சமாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 பிப்ரவரி, 2013

சமாதியில் மூழ்கினால் குரு எழுப்பி விடுவார்!!



தூக்கத்தில் மனம் ஒடுங்கும்!

ஞான தவம் செய்யும் போது மனதும் பிராணனும் ஒடுங்கும்!

மனம் செம்மையாக பக்தி செய்!
ஞான நூற்களை படி!
கோவிலுக்கு போ!
புண்ணியர்களை தரிசனம் செய்!
சத்சங்கத்தில் கூடு!
எல்லாவற்றிக்கும் மேலாக தாயை பணி!
வாலையை பணி! கன்னியாகுமரிக்கு வா!
பகவதியம்மனை வணங்கு!
அருள் பெறுவாய்! ஞானம் பெறுவாய்!
துர்க்குணங்கலில் இருந்து மனம் விடுபடும் !
நம்மை பெற்றவள் வாலை!
நம்மை வளர்ப்பவள் வாலை!
நம்முள் இருந்து  வாழ வைப்பவளும் வாலையே!
அந்த வாலையை பணிய வேண்டாமா?
அருள் பெறவேண்டாமா?

மனம் ஞான தவத்தால் செயலற்றால் பிராண சக்தி வெளிப்படும்a!
மேலும் மேலும் தவம் தீவிரம் ஆகும் போது  பிராணனும்
நிலை பெறும் ஒடுங்கும்! இதுவே சமாதி!

இங்ஙனம் சமாதி கூடி சமாதி கூடி தவம் செய்து கொண்டே வரவேண்டும்! ஒரே அடியாக சமாதி அனுபவத்தில் ஆழ்ந்து விடக்கூடாது!

இதற்குதான் தக்க  குரு வேண்டும் என்பது! சமாதியில் மூழ்கி விட்டால் குரு எழுப்பி விடுவார்!

ஏனெனில் குரு தீட்சை பெற்றது முதல் உன்னுடன் சூக்சும நிலையில் உன் ஞானசற்குரு கூடவே இருப்பதால்!? சமாதி ப்பழக்கம் பழக்கம் அல்ல
சகஜ ப்பழக்கமே பழக்கம் என வள்ளல் பெருமான் தெளிவாக ஞான
வழியை கூறுகிறார்!

சமாதி அனுபவம் பெறு! சமாதியில் போய்  போய் வா! சமாதிக்கும் மேலான ஞான நிலை பெறுவது தான் நம் ஒரே லட்சியம்!? நம் உயிரான வாலை தாயின் அமுதம் பருகனும்! பேரொளியோடு ஒளியாக , அருட்பெருஞ்சோதி யோடு நம் ஆத்ம ஜோதியை இரண்டற கலக்க வேண்டும்!! இதுவே ஞான நிலை!

அப்போது தான் மோட்ச பிராப்தி ! கடவுள் மயமாதல் ! நான் அதுவாதல் !நான் வேறு அது வேறு இல்லாத ஒன்றான நிலை! இரண்டும் ஒன்றிய ஞான மோன நிலை!

திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.


               

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

ஏன் ஜீவசமாதி செல்லவேண்டும்?

 


இறைவனை யடைய வழி காட்டும் விழியை எண்ணி தவம் செய்யும்
ஆத்ம சாதகனை தேவர்களும் விரும்புவர்!
உலகத்தில் உள்ளவர்களாலும் மதிக்க படுவர்!

உலகிலே அரிதினும் அரிதான இந்த ஞானம் புரிவர்,
ஞான தானம் செய்வோர் எல்லோராலும் மதிக்கபடுவர்!
வணங்கபடுவர்!

ஞான சாதனை புரிந்து அங்காங்கே சமாதி கொண்ட
ஞானிகள் கோவிலை அடைந்தால் சூட்சமமாக
வந்து நம்மை ஆசிர்வதிப்பார்!
அருள் புரிவர்!

ஞான பாதையில் பீடு நடை போட உதவுவர்!
எனவே சமாதி ஸ்தளங்களுக்கு போங்கள்!

அங்கே சமாதி கொண்ட ஞானியர் அருள் புரிய காத்திருக்கிறார்கள்!

நூறு கோயில்களுக்கு போவதை விட ஒரு
ஜீவன்முக்தர்  சமாதி கோவிலுக்கு போய்  தவம்
செய்வது புண்ணியமே!

நூறு சமாதி கோவிலுக்கு போய் தவம் செய்வதை
விட உயிரோடு இருக்கும் நடமாடும் ஒரு ஞானியை
காண்பது உத்தமம் !

ஞானியே ஞான சற்குருவாகி ஞான பாதையை காண்பிப்பார்,
பல ஞானிகள் அருளுக்கு பாத்திரமானவர்
ஞான சற்குருவே!

அப்படிப்பட்ட ஞான சற்குரு  "பார்க்க" கோடி வினை தீருமே!
குருவே பரப்பிரம்மம்!! 



திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

சமாதிப்பழக்கம் பழக்கம் அல்ல சகஜப்பழக்கமே பழக்கம்

பல மகான்கள் தங்கள் உயிரை ஆதாரத்தில் ஒடுங்க செய்து
விடுவதால் புறச்செயல் அற்று சமாதியில் ஆழ்ந்து விடுகின்றனர்,
இப்படி சமாதி கூடி அறிதுயில் கொள்வது ஒன்றும் மேலானது அல்ல
என் வள்ளலார் கூறுகிறார், உயிர் அரியாது ஒடுங்குவது தூக்கம்,உயிரை
அறிந்து ஆதாரத்தில் ஒடுக்குவது சமாதி.

உயிரை அறிந்து ஆதாரங்களில் ஒடுங்கிவிடாமல் உணர்வோடு இருப்பது
ஞான நிலை! மோன நிலை. சமாதியில் மூழ்குவது பெரிதல்ல .
உயிர் அனுபவம் பெற்ற பேரின்ப நிலையிலே எப்போதும் இருப்பது சிறப்பு

சகஜ நிலையிலே எப்போதும் இருப்பதுவே மரணம் இல்லா
பெருவாழ்வுக்கு வழியாகும்

- சாகாக்கல்வி - ஞான சற்குரு சிவசெல்வராஜ்.



யோக நிலை அனுபவத்தில் ஒவ்வொரு நிலை அனுபவமும் பெற 8 முதல் 12 வருடம் வரை ஆகும். அதற்கு நமக்கு காலம் இல்லை என பெருமான் உரைநடைப் பகுதியில் கூறியுள்ளார்.

எனவே இந்த ஆறு நிலைகளை கடந்து செல்வது மிகக்கடினமானதாகும். சுத்த சன்மார்க்கத்தின் அனுபவநிலை ‘கண்டத்திற்கு மேல்’ என பெருமான் கூறியுள்ளதை கருத்தில் கொண்டு, நாம் புலை, கொலை, சாதி, சமய பேதங்களைத் தவிர்த்து எவ்வுயிரையும் தம்முயிர்போல பாவிக்கும் உணர்வை வரவழைத்துக் கொண்டால் அதி சீக்கிரமாக சுத்த சன்மார்க்க அனுபவ நிலைகளுக்கு செல்லலாம்.

எனவே சன்மார்க்க அன்பர்கள் ஆறு நிலை அனுபவமான யோக நிலை அனுபவத்தில் முயற்சிப்பது தேவையற்றது. மனதை எப்பொழுதும் புருவ மத்தியில் வைத்துப் பழகுதல் வேண்டும். மனம் அடங்கினால் காற்றும் அடங்கும், காற்று அடங்கினால் அருள் அனுபவம் கூடும்.


இதற்கு உபாயமாக திருவருட்பா பாடல்களை மெல்லெனப்பாடுதல், தியானம், தெய்வபாவனை போன்றவை செய்தல், மேலும் உண்மையான உயிர்இரக்க உணர்வோடு ஜீவகாருண்யப் பணி செய்தாலும் அருள் நிலை அனுபவம் உண்டாகும்.


யோக நிலை அனுபவங்கள் – மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா என்ற ஆறு நிலைகளிலும் யோக நிலை அனுபவங்கள் ஏற்படுவது இயல்பு என சித்தர்களும், யோகிகளும் கூறியுள்ளனர்.

இந்த யோக நிலை அனுபவங்கள் ஒவ்வொன்றும் பல சித்துவேலைகளைச் செய்யத்தூண்டும். அப்படி சித்து வேலைகளை செய்தால் சன்மார்க்கத்தின் மேல் நிலை அனுபவமான ‘மரணமில்லாப் பெரு வாழ்வு பெற’ தடை ஏற்படும்.

எனவே தான் சமாதிப்பழக்கம் பழக்கம் அல்ல சகஜப்பழக்கமே பழக்கம் எனவும் பெருமான் கூறியுள்ளார். ஏனெனில் யோக நிலை அனுபவத்தில் “சமாதியில்” சென்று தான் முடிவடையும்.

http://www.vallalarspace.com/VallalarVarugai/Articles/2178

Popular Posts