செவ்வாய், 22 டிசம்பர், 2015

வீணே ஏன் காலத்தை போக்குகிறாய்?



அன்னையை கோவிலில் சென்று வணங்குவது பக்தி, பூசாரியிடம்
சொல்லி அர்ச்சனை அபிசேக ஆராதனை செய்யச் சொல்லி
பார்த்து மகிழ்வது பக்தி! நாமே அம்பிகை விக்கிரத்தை வைத்து
நம் விக்கினங்களை இதை எல்லாம் செய்தால் கர்மம்! அம்பிகையை
உபசாரத்தாலும் முத்திரைகளாலும் மந்திரத்தாலும் தன்னுடலில்
பாவித்து செய்வது தந்திர மார்க்கம்! செய்பவன் தந்திரி! அம்பிகை
உயிராக வாலையாக நம் சிரஉள் நடுவிலே நம் ஆத்ம ஜோதியாக
துலங்குகிறாள் என்பதை அறிந்து அதற்காக விழி வழியே
விழித்திருந்து தவம் செய்பவனே தபஸ்வி ! ஞானி! முடிவில்
அனைவரும் ஞானத்திற்கு வந்தாக வேண்டும்! வீணே ஏன்
காலத்தை போக்குகிறாய்? இப்போதே வந்துவிடு!

வெள்ளி, 6 நவம்பர், 2015

சிவாய நம என சிந்தி!!

சிவாய நம என சிந்திப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை!
உபாயம்  இதுவே! மதியாகும்! என ஒளவையார் கூறுகிறார்!

சிவாய நம என சொல்லி  கொண்டிருக்க சொல்லவில்லை ஒளவையார் ! சிந்தித்துக் கொண்டு தான் இருக்க சொல்கிறார்?!

எப்படி?

பஞ்சட்சரமான நமசிவாய என்பதில்
சூட்சும பஞ்சட்சரமான சிவாய நம என்பதில்
சிவா-ய நம எனப்பாருங்கள்!

'சி' என்பது அக்னி! அக்னி இருக்கும் வாய் கண்! அதை நம வணங்கி
கொண்டிருங்கள்!

எப்படி?

கண்ணில் மணியில் மத்தியில் உள்ள
நெருப்பை ஒளியான கண்ணனை தியானியுங்கள் என்று யூகித்து
மதியால் - அறிவால் சிந்தித்து உணரவேண்டும் என்கிறார் ஔவையார்!
நம் வினைதிரை அறுந்து போக உள் ஒளி பெருக வேண்டும்!
இதுவே உபாயம்!

செவ்வாய், 27 அக்டோபர், 2015

கர்மத்தால் மறைந்து கிடக்கும் ஆன்ம ஒளி!!


ஸ்ரீ வில்லி செல்வி பாடினாள் திருப்பாவை! ஆவுடையார் கோயில் கண்ட, கொண்ட அருட்செல்வன் பாடினான் திருவெம்பாவை! வைணவமும் சைவமும் அருட்பெரும்ஜோதி ஒன்றே அகில உலகக்கும் ஒரே ஆண்டவன் என அழகாக போற்றுகிறது! ஆண்டாளின் ஆண்டவனும், மாணிக்க வாசகரை ஆட்கொண்ட ஆண்டவனும் ஒன்றே!?  மூளையை செயல்பட வைப்பது எப்படி?

நாம் செய்ய வேண்டியது என்ன?

தூங்கி கிடக்கும் ஆன்மாவை தட்டி எழுப்புவதே ஆத்ம சாதனை! கர்மத்தால்
மறைந்து கிடக்கும் ஆன்ம ஒளியை பிரகாசிக்க செய்வதே ஞான சாதனை.

இறைவன் மீது பக்தி பண்ணு! ஒரு பூவாவது  அவன் திருவடியில்
சமர்பித்து பணி! இறைவன் திருவடியில் சமர்ப்பித்து பணி! இறைவன்
திருவடியாகிய உன் கண்ணில் துலங்கும் இறைவனை பணி! உன்
கண்ணாகிய -கண்மலர் இரண்டில் ஒன்றையாவது இறைவனுக்கு
பக்தியுடன் சமர்ப்பித்து விடு! வருவான் பகவான்!

பாடு,கத்து,கதறு தேவார திருவாகச திவ்ய பிரபந்த திருவருட்பாவை
பாடு! உன்மனம் போல் இறைவனை போற்று புகழு பாடு!உன்னை
நீ உணர உன்னிலே இருக்கும் இறைவனிடம் மன்றாடு! அழு
கதறி அழு! தேம்பி தேம்பி அழு! அழுதால் பெறலாம் அவன் அருளை!
அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்! வாலை அமுதம் தருவாள்!

திங்கள், 26 அக்டோபர், 2015

சன்மார்க்கம் - திருமூலர்

தன்னெறி யாவது சன்மார்க்க  மாமே!  - திருமூலர்



தன் நெறி - நான் யார் என அறியும் நெறி! நான் ஜீவனமா!
பரமாத்மாவின் அம்சம்! நம் தலை நடுவுள் இருகண்ணும்
உள் சேரும் இடத்தில் உள்ளதே நம் உயிர்! இரு கண்மணி
வழி உள் சென்று உயிரை அடைந்தாலே நான் யார் என
அறியலாம்! இதை போதிப்பதே சன்மார்க்கம்!
இதுவரை இந்த உலகத்தில் தோன்றிய அனைவரும்
போதித்தது சன்மார்க்க நெறியே!


ஞான சற்குரு சிவசெல்வராஜ்


சனி, 24 அக்டோபர், 2015

ஆத்மாவே சைவ சமயத் தலைவன்

சைவ சமயத் தனிநாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வ சிவநெறி சன்மார்க்கஞ் சேர்த்துப்ப
வையத் துளார்க்கு வகுத்து வைத்தானே! - திருமூலர்

சைவ சமயத்தின் தனி நாயகன் தனிப்பெரும் தலைவன்
நந்தி! நம் தீ! ஆத்மாவே சைவ சமயத் தலைவன் என்பதை
முதலில் உணரவேண்டும்! அந்த இறைவனே நந்தியாக
வந்தமர்ந்து ஜீவர்களாகிய நாம் உயிவதற்காக குருநெறி
உபதேசித்தார் தட்சிணா மூர்த்தியாக! ஞான உபதேசம்
ஞான தீட்சை  குரு மூலம் பெற்று தெளிவு பெற வேண்டும்!
தவம் செய்ய வேண்டும்! அது என்ன தெரியுமா? எப்படி
தெரியுமா? தெய்வ  சிவ நெறியாவது சன்மார்க்க நெறியே!
எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணுவது அவர்களுக்கு
இரக்கம்  காட்டி நன்நெறிப்படி ஒழுக்கமாக இருப்பதே தவம்
குரு மூலம் கற்று செய்வதே சன்மார்க்கம் ஆகும்! சன்மார்க்க
சாதனையே நம்மை இறைவனிடம் சேர்ப்பிக்கும் என எல்லா
ஞானிகளும் உபதேசித்துள்ளனர்! சைவ சமயமென்றால்
சன்மார்க்க நெறியே! சன்மார்க்க நெறி காட்டுவது நந்தியை
அடையவே! நந்தியை அடைந்தாலே சிவத்தை காண
முடியும்! சிவமே-ஒளியே  அருட்பெருஞ்ஜோதியே இறைவனாம்!

வெள்ளி, 23 அக்டோபர், 2015

மாயையை வெல்ல யாரை பணிவது?

சக்தியென் பாளொரு சாதகப் பெண்பிள்ளை
முக்திக்கு நாயகி என்ப தறிகிலர்
பத்தியை பாழில் உகுத்தஅப் பாவிகள்
கத்திய நாய்போற் கதறுகின் றாரே!


















சக்தி - வாலை-கன்னி ய குமரி - பாலா - அகிலாண்ட
கோடி பிரம்மாண்ட நாயகி - மனோன்மணி தாய் நமது
இடதுகண்ணாக சந்திர கலையாக மணி ஒளியாக
துலங்கும் பெண்பிள்ளை! அவள் நமக்கு சாதகமாகவே
 இருப்பாள்! அம்மா தாயே நீயே கதி உன் பாதம் கதி
என சரணடையுங்கள்! அவள் சகாயத்தால் சற்குருவை
பெற்று தவமுறை அடைந்து வைராக்கியத்துடன்
தவம் செய்து அவளே முக்தியடைய அமுது தருவாள்
முக்திக்கு நாயகி என்பதை அறியலாம் உணரலாம்
அடையலாம்! தாயை அறியாதவர்கள் தாயை பணியாதவர்கள் மாயையிற்சிக்குண்டு பக்தி நெறி அறியாமல் பாழாய் போவர்!
அதுமட்டுமன்றி தான் தான் பெரியவன் என நாய் போல்
கத்துவர் முட்டாள்கள்!  என திருமூலரே கூறுகிறார்!
சக்தியை பணிந்தால் உனக்குள் சக்தி பிறக்கும்! ஞானம் பெறலாம்!

பச்சை புறா??

ஓங்காரி என்பா ளவளொரு  பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை யுடையவள்
ஆங்காரி யாகியே ஐவரை பெற்றிட்டு
ரீங்காரத்துள்ளே யினிதிருந் தாளே

ஓம் பிரணவ மந்திரத்தின் ஒலியாகும் அவள் !
அதனால் தான் அவளை ஓங்காரி என்பார்! அவள் பெண்!
சிவத்தின் சரிபாதி! வாலை! குழந்தை! உலகுக்கே தாய்!
ஆனால் கன்னி! நீங்கத பச்சை நிறத்தையுடையவள்! சிவம்
செம்மை நிறம் உடையது! நாம் தவம் செய்து வரும் போது
பச்சை நிறம் தோன்றும்! இதையே தக்கலை ஞானமா மேதை
பீர்முகமதுவும் பச்சை புறா வந்து மேயும் அதை பாங்குடனே
பிடித்து! என்று பாடி அருள்கிறார்!

திருமூலர் சொல்லும் சிறுமி?

செம்பவளத்திரு மேனி சிறுமியை
நம்பி என் உள்ளே நயந்து வைத்தேன்  - திருமூலர்

சக்தி - வாலை - தாய் செம்பவளத்திரு மேனியுடைய சிறுமி!
பாலா! 6 வயது குழந்தை! உலகுக்கு அவள் தாய்! அவள்
கோயில் கொண்ட ஊரே கன்னி 'ய'  குமரிக்கு வாருங்கள்!
பாருங்கள்! தாயின் திருவடியில் சரண் அடையுங்கள்!
அருள் பெறலாம்! கண்மணி ஒளியில் மனதை நிறுத்தி
சக்தியுடன் வைராக்கியத்துடன் இருந்து தவம் செய்தாலே
ஞானம்  கிட்டும்! திருமூலர் சொல்லும் சிறுமி வாலை
கன்னி 'ய' குமரியிலே.

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

புதன், 21 அக்டோபர், 2015

ஸ்ரீ வித்யை - பாலா



கன்னியாகுமரி பகவதியே பாலா - வாலை! திருக்கடையூர்
அபிராமியும் பாலாவே! அபிராமி பட்டருக்கு அருளியது
வாலையே! மதுரை மீனாட்சி பாலாவே! குமாரகுருபருக்கு
அருளியது வாலையே! விருதாச்சலத்தில் பாலாம்பிகை
தனி சந்நிதியில் அருள்புரிகிறாள்! வைத்தீஸ்வரன் கோவில்
அம்பிகை பெயரும் பாலாம்பிகை!

வைதீக முறைப்படி பாலா மந்திரம் பிரசித்தம். ஸ்ரீ வித்யை
உபாசகர்கள் பாலாவை ஆராதிப்பார்கள் அது பக்தி கர்ம நிலையே!
ஞானம் அதி தீவிரவாதிகளுக்கே கிட்டும். அபிராமி பட்டரை
போல விளங்க வேண்டும்!

நான் யார் என அறியும் ஞான நிலையே எளிது! சித்தர் நிலை!
தாயல்லவா? எல்லோருக்கும் கருணை கிட்டும்! குழந்தை -
பாலா-வாலையல்லவா ஞான விளையாட்டு விளையாடலாம்
வாங்க! விளையாட்டாகவே தவம் செய்யலாம்! சும்மாவே
இருக்கலாம்! குருவை பணிந்து எட்டிரண்டு கூட்டி  பத்து
என்று அறி! அறிவு துலங்கும்! அதுவே ஞானம்! பத்தாமிடமே
'ய'  வே, வாலை இருக்குமிடமாம்! அவள்தான் கன்னி  'ய'  குமரி
பகவதி! உலகுக்கே தாய்! பொங்கி எழுக! பிடிவாதத்துடன்
பற்றற்று இரு! வாலை அருள்வாள்!

வாலையை பணியாத சித்தன் இல்லை (வாலைக் கும்மி)



கொங்கணச் சித்தர் வாலைக் கும்மி
 

காப்பு
விநாயகர் துதி
பின் முடுகு வெண்பா


கல்விநிறை வாலைப்பெண் காதலியென் றோதுகின்றசெல்வியின்மேற் கும்மிதனைக் செப்புதற்கே - நல்விசயநாதனின்சொல் வேதனஞ்சு போதன்மிஞ்சி மானகஞ்சபாதம்வஞ்ச நெஞ்சினில்வைப் போம்.
 


1
கும்மிசத்தி சடாதரி வாலைப்பெண் ணாமந்த
உத்தமிமேற் கும்மிப் பாட்டுரைக்கவித்தைக் குதவிய வொற்றைக்கொம் பாம்வாலை
சித்தி விநாயகன் காப்பாமே.

2
சரசுவதி துதிசித்தர்கள் போற்றிய வாலைப்பெண் ணாமந்த
சக்தியின் மேற்கும்மிப் பாட்டுரைக்கத்தத்தமித் தோமென ஆடும் சரசுவதி
பத்தினி பொற்பதங் காப்பாமே.
3
சிவபெருமான் துதிஎங்கும் நிறைந்தவள் வாலைப்பெண் ணாம்மாலின்
தங்கையின் மேற்கும்மி பாடுதற்குக்கங்கை யணிசிவ சம்புவாம் சற்குரு
பங்கயப் பொற்பாதம் காப்பாமே.
4
சுப்பிரமணியர் துதிஞானப்பெண் ணாமருள் சோதிப்பெண் ணாமாதி
வாலைப்பெண் மேற்கும்மி பாடுதற்குமானைப் பெண்ணாக்கிய வள்ளிக் கிசைந்திடும்
மால்முரு கேசனும் காப்பாமே.
5
விஷ்ணு துதிஆண்டிப்பெண் ணாம்ராச பாண்டிப்பெண் ணாம்வாலை
அம்பிகை மேற்கும்மி பாடுதற்குக்காண்டீபனாம் பணி பூண்டவன் வைகுந்தம்
ஆண்டவன் பொற்பதங் காப்பாமே.
6
நந்தீசர் துதிஅந்தரி சுந்தரி வாலைப்பெண் ணாமந்த
அம்பிகை மேற்கும்மி பாடுதற்குச்சிந்தையில் முந்திநல் விந்தையாய் வந்திடும்
நந்தீசர் பொற்பதங் காப்பாமே.
7
நூல்கும்மி தில்லையில் முல்லையி லெல்லையுளாடிய
வல்லவள் வாலைப்பெண் மீதினிலேசல்லாபக் கும்மித் தமிழ்பா டவரும்
தொல்லைவினை போக்கும் வாலைப்பெண்ணே!
8
மாதா பிதாகூட இல்லாம லேவெளி
மண்ணும் விண்ணுமுண்டு பண்ணவென்றுபேதை பெண் ணாமுதல் வாலைப்பெண் ணாளென்று
புகுந்தா ளிந்தப் புவியடக்கம்.
9
வேதமும் பூதமுண் டானது வும்வெளி
விஞ்ஞான சாத்திர மானதுவும்நாதமுங் கீதமுண் டானதுவும் வழி
நான்சொல்லக் கேளடி வாலைப்பெண்ணே.
10
மூந்தச் செகங்களுண் டானது வும்முதல்
தெய்வமுந் தேவருண் டானதுவும்விந்தையாய் வாலையுண் டானதுவும் ஞான
விளக்கம் பாரடி வாலைப்பெண்ணே.
11
அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் பின்னும்
அரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம்தரிக்கும் முந்தின தஞ்செழுத்தாம் வாசி
பரிக்குள் நின்றது மஞ்செழுத்தாம்.
12
ஆதியி லைந்தெழுத் தாயினாள் வாலைபெண்
ஐந்தெழுத் துமென்று பேரானாள்;நாதியி னூமை யெழுத்தியவள் தானல்ல
ஞான வகையிவள் தானானாள்.
13
ஊமை யெழுத்தே யுடலாச்சு மற்றும்
ஓமென் றெழுத்தே யுயிராச்சுஆமிந் தெழுத்தை யறிந்துகொண்டு விளை
யாடிக் கும்மி யடியுங்கடி.
14
செகம் படைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும்
சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம்உகமு டிந்தது மஞ்செழுத்தாம் பின்னும்
உற்பன மானது மஞ்செழுத்தாம்.
15
சாத்திரம் பார்த்த்தாலுந் தானுமென்ன? வேதம்
தானுமே பார்த்திருந் தாலுமென்ன?சூத்திரம் பார்த்தல்லோ ஆளவேணு மஞ்சு
சொல்லை யறிந்தல்லோ காணவேணும்?
16
காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில்
காரிய மில்லையென் றேநினைத்தால்காணாதுங் காணலா மஞ்செழுத் தாலதில்
காரிய முண்டுதியானஞ் செய்தால்.
17
ஆயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயறி
வாயனு மைந்தா மெழுத்துக்குள்ளேவாயனு மைந்தாம் எழுத்துக்குள் ளேயிந்த
வாலையு மைந்தாம் எழுத்துக்குள்ளே.
18
அஞ்செழுத் தானதும் எட்டெழுத்தாம் பின்னும்
ஐம்பத்தோர் அட்சரந் தானாச்சுநெஞ்செழுத் தாலே நிலையா மலந்த
நிசந்தெ ரியுமோ வாலைப்பெண்ணே!
19
ஏய்க்கு தேய்க்கு ஐந்செழுத் துவதை
எட்டிப் பிடித்துக்கொளிரண் டெழுத்தைநோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி
நிலையைப் பாரடி வாலைப்பெண்ணே?
20
சிதம்பர சக்கரந் தானறிவா ரிந்தச்
சீமையி லுள்ள பெரியோர்கள்சிதம்பர சக்கர மென்றால் அதற்குள்ளே
தெய்வத்தை யல்லோ அறியவேணும்!
21
மனமு மதியு மில்லாவிடில் வழி
மாறுதல் சொல்லியேயென்ன செய்வாள் ?மனமு றுதியும் வைக்கவேணும் பின்னும்
வாலைக் கிருபையுண் டாகவேணும்.
22
இனிவெ ளியினிற் சொல்லா தேயெழில்
தீமட்டு திந்தவரி விழிக்கேகனிமொ ழிச்சியீர் வாருங்கடி கொஞ்சங்
கருவைச் சொல்லுவேன் கேளுங்கடி.
23
ஊத்தைச் சடலமென் றெண்ணாதே இதை
உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதேபார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப்
பார்த்துக்கொள் உன்ற னுடலுக்குள்ளே.
24
உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்
வைத்த விளக்கும் எரியுதடிஅச்சுள்ள விளக்கு வாலையடி அவி
யாம லெரியுது வாலைப்பெண்ணே!
25
எரியு தேஅறு வீட்டினி லேயதில்
எண்ணெயில் லையமிழ் தண்ணீரில்லைதெரியுது போக வழியுமில்லை பாதை
சிக்குது சிக்குது வாலைப்பெண்ணே.
26
சிலம்பொலி யென்னக் கேட்குமடி மெத்த
சிக்குள்ள பாதை துடுக்கமடிவலம்புரி யச்சங்கமூது மடி மேலே
வாசியைப் பாரடி வாலைப்பெண்ணே!
27
வாசிப் பழக்க மறியவே ணும்மற்றும்
மண்டல வீடுகள் கட்டவேணும்நாசி வழிக்கொண்டு யோகமும் வாசியும்
நாட்டத்தைப் பாரடி வாலைப்பெண்ணே!
28
முச்சுடரான விளக்கி னுள்ளே மூல
மண்டல வாசி வழக்கத்திலேஎச்சுடராகி அந்தச் சுடர் வாலைஇவள்விட வேறில்லை வாலைப்பெண்ணே!
29
சூடாமல் வாலை இருக்கிறதும் பரி
சித்த சிவனுக்குள் ளானதனால்வீடாமல் வாசி பழக்கத்தை பாருநாம்
மேல்வீடு காணலாம் வாலைப்பெண்ணே!
30
மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில்
விளக்கில் நின்றவன் வாணியடிதாய்வீடு கண்டவன் ஞானியடி பரி
தாண்டிக் கொண்டான்பட் டாணியடி.
31
அத்தியி லேகரம் பத்தியி லேமனம்
புத்தியி லேநடு மத்தியிலேநெற்றி சதாசிவ மென்றுசொன் னேனுன்றன்
நிலைமையைப் பாரடி வாலைப்பெண்ணே!
32
அழுத்தி லேசொல்லஞ் செழுத்தி லேநானும்
வழுத்தி னேன்ஞானப் பழத்திலேகழுத்தி லேமயேச் வரனு முண்டுகண்
கண்டு பாரடி வாலைப்பெண்ணே!
33
அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சியரே நிதம்
கொஞ்சி விளையாடும் வஞ்சியரேநெஞ்சிலே ருத்திரன் சூழிருப்பா னவன்
நேருட னாமடி வாலைப்பெண்ணே!
34
தொந்தியி லேநடு பந்தியிலே திடச்
சிந்தையி லேமுந்தி உன்றனுடன்உந்தியில் விட்ணுவுந் தாமிருப் பாரிதை
உண்மையாய்ப் பாரடி வாலைப்பெண்ணே!
35
ஆலத்திலே இந்த ஞாலத்திலே வருங்
காலத்தி லேயனு கூலத்திலேமுலத்திலே பிரமன் தானிருந் துவாசி
முடிக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே.
36
தேருமுண் டைஞ்சூறாம் ஆணியுண்டே அதில்
தேவரு முண்டுசங் கீதமுண்டேஆருண்டு பாரடி வாலைத்தெய் வம்மதிலே
அடக்கந் தானடி வாலைப்பெண்ணே!
37
ஒன்பது வாயில்கொள் கோட்டையுண் டேஅதில்
உள்ளே நிலைக்கார ரஞ்சுபேராம்அன்புடனே பரிகாரர்கள் ஆறு பேர்
அடக்கந் தானடி வாலைப்பெண்ணே!
38
இந்த விதத்திலே தேகத்திலே தெய்வம்
இருக்கையில் புத்திக் கறிக்கையினால்சந்தோட வாலையைப் பாராமல் மனிதர்
சாகிற தேதடி வாலைப்பெண்ணே!
39
நகார திட்டிப்பே ஆனதனால் வீடு
வான வகார நயமாச்சு!உகார முச்சி சிரசாச்சே இதை
உற்றுப் பாரடி வாலைப்பெண்ணே!
40
வகார மானதே ஓசையாச்சே அந்த
மகார மானது மாய்கையாச்சேசிகார மானது மாய்கையாச்சே இதைத்
தெளிந்து பாரடி வாலைப்பெண்ணே!
41
ஓமென்ற அட்சரந் தானுமுண்டு அதற்குள்
ஊமை யெழுத்து மிருக்குதடி;நாமிந்தெ ழுத்தை யறிந்துகொண் டோ ம்வினை
நாடிப் பாரடி வாலைப்பெண்ணே!
42
கட்டாத காளையைக் கட்டவே ணுமாசை
வெட்டவே ணும்வாசி யொட்டவேணும்எட்டாத கொம்பை வளைக்கவே ணுங்காயம்
என்றைக் கிருக்குமோ வாலைப்பெண்ணே!
43
இருந்த மார்க்க்கமாய்த் தானிருந்து வாசி
ஏற்காம லேதான டக்கவேணும்திரிந்தே ஓடிய லைந்துவெந்து தேகம்
இறந்து போச்சுதே வாலைப்பெண்ணே!
44
பூத்த மலராலே பிஞ்சுமுண்டே அதில்
பூவில்லா பிஞ்சும் அநேகமுண்டுமூத்த மகனாலே வாழ்வுண்டு மற்ற
மூன்று பேராலே அழிவுமுண்டு!
45
கற்புள்ள மாதர் குலம்வாழ்க நின்ற
கற்பை யளித்தவரே வாழ்க!சிற்பர னைப் போற்றி கும்மியடி
தற்பரனைப் போற்றி கும்மியடி.
46
அஞ்சி னிலேரெண் டழிந்ததில் லையஞ்
சாறிலேயும் நாலொழிந்த தில்லைபிஞ்சிலே பூவிலே துஞ்சுவ தாம்அது
பேணிப் போடலாம் வாலைப்பெண்ணே!
47
கையில்லாக் குட்டையன் கட்டிக்கிட்டா னிரு
காலில்லா நெட்டையன் முட்டிக்கிட்டான்ஈயில்லாத் தேனெனத் துண்டுவிட் டானது
இனிக்கு தில்லையே வாலைப்பெண்ணே!
48
மேலூரு கோட்டைக்கே ஆதரவாய் நன்றாய்
விளக்கு கன்னனூர்ப் பாதையிலேகாலூரு வம்பலம் விட்டத னாலது
கடுநடை யடி வாலைப்பெண்ணே!
49
தொண்டையுள் முக்கோணக் கோட்டையிலே இதில்
தொத்திக் கொடிமரம் நாட்டையிலேசண்டை செய்துவந்தே ஓடிப்போனாள் கோட்டை
வெந்து தணலாச்சு வாலைப்பெண்ணே!
50
ஆசை வலைக்குள் அகப்பட்டதும் வீடு
அப்போதே வெந்தே அழிந்திட்டதும்பாச வலைவந்து மூடியதும் ஈசன்
பாதத்தை போற்றடி வாலைப்பெண்ணே!
51
அன்ன மிருக்குது மண்டபத்தில் விளை
யாடித் திரிந்தே ஆண்புலியும் அங்கேஇன்ன மிருக்குமே யஞ்சு கிளியவை
எட்டிப் பிடிக்குமே மூன்று கிளியடி வாலைப்பெண்ணே.
52
தோப்பிலே மாங்குயில் கூப்பிடு தேபுது
மாப்பிள்ளை தான்வந்து சாப்பிடவும்ஏய்க்கு மிப்படி யஞ்சா றாந்தைஇருந்து
விழிப்பது பாருங்கடி வாலைப்பெண்ணே.
53
மீனு மிருக்குது தூரணி யிலிதை
மேய்ந்து திரியுங் கலசாவல்தேனு மிருக்குது போரையிலே யுண்ணத்
தெவிட்டு தில்லையே வாலைப்பெண்ணே!
54
காக்கை யிருக்குது கொம்பிலே தான்கத
சாவி லிருக்குது தெம்பிலேதான்பார்க்க வெகுதூர மில்லை யிதுஞானம்
பார்த்தால் தெரியுமே வாலைப்பெண்ணே!
55
கும்பி குளத்திலே யம்பல மாமந்தக்
குளக்க ருவூரில் சேறுமெத்ததெம்பிலிடைக் காட்டுப் பாதைக ளாய்வந்து
சேர்ந்து ஆராய்ந்துபார் வாலைப்பெண்ணே!
56
பண்டுமே ஆழக் கிணற்றுக்குள் ளேரெண்டு
கெண்டை யிருந்து பகட்டுதடிகண்டிருந்து மந்தக் காக்கையுமே அஞ்சி
கழுகு கொன்றது பாருங்கடி!
57
ஆற்றிலே அஞ்சு முதலைய டியரும்
புற்றிலே ரண்டு கரடியடிகூற்றுனு மூன்று குருடன டிபாசங்
கொண்டு பிடிக்கிறான் வாலைப்பெண்ணே!
58
முட்டை யிடுகு தொருபற வைமுட்டை
மோசம் பண்ணு தொருபறவைவட்டமிட் டாரூர் கண்ணியி லிரண்டு
மானுந் தவிக்குது வாலைப்பெண்ணே!
59
அட்டமா விண்வட்டப் பொட்டலி லேரண்டு
அம்புலி நிற்குது தேர் மேலேதிட்டமாய் வந்து அடிக்குதில் லைதேகம்
செந்தண லானதே வாலைப்பெண்ணே!
60
முக்கோண வட்டக் கிணற்றுக்குள்ளே மூல
மண்டல வாசிப் பழக்கத்திலேஅக்கோண வட்டச் சக்கரத்தில் வாலை
அமர்ந்தி ருக்கிறாள் வாலைப்பெண்ணே!
61
இரண்டு காலாலொரு கோபுரமாம் நெடு
நாளா யிருந்தேஅமிழ்ந்து போகும்கண்டபோ துகோபு ரமிருக்கும் வாலை
காணவு மொட்டாள் நிலைக்கவொட்டாள்.
62
அஞ்சு பூதத்தை யுண்டுபண்ணிக் கூட்டி
ஆரா தாரத்தை யுண்டுபண்ணிக்கொஞ்சு பொண்ணாசை யுண்டுபண்ணி வாலை
கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள்.
63
காலனைக் காலால் உதைத்தவளாம் வாலை
ஆலகா லவிட முண்டவளாம்மாளாச் செகத்தைப் படைத்த வளாமிந்த
மானுடன் கோட்டை இடித்தவளாம்.
64
மாதாவாய் வந்தே அமுதந்தந்தாள் மனை
யாட்டியாய் வந்து சுகங்கொடுத்தாள்ஆதரவாகிய தங்கையானாள் நமக்
காசைக் கொழுந்தியு மாமியானாள்.
65
சிரித்து மெல்லப் புரமெரித் தாள்வாலை
செங்காட்டுச் செட்டியைத் தானுதைத்தாள்ஒருத்தி யாகவே சூரர்தமை வென்றாள்
ஒற்றையாய்க் கஞ்சனைக் கொன்று விட்டாள்.
66
இப்படி யல்லொ இவள்தொழி லாமிந்த
ஈனா மலடி கொடுஞ்சூலிமைப்படுங் கண்ணியர் கேளுங்கடி அந்த
வயசு வாலை திரிசூலி.
67
கத்தி பெரிதோ உறைபெரிதோ விவள்
கண்ணு பெரிதோ முகம் பெரிதோசத்தி பெரிதோ சிவன் பெரிதோ நீதான்
சற்றே சொல்லடி வாலைப்பெண்ணே!
68
அன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல
அப்படி வாலை பெரிதானால்பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல
பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி.
69
மாமிச மானால் எலும்புண்டு சதை
வாங்கிஓடு கழன்று விடும்ஆமிச மிப்படிச் சத்தியென்றே விளை
யாடிக் கும்மி அடியுங்கடி.
70
பண்டு முளைப்ப தரிசியே யானாலும்
விண்டுமி போனால் விளையாதென்றுகண்டுகொண்டு முன்னே அவ்வை சொன்னாளது
உண்டோ இல்லையோ வாலைப்பெண்ணே!
71
மண்ணு மில்லாமலே விண்ணுமில்லை கொஞ்சம்
வாசமில் லாமலே பூவுமில்லைபெண்ணு மில்லாமலே ஆணுமில் லையிது
பேணிப் பாரடி வாலைப்பெண்ணே!
72
நந்த வனத்திலே சோதியுண்டு நிலம்
நத்திய பேருக்கு நெல்லுமுண்டுவிந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில்
விட்ட குறைவேணும் வாலைப்பெண்ணே!
73
வாலையைப் பூசிக்கச் சித்தரானார் வாலைக்
கொத்தாசை யாய்ச்சிவ கர்த்தரானார்வேலையைப் பார்த்தல்லோ கூலிவைத்தா ரிந்த
விதந்தெ ரியுமோ வாலைப்பெண்ணே!
74
வாலைக்கு மேலான தெய்வமில்லை மானங்
காப்பது சேலைக்கு மேலுமில்லைபாலுக்கு மேலான பாக்கியமில்லை வாலைக்
கும்மிக் மேலான பாடலில்லை.
75
நாட்டத்தைக் கண்டா லறியலாகு மந்த
நாலாறு வாசல் கடக்கலாகும்பூட்டைக் கதவைத் திறக்கலா கும்மிது
பொய்யல்ல மெய்யடி வாலைப்பெண்ணே!
76
ஆணும் பெண்ணும்கூடி யானதால் பிள்ளை
ஆச்சுதென் றேநீரும் பேசுகின்றீர்ஆணும் பெண்ணுங்கூடி யானதல்லோ பேதம்
அற்றொரு வித்தாச்சு வாலைப்பெண்ணே!
77
இன்றைக் கிருப்பதும் பொய்யல்ல வேவீடே
என்வாழ்க்கை யென்பதும் பொய்யல்லவேஅன்றைக் கெழுத்தின் படிமுடியும் வாலை
ஆத்தாளைப் போற்றடி வாலைப்பெண்ணே!
78
வீணாசை கொண்டு திரியாதே இது
மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடுகாணாத வாலையைக் கண்டுகொண்டால் காட்சி
காணலாம் ஆகாயம் ஆளலாமே.
79
பெண்டாட்டி யாவதும் பொய்யல்லவோ பெற்ற
பிள்ளைக ளாவதும் பொய்யல்லவோ?கொண்டாட்ட மானதகப்பன் பொய்யே முலை
கொடுத்த தாயும் நிசமாமோ?
80
தாயும் பெண்டாட்டியும் தான்சரி யேதன்யம்
தாமே இருவருந் தாங்கொடுத்தார்காயும் பழமுஞ் சரியாமோ உன்றன்
கருத்தைப் பார்த்துக்கொள் வாலைப்பெண்ணே!
81
பெண்டாட்டி மந்தைமட்டும் வருவாள் பெற்ற
பிள்ளை மசானக் கரையின் மட்டும்தொண்டாட்டுத் தர்மம் நடுவினிலே வந்து
சேர்ந்து பரகதி தான்கொடுக்கும்.
82
பாக்கியமும் மகள் போக்கியமும் ராச
போக்கியமும் வந்த தானாக்கால்சீக்கிரந் தருமஞ் செய்யவேண்டும் கொஞ்சந்
திருப்ப ணிகள்மு டிக்கவேண்டும்.
83
திருப்பணி களைமுடித் தோரும் செத்துஞ்
சாகாத பேரி லொருவரென்றும்அருட் பொலிந்திடும் வேதத்தி லேயவை
அறிந்து சொன்னாளே வாலைப்பெண்ணே!
84
மெத்தை தனிலே படுத்திருந் துநாமும்
மெல்லிய ரோடு சிரிக்கும்போதுயுத்தகாலன் வந்துதான் பிடித்தால் நாமும்
செத்த சவமடி வாலைப்பெண்ணே!
85
ஏழை பனாதிக னில்லையென்றால் அவர்க்கு
இருத்தால் அன்னங் கொடுக்க வேண்டும்நாளையென்று சொல்ல லாகாதே என்று
நான்மறை வேத முழங்குதடி.
86
பஞ்சை பனாதி யடியாதே அந்தப்
பாவந் தொலைய முடியாதேதஞ்சமென்றோரைக் கெடுக்காதே யார்க்கும்
வஞ்சனை செய்ய நினையாதே.
87
கண்டதுங் கேட்டதுஞ் சொல்லாதே கண்ணில்
காணாத வுத்தரம் விள்ளாதேபெண்டாட்டிக் குற்றது சொல்லாதே பெற்ற
பிள்ளைக் கிளப்பங் கொடுக்காதே.
88
சிவன்ற னடியாரை வேதியரை சில
சீர்புல ஞானப் பெரியோரைமவுன மாகவும் வையாதே அவர்
மனத்தை நோகவும் செய்யாதே.
89
வழக்க ழிவுகள் சொல்லாதே கற்பு
மங்கையர் மேல்மனம் வையாதேபழக்க வாசியைப் பார்த்துக்கொண் டுவாலை
பாதத்தைப் போற்றடி வாலைப்பெண்ணே!
90
கூடிய பொய்களைச் சொல்லாதே பொல்லாக்
கொளைக ளவுகள் செய்யாதேஆடிய பாம்பை யடியா தேயிது
அறிவு தானடி வாலைப்பெண்ணே!
91
காரிய னாகினும் வீரியம் பேசவும்
காணா தென்றவ்வை சொன்னாளேபாரினில் வம்புகள் செய்யாதே புளிப்
பழம்போ லுதிர்த்து விழுந்தானே.
92
காசார் கள்பகை செய்யா தேநடுக்
காட்டுப் புலிமுன்னே நில்லாதேதேசாந்தி ரங்களுஞ் செல்லா தேமாய்கைத்
தேவடி யாள்தனம் பண்ணாதே!
93
தன்வீடி ருக்க அசல்வீடு போகாதே
தாயார் தகப்பனை வையாதேஉன்வீட்டுக் குள்ளேயே யூக மிருக்கையில்
ஓடித் திரிகிறாய் வாலைப்பெண்ணே!
94
சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம்
தானென் றொருவுடல் பேதமுண்டோ ?ஓதிய பாலதி லொன்றாகி யதிலே
உற்பத்தி நெய்தயிர் மோராச்சு.
95
பாலோடு முண்டிடு பூனையு முண்டது
மேலாக காணவுங் காண்பதில்லைமேலந்த ஆசையைத் தள்ளிவிட் டுள்ளத்தில்
வேண்டிப் பூசையைச் செய்திடுங்கள்.
96
கோழிக் காறுகாலுண் டென்றுசொன்னேன் கிழக்
கூனிக் மூன்றுகா லென்றுசொன் னேன்கூனிக்கிரண் டெழுத்தென்று சொன்னேன் முழுப்
பானைக்கு வாயில்லை யென்றுசொன்னேன்.
97
ஆட்டுக் கிரண்டுகா லென்றுசொன் னேன்நம்
பானைக்குப் பானைக்குநிற்கு மேல்சூல்மாட்டுக்கு காலில்லை யென்றுசொன்னேன் கதை
வகையைச் சொல்லடி வாலைப்பெண்ணே!
98
கோயிலு மாடும் பறித்தவ னுங்களறிக்
கூற்று மேகற் றிருந்தவனும்வாயில்லாக் குதிரை கண்டவனும் மாட்டு
வகை தெரியுமோ வாலைப்பெண்ணே!
99
இத்தனை சாத்திரஞ் தாம்படித்தோர் செத்தார்
என்றா லுலகத்தோர் தாம்சிரிப்பார்செத்துப் போய்கூட கலக்கவேண்டும் அவன்
தேவர்க ளுடனே சேரவேண்டும்.
100
உற்றது சொன்னாக்கா லற்றது பொருந்தும்
உண்டோ உலகத்தில் அவ்வைசொன்னாள்அற்றது பொருந்து முற்றது சொன்னவன்
அவனே குருவடி வாலைப்பெண்ணே!
101
பூரணம் நிற்கும் நிலையறியான் வெகு
பொய்சொல்வான் கோடி மந்திரஞ்சொல்வான்காரணகுரு அவனு மல்ல இவன்
காரியகுரு பொருள் பறிப்பான்.
102
எல்லா மறிந்தவ ரென்றுசொல்லி இந்தப்
பூமியி லேமுழு ஞானியென்றேஉல்லாச மாக வயிறு பிழைக்கவே
ஓடித் திரிகிறார் வாலைப்பெண்ணே!
103
ஆதிவா லைபெரி தானா லும்மவள்
அக்காள் பெரிதோ? சிவன் பெரிதோநாதிவா லைபெரி தானாலும் அவள்
நாயக னல்ல சிவம்பெரிது.
104
ஆயுசு கொடுப்பாள் நீரிழி வுமுதல்
அண்டாது மற்ற வியாதியெல்லாம் பேயும் பறந்திடும் பில்லிவி னாடியில்
பத்தினி வாலைப்பெண் பேரைச்சொன்னால்.
105
நித்திரை தன்னிலும் வீற்றிருப்பா ளெந்த
நேரத்தி லும்வாலை முன்னிருப்பாள்சத்துரு வந்தாலும் தள்ளிவைப்பாள் வாலை
உற்றகா லனையும் தானுதைப்பாள்.
106
பல்லாயி ரங்கோடி யண்டமுதல் பதி
னாங்கு புவனமும் மூர்த்திமுதல்எல்லாந் தானாய்ப் படைத்தவளாம் வாலை
எள்ளுக்கு ளெண்ணைய்போல நின்றவளாம்.
107
தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும்மித் தமிழ்
செய்ய எனக்குப தேசஞ்செய்தாள்நேசவான் வீரப் பெருமாள் குருசாமி
நீள்பதம் போற்றிக்கொண் டாடுங்கடி.
108
ஆறு படைப்புகள் வீடுகடை சூத்ர
அஞ்செழுத் துக்கும் வகையறிந்துகூறுமுயர் வல வேந்திரன் துரைவள்ளல்
கொற்றவன் வாழக்கொண் டாடுங்கடி.
109
ஆடுங்கள் பெண்டுகள் எல்லோரு மந்த
அன்பான கொங்கணர் சொன்னதமிழ்பாடுங்கள் சித்தர்கள் எல்லோரும் வாலை
பாதத்தைப் போற்றிக் கொண்டாடுங்கடி.
110
சித்தர்கள் வாழி சிவன்வா ழிமுனி
தேவர்கள் வாழி, ரிஷிவாழி,பத்தர்கள் வாழி, பதம்வா ழிகுரு
பாரதி வாலைப்பெண் வாழியவே!
111

செவ்வாய், 20 அக்டோபர், 2015

ஞானிகள் எல்லோரும் ஒன்றுதான்!

எமது கர்ம வினையால் அழுது அரற்றிய போது
ஓடிவந்து காத்தருளிய சித்தர் பெருமக்கள் பலர்!
வினையகற்றி, வேதனையை மாற்றி தூயனாக்கி
பற்றற வைத்து பற்றற்றானை  பற்றிட வைத்தனர்!

ஒன்று நன்றாக புரிந்தது! கடவுள் ஒருவர் என்பது!
சத்தியம் அல்லவா?! அதுபோலவே கடவுளை, அடைந்த
உணர்ந்த ஞானிகள் அனைவரும் ஒன்றுதான்! ஊர் பெயர்
வேறுவேறானாலும் உணர்வால் இறைவனோடு
ஒன்றானவர்கள் தானே?! வித்தியாசம் இருக்காதல்லவா ?!
ஆம்! ஞானிகள் எல்லோரும் ஒன்றுதான்! அடியேனுக்கு இது
அனுபவம் ஆனது!







ஞான சற்குரு சிவ செல்வராஜ்

சனாதன தர்மமே சன்மார்க்கம்!

எம்மத நிலையும் நின்னருள் நிலையில் சம்மதமே!

சகலரும் சேர்ந்ததே சன்மார்க்கம்! என் மார்க்கம் இறப்பொழிக்கும்
சன்மார்க்கம் தானே என உலகுக்கே வழி காட்டுகிறார்!

வள்ளலார் சொல்வது ஒரு புது மார்க்கம் அல்ல!? யுகம் யுகமாக
நம் நாட்டில் நிலவி வரும் சனாதன தர்மமே!

உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான வாழும் வாழ்க்கை நெறியே!
சனாதன தர்மமே சன்மார்க்கம்!

வாழையடி வாழையென வந்த ஞானியர் திருகூட்ட மரபினில் 19-நூற்றாண்டிலே வந்தவர் தான் திருவருட்பிரகாஷ வள்ளலார்
இராமலிங்க சுவாமிகள்!

சன்மார்க்கம் என்றால் இது எதோ புது வழி என்று எண்ணிவிடாதீர்!
ஆதிகாலம் முதலே நம் ஞானிகளால் இறைவனை அடைய காட்டிய
வழியே இது!

எப்படி வாலை தரிசனம் பெறுவது?

உருத்தரித்து நின்றதொரு வாலைப்பெண்ணை
உற்றுப்பார் விளக்கொளிபோ லுள்ளே தோன்றும் 


நம் கண்மணியில் நினைவை நிறுத்தி உறுதி குலையாமல்
நின்று நிலைத்து தவம் செய்வோமானால், உற்று உற்று பார்த்து
பார்த்து இருப்போமானால்  சும்மா இருப்போமானால் அங்கே
விளக்கொளிபோல் நிற்கும் வாலைப் பெண்ணைக் காணலாம்!
உள்ளே, உன்னுள்ளே காண்பாய் உன் தாயை!

வாலையின் இருப்பிடம்


வாலையென்ற மகாரமடா மௌனம் பெண்தான் 
 


வாலையின் இடம் மகாரம் இருகண்ணும் உள் சேரும் இடம்.
உச்சிக்கு கீழே அன்னாக்குக்கு மேலே , அதுவே நம் உயிர்ஸ்தானம்,
ஆத்மஸ்தானம், அதுவே வாலை இருப்பிடம்.

அவள் மௌனப் பெண்ணாம்! வலது கண் அகாரம் இடதுகண்
உகாரம், இரண்டு கண் உள்ளே சேரும் இடமே மகாரம் அது வாலையின்
இருப்பிடம்.

மூன்றும் சேர்ந்தால் அ + உ + ம சேர்ந்தாலே ஓங்காரம்! முச்சுடரடும்
ஒன்றானாலே ஆத்ம ஜோதி தரிசனம். வாலையை தரிசித்து
அமுதம் அருந்தலாம்! வாலையை பணியாமல் பார்க்காமல்
முன்னேற முடியுமா? முப்பாழில் மூழ்கு !

திங்கள், 19 அக்டோபர், 2015

கலை மகள் - அலை மகள் - வாலை


 குருவை பெற்று ஞானோபதேசம் ஞான தீட்சை பெற்று, ஆன்ம சாதனை
புரியும் ஒவ்வொருவரும்  முதலில் கலை மகள் அருள் பெறுவான்!
கவி மழை புரிவான்! இதுவே உண்மை! மெய்ஞானம்!

அடுத்தது அருள் புரிவாள் அலை மகள்! வேண்டாம் என்று சொன்னாலும் வந்து குவியும் செல்வமெல்லாம்!

ஒன்றுக்கு பத்தாக பதினாறாக வந்து சேரும்!

நாம் பதினாறு கலையுடைய சந்திர கலையில் இடக்கண்ணில் ஆரம்பித்து
சூரியகலை வழியே ஒன்றான பத்தாமிடத்தை சேருவோம்!

இதுவே ஆத்ம சாதனை !தெய்வம் ஒன்றே!
அது பத்தாமிடத்தில் ய காரத்திலே ! அவள் கன்னி ய குமரியிலே!
நாம் நம் இடப்பாக சக்தியை பிடித்து சிவத்தின் வழியே
வாலையை அடையலாம்! எல்லாமே மெய்ஞானம்!

பாடு!
பிதற்று!
கத்து!
கதறு!
உலகம் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்! நம் தாயுக்கு நம் பிதற்றல்
மழலையே! ரசிப்பாள்! நிச்சயம் அருள்வாள்!

நம் வாழ்வு நிச்சயம் - உறுதி - மரணமிலாதது என்று கண்டிப்பாக அருள் தருவாள்! இறைவனை தாயும் ஆனவன்  என்றுதான் சொன்னார்கள்! கருவிலே திருவான தாயை வாலையை போற்றுவோம்!

கண்ணன் - கோபியர் : ஞானத்தில்



அண்ணல் கண்ணன் ஓர் மகனைப் பெற்ற யசோதை நங்காய்
உன்மகனை கூவாய் -பெரியாழ்வார்

கண்ணன் புறத்தே போய் கோபியர் வீடு சென்று எல்லோருக்கும்
துன்பத்தை கொடுக்கிறான். கோபியர்கள் யசோதையிடம் சென்று
உன்மகனை வெளியே விடாதே வீட்டுக்கு உள்ளே கூப்பிடு
வீட்டிலே இருத்தி விடு என்கிறார்களாம்!

கண்ணன் புறத்தே போனால் என்றால் நம் மனம் போனது எனப்பொருள் !
மனம் போன போக்கில் போனால் என்ன ஆகும்? துன்பமே மிச்சம்!
கண்ணனை வீட்டின் உள்ளேயே இருத்தி விட்டால்! நமது மனதை
கண்மணி ஒளியிலே இருத்தி விட்டால் பேரின்பமே! அதனால்
கண்ணனை வெளியே விடாதீர்கள்! வெளியே பார்க்க பார்க்க
வினையே! உங்கள் பார்வையை வெளியே விடாதீர்கள்! பார்வை
உள்ளே திரும்பினால் ஒளி கண் ஒளி பெருகும்! உன்னையே நீ
காணலாம்! இதைதான் பைபிளில் இயேசு பெருமானும் கூறுகிறார்!
மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபத்தில் இருக்கிறது
 என்று! வெளியே இருக்கும் மனதை கண் உள்ளே திருப்பி விடுங்கள்
உள்ளே போனால் பரலோகம்  அங்கே தான் பரம பிதா!

கிருத்துவர்களுக்கு பரமபிதா! வைணவர்களுக்கு பரம பதம்!

வெளியே போகாதே இனி இங்கேயே இரு என  யசோதை கிருஷ்ணனை
வீட்டிலே இருத்தினாள்! கோபியர்கள், யசோதையிடம் உன் கண்ணனிடம் கூப்பிட்டு கொள். இல்லையேல் எங்களை வாழ விடாமாடான் என முறையிடுகிறார்கள்.

புதன், 23 செப்டம்பர், 2015

இல்லற கடமையை ஆன்மீக சாதனையும் செய்!!

இல்லறம் இல்லேல் துறவறம் இல் - ஸ்ரீ திருமழிசை யாழ்வார்

இல்லறமல்லது நல்லறமன்று - இது ஔவையார் வாக்கு! அமுதவாக்கு!
வள்ளலார் சொன்ன இல்லறம் எது தெரியுமா?  இல்-இல்லம்-வீடு. நம்
இல்லம் நாம் குடியிருக்கும் வீடு அல்ல!  நம் இல்லம் நம் உயிர் குடியிருக்கும்
நம் உடல்தான்!! நம் உடலாகிய வீட்டில் உறையும் உயிர் விட்டுப் பிரியாமல்
இருக்க, உயிர் என்றும் உடலில் நிலைக்கச் செய்யும் தவமே நல்லறமாகும்!
இதுவே இல்லறம்! இந்த இல்லறம் தான் வேண்டும்.

இல்லற வாழ்க்கை சரியில்லை என துறவறம் செல்பவன் உருப்படவே
மாட்டான்! இல்லறத்தை உலக வாழ்வை துறந்து துறவறம், பற்றற்ற
நிலை ஏற்பட்டாலே தன் இல் சீராக அறவாழ்க்கை  மேற்கொள்ள முடியும்,
.
உங்கள் ஒருவரையும் குடும்பத்தை சொத்து சுகத்தினை விட்டுவிட்டு
ஓடிபோங்கள் என்று எந்த ஒரு  ஞானியும் கூறவில்லை! இல்லற கடமையை
செவ்வனே செய்துகொண்டே ஆன்மீக சாதனையும் செய்பவனே
இறைபணி செய்பவனே மிகவும் உத்தமன்! ஞானம் பெறுவான்!

இறைவனை அடைய குடும்பம் தடை அல்ல!  உலக கடமைகளை கர்மாவை
சரியாக செய்! கண்ணனிடம் ஒப்படைத்து விடு! செய்ய வேண்டியதை செய்!
மிச்சமெல்லாம் கண்ணன் பார்த்துகொள்வான் ! கண்ணனை சரண் அடைந்து விடு !

"தாமரை இலை தண்ணீர் போல' இரு! சும்மா இரு! வீட்டையும் பார் உன் கூட்டையும் பார்! உன்னில் இருக்கும் ஜோதியே நீ!!? இப்படிப்பட்ட இல்லறமே வேண்டும்! இதுவே நல்லறம்! துறவறம் மனதிலிருந்து உலக பற்றை துறக்க வேண்டும்! சரியாக புரிந்து கொள்ளுங்கள்! தப்பு தப்பாக அர்த்தம் பண்ணி தவறிப்போகாதீர்கள்!

அரிதான மானிட பிறவி! மேலான ரிஷிகளும் குடும்பத்துடன் தான்
வாழ்ந்தனர்! இந்து புராணமே குடும்பமாக வாழ்வது சிறப்பு என சொல்லப்படுகிறது!

இவ்வுலக வாழ்வே, சமுதாயத்தோடு இணைந்த வாழ்வே சிறப்பாம்!
"ஊரோடு ஒத்து வாழ்" என்றார் அகத்திய மகரிஷி! ஸ்ரீரங்கத்திலே அனந்த சயனமாக சூட்சுமாக நின்று அருளும் அகஸ்தியர்!

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

அம்பாள் என்றால் அம்மன் என்றால்?

தேவியுந் தானும்வந் தெம்மையாளச்

மாணிக்கவாசகரே அழைக்கிறார் பாருங்கள்! தேவியும் தேவனும்
வந்து எமையாள என்று! சிவமும் சக்தியும் வந்து தன்னை
ஆளவேண்டுகிறார் ! சக்தியில்லாமல் சிவமேது!? வாலைக்குமரி அமுதம்
தந்துதானே இறைவனை காண முடியும்! அம்பாளை பணிக மாயை
அகலும்!

அம்பாள் என்றால் அம்மன் என்றால் ஊர் காவல் தெய்வங்கள், எல்லை காவல்
தேவதைகள் அல்ல!!? பலி கொடுக்கும் கோயில் தேவதைகள் அல்ல! உயிர்பலி கொடுக்கும் இடத்தில் உயிரை படைக்கும் இறைவன் இறைவன் நிச்சயம் இருக்க  மாட்டார்!  உயிர்பலி கொடுப்பது காட்டு மிராண்டித்தனம்! மனிதச்செயல் அல்ல! எல்லாம் வல்ல இறைவனின் சிவத்தின்  சரிபாதி - சிவசக்தி! அவள் தாய்! நாம் அழுதால் ஓடோடி வந்து அமுதம் தரும் அன்புத்தாய்! கருணையே வடிவான தாய்!

உலக மக்கள் அனைவருக்கும் தாய்!  அவளே வாலை! பெரிய கோவிலிலே சிவத்தோடு தான் அபயவரத கரத்தோடு தான் இருப்பாள்! அன்பாக கருணையோடு கண்ணே தாயின் கண்கள்! கோபப்பார்வை பார்ப்பவள் ஊர் காவல் தேவதைகள்! தாய் நம்மிடம் எதையும் கேட்கமாட்டாள்! எல்லாமே நமக்கு தருவாள்! சிறு தெய்வங்கள் அதைக்கொண்ட இதைக்கொண்ட என நம்மை பயமுறுத்தி !பிடுங்கும் !

பத்துமாதம்  சுமந்து பெற்று பாலூட்டி சீராட்டி வளர்க்கும் தாயை  விட பன்மடங்கு கருணையோடு  அன்போடு  நமக்கு  அமுதூட்டி  தந்தையான  சிவத்திடம்  சேர்ப்பவளே சக்தி ! அந்த  சக்தி  ஆதிசக்தி  இந்தியாவில்  பெரியபெரிய  கோவில்  எல்லாவற்றிலும் சிவத்தோடு  தான்  இருக்கிறாள் ! தாயாக !

காசி - விசாலாட்சி, மதுரை - மீனாட்சி , நெல்லை - காந்திமதி , மயிலை  - கற்பகாம்பாள் திருக்கடையூர்  - அபிராமி  இப்படி  ஏராளமான  ஊர்களில்  கோவில்  கொண்டுள்ளாள் !

அந்த தாய்  ஆதி  சக்தி  - சிவசக்தி - வாலைத்தாய்  - சேயாக  இருக்கும் ஒப்பற்ற 
புண்ணியஸ்தலம் , தீரும்  மூவரும்  சித்தரும்  ஞானியரும்  போற்றும் இணையற்ற ஞானஸ்தலம்  கன்னியாகுமரி  பகவதியம்மா ! ஆறு  வயது  குழந்தையாக  கன்னியாக கடற்கரையில்  கோவில்  கொண்ட  புண்ணியஸ்தலம்  கன்னியாகுமரி ! சித்தர்களில்
பெரும்  சித்தர்  காகபுசுண்டர் , கல்பகோடி  காலமாக  இருக்கும்  மகாசித்தர்  அவர் கன்னியாகுமரி  வாலைதாயின்  மகிமையை  இவ்வாறு  பாடுகிறார் !


இடப்பாக  மிருந்தவளு   மிவளே   மூலம்
            இருவருக்கும்   நடுவான   திவளே   மூலம்
தொடக்காக   நின்றவளு   மிவளே  மூலம்
             சூட்சமெல்லாங்  கற்றுணர்ந்த  திவளே   மூலம்
அடக்காக   அடக்கத்துக்   கிவளே   மூலம்
             ஐவருக்குங்   குருமூல   மாதி   மூலம்
கடக்கோடி   கற்பமதில்   நின்ற   மூலம்
             கன்னியிவள்   சிறுவாலை   கன்னிதானே

வெள்ளி, 31 ஜூலை, 2015

குரு பூர்ணிமா





நம்மை இறைவனிடம் சேர்பிக்கும் குருவுக்கு
உலகையே கொடுத்தாலும் ஈடு ஆகாதே!

இறைவன் திருவடி இது என்று
இரகசியத்தை ஒரு பாமரன் கூட
புரியும் அளவு வெளிப்படுத்தி
திருவடியில் மனதை நிலை நிறுத்த
தீட்சை கொடுத்த குருவுக்கு என்ன
கைமாறு செய்வது?

ஞான தானம்.

திங்கள், 27 ஜூலை, 2015

சும்மா இரு - முடிந்த முடிபான ஞான நிலை

இறைவன் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றார். அப்படி எல்லா இடங்களிலும் இருக்கும் இறைவனை அடைவதற்கு நாம் காடு மலை
கோயில் அபிசேகம் ஆராதனை மந்திரம் சொல்வது யாகம் போன்றவற்றை செய்து கொண்டிருக்கிறோம்.

இவை எல்லாம் ஆரம்ப படிநிலைகளே தவிர முடிந்த முடிபான
ஞான நிலையை தெரிந்து கொள்ள இயலாது.

இறைவனை காண்பதற்கான ஒரே வழி ஞான தவம் செய்து தன்னை உணர்வதுதான்! இது தவிர வேறு வழி இல்லை! தன்னை அறிவது இன்னும் எளிமையாக சொல்வது என்றால் "நான் யார்"? என்று தெரிந்து கொள்வது தான்! நான் யார் என்பதை நீ சும்மா இருந்துதான் தெரிந்து கொள்ள தவிர வேறு எது செய்தும் உணர முடியாது!

எல்லா ஞானிகளும் சித்தர்களும் சும்மா இருந்துதான் இறைவனை கண்டார்கள்!

சொல்லும் பொருளும் அற்று சும்மா இருப்பதற்க்கே
அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே! - தாயுமானவர்


இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்றொண்டு வருமோ அறியேன் எங்கோவே துன்று மல வெம்மாயை அற்று
வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம்! - வள்ளலார்

ஆதிகுரு தட்சினாமூர்த்தி சனகாதி முனிவர்களுக்கும்
ஞான பண்டிதன் முருகன் அருணகிரி நாதருக்கும்

ராமலிங்க அடிகளாரும் மற்றும் அனைத்து ஞானிகளும்
உலக மக்களுக்கு கருனையோடு சொன்னது
சும்மா இரு

சும்மா இரு என்பது தன் கடமைகளை எல்லாம் செய்து கொண்டே
குரு கூறிய உபதேசத்தின் படி இறைவன் திருவடிகளாகிய
இரண்டு கண்களில் உணர்வோடு இருபதுவே.

இந்த சும்மா இரு என்கின்ற ஞான தவத்தை பற்றி ஆன்மீக செம்மல் ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் புத்தகங்கள் DVD மற்றும் இனைய தளம் மூலமாக மெய்ஞான இரகசியங்களை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

உபதேசம் மற்றும் தீட்சை   பெற 
www.vallalyaar.com

திங்கள், 13 ஜூலை, 2015

நந்தி = நம் தீ


அறிவு வடிவென் றறியாத என்னை
அறிவு வடிவென் றருள் செய்தான் நந்தி
அறிவு வடிவென் றருளால் அறிந்தே
அறிவு வடிவென் றறிந்திருந் தேனே






நந்தியம் பெருமான் - நம் தீயான அந்த பரம்பொருள் பேரொளி!
அன்புமயம்! அறிவு மாயம்! அறிவே வடிவாகி ஒளிர்வதே நம் ஆன்மா!
அதை எனக்கு அறிவித்தது என் நந்தி! நந்தியை அடைந்தால் அறிவு
துலங்குவது அதனால்தான்! ஒரு கணப்பொழுதில் எல்லா ஞானமும்
நம் உள் ஒளியை அறிவு வடிவை அடைவதால் பெறலாம் என வள்ளலாரும்
கூறுகிறார் ! இதை அறிவித்து நந்தி ஞான சாதனை செய்ய நமக்கு
அருள் புரிந்தாலே நம்மால் அறிய முடியும்!ஞான சற்குருவிடம் மெய் பொருள்
உபதேசம் பெற்று நந்தியை அடைந்து அவருளாலே நானும் அறிவு ஞான
சொரூபம் என அறிந்து கொண்டேன்! அறிவுக்கு அழிவில்லை! அறிவிற்கு
ஒளிக்கு அறிவே ஒளியே ஆதாரம்! சுத்த அறிவே, பரிபூரண அறிவே ஞானம்!
நம் ஒளி பெருகப் பெருக ஞானக்கனல் பெருகி உள்ளொளி பெருகும் போது
அறிவு கொஞ்சங் கொஞ்சமாக துலங்கும். உள்ளொளி பெருக அறிவு பெருகும்!

ஞாயிறு, 12 ஜூலை, 2015

இறைவனை அடைய இறைவனே காட்டிய வழி சும்மா இரு!

சும்மா இருக்க உணர்த்தினார் ஆதிகுரு ஸ்ரீதட்சிணாமூர்த்தி

சும்மா இரு என்று அருணகிரிநாதருக்கு உணர்த்தினார் முருகப்பெருமான்

சும்மா இருக்கவே திருவருட் பிரகாஷ வள்ளலாரும் கூறுகிறார்!


இறைவனை அடைய இறைவனே காட்டிய வழி சும்மா இரு!

அதை விடுத்து கண்ட கண்ட சாமியார்கள் கூறும் யோகா செய்து கேட்டு போகாதீர்! மெய் ஞானம் தேடுவோர் சும்மா இருப்பார்!
எந்த யோக சாதனையும்   தேவை இல்லை! சும்மா இருக்கும் தவம் செய்வோர், ஞான சாதனையாளர்கள்  உலக விவகாரங்களை விட்டு ஒதுங்கியே இருப்பார்! 

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

வெள்ளி, 10 ஜூலை, 2015

மெய்ப்பொருள் உபதேசம்

குருவினை க்  கொண்டருட் சத்தி முன் கூட்டிப்
பெருமல நீங்கி பிறவாமை சுத்தமே  - திருமூலர்

 மனிதன் ஞான சற்குருவை கொண்டு, அவர் பாதம் பணிந்து மெய்ப்பொருள் உபதேசம் பெற்று, ஞான சாதனை செய்து வரவர தன் ஞானக்கனலை எழுப்புவான்! எழும்பும் ஞானக்கனல் பெருகி உள்பெருகி ஊடுருவி தாய் அருளைப்பெருவான்! உலக அன்னை வாலையருள் பெற்றவன்
மும்மலங்கள் நீங்கும்! பெருமலங்கள் நீங்கினால்  இறப்பு இல்லை!  இறக்காதவன் எப்படி மீண்டும் பிறப்பான்! குருவைப்பெற்றவன்  பெறுவான் பிறவா மை! அந்த ஆத்மாவே பரிசுத்தமானது!  பவித்திரமானது! எல்லா அழுக்கும் நீங்கினால் சுத்தம் தானே!

ஞாயிறு, 5 ஜூலை, 2015

உருவ வழிபாடு தேவையா? - வள்ளலார்


உருவ வழிபாடு தேவையா? அல்லது வேண்டமா?
வள்ளலார் இராமலிங்கஅடிகள் வரலாறு
சன்மார்க்க தேசிகன் ஊரன் அடிகள் உருவ வழிபாட்டைப் பற்றிப் பிரம்ம சமாஜத்தாருடன் வாது தேதி 16-01-1897.

* உருவவழிபாடு அறவே கூடாதென்பர் பிரம சமாஜத்தார்.

*உருவ வழிபாடும் வேண்டியதே என்பவர் வள்ளற் பெருமான்.
*உருவ வழிபாடும் அருவ வழிபாடும் அவ்வப்பக்குவர்க்கு உரியவை
*உருவ வழிபாடு முதற்படி,அருவவழிபாடு முடிவான படி,
*அருவவழிபாடு எல்லாராலும் செய்ய இயலாது,
*அதற்குப் பெரும் பக்குவம் வேண்டும்,
*உருவ வழிபாடு எல்லாராலும் செய்ய இயலும்,
*உருவ வழிபாட்டிலிருந்தே அருவ வழிபாட்டு நிலைக்குரிய பக்குவத்தைப் பெறுதல் சாமானியர்க்குரிய சாதனமுறை,
*ஆதலால் உருவவழிபாடு இகழ்ச்சிக்குரியதன்று என்பது
வள்ளற்பெருமானின் கொள்கை.
*சாதாரண தரத்தவர்கள் செய்ய வேண்டிய தியானத்தைப் பற்றி உபதேசிக்கும்போது தியானஞ் செய்ய வேண்டுமானால் ஏதாவது ஓர் உருவத்தைத் தியானிக்க வேண்டும்.
*நிஷ்களமா யிருக்கப்படாது.
*உருவமாக இருக்க வேண்டும்.
அருவமாகத் தியானிக்கப்படாது.
*பின் உருவம் கரைந்து அருவமாகும் எனப் பெருமான்
உபதேசித் திருக்கன்றனர்.
*இவ்வாறு அருவ வழிபாடு,உருவ வழிபாடு,

இரண்டையும் ஆதரிக்கும்
வள்ளற்பெருமானுக்கு,
பிரம்ம சமாஜத்தார் உருவ வழிபாட்டை வன்மையாகக் கண்டித்துப் பொதுமக்களிடம் தம் கருத்தைப் பரப்புவது உடன்பாடில்லை.

இவைகளைப் பற்றி மேலும் விரிவாக

வள்ளலார் இராமலிங்க அடிகள் வரலாறு புத்தகத்தில் உள்ளது

*பக்கம் 294ம்முதல் 303ம் பக்கம் வரை உள்ளது.

ஊரன் அடிகளுக்கு தங்கஜோதி ஞான சபையின் நன்றிகள்

வியாழன், 25 ஜூன், 2015

அந்தணர் - பார்ப்பார் யார்?


பாரப்பா பலவேத நூலும் பாரு -  அகத்தியர்.

இங்ஙனம் வேதத்தை படித்து அதன் நுண் பொருளை உணர்ந்து தவம் செய்பவரே அந்தணர் ஆவார்!  

அந்தணர் என்போர் அறவோர் - திருவள்ளுவரும் கூறுகிறார்!.

குடுமி வைத்து கொண்டு பூணூல் போட்டவன் அந்தணன் அல்ல!

வேதம் ஓதி உணர்ந்த அந்தணர் 'பார்ப்பார்' எதை? தன் கண்மணி ஒளியை! தூய வெள்ளொளியை! பால் போன்ற தண்ணொளியை! தவம் செய்து பார்ப்பார்! காண்பர்!

தன் உயிராக அந்த பரமனே இருப்பதை தன் உடலிலுள்ளே பார்ப்பார்! அதனால்தான், தன்னையே பார்ப்பவரைத் தான் பார்ப்பவர்! பார்ப்பனர்கள் என அழைத்தனர்! அந்தணரின் மற்றொரு பெயரே பார்ப்பார் நம்முள்ளே !

பரமாகிய பகவான் நம் உயிராகி ஒன்றானவனாக துலங்கி, அவரே நம் கண் இரு கண் மணி ஒளியாகவும் இரண்டாகவும் துலங்குகிறார்! ஒன்றான ஜீவன் இரண்டாக இரு கண் சூரிய சந்திர ஒளியுடன் சேர , மூன்றும் சேர்ந்தாலே அதுவே ஓங்காரம் ஆகும் ! 

அ உ ம் என்ற முச்சுடரும் தான் ஒன்றான ஓங்காரம்! வேதம் ஓதி , தவ உணர்வால் நாமும் அந்தணர் ஆகலாம்!

பார்ப்பார் -பார்! - பார்! என்ற குரு உபதேசத்தை கேட்டு தன்னையே கண்மணி ஒளி வழி உற்று பார்ப்பவரே , பார்த்துகொண்டு இருப்பவரே பார்ப்பார்!?
உள் ஒளியை  சதா காலமும் பார்ப்பவரே, பார்த்துக் கொண்டிருப்பவரே பார்ப்பார்!

பூவிலே கண்மலரிலே உள் உள்ள நூல் போன்ற நரம்பினை இணைத்து, தவத்தால் ஒளிக்கலைகளை இணைப்பவரே அந்தணர்! பார்ப்பார்!
கண் உள் உள்ள நூல் போன்ற நரம்பினை இணைத்து பூன வேண்டும்!

இதுவே பூணூல் சூரிய சந்திர அக்னி ஒளிக்கலைகளை இணைத்து ஒன்றாக வேண்டும் இதுவே குடுமி! புறத்தில் வேஷம் போடுபவர் வேடர்! அகத்திலே கொண்டவரே அந்தணர். புறத்திலே வேஷம் போட்டுக் கொண்டு தான்
உயர்ந்த ஜாதி என்கின்றனர் மூடர்கள்! பூ நூலை  தரித்து முச்சுடரை சேர்த்து ஒளியோடு இருப்பவரே  உண்மையான அந்தணர்! பார்ப்பார்!


சனி, 20 ஜூன், 2015

கழுத்துக்கு மேலே ஞானம் ! கழுத்துக்கு கீழே மாயை அஞ்ஞானம்!

மேல் வைத்தவாறு செய்யாவிடின் மேல் வினை
மால் வைத்த சிந்தையை மாயமதமாக்கிவிடும்

குரு தீட்சை பெற்று திருவடி மேல் - கண்மணி ஒளி மேல் மனதை
வைத்து உணர்வை பெருக்கி தவம் செய்ய வேண்டும்! இங்ஙனம்
செய்யா விடில், வேறு எந்த சாதனை செய்தாலும் மேல் வினை?!
கண்மணி ஊசி முனை துவாரத்தின் மேல் உள்ள வினைத்திரை -
மும்மல வினை திரை மேல்வினை தான் வேலை செய்யும்! அது
மால்- மாயை - கிருஷ்ணன் -விஷ்ணுவால் சூழப்பட்டு மனம் செயல்பட்டு
மாயையின் வசம் சேர்ந்து விடுவோம்!

கண்மணிமேல் உள்ள வினைதிரையால் மனம் செயல்பட்டு மாயையால் மதியிழந்து விடுவர்! வாழ்க்கை சக்கரத்தில் சிக்கிகொள்வர் !

மனிதா முதலில் குருமேல் அன்புவை! குருவை பணி !  திருவடி தீட்சை பெறு !
பக்தியோடு வைராக்கியதோடு இருந்து தவம் செய்! வாலை தாய் அருள் பெற்று  மாயை மயக்கம் நீங்கி திருவடி ஞானம் பெறலாம்! நீ உன் குருமேல் வைக்கும் பக்தி மேல் வினையை நீக்கும்! குருமேல் பக்தி உள்ளவனே உண்மையான சீடன்!

வாலை தாயை பக்தியுடன் பணிபவனே மாயை அகலப்பெறுவான்!  மேல் வை - எப்போதும் உன் சிந்தனை மேலே உள்ள கண்ணை பற்றிய ஒளியின் மீதே இருக்கணும்! உன்மனம் கழுத்துக்கு கீழே போகாமல் பார்த்துகொள்! நாம் ஞானம்  பெறும் இடம் தலையே! தலையில்தானே ஞானேந்திரயங்கள் ஐந்தும் உள்ளன!

கழுத்துக்கு மேலே ஞானம் ! கழுத்துக்கு கீழே மாயை அஞ்ஞானம்! மேலேயே இரு! உன் சிந்தனை மேலான பொருளை பற்றியே இருக்க வேண்டும்! உன் சிந்தனை மேலே , மேலே போனால் தான் மேலே இருக்கும் மேலானவனை - பரமாத்மனை அடைய முடியும்! உன் சிந்தனை கீழே
இருந்தால் , கீழ் தரமாக இருந்தால் நீ போவது மண்ணுக்கு கீழே தான்! இறைவன் திருவடி மேலே தான்! நம் கண்தான்! கீழேயல்ல!

ஞாயிறு, 14 ஜூன், 2015

எப்போது ஆத்மா நமக்கு குரு??


சன்மார்க்க நெறி நின்று மனதை இரு கண்மணி ஒளியில் நிறுத்தி தவம் செய்து
வந்தோமானால்! குரு உபதேசம் தீட்சை மூலம் தெளிந்த சீடன் தொடர்ந்து தவம் செய்ய செய்ய இரு கண்ணும் உள் சேரும் அக்னிஸ்தானமே நம் ஆத்மஸ்தானமே இறை சொருபம் தான் என்பதை கண்டு கொள்ளலாம்! பின் நான் ஆகிய சிவமே ஒளியே நமக்கு குரு ஆகிவிடும்!

நம் உள் ஒளியே ஆத்மாவே நமக்கு குருவாம்! ஒவ்வொருவரும் தத்தம் தனது ஜீவனையே குருவாக அடைய வேண்டும்! அவனே ஞானி! தத்தம் குருவாக விளங்கும் அவன் யார்?

சாட்சாத் இறைவன் தானே! அந்த சிவம் தானே குரு! சித்தத்தை சிவனிடம் வைத்து சும்மா இரு!

இதுவே இறைவனை சேரும் வழி !

-ஞான சற்குரு சிவசெல்வராஜ்  அய்யா 
www.vallalyaar.com

முப்புரம் ஆவது மும்மல காரியம்


அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பார்கள் மூடர்கள்
முப்புரம் ஆவது மும்மல காரியம்
அப்புறம் எய்தமை யாரறி வாரே! - திருமூலர்





அப்புவை அணிந்த சிவந்த சடைகளையுடைய ஆதி முதல்வன்
சிவம் ஒளி! நமது கண்களில் நீர் உள்ளது தவம் செய்வதால் சிவந்த ஒளிக்கலைகளை உடையது அந்த ஆதியே மணியின் ஒளி! சிவபெருமான் திரிபுரந்தகர்களை அழிக்க அவர்கள் கோட்டைகளை முப்புரங்களை புன்னகையால் எரித்து அழித்தார் என புராண கதை கூறுவார்! இங்ஙனம் கதை அளக்கும் சைவர்கள் மூடர்கள் முட்டாள்கள்  என திருமூலர் கூறுகிறார்! 

ஞானம் அறியாதவர்களை இதுவரை அடியேன் மூடர்கள்
என்று கூறுவது சரிதானே! கதை பேசி காலத்தை ஓட்டுபவர்கள் முட்டாள்களே! அதை கேட்டும்  பாமரன் ஒருநாளும் கடை தேற முடியாது!

"முப்புரம் ஆவது மும்மல காரியம்"  திருமூலரே கூறுகிறார் முப்புரம் என்பது நமது ஆத்மாவை மறைத்து நமது கண்ணை மறைத்திருக்கும் மெல்லிய - ஜவ்வே - திரையே மும்மலங்களால் ஆன சூட்சும சக்தியாகும்! இந்த திரை தான் சிவன் புன்னகைக்க எரிந்து விடும்! 

அதாவது புன்னகை - உதடுகள் லேசாக பிரிவது!நம் கண்மணி ஊசி முனை துவாரத்தின் உள் ஒளியே சிவம்! நம் தவத்தால் ஒளி பெருகி ஊசிமுனை துவாரத்தை அடைத்திருக்கும் ஜவ்வு லேசாக விலகும். விலக உள் ஒளி பிரவாகித்து வினை திரை யை எரித்து விடும்! எவ்வளவு பெரிய ஞான அனுபவத்தை திருமூலர் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்! அதன் விளக்கத்தை அடியேனை வைத்து எவ்வளவு தெளிவாக எளிதாக ஞான விளக்கம் கொடுத்திருக்கிறார் அப்பெருமான்! இதுவே மெய்ஞானம் !

கதை பேசி காலத்தை ஓட்டாதீர் சைவர்களே! சைபர்கலே! உண்மை ஞானம் உணர்க! சாதி சமய வேறுபாடுகளை களைந்து ஒரே நெறியில் உயர் நெறியாம் சன்மார்க்க நிலை நின்று சாயுச்சயம் பெற வாரீர்! 

சிவன் புன்னைகைக்க மும்மலம் கழிய பிறகென்ன ஆத்ம ஞானம் கிட்டும் அதுவே பேரின்பம்! நீ முட்டாள் என கூறுவது உன்னை திட்டுவது அல்ல ! உண்மை அறியாமல் இருக்கிறாயே! உன் மெய்யில் அறியாமல் இருக்கிறாயே ! சிவம் இருப்பது உள்ளிலே! 

அறி என அறிவுருத்தவே சிந்தி நன்றாக சிந்தி! கண்ணீர் சிந்தி தவம் செய்தாலே சந்திப்பாய் சிவத்தை! சிவத்தை நீ சந்திக்கா விடில் நீ சவம்! ஏ மனிதா சீவனை சிவமாக்கு  இல்லையேல் சவந்தான்! தப்ப முடியாது!

படித்த முட்டாளை விட படிக்காதவனே மேல்!

கல்லாத மூடருக்கு கல்லாதார் நல்லார் - திருமூலர் 

ஞான உபதேசம்  திருவடி உபதேசம் கேட்காதவன் அவனே மூடன்!

ஞான உபதேசம் திருவடி உபதேசம் கேட்ட பின்னரே ஒருவனின் துலங்க  அறிவு ஆரம்பிக்கும்!

அதனால் தான் கல்லாத மூடன் என உபதேசம் பெறாதவனை திருமூலர் கூறினார்!?

கல்லாதவர் - படிப்பறிவே  இல்லாதவன் - பாமரன் - படித்த முட்டாளை விட படிக்காதவனே மேல்!

இன்றைய நடை முறையை திருமூலர் அன்றே தெளிவாக கூறி விட்டார்!  இன்றைக்கு பல்கலை கழகங்களில் பட்டம் பெற்ற, மேதைகள் என தன்னை தானே கூறிக்கொள்ளும் படித்த முட்டாள்கள்  ஞானம் கிலோ
என்ன விலை என கேட்கும் ஆசாமிகள் தான்! கற்றது கைமண்ணளவு 
கல்லாதது உலக அளவு என்ற ஆப்த வாக்கியம் படிக்காத முட்டாள்களே!

படித்திருந்தால் நல்ல சற்குருவை நாடி ஓடியிருப்பார்களே! கெளரவம் - ஆணவம் - அந்தஸ்து - தடுத்திருக்கதே! லட்டு இனிக்கும் என சொல்லி கொண்டே இருப்பவர்கள்! சாப்பிட மாட்டார்கள் ஞான சூனியர்ங்கள்! பேராசிரியர்களாக உலாவரும் அணிந்துரை வாழ்த்துரை வழங்கும் அறிவிலிகள்! இன்றைய பேராசிரியர் பலரும் பேர் - பெரிய ஆசிரியல்லர்!  அ  - சிறியர்! சின்ன பசங்கள் தான்! இப்படி பட்டவர்களிடம் படிக்கும்
மாணவன் எப்படி உருப்படுவான்? உரை நூல்களை வைத்து ஒப்பேற்றும் 
 அ - சிறியர் கூட்டம் தான் அதிகம்!

ஞான கல்வி படியுங்கள்! ஞானத்தை போதியுங்கள்! புனிதமான தொழில் பயிற்றுவித்தல்! பண்படுங்கள்! பண்படுத்துங்கள்!

கல்லாத மூடர் - படித்து ஞானம் அறியாதவன்.அதாவது சற்குருவிடம் 
உபதேசம் கேட்காதவன் அவனே  மூடன்!  


ஞான சற்குரு சிவசெல்வராஜ்

புதன், 27 மே, 2015

சுட்ட சுடுகாடும் வெளி

 வினைகளை எரிக்க உயிர் ஒளியை பெருக்க வேண்டும். அதற்க்கு உயிர் எங்கு உள்ளது? அதை அப்படி பெருக்குவது என்று தெரிந்து உணர்ந்து பெருக்க வேண்டும்.உயிர் ஒளி ஆற்றல் பெருக்கி வினைகளை சுட்டு எரித்து சாம்பல் ஆக்க வேண்டும். அதுவே சுடுகாடு. சுட்ட சுடுகாடும் வெளியும் அதுவாகும். அதுவே கண் மணி

 மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்
என அவ்வை கூறி உள்ளாரே! என் செய்வேன்?? 
தன்னை - தன் தீயை உணர வழியான கண்ணில் - தன்னில்
மனதை நிறுத்தினால்? மனம் அடங்கும்.!
இறைவன் திருவடியில் போட்டால் மனம் அடங்கும்.


நமது கண்ணே ஹோம குண்டம். அங்கே தான் ஜோதி உள்ளது அல்லவா அதற்க்கு ஆகுதி நமது கர்ம வினைகள் தான்! இதுவே ஞான கர்மம்! ஞான யாகம்! இதுவே திருநெறியாகும் ! இதை உணர குரு நெறிக்கு வருக!


மனதை உன் மணியில் வைத்தால்! மனோன்மணித்தாய் கண்ணில் உள்ளாள் காட்சி கிடைக்கும்! மனம் அங்கே நிறுத்தி கண்மணியில் நிறுத்தி தவம் செய்யும்போது அங்குள்ள ஒளி வாயுவால் பெரிதாகும்! கண்மணி சுழல சுழல காற்று வேகமாகி ஒளியை பெருகும்! “மன்மணம் எங்குண்டு வாயு அங்குண்டு” இதுவும் ஞானியின் கூற்றே!



-ஞான சற்குரு சிவசெல்வராஜ்  அய்யா 
www.vallalyaar.com

ஞாயிறு, 17 மே, 2015

பக்தி இருந்தால் ஞானம் மலரும்.

பக்தியில்லாமல் வறட்டு வேதாந்தம் பேசுவோர் ஒருக்காலும் இறைவனை உணரார்! பக்தி இருந்தாலே ஞானம் மலரும்.பக்தி இருந்தாலே நல்ல பண்புகள் வரும்.அவனே உத்தமன் ஆவான்.அப்படி பட்டவனே குருவை பணிந்து உபதேசம் தீட்சை பெற முடியும்! பக்தியில்லாதவன் பணிவு இல்லாதவன் ஞானம் பெற முடியாது!  பணிந்தவனுக்கே பரமன் அருள்! குருவை பணிந்தவர்களுக்கே பரமன் அருள் கிட்டும்! குருவை பெற்றவனே வைராக்கியத்துடன் தவம்  செய்வான்! அது மட்டும்
போதாது!?  சக்தி அருள் தரில் இவையெல்லாம் எளிதாக கிடும்மாம்! சக்தி தான் வாலை !

நம் இடக்கண் சக்தி! நம் சிர நடுவில் விளங்கும் சிவசக்தி! அந்த சக்தியை பக்தியால் போற்று! கன்னியா குமரியிலே முக்கடல் தீரத்திலே எத்தனையே கடல் கோள்களையும் தாண்டி இன்றும் நின்றும் நித்தம் தவம் செய்யும் வாலைதாய்! வா! பார்! பணி! சக்தியை பணிந்து உன்சக்தியை பெருக்கு சக்தி அருள் பெற்று சிவத்தை பார்! தாயை விட அந்த சக்தியை விட தயவுடையார் வேறு யார்?

தாயை பணி தலைவனை காணலாம்! தன்னிகரில்லாதவன் ஆகலாம்!அவனே ஞானம் பெற்றவனாவான்! எளிதாக இறைவனை அடைய குருவை நாடி உபதேசம் பெறு! தீட்சை பெறு  !பக்தியுடன் வாலை தாய் அருள் பெறு ! வைராக்கியமாய் இருக்கலாம் ஞானி ஆகலாம்! சக்தியை பணிந்தால் எல்லாம்
எளிது! இதுவே ரகசியம்.

புதன், 18 மார்ச், 2015

சன்மார்க்கம் என்றால் என்ன?

சன்மார்க்கம் என்றால் என்ன?
என்பதை முதலில் சன்மார்க்கி என்று சொல்லும் நீ உணர்ந்து கொள்!

சகலரும் சேர்ந்தது தான் சன்மார்க்கம்!  உலகில் உள்ள எல்லா மதத்தவரும் எல்லா நாட்டவர்களும் எல்லா ஜாதி மற்றும் பிரிவினரும் எல்லாம் வல்ல இறைவனின், ஒரே இறைவன் தான் உலக்குக்கு என்று உணர்த்தி நாம் எல்லோரும் அந்த ஒரே இறைவனின் பிள்ளைகளே! நாம் அனைவரும்
உலக மக்களாகிய  அனைவரும் சகோதர சகோதிரிகளே என அறிய செய்யவேண்டும்! உணர செய்ய வேண்டும்! அது தான் சன்மார்க்கம்!

ஊரோடு ஒத்துவாழ்! கூடி வாழ் என்றெல்லாம் வாழ்பவன் தான்
சன்மார்க்கி! துவேசம் காண்பிப்பவன் ஆணவம் காண்பிப்பவன் சன்மார்க்கி அல்ல!

விபூதி பூசுவதும் பூசாமல் இருப்பதும் சன்மார்க்கம் அல்ல! தரும சாலையில் மேட்டுகுப்பத்தில்  பின் எதற்காக விபூதி பிரசாதம் கொடுக்கிறார்கள்?!

வள்ளல் பெருமான் காட்டிய ஞான பாதையில் பீடு நடை போடுங்கள்! எம்மதத்தவர்களையும் அரவணைத்து சன்மார்க்கம் பற்றி எடுத்துக்கூறுங்கள்!

ஜீவகாருண்யம் என்றால் அன்பு! மனிதர்கள் மட்டுமல்லாமல் எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு காட்டு!

சாப்பாடு போடுவது அதில் ஒன்று தான்! சாப்பாடு போடுவது மட்டும் தான் ஜீவகாருண்யம் என்று தவறாய் கருதி விடாதீர்கள்!?

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

வியாழன், 12 பிப்ரவரி, 2015

மெய்த்தவம் ஒன்றுண்டு



மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு
மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின்றோர்க்கே.

விளக்கம்:

மனிதன் மேற்கொள்ள தகுந்த உயர்ந்த முடிந்த முடிபான சிறந்த மெய்த்தவம் ஒன்றுண்டு! மெய்தாள் ஒன்றுண்டு! மெய்ந்நெறி ஒன்றுண்டு!

இறைவனையே அவன் திருவடியையே சேர வேண்டும் என்ற வண்ணம் தொழுது அழுது தவம் செய்வார்க்கே ஞானம் – மோட்சம் கிட்டும்!

மெய்த்தவம் - உண்மையான தவம் எது என்றால் மனித உடலே மெய்! இந்த மெய்யிலே இருக்கும், இறைவன் இருக்கும் பொருள் – மெய்பொருள் கண்மணியே! அதனுள் ஒளியே! இதை சற்குரு மூலம் அறிந்து உணர்ந்து செய்வதே மெய்த்தவம்!

மெய்த்தாள் - மெய்யிலே – உடலிலே உள்ள தாள் திருவடி ஒன்றுண்டு! அதுவே நம் உயிர் நிலை! அதுவே இரண்டாக பிரிந்து இரு கண்ணாக உள்ளது!

மெய்நெறி - மெய்த்தாள் அறிந்து மெய்த்தவம் செய்ய மனிதன் மெய்நெறி வழி நடக்க வேண்டியது அவசியம்! உடம்பே ஆலயம் அதனுள் பரம்பொருள் ஜீவனாக கோயில் கொண்டுள்ளான் என்பதை உணர்ந்து உடம்பாகிய ஆலயத்தில் உயிர் குடி கொண்ட கோயிலை – கருவறையை – மூலஸ்தானத்தை அடைய மூலவர் அருள்பெற நல்லொழுக்க நற்பண்பினராக வாழ்வது மிக மிக அவசியம்! அதுவே மெய்நெறி இதையெல்லாம் மொத்தம் 25 நூற்களில் எழுதி விட்டேன்! ஆயிரம் அன்பர்களுக்கு மேல் உபதேசம் தீட்சை வழங்கியும் வழி நடத்தியாயிற்று? வாருங்கள் காண விரும்பினால்? வேண்டுங்கள் பெற விரும்பினால்! கன்னி’ய’குமரிக்கு வரம் பெற வாலையருள் பெற வருக! வருக!

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

சும்மா இருக்க குரு வழிகாட்ட வேண்டும் !

உயிர் அறியாது ஒடுங்குவது தூக்கம் ! உயிரை அறிந்து
ஆதாரத்தில் ஒடுக்குவது சமாதி ! சாதாரண மக்களுக்கு
தூக்கம் ஒரு வரப்பிரசாதம் ! ஒய்வு கிடைக்கிறது .
ஓய்வு என்றால் என்ன ? சும்மா இருப்பது தானே ?!
சும்மா இருப்பதுதான் ஞானம் ! அறியாமல் சும்மா
இருந்தால் ஓய்வு ! அறிந்து உணர்ந்து சும்மா இருந்தால்
ஞானம் கிட்டும் ! அறிந்து உணர்ந்து சும்மா இருக்க
குரு வழிகாட்ட வேண்டும் !


உயிரை அறிந்து ஆதாரங்களில் ஒடுங்கி விடாமல்
உணர்வோடு சும்மா இருப்பதுவே ஞானநிலை!
மோனநிலை! " சமாதி பழக்கம் பழக்கமல்ல,
சகஜ பழக்கமே பழக்கம் " என வள்ளலார் கூறுகிறார் .
சமாதியில் மூழ்குவது பெரிதல்ல , உயிர் அனுபவம்
உணர்ந்து பெற்ற பேரின்ப நிலையிலேயே சகஜமாக
எப்போதும் இருப்பதுவே சிறப்பு என்கிறார் .

உயிர் தூக்கத்தில் ஒடுங்குகிறது ! மரணத்தில்
உடலைவிட்டு பிரிந்து விடுகிறது ! மயக்கத்தில்
தடுமாறுகிறது ! தடுமாறாமல் ஒடுங்காமல் , பிரியாமல்
உயிரை அதன் தன்மையில் பெருக்கி அதாவது ஒளியான
உயிரை ஊசிமுனை அளவு ஒளியான உயிரை
உடல் முழுவதும் பரவும் அளவு பேரொளியாக
செய்து இந்த உடலிலேயே உயிரை நிலை பெறச்
செய்வதுமே ஞானம் ! உயிர் தன்மையை உடல்
பெற்று உடலும் ஒளிர்ந்து மிளிர்வதே ஞானம் !
ஊன உடலே ஒளி உடலாக பெறுவதே ஞானம் !

வெள்ளி, 23 ஜனவரி, 2015

தை பூசம்(பிப்ரவரி 3/4/5) வடலூர் வருக.

வள்ளல் பெருமான்
மற்றும் எல்லா சித்தர்கள்
ஞானிகளின் அருள் பெற

தை பூசம்(பிப்ரவரி 3/4/5) வடலூர்  வருக.  

144 வது தை பூசம்
வள்ளல் பெருமான் ஒளி நிலை பெற்று 141 வருடம்.







வள்ளல் பெருமான் அமைத்த

1 சத்திய தரும சாலையில் (ஜீவகாருண்யம்) உணவு இலவசம்.
2 சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்க.
3 சித்திவளாகம்(மேட்டுகுப்பம்) வள்ளல் பெருமான் ஒளியான இடத்தை தரிசனம் செய்க.






வள்ளல் பெருமான் உரைத்த மரணமிலா பெரு வாழ்வு வாழ
1. சுத்த சைவ உணவு உட்கொள்க.
2. புகை பிடிக்க வேண்டாம்
3. மது அருந்த வேண்டாம்.
4. உயிர் பலி கூடாது.

செவ்வாய், 20 ஜனவரி, 2015

இந்த ரகசியத்தை அறியாமல் ..


இறைவன் சிறு ஜோதியாக ந ம் உடலில் உயிராக இருக்கிறான் என்பதை
அறிந்தவன், தகுந்த குரு மூலம் உணர்ந்தவன் தான் ஞானம் பெறுவான்!
அறிந்தால் மட்டும் போதாது! குரு மூலம் திருவடி தீட்சை மூலம் உணரவும்
வேண்டும்! தவம் செய்யவும் வேண்டும்! அப்போது தான் ஞானம் கிட்டும்!
இறையருள் பெறலாம். இந்த ஞான ரகசியத்தை அறியாமல் இந்த உலகில்
நீங்கள் வேறு எது செய்தாலும் ஞானம் கிட்டாது!?

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

வேதங்களில் சொல்ல பட்ட இறை ரகசியம்

பிறப்பிக்க வைத்த அந்த  இறைவனே எல்லா உயிர்களுக்கும் வாழ்வில் பல சந்தர்பங்களில் தன்னை  வெளிபடுத்து காட்டுகிறான்! ஆனால் அறிவோர் உணர்வோர் வெகு சிலரே!

மனிதனை படைத்து காத்து மறைத்து அருளும் எல்லாம் வல்ல பரம்பொருளே அவரவர் வினைக்கேற்ப வாழ்வை முடித்தும் வைக்கிறான்! அதாவது உடலை அழித்து அல்லது மாற்றி அவரவர் பரிபக்குவத்திற்கு ஏற்ற நிலையை தந்து அருள்கிறார்.

அவனின்றி ஒரு அணுவும் அசையாது! அணுவுக்கு அணுவாக இருந்து எல்லாம் புரிந்து ஆள்வதும் அருள்வதும் அவன் திருவிளையடல்களே ! அற்புதங்களே!

அணுவுக்கு அணுவாக ஒளிர்பவன் மனித உடலில் இல்லாமல் போவானா?
எங்கும் இருக்கும் இறைவன் நம் உடலினுள்ளும் உள்ளான் உயிராக!!!

இதுவே ஆதி காலந்தொட்டு நமது ஞானிகள் எல்லோரும் உரைத்த உண்மை!
வேதங்களில் சொல்ல பட்ட இறை ரகசியம்! "அகம் பிரம்மாஸ்மி"

இறைவன் பரமாத்மா பரம்பொருள் பெரும்ஜோதி ஆண்டவன்
தானே சிறும் ஜோதியாக தன்னை குறுக்கி கொண்டு ஜீவாத்மாவாக
உயிராக பிராணனாக நம்முள் இருக்கிறார்! நம் உள்  மனம்
கடந்த நிலையில் இருப்பதால் தான், உள் கடந்து இருப்பாதால் தான்
ஆன்றோர் கடவுள் என்றனர் 

Popular Posts