ஞாயிறு, 12 மார்ச், 2017

நெஞ்சு கனகல்லும் நெகிழ்ந்துருக


ஒக்க நெஞ்சமே ஒற்றி யூர்ப்படம்
பக்க நாதனை பணிந்து வாழ்த்தினால்
மிக்க காமத்தின் வெம்மை யால்வரும்
துக்க மியாவையும் தூர ஓடுமே

மனமே மனிதர்கள் காமத்தால் ஏற்படும் உடல் சூட்டையும்
அதன் பின்னால் வரும் துன்பங்கள் யாவையும் நீங்க தன்
உடலில் ஒற்றியிருக்கும் -கண்மணியின் உள் ஒற்றியிருக்கும்
அந்த ஒளியை பற்றி, மேலும் மேலும் பற்றி வளர்ச் செய்தால்
தவம் செய்தால் தப்பலாம்! இன்பமாக வாழலாம். மும்மலமாகிய
விஷத்தை கொண்டநாதன் கண்மணி ஒளி -படம் பக்கநாதன்!

கல்லை யொத்த என் கன்ம நெஞ்சமே - பாடல் 7

கல் போன்றது என் கன்ம நெஞ்சம் - கல்மனம். நம் மனம் - கன்ம நெஞ்சம்.
அதாவது நாம் இப்பிறவியில் கொண்டுவந்த பிராரத்துவ கர்ம வினை நம்
மனம் மூலமாக அரங்கேறுகிறது. பிறந்து நடத்தும் ஆகான்மிய கன்மமும்
நம் மனம் மூலமே நடக்கிறது.  

'தவத்தால் இவ்விரண்டும் இல்லாது போகையில் வரும் சஞ்சித கர்மமும்
வரும் இடம் மனம் தான். வினையை தாங்குவதால் சராசரி மனிதனின் மனம்
கல்லாகி விடுகிறது. "நெஞ்சு கனகல்லும் நெகிழ்ந்துருக" என ஒரு ஞானி பாடுகிறார்.

மனம் கல்லான மனிதன் தான் யார் என உணரத்தான் நம் முன்னோர்கள் கோயிலில் கல்லால் இறை உருவத்தை பலவாராக வடித்தார்கள்! கல்லான மனம் படைத்த  மனிதன் மனம் உருக உருக கடவுள் காட்சி அனுபவம் பெறுவான்! கோவிலில் கல்லாக வடிக்கப்பட்ட கடவுள் சிலை முன் இவன் போய் கல்லாக உட்கார்ந்து இருப்பானேயானால் கர்ப்பகிரகத்தில் உள்ள கல் பேசும். கல் போல் அமர்ந்த மனிதன் காணுவான் கண்ணாலே!

உடல் கல்லாகிவிட்டால் கன்மட்டுமே உணர்வோடு இருப்பதை அனுபவத்தில்
உணரலாம்! கல்லான மனம் கரைய கண்குளிர தவம்  செய்ய வேண்டும்.
உடல் கல்லாக வேண்டும். மனம் இல்லாது போக வேண்டும்! மனம் இல்லாது
போனால் வினை இல்லாது போக வேண்டும்! மனம் இல்லாது போனால்
வினை இல்லாது போகும்! வினை இல்லாது போனால் பிறப்பு இறப்பு
இல்லாது போகுமே! அதுதானே வேண்டும்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

பொருள் / அருள் இல்லார்க்கு?

2.16 எழுத்தறியும் பெருமான் மாலை

பொன்னைமதித்தையா நின் பொன்னடியை போற்றாத ஏழைகட்கும் ஏழை கண்டாய் - பாடல்19

பொன்னை பெரிதாக மதித்து அதனை பெற அல்லும் பகலும் பாடுபடும் இவ்வுலகில் பொன் பொருள் இல்லாதவரை ஏழை என்பர்! ஆனால் இறைவனின் பொன்னடியை - தங்க ஜோதியை உணராதவன்
தான் உண்மையிலே ஏழையிலும் ஏழை!! பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை! அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை!

பொருள் என்றால் பொன் பணம் அல்ல!? மெய்ப்பொருள்! மெய்ப்பொருள் உணராதவன் தவம் செய்யாதவன் இவ்வுலகில் வாழ முடியாது!

வினைகளுக்குட்பட்டு ஜனன மரண பிணியில் மாட்டிகொள்வான்!
 இவ்வுலகம் சிறப்பாக வாழ வேண்டுமானால்
தன்னிலே இருக்கும் பொருளை - மெய்ப்பொருளை அறிய வேண்டும். குரு மூலமாக உணர வேண்டும். இவ்வுலகமே இல்லையெனில் அவ்வுலகம் எங்ஙனம் கிட்டும்! இவ்வுலகில் பொருள் அறிந்து குரு மூலமாக உணர்ந்து தவம் செய்பவர்க்கே அவ்வுலகம்
கிட்டும். அ + உலகம் = அவ்வுலகம் கிட்டும் இறைவன் இருக்கும் உலகம் கிட்டும்!  அதைவிட பெரும்பேறு உண்டுமா?!


ஞான சற்குரு சிவசெல்வராஜ்

தூக்கத்தை ஒழி

தூக்கமில்லா ஆனந்ததூக்கம் - பாடல் 22

தூக்கம் என்பது மனிதனின் உடல் உள் உறுப்புக்கள்
சோர்வடையும் போது தேவையான ஒன்று உள் உறுப்புகள்
அயர்ந்து ஓய்வு கொள்வது தூக்கம்! தூங்கும் போது உயிர் ஆதாரத்தில்
ஒடுங்கும்! சராசரி மனிதனுக்கு தூக்கம் இன்றிமையாதது! ஆனால்
தவம் செய்வோர்க்கு தூக்கம் ஒரு தடை! "தூங்காமல் தூங்கி " சுகம்
பெறுவது எக்காலம் என ஒரு சித்தர் பாடியுள்ளார்!

நாம் கண்மணி ஒளியில் உணர்வை வைத்து தவம் செய்ய செய்ய ஒளிபெறுகி உயிர் ஆற்றல் பெருகி  உடல் உள் உறுப்புகள் அதிக சக்தி பெறும், சோர்வடையாது, உற்சாகம் கூடும் உணர்வு பெருக பெருக  ஆனந்தம் மேலிடும் அதுவே ஆனந்த தூக்கம் என வள்ளலார் கூறுகிறார்.

சும்மா சும்மா தூங்கி தூங்கி வழிபவன் முடிவில்
மீளாத தூக்கத்தில் ஆழ்ந்துவிடுவான்! இறந்து விடுவான்! தூக்கத்தை
ஒழித்தவனே! உடலை, உணர்வுடையவனாக உற்சாகமாக வைத்திருப்பவனே
நெடுநாள் வாழவான்! அதற்க்கு தவம் தேவை! "ஒருவன் ஒரு நாளைக்கு
ஒருமணி நேரம் தூங்க பழக்கம் செய்வானாகில் அவன் ஆயிரம் வருடம்
ஜீவித்திருப்பான்" என வள்ளலார் கூறுகிறார்! வள்ளலார் சொன்ன தூக்கம்
ஆனந்த தூக்கம்! தூங்காமல் தூங்கி சுகம் பெரும் தவ நிலை! உடல்
தூங்காமல் மனம் மயங்காமல் உணர்வுறு நிலையில் சும்மா இருப்பதே
தூங்காமல் ஆனந்தமாக தூங்குவது ஆகும்! ஒருநாளைக்கு ஒரு மணிநேரம்
தூக்கமில்லா ஆனந்த தூக்கம் கொள்வார் ஆயிரம் வருடம் ஜீவித்திருப்பார்
இதுதான் வள்ளலார் வாக்கு!

Popular Posts