வெள்ளி, 22 நவம்பர், 2013

பாவங்கள் தீர புனித நீராடு! எங்கே ?

பாவங்கள் தீர புனித நீராடு!  எங்கே ?


நெக்கு நெக்கு உள் உருகி உருகி
நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும்
நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி
நானா விதத்தாற் கூத்தும் நவிற்றிச்
செக்கர் போலும் திரு மேனி
திகழ நோக்கிச் சிலிர் சிலிர்த்துப்
புக்கு நிற்ப தென்று கொல்லே என்
பொல்லா மணியை புணர்ந்தே

நமது கண்மணியில் உணர்வை வைத்து தவம் செய்தால் நெகிழ்ச்சி உருவாகும்! நெகிழ்ந்து கண்ணீர் அருவியில் நாம் குளிக்கனும். நாம் செய்த பாவங்கள் தீர புனித நீராட வேண்டும் !

உண்மையான புனித நீராடல் ஒவ்வொருவரும் அவரவர் கண்ணீர் அருவியில் குளிப்பதே!!

இப்படிப்பட்ட தவம்

           நின்று கொண்டே செய்யலாம்!
          இருந்து கொண்டே செய்யலாம்,
          படுத்துக்கொண்டே செய்யலாம்
          நடந்து கொண்டே செய்யலாம்

இது தான்  ஒப்பற்ற ஞான சாதனை!

வேறு எந்த சாதனையும் இருந்து-ஆசனம் அமைத்து கொண்டுதான் செய்ய வேண்டும் என்பர்! எங்கும் இருக்கும் கடவுளை எல்லா காலத்திலும் இருக்கும் கடவுளை எங்கே இருந்து எப்படி கும்பிட்டால் என்ன?! இராகு காலம் எமகண்டத்திலும் கும்பிடலாமே!? எந்த திசையை பார்த்தும் கும்பிடலாமே!

நின்றோ இருந்தோ படுத்தோ நடந்தோ தவம் செய்யலாமே!

உன்னுள் இருக்கும் இறைவனை வணங்க எந்த தடையும் இல்லை!
எதுவும் யாரும் நம்மை தடுக்க முடியாது !அதுதான் ஞானம்! இறைவனை நாடி நம் மெய்யுள்ளே கூடி பாடலாம் ஆடலாம் வாழ்த்தலாம் மகிழலாம் யார் நம்மை தடுக்க முடியும்?! இப்படி எதையாவது செய்யுங்கள்.


உங்கள் கண்கள் திருவடி சிவந்து கோவை பழமாக வேண்டும். தவத்தால் கண்களில் சுத்த உஷ்ணம் மிகுதிப்பட வேண்டும்! உங்கள் உடல் சிலிர்க்க வேண்டும். கண்ணீர் மழை பொழிய வேண்டும். உள்ளே போக
கண்மணியோடு நீங்கள் சேர வேண்டும்!

உங்களுக்கு தேவை விழிப்புணர்வு!  அதாவது விழியில்
புணர்ச்சி! அப்போது தான் ஆனந்த அனுபவங்கள் கை கூடும்! விழியில் உணர்வை வையுங்கள்!

 விழிப்புணர்ச்சி பெறுவீர் பெற்று பேரின்பம் அடைவீர் !

திருவாசக மாலை எட்டாம் திருமுறை


திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.



விழித்திரு

விழித்து விழித்திமைத்தாலும் சுடர் இலையேல்
விழிகள் விழித் திளைப்பதலால் விளை வொன்றும் இல்லையே



குரு இல்லாமல் நூற்களை படித்து  கண்டவர்
பேச்சை கேட்டு தான்தோன்றித்தனமாக செயல்படும் ,தியானம் செய்பவர்கள் துன்பத்தையே அடைவர்!!  என்கிறார்!

குருவைப்  பெற்று ஞான சற்குருவை பெற்று திருவடி உபதேசம் தீட்சை பெற்று கண்மணியில் உணர்வு பெற்றுவிழித்திருந்து  தவம்  செய்பவரே உய்வர்! ஞான சற்குரு வழி திருவடி தீட்சை பெற்றாலே நம் கண்ணில் சுடர் உதயமாகும்!

வலது கண்ணில் சூரிய சுடர் உதயமாகும்! இடது கண்ணில் சந்திர சுடர் உதயமாகும் இரு கண்களிலும் சூரிய ஜோதி சந்திர ஜோதி தோன்றியே விழித்திருந்து கண்களை விழித்து விழித்து நோக்க நோக்க இரு சுடரும் பெருகி  ஒன்றாகி  உள்ளே பாயும்!

இரு  கண்ணும் உள்ளே சேரும் இடத்தை  சென்றடையும்! அந்த இடத்தில் அக்னி சுடர் உதயமாகும் பெருகும்! பெருகணும் அதுவரை நாம் விழித்து உற்றுப்பார்த்து உணர்ந்து ஒளிப்பெருக்கு ஒளி பெருக்கி தவம் செய்து கொண்டயிருக்க வேண்டும்!!

"உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடும்  மந்திரம்" என சித்தர் பெருமகனார் கூறுகிறார்! இதுவே ஞானம் பெற ஞானிகள் கூறிய தந்திரம்! விழித்திரு-விழிப்புணர்வுடன் இரு- விழியிலேயே இரு! வீழாமல் இரு !
"சும்மா -இரு"


திருவருட்பாமாலை -  நாலாஞ்சாறு


திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.

ஞாயிறு, 17 நவம்பர், 2013

குரு


 

குருவே தெய்வம்! 
குரு வார்த்தையே வேதம்!
 குரு தரிசனம் பாவ விமோசனம்!
குருவின் திருவடியே பரம பதம்! 
குருவின் வார்த்தையே மந்திரம் ! 
குரு சேவையே
உன்னத இறைபணி! 
குருவை பணிந்தவனே ஞானம் பெறுவான்!
 குருவை போற்றுபவனே அறிவு பூரணமாக பெறுவான்!
 சர்வமும் குருவே! சகலமும் குருவே!  
என்று சும்மா இருப்பவனே இறைவனை அடைவான்! 

Popular Posts