உடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 டிசம்பர், 2011

உடலென்ற கூட்டை தூக்கி சுமப்பது யார்?

உடலென்ற கூட்டை தூக்கி சுமப்பது யார்?

நாம் படுத்தால் நம்மை தூக்க  நாலு பேர் வேண்டுமே! நாலுபேர் தூக்க சிரமப்படும் உடலை நாமே தூக்கி கொண்டு நடப்பது எப்படி? நோய் வந்து படுக்கையில் படுத்துவிட்டால் கை கால்களை கூட அசைக்க  முடியாதே!

நன்றாக இருக்கும் போது நம்மை நாமே தூக்கி கொண்டு பாரமின்றி
திரிவது எப்படி? நம்முள் இருக்கும் உயிரான  இறைவன் தானே சதா காலமும் நம்மை சுமந்து திரிகிறார்! சுமப்பவனுக்கு கூலிஆகாரம் நைவேத்தியம்! நம்மை சுமப்பவனை பஞ்சமாக பாதகங்கள் செய்து துன்புறுத்தாமல் அடிபணிந்து சும்மா இருந்தாலே அரவணைப்பான்!

மெய்கொண்டு போனாலே மெய்யான பரமனை நம் மெய்யிலே காணலாம்
உணரலாம் மகிழலாம்! இதுவே மெய் !

நான் மெய். என் உடல் மெய். என் பெற்றோர் சொந்த பந்தங்கள்  மெய் தான்.
பலநூறு வருடங்களாக பல ஆயிரம் வருடமாக  பல ஆயிரம் வருடமாக
மன்னர்கள் பலர் ஆட்சி புரிந்தனர். இது சரித்தரம் கூறும் மெய்! நாம் இருக்கும்
பூமி  உருண்டை தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனை சுற்றி வருகிறது.
இது விஞ்ஞானம் கூறும் மெய். இப்பிரபஞ்சத்தில் நவ கோள்கள் அவற்றின்
சஞ்சாரங்கள் எல்லாமே உண்மை தானே! யார் இதை எல்லாம் படைத்தது!
நடத்துகிறது ? ஏன் இப்படிஎல்லாம் நடக்கிறது? ஏன் இந்த நாடகம்!
இயற்கையில் நானும் ஒரு அங்கமா? இது எல்லாம் மெய் தானே!
இதை எல்லாம் நம்பும் நான் அறிவது எப்படி? உணர்வது எப்படி?  இந்த
மெய்யை மெய்யாலுமே நம் மெய்யில்  உணர காண முடியுமா?  முடியும்
என்கின்றனர் மெய் ஞானிகள்!! ஆம் தவத்தின் மூலம் உணரலாம்! 


பக்தியில் பலர் உடலை வருத்தி பல சாதனைகள் செய்கின்றனர்!
மனோதிடம் இல்லாத கடினமானவர்கள் செய்யவேண்டியது தான்!
ஆனாலும் இது சரியல்ல! அன்பே வடிவான இறைவனை, கருணை
கடலான கடவுளை, அருள்மயமான ஆண்டவனை அடைய கடின
போக்கு தேவை இல்லை!  அன்பே கடவுள் என்றனர் ஆன்றோர்!
கடவுளை அடைய அன்பு ஒன்றே வழி! மெய்யுனுள் மெய்பொருள்
அன்பால் நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து தவம் செய்வதே சும்மா
இருக்கும் நிலையே ஒப்பற்ற ஞானம்!  மெய்யை வருத்தாது,
மெய்யில் உள்ள மெய்பொருளை மெய்ஞான சற்குரு மூலம்
அறிந்து உணர்ந்து மேன்மை பெறலாம்! இதுவே மெய்!


புத்தகம்

----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

சனி, 17 டிசம்பர், 2011

மெய்ப்பொருள் - கண்மணி ஒளி

மெய் என்றால் உண்மை. சத்தியம். இன்னொரு பொருள் உடல்.
"தமிழ் மொழி தெய்வீகமானது அதிவிரைவில் சுத்த சிவானுபூதியை
நல்க வல்லது" என வள்ளல் இராமலிங்கர் பகர்ந்துள்ளார்! எப்படி எனில்
தமிழ் எழுத்துகள் உயிர் எழுத்து மெய் எழுத்து உயிர்மெய் எழுத்து என்றே
உள்ளது. உயிரான இறைவன் உடலான மெய்யில் இணைந்தாலே ,
உயிர்மெய் கூடி எழுத்தாகி சொல்லாகி பொருளாகிறது! உயிரோடு கலந்தது
தமிழ் என்பதே சரி!

மெய்யிலே உள்ள மெய் உயிரே! மெய்யாகிய உடலிலே உள்ள சத்தியம்
உயிரே! மெய்எழுத்து தனித்து இயங்காதே! உயிர் எழுத்தோடு மெய் எழுத்தும்
சேர்ந்தே இயங்கும். உடல்மட்டும் மெய்மட்டும் தனித்து இயங்காது.
உடலோடு உயிரும் சேர்ந்தாலே இயக்கம். எட்டும் இரண்டும் எழுத்தாகி ஓங்கார சொல்லாகி மெய்பொருளாக விளங்குகிறது!

"தேவர் குறளும் திருநான் மறை முடிபும்
மூவர் தமிழும் முனி மொழியும் - கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்" -
திருக்குறள் நான்கு வேதங்கள் தேவாரம் அகஸ்தியர்

முதலான சித்தர் பாடல்கள் திருவாசகம் திருமந்திரம் இவை அனைத்தும்
உரைப்பது ஒரு வாசகம் ! மெய் ! உண்மை ! சத்தியம்! அது மெய்பொருள் !

ஆக தமிழில் உள்ள எல்லா நூற்களுமே, சங்க இலக்கியமாகட்டும் பக்தி
இலக்கியமாகட்டும் அருட்பாக்கள் ஆகட்டும் இவை அனைத்தும் உரைப்பது
முடிவில் மெய்பொருள்!

மெய்யிலே விளங்கும் பொருள் கண்மணி ஒளியே மெய்ப்பொருள்.
"எண்சான் உடம்புக்கு சிரசே பிரதானம்" அவரவர் கையால் அளந்தால்
அவரர் உடம்பு எட்டு சான் அளவே இருக்கும். இதில் தலை ஒரு சாண்.
நமது உடம்புக்கு தலையானது - முக்கியமானது தலையே-சிரசே!
முக்கியமான - பிரதானமான இடத்தில தானே தலைநகரத்தில் தானே
தலைவர் இருப்பார். தலை போலே இருப்பதால் தான் தலைவர்.

நம் தலைவர் இறைவன் நம் மெய்யில் முக்கியமான, தலையில் இருக்கிறார்.
இறைவன் -பரம் பொருள் நம் உயிராக , பிராணனாக ஜீவனாக நம் தலையின்
உள் மத்தியில் பத்திரமாக இருக்கிறார். பத்திரமாக நம் மெய் உடல் இறைவனை - நம் உயிரை தாங்கி கொண்டு இருக்கிறது.

உயிர் தங்கிய சற்பாத்திரம் - நமது உடலில் நேத்திரத்தில் துலங்கி நிற்கிறது!
அதுவே மெய். அதுவே மெய்பொருள்.

மெய்யிலே இருக்கும் மெய் துணை கொண்டு, காயமே இது பொய்யடா
என்றவர்களின் வாக்கை பொய் ஆக்கிவிடலாம்! காயத்துள் நின்ற கடவுளை
கண்டால் மெய் மெய்யாகிவிடும்.

மெய்யை-உடலை பொன் போல பாதுகாக்க வேண்டும் என்றர் வள்ளலார்.
உடலினுள் துலங்கும் தங்க சோதியை கண்டால் நம் உடலும் பொன் உடலே!
இது மெய்! பொன்னம்பலவனை, பொன்னர் மேனியனை நம் மெய்யில்
கண்டால் நம் உடலும் பொன் உடலாகும்! இது மெய்யே.


மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்

பக்கம் 42

சற்குரு - சிவசெல்வராஜ்


----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

Popular Posts