புதன், 12 டிசம்பர், 2018

மலங்க மலங்க விழித்தேன் செய்வதறியாது!



மலங்க மலங்க விழித்தேன் செய்வதறியாது!
உலகச் சேற்றிலே வீழ்ந்து உழலும் மனிதன் இப்படித்தான் பேந்தப் பேந்த மலங்க விழிப்பான்!
சரியான வழிகாட்டுதல் இல்லையேல் அதோகதிதான்! வழிகாட்டுபவர் குரு!
ஞானத்துக்கு வழிசொல்லி விழியை திறந்து உணர்வூட்டி தவம் செய்யும் முறை சொல்லித் தருவார்!
ஞானசற்குரு!

ஞானதவம் செய்யும்போதும் செய்வதறியாது இறைவா என கண்ணீர் பெருகி உள்ளம் உருகி இருக்கையிலே இரு - கையிலே கழுக்குன்ற பெருமான் பெருந்துறையான் நீரை மாற்றி ஒளியை பெருக்கி மும்மலங்களை நீக்கி நம்மை காத்தருள்வான்!

ஞான அனுபவம் இது!
முதலில் கண்ணீர் ஆறாக பெருகி ஓடும்.
பின் நீர்வற்றி மலங்கழியும் மும்மலம் அகல ஆரம்பிக்கும்!
இப்படியே தவம் தொடர தொடர நம் ஆன்மா தூய்மையாகும்.
பிறவா பெருநிலை பெறலாம்! குருவருளால்!


ஞான சற்குரு திரு சிவ செல்வராஜ் ஐயா
நூல் : திரு மணி வாசக மாலை
பக்கம் : 122
குருவின் திருவடி சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts