செவ்வாய், 27 அக்டோபர், 2015

கர்மத்தால் மறைந்து கிடக்கும் ஆன்ம ஒளி!!


ஸ்ரீ வில்லி செல்வி பாடினாள் திருப்பாவை! ஆவுடையார் கோயில் கண்ட, கொண்ட அருட்செல்வன் பாடினான் திருவெம்பாவை! வைணவமும் சைவமும் அருட்பெரும்ஜோதி ஒன்றே அகில உலகக்கும் ஒரே ஆண்டவன் என அழகாக போற்றுகிறது! ஆண்டாளின் ஆண்டவனும், மாணிக்க வாசகரை ஆட்கொண்ட ஆண்டவனும் ஒன்றே!?  மூளையை செயல்பட வைப்பது எப்படி?

நாம் செய்ய வேண்டியது என்ன?

தூங்கி கிடக்கும் ஆன்மாவை தட்டி எழுப்புவதே ஆத்ம சாதனை! கர்மத்தால்
மறைந்து கிடக்கும் ஆன்ம ஒளியை பிரகாசிக்க செய்வதே ஞான சாதனை.

இறைவன் மீது பக்தி பண்ணு! ஒரு பூவாவது  அவன் திருவடியில்
சமர்பித்து பணி! இறைவன் திருவடியில் சமர்ப்பித்து பணி! இறைவன்
திருவடியாகிய உன் கண்ணில் துலங்கும் இறைவனை பணி! உன்
கண்ணாகிய -கண்மலர் இரண்டில் ஒன்றையாவது இறைவனுக்கு
பக்தியுடன் சமர்ப்பித்து விடு! வருவான் பகவான்!

பாடு,கத்து,கதறு தேவார திருவாகச திவ்ய பிரபந்த திருவருட்பாவை
பாடு! உன்மனம் போல் இறைவனை போற்று புகழு பாடு!உன்னை
நீ உணர உன்னிலே இருக்கும் இறைவனிடம் மன்றாடு! அழு
கதறி அழு! தேம்பி தேம்பி அழு! அழுதால் பெறலாம் அவன் அருளை!
அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்! வாலை அமுதம் தருவாள்!

திங்கள், 26 அக்டோபர், 2015

சன்மார்க்கம் - திருமூலர்

தன்னெறி யாவது சன்மார்க்க  மாமே!  - திருமூலர்



தன் நெறி - நான் யார் என அறியும் நெறி! நான் ஜீவனமா!
பரமாத்மாவின் அம்சம்! நம் தலை நடுவுள் இருகண்ணும்
உள் சேரும் இடத்தில் உள்ளதே நம் உயிர்! இரு கண்மணி
வழி உள் சென்று உயிரை அடைந்தாலே நான் யார் என
அறியலாம்! இதை போதிப்பதே சன்மார்க்கம்!
இதுவரை இந்த உலகத்தில் தோன்றிய அனைவரும்
போதித்தது சன்மார்க்க நெறியே!


ஞான சற்குரு சிவசெல்வராஜ்


சனி, 24 அக்டோபர், 2015

ஆத்மாவே சைவ சமயத் தலைவன்

சைவ சமயத் தனிநாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வ சிவநெறி சன்மார்க்கஞ் சேர்த்துப்ப
வையத் துளார்க்கு வகுத்து வைத்தானே! - திருமூலர்

சைவ சமயத்தின் தனி நாயகன் தனிப்பெரும் தலைவன்
நந்தி! நம் தீ! ஆத்மாவே சைவ சமயத் தலைவன் என்பதை
முதலில் உணரவேண்டும்! அந்த இறைவனே நந்தியாக
வந்தமர்ந்து ஜீவர்களாகிய நாம் உயிவதற்காக குருநெறி
உபதேசித்தார் தட்சிணா மூர்த்தியாக! ஞான உபதேசம்
ஞான தீட்சை  குரு மூலம் பெற்று தெளிவு பெற வேண்டும்!
தவம் செய்ய வேண்டும்! அது என்ன தெரியுமா? எப்படி
தெரியுமா? தெய்வ  சிவ நெறியாவது சன்மார்க்க நெறியே!
எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணுவது அவர்களுக்கு
இரக்கம்  காட்டி நன்நெறிப்படி ஒழுக்கமாக இருப்பதே தவம்
குரு மூலம் கற்று செய்வதே சன்மார்க்கம் ஆகும்! சன்மார்க்க
சாதனையே நம்மை இறைவனிடம் சேர்ப்பிக்கும் என எல்லா
ஞானிகளும் உபதேசித்துள்ளனர்! சைவ சமயமென்றால்
சன்மார்க்க நெறியே! சன்மார்க்க நெறி காட்டுவது நந்தியை
அடையவே! நந்தியை அடைந்தாலே சிவத்தை காண
முடியும்! சிவமே-ஒளியே  அருட்பெருஞ்ஜோதியே இறைவனாம்!

வெள்ளி, 23 அக்டோபர், 2015

மாயையை வெல்ல யாரை பணிவது?

சக்தியென் பாளொரு சாதகப் பெண்பிள்ளை
முக்திக்கு நாயகி என்ப தறிகிலர்
பத்தியை பாழில் உகுத்தஅப் பாவிகள்
கத்திய நாய்போற் கதறுகின் றாரே!


















சக்தி - வாலை-கன்னி ய குமரி - பாலா - அகிலாண்ட
கோடி பிரம்மாண்ட நாயகி - மனோன்மணி தாய் நமது
இடதுகண்ணாக சந்திர கலையாக மணி ஒளியாக
துலங்கும் பெண்பிள்ளை! அவள் நமக்கு சாதகமாகவே
 இருப்பாள்! அம்மா தாயே நீயே கதி உன் பாதம் கதி
என சரணடையுங்கள்! அவள் சகாயத்தால் சற்குருவை
பெற்று தவமுறை அடைந்து வைராக்கியத்துடன்
தவம் செய்து அவளே முக்தியடைய அமுது தருவாள்
முக்திக்கு நாயகி என்பதை அறியலாம் உணரலாம்
அடையலாம்! தாயை அறியாதவர்கள் தாயை பணியாதவர்கள் மாயையிற்சிக்குண்டு பக்தி நெறி அறியாமல் பாழாய் போவர்!
அதுமட்டுமன்றி தான் தான் பெரியவன் என நாய் போல்
கத்துவர் முட்டாள்கள்!  என திருமூலரே கூறுகிறார்!
சக்தியை பணிந்தால் உனக்குள் சக்தி பிறக்கும்! ஞானம் பெறலாம்!

பச்சை புறா??

ஓங்காரி என்பா ளவளொரு  பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை யுடையவள்
ஆங்காரி யாகியே ஐவரை பெற்றிட்டு
ரீங்காரத்துள்ளே யினிதிருந் தாளே

ஓம் பிரணவ மந்திரத்தின் ஒலியாகும் அவள் !
அதனால் தான் அவளை ஓங்காரி என்பார்! அவள் பெண்!
சிவத்தின் சரிபாதி! வாலை! குழந்தை! உலகுக்கே தாய்!
ஆனால் கன்னி! நீங்கத பச்சை நிறத்தையுடையவள்! சிவம்
செம்மை நிறம் உடையது! நாம் தவம் செய்து வரும் போது
பச்சை நிறம் தோன்றும்! இதையே தக்கலை ஞானமா மேதை
பீர்முகமதுவும் பச்சை புறா வந்து மேயும் அதை பாங்குடனே
பிடித்து! என்று பாடி அருள்கிறார்!

திருமூலர் சொல்லும் சிறுமி?

செம்பவளத்திரு மேனி சிறுமியை
நம்பி என் உள்ளே நயந்து வைத்தேன்  - திருமூலர்

சக்தி - வாலை - தாய் செம்பவளத்திரு மேனியுடைய சிறுமி!
பாலா! 6 வயது குழந்தை! உலகுக்கு அவள் தாய்! அவள்
கோயில் கொண்ட ஊரே கன்னி 'ய'  குமரிக்கு வாருங்கள்!
பாருங்கள்! தாயின் திருவடியில் சரண் அடையுங்கள்!
அருள் பெறலாம்! கண்மணி ஒளியில் மனதை நிறுத்தி
சக்தியுடன் வைராக்கியத்துடன் இருந்து தவம் செய்தாலே
ஞானம்  கிட்டும்! திருமூலர் சொல்லும் சிறுமி வாலை
கன்னி 'ய' குமரியிலே.

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

புதன், 21 அக்டோபர், 2015

ஸ்ரீ வித்யை - பாலா



கன்னியாகுமரி பகவதியே பாலா - வாலை! திருக்கடையூர்
அபிராமியும் பாலாவே! அபிராமி பட்டருக்கு அருளியது
வாலையே! மதுரை மீனாட்சி பாலாவே! குமாரகுருபருக்கு
அருளியது வாலையே! விருதாச்சலத்தில் பாலாம்பிகை
தனி சந்நிதியில் அருள்புரிகிறாள்! வைத்தீஸ்வரன் கோவில்
அம்பிகை பெயரும் பாலாம்பிகை!

வைதீக முறைப்படி பாலா மந்திரம் பிரசித்தம். ஸ்ரீ வித்யை
உபாசகர்கள் பாலாவை ஆராதிப்பார்கள் அது பக்தி கர்ம நிலையே!
ஞானம் அதி தீவிரவாதிகளுக்கே கிட்டும். அபிராமி பட்டரை
போல விளங்க வேண்டும்!

நான் யார் என அறியும் ஞான நிலையே எளிது! சித்தர் நிலை!
தாயல்லவா? எல்லோருக்கும் கருணை கிட்டும்! குழந்தை -
பாலா-வாலையல்லவா ஞான விளையாட்டு விளையாடலாம்
வாங்க! விளையாட்டாகவே தவம் செய்யலாம்! சும்மாவே
இருக்கலாம்! குருவை பணிந்து எட்டிரண்டு கூட்டி  பத்து
என்று அறி! அறிவு துலங்கும்! அதுவே ஞானம்! பத்தாமிடமே
'ய'  வே, வாலை இருக்குமிடமாம்! அவள்தான் கன்னி  'ய'  குமரி
பகவதி! உலகுக்கே தாய்! பொங்கி எழுக! பிடிவாதத்துடன்
பற்றற்று இரு! வாலை அருள்வாள்!

வாலையை பணியாத சித்தன் இல்லை (வாலைக் கும்மி)



கொங்கணச் சித்தர் வாலைக் கும்மி
 

காப்பு
விநாயகர் துதி
பின் முடுகு வெண்பா


கல்விநிறை வாலைப்பெண் காதலியென் றோதுகின்றசெல்வியின்மேற் கும்மிதனைக் செப்புதற்கே - நல்விசயநாதனின்சொல் வேதனஞ்சு போதன்மிஞ்சி மானகஞ்சபாதம்வஞ்ச நெஞ்சினில்வைப் போம்.
 


1
கும்மிசத்தி சடாதரி வாலைப்பெண் ணாமந்த
உத்தமிமேற் கும்மிப் பாட்டுரைக்கவித்தைக் குதவிய வொற்றைக்கொம் பாம்வாலை
சித்தி விநாயகன் காப்பாமே.

2
சரசுவதி துதிசித்தர்கள் போற்றிய வாலைப்பெண் ணாமந்த
சக்தியின் மேற்கும்மிப் பாட்டுரைக்கத்தத்தமித் தோமென ஆடும் சரசுவதி
பத்தினி பொற்பதங் காப்பாமே.
3
சிவபெருமான் துதிஎங்கும் நிறைந்தவள் வாலைப்பெண் ணாம்மாலின்
தங்கையின் மேற்கும்மி பாடுதற்குக்கங்கை யணிசிவ சம்புவாம் சற்குரு
பங்கயப் பொற்பாதம் காப்பாமே.
4
சுப்பிரமணியர் துதிஞானப்பெண் ணாமருள் சோதிப்பெண் ணாமாதி
வாலைப்பெண் மேற்கும்மி பாடுதற்குமானைப் பெண்ணாக்கிய வள்ளிக் கிசைந்திடும்
மால்முரு கேசனும் காப்பாமே.
5
விஷ்ணு துதிஆண்டிப்பெண் ணாம்ராச பாண்டிப்பெண் ணாம்வாலை
அம்பிகை மேற்கும்மி பாடுதற்குக்காண்டீபனாம் பணி பூண்டவன் வைகுந்தம்
ஆண்டவன் பொற்பதங் காப்பாமே.
6
நந்தீசர் துதிஅந்தரி சுந்தரி வாலைப்பெண் ணாமந்த
அம்பிகை மேற்கும்மி பாடுதற்குச்சிந்தையில் முந்திநல் விந்தையாய் வந்திடும்
நந்தீசர் பொற்பதங் காப்பாமே.
7
நூல்கும்மி தில்லையில் முல்லையி லெல்லையுளாடிய
வல்லவள் வாலைப்பெண் மீதினிலேசல்லாபக் கும்மித் தமிழ்பா டவரும்
தொல்லைவினை போக்கும் வாலைப்பெண்ணே!
8
மாதா பிதாகூட இல்லாம லேவெளி
மண்ணும் விண்ணுமுண்டு பண்ணவென்றுபேதை பெண் ணாமுதல் வாலைப்பெண் ணாளென்று
புகுந்தா ளிந்தப் புவியடக்கம்.
9
வேதமும் பூதமுண் டானது வும்வெளி
விஞ்ஞான சாத்திர மானதுவும்நாதமுங் கீதமுண் டானதுவும் வழி
நான்சொல்லக் கேளடி வாலைப்பெண்ணே.
10
மூந்தச் செகங்களுண் டானது வும்முதல்
தெய்வமுந் தேவருண் டானதுவும்விந்தையாய் வாலையுண் டானதுவும் ஞான
விளக்கம் பாரடி வாலைப்பெண்ணே.
11
அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் பின்னும்
அரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம்தரிக்கும் முந்தின தஞ்செழுத்தாம் வாசி
பரிக்குள் நின்றது மஞ்செழுத்தாம்.
12
ஆதியி லைந்தெழுத் தாயினாள் வாலைபெண்
ஐந்தெழுத் துமென்று பேரானாள்;நாதியி னூமை யெழுத்தியவள் தானல்ல
ஞான வகையிவள் தானானாள்.
13
ஊமை யெழுத்தே யுடலாச்சு மற்றும்
ஓமென் றெழுத்தே யுயிராச்சுஆமிந் தெழுத்தை யறிந்துகொண்டு விளை
யாடிக் கும்மி யடியுங்கடி.
14
செகம் படைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும்
சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம்உகமு டிந்தது மஞ்செழுத்தாம் பின்னும்
உற்பன மானது மஞ்செழுத்தாம்.
15
சாத்திரம் பார்த்த்தாலுந் தானுமென்ன? வேதம்
தானுமே பார்த்திருந் தாலுமென்ன?சூத்திரம் பார்த்தல்லோ ஆளவேணு மஞ்சு
சொல்லை யறிந்தல்லோ காணவேணும்?
16
காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில்
காரிய மில்லையென் றேநினைத்தால்காணாதுங் காணலா மஞ்செழுத் தாலதில்
காரிய முண்டுதியானஞ் செய்தால்.
17
ஆயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயறி
வாயனு மைந்தா மெழுத்துக்குள்ளேவாயனு மைந்தாம் எழுத்துக்குள் ளேயிந்த
வாலையு மைந்தாம் எழுத்துக்குள்ளே.
18
அஞ்செழுத் தானதும் எட்டெழுத்தாம் பின்னும்
ஐம்பத்தோர் அட்சரந் தானாச்சுநெஞ்செழுத் தாலே நிலையா மலந்த
நிசந்தெ ரியுமோ வாலைப்பெண்ணே!
19
ஏய்க்கு தேய்க்கு ஐந்செழுத் துவதை
எட்டிப் பிடித்துக்கொளிரண் டெழுத்தைநோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி
நிலையைப் பாரடி வாலைப்பெண்ணே?
20
சிதம்பர சக்கரந் தானறிவா ரிந்தச்
சீமையி லுள்ள பெரியோர்கள்சிதம்பர சக்கர மென்றால் அதற்குள்ளே
தெய்வத்தை யல்லோ அறியவேணும்!
21
மனமு மதியு மில்லாவிடில் வழி
மாறுதல் சொல்லியேயென்ன செய்வாள் ?மனமு றுதியும் வைக்கவேணும் பின்னும்
வாலைக் கிருபையுண் டாகவேணும்.
22
இனிவெ ளியினிற் சொல்லா தேயெழில்
தீமட்டு திந்தவரி விழிக்கேகனிமொ ழிச்சியீர் வாருங்கடி கொஞ்சங்
கருவைச் சொல்லுவேன் கேளுங்கடி.
23
ஊத்தைச் சடலமென் றெண்ணாதே இதை
உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதேபார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப்
பார்த்துக்கொள் உன்ற னுடலுக்குள்ளே.
24
உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்
வைத்த விளக்கும் எரியுதடிஅச்சுள்ள விளக்கு வாலையடி அவி
யாம லெரியுது வாலைப்பெண்ணே!
25
எரியு தேஅறு வீட்டினி லேயதில்
எண்ணெயில் லையமிழ் தண்ணீரில்லைதெரியுது போக வழியுமில்லை பாதை
சிக்குது சிக்குது வாலைப்பெண்ணே.
26
சிலம்பொலி யென்னக் கேட்குமடி மெத்த
சிக்குள்ள பாதை துடுக்கமடிவலம்புரி யச்சங்கமூது மடி மேலே
வாசியைப் பாரடி வாலைப்பெண்ணே!
27
வாசிப் பழக்க மறியவே ணும்மற்றும்
மண்டல வீடுகள் கட்டவேணும்நாசி வழிக்கொண்டு யோகமும் வாசியும்
நாட்டத்தைப் பாரடி வாலைப்பெண்ணே!
28
முச்சுடரான விளக்கி னுள்ளே மூல
மண்டல வாசி வழக்கத்திலேஎச்சுடராகி அந்தச் சுடர் வாலைஇவள்விட வேறில்லை வாலைப்பெண்ணே!
29
சூடாமல் வாலை இருக்கிறதும் பரி
சித்த சிவனுக்குள் ளானதனால்வீடாமல் வாசி பழக்கத்தை பாருநாம்
மேல்வீடு காணலாம் வாலைப்பெண்ணே!
30
மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில்
விளக்கில் நின்றவன் வாணியடிதாய்வீடு கண்டவன் ஞானியடி பரி
தாண்டிக் கொண்டான்பட் டாணியடி.
31
அத்தியி லேகரம் பத்தியி லேமனம்
புத்தியி லேநடு மத்தியிலேநெற்றி சதாசிவ மென்றுசொன் னேனுன்றன்
நிலைமையைப் பாரடி வாலைப்பெண்ணே!
32
அழுத்தி லேசொல்லஞ் செழுத்தி லேநானும்
வழுத்தி னேன்ஞானப் பழத்திலேகழுத்தி லேமயேச் வரனு முண்டுகண்
கண்டு பாரடி வாலைப்பெண்ணே!
33
அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சியரே நிதம்
கொஞ்சி விளையாடும் வஞ்சியரேநெஞ்சிலே ருத்திரன் சூழிருப்பா னவன்
நேருட னாமடி வாலைப்பெண்ணே!
34
தொந்தியி லேநடு பந்தியிலே திடச்
சிந்தையி லேமுந்தி உன்றனுடன்உந்தியில் விட்ணுவுந் தாமிருப் பாரிதை
உண்மையாய்ப் பாரடி வாலைப்பெண்ணே!
35
ஆலத்திலே இந்த ஞாலத்திலே வருங்
காலத்தி லேயனு கூலத்திலேமுலத்திலே பிரமன் தானிருந் துவாசி
முடிக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே.
36
தேருமுண் டைஞ்சூறாம் ஆணியுண்டே அதில்
தேவரு முண்டுசங் கீதமுண்டேஆருண்டு பாரடி வாலைத்தெய் வம்மதிலே
அடக்கந் தானடி வாலைப்பெண்ணே!
37
ஒன்பது வாயில்கொள் கோட்டையுண் டேஅதில்
உள்ளே நிலைக்கார ரஞ்சுபேராம்அன்புடனே பரிகாரர்கள் ஆறு பேர்
அடக்கந் தானடி வாலைப்பெண்ணே!
38
இந்த விதத்திலே தேகத்திலே தெய்வம்
இருக்கையில் புத்திக் கறிக்கையினால்சந்தோட வாலையைப் பாராமல் மனிதர்
சாகிற தேதடி வாலைப்பெண்ணே!
39
நகார திட்டிப்பே ஆனதனால் வீடு
வான வகார நயமாச்சு!உகார முச்சி சிரசாச்சே இதை
உற்றுப் பாரடி வாலைப்பெண்ணே!
40
வகார மானதே ஓசையாச்சே அந்த
மகார மானது மாய்கையாச்சேசிகார மானது மாய்கையாச்சே இதைத்
தெளிந்து பாரடி வாலைப்பெண்ணே!
41
ஓமென்ற அட்சரந் தானுமுண்டு அதற்குள்
ஊமை யெழுத்து மிருக்குதடி;நாமிந்தெ ழுத்தை யறிந்துகொண் டோ ம்வினை
நாடிப் பாரடி வாலைப்பெண்ணே!
42
கட்டாத காளையைக் கட்டவே ணுமாசை
வெட்டவே ணும்வாசி யொட்டவேணும்எட்டாத கொம்பை வளைக்கவே ணுங்காயம்
என்றைக் கிருக்குமோ வாலைப்பெண்ணே!
43
இருந்த மார்க்க்கமாய்த் தானிருந்து வாசி
ஏற்காம லேதான டக்கவேணும்திரிந்தே ஓடிய லைந்துவெந்து தேகம்
இறந்து போச்சுதே வாலைப்பெண்ணே!
44
பூத்த மலராலே பிஞ்சுமுண்டே அதில்
பூவில்லா பிஞ்சும் அநேகமுண்டுமூத்த மகனாலே வாழ்வுண்டு மற்ற
மூன்று பேராலே அழிவுமுண்டு!
45
கற்புள்ள மாதர் குலம்வாழ்க நின்ற
கற்பை யளித்தவரே வாழ்க!சிற்பர னைப் போற்றி கும்மியடி
தற்பரனைப் போற்றி கும்மியடி.
46
அஞ்சி னிலேரெண் டழிந்ததில் லையஞ்
சாறிலேயும் நாலொழிந்த தில்லைபிஞ்சிலே பூவிலே துஞ்சுவ தாம்அது
பேணிப் போடலாம் வாலைப்பெண்ணே!
47
கையில்லாக் குட்டையன் கட்டிக்கிட்டா னிரு
காலில்லா நெட்டையன் முட்டிக்கிட்டான்ஈயில்லாத் தேனெனத் துண்டுவிட் டானது
இனிக்கு தில்லையே வாலைப்பெண்ணே!
48
மேலூரு கோட்டைக்கே ஆதரவாய் நன்றாய்
விளக்கு கன்னனூர்ப் பாதையிலேகாலூரு வம்பலம் விட்டத னாலது
கடுநடை யடி வாலைப்பெண்ணே!
49
தொண்டையுள் முக்கோணக் கோட்டையிலே இதில்
தொத்திக் கொடிமரம் நாட்டையிலேசண்டை செய்துவந்தே ஓடிப்போனாள் கோட்டை
வெந்து தணலாச்சு வாலைப்பெண்ணே!
50
ஆசை வலைக்குள் அகப்பட்டதும் வீடு
அப்போதே வெந்தே அழிந்திட்டதும்பாச வலைவந்து மூடியதும் ஈசன்
பாதத்தை போற்றடி வாலைப்பெண்ணே!
51
அன்ன மிருக்குது மண்டபத்தில் விளை
யாடித் திரிந்தே ஆண்புலியும் அங்கேஇன்ன மிருக்குமே யஞ்சு கிளியவை
எட்டிப் பிடிக்குமே மூன்று கிளியடி வாலைப்பெண்ணே.
52
தோப்பிலே மாங்குயில் கூப்பிடு தேபுது
மாப்பிள்ளை தான்வந்து சாப்பிடவும்ஏய்க்கு மிப்படி யஞ்சா றாந்தைஇருந்து
விழிப்பது பாருங்கடி வாலைப்பெண்ணே.
53
மீனு மிருக்குது தூரணி யிலிதை
மேய்ந்து திரியுங் கலசாவல்தேனு மிருக்குது போரையிலே யுண்ணத்
தெவிட்டு தில்லையே வாலைப்பெண்ணே!
54
காக்கை யிருக்குது கொம்பிலே தான்கத
சாவி லிருக்குது தெம்பிலேதான்பார்க்க வெகுதூர மில்லை யிதுஞானம்
பார்த்தால் தெரியுமே வாலைப்பெண்ணே!
55
கும்பி குளத்திலே யம்பல மாமந்தக்
குளக்க ருவூரில் சேறுமெத்ததெம்பிலிடைக் காட்டுப் பாதைக ளாய்வந்து
சேர்ந்து ஆராய்ந்துபார் வாலைப்பெண்ணே!
56
பண்டுமே ஆழக் கிணற்றுக்குள் ளேரெண்டு
கெண்டை யிருந்து பகட்டுதடிகண்டிருந்து மந்தக் காக்கையுமே அஞ்சி
கழுகு கொன்றது பாருங்கடி!
57
ஆற்றிலே அஞ்சு முதலைய டியரும்
புற்றிலே ரண்டு கரடியடிகூற்றுனு மூன்று குருடன டிபாசங்
கொண்டு பிடிக்கிறான் வாலைப்பெண்ணே!
58
முட்டை யிடுகு தொருபற வைமுட்டை
மோசம் பண்ணு தொருபறவைவட்டமிட் டாரூர் கண்ணியி லிரண்டு
மானுந் தவிக்குது வாலைப்பெண்ணே!
59
அட்டமா விண்வட்டப் பொட்டலி லேரண்டு
அம்புலி நிற்குது தேர் மேலேதிட்டமாய் வந்து அடிக்குதில் லைதேகம்
செந்தண லானதே வாலைப்பெண்ணே!
60
முக்கோண வட்டக் கிணற்றுக்குள்ளே மூல
மண்டல வாசிப் பழக்கத்திலேஅக்கோண வட்டச் சக்கரத்தில் வாலை
அமர்ந்தி ருக்கிறாள் வாலைப்பெண்ணே!
61
இரண்டு காலாலொரு கோபுரமாம் நெடு
நாளா யிருந்தேஅமிழ்ந்து போகும்கண்டபோ துகோபு ரமிருக்கும் வாலை
காணவு மொட்டாள் நிலைக்கவொட்டாள்.
62
அஞ்சு பூதத்தை யுண்டுபண்ணிக் கூட்டி
ஆரா தாரத்தை யுண்டுபண்ணிக்கொஞ்சு பொண்ணாசை யுண்டுபண்ணி வாலை
கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள்.
63
காலனைக் காலால் உதைத்தவளாம் வாலை
ஆலகா லவிட முண்டவளாம்மாளாச் செகத்தைப் படைத்த வளாமிந்த
மானுடன் கோட்டை இடித்தவளாம்.
64
மாதாவாய் வந்தே அமுதந்தந்தாள் மனை
யாட்டியாய் வந்து சுகங்கொடுத்தாள்ஆதரவாகிய தங்கையானாள் நமக்
காசைக் கொழுந்தியு மாமியானாள்.
65
சிரித்து மெல்லப் புரமெரித் தாள்வாலை
செங்காட்டுச் செட்டியைத் தானுதைத்தாள்ஒருத்தி யாகவே சூரர்தமை வென்றாள்
ஒற்றையாய்க் கஞ்சனைக் கொன்று விட்டாள்.
66
இப்படி யல்லொ இவள்தொழி லாமிந்த
ஈனா மலடி கொடுஞ்சூலிமைப்படுங் கண்ணியர் கேளுங்கடி அந்த
வயசு வாலை திரிசூலி.
67
கத்தி பெரிதோ உறைபெரிதோ விவள்
கண்ணு பெரிதோ முகம் பெரிதோசத்தி பெரிதோ சிவன் பெரிதோ நீதான்
சற்றே சொல்லடி வாலைப்பெண்ணே!
68
அன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல
அப்படி வாலை பெரிதானால்பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல
பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி.
69
மாமிச மானால் எலும்புண்டு சதை
வாங்கிஓடு கழன்று விடும்ஆமிச மிப்படிச் சத்தியென்றே விளை
யாடிக் கும்மி அடியுங்கடி.
70
பண்டு முளைப்ப தரிசியே யானாலும்
விண்டுமி போனால் விளையாதென்றுகண்டுகொண்டு முன்னே அவ்வை சொன்னாளது
உண்டோ இல்லையோ வாலைப்பெண்ணே!
71
மண்ணு மில்லாமலே விண்ணுமில்லை கொஞ்சம்
வாசமில் லாமலே பூவுமில்லைபெண்ணு மில்லாமலே ஆணுமில் லையிது
பேணிப் பாரடி வாலைப்பெண்ணே!
72
நந்த வனத்திலே சோதியுண்டு நிலம்
நத்திய பேருக்கு நெல்லுமுண்டுவிந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில்
விட்ட குறைவேணும் வாலைப்பெண்ணே!
73
வாலையைப் பூசிக்கச் சித்தரானார் வாலைக்
கொத்தாசை யாய்ச்சிவ கர்த்தரானார்வேலையைப் பார்த்தல்லோ கூலிவைத்தா ரிந்த
விதந்தெ ரியுமோ வாலைப்பெண்ணே!
74
வாலைக்கு மேலான தெய்வமில்லை மானங்
காப்பது சேலைக்கு மேலுமில்லைபாலுக்கு மேலான பாக்கியமில்லை வாலைக்
கும்மிக் மேலான பாடலில்லை.
75
நாட்டத்தைக் கண்டா லறியலாகு மந்த
நாலாறு வாசல் கடக்கலாகும்பூட்டைக் கதவைத் திறக்கலா கும்மிது
பொய்யல்ல மெய்யடி வாலைப்பெண்ணே!
76
ஆணும் பெண்ணும்கூடி யானதால் பிள்ளை
ஆச்சுதென் றேநீரும் பேசுகின்றீர்ஆணும் பெண்ணுங்கூடி யானதல்லோ பேதம்
அற்றொரு வித்தாச்சு வாலைப்பெண்ணே!
77
இன்றைக் கிருப்பதும் பொய்யல்ல வேவீடே
என்வாழ்க்கை யென்பதும் பொய்யல்லவேஅன்றைக் கெழுத்தின் படிமுடியும் வாலை
ஆத்தாளைப் போற்றடி வாலைப்பெண்ணே!
78
வீணாசை கொண்டு திரியாதே இது
மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடுகாணாத வாலையைக் கண்டுகொண்டால் காட்சி
காணலாம் ஆகாயம் ஆளலாமே.
79
பெண்டாட்டி யாவதும் பொய்யல்லவோ பெற்ற
பிள்ளைக ளாவதும் பொய்யல்லவோ?கொண்டாட்ட மானதகப்பன் பொய்யே முலை
கொடுத்த தாயும் நிசமாமோ?
80
தாயும் பெண்டாட்டியும் தான்சரி யேதன்யம்
தாமே இருவருந் தாங்கொடுத்தார்காயும் பழமுஞ் சரியாமோ உன்றன்
கருத்தைப் பார்த்துக்கொள் வாலைப்பெண்ணே!
81
பெண்டாட்டி மந்தைமட்டும் வருவாள் பெற்ற
பிள்ளை மசானக் கரையின் மட்டும்தொண்டாட்டுத் தர்மம் நடுவினிலே வந்து
சேர்ந்து பரகதி தான்கொடுக்கும்.
82
பாக்கியமும் மகள் போக்கியமும் ராச
போக்கியமும் வந்த தானாக்கால்சீக்கிரந் தருமஞ் செய்யவேண்டும் கொஞ்சந்
திருப்ப ணிகள்மு டிக்கவேண்டும்.
83
திருப்பணி களைமுடித் தோரும் செத்துஞ்
சாகாத பேரி லொருவரென்றும்அருட் பொலிந்திடும் வேதத்தி லேயவை
அறிந்து சொன்னாளே வாலைப்பெண்ணே!
84
மெத்தை தனிலே படுத்திருந் துநாமும்
மெல்லிய ரோடு சிரிக்கும்போதுயுத்தகாலன் வந்துதான் பிடித்தால் நாமும்
செத்த சவமடி வாலைப்பெண்ணே!
85
ஏழை பனாதிக னில்லையென்றால் அவர்க்கு
இருத்தால் அன்னங் கொடுக்க வேண்டும்நாளையென்று சொல்ல லாகாதே என்று
நான்மறை வேத முழங்குதடி.
86
பஞ்சை பனாதி யடியாதே அந்தப்
பாவந் தொலைய முடியாதேதஞ்சமென்றோரைக் கெடுக்காதே யார்க்கும்
வஞ்சனை செய்ய நினையாதே.
87
கண்டதுங் கேட்டதுஞ் சொல்லாதே கண்ணில்
காணாத வுத்தரம் விள்ளாதேபெண்டாட்டிக் குற்றது சொல்லாதே பெற்ற
பிள்ளைக் கிளப்பங் கொடுக்காதே.
88
சிவன்ற னடியாரை வேதியரை சில
சீர்புல ஞானப் பெரியோரைமவுன மாகவும் வையாதே அவர்
மனத்தை நோகவும் செய்யாதே.
89
வழக்க ழிவுகள் சொல்லாதே கற்பு
மங்கையர் மேல்மனம் வையாதேபழக்க வாசியைப் பார்த்துக்கொண் டுவாலை
பாதத்தைப் போற்றடி வாலைப்பெண்ணே!
90
கூடிய பொய்களைச் சொல்லாதே பொல்லாக்
கொளைக ளவுகள் செய்யாதேஆடிய பாம்பை யடியா தேயிது
அறிவு தானடி வாலைப்பெண்ணே!
91
காரிய னாகினும் வீரியம் பேசவும்
காணா தென்றவ்வை சொன்னாளேபாரினில் வம்புகள் செய்யாதே புளிப்
பழம்போ லுதிர்த்து விழுந்தானே.
92
காசார் கள்பகை செய்யா தேநடுக்
காட்டுப் புலிமுன்னே நில்லாதேதேசாந்தி ரங்களுஞ் செல்லா தேமாய்கைத்
தேவடி யாள்தனம் பண்ணாதே!
93
தன்வீடி ருக்க அசல்வீடு போகாதே
தாயார் தகப்பனை வையாதேஉன்வீட்டுக் குள்ளேயே யூக மிருக்கையில்
ஓடித் திரிகிறாய் வாலைப்பெண்ணே!
94
சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம்
தானென் றொருவுடல் பேதமுண்டோ ?ஓதிய பாலதி லொன்றாகி யதிலே
உற்பத்தி நெய்தயிர் மோராச்சு.
95
பாலோடு முண்டிடு பூனையு முண்டது
மேலாக காணவுங் காண்பதில்லைமேலந்த ஆசையைத் தள்ளிவிட் டுள்ளத்தில்
வேண்டிப் பூசையைச் செய்திடுங்கள்.
96
கோழிக் காறுகாலுண் டென்றுசொன்னேன் கிழக்
கூனிக் மூன்றுகா லென்றுசொன் னேன்கூனிக்கிரண் டெழுத்தென்று சொன்னேன் முழுப்
பானைக்கு வாயில்லை யென்றுசொன்னேன்.
97
ஆட்டுக் கிரண்டுகா லென்றுசொன் னேன்நம்
பானைக்குப் பானைக்குநிற்கு மேல்சூல்மாட்டுக்கு காலில்லை யென்றுசொன்னேன் கதை
வகையைச் சொல்லடி வாலைப்பெண்ணே!
98
கோயிலு மாடும் பறித்தவ னுங்களறிக்
கூற்று மேகற் றிருந்தவனும்வாயில்லாக் குதிரை கண்டவனும் மாட்டு
வகை தெரியுமோ வாலைப்பெண்ணே!
99
இத்தனை சாத்திரஞ் தாம்படித்தோர் செத்தார்
என்றா லுலகத்தோர் தாம்சிரிப்பார்செத்துப் போய்கூட கலக்கவேண்டும் அவன்
தேவர்க ளுடனே சேரவேண்டும்.
100
உற்றது சொன்னாக்கா லற்றது பொருந்தும்
உண்டோ உலகத்தில் அவ்வைசொன்னாள்அற்றது பொருந்து முற்றது சொன்னவன்
அவனே குருவடி வாலைப்பெண்ணே!
101
பூரணம் நிற்கும் நிலையறியான் வெகு
பொய்சொல்வான் கோடி மந்திரஞ்சொல்வான்காரணகுரு அவனு மல்ல இவன்
காரியகுரு பொருள் பறிப்பான்.
102
எல்லா மறிந்தவ ரென்றுசொல்லி இந்தப்
பூமியி லேமுழு ஞானியென்றேஉல்லாச மாக வயிறு பிழைக்கவே
ஓடித் திரிகிறார் வாலைப்பெண்ணே!
103
ஆதிவா லைபெரி தானா லும்மவள்
அக்காள் பெரிதோ? சிவன் பெரிதோநாதிவா லைபெரி தானாலும் அவள்
நாயக னல்ல சிவம்பெரிது.
104
ஆயுசு கொடுப்பாள் நீரிழி வுமுதல்
அண்டாது மற்ற வியாதியெல்லாம் பேயும் பறந்திடும் பில்லிவி னாடியில்
பத்தினி வாலைப்பெண் பேரைச்சொன்னால்.
105
நித்திரை தன்னிலும் வீற்றிருப்பா ளெந்த
நேரத்தி லும்வாலை முன்னிருப்பாள்சத்துரு வந்தாலும் தள்ளிவைப்பாள் வாலை
உற்றகா லனையும் தானுதைப்பாள்.
106
பல்லாயி ரங்கோடி யண்டமுதல் பதி
னாங்கு புவனமும் மூர்த்திமுதல்எல்லாந் தானாய்ப் படைத்தவளாம் வாலை
எள்ளுக்கு ளெண்ணைய்போல நின்றவளாம்.
107
தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும்மித் தமிழ்
செய்ய எனக்குப தேசஞ்செய்தாள்நேசவான் வீரப் பெருமாள் குருசாமி
நீள்பதம் போற்றிக்கொண் டாடுங்கடி.
108
ஆறு படைப்புகள் வீடுகடை சூத்ர
அஞ்செழுத் துக்கும் வகையறிந்துகூறுமுயர் வல வேந்திரன் துரைவள்ளல்
கொற்றவன் வாழக்கொண் டாடுங்கடி.
109
ஆடுங்கள் பெண்டுகள் எல்லோரு மந்த
அன்பான கொங்கணர் சொன்னதமிழ்பாடுங்கள் சித்தர்கள் எல்லோரும் வாலை
பாதத்தைப் போற்றிக் கொண்டாடுங்கடி.
110
சித்தர்கள் வாழி சிவன்வா ழிமுனி
தேவர்கள் வாழி, ரிஷிவாழி,பத்தர்கள் வாழி, பதம்வா ழிகுரு
பாரதி வாலைப்பெண் வாழியவே!
111

செவ்வாய், 20 அக்டோபர், 2015

ஞானிகள் எல்லோரும் ஒன்றுதான்!

எமது கர்ம வினையால் அழுது அரற்றிய போது
ஓடிவந்து காத்தருளிய சித்தர் பெருமக்கள் பலர்!
வினையகற்றி, வேதனையை மாற்றி தூயனாக்கி
பற்றற வைத்து பற்றற்றானை  பற்றிட வைத்தனர்!

ஒன்று நன்றாக புரிந்தது! கடவுள் ஒருவர் என்பது!
சத்தியம் அல்லவா?! அதுபோலவே கடவுளை, அடைந்த
உணர்ந்த ஞானிகள் அனைவரும் ஒன்றுதான்! ஊர் பெயர்
வேறுவேறானாலும் உணர்வால் இறைவனோடு
ஒன்றானவர்கள் தானே?! வித்தியாசம் இருக்காதல்லவா ?!
ஆம்! ஞானிகள் எல்லோரும் ஒன்றுதான்! அடியேனுக்கு இது
அனுபவம் ஆனது!







ஞான சற்குரு சிவ செல்வராஜ்

சனாதன தர்மமே சன்மார்க்கம்!

எம்மத நிலையும் நின்னருள் நிலையில் சம்மதமே!

சகலரும் சேர்ந்ததே சன்மார்க்கம்! என் மார்க்கம் இறப்பொழிக்கும்
சன்மார்க்கம் தானே என உலகுக்கே வழி காட்டுகிறார்!

வள்ளலார் சொல்வது ஒரு புது மார்க்கம் அல்ல!? யுகம் யுகமாக
நம் நாட்டில் நிலவி வரும் சனாதன தர்மமே!

உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான வாழும் வாழ்க்கை நெறியே!
சனாதன தர்மமே சன்மார்க்கம்!

வாழையடி வாழையென வந்த ஞானியர் திருகூட்ட மரபினில் 19-நூற்றாண்டிலே வந்தவர் தான் திருவருட்பிரகாஷ வள்ளலார்
இராமலிங்க சுவாமிகள்!

சன்மார்க்கம் என்றால் இது எதோ புது வழி என்று எண்ணிவிடாதீர்!
ஆதிகாலம் முதலே நம் ஞானிகளால் இறைவனை அடைய காட்டிய
வழியே இது!

எப்படி வாலை தரிசனம் பெறுவது?

உருத்தரித்து நின்றதொரு வாலைப்பெண்ணை
உற்றுப்பார் விளக்கொளிபோ லுள்ளே தோன்றும் 


நம் கண்மணியில் நினைவை நிறுத்தி உறுதி குலையாமல்
நின்று நிலைத்து தவம் செய்வோமானால், உற்று உற்று பார்த்து
பார்த்து இருப்போமானால்  சும்மா இருப்போமானால் அங்கே
விளக்கொளிபோல் நிற்கும் வாலைப் பெண்ணைக் காணலாம்!
உள்ளே, உன்னுள்ளே காண்பாய் உன் தாயை!

வாலையின் இருப்பிடம்


வாலையென்ற மகாரமடா மௌனம் பெண்தான் 
 


வாலையின் இடம் மகாரம் இருகண்ணும் உள் சேரும் இடம்.
உச்சிக்கு கீழே அன்னாக்குக்கு மேலே , அதுவே நம் உயிர்ஸ்தானம்,
ஆத்மஸ்தானம், அதுவே வாலை இருப்பிடம்.

அவள் மௌனப் பெண்ணாம்! வலது கண் அகாரம் இடதுகண்
உகாரம், இரண்டு கண் உள்ளே சேரும் இடமே மகாரம் அது வாலையின்
இருப்பிடம்.

மூன்றும் சேர்ந்தால் அ + உ + ம சேர்ந்தாலே ஓங்காரம்! முச்சுடரடும்
ஒன்றானாலே ஆத்ம ஜோதி தரிசனம். வாலையை தரிசித்து
அமுதம் அருந்தலாம்! வாலையை பணியாமல் பார்க்காமல்
முன்னேற முடியுமா? முப்பாழில் மூழ்கு !

திங்கள், 19 அக்டோபர், 2015

கலை மகள் - அலை மகள் - வாலை


 குருவை பெற்று ஞானோபதேசம் ஞான தீட்சை பெற்று, ஆன்ம சாதனை
புரியும் ஒவ்வொருவரும்  முதலில் கலை மகள் அருள் பெறுவான்!
கவி மழை புரிவான்! இதுவே உண்மை! மெய்ஞானம்!

அடுத்தது அருள் புரிவாள் அலை மகள்! வேண்டாம் என்று சொன்னாலும் வந்து குவியும் செல்வமெல்லாம்!

ஒன்றுக்கு பத்தாக பதினாறாக வந்து சேரும்!

நாம் பதினாறு கலையுடைய சந்திர கலையில் இடக்கண்ணில் ஆரம்பித்து
சூரியகலை வழியே ஒன்றான பத்தாமிடத்தை சேருவோம்!

இதுவே ஆத்ம சாதனை !தெய்வம் ஒன்றே!
அது பத்தாமிடத்தில் ய காரத்திலே ! அவள் கன்னி ய குமரியிலே!
நாம் நம் இடப்பாக சக்தியை பிடித்து சிவத்தின் வழியே
வாலையை அடையலாம்! எல்லாமே மெய்ஞானம்!

பாடு!
பிதற்று!
கத்து!
கதறு!
உலகம் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்! நம் தாயுக்கு நம் பிதற்றல்
மழலையே! ரசிப்பாள்! நிச்சயம் அருள்வாள்!

நம் வாழ்வு நிச்சயம் - உறுதி - மரணமிலாதது என்று கண்டிப்பாக அருள் தருவாள்! இறைவனை தாயும் ஆனவன்  என்றுதான் சொன்னார்கள்! கருவிலே திருவான தாயை வாலையை போற்றுவோம்!

கண்ணன் - கோபியர் : ஞானத்தில்



அண்ணல் கண்ணன் ஓர் மகனைப் பெற்ற யசோதை நங்காய்
உன்மகனை கூவாய் -பெரியாழ்வார்

கண்ணன் புறத்தே போய் கோபியர் வீடு சென்று எல்லோருக்கும்
துன்பத்தை கொடுக்கிறான். கோபியர்கள் யசோதையிடம் சென்று
உன்மகனை வெளியே விடாதே வீட்டுக்கு உள்ளே கூப்பிடு
வீட்டிலே இருத்தி விடு என்கிறார்களாம்!

கண்ணன் புறத்தே போனால் என்றால் நம் மனம் போனது எனப்பொருள் !
மனம் போன போக்கில் போனால் என்ன ஆகும்? துன்பமே மிச்சம்!
கண்ணனை வீட்டின் உள்ளேயே இருத்தி விட்டால்! நமது மனதை
கண்மணி ஒளியிலே இருத்தி விட்டால் பேரின்பமே! அதனால்
கண்ணனை வெளியே விடாதீர்கள்! வெளியே பார்க்க பார்க்க
வினையே! உங்கள் பார்வையை வெளியே விடாதீர்கள்! பார்வை
உள்ளே திரும்பினால் ஒளி கண் ஒளி பெருகும்! உன்னையே நீ
காணலாம்! இதைதான் பைபிளில் இயேசு பெருமானும் கூறுகிறார்!
மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபத்தில் இருக்கிறது
 என்று! வெளியே இருக்கும் மனதை கண் உள்ளே திருப்பி விடுங்கள்
உள்ளே போனால் பரலோகம்  அங்கே தான் பரம பிதா!

கிருத்துவர்களுக்கு பரமபிதா! வைணவர்களுக்கு பரம பதம்!

வெளியே போகாதே இனி இங்கேயே இரு என  யசோதை கிருஷ்ணனை
வீட்டிலே இருத்தினாள்! கோபியர்கள், யசோதையிடம் உன் கண்ணனிடம் கூப்பிட்டு கொள். இல்லையேல் எங்களை வாழ விடாமாடான் என முறையிடுகிறார்கள்.

Popular Posts