உயிரை வளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உயிரை வளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

உயிரை வளர்ப்பதே உடம்பினை வளர்க்கும் உபாயம்!

உடல் பற்றின்றி உயிரை பற்றியே பரம்பொருளை அடைந்துவிடலாம்!
விட்டதடி ஆசை புளியம் பழத்தோட்டோடு என்பர்! நாம் உடலை வெறுக்க வேண்டாம்!

*உயிரை - உயிரொளியை ஓங்கச் செய்தாலே போதும்!*
*உடல் பக்குவமாகிவிடும்!*
இது புரியாத யோகிகள் உடலை அலட்சியபடுத்தி கெடுத்துக் கொள்வர்.
*இது மாபெறும் தவறு!*

பட்டினி கிடந்து உடலை வருத்தி கடுமையான யோகம் செய்வர்!

தவறு!

*உடலை புண்ணாக்காதீர்!*. உயிரை போற்றுங்கள்!

இன்னும் சிலர் உடல் மிக முக்கியம் எனக் கருதி காய சித்திக்காக கல்பங்கள் மூலிகை சாப்பிடுவர் இது அதைவிட முட்டாள்தனம்!

*வெறும் உடலை வைத்து என்ன செய்ய!*

*இதில் சூட்சுமம் என்னவென்றால், நீங்கள் உயிரை வளர்த்தால் போதும் உடல் பக்குவமாகிவிடும்!*

"உடம்பினை வளர்க்கும் உபயம் அறிந்து உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே"

- திருமூலர்

உயிரை வளர்ப்பதே உடம்பினை வளர்க்கும் உபாயம்!
அ - உ - வில் ஒளியை பெருகச் செய்வதே அந்த உபாயம்!
இதுவே மதியாகும்!
*ஞான சற்குரு சிவ செல்வராஜ் ஐயா*
நூல் : திரு மணி வாசக மாலை
பக்கம் : 107
குருவின் திருவடி சரணம்

www.vallalyaar.com

Popular Posts