செவ்வாய், 23 டிசம்பர், 2014

பாவ விமோசனம் எப்படி பெறுவது?



கண்ணா கண்ணே என்று கதறாத ஞானிகள் இல்லை! கண் பெற்ற நாம் பாக்கிய சாலிகளல்லவா? கண் ஒரு உறுப்பு மட்டுமல்ல, இதே ஊனக்கண்ணே ஞானக்கண்ணாகவும் மாறும் என்பதை அறிந்தவன் எவ்வளவு பாக்கியசாலி

ஆன்மீக இரகசியங்களை உடைத்து தவிடு பொடியாக்கிய ஞானச் செல்வங்கள் மகான் ஸ்ரீ ராமானுஜரும் வள்ளல் ஸ்ரீ இராமலிங்கரும் தன் அடியேனுக்கு கண் போன்றவர்கள்! அவர்கள் காட்டிய பாதையில் அடியேன் முதல் முறையாக கண்மணிமாலை எனும் மெய் ஞான நூலை 1992-ல் வெளியிட்டேன்.

ஆன்மீ கம் குறிப்பிட்ட குறிப்பிட்ட மதத்துக்கோ குறிப்பிட்ட பிரிவினருக்கோ உரியது அல்ல! உலக மக்கள் 800 கோடிபெருக்கும் பொதுவானது! இறைவன் ஒருவன்தான்! 800 கோடி மக்களை பெற்ற தாயும் தந்தையும் அவன்! பரமாத்மா ஆவான்!


அவன் பெற்ற 800மக்களும் ஜீவாத்மாவே! இந்த உண்மை தெரியாதவன் உணராதவன் மனிதனே அல்ல!? பரமாத்மாவை உணரும் வரை மனிதன்-ஒரு ஜீவன் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து காலச்சக்கரத்தில் சம்சார சாஹரத்தில் சுழற்ன்று கொண்டே இருக்கும்! விமோசனம் வேண்டாமா?

இதுவரை இவ்வுலகில் இறை ரகசியத்தை மறைத்தே வைத்தனர்?! திருஅருட் பிரகாஷ வள்ளலார் ராமலிங்க சுவாமிகளே இறை ரகசியத்தை வெளிப்படுத்தி வெட்ட வெளியிலே சத்திய ஞான சபை கட்டி ஒளியான இறைவனை ஒளியாக எல்லோரும் காண கோயில் அமைத்து தந்தார்! தை பூச ஜோதி தரிசனம் காண வடலூருக்கு வாருங்கள் என்று கூவி அழைத்தார்!  வடலூரில் புறத்தே இறைவனை ஜோதியாக கண்டது போலே உங்கள் உடலூரில் அகத்தே அதே இறைவனான ஜோதியை காண்க என்று அறிவுறுத்தினார்!

இப்படி ஞானோபதேசம் செய்யும் அவர் அதற்க்கு வழியும் கூறுகிறார்! தகுந்த ஆச்சாரியன் மூலம் உங்கள் நடுக்கண்ணை திறக்க பெற்றுகொள்க என அறிவுறுத்துகிறார்!? விழியே நம் உடலூரில் உள்ளே புகும் வழியாகும். உடலூரின் அகத்தே ஆன்ம ஜோதியை காண கண் வழியே உணர்ந்து தவம் செய்ய வேண்டும் என்று மிக மிக ரகசியமாக இருந்த ஞானத்தை உலகுக்கு வெளிப்படுத்தினார் வள்ளலார் !


ஞானத்தை மட்டுமே வைத்து அந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் அப்போது தான் கண்ணனை நாம் அறிய முடியும் கண்ணன் யார் என்று தெளிவு கிட்டும். பின்னர்தான் கண்ணாலே காணலாம்! கண்ணாக இருக்கும் அவனே கண்ணன் என உணரலாம்!


மனம் ஒன்றி கண்ணனிடம் லயமானால் ஞானம்! மந்திரம் - மனதின் திறம் வெளிப்படும் இடம் கண்ணே! அந்த கண்ணனிடம் கண்ணில் லயமானால் கிட்டுமே ஞானம்(அறிவு) இதைப்பற்றி பாடினார்கள் ஆழ்வார்கள் நாலாயிர திவ்ய பிரபந்தமாக! அடியேன் மெய்ஞான உரை எழுத உட்கார்ந்த போது அருளினான் கண்ணன்.



சனி, 20 டிசம்பர், 2014

கண்ணன் - என்னை சரண் அடைந்தவன் கர்மாக்களை

கண்ணன் உபதேசமாம்  பகவத் கீதையில், என்னை சரண் அடைந்தவன் கர்மாக்களை நான் ஏற்று கொள்கிறேன்! சம்சார சகாரதில் மூழ்காமல் காப்பற்றி கரை செய்கிறேன்! மானுடா நீ உன் கர்மாவை செய் பலனை என்னிடம் விட்டுவிடு என்று தானே கூறுகிறார்!!

அனைத்தையும் 'கிருஷ்ணார்ப்பணம் பண்ணிவிட்டால்' நமக்கேது வினை? நமக்கு வினையில்லா விட்டால்  பிறவி வராதே!  பிறப்பு  இறப்பு  எனும்  சுழலிலிருந்து  விடுபட  அனைத்தையும்  கண்ணனிடமே  ஒப்படைத்து 
பரிபூரண  சரணாகதியாகி  விட்டால்  போதும் !

கண்ணன் எங்கே என்று ஊர் உலகமெல்லாம் தேடாதே! இந்த பிரபஞ்சம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள  பரமாத்மா! அங்கு இங்கு எனாதபடி எங்கும் இருக்கும் அந்த இறைவன் மனிதனிலும் இருப்பான்தானே!
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்! மனித உடலிலும் இருப்பன் அல்லவா?

இருக்கிறான்!! மனித தேகத்திலும் அந்த பரமாத்மா துலங்குகிறார் என்பதை இது வரை உலகில் தோன்றிய அத்தனை ஞானிகளும் கூறியுருக்கின்றனர் !! இது தான் ஞானம்!!


கண்ணன்  மனித தேகத்தில் எங்கு எப்படி செயல்படுகிறான் என அறிந்து அந்த கடவுளை அடைய பாடுபடுவதே தவம்! அறிந்து தெளிந்து உணர்பவனே ஞானி! 


ஞான சற்குரு சிவசெல்வராஜ்
பரம பதம்

வியாழன், 18 டிசம்பர், 2014

ஸ்ரீ ஆண்டாள் மெய் ஞானம் - திருவடி உபதேசம்.

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த நாச்சியார் திருமொழி.
 மெய் ஞானம் - திருவடி உபதேசம்.
 



 
பூரம் - நட்சத்திரத்தில்  பிறந்தவர்களுக்கு வழிபாடு. (27 நட்சத்திரக்காரர்களுக்கு வழிபாடு, தியானமுறை)பாடல்:- 522 (நாலாயிர திவ்யப்பிரபந்தம்)


"முற்றத்தாடு புகுந்து நின்முகங் காட்டிப்புன் முறு வல்செய்து சிற்றி லோடெங்க சிந்தையும் சிதையக் கடவையோ? கோவிந்தா" முற்றமண்ணிடம் தாவி விண்ணுற நீண்ட அளந்து கொண்டாய்! எம்மைப்பற்றி மெய்ப்பிணக் கிட்டக்கால் இந்த பக்கம் நின்றவர் என் சொல்வார்?"


மெய் பொருள்:-நாங்கள் வளர்ச்சியடையாத சிறுமிகள் எங்கள் மணல் வீட்டை கலைக்காதே என்றனர்! இங்கு பக்குவமில்லா மானிடர் மணல் வீடு அவர் உடலேயாம்! கண்ணன் அருளவில்லையெனில் - (சிற்றில்-சின்னவீடு) கண் ஒளி பெருகி நாம் நம்மை உணரவில்லையெனில் சிற்றில்-சின்னவீடு நம் உடல் அழிந்துபோகும்!

இறைவா இந்தசிற்றில்  அழியாது ஒளி தந்து காத்தருள்வாய் கதையைப் பாராமல் ஞான அனுபவ நிலையைப் பார்க்கவும்!

முற்றத்தூடு புகுந்து - முற்ற சூரிய சந்திர அக்னி ஆகிய மூச்சு கூடும் இடம்! நம் கண் வழி அடைந்து செய்யும் போது ஒளி இரு கண்ணும் உள்ளே சேரும் இடமான முச்சந்திக்கு - முற்றத்துக்கு வந்து சேரும்!

நம் கண்மணி ஊசிமுனை வாசல் திறந்து ஒளிக்காட்சி காணும்! உள்ளே போங்குங்கால் ஊன உடல் சிதையும் ஒளியுடல் பெறுவோம்! மனம் செத்துவிடும்! வேறெந்த சிந்தனையும் இருக்காது! கோவிந்தனிடமே லயித்து விடுவோம்!

முற்றமண்ணிடம்தாவி - நம் சிரசின் உள் மத்தியில் நின்று ஒரு காலால் விண்ணளந்தாய் ஒற்றை காலில் நின்றாய்! இதுவே ஏக பாத மூர்த்தி என கோவில்களில் சிலை வடித்திருப்பார்கள். வாமன அவதாரம் விண்ணளந்த நிலை இதுவே! அதாவது நம் உள் ஆத்ம ஜோதி எழும்பி மேலே சகஸ்ராராத்தை அடையும்!

அப்போது என் மெய்யோடு இரண்டற கலந்து விடுவான் கண்ணன் - ஒளியானவன். நீவேறு நான் வேறு இல்லாத நிலை! நீயும் நானும் ஒன்றான நிலை!

எவ்வளவு அற்புதமான ஜீவாத்மா பரமாத்மா ஐக்ய நிலை?! ஆண்டாள் பாடிய அனுபவ ஞான நிலை! இதுவே ஞான ரகசியம் என்று கூறி அ + உ = ய. எட்டும் இரண்டாம் - பத்து. தவம் செய்யும் நிலை, பேரின்பம் பெருதல்.


இந்த ஞான உபதேசம் கன்னியாகுமரி ஞான சற்குரு சிவசெல்வராஜ் சுவாமிகள் "பரம பதம்" என்ற நூலிலிருந்து எடுத்து தறபட்டுள்ளது.




                                                       வேனும் - சுபம்

சனி, 6 டிசம்பர், 2014

கண்வழி கட உள்ளே கடவுளை காண்



சமரச சன்மார்க்கம் வாழ்வாங்கு வாழலாம்



மாமிசம் சாப்பிடதே


சன்மார்க்க தெய்வம் - ஐயப்பன்


ஆதியே துணை



ஞாயிறு, 23 நவம்பர், 2014

மேல் மூலம் - நமது கண்!

அறிகின்ற மூலத்தில் மேல் அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிக் - திருமந்திரம் 452

நாம் அறிகின்ற மேல் மூலம் - நமது கண்! நாம் அறியாதது தான்
குதத்துக்கும் குய்யத்துக்கும் நடுவுள்ள மூலம்! அறியாததை விட்டுவிடு
அதுயோகம்!

அறிந்ததை பார்? பார்க்க முடிந்ததே மேல் மூலம்-கண்!
கண்ணில் தான் அங்கி-நெருப்பு  உள்ளது. அங்கேதானே நீரும் உள்ளது!
நீர் உள்ள கண்ணே தவத்தால் சிவந்து செந்தாள் சிவந்த திருவடி எனப்படும்!

அந்த செந்தாள் கொளுவி பிடித்துள்ளது கண்மணி ஒளியை!கொக்கி
போட்டு பிடித்து வைத்துள்ளது. மாட்டி வைத்துள்ளது. தமிழ் வேதம்
திருமந்திரம்! தமிழின் எல்லா சொற்களையும் அழகாக கையாள்கிறார்!
திருமூல நாயனார்!

நீர் மேல் நெருப்பாக இருப்பவன் இறைவன்! கண்
கருவிழி உள் பிராண நீரில் சுழலும் மணியுனுள்ள இருக்குது நெருப்பு !
எவ்வளவு நேர்த்தியாக படைத்துள்ளான் இறைவன்!

மந்திர மணிமாலை 

ஞாயிறு, 16 நவம்பர், 2014

புலன் ஐந்தும் வென்றான்தன் வீரமே வீரம்!!

"ஒன்றாகக்  காண்பதே  காட்சி ! புலன்  ஐந்தும்
வென்றான்தன்  வீரமே  வீரம் ; -  ஒன்றானும்
"சாகாமல்  கற்பதே " வித்தை ;  தனைப்பிறர்
ஏவாமல்  உண்பதே  ஊண் ".
                                      -  ஒளவையார்

           கடவுளை  ஒன்றாக  காண்பதே  காட்சி!  கடவுளை  அடைந்த ஞானியர்கள்  பலர்  இருப்பினும்  அவர்கள்  அனைவரும் ஒருவரே ! அப்படி  கருதுபவரே  ஞானம்  பெறுவர் ! சாகாமல்  கற்பதே  கல்வி ! சாகாகல்வி  பயலுபவனே  ஞானம்  பெற  முடியும் ! செத்தவர்கள் மீண்டும்
 பிறப்பர் ! பிறந்து , செத்து , பிறப்பவர் வினைகளுக்குட்பட்ட மனிதனே ! அவர்கள்  ஞானி  அல்ல ! சாகாதவரே  ஞானி ! சித்தர் !  பிறப்பு  இறப்பை வென்றவரே  இறைவன்  திருவடியை  அடைவர் ! ஒளவையாரின் 
இந்த  ஒரு பாட்டு  போதும் !  எது  ஞானம்  என்று  விளங்க !  விளக்க !  ஜாதி  மதம்  இனம்  மொழி  நாடு  என  எல்லாம்  கடந்து  நாமனைவரும் கடவுளின்  பிள்ளைகளே  என்று  பார்ப்பவர்களுக்கே  ஞானம்  கிட்டும் !

ஞானம் பெற விழி
ஞான  சற்குரு  சிவசெல்வராஜ்

வெள்ளி, 14 நவம்பர், 2014

ஞானிகள் எல்லோரும் நமக்கு துணை!

வேறு யாருமே, வேறு எந்த ஆசிரமுமே, வேறு எந்த சாமியாரோ
அடியேனை போலே ஞான இரகசியங்களை பரிபாசை
விளக்கங்களை வெளிப்படுத்த வில்லை?! நூல் வெளியிட்டது இல்லை?!
அடியேனுக்கு வள்ளலார் மற்றும் ஞானியர்கள் கொடுத்த ஊக்கம்!
ஆக்கம்! சிறந்த நோக்கம்!

ஞானிகள் எல்லோரும் நமக்கு துணை! கடவுளை அடைய கண்ணே வழி!
வேதங்கள் மதங்கள் மார்க்கங்கள் ஆசிரமங்கள் சங்கங்கள் எல்லோரும்
கூறும் ஒரே இறைவன் உன்னுள்ளே இருக்கிறான் உயிராக! காண,உணர
வழி விழியே! கண்ணே ! விழித்திரு காண்பாய்! ஞானம் பெற ஒரே விழிதான்
ஒரே வழி!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

திங்கள், 10 நவம்பர், 2014

குருவை நாம் பெற வேண்டும் என்று வள்ளல் பெருமான் சொல்ல வில்லையா?



குருவை வணங்கக் கூசி நின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!


வள்ளல் பெருமான் குரு பற்றி
கூறிய உரை நடை குறிப்பு

ஞாயிறு, 9 நவம்பர், 2014

காவி உடை

காவிமலைக்கண்  வதியேனோ  கண்ணுள்  மணியை  துதியேனோ                                                                                                                                                               -    திருவருட்பா 278

    கண்மணியில்  நினைவை  செலுத்தச்  செலுத்த  கண்களில்
ரத்த  ஓட்டம்  மிகுந்து  காவிக்  கண்ணாகும் . சந்நியாசியானவன்  காவி  கட்ட  வேண்டும்  என  சொல்வது  இதைதான் . காவி உடைகள்  தரித்தவனெல்லாம்  சந்நியாசி  அல்ல . இப்படிப்பட்ட காவி ஏறிய  கண்ணிலேயே  வசிக்க  வேண்டும் . மனம்  தங்க  வேண்டும் கண்மணியின்  ஒளியை  இறைவனை  துதிக்க  வேண்டும்  என வள்ளலார்  கூறுகிறார் .

-ஞான  சற்குரு  சிவசெல்வராஜ்

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்

"எல்லோரும்  எல்லாமும்  பெற  வேண்டும்  இங்கு
இல்லாமை  இல்லாத  நிலை  வேண்டும் ".


        ஆண்டவனிடம்  வேண்டும்போது  எல்லோரும்  இன்புற்றிருக்க
பிரார்த்தனை  பண்ண  வேண்டும் ." எல்லோரும் "இன்புற்றிருகும்போது
எல்லோரும்  என்பதில் நாமும்  அடக்கம் . அதனால்தான்  முன்னோர்கள்
எதிலும்  பொது  நோக்கு  வேண்டும்  என்றனர் . நாடு வாழ  நாமும்
வாழுவோம் . சற்குருவை  நம்புங்கள்  கடவுளை  வழிபடுங்கள்  சற்குரு
சுட்டிக்காட்டிய  பாதையில்  செல்லுங்கள்  இறைவனை  அடையலாம் .
மரணமிலா  பெருவாழ்வு வாழலாம் .


ஞான  சற்குரு  சிவசெல்வராஜ்

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

உலகில் முதல் மெய்ஞ்ஞான இணையத்தளம்!!

உலகில் முதல் மெய்ஞ்ஞான இணையத்தளம்

இரகசியம் இரகசியம் என மறைக்கப்பட்ட ஞானம் இங்கே பரசியம். 

யாவரும் அறியலாம் !

இந்தியாவில் நிலவும் சனாதன தர்மம்!
வள்ளலார் உரைத்த சன்மார்க்கம்!
சித்தர்கள் ஞானிகள் கூறிய ஞானம்!
உலகர் யாவர்க்கும் பொதுவான நெறி!
ஜாதி மத இன பேதமற்ற தர்மவழி !
உன்னை அறிய! உணர ! ஒரு பாதை!
இறைவன் எங்க? அறியலாம்! வாங்க!
சுருதி வாக்கியம் அறிய வாருங்கள்!
யுக்தினால் பரிபாசை விளங்க வருக!
அனுபவம் பெற அனைவரும் வரலாம்!
ஞானம் மட்டுமே இங்கு உபதேசம் !
ஞானம் மட்டுமே இங்கு தீட்சை !
இறைவன் உரைத்த ஞானம் "சும்ம இரு"!
உன்னுள் உன்னைக் கான "சும்ம இரு"!
உன்னைக்கண்டு இறைவனை காண வழி !
ஆன்ம பசியுள்ளவரே வருக!
தனித்திருக்க விரும்புவோரே வருக!
விழிப்புணர்வு பெற விரைந்து வருக!

www.vallalyaar.com
தங்க ஜோதி ஞான சபை

வெள்ளி, 24 அக்டோபர், 2014

மனதை நிறுத்தும் இடம் அது புறப்படும் இடமே!


இறைவனை உணரவும் நொந்து வாழாமல் வாழ்வாங்கு வாழவும் ஓர் வழி-உபாயம்  உள்ளது!

அது நம் மனம் அடங்கும் இடத்தில் தவம் செய்வது ஆகும்! அதாவது நம் கண்மணி வாசலில் உள்ள சவ்வே நம் வினை நம் வினைத் தொகுதியான விதி! அதிலிருந்து செயல்படுவதே மனம்!

கண்மணி வாசலில் இருந்து விதியாகிய சவ்விலிருந்து புறப்படும் மனதை வெளியே வர விடாது அதை அதிலேயே நிறுத்துவது தான் சாதனை!  தவமாகும்! மனதை நிறுத்தும் இடம் அது புறப்படும் இடமே! அங்கு மட்டுமே மனம் அடங்கும்! நாம் நம் மனதை அங்கு மட்டுமே நிறுத்த முடியும்!  இப்படி செய்து சும்மா இருப்பதுவே ஞான சாதனை! பரம ரகசியம்!

இது தெரிந்த அறிந்த உபதேசிக்கும் குருமார்களை வணங்கிடவும் தெரியவில்லையே!

எந்தை இறைவன் இருக்கும் மணிமன்றம் கண்மணி உள் போக தெரியவில்லையே! ஞான சற்குரு மூலம் தீட்சை பெற்று தவம் செய்தால் உட்புகலாம்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ் - திருவருட் பாமாலை (106)

புதன், 8 அக்டோபர், 2014

சூட்சும சரீரத்தை அறிய ?

"உள்ளதும் பிறப்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ள வாசலைப் திறந்து காணவேண்டும் மாந்தரே"

உள்ளது சூட்சும சரீரம்! பிறப்பது ஸ்தூல சரீரம்! ஸ்தூல சரீரத்தைக் கொண்டு தான் சூட்சும சரீரத்தை அறிய வேண்டும்!

இதன் மூலமே, சூட்சும சரீரத்தை அறிய உணர மறைக்கப்பட்ட கள்ள வாசலை கண்மணி நடுவே உள்ள ஊசிமுனை வாசலை திறக்க வேண்டும்! உள்புக வேண்டும்! கண்மணி ஒளியே குண்டலினி சக்தியாம்! இதுவே ஒப்பற்ற ஞான ரகசியமாம்! உரைத்தேன் யானே!!

இருகண்மணி ஒளி - சூரிய ஒளி சந்திர ஜோதி உள்ளே இணையும் போது, உள்ளே தான் ஒன்று சேரும்!? நாதத்தொளி கேட்கும்! ஒளிக்காட்சியின் போது தான் ஒலியும் கேட்க முடியும்! ஒளியும் ஒலியும் தானே சிவமும் சக்தியும்! அதுதானே மெய்ஞானம்! விஞ்ஞானமும் இதைத்தானே பகர்கிறது?!

நம் கண்ணிலே பார்வை சக்தி! கண்ணால் தான் புறப்போருளை பார்க்கிறோம்!
பார்வை சக்தியால் தான் என்றைக்கு புறப்பார்வை அகத்தே பார்க்க திரும்புகிறதோ அதுதான் ஞானசாதனையின் ஆரம்பம்!

நம் கண்ணிலே இருந்து நம்மை பார்க்கச்செய்பவளும் அவளே! புறத்தே பார்த்து வாழவும் அகத்தே பார்த்து மீளவும் அவளே வழிகாட்டுகிறாள்! விழியிலே அமர்ந்தவள்! வாலை! “அவளருளாலே அவள்தாள் வணங்கி!” அவள் அவன் அது எல்லாம் ஒன்றே!!

அம்பிகையே வாலையே சக்தி சொருபம்! நாதஸ்சொருபம்! சிவசக்தி சொருபம்! மூலாதாரத்தில் அக்னி! மேல் மூலமான நம் இருகண் உள்சேரும் இடம் வாலையே, நமக்கு மூல ஆதாரம்! நாம் பிறக்க, வளர, வாழ ஆதாரம்!

நம் இருதயமான இரு உதயமான சூரிய சந்திரனான இரு கண் ஒளியே சூரிய ஒளி! இம்மூன்றும் சேர்ந்து உள்ளே சகஸ்ர தளத்தில் இருக்குல் சந்திர ஒளியை அடையும் போதே அமுதம் கிட்டும்! சொட்டும்! பருகுங்கள்!

நாம் உண்ட உணவின் சாரத்தை சங்கினி என்கிற நாடி உச்சித்துவாரம் வரை எடுத்துச் சென்று சிரசில் அமிர்தத்தை பெருக்குகிறது! தவம் செய்பவர்கே அது கீழே பாய்ந்து பருகிடலாம்!மூன்று மண்டலம் தாண்டிபோனால் கிட்டும்!

நம் உடலையே ஸ்ரீ சக்கரமாக தந்திர சாஸ்திரம் சொல்கிறது. மந்திர சாஸ்திரம் படித்து மனதை ஒருமைப்படுத்தலாம்! ஒழுக்க சீலனாகலாம்!

“மந்திரம் கால் மதி முக்கால்”! மந்திரம் – கால், காலேன்றால் திருவடி நம் கண்களே! மந்திரமான கண்மணி ஒளியைப் பற்றி சும்மா இருந்தாலே, மதி முதலான முக்கால் – மூன்று கால் இணைந்தாலே முக்தி! மூன்று கால் மதி – ரவி, அக்னி என மூன்று கால்! மதியூகமாக செயல்பட வேணும்! புத்தியுள்ள பில்லா பிழைக்கும்! சாகமாட்டன்! மோட்சம் பெறுவான்!

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

ஞான கனல் எழுப்பும் பயிற்சி

நம் உயிர் ஒளி வலது கண்ணில் சூரிய ஒளியாகவும் , இடது  கண்ணில் சந்திர ஒளியாகவும் துலங்குகிறது.

இந்த இரு கண் ஒளியையும் வினைகள் முடியுள்ளன. இந்த கண்களில் உள்ள சூரிய , சந்திர ஒளிகளை மறைத்துள்ள வினை திரையை நீக்குவதே தீட்சை. 

இதன் பின் தான் நம் உயிர் ஒளியை நாம் நம் கண்களில் பற்ற முடியும்.  இந்த உயிர் ஒளியை நாம் பற்ற ஒளி உணர்வினை (ஜோதி உணர்வினை) குரு தன் உயிர் ஒளியினை கொண்டு தருவார். இந்த ஜோதி உணர்வினை கண்களில் பெறுவதே தீட்சை.

இந்த உணர்வினை நாம் பெருக்க,பெருக்க நம் உயிர் ஒளி பெருகி (ஞான கனல்) நம் வினை திரைகளை நீக்கும்.

ஞான சரியையில் வள்ளல் பெருமான் (நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து) என்று கூறியுள்ளது இதையே. இதுவே கனல் எழுப்பும் பயிற்சி.
இறைவன் திருவடியான நம் கண் ஒளியை பற்றி இருப்பதே “சும்மா இரு” என்பதன் அர்த்தம்.  இதுவே தவம்.





புதன், 17 செப்டம்பர், 2014

வள்ளல் பெருமான் உங்களுள் பிரவேசிக்க

வள்ளல் பெருமானே உலக மக்களை ஆட்கொள்ளும் கருணை வள்ளல்!
"இப்போது யாம் இங்கிருக்கிறோம் இனி எல்லோர் உள்ளத்திலும் கலந்து கொள்வோம்" என மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் திருக்காப்பிட்டு கொள்ளுமுன்  கூறியருளினார்! இதன் அர்த்தம் என்ன? யார் தீட்சை பெறுகிறாரோ ஞான சற்குருவிடம் வருகிறாரோ, அவர் கண் வழி , தீட்சையின் மூலம் உள் பிரவேசிக்கிறார்! தீட்சை பெறுவர் அக்கணம் முதல் வள்ளலாரின் பிள்ளையாகிறார்! அக்கணமே தீட்சை பெற்றவரின் மறுபிறப்பாகும்! அவனே துவிஜன் !  இரு பிறப்பாளன்!
மறுபடியும் பிறந்தவனாகிறான்! அக்கணம் முதல் வள்ளலார் அந்த சீடரின்
கூடவே துணையாக இருந்து காத்தருள்வார்! ஞானம் பெற வழி காட்டுவார்!
கர்மங்களை தீர்த்து ஞானியாக்கியருள்வார்! வள்ளல் பெருமான் உங்களுள்
பிரவேசிக்க நீங்கள் இப்போது இருக்கும் ஒரு ஞான குருவை சந்தித்து
சரணடைக!

குருவருளின்றி திருவருள்கிட்டது! குருவின் சொல்லே வேதம்! குருவை பணிவதே குருவின் மகத்துவம் பேசுவதே குருவை நினைப்பதே குருவுக்கு
தொண்டு செய்வதே குருவே கதி என இருப்பதே ஞானம் பெற எளிய வழியாகும்.

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

திங்கள், 15 செப்டம்பர், 2014

சும்மா இருக்கும் சுகம்


சும்மா இருக்கத்தான் ஒவ்வொருவரும் படாத பாடு படுகிறார்கள்!
மந்திரம் ஓதுகிறான்! யாகம் வளர்க்கிறான்! யோகம் செய்கிறான்!
இவையெல்லாம் அற்ப பலன்களையே தரும்! ஞான சாதனையான
சும்மா இருக்கும் கலையை சற்குரு மூலமாக திருவடி தீட்சை
பெற்று உணர்ந்து தவம் செய்பவனே இறைவனை அடைவான்!
பேரின்பம் பெறுவான்!

பீரப்பா நமக்குத்தரும் நல் உபதேசம் 'சும்மா இரு" என்பதே!

ஆறாயிரம் அருட்பாக்களை பாடிஅருளிய திருவருட் பிரகாச
வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் முதல்  பாடல் என்ன தெரியுமா?

இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது
மற்றொண்டு வருமோ அறியேன் எங்கோவே
துன்றுமல வெம்மாயையற்று வெளிக்குள் வெளி
கடந்து சும்மா இருக்கும் சுகம்

சுகம் எது தெரியுமா? சும்மா இருப்பதே!
ஞானம் எது தெரியுமா? சும்மா இருப்பதே!
கடவுளை காணவேண்டுமா சும்மா இரு!

தாயுமான சாமிகள் இரவுபகலாக விடாது கண்ணின் மணியில்
ஒளியை-இறைவனை கண்டு தொழும் தவ சீலர்களே
நாம் கும்பிடும் கடவுள் என சாதனை செய்பவர்களையே மிக மிக
உயர்வாக கூறுகிறார். இந்த உண்மை ஞானத்தை பல கோடியில்
ஒருவரே உணர்கிறார். அப்படிபட்டவரே நாம் கும்பிடும் கடவுள்
என்றால் அது மிகை இல்லை.

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

திங்கள், 1 செப்டம்பர், 2014

கண் மருத்துவருக்கு தெரியுமா திருவடி தவம்?

ஞான சாதனை!- தவம்!- சும்மா இருக்கவேண்டும்! கண்மணி ஒளியை குருவிடம் தீட்சை பெற்று உணர்ந்து தவம் செய்யச்செய்ய ஒளிபெருகி சூட்சுமம் நிலையிலிருக்கும் வினையாகிய திரை உருகி கரைந்து விடும்! 

வினை தீரத்தீர  ஒளி மிஞ்சும்! மிஞ்சுகின்ற ஒளி உடல் முழுவதும் பரவும்! ஊன  உடலே ஒளி உடல் ஆகும்! பிறவி கிடையாது! வினை இல்லையெனில் பிறவி இல்லை!

-ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா .

1 . வினை திரை என்பது - ஜவ்வு. 
     ஆது சூக்கும வடிவில் உள்ளது. 
     தூல(Physical) வடிவு அல்ல. 













இதை தவத்தின் மூலமே கரைக்க முடியும். எந்த டாக்டராலும் சரி பண்ண முடியாது.



மருத்துவருக்கு தூல வடிவை அறியும் அறிவு/கருவி  உள்ளது.
சூக்கும நிலையில் உள்ள உயிர் பற்றியும் அத்துடன் இருக்கும் வினை பற்றி அறியும் அறிவு/கருவி  இல்லை. இதை தவம் செய்து கர்ம வினையை
அழித்து உயிர் அனுபவம் பெற்ற ஞானிகள் அறிவர். இதை கண் மருத்துவர் கொண்ட கருவி மூலம் அறிய முடியாது.




அய்யாவின் அனைத்து  புத்தகத்தை ஊன்றி படித்தால் புரியும்.

 www.vallalyaar.com
 

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

புறப்பார்வை - அகப்பார்வை

முத்துக் கண்ணை  முறுக்கித்  திருத்தியே
யகத்துக்  கண்ணை  யறுத்துப்பிளந்தபின்
வகுத்த  சோதி  மணிவிளக்  கென்னுளே
தொகுத்துப்  பார்க்கச்  சுகம்பெற்றாய்  நெஞ்சமே
~ஞான மணிமாலை , தக்கலை பீர்முஹம்மது


       நம்  கண்களை  முருக்கித்  திருத்தி  என்றால்  முன்னால்
பார்ப்பதை  விட்டு  திரும்பி  உள்ளே  பார்ப்பதாகும் ! அகத்து  
கண்ணை  அறுத்து  பிளந்து  என்பது  நம்  கண்மணி  மத்தியிலுள்ள
ஊசிமுனை  துவாரம்  அடைபட்டிருக்கிறதை  அறுத்து  பிளந்து -
அடைத்துக்  கொண்டிருக்கும்  படலம்  அறுபட்டு  நீங்குவது
என்பதாகும் ! அதன்பின்  தோன்றும்  ஜோதியை  பார்க்கப்
பார்க்க , மூன்று  ஜோதியையும்  ஒன்றாக்கி  தொகுத்துப்  பார்த்தால்
சுகம்  பெறலாம்  என்பதாகும் .

      நம்  கண்  புறப்பார்வையை  விடுத்து  அகப்பார்வை  மூலம் 
முச்சுடரையும்  ஒன்றாக்க  சாதனை  செய்தால்  பேரானந்தம்  கிட்டும் .

பணிவே ஒருவனை இறைவனிடம் சேர்ப்பிக்கும்

"பக்தியாய் விழிக ளிரண்டும் பரமதி லொடுங்கினாக்கால
~ ஞானப்பால், தக்கலை பீர்முஹம்மது

நம் இருவிழிகள் பரமாகிய அக்னியுடன் உள் உள்ள மூன்றாவது கலையுடன் ஒடுங்க வேண்டும் . அதற்கும் பக்தி வேண்டும் . அன்பு வேண்டும் . இதைத்தான் வள்ளல் பெருமான் நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழுங்கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே என்று வனைந்து வனைந்து ஏத்துதும் என்கிறார். சாதனை செய்ய வேண்டும். பக்தியோடு செய்ய வேண்டும்.அப்போது தான், அன்பும் கருணையும் நம்மில் உருவானால்தான் அன்பே உருவான இறைவன் அருள் தருவான்! பக்தியே ஒருவனை பணிய வைக்கும்! பணிவே ஒருவனை இறைவனிடம் சேர்ப்பிக்கும்! பக்தியோடு தவம் செய்ய வேண்டும்.!

ஞானமணி மாலை தக்கலை பீர்முஹம்மது

"நாலினை  யிரண்டொன்  'றாக்கி  நடுவினிலருளை  நோக்கி
நூலினை  படித்தோர்  தங்கள்  நொடியினைக்  கேட்பாயாகில்
மேல்வினை  வாரா  மீண்டு மெய்வினை  தொலைந்தேபோகுங்
காலனும்  வாரான்  வந்தாற்  கடிந்துயிர்  பிடிக்க மாட்டான் "
  

பீரப்பா  பாடல்கள்  அத்தனையும்  ஞான  அனுபவ  நிலையை  பகர்வதாகும் .
சாதாரணமாக  பொருள்  கொள்பவர்கள்  அறிய  முடியாது . மெய்ப்பொருள்
உபதேசம்  பெற்றவரே  அறிய  முடியும் . நாலினை  இரண்டொன்றாக்கி  -
சந்திர  கலையின் எஞ்சிய  4 கலைகளை  இரு  கண்மூலம் தவம் செய்யும்போது  ஒன்றாக்கி  உள்ளே  அக்னி  கலையில் சேர்க்கும்  தந்திரமே !

   நடுவினில்  அருளை நோக்கி  ​- நம்  சிரசு  நடுவில்  உள்ளே  நோக்கி
நூலினை  படித்தோர்  - ஞான நூற்களைப்  படித்து குருவை  யடைந்து
உபதேசம்  பெற்றவர்கள் . தங்கள்  நொடியினை  கேட்பாயாகில்  மேல்வினை
வாரா  - தவம்  செய்பவர்களுக்கு  துன்பம்  தருவதான  முன்  வினைகள்  -
பிராப்த  கர்மம்  வராது  தொலைந்து  போகும் . இப்  பிறப்பெடுத்த  பின்
வரும்  ஆகாமிய  கர்மம்  தவம்  செய்பவர்களுக்கு  வரவே  வராது .

    காலனும்  வாரான்  வந்தாற்  கடிந்துயிர்  பிடிக்கான்

    "தவம்  செய்வார்க்கு  அவம்  ஒருநாளு  மில்லை " ஔவையார்  கூற்று .
தவம்  செய்பவரை  எமன்  அணுக முடியாது ! உயிர்  பிரியாது ! மரணம்
கிடையாது ! பேரின்ப  பெருவாழ்வே .

ஞான  சற்குரு  சிவசெல்வராஜ்

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

குருடர்கள் ஞானம் பெற முடியுமா?


நம் உயிரை பற்றி உள்ள வினைதிரைகள் நம் கண்மணி மத்தியில் உள்ள ஊசி முனை அளவு உள்ள துவாரத்தில் துலங்கும் ஒளியை (இறைவன் திருவடி) மறைத்து கொண்டு உள்ளது. இவ்வினைதிரை பார்வை சக்தி உள்ளவர்களுக்கு கண்ணாடி போல் அமைந்து உள்ளதால் கண் ஒளியை கொண்டு பார்க்க முடிகிறது.

இதில் மிக பெரிய பாவம் குருடராக பிறப்பது. இவர்களுக்கு வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளத்தால் கண் ஒளியை கொண்டு பார்க்க முடிவதில்லை. எதை விட பெரிய துரதிஷ்டம் திருவடியான கண்ணை அல்லது கண் ஒளியை பற்றி தவம் செய்ய முடியாமல் போவதே.

ஆனாலும் இறைவன் கருணை வடிவானவர். குருடர்கள் நேரடியாக தம் ஆன்ம ஸ்தானத்தை நினைத்து , அதில் குரு தீட்சையின் முலம் உணர்வு பெற்று தவம் செய்ய வேண்டும். 


இவ்வாறு தவம் செய்வது கடினமே என்றாலும் விடா முயற்சியின் மூலமும், வைராக்கியதுடனும் சாதனை செய்தால் வினை திரை அகன்று ஞானம் பெறலாம்.

எங்கள் ஞான சற்குரு நாதர் திரு.சிவசெல்வராஜ் அய்யா 2 கண் இல்லா அன்பர்களுக்கு தீட்சை தந்து உள்ளார்.

பேரெழுத்தில் ஈசன் வந்து பேசுவான்

பேர்எழுத்தி லீசன் வந்து பேசுவது மெய்யே
- ஞான கடல் தக்கலை பீர் முகமது.


'ய' என்பது திரிசூலம் போன்றே மூன்று முனையுள்ளது.
அது மடித்த நிலை - மூன்று முனைகளும் சேர்த்தால் என்பதாகும்.

சூலாயுதமாக இருந்து வேலாயுதமாக மாறிவிடும். ஞான வேல்
என்பது தான் வழக்கு! சூலயுதமாக மூன்று கூறாக இருந்த
சூரிய சந்திர அக்னி உள்ளே ஒன்று சேர்ந்தால் ஒரே கூறாகிவிடுமல்லவா?
மூன்று ஒளி சேர்ந்தால் அதனுடைய சக்தி அளப்பரிய தல்லவா?
மூன்றும் ஒன்றானபோது ஞானம் பிறக்குது! அறிவுக்கூர்மை உண்டாகும்!


முச்சுடரும் ஒன்றாய் சேர்வதே 36 தத்துவம் வென்ற நிலை!
சூரியன் 12
சந்திரன் 16
அக்னி 8

ஆக 36, இது தான் முதல் தத்துவ நிக்கிரகம்! தத்துவ வெற்றி!
 பேரெழுத்து - நம் பெயர் எழுத்து என்ன? நாம் ஆத்மா தானே!
ஒளிதானே ! ஒளியை - தீயை குறிக்கும் எழுத்து 'சி' அல்லவா?
நமசிவாய பஞ்சாட்சரத்தில் நெருப்பு 'சி ' தானே ! 

பேரெழுத்தில் ஈசன் வந்து பேசுவான் முச்சுடரும் ஒன்றாக
ஆத்ம நிலையில் நம் முன் ஈசனான இறைவனான பேரொளி
தோன்றும் என்பதே இதன் பொருள்! நம் முச்சுடரை ஒன்றாக்கினால்
நமக்கு முன் பேரொளி - இறைவன் காட்சி கிட்டும்! எவ்வளவு
பெரிய ஞானத்தை - பரிபாசையாக - நயமாக - சிந்திக்கும்படி
சொல்லியிருக்கிறார் பீராப்பா! நம் இரு கண் ஒளி உள்ளே
சென்று அக்னிகலையுடன் சேர்ந்தால் நம் முன் பெருஞ்சோதி
காணலாம்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்.  ஞானக்கடல் பீர்முஹம்மது

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

கண்டம் என்பது பரிபாசை!

ஐந்திருக்குது அதிலொன்று என் கண்ணில் நிற்குது காணாத நேரமென் கருத்தில் நிற்குது ... - தக்கலை பீர் மொகமது ஐந்து இருக்குது அதில் ஒன்று என் கண்ணில் நிற்குது என்கிறார் பீரப்பா. இதையே வள்ளல் பெருமான் நமது உடலில் ஜீவஸ்தானம் 5 உண்டு. அதில் முக்கியமானது 2. அது யாதெனில் 1 கண்டம் 2 சிரம். கண்டம் என்பது பரிபாசை! கண்ணை தான் கண்டம் என்கிறார்கள் சித்தர்கள்! பீரப்பா சொன்ன 5 ல் 1 ஆன ஜீவன் - ஒளி கண்ணில் உள்ளதையே, வள்ளலாரும் கண்டமாகிய கண்களில் உள்ளது என்றே கூறுகிறார். நாம் தவம் செய்யும் போது கண்ணில் காணும் ஒளியானது மற்ற நேரங்களில் நம் கருத்தில் எண்ணத்தில் நின்றொளிரும்.

திருவருட்பிரகாச வள்ளலாரின் திருநெறிகள்











1. கடவுள் ஒருவரே. அவர் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் என்க.

2. எல்லா உயிர்களும் நமக்குச் சகோதரர்களே என்று உணர்க.

3. சாதி , சமய , மத , இன வேறுபாடுகளை காணற்க.
 

4. சிறு தெய்வ வழிபாட்டினையும், பலியிடுவதினையும் விளக்குக.
 

5.புலால் உண்ணற்க. எவ்வுயிரையும் கொலை செய்யற்க. பஞ்ச மா பாதகங்கள் ஆனா (களவு, கொலை, காமம், பொய், கள் உண்ணுதல்) ஆகியவை முற்றிலும் கைவிடுக.
 

6. காமத்தில் இருந்து மீள உன் மனைவியினை தவிர எல்லா பெண்களையும் தாயாக , சாகோதரியாக பார். அகில லோக நாயகியான பராசக்தி அன்னையின் அம்சங்களாக பெண்களை பார்த்தல் தான் காமத்தில் இருந்து விடுபட முடியும்.
 

7. பசித்தவர்களின் பசியினை போக்குதலே உண்மை வழிபாடாக கொள்க.
 

8. தகுந்த ஞான ஆசிரியரின் மூலம் உங்கள் நடுக்கண்ணை திறக்க பெறுங்கள். (திருவடி தீக்ஷை என்பது இதுவே).
 

9. இறக்காமல் வாழ்வாங்கு வாழ ஞான தவம் செய்க.
 

10. பக்தி யோடும் , பண்போடும் வாழ்க.
 

11. கடவுளை பற்றி இரகசியம் எதுவும் இன்றி எல்லோரும் அறிய கூறுக.
 

12. இந்திரிய , கரண, ஜீவ , ஆன்ம , நித்திய , ஜீவகாருண்ய ஒழுக்கங்களை கடை பிடிக்க.
 

13. உண்மை அன்பால் கடவுளை வழிபாடு செய்து கடவுள் ஒளியை நமக்குள் காண்க. புறத்தே வீட்டிலும் விளக்கு ஏற்றி வழிபடுக.
 

14. உயிர் குலமே கடவுள் விளங்கும் ஆலயமாக கருதி உயிர்கட்கு இரங்கி இதம் புரிக. இரகசியம் என எதையும் மறைகாதீர்.
 

15. வேஷம் போடாதே. ஆன்ம நேய ஒருமைப்பாடு உலகில் விளங்க உண்மையாக உழை.
 

16. மரணமில்லா பெருவாழ்வு எல்லோரும் பெற ஞான தானம் செய்.

Popular Posts