வெள்ளி, 19 அக்டோபர், 2018

கணபதி தாசர் - நெஞ்சறி விளக்கம்

தந்தை தாய் நிசமுமல்ல
சனங்களும் நிசமுமல்ல
மைந்தரும் நிசமுமல்ல
மனைவியும் நிசமுமல்ல
இந்த மெய் நிசமுலல்ல
இல்லறமும் நிசமுலல்ல
சுந்தர நாகை நாதர்
துணையடி நிசமுமென்பர் நெஞ்சே


எட்டுடன் இரண்டு மாகி இருந்ததோர் எழுத்தை காணார்
விட்டதோர் குறியுங் காணார் விதியின்றன் விவரங் காணார்
தொட்டதோர் குறியுங் காணார்
சோதி மெய்ப்பொருளும் காணார்
கிட்டுமா நாகை நாதர் கிருபை தானுரைப்பாய் நெஞ்சே!!!

உடலினை நிசமென் றெண்ணி உலகெலாம் ஓடியாடி
கடல் மரக் கலப்பாய் கம்பக் காகம் போல் கலக்கமுற்றாய்
திடமருள் குருவின் பாதஞ் சிக்கென பிடித்து நின்றால்
நடமிடு நாகை நாதர் நற்பதம் பணிவாய் நெஞ்சே


தண்ணீரில் இருக்கும் மீன்கள் தண்ணீரிற் கருவைப் பித்திக்
கண்ணினாற் பார்க்கும் போது கயலுரு வானற் போல
நண்ணிய குருவை கண்டு நாதனால் உருவை சேர்த்து
விண்ணின் மேல் நாகை நாதர் மெல்லடி வெளிப்பர் நெஞ்சே

சூரிய காந்தம் பஞ்சைக் சுட்டிடுஞ் சுடரே போலக்
கூறிய அடிமூலத்தின் குண்டலிக் கனலை மூட்டி


கணபதி தாசர் - நெஞ்சறி விளக்கம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts