண்மை இது!

 ஒவ்வொரு தெய்வத்திற்கும் அவர்கள் பரிபாலனம் செய்வதற்காக பூதகணங்கள் உள்ளன! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணக்கில் உள்ளது! “நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாலாயிரம் பேர்” முருகப் பெருமானின் பூதகணங்களின் எண்ணிக்கை நாலாயிரம்! வீரபாகு முதலானவர்கள்! முருகனின் கணங்கள் தன முதலில் வந்து அடித்து நொறுக்கி நம்மை பக்குவபடுத்தி ஞானபாதைக்கு அழைத்து செல்வர்!

தாயே வாலையே என மகாமாயையைபணிந்தால் அரவணைப்பாள்! மும்மலத்தில் பெரியது மாயை! எப்படி வேண்டுமானாலும் ஆட்டுவிப்பாள்! தாயே என்று சரணடைந்தால் மட்டுமே தப்பலாம்!

உலகத்திலுள்ள எல்லா பெண்களையும் தாயாக பார்த்தால் மட்டுமே தப்பலாம்! அபிராமி பட்டரைப் போல!

அழுதால் அமுதம் தருவாள்! ஞானசம்பந்தருக்கு தந்தது போல! பசித்தால் சோறு தருவாள் வள்ளலாருக்கு தந்ததை போல! இன்னும் சொல்லி கொண்டே போகலாம் அன்னையின் மகிமையை!! அடியேனையும் சாவிலிருந்து காத்தருளினாள்! இன்றும் படியளக்கிறாள் அவள் சொன்னது போல! எம்மை பொறுத்தவரை எல்லாமே தாய்தான்! வாலைதான்! கன்னியகுமரி பகவதி அன்னைதான்! சரணம்! சரணம்! சரணம்!

ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யாவின் மந்திர மணி மாலை என்னும் நூலில் திருமந்திர பாடலுக்கான விளக்கம்

வியாழன், 22 மார்ச், 2012

மரணம் - ஆகாமிய கர்மம் என்ன தொடர்பு?



மரணம் எப்படி இருக்கும்?! மயக்கம்-தூக்கம்-மரணம் என மூன்று
நிலை உள்ளது. மயக்கம் என்பது நம் உணர்வு பிசகும் நிலை. உயிர்
நிலை கொள்ளாமல் தடுமாறுவதே மயக்கம். மிகக்குறுகிய காலம் உணர்வு
இல்லாமல் போவது.

தூக்கம் - நம் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கும் நேரம். உயிர் நிலை
கொள்ளும் நேரம், ஒடுங்கும் நேரம். நாடு உடலில் ஒடுங்கும். மிக குறைந்த
அளவில் உணர்வு இருக்கும்.

மரணம் என்பது உயிர் உடலில் இருக்க முடியாமல் உடலை விட்டு
வெளியேறுதல்.

மரணம் நம் கையில்!? தடுக்கலாம்!?

மரணம் வர காரணமான ஆகாமிய கர்மம் பாதிக்காத தன்மை பெறவேண்டும்.

உடலை விட்டு உயிர் பிரியாமல் மிக மிக கவனமாக பார்த்து கொள்ளவேண்டும்.

உடலில் உயிரை இறைவன் எங்கு பத்திரமாக வைத்திருக்கிறானோ?! அங்கேயே அதை பத்திரப்படுத்துவது தான் புத்திசாலித்தனம்!

அங்கே இருக்கச்செய்து விட்டால் அது தான் ஞான சாதனை! தவம்!!

பிறந்தது இறப்பதற்கல்ல! இறப்பை வெல்வதற்கு! அதுவே ஞானம்.

இதை உரைத்ததுவே சனாதானதர்மம். எல்லா மனிதர்களும் மரணம் வராமல்
தடுக்க பாடுபட வேண்டும்.

"தூங்கி விழிக்க மறந்தவன்" என இறந்தவனை வள்ளலார் குறிப்பிடுகின்றார்.

இன்றைய உலகில் மனிதன் சாப்பாடு  சாப்பாடு என அலைகிறான்.

சாப்பிடதான் வாழ்கிறான் அதற்குதான் உழைக்கிறான் பணம் சேர்க்கிறான்.

ஒவ்வொரு மனிதனும் தெரிந்தோ தெரியாமலோ சாப்பாட்டுக்காகவே வாழ்கிறான்! பிறப்பதே சாப்பாட்டுக்காகத்தான்!

சாப்பாடு அல்ல! சாவுக்கான பாடு சா- பாடு!? சாவதற்காக படாத பாடுபடுகிறான்.  எப்படியோ சாகிறான்!

சாககூடாது என்பதே சித்தர்கள் உபதேசம்!
சாகாதவனே சன்மார்க்கி!




சனாதன  தர்மம்
ஞான சற்குரு சிவசெல்வராஜ் 




1  வினை கழிந்து தன்னை உணர!!


யார் குரு?


3 தானம் தவம் (ஞான தானம்)






ஞாயிறு, 18 மார்ச், 2012

சன்மார்க்கம் நடத்துவது யார்?


"உலகமெலாம் போற்ற ஒளிவடிவனாகி
இலக அருள் செய்தான் இசைந்தே - திலகன் என
நானே சன்மார்க்கம் நடத்துகிறேன் நம் பெருமான்
தானே எனக்குத் தனித்து" - திருவருட் பிரகாச வள்ளலார்


இறைவன் ஒளிவடிவானவர்! அருள் பெருஞ்சோதி ! பிறந்து
வாழ்ந்து ஞான தவம் செய்து அந்த எல்லாம் வல்ல
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நிலையாகவே - ஒளியாகவே
ஆனவர் நமது திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்!!

1865  சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் வடலூரில் ஆரம்பித்த வள்ளல்
பெருமான் வேறு யாரிடமும்  அதை ஒப்படைக்கவில்லை ! நானே சன்மார்க்கம் என் பறை சாற்றுகிறார்!

அறிந்த - உணர்ந்த ஆன்ம நேய ஒருமைப்பாடுடைய திவ்ய ஆத்மா  சொரூபிகளுக்கு கூடவே இருந்து, தோன்றும் துணையாக துலங்கி வழி நடத்துகிறார்! கண்ணுள்ளவர் நோக்கக் கடவர்! நம் பெருமான் அருட்பெருன்ஜோதியின் அருளே எல்லாம்!
 

-புரட்டாசி சித்திரையை வள்ளலார் பிறந்தநாளை குருபூஜையாக
கொண்டாடாமல் விட்டீரே  ஏன்?

வெள்ளி, 9 மார்ச், 2012

திருவடி மெய்ப்பொருள் எது?

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.

சாத்திரங்கள் எல்லாம் தடு மாற்றம்
சொல்வதன்றி நேத்திரங்கள் போல் காட்ட நேராவே - திருஅருட்பா

ஒன்றாகிய இறைவனை இரு கண்களாகிய ஆறு

வட்டங்கள் கடந்து ஏழு திரைகள் விலக்கி

ஆன்மஜோதியை  நம் உள் காண வாரீர்
(ஞான சற்குரு சிவசெல்வராஜ்)

நின் திருவடித் தியானம் இல்லாமல் அவமே
சிறு தெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள் பால்
சேராமை எற்க ருளுவாய் -

அம்மை திருப்பதிகம்(வள்ளலார் )

என் கண் மணியுள் இருக்கும் தலைவ
நின்னைக் காணவே என்ன தவஞ்செய் தேன் 

- மெய்யருள்வியப்பு (வள்ளலார் )

கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சமே நீ
எண்ணாத மாய்கை எல்லாம் எண்ணுகிறாய் -
நண்ணாய் கேள் பார்க்க வேண்டும்தனையும்
பத்தரை மாற்றுத்தங்கம் ஆக்கப் போகாதோ உன்னால்.

(பட்டினத்தார்)

கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ - (சிவவாக்கியர்)

எங்கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!(பாரதியார்)

கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர் 

(கந்த குரு கவசம்)

எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்

எண்ணிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற 

தெய்வம் தூண்டாத மணி விளக்காய் 
துலங்குகின்ற தெய்வம்
(வள்ளலார் )

ஞாயிறு, 4 மார்ச், 2012

நடு கண்ணை திறப்பது எப்படி ?


சிறுபிள்ளையாக இருக்கும் போது அப்பா அம்மா தான் பார்த்து கொண்டனர். பேச தெரியாது கேட்க தெரியாது. அப்பா அம்மா பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். அதைவிட 1000  மடங்கு மேல் குரு பார்த்து கொள்வார். அதைவிட 1000  மடங்கு மேல் இறைவன் பார்த்து கொள்வார். இறைவன் அருள் புரிவார்.


குரு அருள் பெற்று தான் இறைவன் அருள் பெற முடியும்.

குருவின் பாதத்தில் சரண் அடைந்து தவம் செய்யணும். 



இன்ற நற்றாயினும்  இனிய பெருந்தயவு
ஆன்ற சிற்சபையில்  அருட்பெருஞ்ஜோதி

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே  - சிவபுராணம்

ஞான சற்குரு சிவசெல்வராஜ் அருளியது
 <iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/Llvf-lnAOcY" frameborder="0" allowfullscreen></iframe>


அருட்பெருஞ்சோதி அகவல் 

பரமுட னபரம் பகர்நிலை யிவையினத்
திரமுற வருளிய திருவருட் குருவே .1040

மதிநிலை யிரவியின் வளர்நிலை யனலின்
றிதிநிலை யனைத்துந் தொரிந்தசற் குருவே

கணநிலை யவற்றின் கருநிலை யனைத்துங்
குணமுறத் தொரித்துட் குலவுசற் குருவே

பதிநிலை பசுநிலை பாச நிலையெலாம்
மதியுறத் தொரித்துள் வயங்குசற் குருவே

பிரம ரகசியம் பேசியென் னுளத்தே
தரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே

பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே
வரமுற வளர்த்து வயங்குசற் குருவே .1050

சிவரக சியமெலாந் தொரிவித் தெனக்கே
நவநிலை காட்டிய ஞானசற் குருவே

சத்திய லனைத்துஞ் சித்தியன் முழுதும்
அத்தகை தொரித்த வருட்சிவ குருவே

அறிபவை யெல்லா மறிவித்தென் னுள்ளே
பிறிவற விளங்கும் பொரியசற் குருவே

கேட்பவை யெல்லாங் கேட்பித் தெனுள்ளே
வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே

காண்பவை யெல்லாங் காட்டுவித் தெனக்கே
மாண்பத மளித்து வயங்குசற் குருவே .1060

செய்பவை யெல்லாஞ் செய்வித் தெனக்கே
உய்பவை யளித்தெனு ளோங்குசற் குருவே

உண்பவை யெல்லா முண்ணுவித் தென்னுள்
பண்பினில் விளங்கும் பரமசற் குருவே

சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித்
தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே

சத்திய மாஞ்சிவ சித்திக ளனைத்தையும்
மெய்த்தகை யளித்தெனுள் விளங்குசற் குருவே

எல்லா நிலைகளு மேற்றிச் சித்தெலாம்
வல்லா னெனவெனை வைத்தசற் குருவே .1070

வியாழன், 1 மார்ச், 2012

பெருகி வரும் நோய்களை தீர்க்க?

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !


மிருகங்களும், பறவைகளும் மற்ற உயிர்களும் செய்யும் முறையீடும், விண்ணப்பமும்.

எல்லா உயிர்களுக்கும் பொதுக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை நீதிக்கடவுளே! தேவரீர் பெருங்கருணையினால் விசேட அறிவு கொடுக்கப்பட்ட மனிதர்கள் எங்களுக்குச் செய்யும் கொடுமைகளை சொல்லி முடியாது.

உணவிற்காக தினசரி கோடிக்கணக்கில் எங்களை பதறப்பதற,துள்ளத்துள்ள, வெட்டி, அறுத்து, நசுக்கி இரக்கமில்லாமல் கொள்ளுகிறார்கள்.

முன் ஜென்மத்தில் ஏற்கனவே நாங்கள் உயிரைக் கொன்று இரக்கமில்லாமல்
 வாழ்ந்ததால் தான் இப்போது மனித உடம்பிலிருந்து விடுபட்டு  துன்பபட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் மனிதர்கள் இப்போது அடைந்து கொண்டிருக்கின்ற துன்பங்களை எங்களால் தாங்க முடியவில்லை. அவர்கள் எவ்வளவு எங்களுக்கு செய்தாலும் அவர்கள் எங்கள் ஆன்ம இனங்கள் என்ற உணர்வு வந்துவிடுகிறது.

எங்களுக்குச் செய்யும் கொடுமையால் அவர்கள் கொடுமை, வறுமை,பிணி,துன்பம், கவலை , பூமி நடுக்கம், பெரும்புயல், யுத்தம், விஷசுரம்,பேரிடி, தீடீர் சாவு, திருட்டு, கொள்ளை, கொலை முதலியவைகளால் துன்பப்பட்டு இறக்கின்றனர். அவர்களுக்கு இரக்க சிந்தனை உண்டு பண்ணி அவர்களையும் எங்களையும் காத்தருள வேண்டும்.

தனக்கோ தன்பிள்ளைக்கோ தன் மனைவிக்கோ சுற்றத்திற்கோ ஆபத்து வரும்போது கவலைப்பட்டு கண்ணீர் விட்டுக்கதறும் மனிதர்கள் எங்களை ஏன் இரக்கமில்லாமல் கொல்லுகிறார்கள்? அவர்களுக்கு நாங்கள் என்ன கெடுதல் செய்தோம்?

இது தான் மனித நீதியா? உங்களைப் படைத்த கடவுள் தானே எங்களையும் படைத்தார்!



எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டுமென்று ஒருமை நடம்புரியும் ஒரே கடவுளே! ஒளியே!

எங்களுக்கு விசேட அறிவு இல்லாததால், எங்களுக்கு தேவரீரை வணங்க முடியவில்லை. நினைக்க  முடியவில்லை. பக்தி செய்ய முடியவில்லை. தொண்டு செய்ய முடியவில்லை.

ஆகவே எங்களையும் மனித உடம்பில் வரவழைத்து  தேவரீர் திருவடியை அடைய அருள் செயல் வேண்டும். மேலும் மனிதர்கள் அறியாமல் செய்த குற்றத்தை மன்னித்து அவர்களுக்கு உண்மை அறிவு, உண்மை இரக்கம், உண்மை அன்பு முதலிய நற்குணங்களை அளித்து இவ்வுலகையும் மற்ற உலகங்களையும் அறிவு உலகமாக, அருள் உலகமாக, ஆனந்த உலகமாக மாற்றும்படி மிகவும் மன்றாடி கேட்டு கொள்கிறோம்.


குற்றமெல்லாம் குணமாகக் கொள்ளும் குணப்பெருங்குன்றே! எவ்வுயிர்க்கும் தாயே!

எங்கள் சார்பில் எங்களுக்காக மனிதர்களிடம் வாதாடுகின்றவர்களுக்கும் தேவரீரிடத்தில் விண்ணப்பித்துக் கொள்பவருக்கும், கொல்லா விரதத்தை பரப்புகின்றவர்களுக்கும், எக்காலத்தும் எல்லா நன்மைகளும் பெறச்
செய்து மரணமிலாப் பெருவாழ்வில் அவர்களை வாழவைக்க வேண்டுகிறோம்.

மற்றவர்களையும் கொல்லா விரதத்தை எடுக்க செய்து அவர்களையும் மரணத்திலிருந்து விடுவிக்க  வேண்டும். சிற்றறிவால் செய்து
கொள்ளும் இச்சிறு விண்ணப்பத்தை திருச்செவிக்கு ஏற்பித்தருளல் வேண்டும்.

தேவரீர் பெருங்கருணைக்கு வந்தனம்!  வந்தனம்!


இங்ஙனம் தங்கள் அருமைப் பிள்ளைகளாகிய,
மாடு ஆடு கோழி பன்றி மீன் மற்ற உயிர்வகைகள்


ஊன் உணவை விட்டாலன்றி இன்று பெருகி வரும் எந்த
நோயையும் தீர்க்க முடியாது.  இது சத்தியம்! சத்தியம்!

------------------------------------------------------------------------------------------------------------------- 
 
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.

 

எந்த உயிரையும்,கொல்லாதவனை, உயிரைக் கொன்று கிடைக்கும் மாமிசத்தை உண்ணாதவனை உலகில் உள்ள எல்லா உயிர்களும், மக்களும் கை கூப்பி வணங்குவர்.

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுன்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

 

தன் உடம்பை வளர்ப்பதற்காக மற்றொரு உயிரின் மாமிசத்தை உண்பவன்
எப்படி அருள் உடையோனாக இருக்க முடியும்?


சைவ உணவே சன்மார்க்க உணவு!


----------------------------------------------------------------------------------------------------------------
ஞான சற்குரு   - ஆன்மீக செம்மல்
சிவசெல்வராஜ்,
தங்க ஜோதி ஞான சபை
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
கன்னியாகுமரி

http://www.vallalyaar.com


----------------------------------------------------------------------------------------------------------------
தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

வியாழன், 23 பிப்ரவரி, 2012

சாகத்தலை! வேகாக்கால்!போகாப்புனல்!

"சாகாதகலை அறியேன் வேகாதகாலின் தரம்
அறியேன் , போகாத தண்ணீரை அறியேன்"

சாகாத்தலை! - வேகாக்கால் ! -  போகாப்புனல்!  சாகாத தலை
நாம் செத்தும் சாகாமல் நம்மிடம்  உள்ள உயிர் ஒளி - அது
விளங்கும் இடம் கண்மணி இதுவே சாகாத தலை!  இதை அறிவதே
சாகா கல்வி! சாகாத கலை ! 

வேகாதகால் - நம் கண்மணி - நம் இரு கண்மணியானது உள்ளே
சென்று சேரும் இடம் அக்னி- ஆத்மஸ்தானம்! கண்மணியிலிருந்து
ஆத்மஸ்தானம் வரை உள்ளது ஒரு நாடி! அது கண் கருவிழியினுள்
பிராண நீரில் உள்ளது! கண்மணி ஒளி உள் ஊடுருவும்போது பிராண நீர்
கொதித்து ஆவியாகும்! அது மட்டுமே ஆவி - ஒளியே அக்னி கலை அடையும்! இது தவ அனுபவ நிலை! இதுவே வேகாத கால்! வெந்துபோய் விடாது!

போகாத புனல் - கண்மணி உள் நாடி வழிபுனல் நீர் போகாது!? அனலே
போகும்!? நீராவியே - ஒளி போகும்! அந்நிலையே அது மட்டுமே போகும்!
அங்கிருந்து நீர் போகாது! அதனால்தான் "போகாப்புனல்"!

சும்மா இருந்து தவம் செய்பவருக்கே இவ்வனுபவம் கிட்டும்! ஒருவர்
ஞானசாதனையாளரா என தெரிந்து கொள்ள சில சொற்களை கூறி
தெரியுமா என்பர்? தெரிந்தால் அவர் பதில் சொல்வாரல்லவா ?
தெரியாதவர் பேந்த பேந்த விழிப்பர்? பரிபாசையாக இரகசியமாக
கூறியதே இச்சொற்கள்! "மெய்ப்பொருள்!", சாகாத்தலை! வேகாகால்!
போகாப்புனல்! கருநெல்லி! திருவடி! திருச்சிற்றம்பலம்! திருவாடுதுறை !
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
கன்னியாகுமரி

----------------------------------------------------------------------------------------------------------------
தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

வினை கழிந்து தன்னை உணர வழி ?


"வெவ்வினைக் கீடான காயம் இது மாயம்"

நாம் செய்த பாவ புண்ணிய வினைகளுக்கு தகுந்தபடி நமக்கு உடல் தந்து இறைவன் நம்மை படைத்து அனுப்பினார் உலகத்தில்! இந்த உடல் வினைக்கு தக்கபடி செயல்படுவதால் அனைத்தும் மாயையே! வினைப்பயனே!

இப்படியே போனால் அழிந்து விடும் உடல்! அழித்து விடுவர் உடலை! சுட்டோ! இட்டோ! அழியுடம்பை அழியாமை ஆக்கும் வகையே, கண்மணி ஒளியை கண்டு உணர்ந்து தவம் செய்வதாகும்! ஒப்பற்ற மேலான இந்த தவம் சும்மா இருப்பதேயாகும்!

"வினை போகமே ஒரு தேகங்கண்டாய்"  என ஞானி ஒருவர் கூற்றும் இப்பொருளே! தேகம் அழியாமலிருக்க வேண்டுமானால் வினை இல்லாமலாக வேண்டும்!

அதற்க்கு தான் ஞான சாதனை!- தவம்!- சும்மா இருக்கவேண்டும்! கண்மணி ஒளியை குருவிடம் தீட்சை பெற்று உணர்ந்து தவம் செய்யச்செய்ய ஒளிபெருகி சூட்சுமம் நிலையிலிருக்கும் வினையாகிய திரை உருகி கரைந்து விடும்!

வினை தீரத்தீர ஒளி மிஞ்சும்! மிஞ்சுகின்ற ஒளி உடல் முழுவதும் பரவும்! ஊன உடலே ஒளி உடல் ஆகும்! பிறவி கிடையாது! வினை இல்லையெனில் பிறவி இல்லை!

வினைகள் மூன்று! பிராரத்துவம், ஆகாமியம், சஞ்சிதம்.

குரு தீட்சை பெற்று தவம் செய்யும் சாதகன் பிராரத்துவகர்மம் முதலில்

கொஞ்சம் கொஞ்சமாக தீரும்! குரு தீட்சை பெற்ற சாதகன் உத்தமனாக
வாழ்வதால் ஆகான்மிய கர்மம் தோன்றாது! தோன்றினால் குரு தடுத்து
காத்தருள்வார்! "ஆகான்மியம் அவன் ஆசானையே சேரும் "! தொடர்ந்து

தவம் செய்பவன் கண் ஒளி பெருகப் பெருக ஞானக்கனல் பெருகக் பெருக

சஞ்சித கர்மமும் கொஞ்சங் கொஞ்சமாக வந்துதீரும்! நைந்து பியந்து

போனாலும் நாதன் கை விடமாட்டான்! நான் மறைதீர்ப்பு! கர்மம் தொலையவே காரியம் செய்யணும்! சிவகாரியம்! - மோனம் கூடி சும்மா இருக்கும் நிலையே சிவகாரியம்! அந்த ஒளியை சரணடைந்தால் பேரின்பமே எந்நாளும்! நாமும் வாழலாம்! எல்லோரையும் வாழ வைக்கலாம்! குருவாக உயர்ந்து குவலயம் காக்கலாம்!

- ஞான சற்குரு சிவசெல்வராஜ்

----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

திங்கள், 20 பிப்ரவரி, 2012

குரு சாட்சாத் பரப்பிரம்மா

புண்ணியம் செய்யுங்கள்! தான தர்மம் செய்யுங்கள் !
எது புண்ணியம்! குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ?!
குருவை வணங்க கூசி நின்றேனோ!? மறுமுறை கண்ட வாசகத்தில்

வள்ளல் பெருமான் உரைத்த நீதி இது! குருவை பெறவேண்டும்! அதுவே
புண்ணியம்! நல்ல சற்குருவை பெற்று திருவடி உபதேசம் திருவடி தீட்சை
பெற வேண்டும்! அவனே புண்ணியம் செய்தவன்!


சீடனுக்கு குருவே தெய்வம்! குருவே எல்லாம்! குரு வாக்கை வேத வாக்காக மதிக்கணும்! குருவுக்கு புத்தி சொல்ல போகாதே!  உன்விருப்ப படி குரு இருக்கவேண்டும் என்று கூறாதே! குரு சொற்படி நீ நட! குருவை வணங்க கூசி நிற்காதே! குருவுக்கு காணிக்கை கொடுக்க மறக்காதே! குருவுக்கு, உன்னை இறைவனிடம் சேர்பிக்கும் குருவுக்கு உலகையே கொடுத்தாலும் ஈடு ஆகாதே!

உடல் பொருள் ஆவி அனைத்தும் தத்தம் செய்தால்தான் அந்த காலத்தில் குருவை பெறமுடியும்! இந்த காலத்தில் ஓசியிலே எதாவது குரு கிடைப்பாரா என தேடுகிறார்கள்! குருவுக்கு காணிக்கை கொடுக்க வேண்டும் என்ற அறிவே இல்லை! நீ கொடுக்கிற பிச்சையில் தானே குரு வாழ்கிறார்! நீ கொடுக்கும் பிச்சையில் தனே ஒரு குடும்பம் வாழ்கிறது! நீ கொடுக்கிற பிச்சையில் தானே குரு அலைந்து திரிந்து உன் போன்ற பலருக்கு ஞான உபதேசம் செய்கிறார்! நீ கொடுக்கிற பிச்சையில் தானே குரு ஞான பணி செய்கிறார்! குரு கேட்காமலே நீ குருவுக்கு பிச்சையை அள்ளி வழங்க வேண்டாமா? சீடர்கள் தரும் பிச்சைதானே குரு வாழ்க்கை!


"குரு சாட்சாத் பரப்பிரம்மா" அப்படி ஒரு குரு கிடைக்க நீ கோடி புண்ணியம்
செய்திருக்க வேண்டுமே! அப்படி ஒரு ஞான சற்குரு கிடைத்தால் உன் சிற்றறிவால் அவரை எடை போடதே! உன் ஆணவத்தால் அறிவிழந்து குருவை விட்டிடாதே! உன் பண திமிரால் குருவை புறக்கணித்து விடாதே!

அதனால் துன்பம் உனக்குத்தானே தவிர குருவுக்கு அல்ல! குரு எப்படியிருக்கிறார் என பார்க்காதே! குரு என்ன சொன்னார் என சிந்தித்து செயல்பாடு!

நதிமூலம் ரிஷிமூலம் பாராதே என சொல்வர்! நீ ஒரு நல்ல சீடனாக நடந்து கொள்! குருவுக்கு பிச்சை கொடு! வணங்கி பணி! பணிவிடை செய்! அவர் கட்டளையை சிறமேற் கொண்டு உடனே செய்!

ஞானதானம் செய்! குரு உபதேசத்தை உலகுக்கு கூறு!? ஞான நூல்களை எல்லோருக்கும் கொடு , அதுவே ஞான தானம்! உடற் பசியை போக்கும் அன்னதானம்! ஆன்ம பசியை நீக்குவதே ஞான தானம்! ஞான தானம் செய்பவனே உண்மையான சீடனாகிறான்!? அவனே பிற்காலத்தில் உன்னதமான சற்குருவாகிறான்! குரு பீடம் உன்னை தேடி வர வேண்டும்! நீ தேடி ஆசையுடன் ஓடினால் உனக்கு எட்டாத தொலைவுக்கு அது போய்விடும்!

நீ குரு ஆக விரும்பாதே! நல்ல சீடனாக முதலில் இரு!! நல்ல சீடனே நல்ல குருவாவான்! பொருளாசை குருவுக்கில்லை! உன்னக்கு இருப்பதால்தான்  கொடுக்க மறுக்கிறாய்! குருவானவர் யார்? ஞானி ஒருவரால் தகுதியானவர் எனக் கருதப்பட்டு, ஆசி வழங்கி குரு பீடத்தில் அமர்த்தப்படுபவரே!!  அவரை நீ ஒன்றும் அறிய மாட்டாய்!? உலக இன்ப துன்பங்களிலே சிக்கி, நைந்து , புடம்போட்டு எடுக்கப்படுபவரே குரு! அப்படிப்பட்ட ஒருவராலேயே திருவடி உபதேசம் திருவடி தீட்சை வழங்கமுடியும்! அந்த தகுதியை ஞானி ஒருவர் நல்குவார்!

அப்படிப்பட்ட ஞான சற்குரு மனம் நோகும்படி நீ நடக்கலாமா? உன் கர்மவினையை தன் தோளில் சுமக்கும் ஞான சற்குரு உளம் மகிழ தொண்டு செய்! பணி! உருகு! அதைவிடுத்து அவர் மனம் நோகச் செய்து நீ அவர் பாவத்தை வாங்கி கட்டிக்கொள்ளாதே! குருவை நிந்திக்காதே! அவர் மகிமை நீ அறிய மாட்டாய்! மாதா பிதா பெற்ற எல்லோருக்கும் குரு கிடைக்காது! குரு பெற்றவனே பாக்கியவான்!
 
           "குருவினடி பணிந்து கூடுவ தல்லார்க்கு
           அருவமாய் நிற்கும் சிவம்"

ஔவைக் குறளின் பொருளுணர்ந்து, அவனியில் ஞான சற்குருவை பெற்று, மரணமிலா பெருவாழ்வு அனைவரும் பெற வேண்டும்! திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் பொற்பாதம் பணிந்து வாழ்வோமாக!        

திருவருட் பாமாலை நாலஞ்சாறு
ஞான சற்குரு சிவசெல்வராஜ்
   
----------------------------------------------------------------------------------------------------------------
தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

Popular Posts