சநாதனதர்மம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சநாதனதர்மம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 நவம்பர், 2023

🔥அம்மையப்பனை காண வேண்டாமா ?🔥



நூல் : சநாதனதர்மம் 30

🔥அம்மையப்பனை காண வேண்டாமா ?🔥

நாம் எல்லோரும் - உலகமக்களாகிய 700 கோடி மக்களாகிய நாம் அனைவரும் அந்த ஒரே அம்மையப்பனின் பிள்ளைகளே !

அப்படியாயின் உலகமக்களாகிய நாம், 700 கோடி பேர்களும் சகோதரசகோதரிகள் தானே !?

பேரொளியாகிய அருட்பெருஞ்ஜோதியாகிய நம் அம்மையப்பனாகிய அந்த இறைவன்தான் சின்ன ஒளியாக நம் அனைவரின் கண்மணியிலும் ஒளிர்கிறார் !? எவ்வித வித்தியாசமுமின்றியே.

நம் அம்மையப்பனை நாம் காண வேண்டாமா ? உணர வேண்டாமா ?!

எல்லாம் வல்ல இறைவன், எங்கும் நிறைந்த இறைவன், அணுவுக்குள்ளும் அணுவாக இருப்பவன் நம் உடலில் இல்லாமலிருப்பானா ?

நம் உடலில் கண்ணில் மணியாக ஒளியாக இருக்கிறான். இந்த உலகிலுள்ள எல்லா ஞானிகளும் இதைத்தான் கூறியிருக்கிறார்கள்.

கண்தான் வெட்டாத சக்கரம் !
கண்தான் பேசாதமந்திரம் !
கண்தான் வேறொருவர்க்கும் எட்டாத புஷ்பம் !
கண்தான் கட்டாத லிங்கம் !

சிவலிங்கத்தை மேலிருந்து பார்த்தால் 3 வட்டம்தானே தெரிகிறது. 
கண் அதுபோலத்தானே உள்ளது.

கண்தான் கரும்பு -கரும் - பூ !

உலகில் எவ்வளவோ கலர்களில் பூக்கள் இருக்கின்றனவே, 
கருப்பு பூ உண்டா ? கண்தான் கருப்பு பூ !

அண்டம்போல் அழகியது கண் !

அண்டம் என்றால் உலகம் - பூமி நாமிருக்கும் பூமி உருண்டையாக 
இருப்பது போலவே நம் கண்மணி உள்ளது !

பூமி தன்னைத் தானே சுற்றுவதுபோல கண்மணியும் சுற்றுகிறது !

பூமி சுழல்வதற்கு ஆதாரம் அதன் உள் மத்தியில் கனன்று கொண்டிருக்கும் நெருப்புதான்.

கண்மணியும் அதன் மத்தியில் உள்ள, ஊசிமுனை துவாரத்தினுள் உள்ள சிறு ஜோதியால்தான் சுழல்கிறது !

பூமி எப்படி அந்தரத்தில் உள்ளதோ அதுபோலவே கண்மணியும் கண்ணின் கரு விழிக்குள் பிராண நீரில் மிதந்து கொண்டுதான் இருக்கிறது !


" பிராண நீரானதில் உருண்டு திரண்டதை கண்டு அறிந்திடு நீ "

என சித்தர் உரைத்தது கண்மணியைத்தான் !


" காளத்தியான் அவன் என் கண்ணில் உள்ளான் காண்"

என திருநாவுக்கரசர் உரைத்ததை உணர்வீர்.

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

வள்ளல்பெருமான் திருவடி போற்றி !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

செவ்வாய், 31 அக்டோபர், 2023

தனிஒருவன் மாறனும் ! - சநாதனதர்மம்

நூல் : சநாதனதர்மம் 20

🔥 தனிஒருவன் மாறனும் ! 🔥

 அறியாமையில் உழலும் மக்களை மிருக நிலையில் வாழும் மக்களை திருத்தி மனிதனாக வாழ வைப்பதே ஞானிகளின் ஒரே செயல். அதற்கு அவர்கள் குருவை பற்றிக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.

நல்வழி காட்டும் நல்ல ஒரு குரு தேவை.
நன்னெறி நடத்தும் வல்ல ஒரு குரு தேவை.
ஞான குரு வேண்டும் !
இறைவனை உணர்த்தும் குரு வேண்டும் !

எவன் ஒருவன் பேதம் பார்க்கிறானோ
அவன் இறைவனை அடைய முடியாது !
எவன் ஒருவன் தீயபழக்கம் உடையவனோ
அவன் இறைவனை அடைய முடியாது !

எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணுபவன் எவனோ எல்லாவுயிரும் இன்புற்றிருக்க 
எண்ணுபவன் எவனோ எல்லாவுயிரிடத்தும் அன்பு காட்டுபவன் எவனோ 
அவனே இறைவனை அடைவான் !

அவனே ஞானவான் !

அரபியில் சொன்னாலும், ஹீப்ரூவில் சொன்னாலும், சமஸ்கிருதத்தில் சொன்னாலும் தமிழில் சொன்னாலும் எல்லோராலும் சொல்லப்பட்டது - இறைவனைப் பற்றி மட்டுமே !

மொழியை பார்க்காதீர்கள் !
உபதேச மொழியை பாருங்கள் !?

இனத்தை நாட்டை பார்க்காதீர்கள் !
மனித இனம்தான் என உணருங்கள் !?

ஒவ்வொருவரும், நான் மனிதன் ! உலகிலுள்ள அனைவரும் என் 
சகோதர சகோதரிகள் என என்றைக்கு உணருகிறார்களோ அன்றுதான் உலகம் சுபிட்சமடையும் !

மதத்தை பரப்ப நினைக்காதீர்கள் !
மதம் எனும் ஆணவம் கொண்டு அலையாதீர்கள் மனிதனாக பாருங்கள் !

மனிதகுலம் தழைக்க பாடுபடுங்கள் !
எல்லோரிடமும் அன்பாக இருங்கள்.

🔥 இதெல்லாம் வர வேண்டுமானால் அதற்கு ஒவ்வொரு வரும் தன்னை 
உணர்வதுதான் ஒரே வழி ! இறைவனை உணர்வதுதான் !🔥

தனி ஒருவன் மாறினாலே, சமுதாயம் மாறும் !
திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

தனிமனிதன் மாறவே தவஞானிகள் அருள்புரிகிறார்கள். காப்பாற்றுகிறார்கள்.

நான் நல்லவனாக இருக்க வேண்டும் !
என எல்லோரும் எண்ண வேண்டுமே !? இதற்கெல்லாம் தான் குரு வேண்டும்!

உலகுக்கே ஆதி குரு முதல் குரு "ஸ்ரீ தட்சிணாமூர்த்தி"தான் !
இதுவே உண்மை !

அதன்பின் தந்தைக்கே உபதேசித்தான் தனயன் !? ஆறுமுகங் கொண்டவன் !

அகத்தியருக்கும் உபதேசித்தான் !

அருணகிரிக்கும் உபதேசித்தான் ! அழகனே !

இந்த வழிவந்த, வாழையடி வாழையென வந்தவர்தான் 
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

வெள்ளி, 27 அக்டோபர், 2023



நூல் : சநாதனதர்மம் 19

🔥 இப்பிறவி ஆண்டவனை அடையவே! 🔥

இராமலிங்க சுவாமிகளை சத்குருவாக கொண்டுதான் அடியேன் வாழ்கிறேன்.


இராமலிங்க சுவாமிகள் உரைத்த திருவடி ஞானத்தைத் தான் எங்குரு ஜோதி இராமசாமி தேசிகர் எமக்கு உபதேசித்தார், தீட்சை வழங்கினார்.
 
கடந்த இருபத்தைந்து ஆண்டாக சாதனைகள் செய்து, இராலிங்க சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்டு கண்ணியனானேன் !
 
எமக்கு இராமலிங்க சுவாமிகளை சுட்டிக்காட்டி, உணர்த்திய ஞானசித்தர் திருச்சி ஜோதி இராமசாமி தேசிகர் அவர்கள் சமாதி கொள்ளுமுன் அடியேனை அழைத்து குரு பீடத்தை அளித்தார்கள்.
 
அடியேனை பக்குவபடுத்தி, முதல் 12 ஆண்டு முடிவில் " கண்மணி மாலை " எழுதி வெளியிட வைத்தார்கள் !
 
அடுத்த 12-வது ஆண்டிற்குள் என்னை குருபீடத்தில் இருத்தி விட்டார் வள்ளலார்."குச்சண்டி - குச்சண்டி" என்று பாபாவும் அருள்வாக்கு கூறினார்.

 பாலாவின் கோயிலிலேயே அடியேனை குருவாக அமர வைத்தனர்."வலிந்து என்னை ஆட்கொண்டார் வள்ளலார்"

இப்போது 5 வருடங்களாக குருவாக அமர்ந்து எல்லா ஞானிகளும் உரைத்த திருவடி ஞானத்தை உபதேசித்து வருகிறேன், தீட்சை வழங்கி வருகிறேன் இறைவன் அருளால் !

"எல்லாம் அவன் செயல்"
"பாட்டுவித்தால் பாடுகிறேன் பணிவித்தால் பணிகிறேன்"
 "என் செயலாவது யாதொன்றுமில்லை"
 அடியேனை குருவாக இருத்தி, உள் இருந்து தீட்சை வழங்குவதும் அவர்களே !
 சென்னையிலும் நெய்வேலியிலும் பலநூறு அன்பர்கள் அடியேனிடம் தீட்சை பெற்றுள்ளனர்.
 கன்னியாகுமரிக்கு வந்து அடியேனிடம் தீட்சை பெற்றவர்களும் பலர்.
 அடியேன் செய்த புண்ணியம் ! ஞானவான்களின் அருள் கிட்டி இன்று ஞானகுருவாக இருக்கிறேன் அவர்கள் இட்ட பணியை செவ்வனே செய்கிறேன். செம்மையாக செய்ய வைப்பதும் அவர்களே !
 
உலகோரே வாருங்கள் !
உபதேசம் பெறுங்கள் !
தீட்சை பெறுதல் அவசியம் !
 
அரிதான இப்பிறவி ஆண்டவனை அடையவே !
காலந் தாழ்த்தாதீர் கண் திறக்க வாருங்கள் !

குரு யார் என தேர்ந்தெடுப்பதில் பலருக்கும் குழப்பம்.


 🔴தன் ஜாதியில் உள்ள சாமியாரை போற்றுகிறது ஒரு கூட்டம்.

 🔵தன் மதத்தில் உள்ள சாமியாரை கொண்டாடுகிறது மற்றொரு கூட்டம்.

 🔴தன் மொழி பேசும் ஒருவனை பாராட்டுகிறது இன்னொரு கூட்டம்.

 🔵சிற்சில காரியங்கள் நடந்ததை வைத்து ஏமாந்து விடுகிறது பிறிதொரு கூட்டம்.

பணத்துக்காக ஒரு கூட்டம்
புகழுக்காக ஒரு கூட்டம்
நோய்நீங்க ஒரு கூட்டம்
பொழுது போக்கவும் ஒரு கூட்டம்

இப்படியாக உலக மாந்தர்கள் அறியாமையால் அங்கங்கே சிக்கி அல்லலுறுகிறார்கள் !
 ஏமாந்தவர்களை திட்டம் போட்டு ஏமாற்றும் போலிகள்தான் ஏராளமாக இருக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும்.அறியாமையில் உழலும் மக்களை மிருக நிலையில் வாழும் மக்களை திருத்தி மனிதனாக வாழ வைப்பதே ஞானிகளின் ஒரே செயல்.

அதற்கு அவர்கள் குருவை பற்றிக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!\
வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

வெள்ளி, 13 அக்டோபர், 2023

🔥 ஆன்மநேயம் ? 🔥 சநாதனதர்மம்


நாம் செய்த முற்பிறவி பிராரத்துவ வினையால் பிறந்த நாம்,,,

இப்பிறப்பில் மேலும் மேலும் பாவஞ்செய்யாமல், நல்ல குருவை பணிந்து, திருவடி தீட்சை பெற்று இப்போது செய்கின்ற கர்மங்களை பகவான் பாதத்தில் அர்ப்பணித்து எல்லாம் நீயே என பரிபூரண சரணாகதி அடைந்து வாழ்வோமானால் ஆகாமியகர்மம் நம்மை சேராது.

இப்படி வாழ்வதுதான் வாழ்க்கை !
" கர்மாவை செய் பலனை என்னிடம் விட்டுவிடு "

என பகவத் கீதையில் கண்ணன் உரைத்ததை சிந்திக்கவும்.

" எல்லாம் அவன் செயல் "
என்பதை முழுமையாக உணர்ந்து வாழ்வதே வாழ்க்கை !

" என் செயலாவது யாதொன்றுமில்லை "
என முழுமையாக இறைவனிடம் - திருவடியில் சரணடைந்து வாழ்வதுதான் வாழ்க்கை.

" நான் யார் "
என்பதை அறிய முற்படுவதே அதற்காக பிரயர்த்தனபடுவதே வாழ்க்கை !

சமுதாயத்தில் ஒவ்வொருவரும் அவரவர் கடமையை செவ்வனே செய்ய வேண்டும். எல்லோரும் சேர்ந்ததுதான் சமுதாயம். பெரியவன் சிறியவன் எல்லாம் கிடையாது.

எல்லாதொழில் செய்பவரும் வேண்டும் !

எல்லோரும் எல்லா தொழிலையும் செய்ய முடியாது ! எல்லோரும் தத்தம் கடமையை சரிவரச் செய்தாலே நாடு சுபிட்சமடையும், மனித வாழ்க்கை மேம்படும்.

இப்போது நமக்கு கிடைத்த வாழ்க்கை எப்படிபட்டதாயினும் சரி, அதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்து சிறப்புடன், அர்ப்பணிப்பு மனபாவத்துடன் வாழ்ந்தால் ! யாரும் வாழ்வாங்கு வாழலாம் !

நமக்கு சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எதுவும் செய்துவிட முடியுமா ?

போலீஸ், கோர்ட்டு இதெல்லாம் எதற்கு ?

நம் சுதந்திரம் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். பிறரை துன்புறுத்தாத செயல்களை செய்யத்தான் நமக்கு சுதந்திரம் இருக்கிறது.

நம்மால் ஒரு சிறு உயிருக்கும் எப்போதும் எந்த துன்பமும் வராமல் வாழ்வதுதான் உன்னதமான வாழ்க்கை !

இன்றைய உலகில் எல்லோரும் மனிதநேயம் வேண்டும். மனிதநேயம் உலகம் முழுவதும் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

இந்திய ஞானிகள் என்றோ இதைவிட மேலாக உபதேசித்துள்ளனர்.


"ஒன்றேகுலம் ஒருவனே தேவன்"
"எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க"
"எவ்வுயிரும் தம்முயிர் போல் கருதுக"


இப்படி மனிதநேயத்தைவிட மிக உயர்ந்த ஆன்ம நேயத்தை போதித்தனர் !

மனிதனை மட்டும் நேசிக்க சொல்லவில்லை !
எல்லா ஜீவராசிகளையும் உன் உயிர்போல் அன்புகாட்டு என்பதே ! சிறந்தது.

உலகுக்கே இந்திய நாடு ஆன்மநேய ஒருமைப்பாட்டை வலியுறுத்துகின்றது.
இதுவே இந்தியாவின் பெருமை.

மனம் விரிந்து பரந்து இருக்க வேண்டும். எல்லா ஆத்மாவும் இறை சொரூபந்தான் என்பதை உணர வேண்டும்.

அதுதான் வாழ்க்கை.


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

புதன், 27 செப்டம்பர், 2023

சநாதனதர்மம் 🔥 வாழ்க்கை ! 🔥



மனிதர்களாகிய நாம் வாழ பிறந்தவர்கள். சந்தோஷமாக வாழ வேண்டும். நோய் நொடியின்றி நலமுடன் சிறப்புடன் வாழ வேண்டும். அதுதான் வாழ்க்கை !


ஏழையாக பிறந்தாலும், பணக்காரனாக பிறந்தாலும் எல்லோரும் எங்கும் சுகமாக வாழ சனாதன தர்மம் வழிகாட்டுகிறது.

எப்படியோ ? பிறந்து விட்டோம் !

 
பிறந்தபின் நாம் வாழ்கின்ற வாழ்வை நெறிப்படுத்தி வாழ்வாங்கு வாழ வேண்டும்.

 
நமது நாட்டில் வாழ்ந்த ஞானிகள் வாழ்க்கை வரலாறுதான் நமக்கு பாடம். நல்லதை படிக்க வேண்டும், பிடித்துக்கொள்ள வேண்டும்.
 
ஒவ்வொரு ஞானியின் நூலுமே நமக்கு ஒவ்வொரு பாடந்தான் ! பொக்கிஷந்தான்.
 
“என் வாழ்க்கையே என் செய்தி" என மிக அழகாக ஒரு ஞானி கூறியிருக்கிறார்.
 
பெரியபுராணம் 63 நாயன்மார் வரலாறை கூறும் நூல்.

 நன்றாக சிந்தித்து பாருங்கள். நமது நாட்டில் இறைவன் அடியார்கள் மொத்தம் 63 பேர்கள் தானா ?

 தூய்மையான, ஒப்பற்ற, உன்னதமான இறையடியார்கள் நம் நாட்டில் லட்சோபலட்சம் பேர்கள் !

 சேக்கிழார் ஏன் 63 பேரை மட்டும் எடுத்துக்கொண்டார் ?
 
பெரியபுராணத்தில் வரும் 63 பேரும் பற்பல ஜாதிகளில் பிறந்தவர்கள். பற்பல தொழில் செய்தவர்கள். பற்பல நிலைகளில் இருந்தவர்கள். இறைவனை அடைவதில் மட்டும் அனைவரும் ஒரே ரகம். தீவிர பக்தி அன்பு ஒழுக்கம் நெறிப்படி வாழ்ந்தார்கள்.
 
"எத்தொழிலை செய்தாலும் ஏதவஸ்தைபட்டாலும் முத்தர் மனம் இருக்கும் மோனத்தே" என்ற சித்தர் வாக்கு பரிபூரணமான முழு உண்மை.
 
இதுதான் நமக்கு பாடம் ! படிப்பினை ! நீ எந்த நிலையில் இருந்தாலும் சரி, இறைவன் உன்னை காத்தருள்வார் என பறைசாற்றுகிறது. இப்படியேதான் நம் புராணங்கள் எல்லாம்.
 
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

திங்கள், 25 செப்டம்பர், 2023

சநாதனதர்மம் - 🔥 மரணம் எப்படி இருக்கும் ?! 🔥

 நூல் : சநாதனதர்மம் 10

🔥 மரணம் எப்படி இருக்கும் ?! 🔥


மரணம் எப்படி இருக்கும் ?! 

மயக்கம் - தூக்கம் - மரணம் என மூன்றுநிலை உள்ளது. 

மயக்கம் என்பது நம் உணர்வு பிசகும் நிலை. உயிர் நிலை கொள்ளாமல் தடுமாறுவதே மயக்கம், மிகக்குறுகிய காலம் உணர்வு இல்லாமல் போவது.

தூக்கம் - நம் உடல் உறுப்புக்களுக்கு ஓய்வு கொடுக்கும் நேரம். உயிர் நிலைகொள்ளும் நேரம், ஒடுங்கும்நேரம், நடு உடலில் ஒடுங்கும். மிகக் குறைந்த அளவில் உணர்வு இருக்கும்.

மரணம் என்பது உயிர் உடலில் இருக்க முடியாமல் உடலை விட்டு வெளியேறுதல்.

மரணம் நம் கையில் !? தடுக்கலாம் !?

மரணம் வர காரணமான ஆகாமிய கர்மம் பாதிக்காத தன்மை பெறவேண்டும். உடலை விட்டு உயிர் பிரியாமல் மிக மிக கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

உடலில் உயிரை இறைவன் எங்கு பத்திரமாக வைத்திருக்கிறானோ ?! அங்கேயே அதை பத்திரபடுத்துவது தான் புத்திசாலித்தனம் !

அது அங்கேயே இருக்கச்செய்து விட்டால் அதுதான் ஞான சாதனை ! தவம் !

பிறந்தது இறப்பதற்கல்ல ! 

இறப்பை வெல்வதற்கு ! அதுவே ஞானம்.

இதை உரைத்ததுவே சனாதனதர்மம். எல்லா மனிதர்களும் மரணம் வராமல் தடுக்க பாடுபட வேண்டும். 

"தூங்கி விழிக்க மறந்தவன்" என இறந்தவனை வள்ளலார் குறிப்பிடுகின்றார்.

இன்றைய உலகில் மனிதன் சாப்பாடு சாப்பாடு என அலைகிறான்.

சாப்பிடத்தான் வாழ்கிறான் அதற்குத்தான் உழைக்கிறான் பணம் சேர்க்கிறான். 

ஒவ்வொரு மனிதனும் தெரிந்தோ தெரியாமலோ சாப்பாட்டுக்காகவே வாழ்கிறான் ! 

பிறந்ததே சாப்பாடுக்காகத் தான்!

சாப்பாடு அல்ல !

சாவுக்கான பாடு சா-பாடு !?

சாவதற்காக படாத பாடுபடுகிறான்.

எப்படியோ சாகிறான் !

சாகக்கூடாது என்பதே சித்தர்கள் உபதேசம் ! 

சாகாதவனே சன்மார்க்கி !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !! 

வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி !! 

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

🔥 பிறவிக்கு வித்து எது ? 🔥 நூல் : சநாதனதர்மம்

நூல் : சநாதனதர்மம் 4

🔥 பிறவிக்கு வித்து எது ? 🔥

அங்கமதில் முதல்முதலாய் தோன்றிய தலம் எது ? அதை சொல்லி, அதில் உயிர் இருக்கும் தன்மையை சொல்பவனே உண்மையான குரு என அகஸ்தியர் கூறுகிறார்.

தாயின் கருப்பையிலே முதன்முதலாக உருவாவது கண். தந்தையின் சுக்கிலமும் தாயின் சுரோணிதமும் சேரும்போது முதலில் உருவாவது ஒரு கண்.

அது இரண்டாகி இரு கண்களாகிறது. சுக்கில சுரோணித ஒளியே இருகண்களில் துலங்கி, அந்த ஒளியே வெதுப்பி வெதுப்பி பிண்டம் வளருகிறது.
பிண்ட உற்பத்தி ஓரளவு வளர்ச்சியடைந்த பின்னரே,
உயிர் வினையால் மூடப்பட்டு இறைவனால் உடலில் சேருகிறது.

பிறப்பின் இரகசியம் இதுவே !?
உடல் வளர்ந்து உயிர் சேர்ந்த பின்னரே மனிதன் பிறக்கிறான் வினைகளுக்கு தகுந்தபடி !
பிறவிக்கு வித்து கர்மவினைகளே !
கர்ம வினைகள் இருக்கின்றவரை பிறவி உண்டு !
பிறப்பு நிகழக் கூடாதென்றால் கர்மவினை இருக்கக்கூடாது !

வினையால் உயிர் பிறக்கிறது !
பிறப்பறுக்க வந்ததுவே இம்மானிட பிறவி !
ஏன் பிறந்தோம் ? இனி பிறவாமல் இருக்க !

பிறப்புக்கு காரணமான வினைகளை தெரிந்து அதை இல்லாமலாக் குவதே சாதனை !

வினைகளை அழிக்க வேண்டுமாயின், அதை கொடுத்த உயிரான அந்த இறைவனை சரண் அடைவதைத்தவிர வேறு வழிகிடையாது !?

எல்லாம்வல்ல, எங்கும் நிறைந்த சர்வமுமான அந்த இறைவனே ஊசிமுனை அளவு நெருப்பாக - ஜோதியாக - நம் உடலில் கண்களில் உயிராக துலங்கு கின்றான் !

ஞானிகள் உரைத்த சத்திய வார்த்தை இது !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
வள்ளல்பெருமான் மலரடிகள் போற்றி !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

🔥 ஞானிகள் கண்டறிந்த உண்மை ?🔥



நூல் : சநாதனதர்மம் 3

🔥 ஞானிகள் கண்டறிந்த உண்மை ?🔥

இந்த உலகில் பிறக்கும் நாம் அனைவரும் மனிதன் என்ற நிலையில் ஒரு குலம்.
ஆனால் 700 கோடி மக்கள் உள்ள இந்த உலகில் குணத்தால் 700 கோடி விதமாக இருக்கிறோம்.
உடல் ஒரே மாதிரிதான் !
உயிர் எல்லோருக்கும் ஒன்றுதான் !

பின் ஏன் இந்த வேறுபாடு ? எதனால் ? எப்படி ?
இதற்கு விடை இந்திய ஞானிகள் கூறுகிறார்கள்.

ஒரு மனிதன் பிறக்கிறது, அவன் இந்த பெற்றோருக்கு பிறப்பது இந்த ஊரில், இந்த சூழலில் என எல்லாம் நிர்ணயிக்கிறது ஒரு சக்தி !

ஒவ்வொருவரும் செய்த பாவ புண்ணிய வினைகளுக்கு தக்கபடி பிறவி அமைகிறது.
பிறப்பை தீர்மானிக்கின்ற அந்த மாபெரும் ஒப்பற்ற சக்தியே உயிரை கொடுக்கின்றது !
பிறப்புக்கு காரணம் கர்மவினை !
எத்தனை பிறவி எடுத்தோமோ ?
எவ்வளவு பாவ, புண்ணியம் செய்தோமோ ?

இதை அறிய, பிறப்பைப் பற்றி நாம் அறிய, பிறப்புக்கு காரணமான வினையோடு உயிரை கொடுத்த இறைவனிடம் கேட்க வேண்டும்.

வினைகளோடுதான் பிறப்பு !?
வினைக்கு தகுந்தபடிதான் பிறப்பு !
யாருமே இதற்கு விதிவிலக்கல்ல !


" வினைபோகமே ஒரு தேகங்கண்டாய்
தினை போதும் நில்லென்றால் நில்லாய்"
என ஞானிகள் அழகாக கூறியிருக்கிறார்கள்.

பிறக்கும்போது நாம் கொண்டு வருவது நாம் முற்பிறவிகளில் செய்த கர்மத்தில் ஒரு பகுதியே !


1. பிறப்பில் வரும் கர்மம் பிராப்தம் - பிராரத்துவம் என்பதாகும்.
2. பிறந்து நாம் செய்வது ஆகாமியம் !
3. பிறப்பில் வந்த பிராரத்துவம் போக மீதி இருப்பதே சஞ்சித கர்மம் !
ஆக மூன்றுவிதம்.

இந்த கர்ம வினைகளில் பிராரத்துவமே எல்லா பிறப்பிலும் எல்லோருக்கும் வருவது.

அதாவது நாம் பல பிறவிகளில் செய்த பாவம் கொஞ்சம், புண்ணியம் கொஞ்சம் இரண்டையும் சேர்த்து இறைவன் நாம் பிறக்கும்போது உயிரோடு இணைத்து, சூட்சும நிலையில் வைத்து பிறப்பிக்க வைக்கிறார்.


உயிர் பிண்டத்தில் வரும்போது தான் கர்மவினையும் கூடவே வருகிறது.
பிண்ட உற்பத்தியில் முதன் முதலாக உருவாகும் உறுப்பில்தான் உயிர் சேர்கிறது !
இதுவே ஞானிகள் கண்டறிந்த உண்மை !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
வள்ளல்பெருமான் மலரடிகள் போற்றி !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

புதன், 30 ஆகஸ்ட், 2023

🔥 பிறவி ? 🔥 நூல் : சநாதனதர்மம்



நூல் : சநாதனதர்மம் 1

🔥 பிறவி ? 🔥

மனிதனாக பிறக்கவே மாதவம் செய்திடல் வேண்டும் என்றார்கள்.
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்பது ஒளவையார் வாக்கு.
மனிதனாக பிறந்த நாம்தானே மற்றெல்லா உயிர்களையும் அடக்கி ஆள்கிறோம்.
நாம் பிறந்த தேதி மாதம் வருடம் தெரியும் எங்கிருந்து பிறந்தோம் ?
தாயின் கருப்பையில் 10 மாதம் இருந்தது தெரியுமா நமக்கு ?

பிறந்து வளர வளரத்தானே ஒவ்வொன்றாக அறிகிறோம்.
தாய் தந்தை சுற்றம் உலகம் இப்படி ஒவ்வொன்றாக அறிந்து வளருகிறோம்.
அறிவிக்கப்படுகிறது. தெரிவிக்கபடுகிறது. சூழ்நிலையாலும் மாறுபடுகிறது.
அறிவிப்பவர் அறிவுக்கு தகுந்தபடி ! புகட்டப்படுகிறது. இவையெல்லாம் எப்படி நிகழ்கிறது ?
ஆணும் பெண்ணும் சேர்ந்தால் கரு உருவாகிறது !
உருவாகும் கரு எல்லாம் உருப்பெறுவது இல்லை !

கல்யாணமாகி குழந்தையில்லை என ஏங்குவோர் கோடி கோடியாக உள்ளனரே !
ஆணும் பெண்ணும் சேர்ந்தால் பிண்ட உற்பத்தி மட்டும் தான் !
உடல் என்னும் அற்புதமான இயந்திரத்தை உருவாக்கியவன் யார் ?
உடல் இயங்க அதற்கு உயிர் அவசியமல்லவா ? உயிரை கொடுத்தது யார் ?
மனிதனால் உயிரை கொடுக்க முடியுமா ? உயிர் என்றால் என்ன ?
கருவிலிருந்து வெளிவரும் குழந்தைக்கு உயிர் இருந்தால் தானே நாம் மகிழ்வோம்.

பிறக்கின்ற குழந்தை அழுதால் நாம் மகிழ்வோம் !
பிறக்கின்ற குழந்தை அழவில்லையெனில் நாம் அழுவோம் !
கருவிலே உருவாகும் பிண்ட உற்பத்தி, அதன்பின் உயிர் சேர்தல் எப்படி நடக்கின்றது ? யாரால் ?
உருவானால் !? பத்திரமாக வளர்க்கத்தான் நம்மால் முடியுமே தவிர உருவாக்க முடியாது !?
நமக்கு அப்பார்ப்பட்ட ஒரு சக்தி இதையெல்லாம் நடத்துகிறதல்லவா ?
அந்த சக்தி எது ? எதன் அடிப்படையில் நடக்கின்றது ?
இதற்கெல்லாம் விடை, உலகில் ஞானபூமியாக விளங்கும்
இந்திய நாட்டின் ஞானிகள் தெளிவாக கூறியிருக்கிறார்கள்.

இந்த உலகம் எப்போது தோன்றியதோ ! மனிதன் எப்போது தோன்றினானோ ?!
கணக்கிட முடியாத காலத்திற்கும் முன்னது இங்கே இருந்த ஞானிகள் வாழ்க்கை !
உபதேசம் ! நூல்கள் !

உலகமனைத்திற்கும்,,,
ஒரே நெறி ! ஒரே வாழ்க்கைமுறை ! ஒரே கடவுள் ! ஒரே பண்பாடு !

அதுவே "சநாதனதர்மம் !"
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

திங்கள், 18 ஜனவரி, 2021

🔥 சநாதன தர்மமே சன்மார்க்கம் ! 🔥

விண்ணுக்கும் மண்ணுக்குமாக பெருஞ்ஜோாதியாக துலங்கினான் இறைவன் அடிமுடி காணாமல் விஷ்ணுவும் பிரம்மாவும் சோர்ந்தனராம் ! அக்னி மலையாக இறைவன் திருவண்ணாமலையிலே காட்சிதருகிறார் ! அகங்காரங் கொண்ட தேவர்கள் முன்னும் ஒரு பெருஞ்ஜோதி மலை தோன்றிற்றாம் ! அம்பாள் தான் அங்கனம் பேரொளியாக தோன்றினாள் என்கிறது கேனோபநிஷத்து ! 


சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்புப் பொறியிலிருந்து தோன்றினவன் தானே சண்முகக் கடவுள் முருகப்பெருமான் ! 

🔥சிவனும் பொன்னார் மேனியன் ஒளிவிடும் தங்கஜோதியானவன் ! 

🔥சக்தியும் மாதுளம் பூ நிறத்தாள் ஒளிவிடும் தங்கஜோதியானவள் ! 

🔥முருகனும் சிவஜோதியில் பிறந்த ஒளிவிடும் தங்கஜோதியானவன் ! 


" ஜோதியே சுடரே சூழொளி விளக்கே " என்றார் மணிவாசகர் ! 

         நம்மிலே நம் உயிராக தூண்டா விளக்காக, அணையா விளக்காக மணி விளக்காகவே துலங்குகிறார். இறைவன்! சிவனை சூரிய ஜோதியாக கூறும் அடியார்கள், விஷ்ணுவை சந்திர ஜோதியாக கூறுகிறார்கள்!


🔘" மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய் விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய் " என்று திருமங்கையாழ்வார் பாடியருள்கிறார். 

       திங்கள் தானாய் - சந்திர ஜோதியாய் என்று பொருள் ! அர்த்த நாரீஸ்வரராக பார்த்தால், வலது சிவம் இடது சக்தி ! சங்கர நயினாராக பார்த்தால் வலது சிவம் இடது விஷ்ணு ! சிவம் பாதி சக்தி பாதி போல சிவம் பாதி விஷ்ணு பாதியே ! இதுவும் அனுபவ ஞானத்தால் உணரலாம் ! சிவன் ஆண் அம்சம் விஷ்ணு பெண் அம்சம் ! மோகினி அவதாரம் எடுத்தாரல்லவா ? திருநெல்வேலி அருகே சங்கரன் கோவில் எனும் ஊரிலே அர்த்த நாரீஸ்வரர் போல சிவசக்தி போல ஒருபாதி சிவனும் மறுபாதி விஷ்ணுவுமாக காட்சி தருகிறார்கள் ! 🔘


சைவம் தான் பெரிது வைஷ்ணவம் தான் பெரிது என வாதிடும் முட்டாள்களுக்கு அறிவுறுத்தவே இறைவன் இக்கோலம் கொண்டார் போலும் !! 

" அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயிலே மண்ணு " இது தான் ஞானம் ! 

எம்மதமே பெரிது சிறந்தது எம்மார்க்கமே பெரிது சிறந்தது என வாதிடும் முட்டாள்களுக்கு அறிவுறுத்தவே வந்தார் வடலூர் வள்ளலார் ! 

🙏🙏🙏 " எம்மத நிலையும் நின்னருள் நிலையில் சம்பதமே " சகலரும் சேர்ந்ததே சன்மார்க்கம் ! என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந்தானே என்று வள்ளல் பெருமான் உலகுக்கே வழிகாட்டுகிறார் ! வள்ளலார் சொல்வது ஏதோ ஒரு புதிய மார்க்கமல்ல !? யுகம் யுகமாக நம் நாட்டிலே நிலவி வரும் சநாதன தர்மமே ! உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான வாழும் வாழ்க்கை நெறியே ! சநாதன தர்மமே சன்மார்க்கம் ! 

வாழையடி வாழையென வந்த ஞானியர் திருக்கூட்ட மரபினில் 19-ம் நூற்றாண்டிலே வந்தவர்தான் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ! சன்மார்க்கம் என்றால் இது ஏதோ புதுவழி என்று எண்ணி விடாதீர் ! ஆதி காலம் முதலே நம் ஞானிகளால் இறைவனை அடைய காட்டிய வழியே இது ! 🙏🙏🙏

👁️🔥👁️   நமது உடலில், இருதயத்தில் கட்டைவிரல் அளவான இடத்தில் புகையில்லாத ஜோதியாக இறைவன் துலங்குகிறான் என்கிறது கடோபநிஷத்து ! இரு உதயமான சூரிய சந்திரனான இருகண்களில், நமது கண்தான் நம் கட்டைவிரல் அளவிலானது ! புகையாத ஒளிரும் ஒளியாக, கண்மணி மத்தியில் ஊசி முனை துவாரத்தின் உள் ஒளியாக துலங்குகிறான் இறைவன் ! உணருங்கள் ! 👁️🔥👁️


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
ஆன்மீகசெம்மல் ஞானசற்குரு
சிவசெல்வராஜ் அய்யா


வள்ளல்பெருமான் மலரடிகளே போற்றி !!
அனந்தகோடி சித்தர்கள் மகான்கள் 
ஞானிகள் பொன்னடிகளே போற்றி போற்றி !!
www.vallalyaar.com

Popular Posts