மனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

அந்தகரணங்கள் - புறப்புறம்

பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம்
தன்னை மறைத்தது தன கரணங் களாம்
தன்னின் மறைந்தது தன கரணங்களே.

பொன்னால் பல வித நகை செய்து நாம் அணிந்தால்
யாரும் பொன்னை பார்க்க மாட்டார்கள். வளையல்
கம்மல், நெக்லஸ், ஒட்டியாணம் என்று தான் பேசுவார்கள்.
நகைகளை பற்றி தான் பேசுவார்கள்.

மக்கள் பார்ப்பது ஆபரணத்தை! பொற்கொல்லர் பார்ப்பது தங்கத்தை!
பார்ப்பவன் கருத்தில் எல்லாம் உள்ளது. இதுபோல் மரத்தில்
ஒரு யானை பொம்மையை செதுக்கி வைத்தால் பார்ப்பவன் யானை
அழகாக இருக்கிறது என்பான், மரவேலை செய்யும் தச்சன் இது என்ன
மரம் என்பன்!

இதேபோல் சராசரி மனிதனின் அந்தகரணங்கள் மனம் புத்தி சித்தம்
அகங்காரம் மேலோங்கி இருப்பதால் தான் யார் என்பதை அறியமாட்டான்!
குரு மூலம் மெய்பொருள் அறிந்து உணர்ந்து தவம் செய்பவனின்
அந்தகரணங்கள் ஓய்ந்து, தான் ஆகிய ஆத்மா வெளிப்பட்டு நிற்கும்!
ஆத்மாவில் லயமாகிய இருப்பவனின் அந்தகரணங்கள் மறைந்து போகும்!
மோன நிலையிலிருந்து மோனியாவன்! ஞானி ஆவான் !

மந்திர மணி மாலை - 186 சற்குரு சிவசெல்வராஜ்


வள்ளலார் உரைநடை பகுதி

அகம் - ஆன்மா
அகப்புறம் - ஜீவன்
புறம் - கரணம்
புறப்புறம் - இந்திரியங்கள்(
என்கின்ற நாலிடத்திலும் கடவுட் பிரகாச முள்ளது.

1 பிண்டத்தில் அகம் ஆன்மா ஒரு பொருளினது உண்மையைஅறிதல் ஆன்ம அறிவு.

2 பிண்டத்தில் அகப்புறம் ஜீவன், ஒரு வஸ்துவின் பிரயோஜனத்தை யறிந்த
அறிவே ஜீவ அறிவு.

3 பிண்டத்தில் புறம் கரணம், ஒரு வஸ்துவின் நாமரூபத்தையும் குண
குற்றங்களையும் விசாரித்தறிதல் கரணமாகிய மன அறிவு.

4. பிண்டத்தில் புறப்புறம் கண் முதலிய இந்திரியங்கள், ஒரு பொருளினது
நாம ரூப குண குற்றங்களை விசாரியாமல் அந்தப் பொருளைக்காணுதல்
இந்திரியக்காட்சி, இந்திரிய அறிவு.

காட்சி மூன்று வகை படும்
1 கரணக்காட்சி
2 ஜீவக்காட்சி
3 ஆன்மக்காட்சி


அண்டத்தில் அகம் அக்கினி
அண்டத்தில் அகப்புறம் சூரியன்
அண்டத்தில் புறம் சந்திரன்
அண்டத்தில் புறப்புறம் நக்ஷத்திரங்கள்

ஆகவே பிண்டத்தில் நாலிடம் அண்டத்தில் நாலிடம்
- ஆக எட்டிடத்திலும் கடவுட் பிரகாசம் காரியத்தாலுள்ளது.


அகமாகிய ஆன்ம பிரகாசமே ஞானசபை, அந்தப் பிரகாசத்துக் குள்ளிருக்கும்
பிரகாசம் கடவுள், அந்த உள்ளொளியின் அசைவு நடம் - இதுதான் ஞானாகாசநடன மென்றும் அசைவுற்றதே நடராஜரென்றும் ஆனந்தநடன
மென்றும் சொல்லுகின்றது.

திங்கள், 21 நவம்பர், 2011

அகவல் - பிடித்த வரிகள்

உரை மனம் கடந்த ஒரு பெருவெளிமேல்
அரைசு செய்தோங்கும் அருட்பெருஞ்ஜோதி

ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே
ஆதாரமாகிய அருட்பெருஞ்ஜோதி

சாகாக் கலை நிலை தழைத்திடு வெளியெனும்
ஆகாயத் தொளிர் அருட்பெருஞ்ஜோதி

இன்ற நற்றாயினும் இனிய பெருந்தயவு
ஆன்ற சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி

முத்தி என்பது நிலை முன்னுறு சாதனம்
அத்தக வென்றவென் அருட்பெருஞ் ஜோதி

சித்தி என்பது நிலைசேர்ந்த அநுபவம்
அத்திற லென்றவென்ன அருட்பெருஞ் ஜோதி

கதிர்நல என் இரு கண்களிற் கொடுத்தே
அதிசயம் இயற்றெனும் அருட்பெருஞ் ஜோதி

நாயினுங் கடையேன் ஈயினும் இழிந்தேன்
ஆயினும் அருளிய அருட்பெருஞ் ஜோதி

களங்க நீத்து உலகங் களிப்புற மெய்நெறி
விளங்க என்னுள்ளே விளங்கு மெய்ப்பொருளே

தானொரு தானாய்த் தானே தானாய்
ஊனுயிர் விளக்கும் ஒரு தனிப் பொருளே

அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்ப்
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே

வீடுகளெல்லாம் விதி நெறி விளங்க
ஆடல் செய்தருளு மரும்பெரும் பொருளே

சத்திய பதமே சத்துவ பதமே
நித்திய பதமே நிற்குண பதமே

பற்றுகள் எல்லாம் பதி நெறி விளங்க
உற்றருள் ஆடல் செய் ஒருதனிப் பொருளே .


யாரே யென்னினு மிரங்குகின் றார்க்குச்
சீரே யளிக்கிஞ் சிதம்பர சிவமே

எம் பொருளாகி எமக் அருள் புரியுஞ்
செம் பொருளாகிய சிவமே சிவமே

அருள்பெறிற் துரும்புமோர் ஐந்தொழில் புரியுந்
தெருளிது எனவே செப்பிய சிவமே

எம்பொரு ளாகி யெமக்கருள் புரியுஞ்

செம்பொரு ளாகிய சிவமே சிவமே

உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே
உயிர்நலம் பரவுகென்று உரைத்தமெய்ச் சிவமே

பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையருட்
செந்நெறி சொத்திய சிற்சபைச் சிவமே

கொல்ல நெறியே குருவருள் நெறி எனப்
பல்கா லெனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே

உயிரெலாம் பொதுவினுள் உளம்பட நோக்குக
செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே .

உள்ளகத் அமர்ந்து எனது உயிற் கலந்தருள்
வள்ளல் சிற்றம்பலம் வளர் சிவ பதியே

பிழையெலாம் பொறுத்தெனுட் பிறங்கிய கருணை
மழையெலாம் பொழிந்து வளர் சிவ பதியே

Popular Posts