சனி, 5 டிசம்பர், 2020

உடம்புடன் ஒளியில் கலந்தவர்கள்



பட்டினத்தார் திருவொற்றியூரில் சமாதியில் அமர்ந்து உடம்பை சிவலிங்கமாக ஆக்கியவர்
பத்திரகிரியார் திருவிடைமருதூர் ஆலயத்தில் உடம்புடன் மறைந்தவர்

ஆண்டாள் திருவரங்கத்தில் அரங்கநாதர் விக்கிரத்தில் உடம்புடன் கலந்தார்
திருநாவுக்கரசர் சைவ சமயக் குரவர்களில் ஒருவர் திருப்புகலூரில் சிவலிங்கத்தில் உடம்புடன் கலந்தவர்


ஞானசம்பந்தர் சைவ சமயக் குரவர்களில் ஒருவர் உடம்புடன் ஒளியில் கலந்தவர்

மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்களில் ஒருவர் சிதம்பரம் சிற்சபையில் உடம்புடன் கலந்தவர்.
சுந்தரர் சைவ சமய குரவர்களில் ஒருவர் வெள்ளை யானையில் அமர்ந்து உடம்புடன் கயிலை சென்றதாக கூறப்படுகிறது.


ஹரதத்தர் தஞ்சை மாவட்டம் கஞ்சனூரில் வாழ்ந்தவர் உடம்புடன் பலரும் காண மறைந்தார்


சத்குரு சாமிகள் நரை திரை பிணி மூப்பு இன்றி திருச்சி மாவட்டம் வெள்ளலூரில் சமாதி இருந்தவர் அன்பர்கள் காண குற்றாலத்தில் உடம்போடு மறைந்தவர்


ஸ்ரீதர சுவாமிகள் தஞ்சை மாவட்டம் திருவிசநல்லூரில் வாழ்ந்தவர். திருவிடைமருதூர் ஆலய சன்னதியில் பலரும் காண உடம்புடன் மறைந்ததாக கூறப்படுகிறது


மத்வாசாரியார் கர்நாடகவில் பிறந்து நீண்ட நாள் வாழ்ந்து உடுப்பியில் உடம்புடன் மறைந்தவர்


இராமதாசர் ஆந்திரா பத்ராசலம் என்னும் இடத்தில் தனக்கு ஆலயம் அமைத்து, பல சோதனைகளை சந்தித்தவர். விமானத்தில் ஏறி உடம்புடன் வானொலியில் மறைந்தார் என்று கூறப்படுகிறது.


துக்காராம் இறைவனின் புகழை பாடியவாறு, அன்பர்களுடன் வீதியில் நடந்து செல்லும்போது பலரும் காண உடம்புடன் மறைந்தவர். இவர் மறைந்த இடம் பூனாவுக்கு அருகில் உள்ளது. அங்கு ஒரு ஆலயம் அமைக்கப்பட்டு நாள்தோறும் வழிபாடு நடைபெற்று வருகிறது

Popular Posts