அகத்தியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகத்தியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 3 ஜனவரி, 2026

அகத்தியர் மெய்ஞான சூத்திரம் - திருவடி



அகத்தியர் மெய்ஞான சூத்திரம்

"கண்ணில் நின்ற ஒளிபாரு வெளியைப் பாரு
காலடங்கி யாடுகின்ற கருவைப்பாரு
விண்ணில் நின்று பொருள்சொன்ன குருவைப் போற்று "

வெளிப்படையாகவே கூறிவிட்டார் அகத்தியர் ! கண்ணில் நின்ற ஒளிபாரு! இதுவே ஞான தவம்! 

கண் ஒளியை பார்த்து பார்த்து உணர்ந்து உணர்ந்து 
கண்மணி நடுவே ஊசி முனை வாசல் வழி உட்புகுந்து உள்ளே வெட்ட வெளியைப்பாரு! 
நீ உள்முகமாய் உணர்வோடு சும்மா இருக்கும் போது வெளியே கண் இரண்டும் அடங்கிப் போகும் ! 

இரு கண்ணும் உள்ளே உள்ள உன் கருவாம் - உன் உயிரைப் பார்த்து அதோடு லயிக்கும் ! 
இதை விண்ணில் நின்று , எல்லாமே வெட்டவெளி தான் என உணர்ந்து அங்கிருந்து 
உபதேசம் தீட்சை செய்த குருவை போற்று! 

உன் ஞான சற்குருவை எப்போதும் போற்றி பணிந்து தொண்டு செய் ! 

"குருவினடி பணிந்து கூடுவதல்லாங்கு அருவமாய் நிற்கும் சிவம் " என்கிறது ஒளவைக் குறள்! 

குரு நமக்கு அவர் உயிரை கொடுத்தல்லவா நம் உயிரை நமக்கு உணர்த்துகிறார்?! 
நமக்கு இரண்டாவது பிறப்பு தரும் குருவை வணங்காமல் இருப்பது கொடும் பாவமல்லவா? 
குருவைப் பணி! குரு பார்க்க கோடி வினை தீரும்!

நம் மனம் ஒருங்கினால் நாதவிந்து சொரூபம் காணலாம்! 
பஞ்சபூதங்களாலான நம் இரு கண் தான் 
நம் மனம் உதிக்கும் இடம் ஒடுக்கும் இடம்! 

சாதாரண மனிதருக்கு கண் பார்த்து மனம் எண்ணம் உதயத்தால் கர்மவினை நடக்கும் ! 
ஆத்ம சாதகன் எங்கே உதயமாகிறதோ? அங்கேயே கண்ணில் - பார்ப்பதால் உருவாகும் மனதை அதே கண் ஒளியில் வைப்பதால் நினைப்பதால் ஒடுக்கி விடலாம்! மனம் அடங்கும் ஒரே இடம் நம் கண்ணே ! 

" மனமடங்கும் ஓர் இடந்தனில் இருந்தும் அறியேன்" என்றார் ஒரு ஞானி! 

நம் கண்ணில் தான் ஜீவ ஒளி - பரமாத்மாவின் அம்சமான பேரொளி நிறு ஒளியாக துலங்குகிறது. இறைவன் இருக்கும் துலங்கும் இறைவன் திருவடிகளில் நம் மனதை வைத்தால் மட்டுமே இறைவன் திருவடியில் மட்டும் நம் மனம் அடங்கும் ஒருங்கும் !? வேறு எங்கும் யாராலும் அடக்கவோ ஒடுக்கவோ முடியவே முடியாது!!

அக்கினி ஆதித்தன் சந்திரன் கலந்து ஒன்றாய் நின்றதுவே பூரணமாம்! அதுவே வாலையாம்! இதை அறிபவனே புண்ணியவானாம்! இதை சொல்பவனே ஞானசற்குருவாம்! நம் சிரசே ஆயிரத்தெட்டிதழ் தாமரையாம்! அதிலிருந்து உள் பாய்வதே அமுதமாம்! அமுதம் உண்டவன் சாகமாட்டான்! அவனே சிவயோகி ! ஞானி ! சீவனை சிவனாக்கிய சித்தன்!


- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
நூல் - ஞானம் பெற விழி
பக்கம் - 140
குருவே சரணம்

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

அகத்தியர் - அடுக்கு நிலை போதம்

சொல் பிறந்த இடம் எங்கே?
முப்பாழ் எங்கே?
துவார பாலகர் எங்கே?
நல்ல சங்கு நதி எங்கே?
வைகுண்டம் எங்கே?
நாரணன் ஆழ் இலை மேல் படுத்தது எங்கே?
அல்லல்படும் ஐம்பூத ஒடுக்கம் எங்கே?
ஆறுஐந்து இதழ் இரண்டும் முளைத்தது எங்கே?
சொல்ல வல்லார் உண்டானால் அவரை
நாமும் தொழுது வணங்கி குருவென பணிந்து
வழங்கல் ஆமே


உந்தி எனும் நிலை எங்கே?
அறுகோணம் எங்கே?
ஓங்கார நிலை எங்கே?
உற்ற இடம் எங்கே?
மந்திரமும் சாத்திரமும் பிறந்தது எங்கே?
மறைநாலும் விரித்த அயன் தாணும் எங்கே?
முந்திவரும் கணபதியும் பிறந்தது எங்கே?
முக்கோண முளை எங்கே? அடிதான் எங்கே?
இந்த வகை பொருள் அறிந்து சொல்வார் தம்மை
இறைவன் என்றே கருதி இயம்பல் ஆமே

பலபதத்தில் பொங்கி வரும் வழிதான் எங்கே?
பரிந்து முறைகொண்டு நின்ற அறியும் எங்கே?
உற்பனம் ஆம் கரு நின்று விளைந்தது எங்கே?
ஒருபாதம் தூக்கி நின்ற அடையாளம் எங்கே?
தற்பரமாய் ஆகிநின்ற நிலைதான் எங்கே?
சர்வஉயிராய் எடுத்த சிவனும் எங்கே?
இப்பொருளை அறிந்து உரைக்கும் பெரியோர் தம்மை
இறைவன் என்றே கருதி இயம்பல் ஆமே

அடி முடியும் நடுவான நிலையும் எங்கே?
அறுசுவையும் கொண்டு ஒளித்த இடமும்  எங்கே?
 வடிவான ஐந்து தலை மாணிக்கம் எங்கே?
வரையான ஊமை எனும் எழுத்தும் எங்கே?
இடம் ஆக ஆடி நின்ற பாதம் எங்கே?
இச்சையுடன் பேசி நின்ற எழுத்தும் எங்கே?
அடைவு ஆகப் பொருள் அறிந்து சொல்வார் தம்மை
அடி தொழுது குரு என நம்பல் ஆமே 


சற்குருவும் சகநிதியும் ஆனது எங்கே?
சாகாத தலை எங்கே?
வேகாக்கால் எங்கே?
முப்பொருளும் ஒரு பொருளாய் நின்றது எங்கே?
முனை எங்கே  தலை எங்கே முகமும் எங்கே?
நன் கலம் ஆயிரத்து எட்டு இதழும் எங்கே?
நாலுகை ஒருபாதம் ஆனது எங்கே?
இப்பொருளை அறிந்து உரைக்கும் பெரியோர் தம்மை
இறைவன் என்று கருதி இயம்பல் ஆமே

அகத்தியர்



சனி, 16 மார்ச், 2013

வாலை தாய் தருவாள் அமுதம்!!.

அறிந்து பார் ஆதாரப் பொருளைப் பற்றி
வெளியான சோதியிலே  மேவி நில்லு
வருந்தியந்த வாலை ரசங்கொண்டு  - அகஸ்தியர் பரிபூரணம் 1200


ஏ , மனிதா அறிந்து பார்! நல்ல சற்குருவை நாடி உபதேசம் கேட்டு
தெளிந்து பார் ! எது எல்லாவற்றுக்கும் ஆதாரமானது என்று?

அந்த மூலபொருள், மெய்ப்பொருள், ஆதாரப்பொருள் நம் கண்மணி ஒளியை பற்றி நின்று நிலைத்து தவம் செய்க!

தொடர்ந்து விடாமல் சதா காலமும் செய்பவன் சீக்கிரம் ஒளியை காண்பான்.! தன்முன் வெளியான தனக்குள் இருந்து தன முன்  தன் முன் தோன்றிய ஒளியை காண்பான்!

கண்டு அதிலேயே லயித்தால் மனம் ஒன்றி வேறு சிந்தனை ஏதுமின்றி இருந்தால் உன்னை நீ காண்பாய் !

ஞானம் பெறுவாய்! உன்னுள் இருக்கும் உத்தமனை காண்பாய்! அப்போது வாலை ரசம் கிட்டும்! வாலை தாய் தருவாள் அமுதம் ! அனுபவம்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ் (ஞானம் பெற விழி )

Popular Posts