மூர்த்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மூர்த்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 ஏப்ரல், 2024

உணர்வின் மூர்த்திதான் இறைவன்


🔥திருமந்திரம் 2938 - ஞானவிளக்கம்🔥

 
"உணர்வுடை யார்கட்கு உலகமுந் தோன்றும்
உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வுடை யார்கள் உணர்ந்த அக்காலம்
உணர்வுடை யார்கள் உணர்ந்து கண்டாரே"

 
சற்குரு மூலம் மெய்ப்பொருளில் - கண்களில் உணர்வுடையார் தவம் செய்து செய்து மேலும் மேலும் உணர்வை பெருக்கினால் அவர்கள் முன் முதலில் தோன்றுவது உலகம் ! உலகை பார்க்கின்ற கண்கள் உலகம் - பூமியைப் போல் இருக்கின்ற கண்மணி !

ஞானசாதனை செய்து உணர்வை பெருக்கியிருக்கின்றவர்களுக்கு மூவினைத்துயர் அற்றுப் போகும் ! 

தவசீலர்கள் உணர்ந்தபோதே, கண்ணில் உணர்வை பெருக்கி உள்சென்று ஆத்மாவை உணர்ந்த அப்போதே இறைவனை உணர்ந்தவர் யாவார் !

தன்னை உணர்ந்த அக்கணமே தான் ஆன இறைவனையும் உணர்வார்கள் காண்பார்கள் !

எப்போதும் உணர்வு இருந்தால் மரணம் இல்லை !

உணர்வு அற்றுப் போனால் தானே மரணம் !

எப்போதும் உணர்வு இருந்தால் ஒளி பெருகி ஜீவஜோதி பிரகாசிக்கும் !

ஊன உடலே ஒளி உடலாகும் !

அதன்பின் உயிர் பிரியாது ! சிரஞ்சீவியாவான் !

"உணர்வின் மூர்த்திதான் இறைவன்"

என நம்மாழ்வார் கூறுகிறார் !

"உதிக்கின்ற உச்சித்திலக உணர்வுடையார்"

என அபிராமிபட்டரும் அழகாக கூறுகிறார் !

"நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து"

என வள்ளலாரும் பாடியருள்கிறார் !

உணர்வோடிரு !

உன்னை நீ அறியலாம் !

பேரின்பம் பரவசம் பெறலாம் !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

-ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

ஞானம் பெற உதவும் படிக்கட்டுகள்

 சாகாக்கல்வி நூலிலிருந்து : 19 

🔥 ஞானம் பெற உதவும் படிக்கட்டுகள் 🔥

“மூர்த்தி - தலம் - தீர்த்தம் முறையாக ஆடின பேர்க்கு வார்த்தை சொல ஒரு சற்குரு வாய்க்கும் பராபரமே"     என தாயுமான சுவாமிகள் கூறுகிறார் ! 

ஒவ்வொரு மனிதனும் பக்தியோடு இருந்தால் நல்ல பண்போடு வாழ்ந்தால், நெறிபிறழாது வளர்ந்தால் நல்ல ஒரு குருவை அந்த ஆண்டவனே கொண்டு சேர்ப்பார் ! 

நன்றாக கவனியுங்கள்,,, 

நீங்கள் சிறந்த பக்திமானாக விளங்கினால் இறைவன் அருளால் உங்களுக்கு கிடைப்பது நல்ல ஒரு குருவே !

குரு மூலமாக தவம் செய்து தான் ஞானம் பெறவேண்டும் ! 

இதுவரை வாழ்ந்த மகான்களின் வரலாறை படித்துப்பாருங்கள், கஷ்டப்படாமல் துன்பப்படாமல் கடுமையான தவம் மேற்கொள்ளாமல் யாராவது ஞானம் பெற்றார்களா ? 

வேலை செய்யாமல் கூலி கிடைக்குமா ? 

ஞான சற்குருவை நாடி மெய்ப்பொருள் அறிந்து உணர்ந்து சதா காலமும் தவம் செய்தால் கிட்டும் இறையருள் !

     இன்றைய உலகில் மக்களுக்கு ஆன்மீகம் என்றால் கோவிலுக்கு போவது பூஜை செய்வது பஜனை பாடுவது அபிஷேகம் செய்வது தீர்த்தயாத்திரை போவது அன்னதானம் செய்வது யாகம் செய்வது பிராணாயாமம் செய்வது தியானம் செய்வது என ஏதாவது ஒன்றைத் தான் கருதுகிறார்கள் ! 

     இவையனைத்தும் ஞானம் பெற உதவும் படிக்கட்டுகளே ! 

     இவையனைத்தும் பக்தி கர்மம் யோகத்தில் அடக்கம் !

ஞானம் என்றால் தன்னை அறிவது ! 

நான் யார் ? என உணர்வது ! 

ஞானம் பெற இறையருள் பெற பக்தி தான் அஸ்திவாரம் ! 

பக்தியில் லாமல் ஞானமில்லை ! 

சிலர் வறட்டு வேதாந்தம் பேசுவர், விதண்டா வாதம் செய்வர், வித்யாகர்வம் மிக்கவர்களாயிருப்பர். இவர்களுக்கு ஞானம் கிலோ என்ன விலை ? என்ற கணக்குதான் ? 

பணிந்தவர்க்கே பரமனருள் கிட்டும் ! 

அன்பும் பணிவுமே ஞானத்தை தரும் !

 இறைவன் திருவடிகளே நம் கண்கள் ! 

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

சனி, 17 செப்டம்பர், 2011

சன்மார்க்க கொள்கை

சன்மார்க்க கொள்கை (இராமலிங்க வள்ளலார்)

சர்வசித்தியை உடைய தனி தலைமை பதியாகிய ஆண்டவரை
வேண்டித் தபசு செய்து சிருஷ்டிக்குஞ் சித்தியைப் பெற்றுகொண்டவன்
பிரமன் ; சிருஷ்டி, திதி ஆகிய சித்தியைப் பெற்று கொண்டவன் விஷ்ணு;
சிருஷ்டி, திதி , சங்காரம் ஆகிய சித்தியைப் பெற்று கொண்டவன் ருத்திரன்.

இவர்கள் ஏற்படுத்திய சமய மார்கங்களை அனுடிக்கின்றவர்கள் இவர்களை
அந்தந்த
சமயங்களுக்குத் தெய்வங்களாக வணங்கி வழிபாடு செய்து வந்தார்கள்,

இம் மூர்த்திகளுடைய சித்திகள் சர்வ சித்தி யையுடைய கடவுள் சித்தியின்
இலேசங்கள்,
அதில் ஏகதேசம் கூட அல்ல. ஆகையால், இவர்கள் அந்த
சர்வ சித்தியையுடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள் ; கோடி கோடிப் பங்கு
தாழ்ந்த தரத்தில் இருகின்றார்கள், ஆகையால் சமய தெய்வங்களை
வழிபாடு செய்து, அந்த சமய தெய்வங்களிடம் பெற்று கொண்ட
அற்ப சித்தியில் அவர்கள் மயங்கி மகிழ்ந்து அகங்கரித்து மேலேற
வேண்டிய படிகள் எல்லாம் ஏறிப் பூரண சித்தி அடையாமல்
தடைப்பட்டு நிற்றல்போல நில்லாமல்,

சர்வ சித்தியை உடைய கடவுள் ஒருவர் உண்டென்றும் அவரை
உண்மை அன்பால் வழிபாடு
செய்து பூரண சித்தியைப் பெறவேண்டும்
என்றும் கொள்ள வேண்டுவது சன்மார்க்க சங்கத்தவர்களுடைய கொள்கை.

இதை ஆண்டவர் தெரிவித்தார்.

சுத்த சன்மார்க்கதின் முடிபு

சாகாத கல்வியைத் தெரிவிப்பதே அன்றி வேறில்லை . சாகிறவன் சன்மார்க
நிலையை பெற்றவனல்ல. சாகாதவனே சன்மார்க்கி
.



Popular Posts