வெள்ளி, 30 டிசம்பர், 2011

துவிஜன் - மறுபடியும் பிறப்பவன்!


இந்த பிறவியே வேண்டாம் என்கிறோம்  மறு பிறவியா? என யோசிக்காதீர்கள்! இந்த பிறவியோடே பிறவிப்பிணி முடிவுக்கு வரவே மறுபிறவி!?

இங்கு சொல்லப்படும் மறுபிறவி என்பது இந்த பிறவி முடிந்து  இனியும்  பிறப்பது அல்ல!?

இந்த பிறவி இறுதியாக இருக்க வேண்டும்! அதற்குதான் நம் ஞானிகள் வழி
கூறுகிறார்கள்.

அது என்ன? எப்படி? நாம் ஞான குரு ஒருவரை பெற்று
உபதேசம் பெற்று சூட்சும நிலையில் பிறப்பதே  மறுபிறவியாம்! அதாவது
உடலால் பிறந்த நாம் உணர்வால் நம் சூட்சம உடலை பிறப்பிக்க ஒரு
குருவை பெற்றே ஆகவேண்டும்!

யார் நம்மை, சூட்சம சரீரத்தை பிறப்பிக்க செய்கிறாரோ அவரே குரு!
நம் வாழ்வின் பெரும் பேறே இதில்தான் இருக்கிறது!  ஞானமடைய
இதுவே வழி!


நம் ஸ்தூல தேகத்தை போலவே, நம் உடலினுள் ஒளிவடிவில் சூட்சும
தேகம் உள்ளது! முதலில் அதை உணரவேண்டும்! குருவானவர் தீட்சையின்
மூலம் சூட்சும சரீரத்தை பிறப்பிக்க செய்கிறார்!

ஸ்தூல தேகத்தில் பிறந்த நாம் சூட்சுமதேகத்தில் பிறப்பதே மறு பிறவி!
பிறந்த இப்பிறவியிலே மீண்டும் பிறப்பது என்பது இவ்வாறு தான்!
இதை யார் உணர்கிறார்களோ அவரே ஞானம் பெறுகிறார்!

வேதங்களில் சொல்லபடுவது "துவிஜன்" இரு பிறப்பாளன் என்பதே!

மறுபிறப்பு பற்றி பைபிளில் தெளிவாக கூறப்படுகிறது!

"மறுபடியும் பிறவாதவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்"
மறுபடியும் பிறந்தால் தான் பரலோக ராஜ்யம்!? எப்படி?
எவன் ஒருவன் அக்னியலும் பரிசுத்த ஆவியாலும் ஞானஸ்நானம் பெறுகிறானோ?  அவனே மறுபடியும் பிறந்தவன். அவன்தான் பரலோக ராஜ்யத்தை அடைவான்!

அக்னியால் ஞானஸ்நானம் என்பதுதான் அக்னியை பெருக்க வழி கூறும் உபநயனம்!

வெவ்வேறு பாசையில் சொல்லப்பட்ட ஒரே விஷயம்! 

துவிஜன் - மறுபடியும் பிறப்பவன்!

பிரம்மமாகிய ஒளியை - கடவுளை அடைய - உணர , பிரம்மத்தின் தன்மையாகிய ஒளி நம் கண்களில் துலங்குவதை அறிந்து உணர்ந்து , இரு கண்கள் வழி ஞான  தீட்சை பெற்று, அக்னியால் ஞானஸ்நானம் பெற்று, தியானம் செய்வதே மறுபிறவி பெரும் வழி! இறைவன் அருள்வார்!


குரு   மூலமாக உபநயனத்தில் தீட்சை பெற்று  தவம் செய்தால் பிறப்பு அறுக்கலாம்.

"மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை"  என அகஸ்தியர் கூறுவதும் இதுவே!

பிறந்த இப்பிறப்பில் குரு மூலம் தீட்சை பெறுவதே மாற்றி பிறப்பதாகும்! 

சனாதன தர்மம் - சற்குரு சிவசெல்வராஜ்.
http://www.vallalyaar.com


----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

வியாழன், 29 டிசம்பர், 2011

உடலென்ற கூட்டை தூக்கி சுமப்பது யார்?

உடலென்ற கூட்டை தூக்கி சுமப்பது யார்?

நாம் படுத்தால் நம்மை தூக்க  நாலு பேர் வேண்டுமே! நாலுபேர் தூக்க சிரமப்படும் உடலை நாமே தூக்கி கொண்டு நடப்பது எப்படி? நோய் வந்து படுக்கையில் படுத்துவிட்டால் கை கால்களை கூட அசைக்க  முடியாதே!

நன்றாக இருக்கும் போது நம்மை நாமே தூக்கி கொண்டு பாரமின்றி
திரிவது எப்படி? நம்முள் இருக்கும் உயிரான  இறைவன் தானே சதா காலமும் நம்மை சுமந்து திரிகிறார்! சுமப்பவனுக்கு கூலிஆகாரம் நைவேத்தியம்! நம்மை சுமப்பவனை பஞ்சமாக பாதகங்கள் செய்து துன்புறுத்தாமல் அடிபணிந்து சும்மா இருந்தாலே அரவணைப்பான்!

மெய்கொண்டு போனாலே மெய்யான பரமனை நம் மெய்யிலே காணலாம்
உணரலாம் மகிழலாம்! இதுவே மெய் !

நான் மெய். என் உடல் மெய். என் பெற்றோர் சொந்த பந்தங்கள்  மெய் தான்.
பலநூறு வருடங்களாக பல ஆயிரம் வருடமாக  பல ஆயிரம் வருடமாக
மன்னர்கள் பலர் ஆட்சி புரிந்தனர். இது சரித்தரம் கூறும் மெய்! நாம் இருக்கும்
பூமி  உருண்டை தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனை சுற்றி வருகிறது.
இது விஞ்ஞானம் கூறும் மெய். இப்பிரபஞ்சத்தில் நவ கோள்கள் அவற்றின்
சஞ்சாரங்கள் எல்லாமே உண்மை தானே! யார் இதை எல்லாம் படைத்தது!
நடத்துகிறது ? ஏன் இப்படிஎல்லாம் நடக்கிறது? ஏன் இந்த நாடகம்!
இயற்கையில் நானும் ஒரு அங்கமா? இது எல்லாம் மெய் தானே!
இதை எல்லாம் நம்பும் நான் அறிவது எப்படி? உணர்வது எப்படி?  இந்த
மெய்யை மெய்யாலுமே நம் மெய்யில்  உணர காண முடியுமா?  முடியும்
என்கின்றனர் மெய் ஞானிகள்!! ஆம் தவத்தின் மூலம் உணரலாம்! 


பக்தியில் பலர் உடலை வருத்தி பல சாதனைகள் செய்கின்றனர்!
மனோதிடம் இல்லாத கடினமானவர்கள் செய்யவேண்டியது தான்!
ஆனாலும் இது சரியல்ல! அன்பே வடிவான இறைவனை, கருணை
கடலான கடவுளை, அருள்மயமான ஆண்டவனை அடைய கடின
போக்கு தேவை இல்லை!  அன்பே கடவுள் என்றனர் ஆன்றோர்!
கடவுளை அடைய அன்பு ஒன்றே வழி! மெய்யுனுள் மெய்பொருள்
அன்பால் நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து தவம் செய்வதே சும்மா
இருக்கும் நிலையே ஒப்பற்ற ஞானம்!  மெய்யை வருத்தாது,
மெய்யில் உள்ள மெய்பொருளை மெய்ஞான சற்குரு மூலம்
அறிந்து உணர்ந்து மேன்மை பெறலாம்! இதுவே மெய்!


புத்தகம்

----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

புதன், 21 டிசம்பர், 2011

குரு வார்த்தை!


“மண்ணிற்சில் வானவரை போற்றும்
மதத்தோற் பலருண்டு நானவரைச் சேராமல் நாட்டு”

(திருவருட்பா, மூன்றாம் திருமுறை, சிவநேச வெண்பா – பாடல் 99)

இன்றைய உலகின் சீர்கேட்டை வள்ளல்பெருமான் அன்றே உரைத்திட்டோர்!? பூமியில் தோன்றி இறைவனப்போற்றி கூறிய ஒரு சில பெரியவர்களை போற்றி அவர் பெயரால் புதுப்புது மதங்களை உருவாக்கி விட்டனர் அறிவிலிகள்! மகான்கள் பெரியவர்கள் உபதேசித்த ஞானத்தை மறந்துவிட்டனர்! மறைத்தும் விட்டனர்! அப்பெரியவர்கள் இறைவனை அடையத்தான் வழிகாட்டினார்!? மடையர்கள் அவர்களை கடவுளாக்கி புதுப்புது மதங்களை உண்டாக்கி விட்டனர்! இறைவனை அடையவழி காட்டினால், இறைவனை விட்டுவிட்டு வழிகாட்டிகளை கடவுளாக்கி விட்டனர்! இன்றைய உலகின் ஒரே பிரச்சினை இது தானே! மதவாதம்தானே! எல்லா மகான்களும் இறைவனைத்தானே காண, அடைய வழிகாட்டினார்! ஏன் உணர மாட்டேன் என்கிறீர்கள்!?

பள்ளிகூடத்தில் பாடம் நடத்திய வாத்தியார் சொன்னவற்றை புரிந்து சிரத்தையெடுத்து படிப்பவன்தான் உருப்புடுவான்! வெற்றி பெறுவான்! பாடம் சொல்லிகொடுத்த வாத்தியாரை புகழ்வதால் ஒரு பயனுமில்லை! இதை புரிந்து கொண்டால் சரிதான் உருப்படலாம்!

உங்களை பிடித்திருக்கின்ற பேய்கள் சாதிப்பேய்! மதப்பேய்! இனப்பேய்! மொழிபேய்! இந்த பேய்களை ஒட ஒட விரட்டுங்கள்!! உலகிலுள்ள அனைவரும் இறைவன் படைப்பே! நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே! உலக மக்கள் அனைவரும் சகோதர சகோதரிகளே! நாமனைவருக்கும், இறைவன் ஒருவரே!

நீ யார் எனில் மனிதன்! உன்குலம் யாதெனில் மனிதகுலம்! உன் சாதியென்றால் ஒளிசாதி! இறைவன் பேரொளியல்லவா? பரமாத்மாதானே! நாம் அதினின்று தோன்றிய சிற்றொளி தானே! சீவாத்மா தானே! அப்படியானால் நமது சாதி ஒளி சாதிதானே! உன் மதம் எது என்றால்? என்னிடம் ஆணவமான மதம் உள்ளது அதையும் நாம் விட்டொழிக்க வேண்டும்! மதமே இல்லாத மனிதாபிமானம் உள்ள, ஆன்மநேயம் உள்ள அன்புள்ள மனம் மட்டுமெ உள்ளது எனக்கூற வேண்டும்! வாழ்ந்து காட்ட வேண்டும்! அன்பே கடவுள்! என் மதம் அன்பு மதம்!

நான் – ஆன்மா – உயிர் – சீவன் என்பதை ஒளியாக கண்ணில் மணியில் துலங்குகிறேன் என்பதை அறிய வேண்டும்! உணர வேண்டும்!

கருணையே வடிவான இறைவன் நம்மை அன்போடு அரவணைத்துகொள்வார்! இப்பாரில் நானிருக்கும் வரை இறைவா உன் புகழ்பாட வேண்டும்! கேட்கவேண்டும்! அருள்க!

சற்குரு சிவசெல்வராஜ்


----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.




-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

செவ்வாய், 20 டிசம்பர், 2011

தலைக்கு அடி - திருவடி கண்கள் !

தலையடி யாவ தறியார் காயத்தில்
தலையடி உச்சியில் உள்ளது மூலந்
தலையடி யான அறிவை அறிந்தோர்
தலையடி யாகவே தானிருன் தாரே -

நமது காயத்தில் - உடம்பில் தலைஎது கால் எது - அடி எது
என தெரியாமல் இருக்கிறார்கள்! எண்சாண் உடம்புக்கு சிரசே
பிரதானம் ! சிரசே பஞ்சேந்திரியங்கள் உள்ள முக்கியமான பகுதியாகும்!
நம் தலையே நம் உடம்பில் தலையாய இடமாகும்!

நம் உயிர் இருப்பது தலை உள் நடுவில் தான்! பரம்பொருளே நம்
ஜீவாத்மாவாக நம் சிரநடுவில் ஒளியாக துலங்குகிறார். ஞானத்திற்கு
நாம் பார்க்க வேண்டியது தலையில் மட்டுமே! மூலம் எது ? எங்கிருக்கிறது
என்றால் "தலையடி உச்சியில் உள்ளது மூலம்"

தலைக்கு அடி - திருவடி -கண்கள் ! அதன் உச்சி என்பது என்பது அதன்
மத்திய பகுதி. அங்குள்ளதே மூலம்! கண்மணி மத்தியில் மூல துவாரம்
உள்ளது. அதனுள் ஊசிமுனை அளவு நெருப்பு உள்ளது. அதுவே மூலம்!
ஆதி மூலம்! கண்மணி மத்தியில் உள்ள ஒளி ! தலைக்கு அடி -
திருவடியானது நம் கண்களே என்பதை ஞான சற்குருவின் மெய்பொருள்
உபதேசம் மூலம் அறிந்தோர் தலையடி - கண்மணியிலுள்ள ஒளியாகவே
தானிருந்தார்! ஆத்மா ஜோதியாகவே இருந்தார் அறிந்தார்!

"உலகம் படைத்தவன் பேர் நந்தி தன்தாளினை
என் தலைமிசை யானதே"

இந்த உலகத்தை படைத்தவன் இறைவன் ! அவன் தான் ஜீவனாக
நம் தீயாக நம்முள் துலங்குகிறான்! அந்த நந்தியின் இரு திருவடிகளும்
நம் தலையில் உள்ளது ! இருகண்ணாக!

-மந்திரமணி மாலை - 191

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

அந்தகரணங்கள் - புறப்புறம்

பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம்
தன்னை மறைத்தது தன கரணங் களாம்
தன்னின் மறைந்தது தன கரணங்களே.

பொன்னால் பல வித நகை செய்து நாம் அணிந்தால்
யாரும் பொன்னை பார்க்க மாட்டார்கள். வளையல்
கம்மல், நெக்லஸ், ஒட்டியாணம் என்று தான் பேசுவார்கள்.
நகைகளை பற்றி தான் பேசுவார்கள்.

மக்கள் பார்ப்பது ஆபரணத்தை! பொற்கொல்லர் பார்ப்பது தங்கத்தை!
பார்ப்பவன் கருத்தில் எல்லாம் உள்ளது. இதுபோல் மரத்தில்
ஒரு யானை பொம்மையை செதுக்கி வைத்தால் பார்ப்பவன் யானை
அழகாக இருக்கிறது என்பான், மரவேலை செய்யும் தச்சன் இது என்ன
மரம் என்பன்!

இதேபோல் சராசரி மனிதனின் அந்தகரணங்கள் மனம் புத்தி சித்தம்
அகங்காரம் மேலோங்கி இருப்பதால் தான் யார் என்பதை அறியமாட்டான்!
குரு மூலம் மெய்பொருள் அறிந்து உணர்ந்து தவம் செய்பவனின்
அந்தகரணங்கள் ஓய்ந்து, தான் ஆகிய ஆத்மா வெளிப்பட்டு நிற்கும்!
ஆத்மாவில் லயமாகிய இருப்பவனின் அந்தகரணங்கள் மறைந்து போகும்!
மோன நிலையிலிருந்து மோனியாவன்! ஞானி ஆவான் !

மந்திர மணி மாலை - 186 சற்குரு சிவசெல்வராஜ்


வள்ளலார் உரைநடை பகுதி

அகம் - ஆன்மா
அகப்புறம் - ஜீவன்
புறம் - கரணம்
புறப்புறம் - இந்திரியங்கள்(
என்கின்ற நாலிடத்திலும் கடவுட் பிரகாச முள்ளது.

1 பிண்டத்தில் அகம் ஆன்மா ஒரு பொருளினது உண்மையைஅறிதல் ஆன்ம அறிவு.

2 பிண்டத்தில் அகப்புறம் ஜீவன், ஒரு வஸ்துவின் பிரயோஜனத்தை யறிந்த
அறிவே ஜீவ அறிவு.

3 பிண்டத்தில் புறம் கரணம், ஒரு வஸ்துவின் நாமரூபத்தையும் குண
குற்றங்களையும் விசாரித்தறிதல் கரணமாகிய மன அறிவு.

4. பிண்டத்தில் புறப்புறம் கண் முதலிய இந்திரியங்கள், ஒரு பொருளினது
நாம ரூப குண குற்றங்களை விசாரியாமல் அந்தப் பொருளைக்காணுதல்
இந்திரியக்காட்சி, இந்திரிய அறிவு.

காட்சி மூன்று வகை படும்
1 கரணக்காட்சி
2 ஜீவக்காட்சி
3 ஆன்மக்காட்சி


அண்டத்தில் அகம் அக்கினி
அண்டத்தில் அகப்புறம் சூரியன்
அண்டத்தில் புறம் சந்திரன்
அண்டத்தில் புறப்புறம் நக்ஷத்திரங்கள்

ஆகவே பிண்டத்தில் நாலிடம் அண்டத்தில் நாலிடம்
- ஆக எட்டிடத்திலும் கடவுட் பிரகாசம் காரியத்தாலுள்ளது.


அகமாகிய ஆன்ம பிரகாசமே ஞானசபை, அந்தப் பிரகாசத்துக் குள்ளிருக்கும்
பிரகாசம் கடவுள், அந்த உள்ளொளியின் அசைவு நடம் - இதுதான் ஞானாகாசநடன மென்றும் அசைவுற்றதே நடராஜரென்றும் ஆனந்தநடன
மென்றும் சொல்லுகின்றது.

சனி, 17 டிசம்பர், 2011

மெய்ப்பொருள் - கண்மணி ஒளி

மெய் என்றால் உண்மை. சத்தியம். இன்னொரு பொருள் உடல்.
"தமிழ் மொழி தெய்வீகமானது அதிவிரைவில் சுத்த சிவானுபூதியை
நல்க வல்லது" என வள்ளல் இராமலிங்கர் பகர்ந்துள்ளார்! எப்படி எனில்
தமிழ் எழுத்துகள் உயிர் எழுத்து மெய் எழுத்து உயிர்மெய் எழுத்து என்றே
உள்ளது. உயிரான இறைவன் உடலான மெய்யில் இணைந்தாலே ,
உயிர்மெய் கூடி எழுத்தாகி சொல்லாகி பொருளாகிறது! உயிரோடு கலந்தது
தமிழ் என்பதே சரி!

மெய்யிலே உள்ள மெய் உயிரே! மெய்யாகிய உடலிலே உள்ள சத்தியம்
உயிரே! மெய்எழுத்து தனித்து இயங்காதே! உயிர் எழுத்தோடு மெய் எழுத்தும்
சேர்ந்தே இயங்கும். உடல்மட்டும் மெய்மட்டும் தனித்து இயங்காது.
உடலோடு உயிரும் சேர்ந்தாலே இயக்கம். எட்டும் இரண்டும் எழுத்தாகி ஓங்கார சொல்லாகி மெய்பொருளாக விளங்குகிறது!

"தேவர் குறளும் திருநான் மறை முடிபும்
மூவர் தமிழும் முனி மொழியும் - கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்" -
திருக்குறள் நான்கு வேதங்கள் தேவாரம் அகஸ்தியர்

முதலான சித்தர் பாடல்கள் திருவாசகம் திருமந்திரம் இவை அனைத்தும்
உரைப்பது ஒரு வாசகம் ! மெய் ! உண்மை ! சத்தியம்! அது மெய்பொருள் !

ஆக தமிழில் உள்ள எல்லா நூற்களுமே, சங்க இலக்கியமாகட்டும் பக்தி
இலக்கியமாகட்டும் அருட்பாக்கள் ஆகட்டும் இவை அனைத்தும் உரைப்பது
முடிவில் மெய்பொருள்!

மெய்யிலே விளங்கும் பொருள் கண்மணி ஒளியே மெய்ப்பொருள்.
"எண்சான் உடம்புக்கு சிரசே பிரதானம்" அவரவர் கையால் அளந்தால்
அவரர் உடம்பு எட்டு சான் அளவே இருக்கும். இதில் தலை ஒரு சாண்.
நமது உடம்புக்கு தலையானது - முக்கியமானது தலையே-சிரசே!
முக்கியமான - பிரதானமான இடத்தில தானே தலைநகரத்தில் தானே
தலைவர் இருப்பார். தலை போலே இருப்பதால் தான் தலைவர்.

நம் தலைவர் இறைவன் நம் மெய்யில் முக்கியமான, தலையில் இருக்கிறார்.
இறைவன் -பரம் பொருள் நம் உயிராக , பிராணனாக ஜீவனாக நம் தலையின்
உள் மத்தியில் பத்திரமாக இருக்கிறார். பத்திரமாக நம் மெய் உடல் இறைவனை - நம் உயிரை தாங்கி கொண்டு இருக்கிறது.

உயிர் தங்கிய சற்பாத்திரம் - நமது உடலில் நேத்திரத்தில் துலங்கி நிற்கிறது!
அதுவே மெய். அதுவே மெய்பொருள்.

மெய்யிலே இருக்கும் மெய் துணை கொண்டு, காயமே இது பொய்யடா
என்றவர்களின் வாக்கை பொய் ஆக்கிவிடலாம்! காயத்துள் நின்ற கடவுளை
கண்டால் மெய் மெய்யாகிவிடும்.

மெய்யை-உடலை பொன் போல பாதுகாக்க வேண்டும் என்றர் வள்ளலார்.
உடலினுள் துலங்கும் தங்க சோதியை கண்டால் நம் உடலும் பொன் உடலே!
இது மெய்! பொன்னம்பலவனை, பொன்னர் மேனியனை நம் மெய்யில்
கண்டால் நம் உடலும் பொன் உடலாகும்! இது மெய்யே.


மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்

பக்கம் 42

சற்குரு - சிவசெல்வராஜ்


----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

வெள்ளி, 16 டிசம்பர், 2011

தவம் - சும்மா இரு!

மெய்ஞான சற்குரு வழியாக தெளிவு பெற உபதேசமும்
அனுபவம் பெற தீட்சையும் பெற்று இந்த சாகாகல்வியை
ஞானதானம் பெற்று தவம் செய்ய வேண்டும்.! சுருதி யுக்தி
அனுபவம் இம்மூன்றுமே பூரண நிலையை கூட்டுவிக்கும்!
ஞான தானம் பெற்று அதாவது தீட்சை பெற்று ஞான நூற்கள்
படித்து யுக்தியினால் தெளிந்து தவம் செய்து அனுபவங்கள் பெற
வேண்டும்.

தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல!
தவம் என்றல் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம்
என்றால் பிராணாயாமாமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ
அல்ல!

உடலை வருத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.

தவம் என்றால் நான் யார் ? என அறிய உணர மெய்ஞான சற்குருவிடம்
ஞான தானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து
செய்யும் பயிற்சியே! முயற்சியே!

இறைவன் எங்கு உள்ளான், எழு திரைகள் எங்கு உள்ளது, சத்தியஞான சபை
என்பதை சாகாக்கல்வி புத்தகத்தில் பக்கம் 54 படிக்கவும்.

குரு தீட்சை பெற்று கண்ணில் உணர்வு பெற்று அதை நினைந்து நினைந்து
உணர்ந்து உணர்ந்து அதனால் ஏற்படும் நெகிழ்ச்சியில் திழைத்து சும்மா
இருக்க இருக்க நம் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து கொட்டும் அருவியென !


இங்ஙனம் தவம் தொடர்ந்தால் பல வித அனுபவங்கள்
நாம் பெறலாம்! நமது வள்ளல் பெருமான் ஞான சரியை யில் கூறியபடி
நாம் இங்ஙனம் தவம் செய்து வந்தால் பெறலாம் நல்ல வரமே!
மரணமில பெருவாழ்வே! பிறவா பெருநிலை. அருட்பெரும் ஜோதி
இறைவனோடு அந்த பரமாத்மாவோடு பேரொளியோடு நாமும்
ஒளியாக இணையலாம்! பேரின்பம் பெறலாம்!

இதுவே தவம்! இதனால் கிட்டுவதே ஞானம். ஞானம் தன்னை
உணர்தலே.

தவம் செய்ய நாம் காட்டுக்கு போகவேண்டியது இல்லை! குடும்பத்தை
விட்டு ஓடவேண்டியது இல்லை. காவி உடுத்தி தாடி முடி வளர்த்து
உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியது இல்லை. நமது
உடலை வெறுத்து வருத்தாது துன்புறுத்தாது இருக்கவேண்டும்.
உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்.கடுமையான
ஜப தபங்கள் வேண்டாம். சுருக்கமாக சொன்னால் ஒன்றும் செய்ய
வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்!



திருமணம் ஞானம் பெற தடை அல்ல! இப்போது நீங்கள் எப்படி
இருக்கிறீர்களோ, என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ அப்படியே
இருங்கள். தவத்தை (குருவிடம் தீக்ஷை பெற்றபின்) விடாது தொடர்ந்து
30 நிமிடமோ ஒரு மணி நேரமோ செய்தால் போதுமானது.


நீதி நேர்மை ஒழுக்கமே உங்கள் தவத்தை சிறப்பிக்கும் !
வேஷம் போடாதீர்கள்! எந்த தீய பழக்கங்களும் இல்லாது பார்த்து
கொள்ளுங்கள்.

இறைவன் உங்களுக்குள் இருகிறானல்லவா? வெளியே கோவிலில்,
குலங்களில் மலைகளில் தேடாதீர்.

தவம் செய்வோர் சுத்த சைவ உணவையே உண்ணவேண்டும். ஆத்மா சாதகன்
பட்டினி கிடக்கக்கூடாது, சிரிதளதாவது உண்ணவேண்டும்.

தவம் சித்திக்க வேண்டும் இறைவனோடு ஐக்கியம் ஆக வேண்டும் என்று
நான் யார் என்பதை உணரவேண்டும் என்ற ஆன்ம பசியோடு நாம் இருக்க
வேண்டும்.

புராணங்கள் கதைகளில் ரிஷிகள் செய்யும் பலவித தவங்களை கேள்வி பட்டு
இருக்கிறோம்.இதை எல்லாம் பார்த்து பல மக்களுக்கு அவநம்பிக்கை
பிறந்தது! அடடா இந்த மாதிரியெல்லாம் தவம் செய்ய முடியாது ,
இன்னொரு ஜென்மம் எடுத்து தான் வர வேண்டும் என அலுத்து கொள்வார்கள்.
இன்றும் இவ்வாறே பலர் உள்ளனர்.

உலக மக்களே அவநம்பிக்கை வேண்டாம்! உலகை உய்விக்க மெய்ஞானிகள்
பலர் தோன்றி உள்ளனர். ஞான நூற்கள் பல தந்துள்ளார்கள். கவலை
வேண்டாம். காலம் செய்த கோலம் ஞானம் பலகாலமாக மறைக்கப்பட்டு
விட்டது? காரியவாதிகள் சூழ்ச்சி!

ஞான சூரியன் திருவருட் பிரகாசவள்ளலார் பிறந்தார்! மடைமை
என்னும்காரிருள் , அஞ்ஞானம் மக்களை விட்டு விலக கடைவிரித்தார்.!!
கடைக்கண் காட்டினார் வள்ளலார்! ஞானம் துலங்க ஆரம்பித்தது.
துளிர் விட ஆரம்பித்தது. வந்தார்! சொன்னார்! செய்தார்! வென்றார்!
பெற்றார் ஒளி உடலை!!!!!


தான் பெற்ற மரணமிலா பெருவாழ்வை சாகாகல்வியை
எல்லாருக்கும் பறை சாற்றினார்!!பயிற்றுவித்தார்!

இன்றும் அடியேன் மூலம் பயிற்றுவித்து இருக்கிறார்.
ஞான பாதை தான் மிக எளிதானது.

ஞானதானம் செய்து அதனால் கிட்டும் புண்ணியம் பலன் மேலோங்கி தவம்
சித்தித்து ஞானம் பெற்று பேரின்பம் பெருக! தானமும் தவமுமே ஞானம்
பெற ஒரே வழி! ஞான தானமே ஞான சாதனையே நம்மை நம்மை
இறைவனிடம் சேர்க்கும்.


- சற்குரு சிவசெல்வராஜ் -

புதன், 14 டிசம்பர், 2011

கந்தகுரு கவசம்-திருவடி

கந்தகுரு கவசத்தில் எனக்கு புரிந்த ஞான குறிப்புகள்.

ஒலி வடிவில் கேட்க...இங்கே சொடுக்கவும்


திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
கஞ்சமலை(சேலம்) சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு
சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
பழனியில் நீயும் பரம்ஜோதி ஆனாய் நீ
எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்
ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்
ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
கந்தன் என்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்
புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை
திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக .
பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

மூன்றாவது கண் எது?

 லாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம்
ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும்
சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒரு வண்ண ஜோதி சூழ்ந்திருகிறது
இதை மூன்றாவது கண் மூலம் காண இயலும் என்பது அந்த
நூலின் மைய கருத்து.


இரு புருவ நடுவிலும் உள்ள நெற்றியில் ஒரு ஆப்பை அடித்து அதற்கான
மருத்துவ சிகிச்சை செய்து புண் ஆரிய பின்பு அந்த ஆப்பை சுழற்றி
கொண்டு விடுவதே மூன்றாவது கண்ணை திறந்து விட்டதாகவும் என்பது
அந்த நூலில் குறிப்பிட பெற்றிருக்கிறது. ஆனால் அதை விஞ்ஞான
பூர்வமாகவோ மெய்ஞான பூர்வமாகவோ நம்ப முடியாது. நமது
தென்னாட்டு சித்தர்களும் வடநாட்டு மகரிஷிகளும் இப்படி மூன்றவது
கண்ணை திறந்துகொள்ளவில்லையே!

வள்ளலார் இப்படியா நெற்றிக்கண்ணாகிய மூன்றாவது
கண்ணை திறந்து கொண்டார்!
இறைவனுக்கு முக்கண்ணன் என்றும்
நெற்றிகண்ணன் என்றும், கண்ணன் என்றும் பெயர். இவை உண்மைப் பெயர்களே.


இந்த மூன்றாவது கண்ணின் ரகசியம் குரு மூலமாக தெரிந்து கொள்ளவேண்டியது.


நெற்றிகண் ஆப்பு அடித்து திறப்பது இல்லை. மெய் ஞானிகள் யாரும் இப்படி
கூறவே இல்லை. விஞ்ஞானிகளும் இப்படி கூறவில்லை. எதற்காக
திபேத்தியே லாமா இப்படி கதை கட்டியிருக்கிறார் என்பது புரியவில்லை.

மெய்ஞானியான திருவள்ளுவர் தன் நாதாந்த திறவுகோலில் மூன்றாவது கண்
குருவினால் திறந்து கொள்ளவேண்டும் என்பதை

உச்சியினி டமாம் நின்றவுதயமா சோதிபாதம்
நச்சியேயிருப்பானந்த நாதாந்த வெளியில் தானே
வச்சிரவெளியானந்த வாசியாலடர்ந்த வன்னி
குச்சியாலுச்சாத்தனை குருவினாற் திறந்து கொள்ளே!

சிவவாக்கியர்
அல்லல்வாசல் ஒன்பதும் அருத்தடைந்த வாசலும்
சொல்லும்வாசல் ஓர் ஐந்தும் சொம்மிவிம்மி நின்றதும்
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டவர் இனிப்பிறப்பது இல்லையே.

காலைமாலை நீரிலே முழுகும்அந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள்மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி யாகுமே.


உதிக்கநின்றது எவ்விடம்? ஒடுங்குகின்றது எவ்விடம்?
கதிக்கநின்றது எவ்விடம்? கண்ணுறக்கம் எவ்விடம்?
மதிக்கநின்றது எவ்விடம்? மதிமயக்கம் எவ்விடம்?
விதிக்கவல்ல ஞானிகள், விரிந்துரைக்க வேணுமே.

வள்ளலார்
கையறவிலாது நடுக் கண் புருவப் பூட்டு
கண்டு களி கொண்டு திறந்துண்டு நடுநாட்டு
ஐயர் மிக உய்யும் வகை அப்பர் விளையாட்டு
ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு.


என்று ஞானிகளின் பரிபாஷையால் கூறி சென்றார். லாமா சொல்லி இருப்பது
உண்மை ஆனால் எத்தனையோ டாக்டர்கள் மூன்றாவது கண்ணை திறந்து
இருப்பார்களே!

சனி, 10 டிசம்பர், 2011

அசைவற்ற உள்ளத்தில் இறைவன்

பகலில் சூரியனது பிரகாசமானது கூகையினது கண்ணிலும், படலம்
பொருந்தி ஒளி மழுங்கியவர்கள் கண்களிலும்,மிருகம் பறவைகளின்
கண்களிலும் ஒரே தன்மையாகபடுகிறது.அப்படி இருந்தும் சூரியனது
ஒளியை கூகையானது காண படமாட்டாது.

படலம் பொருந்திய கண் உடையவர்களும் சூரிய ஒளியையும்
பொருள்களையும் காணமுடிவதில்லை. பார்க்கும் ஒளி உடைய
மனிதர்,மிருகம்,பறவை, அனைத்துமே சூரிய ஒளியையும்
பொருள்களையும் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த வேறுபாடு
அவர்களிடம் உள்ள வேறுபாடே அன்றி சூரிய ஒளியில் உள்ள
வேறுபாடு அல்ல.

அதுபோல கடவுள் எல்லா ஆன்மாக்களிலும் ஒரே தன்மையாக கலந்து
நின்றாலும் அவைகளின் வேறுபாடான நிலைகளினால் சில அவரை
அறியகூடியதாகவும்,வேறு சில அறியமாட்டாமலும் இருக்கின்றனர்.

அஞ்ஞானமெனும் ஆணவமாகிய இருளெனும் படலம் ஆன்மாவின்
கண்ணைமறைப்பதினால் ஆன்ம கடவுளை அறியமாட்டது. திருஅருட்
சார்புள்ள ஆன்மா சிவஞானமாகிய கண்ணாற் காணும் தகுதியை பெறுகிறது.
ஆன்மா ஒருசெயலை தன் செயலாக நினைத்து செய்தால் அதிலே
அகந்தை மமதை நிகழ்வதால் அது ஆகான்மியம் எனும் கர்மமாகிறது.
உள்ளதினால் ஞானம் காணப் படாதாதலின் அதை அறிதற்கு உள்ளதினால்
முயற்சி செய்வது வீணே!

உள்ளம் அசையாது இருந்தால் ஞானம் வரும். ஆதலினாலே ஞானத்தை
காண்பது ஞான சக்தினால் தான். உலகமயக்கங்கள் எல்லாம் விழி மயக்கம்
என்பர் பட்டினத்தார். தமக்கு அறிவிப்பாரும் அறிய வைப்பாரும்
எல்லாவற்றையும் ஒரு சேர அறிவாரும் ஆகிய ஒருபொருள் பரம்பொருள்.

அதிலே சிந்தையை செலுத்துங்கள் அதிலே அசைவற்று நில்லுங்கள்.
உங்களுக்குள் ஆண்டவனை நிச்சயம் காண்பீர்கள்.

-நெஞ்சுக்கு நிம்மதி தரும் ஆன்மீக சிந்தனைகள் ! ப சு மணியன் அய்யா

புதன், 7 டிசம்பர், 2011

சிவவாக்கியர்

இடதுன்கண் சந்திரன், வலதுன்கண் சூரியன்
இடக்கைசங்கு சக்கரம், வலக்கைசூலம் மான்மழு;
எடுத்தபாதம் நீள்முடி, எண்திசைக்கும் அப்புறம்,
உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே?

கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்
பழுத்துவாய் விழிந்துபோன பாவம் என்னபாவமே?
அழுத்தமான வித்திலே அனாதியான இருப்பதோர்
எழுத்திலா எனழுத்திலோ இருக்கலாம் இருந்துமே.

மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும்
எண்ணிலாத கோடிதேவர் என்னதுஉன்னது என்னவும்
கண்ணிலேகண் மணிஇருக்கக் கண்மறைத்த வாறுபோல் எண்ணில்கோடி தேவரும் இதன்கணால் விழிப்பதே
78

அல்லல்வாசல் ஒன்பதும் அருத்தடைந்த வாசலும்
சொல்லும்வாசல் ஓர் ஐந்தும் சொம்மிவிம்மி நின்றதும் நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய் எல்லைவாசல் கண்டவர் இனிப்பிறப்பது இல்லையே.

காலைமாலை நீரிலே முழுகும்அந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள்மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி யாகுமே.


உதிக்கநின்றது எவ்விடம்? ஒடுங்குகின்றது எவ்விடம்?
கதிக்கநின்றது எவ்விடம்? கண்ணுறக்கம் எவ்விடம்?
மதிக்கநின்றது எவ்விடம்? மதிமயக்கம் எவ்விடம்?
விதிக்கவல்ல ஞானிகள், விரிந்துரைக்க வேணுமே.

விழித்தகண் துதிக்கவும் விந்துநாத ஓசையும்,
மேருவும் கடந்தஅண்ட கோளமும் கடந்துபோய்
எழுத்தெலாம் அழிந்துவிட்ட இந்திரசால வெளியிலே
யானும்நீயு மேகலந்த தென்னதன்மை ஈசனே

உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே

வள்ளலார் அருளிய உண்மை

திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய உண்மை

நாம் பெரும் புருஷார்த்தம்(உறுதிப் பொருள்)

1 ஏம சித்தி
2 சாகாக்கல்வி
3 தத்துவ நிக்கிரகம் செய்தல்
4 கடவுள் நிலை அறிந்து அம்மய மாதல்

2.மேற்படி புருஷார்த்தங்களை பெறுவதற்கான ஒழுக்கங்கள் யாவை?

1 இந்திரிய ஒழுக்கம்
2 கரண ஒழுக்கம்
3 ஜீவ ஒழுக்கம்
4 ஆன்ம ஒழுக்கம்

உரைநடை பகுதி

நித்திய கரும விதி 

தினமும் நம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்.
ஞான மூலிகை, உண்ண வேண்டிய உணவுகள், உண்ண கூடாத உணவு,
பற்றி கூறப்பட்டு உள்ளது. உரைநடை பகுதி பக்கம் 250 பார்க்கவும்.

மருத்துவ குறிப்பு 

வள்ளலார் ஒரு சித்த மருத்துவர், உரைநடை பகுதி பக்கம் 235  பார்க்கவும்.

பாடல்கள் மூலம் சொன்னவை
1   ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம்
     உறவுவேண்டும்
௨  மறுமுறைகண்டவாசகம்  நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
3   அவா அறுத்தல்
...
இந்திரிய ஒழுக்கம்

இவற்றில் இந்திரிய ஒழுக்கம், கன்மேந்திரிய ஒழுக்கம் ஞானேந்திரிய ஒழுக்கமென இருவகைப்பட்டது. கொடிய சொல் செவிபுகாது நாத முதலிய ஸ்தோத்திரங்களைக் கேட்டல்; அசுத்த பரிசமில்லாது தயாவணமாகப் பரிசித்தல்; குரூரமாகப் பாராதிருத்தல்; உருசி விரும்பாதிருத்தல்; சுகந்தம் விரும்பாதிருத்தல்; இன்சொல்லாடல்; பொய் சொல்லாதிருத்தல்; ஜீவஹ’ம்சை நேரிடுங் காலத்தில் எவ்விதத் தந்திரத்தினாலாவது தடை செய்தல்; பெரியோர்கள் எழுந்தருளி யிருக்கும் இடங்களுக்குச் செல்லுதல்; ஜீவோபகார நிமித்தமாய் சாதுக்கள் வாசஸ்தானங்களிலும் வேறு இடங்களிலும் சஞ்சரித்தல்; நன்முயற்சியிற்கொடுத்தலெடுத்தலாதி செய்தல்; மலஜல உபாதிகளை அக்கிர மாதிக்கிரம மின்றி கிரமத்தில் நிற்கச் செய்வித்தல், எவ்விதமெனில், மிதஆகாரத்தாலும் மித போகத்தாலும் செய்வித்தல், கால பேதத்தாலும் உஷ்ண ஆபாசத்தாலும் தடை நேர்ந்தால், ஓஷதி வகைகளாலும் பௌதிக மூலங்களாலும் சரபேத அஸ்தபரிச தந்திரத்தாலும் மூலாங்கப் பிரணவ த்யான சங்கற்பத்தாலும் செய்வித்தல், சுக்கிலத்தை அக்கிரம் அதிக்கிரமத்தில் விடாது நிற்றல் - மந்ததரம், தீவிரதரம் - எவ்வகையிலுஞ் சுக்கிலம் வெளிப்படாமல் செய்வித்தல்; இடைவிடாது கோசத்தைக் கவசத்தால் மறைத்தல், இதுபோல் உச்சி மார்பு முதலிய அங்கங்களையும் மறைத்தல்; சஞ்சரிக்குங் காலத்தில் காலிற் கவசந்தரித்தல்; அழுக்காடை உடுத்தாதிருத்தல் முதலியன இந்திரிய ஒழுக்கமாம்.

கரண ஒழுக்கம்

கரண ஒழுக்கமாவது: மனத்தைச் சிற்சபை என்னும் அறிவாகிருதி ஆக்கல்; இதன் பூர்வத்தில் புருவமத்தியில் நிற்கச்செய்தல். இதன்றி துர்விஷயத்தைப் பற்றாதிருக்கச் செய்தல்; சீவதோஷம் விசாரியா திருத்தல்; தன்மதிப்பில்லாதிருத்தல்; இராகாதி நீக்கி இயற்கைச் சத்துவ மயமாதல், தனது தத்துவங்களை அக்கிரமத்திற் செல்லாது கண்டித்தல்.


ஜீவ ஒழுக்கம்

ஜீவ ஒழுக்கமாவது: ஆண்மக்கள் பெண்மக்கள் முதலிய யாவர்களிடத்திலும், ஜாதி, சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திரசம்பந்தம், தேசமார்க்கம், உயர்ந்தோர் தாழ்ந்தோரென்னும் பேதம் நீங்கி, எல்லாரும் தம்மவர்களாய்ச் சமத்திற் கொள்ளுவது.

ஆன்ம ஒழுக்கம்

ஆன்ம ஒழுக்கமாவது: யானை முதல் எறும்பீறாகத் தோன்றிய ஜீவர்களினது சூக்குமம் தனித் தலைவன் ஆதலால் - அவ்வச் சீவர்களில் ஜீவான்மாவே திருச்சபையாய் அதனுள் பரமான்மாவே பதியாய் நிற்பதால் - யாதும் நீக்கமற எவ்விடத்தும் பேதமற்று எல்லாந் தானாக நிற்றல்.

ஆதிகுரு

இந்தியாவில் குருமார்களுக்கு பிரச்னை இல்லை நல்ல சீடர் பார்ப்பது
அரிது - விவேகானந்தர்.


சனகாதிகளின் தவிப்பை உணர்ந்த சர்வேஸ்வரன் அருள் புரிய திருஉளம்
கொண்டார்!சனகாதி முனிவர்கள் முன் தோன்றினார்! திடீர் என்று தன்
முன் ஒரு உருவம் தோன்றியதை கண்டு திகைத்து நின்றனர்!

பரம் பொருளை - காண விரும்பினோம் இப்படி ஒரு உருவம்
நம் முன் நிற்கிறதே ! ஏன் ? யார்? எதற்கு? என ஆச்சர்யத்துடன் தனக்குள்
வினவிகொண்டனர். கல்வி கேள்விகளில் கற்று தேர்ந்த சனகாதிகள்
ஒருவாறு யூகித்து அறிந்தனர்! நாம் கடவுளை காண விரும்பினோம்
தீடீர் என்று தோன்றிய இவ்வுருவம் ஒன்றும் கூறாமல் நம்முன் இருகிறதே!
கடவுளை காண அந்த கடவுளே நமக்கு வழி காட்டத்தான் என யூகித்து அறிந்தனர்.

கடவுளை! எல்லாம் கடந்தவனை அவ்வளவு எளிதாக காண முடியுமா என்ன?
நாம் அதற்க்கு பக்குவமாக இருக்க வேண்டாமா? சனகாதிகளுக்கே
இறைவன் நேரில் அருள் புரியவில்லை!?

சர்வமும் அறிந்த சனகாதி முனிவர்களுக்கு, அதன் மூலம் உலகுக்கே,
இறைவன் முதன்முதலாய் குருவாக வந்து காட்சி கொடுத்து மோன
உபதேசம் அருளினான்!

தன்னை அடைய குரு உபதேசம் பெறவேண்டியதன் முக்கியத்துவத்தை
தானே முதல் குருவாய் அமர்ந்து காட்டினார். ஆதி குருவனே இறைவனே
சனகாதி முனிவர்களுக்காக தட்சினாமூர்த்தியாக காட்சி கொடுத்தார்!
அதன் மூலம் மீட்சி பெற வழிகாட்டினார்.

தங்கள் முன் பேசாமல் பாதி கண் திறந்த நிலையில், இடக்காலை மடக்கி,
வலக்காலை ஊன்றி அசுரனை மிதித்த நிலையில் கல்லால் மரத்தின் கீழ்
அமர்ந்திருக்கும் பகவானை கண்டனர். ஒரு கையில் தீயும் ஒரு கையில்
உடுக்கையும் ஒரு கையில் வேதமும் ஒரு கை சின்முத்திரையுடன்
அருளும் நிலையும் இருக்க கண்டனர். நாற்கரமும் கண்டனர்.

சடா மகுட சிரசின் வலப்பக்கம் சூரியன் இடப்பக்கம் சந்திர பிறையுடன்,
சாந்தம் தவழும் அழகியமுகமும் கண்டனர்.

யோசித்தனர்! யூகித்தனர்! ஒருவாறு உண்மையை உணர்ந்து கொண்டனர் !
அது என்ன?


ஆதி குருவாகிய இறைவனே தட்சினாமூர்த்தியாக தங்கள் முன்
தோன்றியுள்ளது! தென் திசையான எமனிடமிருந்து மீள, மரணமில்ல
பெருவாழ்வு பெற தென் திசை நோக்கி இருக்கும் ஆதிகுரு
தட்சினாமூர்த்தியை வடக்கு நோக்கி அமரவேண்டும். தட்சின பாகத்தை
தென்திசை நோக்கி அமர்ந்த மூர்த்தம் ஆனதால் தட்சினாமூர்த்தி என்றனர்
சனகாதிகள்.

ஆதிகுரு ஒன்றும் பேசாமல் இருப்பதால் நாமும் ஒன்றும் பேசாமல்
மௌனமாக இருக்கவேண்டும் என்று உணர்ந்தனர். இதுவே மோன நிலை.

இறைவன், தான் தீயைய் சுமந்து தான் தீயாக அக்னியாக ஜோதி
ஸ்வருபமாக இருப்பதை உணர்த்துகிறார்! அது மட்டுமல்ல ஒளியான
அவனோடு உடுக்கை ஒலி ஓங்காரம் நாதமும் இருப்பதாகவும் உணர்த்துகிறார்!

அதாவது ஒளியும் ஒலியும்
விந்து நாதமாக இருப்பவன்.

மற்றொரு கையில் இருக்கும் வேதங்கள் சொல்வது இதைத்தான்!
தட்சினாமூர்த்தியான இறைவனை பற்றியும், அவனை அடைய வழியுமே!
நான்காவது கை அருள்பொழியும் சின்முத்திரை தாங்கிய கை!

ஒளிசேர்ந்த ஒலியாய் பரம்பொருள் சின்முத்திரையில் உள்ளார்.
சின்முத்திரை உணர்ந்து தவம் செய்க!

கண் திறந்து பேசாது "சும்மா இரு" என்பதுவே ஆதிகுரு
தட்சினாமூர்த்தி சொல்லாமல் உணர்த்திய ஞான ரகசியம்.

இறைவன் நேரடியாக அருளவில்லை. குருவாக உபதேசித்து அருளினார்.
தன்னை அடைய குரு மிக மிக மிக அவசியம் என்பதை உணர்த்தி "சும்மா
இரு " என்பதை உபதேசிக்கிறார். சும்மா இருந்து விழித்திருந்து தவம் செய்து
பக்குவம் பெற்றவர்க்கே இறைவன் தன்னை காட்டியும் உணர்த்தியும்
அரவணைத்தும் ஆட்கொள்கிறார். இதுவே ஞான நிலை! மோன நிலை!

திருப்புகழில் அருணகிரிநாதர் "சும்மா இரு சொல்லற" என
முருக பெருமான் தனக்கு குருவாய் வந்து அருளிய திறத்தை
வியந்து கூறுகிறார்.

ஆதிகுரு தட்சினாமூர்த்தியே! அது சாட்சாத் இறைவனே !
சும்மா இரு! விழித்திரு! இதுவே அவர் உபதேசம் இதுவே ஞானம்!

சாகாக்கல்வி புத்தகத்தை முழுமையாக படியுங்கள் பயன்பெறுங்கள்!



----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

திங்கள், 5 டிசம்பர், 2011

ஞான தவம் ஞான தானம்

அரிதான மானிட தேகம் பெற்ற நாம், எக்குறையும் இன்றி மனிதனாக
பிறந்த நாம் ஞானமும் கல்வியும் அறிதல் அரிதினும் அரிதாம்! இந்த
ஞானமும் கல்வியுமே சாகக்கல்வி! சாகா நிலையே ஞானம் பெற்றவர்
பெறுவது.அதை அறியும் கல்வியே சாகாகல்வி.

சாகா நிலை மட்டும் அறிந்தால் மட்டும் போதுமா?
"ஞானமும் கல்வியும் நயந்தகலையும் தானமும் தவமும்
தான் செய்தல் அரிதே" ஆக நல்ல படியாக மனிதராய் பிறந்து
சாகாக்கல்வி கற்ற நாம் செய்ய வேண்டிய முக்கியமான காரியம்
தானம் தவம் செய்தலே.

இந்த உலகில் யாராக இருந்தாலும் சரி தவம் செய்யமால் ஞானம் இல்லை.
தானம் செய்யாமல் ஞானம் கிட்டது ! சத்தியம் ! தவம் செய்பவருக்கு
உண்டான தகுதி தானம் செய்பவராக இருக்க வேண்டும் ! என்பதே!

தானம் கொடுக்க வேண்டும், நாம் வள்ளலாக வேண்டும். தானம் பலவகை!
எல்லாவற்றையும் தானமாக கொடுக்கலாம். தமிழ் கூறும் நல்லுகத்தில் வள்ளல் பலரை நாம் கற்று அறிந்து இருக்கிறோம். ஆன்ம நேய ஒருமைபாட்டிற்க்கு இலக்கணமாய் திகழ்ந்தவர்கள் அந்த வள்ளல் பெருமக்கள்.

புறாவுக்கு சதை கொடுத்த சிபி சக்கரவர்த்தி.
முல்லைக்கொடிக்கு தேர் கொடுத்த பாரி.
மயிலுக்கு போர்வை கொடுத்த பேகன்.

வாடிய பயிரை கண்ட போது வாடினர்! வள்ளல் இராமலிங்க சுவாமிகள்.
இப்படி எல்லா ஜீவிகளுக்கும் இறங்கிய கருணை உள்ளமே இறைவன்
வாழும் ஆலயம்.

எதை எல்லாம் தானம் கொடுத்தார்கள்! எப்படி கருணை கடலாக
வாழ்ந்தார்கள்! கர்ணன் வள்ளலுக்கு எல்லாம் வள்ளல்! கர்ணன்
கொடைக்கு ஈடு இணையே கிடையாது. இவர்கள் போலே இல்லா
விட்டாலும் கொடுத்து மகிழும் நல்ல உள்ளதை நாம் பெற்றாக
வேண்டும்.

இரக்கமே எனது உயிர் என்றாரே இராமலிங்க வள்ளலார்! எல்லோரும்
பொருளை தானமாக கொடுத்தார்கள்.ஆனால் வள்ளலாரோ,
எல்லா உயிரும் உயவடையும் வழியை காட்டி,மனிதன் தன்னை உணர
வழி காட்டி அருளினார்.


ஞான தானம் செய்து ஆன்மீக புரட்சியை தொடங்கி வைத்தார்கள்.
இதுவரை இரகசியமாய் இருந்த ஞான பாதை வள்ளல் அருளால் பரசியமகியது!

வெட்ட வெளிச்சம் ஆகியது.

ஞானம் எல்லாரும் பெறலாம். மனித பிறவியே இதற்க்கு தகுதி .
வேறொன்றும் தேவை இல்லை! என அறைகூவல் கொடுத்து
வம்மின் உலகியலிர் மரண மில பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்.
வாரீர்! வாரீர்! என்று கூவி அழைத்து போதித்தார் ஞானத்தை.
இரகசியங்களை உடைத்தார்.


இன்று அடியேனை ஆட்கொண்டு ரகசியங்களை வெளிப்படுத்தி மெய்ஞான
விளக்கங்களை எல்லோரும் அறிய நூற்களாக எழுதி வெளியிடவும்
அருள் புரிந்து உள்ளார்கள். என்குரு வடலூர் வள்ளல் இராமலிங்கர்
அருளாசியில் அடியேன் ஞான தானம் செய்து வருகிறேன்.

எல்லாருக்கும் ஞான தானம் செய்யுங்கள் உங்களுக்கும் ஞானம் கிட்டும்.

"ஊரன் பிள்ளை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானே வளரும்."
ஊரார் ஞானம் பெற நீங்கள் வழி காட்டினால் இறைவன் பரிவு கொண்டு
விரைந்து உங்களை ஆட்கொள்வர்.

இதுவரை "மறை"யாக இருந்த ஞானம் வள்ளலாரால் "திரை" நீக்கப்பட்டு
"உரை"யாக நமக்கு கிட்டியது. என்னே! அவர் தம் கருணை.

சாகாக்கல்வி - சற்குரு சிவசெல்வராஜ்.
பக்கம் - 50



----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

வெள்ளி, 2 டிசம்பர், 2011

குருவிடம் நாம் எப்படி இருக்க வேண்டும்?

வள்ளலாரிடம் நாம் எப்படி இருக்க வேண்டும்?

கொஞ்சம் விளக்கி சொல்வது என்றால் நாம் குரங்கு குட்டி மாதிரி இருக்க வேண்டுமா அல்லது பூனை குட்டி மாதிரி இருக்க வேண்டுமா

நான் ஒரு போதும் குரங்கு குட்டியாக இருக்க ஆசைபட்டதில்லை. ஏன் எனில் நீங்கள் குரங்கையும், குரங்கு குட்டியையும் பார்த்து இருக்கிறிர்களா

ஆம், குரங்கு மரத்திற்க்கு மரமும், மாடிக்கு மாடி தாவும் போது சிறிது கவனித்து பாருங்கள். அப்படி குரங்கானது தாவும் போது அதன் குட்டியை பாருங்கள்! குட்டிதான் அதன் தாயை கெட்டியாக பிடித்திருக்கும். தாய் குரங்கோ, நம்து குழந்தை (குட்டி குரங்கு) நம்முடன் இருக்கிறது என்ற நினைவே இல்லாமல் அசாத்தியமாக தவ்வி கொண்டிருக்கும். இதை பார்க்கும் போதே எனக்கு மனம் பதறும்… எங்கே குட்டியானது விழுந்து விடுமோ என்று!

ஆனால், நீங்கள் பூனையையும் பூனை குட்டியையும் பார்த்து இருக்கிறீர்களா… பூனை குட்டியானது அமைதியாக மட்டுமே இருக்கும், பூனையின் தாயே அந்த குட்டிக்கு தேவையானதை செய்யும். ஆம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்க்கு செல்ல வேண்டுமானால் தாயே அதை பாதுகாப்பாக வாயால் கவ்வி கொண்டு எங்கு சேர்க்க வேண்டுமோ அங்கு சேர்த்து விடும்.



ஆம், நாம் பூனை குட்டி போல அமைதியாக இருக்க(சும்மா இருக்க) மட்டுமே முயற்ச்சி செய்தால் போதும் மற்றதெல்லாம் நமது குரு நாதர் வள்ளல் பெருமானே தாய் தன்மையுடன் இந்த சமய்த்தில் நாம் இது செய்ய வேண்டும் என்றால் அந்த இடத்தில் நம்மை கொண்டு சென்று விட்டு விடுவார். இந்த இடத்தில் நாம் இருக்க கூடாது என்றாலும் அந்த இடத்தில்ருந்து நீக்கி பாதுகாப்பான இடத்திற்க்கு நம்மை மாற்றி விடுவார்.

மேலும் ஒரு முறை குரங்கு குட்டியானது தாயை பிடித்திருக்கும் பிடியை விட்டு விட்டால் அவ்வளவுதான் அந்த குட்டியை மீண்டும் அந்த தாய் சேர்த்து கொள்ளாது.

ஆனால் பூனை குட்டி வழி மாறி எங்காவது கிடந்தால் கூட அந்த தாய் பூனை மீண்டும் அந்த குட்டியை தேடி வந்து தூக்கி சென்று நல் வழிபடுத்திவிடும்.

ராமலிங்க சுவாமிகளை பிடிப்போம் — சும்மா இருப்போம் — மரணமிலா வாழ்வு பெறுவோம்.


http://www.vallalyaar.com


----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

வியாழன், 1 டிசம்பர், 2011

காரணகுரு காரியகுரு

எல்லாம் வல்ல ஆண்டவர் ஒருவரே என்று யார் நமக்கு உணரச்
செய்கிறாரோ - கிடைத்ததற்கு அரிதான இம் மானிட பிறவியிலேயே
அடைதற்கு அரிதான மேலான பேரின்ப பெருநிலைக்கு செல்ல யார்
வழி காட்டுகிறாரோ - இவ்வுலக வாழ்க்கயை நமக்கு அறிவித்து வாழ்வாங்கு
வாழ வாழ்க்கை நெறியை யார் உபதேசிக்கிறார்களோ  -இறைவன் 

இத்தன்மையன் , நீ இத்தன்மையன் - நீ எப்படி அதுவாக வேண்டும்
என உரைக்கிறோ அவர்தான் குரு.  


குருவாக வந்து ஒருவர் வந்துதான் சொல்ல வேண்டும் என்பது அல்ல.  பல
ஞானிகளின் நூற்களை படிக்கும்போது அந்நூலே குருவாகி விடலாம்.  அந்நூலசிரியரே மானசீக குரு ஆகிவிடலாம். 



ஏதாவது ஒரு இயற்கையோ, மனிதனோ எப்படியாயினும் சுட்டிக்காட்டி
விட ஒரு குருதேவை. அவரவர் நிலைக்குத் தக்கபடி அமையும். 

மெய்பொருள் உணர்ந்த ஒருவரை குருவாக ஏற்றுகொள்வதே சாலசிறந்தது.
"குருவில்ல வித்தை பாழ்" என்ற முதுமொழியை கவனத்தில் கொள்க.

நாம் பிறந்ததில் இருந்து நமக்கு ஒவ்வொரு காரியத் த்திற்கும் ஒரு ஒரு
குரு உண்டு. முதலில் தாய், இதுதான்  தந்தை எனச் சுட்டி காட்டுகிறார்.
தந்தை நாம் கல்வி கற்க பள்ளியைச் சுட்டுக் காட்டுகிறார்.  அரிச்சுவடியை
சுட்டிக் காட்டுகிறார் ஒருவர். படிப்படியாக பல பாடங்களை சுட்டிக்காட்டுகிறார்கள்  பலர். நம் நண்பர்கள் சகோதர சகோதிரிகள் உறவினர்கள் ஒவ்வொருவரும் அவரவர் அனுபவங்களை நமக்கு சுட்டிக்கட்டுகின்றனர்.நமக்கு வாகனங்கள் ஓட்ட ஒருவர் பயிற்றுவிக்கிறார்.
இப்படி பலபலவும்பற்பலராலும் சுட்டிகாட்டப்பட்டு உணர்ந்து வாழ்கையை
ஓட்டி கொண்டிருகிறோம்

இதெல்லாம் உலக வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மாற்றங்களுக்கு வழி
காட்டுபவை. தீய பழக்க வழக்கமுடையனோடு  சேர்ந்தால் அவன் சுட்டிக்காட்டும் தீய வாழ்க்கையில் தன்னை இழப்போர் நல்ல மனிதனாக முடியாது.  இவர்களெல்லாம் குரு அல்ல. மனிதன்-மனிதனாக வாழ வழி காட்டுபவரே உண்மையான குரு.

இறைவனோடு ஐக்கியமாக விழியாகிய வழியை  சுட்டி கட்டுபவரே உண்மை
குரு. அந்த உண்மை குருவை ஒவ்வொருவரும் பெற்றாக வேண்டும்.

மாதா-பிதா-குரு-தெய்வம் இதுதான் முன்னோர்களால் வரிசை
படுத்தபட்டுள்ளது   மாதா பிதாவை எல்லோரும் அடைந்திரிக்கிறோம்.
குரு ஒருவரை பற்றினால்தான் அவர் இறைவனை சுட்டிகாட்ட நாமும் உணர்ந்து தெய்வமாகலாம்.

இதுவரை நாம் பார்த்தது குருவை பற்றி! காரிய குருவைப்பற்றித்தான்
"காரியகுருவை விட்டு காரண குருவை கண்டு " என கணபதிதாசன்
நெஞ்சறி விளக்கத்தில் கூறுகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு
குரு உண்டு. இரண்டாவது குருவை பெற்றவன்தான் இறைவனை அடைய
முடியும். வேறு வழியே கிடையாது.

முதல்குருவை பற்றியே - காரிய குருவைப் பற்றியே கண்டோம்.
காரியகுரு மூலம் மெய்பொருள் என்னவென்று அறிந்து சாதனை செய்து
வர வர நாம் காரியப்பட்டுக் கொண்டிருபதற்குக் காரணமான ஆத்மாவை
பற்றி அறியலாம். எவ்வளவுக்கு எவ்வளவு சாதனை தீவிரமாக செய்து
முன்னேறுகிறோமோ  அவ்வளவு விரைவில் நம் உடலில் உள்ள ஆத்மாவின்
தரிசனம் கிடைக்கும். இத்தூல உடனிலுள் உள்ள சூட்சும வடிவான ஆத்மாவே
நமக்கு இரண்டாவதாக காரண குரு ஆகிறார். 



அதன்பிறகு காரணகுரு வழிகாட்ட நாம் ஒவ்வொரு அடியாக முன்னேறுவோம். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் ஆத்மாவே காரணகுரு ஆகும்.

காரிய குருவாய் வெளியில் பெற்றவர் வழி நடக்கையிலே நமக்கு கிடைப்பது
முதலில் காரணகுருவே-ஆத்மதரிசனம்.  இந்த காரண குருவே நம்மை,
தன்னை உணர்த்தி பின் எல்லாம்வல்ல ஆண்டவரை அடையவும் செய்வித்து
துணை நிற்கிறார்.  கரியகுருவால் காரணகுருவை கண்டு தன்னை உணர்ந்து
அம்மயமாகி பின் இறைநிலையை அடைவோம்.

"சூட்சுமத்தில் இருபது மோட்சம்" என முன்னோர் கூறுவர்.

சூட்சம உடலாகிய ஆத்மாவை அடைந்து அதனால் தான்- அம்மயமாகி தான்
மோட்சம் -பரகதி-மரணமில்ல பெருவாழ்வு அடைய முடியும் என ஞானிகள்
பறைசாற்றி சென்றதை நாம் உணர்வோமாக!

பக்கம் 20
கண்மணிமாலை - சற்குரு சிவசெல்வராஜ்

www.vallalyaar.com


----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.


புதன், 30 நவம்பர், 2011

இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம்.



ஸ்ரீ முக வருடம் கார்த்திகை மாதம் உள்ளிருந்த விளக்கை திருமாளிகை
புறத்தே வைத்து இதை தடை படாது ஆராதியுங்கள். இந்த கதவை சாத்தி
விட போகின்றோம். இனி கொஞ்ச காலம் எல்லோரும் ஆண்டவர்
தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் உங்கள் காலத்தை வீண்
கழிக்காமல்

"ஞான சரியை"

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே

என்னும் தொடக்கமுடைய ௨௮(28) பாசுரம் அடங்கிய பாடலில் கண்டபடி
தெய்வப் பாவனையை இந்த தீபத்திற் செய்யுங்கள்.
நாம் இப்பொழுது இந்த உடலில் இருக்கிறோம். இனி எல்லா உடம்பிலும்
புகுந்து கொள்வோம். இவ்விடத்தில் எங்கெங்கு சென்றாலும் அங்கங்கும்
இருப்போம். திருத்தி விடுவோம் அஞ்ச வேண்டாம்.

அகவினத்தாருக்கு சாகாவரமும், ஏனையோருக்கு பரிபாக நிலை அளிப்போம்.

சுத்த பிரணவ ஞான தேகத்துடன் வெளிப்படுவோம்.
திருவருட் செங்கோல் ஆட்சி செலுத்துவோம்

வள்ளலார் அடைந்த நிலை!!

வள்ளலார் அடைந்த நிலையை அவர் பாடல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.



காற்றாலே புவியாலே ககனமத னாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே

அருட்பெருஞ் சோதி மருந்து - என்னை
ஐந்தொழில் செய்தற் களித்த மருந்து

சாகாத நல்வரம் தந்த மருந்து

சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு
தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு

சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு

அடிமுடியைக் கண்டோம்என்று சின்னம் பிடி
அருளமுதம் உண்டோம்என்று சின்னம் பிடி

வேகாதகால்உணர்ந்து சின்னம் பிடி
சாகாததலைஅறிந்து சின்னம் பிடி
சாகாத கல்விகற்றுச் சின்னம் பிடி

மீதான நிலைஏறிச் சின்னம் பிடி
வெட்டவெளி நடுநின்று சின்னம் பிடி

வேதாக மத்தின் விளைவெலாம் பெற்றேன்


பொத்திய மலப்பிணிப் புழுக் குரம்பைதான்
சித்தியல் சுத்த சன்மார்க்கச் சேர்ப்பினால்
நித்திய மாகியே நிகழும் என்பது
சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே

சித்தாடு கின்றனன் சாகா வரமும் சிறக்கப்பெற்றேன்
இத்தா ரணியில் எனக்கிணை யார்என் றியம்புவனே.

செவ்வாய், 29 நவம்பர், 2011

மனு முறை கண்ட வாசகம் -> தற்சோதனை


வள்ளல் அருளிய
மனு முறை கண்ட வாசகம்

மூலம்
நாமும்
தற்சோதனை
செய்வோம்...


நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!

வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!


தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!

கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!

மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!

குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!

ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!

தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!

மண்ணோரம் பேசி வாழ் வழித்தேனோ!

உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!

களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!

பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!

ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!

வரவுபோக்கொழிய வழியடைத்தேனோ!

வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!

பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!

இரப்போர்க்குப் பிச்சை இல்லை யென்றேனோ!

கோள்சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!

நட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ!

கலங்கியொளித்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ!

கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!

காவல்கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!

கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!

கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!

குருவை வணங்கக் கூசி நின்றேனோ!

குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!

கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!

பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ!

பக்ஷயைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!

கன்றுக்குப்பாலுட்டாது கட்டி வைத்தேனோ!

ஊன்சுவையுண்டு உடல் வளர்த்தேனோ!

கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!

அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!

குடிக்கின்ற நீருள்ள குளந்துர்த்தேனோ!

வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!

பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!

பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!

ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!

சிவனடியாரைச் சீறிவைதேனோ!

தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!

சுத்த ஞானிகளைத் து஡ஷணஞ் செய்தேனோ!

தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!

தெய்வமிகழ்ந்து செருக்கடைந்தேனோ!

என்ன பாவம் செய்தேனோ! இன்ன தென்றறியேனே!

என்ன பாவம் செய்தேனோ! என்ன பாவம் செய்தேனோ!

என்ன பாவம் செய்தேனோ!என்ன பாவம் செய்தேனோ!

சித்தர்கள் – அழுதே சாதித்தார்கள்




“யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே”
- திருவாசகம்


யானே பொய் – எனது இந்த உடல் பொய்! அழிந்து போக கூடியது! எவன்டா, இந்த உடம்புக்கு போய் ‘மெய்’ என்று பெயர் வைத்தது!?

என் நெஞ்சும் பொய் – என் நெஞ்சில், வஞ்சம், பொய், பொறாமை, கோபம், லோபம், மூடம், மதம், ஆங்காரம் இன்னும் இது போன்ற எல்லா துர்குணங்களும் நிரம்பி வழிகிறது என் நெஞ்சமும் பொய்தானே!

என் அன்பும் பொய் – நான் என் தாய், தந்தை என் மனைவி என் பிள்ளைகள் என் சகோதர சகோதரிகள் என் உறவினர் என் வீடு என் என் என்னுடையது என்றே திரிகிறேன். என் சாமி என இறைவனையும் ஆக்கி கொண்டேன். இப்படி இருந்தால் என்னிடம் என்ன இருக்கும் பொய், பித்தலாட்டம் ஏமாற்று தான் மிஞ்சும்! ஆக இதெல்லாம் பொய்யாய் இருக்க காரணம் அடியேன் முற்பிறவிகளில் செய்த வினைகள்தான்?! இதுவே வேதங்கள் கூறும் உண்மை! ஞானிகள் உணர்ந்த சத்தியம்! இதுவே நம் சனாதன தர்மம் உரைப்பது!

இப்படி பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே வாழும் நாமும் “அழுதால் பெறலாம் அவனருளை” எப்படி?

நாம் செய்த பாவத்தை நினைத்து அழு! இனி பாவம் செய்யாதிரு! நீ யாருக்கும் கெடுதல் செய்யாதே! உன் பெற்றோர் குறிப்பாக தாய் பத்து மாதம் உன்னை சுமந்து பட்ட துன்பத்தை பின் ஒவ்வொரு நாளும் வளர்க்கபட்ட துன்பத்தை நினைத்து அழு! உன் உயிருள்ளவரை மாத பிதாவை வணங்கி போற்றி வாழ வைத்து வாழு! என் போன்று எல்லாவற்றையும் படைத்தானே யாரோ ஒருவன் யாரோ ஒருத்தி இல்லை ஏதோ ஒரு சக்தி அதை காண வேண்டுமென்று அழு! நன்றாக அழு! குமுறி குமுறி அழு! பைத்தியாகாரன் என்பர் உலகர்! பொருட்படுத்தாதே! நீ மட்டும் அழுவதை நிறுத்தாதே! இதெல்லாம் நீ உருப்பெற வழிகாட்டும்! உண்மை உணர வழிகாட்டும்! சோகத்தில் – இழப்பில் – நஸ்டத்தில் அழுவது மன ஆறுதல் மட்டுமே தரும்!

மாணிக்கவாசகர், வள்ளலார் மற்றும் உலகத்தில் உள்ள எல்லா ஞானிகளும், சித்தர்களும் அழுதால் பெறலாம் இறைவன் அருளை என அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கின்றனர்.

“அழுதால் உன்னை பெறலாமே” என்றார் மாணிக்கவாச்கர்.

“ நினைந்து நினைந்து 
உணர்ந்து உணர்ந்து
நெகிழ்ந்து நெகிழ்ந்து
அன்பே நிறைந்து நிறைந்து
ஊற்றெழும் கண்ணீர் அதனால்
உடம்பு நனைந்து நனைந்து
அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே”




என்றார் வள்ளலார் .

“கண்ணீரோடு விதைக்கிறவன் கம்பீரத்தோடு அறுப்பான்”
என்றார் இயேசு பெருமான்!



ஒரு சித்தர் அவர் பெயர் அழுகண்ணி சித்தர் என்றனர்! அவர் எப்பொழுதும் அழுது கொண்டேயிருப்பாராம் அதனால் எல்லாரும் அழுகண்ணி சித்தர் என்றனர்.

“காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி” என்றார் திருஞானசம்பந்தர்!

இப்படி இன்னும் பல ஞானியர் இறைவனை அடைவதற்க்காக அழத்தான் சொன்னார்கள்!

இறைவன் திருவடிகளே நமது கண்கள் என குரு மூலம் அறிந்து உணர்ந்து இருந்தாலே கண்ணீர் பெருகி வழியும்! இப்படியே அழுது அழுது உங்கள் பாவங்கள் கரையும் வரை இறை ஒளி காணும் வரை அழுது கொண்டேயிருங்கள்!

எந்த தாயாவது பிள்ளை அழுவதை பார்த்து கொண்டு சும்மா இருப்பாளா? ஒடோடி வர மாட்டாளா? ஆம், வருவாள் தாய்! அமுதம் தருவாள்! ஏதுமறியா மூன்று வய்து குழந்தை அழுததை கண்டு ஒடோடி வந்து பால் கொடுத்தாளே பார்வதி!!

அந்த ஞான்குழந்தை திருஞானசம்பந்தனை போல, திருவருட்பிர்காச வள்ளலாருக்கு 9 வயதில் பசியால் அயர்ந்து தூங்கிய போது தட்டி எழுப்பி அன்னம் கொடுத்து அருள் புரிந்தாலே தாய்!! அந்தத் தாய் – வாலைத்தாய் – அழும் குழந்தை எல்லாருக்கும் அமுதம் தருவாள்! சத்தியம்!

அழுது, ஒளிபெருகி, அமுது பருகி, ஒலி கேட்டு, ஒளி கண்டு பேரின்பம் பெறலாம்! நம்மை படைத்தவனை பார்க்கலாம்! அவணடி சேரலாம்! ஞானம் பெற, இறையருள் பெற எப்படி அழ வேண்டும் என்பதை தகுந்த குருவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
———————————————————————————————————————————
ஏன் அழ வேண்டும் எதற்க்கு அழ வேண்டும் என்றால் முதலில் நமக்கு சித்தர்கள் இறைவன் திருவடி பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரிய வேண்டும்.

சித்தர்கள் திருவடி – Click Here





----------------------------------------------------------------------------------------------------------------
தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.


-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

திங்கள், 28 நவம்பர், 2011

எட்டும் இரண்டும்


சிறு வயதில் கிராமபுறத்தில் குழந்தைகளை கடைக்கு செல்ல ஒரு
2 (ரெண்டு) , 8(எட்டு) வெச்சு இங்க இருக்கிற கடைக்கு போயிட்டு வா
கண்ணு என்று சொல்வதை கேள்வி பட்டு இருக்கிறீர்களா?

திருமூலர் மற்றும் எல்லா ஞானிகளும் இந்த 2 , 8 பற்றி பேசுகிறார்கள் – நாம் வழக்கத்தில் உபயோகிக்கும் இந்த ரெண்டு மற்றும் எட்டுக்கும் ஞானிகள் சொல்லும் 2, 8 க்கும் சம்பந்தம் இருக்கிறதா?

நிச்சயமாக இருக்கிறது!

முதலில் ஞான சற்குரு சிவ செல்வராஜ் ஐயாவின் திருமந்திர பாடலுக்கான விளக்கம் பார்ப்போம் பின் தமிழோடு இது எவ்வாறு சம்பந்த பட்டிருக்கிறது என்பதை அடுத்து பார்ப்போம்.

"எட்டும் இரண்டும் அறியாத என்னை
எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி
எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின்
எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்."

எட்டு - அ - வலது கண் ............. இரண்டு - உ - இடது கண்




இவைதான் சூரிய சந்திரன், சிவசக்தி! எட்டும் இரண்டும் பத்தாகிய அக்னிஸ்தானம் ஆத்ம ஸ்தானம் நம் தீ தான் நந்தி! இரு கண் மணி ஒளியை பெருக்கி உள்ளே ஜீவஜோதியை நம் தீயை அடைந்ததால் அறிவித்தான் நந்தி! நந்தி அருளால் அறிவு துலங்க அறிந்தனன் நான்! அது என்ன? ஆத்ம ஜோதி லிங்க வடிவமாம்! எட்டும் இரண்டுமான கண்களும் லிங்கம் போல தோன்றும் என்கிறார். சிவலிங்கத்தை மேலிருந்து பார்க்க வேண்டும்... பார்த்தால் மூன்று வட்டமே லிங்கம் என்கிறார். ஞான சற்குருவின் உபதேசத்தால்தான் எட்டும் இரண்டும் அறிய முடியும். எட்டும் இரண்டும் பற்றி சொல்லாத ஞானிகளே இல்லை! இது உங்கள் அறிவுக்கு எட்ட வேண்டும். அடியேனால் முடிந்தவரை உங்கள் அறிவுக்கு எட்டும்படியாக கூறி விட்டேன்! எட்டாத தூரத்தில் இல்லை! எட்டி பிடியுங்கள்! எண் குணன் அருள் பரிபூரணமாக கிட்டும்!

எட்டு இரண்டு நமது தமிழ் மொழியுடன் எவ்வாறு பின்னி பினைந்திருக்கிறது என்பதற்க்கு ஒர் உதாரணம்

சிறு வயதில் நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் “கடைக்கு போ” என்ற வார்த்தையை அவரவர் அம்மா வாயால் நிச்சயமாக கேட்டிருப்போம்.

நீங்கள் கேட்டு இருக்கிறீர்களோ இல்லையோ... இந்த கதையில் வரும் “தணிகை மணி” பலமுறை கேட்டு இருக்கிறான். கேட்ட மாத்திரத்தில் சலிப்பாகவும், கசப்பாகவும் இருக்கும் அவனுக்கு. ஏன் எனில் “தணிகை மணி” தான் கால்பந்து விளையாட செல்ல வேண்டுமே? கடைக்கு சென்றால கால்பந்து விளையாட முடியாதே!!

உடனே அவன் சொல்லுவான்... போம்மா கடை ரொம்ப தூரம் என்று....

தாயுக்கும் அவனை பற்றி தெரியும் அல்லவா.... இப்பொழுது அவள் அவன் பெயரை மறந்து விட்டு என்னடா கண்ணா இப்படி சொல்கிறாய் என்பாள்... (ஆம், சிந்தியுங்கள் நாம் குமார், கார்த்தி, ராம் அல்லது சிவா அல்லது எந்த பெயரில் இருந்தாலும் என் அனைத்து தமிழ் தாய் மார்களும் சொல்வது “கண்ணா” என்று மட்டும்தான்... இங்கே ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று நாம் சிந்தித்தால்... இதுதான் சித்தர்கள் சொன்ன ம்ற்றும் வள்ளல் பெருமான் இறங்கி சொன்ன ஞான தவம்)

ஒரு நொடியில் “தணிகை மணி” யாக இருந்து கண்ணணாக மாறிய அந்த பையன் சொல்வான் போம்மா... கடை ரொம்ப தூரம்... கால் எல்லாம் வலிக்கும் என்று சொல்கிறான்.



கண்ணன் கள்வன் அல்லவா... அதை அவள் தாயும் அறிவாள் அல்லவா?
ஒரு பொய் கோபத்துடன்..........
டேய் கண்ணா ஒரு ரெண்டு எட்டு வைச்சா கடைக்கு போயிடலாம் ஆனா இதுக்கு போய் சலித்து கொள்கிறாயே என்று சொல்வாள்? அவனும் ஒருவாறு சமாதனம் அடைகிறான் என தாய் தெரிந்து கொள்கிறாள்....

இப்பொழுது ராஜா இல்லை, என் கண்ணு இல்லை, போட கண்ணா என்று அவளும் குழைந்து சொல்கிறாள்....மெல்ல... அவனுடைய திருவடிகளை எடுத்து வைக்கிறான்...



ஆம் 8 - லும், 2 - லும் வைக்கிறான்.... மெதுவாக நடக்கிறான்...

பின்னாடி இருந்து அம்மாவின் குரல் ஒலிக்கிறது..... என்னடா மச மச வென போய் கொண்டிருக்கிறாய்... விறு விறு என நடடா என்று....வைக்கிறான் வேகமாக..

8 , 2

2 , 8

8 , 2

2 , 8 என்று மாற்றி மாற்றி நடக்கிறான்.
தணிகைமணி போய் சேர்ந்தானா இல்லையா என்று கேட்கிறீர்களா.............
தணிகைமணி.....அவந்தான் கண்ணன் னாயிற்றே

அவந்தான் ராஜா வாயிற்றே --- போய் சேராமல் இருந்து விடுவானா என நான் கேட்கவில்லை வள்ளலார் கேட்கிறார்.

இதில் ரெண்டு, எட்டு மற்றும் கடை என்றால் என்ன வென்று உங்களுக்கு புரிந்தால் போதும்

ரெண்டு - 2
எட்டு - 8
வைத்தால்
கடை - ஞானம் (கடைந்தேருவது .... என்று பொருள்)

இந்த 8 ஐயும் 2 ஐயுமே கண்ணா(கண்கள்) என்று சொல்கிறார்கள்

இந்த கண்களையே ராஜா என்கிறார்கள்... ராஜா தானே ஆட்சியை
பிடிப்பான் ( ஞானத்தை பிடிப்பான்)

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

http://www.vallalyaar.com

----------------------------------------------------------------------------------------------------------------




தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.




-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

வெள்ளி, 25 நவம்பர், 2011

இறைவன் நமக்கு கொடுத்த சீர்?


சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
நேத்திரங்கள் போற் காட்டநேராவே - நேத்திரங்கள்
சிற்றம்பலவன் திருவருட் சீர் வண்ணமென்றே
உற்றிங் கறிந்தேன் உவந்து.

என வள்ளல் பெருமான் உரைக்கிறார். நேத்திரங்கள் என்றால்
கண்கள். சாத்திரங்களை நாம் உண்மை அறியாது படிப்போமானால்
நமக்கு தடுமாற்றமே உண்டாகும்-புரியாது. ஆனால் கண்களாகிய
சிற்றம்பலத்தில் குடியிருக்கும் இறைவனை அறிந்து
பார்த்தோமானால் கண்கள் நமக்கு அனைத்தையும் அறிவிக்கும்.
எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிடும். இந்த உலகத்தையும் இது
போன்ற பற்பல உலக நிலையும் நமக்கு உணர்த்தும்,
நாமும் உணரலாம் - ஞானமடயலாம். - பரிபூரண அறிவு பெறலாம்.


இறைவன் நமக்கு கொடுத்த மாபெரும் சீர் - திருமணத்தின் போது
பெண்ணிற்கு என்ன சீர் செய்வீர்கள் என நாம் கேட்கிறோமல்லவா?
அதுதான். ஜீவர்களாகிய நமக்கு ஆண்டவர் கொடுத்த சீர் தான் கண்கள்.

அதை எல்லாம் வல்ல அருட்பெரும் ஜோதி ஆண்டவர் அருளால்
உணர்ந்து கொண்ட வள்ளலார் நாமும் அறிந்து கொள்ளவே பாடி
திருவருட்பாவை நமக்கு அருளி இருக்கிறார்கள். என்ன அவர் தம்
கருணை! இரக்கம்.

நான் பெற்ற நெடும்பேற்றை ஓதி முடியாது என போல் இவ்வுலகம்
பெறுதல் வேண்டுவனே என ஆண்டவரிடம் வேண்டிய கருணையின்
வடிவமாயிற்றே அவர்! தான் அறிந்தவற்றை வெளிப்படுத்தி உலகர்
அனைவரும் மரணமில்ல பெருவாழ்வு அடைய வழி காட்டினார்.

திருவருட் பிரகாச வள்ளல் - சற்குரு - ராமலிங்க சுவாமிகள்
திருவடிகளை என்றும் வணங்குவோமாக!

பக்கம் 66

கண்மணிமாலை - சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com




----------------------------------------------------------------------------------------------------------------




தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.




-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

புதன், 23 நவம்பர், 2011

திருமந்திரம் - உபநயனம்

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி தன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே.

நயனம் என்றால் கண். பிறப்பால் பிராமணர்கள் பூணூல் சடங்கு
நடத்துவர். அதற்கு உபநயனம் என்பெயர். இதன் பொருள் யார் புரிந்திருக்கிறார்களோ? 


 

உப என்றால் இரண்டு நயனம் என்றால் கண்.
இரு கண்ணை பற்றிய உபதேசம் என பொருள். 

உபனயத்தின் போது பூணூல் போடப்பட்டு காயத்ரி 
மந்திரம் உபதேசம் பெறுவார்.

காயத்ரி என்ன சொல்லுகிறது தெரியுமா? மேலான சுடர்
கடவுளின் ஒளியை தியானிப்போம் என்பதுதானே!
உபநயனம் +
காயத்ரி என்பது இரு கண்களில் ஒளி
உள்ளது இதை
தியானிப்பாயாக எனப்பொருள்? இனிமேலாவது
இவ்வண்ணம் உணர்ந்து தியானம் செய்யுங்கள்.

உண்மையில் பிரம்மத்தை சார்ந்து பிராமணர் ஆகுங்கள். இதனை உணராததினால்தான் இன்றைக்கு பிராமணர்கள் வெறும் சடங்குகளிலே நிற்கின்றனர்.


கிரியையில் நின்று விடுகின்றனர்.
ஞானத்திற்கு வருவதில்லை. 


எப்பொழுது புரிந்து ஞானம் அடைவார்களோ ? இறைவா உன் 
பக்தர்களை மேனிலை படுத்து. அருள் புரிவாயாக. இரு கண்களிலும் 
உள்ள ஒளியைப் பார்த்து சாதனை செய்ய செய்ய அங்கே தூங்காமல் 
தூங்கி இருப்போமேயானால் விண்ணிலிருந்து ஒளி தோன்றி நம் முன்
காரியப்படுவதை நாம் பார்க்கலாம். சாதனை அனுபவத்தில்
இதனை உணரலாம். 


சிந்தனை செய் மனமே சுகம் பெறலாம்.

பக்கம் 70.
கண்மணிமாலை - சற்குரு சிவசெல்வராஜ்.
 
www.vallalyaar.com

திங்கள், 21 நவம்பர், 2011

அகவல் - பிடித்த வரிகள்

உரை மனம் கடந்த ஒரு பெருவெளிமேல்
அரைசு செய்தோங்கும் அருட்பெருஞ்ஜோதி

ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே
ஆதாரமாகிய அருட்பெருஞ்ஜோதி

சாகாக் கலை நிலை தழைத்திடு வெளியெனும்
ஆகாயத் தொளிர் அருட்பெருஞ்ஜோதி

இன்ற நற்றாயினும் இனிய பெருந்தயவு
ஆன்ற சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி

முத்தி என்பது நிலை முன்னுறு சாதனம்
அத்தக வென்றவென் அருட்பெருஞ் ஜோதி

சித்தி என்பது நிலைசேர்ந்த அநுபவம்
அத்திற லென்றவென்ன அருட்பெருஞ் ஜோதி

கதிர்நல என் இரு கண்களிற் கொடுத்தே
அதிசயம் இயற்றெனும் அருட்பெருஞ் ஜோதி

நாயினுங் கடையேன் ஈயினும் இழிந்தேன்
ஆயினும் அருளிய அருட்பெருஞ் ஜோதி

களங்க நீத்து உலகங் களிப்புற மெய்நெறி
விளங்க என்னுள்ளே விளங்கு மெய்ப்பொருளே

தானொரு தானாய்த் தானே தானாய்
ஊனுயிர் விளக்கும் ஒரு தனிப் பொருளே

அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்ப்
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே

வீடுகளெல்லாம் விதி நெறி விளங்க
ஆடல் செய்தருளு மரும்பெரும் பொருளே

சத்திய பதமே சத்துவ பதமே
நித்திய பதமே நிற்குண பதமே

பற்றுகள் எல்லாம் பதி நெறி விளங்க
உற்றருள் ஆடல் செய் ஒருதனிப் பொருளே .


யாரே யென்னினு மிரங்குகின் றார்க்குச்
சீரே யளிக்கிஞ் சிதம்பர சிவமே

எம் பொருளாகி எமக் அருள் புரியுஞ்
செம் பொருளாகிய சிவமே சிவமே

அருள்பெறிற் துரும்புமோர் ஐந்தொழில் புரியுந்
தெருளிது எனவே செப்பிய சிவமே

எம்பொரு ளாகி யெமக்கருள் புரியுஞ்

செம்பொரு ளாகிய சிவமே சிவமே

உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே
உயிர்நலம் பரவுகென்று உரைத்தமெய்ச் சிவமே

பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையருட்
செந்நெறி சொத்திய சிற்சபைச் சிவமே

கொல்ல நெறியே குருவருள் நெறி எனப்
பல்கா லெனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே

உயிரெலாம் பொதுவினுள் உளம்பட நோக்குக
செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே .

உள்ளகத் அமர்ந்து எனது உயிற் கலந்தருள்
வள்ளல் சிற்றம்பலம் வளர் சிவ பதியே

பிழையெலாம் பொறுத்தெனுட் பிறங்கிய கருணை
மழையெலாம் பொழிந்து வளர் சிவ பதியே

ஞாயிறு, 20 நவம்பர், 2011

பட்டினத்தார் ஞானம் அடைய வழி - கண்

கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சமே நீ
எண்ணாத மாய்கை எல்லாம் எண்ணுகிறாய் - நண்ணாய் கேள்
பார்க்க வேண்டும்தனையும் பத்தரை மாற்றுத்தங்கம்
ஆக்கப் போகாதோ உன்னால்.


எவ்வளவு எளிமையாக கூறி இருக்கிறார் பாருங்கள்! பட்டினத்தார்.
ஞானம் அடைய நமக்கு வழி கூறுகிறார். கண்ணால்தான் சாதனை
புரிந்து ஞானம் அடையவேண்டும். இதை நெஞ்சே நீ அறிவாயாக
என்கிறார். ஆனால் நீ அதை விடுத்து மாயை வசப்பட்டு வேண்டாதெல்லாம்
எண்ணுகிறாய் என கூறுகிறார். மேலும் கண் மூலம் சாதனை செய்து
தான் தன்னையும் உணரவேண்டும் என்றும் அதன் மூலம் உன் ஊன
உடல் பத்தரை மாற்று பொன்னாக ஒளிர் விட்டு பிரகாசிக்கும் என்று
கூறியுள்ளார்.


பக்கம் 107.
கண்மணிமாலை - சற்குரு சிவசெல்வராஜ்.
www.vallalyaar.com


----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

செவ்வாய், 15 நவம்பர், 2011

கண்தான் உடலுக்கு விளக்கு

விவிலியம்  சொல்வது என்ன?

கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கு

எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.
இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க. அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.
நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள்.

அவர் அந்த ஒளி அல்ல மாறாக ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.

அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையாக ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.

ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது.
தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவாகள் ஒளியிடம் வருவதில்லை.

உண்மைக்கேற்ப வாழ்பவர் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.



மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து"உலகின் ஒளி நானே என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்" என்றார்.

நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி" என்றார்.

அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையாக ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.

ஒளிமயமான பெருநாளாகிய ஆண்டவரின் நாள் வருமுன்ளே கதிரவன் இருண்டு போகும். நிலவோ இரத்த நிறமாக மாறும்.

ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார். அறை ஒளிமயமாகியது.

ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.

ஏனெனில் ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது.

நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்: பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல.

ஏனெனில் ஒருமுறை ஒளியைப் பெற்று, விண்ணகக் கொடையைச் சுவைத்தவர்கள், தூய ஆவியைப் பெற்றவர்கள் ஆவர்.

ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.

ஆனால், தற்பொழுது சிறிது காலமாய் எம் கடவுளாம் ஆண்டவருமாகிய உமது கருணை துலங்கியுள்ளது: எங்களுள் சிலரை எஞ்சியோராக விட்டுவைத்தீர்: உமது புனித இடத்தில் எங்களுக்குச் சிறிது இடம் தந்தீர்: எம் கடவுளாகிய நீர் என் கண்களுக்கு ஒளி தந்தீர்: எமது அடிமைத் தனத்திலிருந்து சற்று விடுதலை அளித்தீர்.

ஞானிகளின் கண்கள் ஒளி படைத்தவை: மூடரோ இருளில் நடப்பவர். ஆயினும், ஒருவருக்கு நேர்வதே மற்றெல்லாருக்கும் நேரிடும் என்று நான் கண்டேன்.

ஞானமுள்ளவருக்கு யார் நிகர்? உலகில் காண்பவற்றின் உட்பொருளை வேறு யாரால் அறிய இயலும்? ஞானம் ஒருவன் முகத்தை ஒளிமயமாக்கும்: அதிலுள்ள கடுகடுப்பை நீக்கும்.

கதிரவனும் நிலவும் தங்கள் இருப்பிடத்திலேயே நிலைத்து நிற்கின்றன: பாய்ந்தோடும் உம் அம்புகளின் ஒளியின் முன்னும், பளிச்சிடும் உம் ஈட்டியினுடைய சுடரின் முன்னும் தங்கள் செயல் திறனை இழந்து நிற்கின்றன.

அது ஒரே பகலாயிருக்கும், அதன் வரவை ஆண்டவர் மட்டுமே அறிவார். பகலுக்குப்பின் இரவு வராது. மாலை வேளையிலும் ஒளிபடரும்.

தோபித்து தம் கண்களினால் கடவுளின் ஒளியைக் காணும்பொருட்டு அவருடைய கண்களிலிருந்து வெண்புள்ளிகளை நீக்கவும் ......

--இவை அனைத்தும் விவிலியம் இருந்து எடுத்தது

வெள்ளி, 11 நவம்பர், 2011

நித்திய கர்ம விதி-2

உணவு முறை :

கிழங்கு வகையில் கருணை கிழங்கு மட்டும் சாப்பிடவும்.
பழம் - பேயன் / ரஸ்தாளி சிறிது கொள்ளுதல் கூடும்.
பழைய கறிகளை(குழம்பு, பிரட்டல், பருப்பு, கீரை) கொள்ளாதிருத்தல் வேண்டும்.
பதார்த்தங்களில் புளி மிளகாய் சிறிதே சேர்க்கவேண்டும்.
மிளகு சீரகம் அதிகமாக சேர்க்க வேண்டும்.
கடுகு சேர்ப்பது அவசியமல்ல.
உப்பு குறைவாக சேர்க்க வேண்டும். தேக நீடிப்புக்கு ஏதுவாம்.
பசுவெண்ணை அல்லது நல்லெண்ணெய் - தாளிக்க பயன்படுத்தலாம்.
வெங்காயம் பூண்டு சிறிது சேர்க்கலாம்.

கத்தரிக்காய், வாழை , அவரை, முருங்கை, பீர்கங்காய்,கலியாண பூசணி,புடல,
தூதுலன் காய், கொத்தவரன்காய் இவைகளை பதார்த்தம் செய்தல் கூடும்.

ஏகதேசத்தில் சிறிது கொள்ள வேண்டியது
வடை அதிரசம் தோசை மோதகம் முதலிய அப்ப வர்க்கங்கள் தினமும் கொள்ளகூடாது
சர்க்கரை பொங்கல், ததியோதனம் , புளிசாதம் .

புளியாரை கீரை தினந்தோறும் கிடைகிணும் நன்று.


cont...



செவ்வாய், 8 நவம்பர், 2011

நித்திய கர்ம விதி

சூரியோதைதுக்கு முன் எழவேண்டும்
விபூதி தரிசித்து சிறிது நேரம் உட்கார்ந்து கடவுளை தியானம்
செய்யவேண்டும் வெற்றிலை + களிப்பாக்கு(அதிகமாக)+ சுண்ணாம்பு
குறைவாக போட்டு முன் ஊறுகிற ஜலத்தை உமிழ்ந்து, பின் வரும்
ஜலத்தை உட்கொள்ளுதல் வேண்டும் பின்பு எழுந்து சற்று
உலாவுதல் வேண்டும்.

மல ஜல உபாதிகளை கழித்தல் வேண்டும்.

மலம் கழிக்கும் பொது வலது கையால் இடது பக்க அடி வயிற்றை
பிடித்திருத்தல் வேண்டும். ஜலம் கழிக்கும் போது இடது கையால்
வலது
பக்க அடி வயிற்றை பிடித்திருத்தல் வேண்டும். மலமாவது
ஜலமாவது பற்றறக் கழியும் வரையில் வேறு விசயங்களை சிறிதும் நினையாமல் மல ஜல சங்கற்பத்தோடு இருக்க வேண்டும் மலம்
பின்னுந் தடை படாமல் இடது பக்கமாக படுத்து பிராண வாயுவை
வலத்தே வரும் படி செய்து கொண்டு மலசங்கற்ப
த்தோடு மலவுபாதி
கழித்தல் வேண்டும் ஜலம் தடை பட்டால் வலது பக்கமாக சற்றே
படுத்து பிராண வாயுவை இடது பக்கம் வரும்படி செய்து கொண்டு
ஜல
சங்கற்பத்தோடு ஜலவுபதி கழித்தல் வேண்டும்


இது இல்லாதார்க்கு மட்டுமே விதித்தது, துறவர்த்தர்க்கு தாம்பூலம் தரித்தல் விலக்கு.

வெற்றிலை நுனியும் காம்பையும் கிள்ளி எரிய வேண்டும், முதுகு நரம்பை
நகத்தால் எடுத்து விடவேண்டும் பல் துலக்கும் முன் தாம்பூலம் தரிக்கலாகாது
காலையில் பாக்கு மிகுதியாகவும் , ஊச்சியில் சுண்ணாம்பு மிகுதியாகவும்
மலையில் வெற்றிலை மிகுதியாகவும் கொள்ளவேண்டும்
வெற்றிலை போட்ட
பின்னரே பக்கை போடவேண்டும்.

மல ஜல வுபாதி கழிந்தபின் செவிகள்(காது) கண்கள் நாசி(மூக்கு) வாய் தொப்புள்
இவைகளில் அழுக்கு,பீளை, சளி, ஊத்தை என்கின்ற அசுத்தங்களையும் கைகால்
முதலிய உறுப்புகளில் உள்ள அழுக்குகளையும் வெந்நீரினால் பற்றற துடைத்தல்
வேண்டும்.

பின் வேலங்குச்சி ஆலம் விழுது இவைகளை கொண்டு பல் அழுக்கு எடுக்க
வேண்டும்.

அதன் பின் கரிசலங்கண்ணி தூள் கொண்டு சிறிது சாரம் போகும் படி பல்லில் தேய்த்து வாய் அலம்பவும், பின் பொற்றலை கையாந்தகரை இல்லை அல்லது
கரிசலங்கண்ணி இலை ஒரு பங்கு தூதுளை இலை முசுமுசுக்கு இலை கால் பங்கு சீரகம் கால்பங்கு இவை ஒன்றாய் சேர்த்து சூரணம் செய்து அதில் ஒரு வராகன் எடை ஒரு சேர் நல்ல ஜலத்தில் போட்டு அதனுடன் ஒரு சேர் பசுவின் பால் பசும்பால் விட்டு கலந்து அதிலுள்ள ஒரு சேர் ஜலமும் சுண்ட காய்ச்சி அந்த பாலில் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடல் வேண்டும்


பொற்றலை கையாந்தகரை தூதுளை இலை ஞான பச்சிலைகள், இதை அடிகள்
அடிகடி வற்புறுத்தி அருளுவர்.


காலையில் இளம் வெயில் தேகத்திற்கு படாதபடி, பொழுது
விடிந்து (௫)5 நாழிகை பரியந்தம் உடம்பை போர்வையோடு காத்தல்
வேண்டும்.இளம் வெண்ணீரில் குளிக்க வேண்டும். விபூதி தரித்துச்
சிவசிந்தனையுடன் இருத்தல் வேண்டும்.

பசி கண்டவுடன் தடை செய்யாமல் ஆகாரம் கொடுத்தல் வேண்டும்,
ஆகாரம் கொடுக்கும் போது, மிகவும் ஆலசியமும் ஆகாது மிகுந்த தீவிரமும்
ஆகாது (ஆலசியம்: சோம்பல்:மடிமை.தாமதம்.சோம்புத் தன்மை)

முதற்பக்ஷம்(பதினைந்து நாள் கொண்ட காலம்) சீரகசம்பா அரிசி
அன்றி புன்செய் விளையும் காரரிசியுந் தவிர நேரிட்ட அரிசி வகைகள் ஆகும்.

அது சாதம் ஆகும்போது அதிகம் நெகிழ்ச்சியும் ஆகாது அதிக கடினமும் ஆகாது
நடுத்தரமாகிய சோற்றை அக்கினி அளவுக்கு அதிகப்படமலும் குறைவு படாமலும்
அறிந்து உண்ணுதல் வேண்டும். ஆயினும் ஒருபடி குறைந்த பக்ஷமே நன்மை.


போஜனம் செய்தபின்னர் நல்ல நீர் குடித்தல் வேண்டும்.
அந்த நல்ல நீரும் வெந்நீர் ஆதல் வேண்டும்.
அதுவும் அதிகமா குடியதிருத்தல் வேண்டும்.

















திங்கள், 7 நவம்பர், 2011

திரை

  1. கருப்பு நிறத்திரை - கரைவின் மாமாயைக் அரைசது மறைக்கும்(மாயா சக்தியையும்),
  2. நீல நிறத்திரை - ஆருயிர் மறைக்கு(கிரியா சக்தியையும்)
  3. பச்சைத்திரை - பரவெளி யதனை அச்சுற மறைக்கு (பராசக்தி)
  4. சிவப்புதிரை - சித்துறு வெளியை அம்மையின் மறைக்கும் (இச்சா சக்தி)
  5. பொன்மைத் திரை - பொருளுறு வெளியை அண்மையின் மறைக்கும்
  6. வெள்ளைத்திரை - மெய்ப்பதி வெளியை அண்மையின் மறைக்கும்
  7. மஞ்சள் - (திரை ஞான சக்தி),

அருட்பெருஞ் ஜோதி

ஞாயிறு, 6 நவம்பர், 2011

சபரிமலை


பக்தியால் ஞானத்தை காட்டுவதில் 
முன்னிற்பது இன்று சபரிமலையிலே 
கோயில் கொண்டுள்ள ஜோதிஸ்வருபன் 
தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்ப சுவாமியே!!


தூய பழக்கம், எல்லோரயும் ஐயப்ப சாமியாக பார்ப்பது, 
எல்லோரும் ஒரே  மாதிரி உடை, 
மலை அணிவது 
எல்லோரும் சமம் ஆகிவிடுகிறார்கள்.

18 படி ஏறி அய்யப்பன் என்ற ஒரே நினைவோடு வரவேண்டும். 
அப்போதுதான் காணமுடியும்.

அங்கே காண்பது மகர ஜோதியை. 
எல்லாம் வல்ல இறைவனை ஜோதியாக காண  
நம்மை நாம் தயார் படுத்திகொள்வதே 
சபரிமலை யாத்திரை.



குருவை பணித்து 
அவர் வழி காட்டுதலில்
இறைவனை காண 
பயண படவேண்டும். 


இதுவே சபரிமலை பயணத்தில் முக்கியமானது.

குரு சாமியை சந்தித்து
 மாலை அணிந்து விரதம் காக்க வேண்டும். 

குரு வழி காட்ட மலை ஏறி 
ஜோதி ஸ்வ்ருபனை காணலாம்



--------பள்ளிக்கட்டு சபரி மலைக்கு ------

இரு முடி தாங்கி 
ஒரு மனதாகி 
குருவெனவே வந்தோம்
இரு வினை தீர்க்கும் 
அந்த எமனையும் வெல்லும்
உன் திருவடியை 
காண வந்தோம்...

Popular Posts