வெள்ளி, 30 செப்டம்பர், 2022

தேவி பூஜாவிதி

"மங்களமாய் நவராத்திரிப் பூசைக் காக வந்தமர்ந்த திரிசூலி

மகிழோங்காரி"


தேவி பூஜாவிதி

வாலை திரிசூலி ஓங்கார

நாதமானவள் ஆதாலல் ஓங்காரி!

ரீங்காரம் செய்பவள் ஆதலால் ரீங்காரி! திரிசூலம் கையில் ஏந்தியவள் ஆதலால் திரிசூலி! சூரிய சந்திர அக்னி என மூன்று கலையாக துலங்குவதால், திரிசூலம் போல் துலங்குவதால் திரிசூலி நவராத்திரி பூஜைக்காக கன்னிய குமரியிலே வந்தமர்ந்தளாம்!

மூன்று மூன்று மூன்று வட்டமாக மூம்மூன்று நாளாக 9 நாள் பூஜையாம் அதுதான் நவராத்திரி பூஜையாம்!

ராத்திரி தானே நமக்கு இப்போது! பாவவினையால் சூழ பிறந்திருப்பதால் ராத்திரிதான்! 9 ராத்திரி - நவராத்திரி 9 வட்டத்தை ஒன்றாக்கி- நவகோணத்தில் அமர்ந்திருக்கும் வாலையைக் கண்டு! 10-ம் நாள் வெற்றி விழாவாக விஜய தசமியாக கொண்டாட வேண்டும்! இதுவே தசரா! ஞானம்!

வாலையை காண கன்னியகுமரி வருக! நவராத்திரி பூஜை உன்னுள் செய்க! உன்னுள் நீ காணவிருக்கும் சிறுபெண் - வாலை - கன்னிய குமரி - பகவதியம்மனை சிலா ரூபமாக காண வா கன்னியகுமாரிக்கு!


பக்தியால் பார்த்தால் பகவதியம்மன்! தவத்தால் உணர்ந்தால் வாலை! பார்! உணர்!
கன்னி 'ய' குமரியிலே!


பிள்ளை நம்மை கண்டால் தாய்க்கு மகிழ்ச்சி தானே! எத்தனையோ பிறவி கடந்து இப்போதாவது இந்த தாயை காண வருகிறானே! இந்த தாயின் மகிமை உணர்ந்தானே என மகிழ்ந்து நம்மை வரவேற்பாள் அந்த ஓங்காரி! ஓம் ஆக இருப்பவன்! ஓம் எனும் நாதமாக விளங்குபவள்! பிரணவஸ்வரூபிணீ!
 

ஞானம் பெற விழி

பக்கம் எண் 125


புதன், 14 செப்டம்பர், 2022

🔥 இரகசியம்🔥சூட்சுமம் 🔥



"அங்கமதில் முதன்முதலாய் தோன்றிய தலம் எது ?

ஆறைந்து இதழிரண்டு முளைத்ததெங்கே ?

அல்லல்படும் ஐம்பூத ஒடுக்கம் எங்கே ?


சொல்லவல்லார் உண்டானால் நாளும் குரு என பணிந்து வணங்கலாமே".


ஒரு தாயின் கருவில் குழந்தை உருவாகும்போது, சுக்கில சுரோணித சம்பந்தத்தால் உருவாகும் முதல் உறுப்பு "கண்" !

கண் ஒளி தான் பிண்ட உற்பத்திக்கு காரணமாகிறது !


ஆறுமுகம் கொண்ட ஆறுமுகனாகவும் ஆறுபட்டை கொண்ட ஒளிக்காட்சியாக தோன்றுவது, ஐந்து கரங்கொண்ட விநாயகனாகவும் கணங்களின் பதியான கணபதி ஒங்காரமாகவும், இரண்டு இதழ்கள். மலரின் இதழ்கள் போன்று மென்மையான இரு கண்மணிகளாக அதில் ஜோதியாக முளைத்து துலங்குவதாகும் !

ஐம்பூதங்களும் கண்ணில் உள்ளது.

கண்ணில் உள்ள சதை மண் அம்சம் !

கண்ணில் நீர் இருக்கிறதல்லவா ?

நீர் அம்சமாயிற்று !


கண்ணீர் சில சமயம் சூடாக இருப்பதை நாம் அறியலாம். அப்படியானால் தீ இருக்கிறது என்று தானே பொருள் !

அக்னி அம்சமுமாயிற்று !

தீ இருக்கிறது என்றால் நிச்சயம் காற்று இருந்தாகவேண்டுமே !?

நாலாவது பூதம் வாயுவுமாயிற்று !

அடுத்து ஆகாயம் ?

இதுதான் இரகசியம் ! சூட்சுமம் !

நமது கண்ணின் அமைப்பை பாருங்கள்.

வெள்ளைவிழி அதற்கு நடுவே கருவிழி அதற்கும் மத்தியில் கண்மணி கிருஷ்ணமணி என்பர், பாப்பா என்பர். கண்மணி, கருவிழியின் மத்தியில், கருவிழியின் உள், கருவிழியை தொடாமல் அந்தரத்தில் இருக்கிறது !! அங்கே இருக்குது வான்வெளி வெட்டவெளி அதுவே ஆகாயம் !

இப்படி ஐம்பூதங்களும் ஒரே இடத்தில் இருப்பது கண்ணில் மட்டுமே !
ஐம்பூத ஒடுக்கம் கண்ணிலே !

எல்லாவற்றையும் இரகசியம் ஏதுமின்றி எந்த மறைப்புமின்றி சொல்லிவிட்டேன் !

எங்குரு அருளாலே !

அடியேனை குரு என ஏற்றுக் கொள்ளலாமா ?

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

திங்கள், 5 செப்டம்பர், 2022

🔥 மெய்ப்பொருளை பற்றுவோம் 🔥

 

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு"



உலகிலுள்ளவர்கள் எல்லோரும் சொல்லும் விஷயங்கள் பலவாயினும் அவற்றின் அடிப்படை, ஆரம்பம் இறைவனைப் பற்றியதேயாகும் !




அறிவுப் பூர்வமாக சிந்தித்துப் பார்த்தால் தான் எல்லோரும் சொல்வது "மெய்ப்பொருள்" பற்றித்தான் எனப்புரியும் !




யார் சொன்ன சொல்லாயினும் அதை பிரித்து பார்த்து ஏன் எதற்கு என சிந்தித்தால் உண்மை - உன்மெய் - மெய்ப்பொருள் தான் எல்லாமே எனப் புரியும் ! விளங்கும் !




எப்பொருளும் மெய்ப்பொருள் தான் எனப் புரிய வேண்டுமானால் நாம் மெய்ப்பொருளை பற்றித்தான் ஆகவேண்டும் !




அது ஞான சற்குரு பற்ற வைத்தால்தான் நடக்கும் !




தீ பற்ற வேண்டுமல்லவா ?




குருவை பணிந்தால் குரு பற்ற வைப்பார் !




நீங்கள் சிக்கெனப் பற்றிக் கொள்ளுங்கள்.


மெய்ப்பொருள் ஒளி உங்களுக்கு கைவல்யப்படும் !


"மெய்ப்பொருள் இன்னதென்று குருவே சொல்வார்" என சித்தர் பெருமகனார் கூறுவார்.


திருவருட் பிரகாச வள்ளல் இராமலிங்க சுவாமிகள் அடியேனை குருவாக்கி கன்னியாகுமரி தங்கஜோதி ஞானசபையில் வைத்து, இந்த ஞான உபதேசங்களை உலகருக்கு உரைத்திடவும், நூல்களாக எழுதி வெளியிட்டு உலகர் உணர்ந்திடவும், ஞான தீட்சை கொடுத்து உலகர் ஞானம் பெறவும், அடியேனை கருவியாக்கி வைத்துள்ளார்கள். அடியேன் எழுதி வெளிவரும் 24-வது நூல் இது ! "சாகாக்கல்வி".


கற்பிக்கிறேன் ! கற்றுக் கொள்ளுங்கள் !


கண்ணின் மணியான கருணைக்கடல் கடவுள் கைவிடமாட்டார். அவன் திருவடியை பற்றினால், நம்மை கைதூக்கி மேலேற்றி மரணமிலா பெருவாழ்வு நல்குவார் !




இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

வெள்ளி, 2 செப்டம்பர், 2022

🔥 வினையற்றால் சாகாநிலை! 🔥


சாகாக்கல்வி நூலிலிருந்து : 23

"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்"


மனந்தளராமல் இடைவிடாது முயற்சி செய்கிறவர்கள் ஊழ்வினைகளையும் வென்றுவிட முடியும் என திருவள்ளுவர் தெளிவாக கூறுகிறார் !

சதா சர்வகாலமும் தவம் செய்வோமானால் கண்மணி ஒளியில் கருத்தை வைத்து உணர்ந்து நெகிழ்ந்து சும்மா இருந்தோமானால் வந்தவினையும் வருகின்ற வல்வினையும் சுட்டு எரிக்கப்பட்டு அழிந்து போகும் !

வினையற்றால் சாகாநிலை !

"தவம் செய்வார்க்கு அவம் ஒருநாளுமில்லை !"

ஒளவையார் கூறும் ஆறுதல் வார்த்தை இது ! இந்த மாதிரி ஞானதவம் செய்பவருக்கு அவமாகிய வினைதுன்பம் ஒருநாளும் வராது ! இதுவே சத்தியம் !

"முயற்சி திருவினையாக்கும்"

ஞான சற்குருமூலம் உபதேசம் தீட்சை பெற்று, தொடர்ந்து சதாகாலமும் தவம் மேற்கொண்டோமானால், நமது வினைகள் எல்லாம் இல்லாமலாவதுடன் நம்மை "திரு"வாகிய இறைவனாகவே ஆக்கிவிடும் !

உண்மை தானே !

வினை இருந்தால் தானே நான் ! வினையற்றால் அவன்தானே !

கடவுள் தானே !

நான்தான் அது !

“தத்துவமஸி” அதுதான் நான் !

இது தானே நமக்கு வேண்டும் !

நான் அதுவானால் மரணம் ஏது ? பிறப்பு ஏது ? துன்பம் ஏது ?

பேரின்பம் ! எப்போதும் பேரின்பமே !

ஒளியை மறைத்த வினையகன்றால் ஒளி பிரகாசிக்குமல்லவா ?

ஒளி மேலும் மேலும் பெருக பெருக ஒளியுடல் பெறலாம் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

Popular Posts