சனி, 21 ஏப்ரல், 2018

ஞானத்தில் ஞானம் பரிபூரண நிலை

அறுவகை சமயத் தறுவகை யார்க்கும்
வீடுபே றாய்நின்ற விண்ணோர் பகுதி
கீடம் புரையுங் கிழவோன்

ஆறு வகை சமயத்தோர்களும் பற்பல வழி செயல்படுபவர்களும் வீடுபேறடைந்தவர்கள்
எனும் இடம்  விண்ணின் ஒரு பகுதி அது எது தெரியுமா? சிவத்தின் முன் கண்ணுக்கு
புலப்படாத கிருமி போன்றதே என்று மாணிக்கவாசகர் இயம்புகிறார்! அப்படியாயின்?
பக்தியால் முக்தி, கர்மாவினால் முக்தி யோகத்தினால் முக்தி சாலோகம், சாமீபம், சாரூபம்
என்ற வீடுபேறுகளை தான் மாணிக்கவாசகர் சிவத்தின் முன் கண்ணால் பார்க்க முடியாத
அளவு மிகச்சிறிய அற்ப கிருமி புழு என்கிறார்! உண்மையான வீடுபேறு என்பது ஞானத்தில்
முக்தியே. அதுவே சாயுச்சிய நிலையாகும்! ஞானத்தில் ஞானம் பரிபூரண நிலை !  சிவத்தோடு
சிவமாக ,கலப்பதே! அதற்க்கு வழி ஞான சற்குருவை நாடி பணிந்து ஞானோபதேசம் ஞான
தீட்சை பெற்று தவம் செய்வது தான்!  அப்போது தான் கிழவோன் வயது முதிர்ந்தவர் சொல்ல
முடியாத காலத்திற்கு முற்பட்டவர், அதாவது நமது பழைய பரமசிவம் தான் அருள் தருவார்!
சீவனான நம்மையும் சிவமாக்குவார் 

ஞான சற்குரு சிவசெல்வராஜ்   அய்யா -         www.vallalyaar.com

Popular Posts