வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

ஞான சற்குருவை நாடுங்கள்!

"சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை
அவனை வழிபட்டங் காமாறு காட்டும்
குருவை வழிபடிற் கூடலு மாமே"

திருமந்திரம் பாடல் - 2119


சிவனை வழிபட்டார் எண்ணிலாத்தேவர், இதேபோல் தெய்வங்களை வெவ்வேறு உருவத்தில் பெயரில் வழிபட்டவர் எண்ணிலா கோடி கோடி மாந்தர்! அதனால் பயனொன்றுமில்லை என்கிறார் திருமூலர்! இதெல்லாம் பக்திமார்க்கம்! இதேபோல் ஜப தபம் யாகம் வளர்த்தல் பூஜித்தல் செய்தும் பயனொன்றுமில்லை இதெல்லாம் கர்மமார்க்கம்! இதேபோல் பிராணாயாமம் குண்டலியோகம் ஹடயோகம் வாசியோகம் இப்படி செய்வதாலும் பலனொன்றுமில்லை! இதெல்லாம் யோகமார்க்கம்! இவைகளில் ஒருவர் உண்மையாக ஆத்மார்த்தமாக ஈடுபடுவானேல் அவனுக்கு என்ன கிட்டும் தெரியுமா? பக்தி கர்ம யோக மார்க்கங்களில் இறைவனை நீ அறிய முடியாது? ஏதோ ஒரு சில அற்ப சித்திகள் தான் கிட்டும்!? அது பிரயோஜனமில்லை!? தாயுமானவர் திருமூலர் சொன்னதையே அழுத்தந்திருத்தமாக அடித்துக் கூறுகிறார்!

"மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாக ஆடினவர்க்கு வார்த்தை சொல ஒரு சற்குரு வாய்க்கும் பராபரமே” என தெளிவாக கூறுகிறார்! உண்மையான பக்தனுக்கு உண்மையான கர்மிக்கு உண்மையான யோகிக்கு இறைவன் தகுந்த நேரத்தில் சிறந்த தகுந்த ஞானசற்குருவை காட்டுவித்து அவர் மூலம் உபதேசம் தீட்சை பெற வைத்து தவம் செய்ய வைத்து பின்னரே தகுதியுடையவரை ஆட்க் கொள்வார்! குரு இல்லாமல் இறைவனை அடைய முடியாது! பக்தியில் சிறந்தவரை இறைவன் சோதித்து பக்குவியாக்கி குருவிடம் சேர்ப்பித்து பின்னரே ஞானம் அருள்கிறார்!

குரு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தவே, ராமன், கிருஷ்ணன் பல குருவிடம் உபதேசம் கேட்டு நமக்கு பாடமாக வாழ்ந்து காட்டினர்! அந்த காலத்தில் எல்லா மன்னர்களும் ராஜகுரு வைத்திருந்தனர். அவர் ஆலோசனைபடியே நாட்டை ஆண்டனர். குருகுலம் சென்று கல்வி பயின்றே வாழ்ந்தனர்! குரு இல்லாமல் இருந்த ஒருவரை கூற முடியுமா? நமது வேதம் புராணம் இதிகாசம் ஞான நூற்கள் ரிஷிகள் சித்தர் உபதேசங்கள் இவையெல்லாம் குருவின் மகத்துவத்தை உங்களுக்கு உணர்த்தவில்லையா?

"குருதான் பிரம்மா குருதான் விஷ்ணு குருதான் மகேஸ்வரன் குருதான் சாட்சாத் பரப்பிரம்மம் இப்படி எல்லாமான குருவை வணங்குகிறேன் என்கிறது வேதம்! புரியவில்லையா? நீங்கள் பிறந்ததிலிருந்து இன்றுவரை அம்மா அப்பா சகோதர சகோதரிகள் உறவினர்கள் நண்பர்கள் உலகர் பல பள்ளி ஆசிரியர்கள் பலநூல்கள் இப்படி எல்லோரும் ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்தது தானே இப்போதைய உங்கள் அறிவு! பிறரால் சொல்லப்பட்டது நூற்களில் படித்தது இயற்கை இவையெல்லாம் குருவாக இருந்து கற்றுத் தந்த பாடம்தான் இப்போதைய உங்கள் அறிவு! இதுவா அறிவு?! இதனால் தான் இன்றைய விஞ்ஞானிகள் ஒரு உண்மையை ஒத்துக்கொண்டார்கள்! என்ன? இன்றைய மனிதனின் மூளை ஐந்து சதவீதமே இயங்குகிறது?! மீதி 95 சதவீதம் இயங்கவில்லை என்றனர்! மாபெரும் உண்மை இது! பல்கலைகழகங்கள் கொடுத்த தாள்களை வைத்துக்கொண்டு தங்களை அதிமேதாவி எனச் சொல்லும் படித்த முட்டாள்களே அந்ததாள்களை - காகிதங்களை வைத்து ஒரு பிரயோஜனமுமில்லை!

இறைவனின் தாள்களை திருவடிகளை அறிந்தாலே உணர்ந்தாலே முக்தி! அதற்கு ஞானசற்குருவை நாடுங்கள்! உங்களை போல பல்கலை கழக தாள் இல்லாதவராயிருக்கலாம் குரு! உங்களைப்போல் பணம் பதவி அந்தஸ்து இல்லாதவராயிருக்கலாம் குரு! உங்களை விட வயதில் சிறியவராயிருக்கலாம்

 குரு! எப்படியிருந்தாலும் சரி  ஞான உபதேசம் தீட்சை 

கொடுப்பாரானால் அவர்தான் ஞானசற்குரு!   அவரை பணி!

                        🔥அருளியவர்🔥: 

    ஆன்மீக செம்மல், ஞானசித்தர், ஞானசற்குரு சிவ செல்வராஜ்  அய்யா

------------------------------------------------------------------------                                                 

                      கன்னியாகுமரி

        🔥தங்கஜோதி ஞானசபை🔥 

          வந்தால் பெறலாம் ஞானம்!


மேலும் அறிய:

🌐 www.vallalyaar.com

▶️ YouTube: Thangajothi Gnanasabai

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

காமத்திற்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி?

இந்த உலகில் எல்லோருக்குமே பெரிய சவாலாக இருப்பது காமமே. பெரிய பெரிய சாமியார்கள் எல்லாம் கூட தடம் புரண்டு போகிறார்கள். சாமானியன் எம்மாத்திரம். காமம் உள்ளவன் கனவிலும் கடவுளை காண மாட்டான்.

மனிதன் காமத்திலிருந்து விடுபட்டு, ஒழுக்கத்துடன் வாழ்ந்து இறைவனை அடைய வழி கூறி அருளியுள்ளார்கள் ஞானிகள். 

மனதில் எழும் மும்மலமான ஆணவம், கன்மம், மாயையின் செயல் ஆசை ,காமத்தில் தான் உதயமாகிறது.

 “மாயை” மனிதனின் கர்ம வினைப்படி அவனை ஆட்டுவிக்கிறது.

சிக்கி விடாதே சீரழிந்து போவாய். ஆனால் மனிதன் காம வசப்பட்டு , மாதரின் மாய வலையில் அகப்பட்டு உழன்று உடலை புண்ணாக்கி மனதை கெடுத்து சீரழிவர்.சாவார் காம கண் கொண்டவன் காமாந்தகன் கடவுளை காணான். காம வசப்பட மனிதன் கண்ணிருந்தும் குருடனாய், செவியிருந்தும் செவிடனாய் வாழ்கிறான்.

நல்ல சறகுருவை நாடி வேத புராண உபதேசம் செவியில் கேட்க மாட்டான். மெய்ஞ்ஞானம் உணராமல் உடம்பை அழிகின்ற உடம்பு தானே சாகும் வரை இஷ்டம் போல் வாழலாம் என முட்டாள்தனமாக கருதி தன் உடலை புண்ணாக்கி கெட்டு குட்டி சுவராகி செத்தும் போவான்.

“அழியுடம்பை அழியாமையாக்கும் வகையறியீர்” என ஒரு ஞானி மனிதனை எச்சரிக்கிறார். ஆம் மானிடர் யாக்கை அழியக்கூடியது தான் மனம் போன படி வாழ்ந்தால். காமம் ஏன் ஏற்படுகிறது?

“இலையா மிடையி லெழுகின்ற காமம்” – திருமந்திரம் பாடல் 2141

மனிதன் பிறக்கிறான் – குழந்தை. ஒன்றுமே தெரியாது. பச்சை மண். எந்த குசவன் கையில் அகப்படுகிறதோ அந்தவித மண் பாண்டமாகிறான். ஆத்திக குடும்பத்தில் பிறந்தது ஆன்மிக சூழலில் வளர்வது ஆண்டவனை அறிய உணர வழிகாட்டும். நாத்திக குடும்பத்தில் பிறப்பது தான் பெரிய மேதை என கருதி முட்டாள்தனமாக வாழ்வது அந்த சூழ்நிலை இதுவரை யாரும் உருபட்டதேயில்லை. குழந்தை வளர்ந்து பாலனாகி பின் வாலிபனாகிறான். அப்போது நிகழும் உடல் வளர்ச்சி , பசி தாகம் தூக்கம் போல் காமமும் ஏற்படுகிறது மனிதனுக்கு. அந்த பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாலிப பிராயத்திலே ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் இந்த இனக்கவர்ச்சி , காமம் கட்டுப்பாடுடன் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

வாழ்க்கையில் இடைப்பட்ட காலத்தில் – வாலிபத்தில் வந்து வயோதிகத்துக்கு முன்னால் முடிந்து விடுவது மட்டுமல்ல. நமது உடலில் இடையில் ஏற்படும் – இடுப்பு பிரதேசத்தில் ஏற்படும் உணர்வாலும் காமம் தலை தூக்குகிறது.

இந்த இடையில் ஏற்படும் மாற்றமே , இடைப்பட்ட காலமே ஒரு மனிதன் பண்படும் காலமாகும். நமது முன்னோர்கள் மனித வாழ்வை மேம்படுத்த சமுதாய அமைப்பை ஏற்படுத்தி ஒழுக்கம், பண்பை போதித்தார்கள். பக்தியை ஊட்டினார்கள். இயல் இசை நாடகமென முத்தமிழாலும் இறைவனை வழிபட , உணர வழிகாட்டினார்கள். மனிதன் , மனித பிறப்பெடுத்ததோடு நின்று விடாமல் , மிருகம் போல வாழாமல் மனிதனாக வாழவும் வழிகாட்டினார்கள்.

மனிதன் எப்போது மனிதனாவான்? பஞ்சமாபாதகமான பொய், கொலை, களவு, கள், காமம் இவைகளை தன் வாழ்வில் சேர்க்காமல் இருந்தால் தான் மனிதன். மனதில் எழும் மும்மலமான ஆணவம், கன்மம், மாயையின் செயல் ஆசை , காமத்தில் தான் உதயமாகிறது. “மாயை” மனிதனின் கர்ம வினைப்படி அவனை ஆட்டுவிக்கிறது. சிக்கி விடாதே சீரழிந்து போவாய். காமம் மனித இயல்பு சீராக்கிக்கொள். திருமணமாகி ஏகபத்தினி விரதனாய் வாழு. மனைவியை காமக்கிளத்தி என்றும் சொல்வர். மனைவியோடு மட்டும் காமம் வைத்துக்கொள். பிற உலக மாதரெல்லாம் தாய் என்று கொள்.

மனைவியோடு மட்டும் மாதம் இருமுறை உறவு கொள்ளலாம். விந்துபலமே விந்துநாதம் பெற பேருதவியும் ஆகும். ஜாக்கிரதை. உடல் நலமாக , பலமாக, சீராக காம வசப்படாமல் இருக்க வேண்டும். காமத்தை ஆபாசமாக்கி விடாதீர்கள் அழிந்து தான் போவீர்கள். காமம் சாப்பாட்டில் சேர்க்கும் ஊறுகாய் போல இருக்க வேண்டும். இலேசாக தொட்டு கொள்ளலாம். ஊறுகாயை உணவாக கொண்டால் உயிர் தாங்காது. திருமணமாகும் வரை ஆணும் பெண்ணும் ஆன்மீக உணர்வோடு வாழ வேண்டும். பக்தி ஞான ஈடுபாடு உடையவர்களாக திகழ வேண்டும். நமது பாரத பண்பாடு இதுவே. திருமணமான பின்னரே கணவன் மனைவி கருத்தொருமித்து இல்லற நெறியோடு இறை உணர்வோடு வாழ வேண்டும். சற்புத்திரர் புத்திரிகளை பெற்று பக்தியை ஊட்டி பண்போடு வளர்க்க வேண்டும். பாலபிராயமுடியு முன்னே தக்கதொரு ஆன்மிக குருவிடம் சேர்ப்பித்து பக்தி ஞான பாடம் படிக்கச் செய்ய வேண்டும்.

பிள்ளைகளை பெற்றால் போதாது?! தக்கதொரு சன்மார்க்க குருவிடம் உபதேசம் பெறச் செய்ய வேண்டும். மாத , பிதா தன் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக குருவை காட்ட வேண்டும். குருவை காட்டாத பெற்றோர் வீண்.

திருமணத்திற்கு பின் தான் காமம். அதுவரை பக்தியுடன் ஒழுக்கத்துடன் பகவானை பணிய வேண்டும். பண்பட்ட வாழ்க்கை மனைவியோடு மட்டும் மாதம் இருமுறை உறவு கொள்ளலாம். விந்துபலமே விந்துநாதம் பெற பேருதவியும் ஆகும். ஜாக்கிரதை. உடல் நலமாக , பலமாக, சீராக காம வசப்படாமல் இருக்க வேண்டும். காமத்தை ஆபாசமாக்கி விடாதீர்கள் அழிந்து தான் போவீர்கள். காமம் சாப்பாட்டில் சேர்க்கும் ஊறுகாய் போல இருக்க வேண்டும். இலேசாக தொட்டு கொள்ளலாம். ஊறுகாயை உணவாக கொண்டால் உயிர் தாங்காது. திருமணமாகும் வரை ஆணும் பெண்ணும் ஆன்மீக உணர்வோடு வாழ வேண்டும். பக்தி ஞான ஈடுபாடு உடையவர்களாக திகழ வேண்டும். நமது பாரத பண்பாடு இதுவே.

திருமணமான பின்னரே கணவன் மனைவி கருத்தொருமித்து இல்லற நெறியோடு இறை உணர்வோடு வாழ வேண்டும். சற்புத்திரர் புத்திரிகளை பெற்று பக்தியை ஊட்டி பண்போடு வளர்க்க வேண்டும். பாலபிராயமுடியு முன்னே தக்கதொரு ஆன்மிக குருவிடம் சேர்ப்பித்து பக்தி ஞான பாடம் படிக்கச் செய்ய வேண்டும். பிள்ளைகளை பெற்றால் போதாது?! தக்கதொரு சன்மார்க்க குருவிடம் உபதேசம் பெறச் செய்ய வேண்டும். மாத , பிதா தன் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக குருவை காட்ட வேண்டும். குருவை காட்டாத பெற்றோர் வீண். திருமணத்திற்கு பின் தான் காமம். அதுவரை பக்தியுடன் ஒழுக்கத்துடன் பகவானை பணிய வேண்டும். பண்பட்ட வாழ்க்கை அருள்வான் ஆண்டவன்.

கடவுளே என்றிருந்தால் , பெண்களையெல்லாம் தாயாக பார்த்தால் காமத்திலிருந்து தப்பிக்கலாம். அபிராமி பட்டர் எல்லா பெண்களையும் தாயாக பார்த்தார்! எல்லா ஞானிகளும் காமத்திலிருந்து மீண்டதால் தான் ஞானம் பெற்றனர். காமத்தில் மூழ்கி கிடந்த அருணகிரி நாதர் காமத்தை விட்டார் – கடவுளை தொட்டார்.

காமம் விலக — கடவுளை நினை. கடவுளை பற்றி பேசும் சத்சங்கத்தில் சேர்.அசைவ உணவு காமத்தை உண்டாக்கும். சைவ உணவே சன்மார்க்க உணவு. சாத்விக குணம் சைவ உணவு உண்டால் தான் வரும்.

அன்பு காட்டு. ஆசை கொள்ளாதே. காம உணர்வுக்கு அடிமையாகாதே.

போகர் சித்தர் பெண்ணோடு போகம் பண்ணியவரல்ல. பரம்பொருளோடு புருசோத்தமனான இறைவனோடு எப்போதும் கலந்திருந்தவர். அதனால் தான் போகர்.

“பிறந்த இடத்தை நாடுதே பேதை மட நெஞ்சம் ! கறந்த இடத்தை நாடுதே கடைக்கண்” என்றார் பட்டினத்தார். இந்த பாட்டிற்கு படித்த முட்டாள்கள் எல்லாம் ஆபாசமாக பொருள் கொண்டனர். பட்டினத்தார் மாபெரும் ஞானியல்லவா? அவர் உயர்ந்த ஞானத்தை அல்லவா சொல்லியிருப்பார். அதை சிந்திக்க வேண்டாமா?அடியேன் 1992 ல் முதன் முதலாக எழுதிய “கண்மணி மாலை” நூலிலேயே இதன் ஞான விளக்கத்தை சொல்லியிருக்கிறேன். திருஅருட்பிரகாச வள்ளலார் அருளால் அடியேன் எழுதி வெளியிட்டேன். இதுவே மெய்ஞ்ஞானம்.

பிறந்த இடம் – நாம் பிறந்தது பரமாத்மாவிலிருந்து அல்லவா. நம்மை பேதை என்கிறார் – பெண்ணின் பருவம் இது. ஜீவாத்மாவான நாம் பெண் அம்சம் பேதை பெண். சீவனாகிய பெண் பேதையாகிய நாம் நாட வேண்டியது எப்போதும் சிவனாகிய பரமாத்மாவாகிய நாம் பிறந்த இடத்தையே. கறந்த இடம் – நாம் கண்மணி ஒளியை ஞான சற்குரு மூலம் தூண்டி பின் தொடர்ந்து தவம் செய்ய செய்ய நம் கண் கடைசியில் உள்ளே போய் சேரும் இடம் கடைக்கண் இடம் ஆத்மஸ்தானம் அங்கே போனால் கிட்டும் அமுதம். அந்த அமுதம் சாப்பிடவே ஜீவாத்மாக்களெலாம் துடித்து கொண்டிருக்கிறது. கடைசியில் கண் போய் கடைக்கண் சேர்ந்து நாடினால் தான் அமுதம் கிட்டும். அதை தான் பட்டினத்தார் அழகாக பாடி அருள்கிறார்.

காமம் நிறைந்த மனிதனுக்கு , மனம் படைத்தவனுக்கு எல்லாமே ஆபாசமாகாத் தான் தெரியும். கடவுளை சதா சர்வ காலமும் சிந்தையில் நிறுத்தி தவம் செய்பவர் எங்கும் எதிலும் காண்பர் கடவுளை. அறிவுடையோர் எப்பொருள் யார் சொன்னாலும் மெய்ப்பொருளாகவே காண்பார். அறிவு தானே ஞானம்.

“காமமகற்றிய தூயனடி சிவகாமி நேயனடி” என்று வள்ளலார் பாடுகிறார். நாம் சிவகாமி அன்னையை சரணடைய வேண்டும். சதாகாலமும் சிவத்தை காமுற்றிருப்பவளே சிவகாமி. நமக்கு சிவத்தை காமிக்கின்றவளே , காண்பிக்கின்றவளே சிவகாமி. அந்த சிவகாமி தான் – தாய் – வாலை- கன்னி “யா” குமரி. தாயை பணிந்தால் சரணடைந்தால் காமத்திலிருந்து விடுபடலாம். காமம் அகற்றி அருள்வதால் அவள் காமாட்சி. பணியுங்கள். ஒழுக்கமான பண்பான வாழ்வருள்வாள் நமக்கு உயிர் தந்த அன்னை வாலை .


திருச்சிற்றம்பலம்.

_______________


www.vallalyaar.com இணைய தள பதிவில் இருந்து

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

கண் காணிப்பவனை கண்டவர் களவு செய்யமாட்டார்

 "கண்காணி யில்லென்று கள்ளம் பலசெய்வார்
 கண்காணி யில்லா விடமில்லை காணுங்கால்
 கண்காணி யாகக் கலந்தெங்கு நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே"

திருமந்திரம் - பாடல் - 2067

உலக மக்கள் பலரும் நம்மை யாரும் பார்க்கவில்லை என்று கள்ளம் - தப்பு - பாதகங்கள் பலவும் செய்வர்! அவன் செய்கை ஒவ்வொன்றையும் கண்காணித்துக் கொண்டே கவனித்துக் கொண்டே அவன் கண்ணிலேயே ஜோதியாக ஒருவன் உள்ளான்! 

எப்போதும் நம் கண்மணி ஒளியாக துலங்கும் இறைவன் நம்மை பார்த்துக் கொண்டேயிருந்து நம் செயலுக்கு தக்கவாறு நல்லது கெட்டது தருகிறானே அதனால்தானே நாம் இன்பமும் துன்பமும் அடைகிறோம்! இதை உணர்ந்தால் அறிந்தால் தப்பு செய்வானா?! இந்த பிரபஞ்சமெங்கும் இறைவன் நிறைந்துள்ளானே! ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக இருக்கின்றானே! 

அப்படியானால் யார் எங்கு தப்பு செய்தாலும் அவன் அறிவானே! எங்குமாய் நிறைந்த அந்த கடவுள் நம் கண்களிலும் தன்னை காண்பிக்கிறானே! என்ன அதிசயம் இது! நம் கண்ணிலேயே அவனை காணலாம்! கண்ணிலே காண்பித்து, கடந்துள்ளே போனால் கடவுள் அவனை காணலாமே! கண்காணித்து நம்மை கடத்துள்ளே புகச் செய்த அவன் பெருங்கள்ளன் அல்லவா?! 

மறைந்திருந்தல்லவா நம்மை தன்னடியில் வீழச் செய்தான்! நம்மையும் நல்வழி நடக்கும் உத்தமனாக்கியருளினான்! தம்மை கண்காணிப்பவனை கண்டவர் களவு செய்யமாட்டார்! கங்காணி கண்காணிப்பவன் - கவனிப்பவன் எங்குமுள்ளான்! எனவே தவறுசெய்யாதே! மானிடா திருந்து! இல்லையேல் கங்காணி தக்க தண்டனை தருவார்!

                              🔥அருளியவர்🔥: 

    ஆன்மீக செம்மல், ஞானசித்தர், ஞானசற்குரு சிவ செல்வராஜ்  அய்யா🔥

www.vallalyaar.com

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

திருவாசகம் - சிவபுராணம் -2

             " ஏகன்  அநேகன்  இறைவ  னடிவாழ்க "

             ஏகன்  -  இறைவன்  ஒருவரே!  அநேகன்  -  எல்லா  ஜீவராசிகளிடத்தும் 
உயிராக,  அநேக  யோனி  பேதமாகவும்  இறைவன்  துலங்குகிறான்!  இப்படி 
எல்லாம்  வல்ல  இறைவன்  ஒருவரே,  எல்லா  உயிர்க்கும்  உயிராக  துலங்குகிறார்!
அப்படி  அவர்  துலங்கும்  இடமே  அவர்  திருவடியாக  கருதப்படும்.  அது  நமது 
கண்களே.  அது  வாழ்க  என்றுரைக்கிறது  மணிவாசகமான  திருவாசகம்!


              " வேகங்  கெடுத்தாண்ட  வேந்த  னடிவெல்க "

             நம்  மனமே  அதிவேகமாக  செயல்படுவது.  நாம்,  நமக்கெல்லாம் 
வேந்தனான -  அரசனான  அந்த  இறைவன்  திருவடியில்  சரணடைந்தால்,
நம்  மனதை  வேகத்தை  கட்டுப்படுத்தி,  பின்  இல்லாமலாக்கி  அருள்வான் 
அத்திருவடி  வெல்லட்டும்.

              " பிறப்பறுக்கும்  பிஞ்ஞகன்றன்  பெய்கழல்கள்  வெல்க "

             எண்ணிலா  பிறப்பெடுத்து  கர்மவினையால்  துன்புறும்  நம்மை  
மீண்டும்  பிறவாமல்  தடுத்து  காப்பது  இறைவன்  திருவடி -  கழல்களே 
-  கண்களேயாகும்!  அது  எப்படி  இருக்கிறது  தெரியுமா?  பிஞ்சாக  -
இளசாக -  பாப்பா  என  சொல்வோமல்லவா?  நம்  கண்மணிதான்  அப்படி 
உள்ளது.  அங்கே  தான்  கண்ணீர்  அருவியென  பெய்து  கொண்டே  இருக்கும் 
தவம்  செய்யும்  போது!  அது  வெல்லட்டும்.  வெற்றி  கிட்டட்டும்.

              " புறத்தார்க்குச்  சேயோன்றன்  பூங்கழல்கள்  வெல்க "

             திருவடியை  அடையாதவனுக்கு,  அறியாதவருக்கு  புறத்தார்க்கு 
எட்டாத  தூரத்தில்  இருப்பவன்  இறைவன்!  இறைவன்  திருவடியே  நம் 
கண்கள்  என  அறிந்தோர்க்கு  எட்டை  எட்டிப்  பிடித்தவர்க்கு  இறைவன் 
குழந்தையைப்  போலவே!  அவன்  கழல் -  திருவடி -  பூப்போன்ற  பாதமே!
அது  வெற்றி  பெறட்டும்.

               " கரங்குவிவார்  உள்மகிழுங்  கோன்கழல்கள்  வெல்க "

              இரு  கரங்கூப்பி  வணங்குதல்  புற  வணக்கம்.  இரு  கரம்  என்பது 
மெய்ஞானத்தில்  இரு  கண்களே!  இறைவனுக்கு  கால்  நமக்கு  கை  நம்  
இரு  கண்களே!  நம்  இரு  கரங்களை  -  கண்களை  உள்ளே  குவிப்பதே 
ஞான  தவம்!  அங்ஙனம்  தவம்  செய்வோருக்கு  மகிழ்வுடன்  பேரின்பம் 
அருளுவது  இறைவன்  -  தலைவன்  திருவடிகளே!  அது  வெல்க!

               " சிரங்குவிவார்  ஓங்குவிக்குஞ்  சீரோன்  கழல்  வெல்க "

              நமது  சிரசின்  உள்ளே  மத்தியில்  நமக்கு  சீர் -  கண்  கொடுத்த  
சீரோன்  இறைவன் -  ஆத்மாவாய்  இருப்பதை  அறிந்து,  சீர்கொண்டு -
கண்களை  அகமுகமாக  குவிப்பவரை -  திருவடி  ஒளியை  ஆத்ம  ஜோதியாய் 
ஓங்கச்  செய்வான்  இறைவன்!  அந்த  திருவடி  வெல்க. 

ஞான  சற்குரு  சிவசெல்வராஜ்  ஐயா 
www.vallalyaar.com


திருவாசகம் - சிவபுராணம் -1

           " நமச்சிவாய  வாஅழ்க  நாதன்தாள்  வாழ்க 
             இமைப்பொழுதும்  என்நெஞ்சில்  நீங்காதான்  தாள்வாழ்க "

             இறைவனை  வாழ்த்தி  நமச்சிவாய  வாழ்க  என்றும்,  நமச்சிவாயா  
என்னிடம்  வா!  என்னை  நீ  அள்ளுக -  அள்ளிக்கொள்  -  சேர்த்துக்கொள் 
என்பதனையே  வாஅழ்க  என்றது  மணிவாசகம்!

             இறைவனே  எவ்வுயிர்க்கும்  நாதன்  -  தலைவன்.  அந்த  நாதனுடைய 
தாள்  திருவடி  -  மெய்ப்பொருள்  -  நம்  கண்கள்.  நம்  கண்களே  நம்  நாதனாம் 
இறைவனின்  திருவடி  அது  வாழ்க  என்றது  மணிவாசகம்!

            இறைவன்  இமைப்பொழுதும்  நீங்காமல்  என்  நெஞ்சில்  -  நெஞ்சு 
என்பது  ஐஞ்சும்  சேர்ந்த  இடம்!  அதாவது  ஐம்பூதமும்  ஒத்த  இருக்கும் 
இடம்!  நமது  கண்ணிலே  தான்  இருக்கிறது.  கண்ணையே  நெஞ்சு  என்பதே 
மணிவாசகம்!  அப்படி  சதா  சர்வ  காலமும்  என்  நெஞ்சிலே,  என்  கண்ணிலே,
மணியிலே  ஒளியாக  ஒளிரும்  தாள்  -  திருவடி  வாழ்க!

            " கோகழி  யாண்ட  குருமணிதன்  தாள்வாழ்க "

             கோகழி  -  பெரிய  உப்பு  ஆறு.  அதாவது  கழிமுகம்  என்போமல்லவா?
அதாவது  ஆறு  கடலில்  கலக்கும்  இடம்!  இங்கே  பெரிய  கழிமுகமாக  நமது 
கண்ணே  விளங்குகிறது!  கண்ணீர்  உப்புதானே!  கோ  என்றால்  இறைவன் 
-  தலைவன்!  இறைவன்  உள்ளே  இருக்கிறார்  அதன்  அருகே  கழிமுகம்!
கடலாகிய  இறைவனின்  முன்  உள்ள,  ஆறு  கடலில்  கலக்குமிடம்  கழிமுகம்!
அதனை  ஆண்டு  கொண்டிருப்பவன்  தான்  குருவானவன்  அதுவே  நம்  மணி 
கண்மணி  அதுவே  இறைவன்  திருவடி  அது  வாழ்க  என்பதே  மணிவாசகம்.


           " ஆகமம்  ஆகிநின்  றண்ணிப்பான்  தாள்  வாழ்க "

            ஆகமம்  எல்லாம்  -  வேதங்கள்  ஆகமங்கள்  புராண  இதிகாசங்கள்  எல்லாம் சொல்வது  இறைவனைப்  பற்றித்தானே!  எல்லா  ஆகமப்  பொருளுமாகி  நிற்பவன் இறைவனே!  அவன்  வேறு  எங்கோ  தூரத்தில்  இல்லை!  நமக்கு  வெகு  அண்மையில்தான்! நம்  உடலிலே  கண்ணிலே  மணியோடு  ஒளியாகத்தான்  துலங்குகிறான்  அதுவே  இறைவன்  திருவடி!  வாழ்க!  என்கிறது  மணிவாசகம்!

ஞான  சற்குரு  சிவசெல்வராஜ்  ஐயா 
www.vallalyaar.com

Popular Posts