பெருந்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெருந்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 மே, 2020

நல்ல மருந்து?

* கண்மணி ஒளியே நல்ல மருந்து *

"முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்
பின்னை பிறப்பறுக்கும் பேராளன் - தென்னன்
பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்
வருந்துயரந் தீர்க்கும் மருந்து”


முன்னை வினையிரண்டும் - நம் கண்மணி முன்னால் திரையாக
துலங்கும் வினையிரண்டையும் வேரறுத்து முன்னின்றான் - நம்
கண்ணிலுள்ளவன் நம் கண்முன்னே நின்று காட்சி கொடுத்தான்!

சிவன்! அவன் தான் இனி பிறப்பதை தடுத்த பேரருளாளன் இறைவன்!

தென்பக்கமான நம் முகத்தில் கண்மணியில் பெருந்துறையில் மேவிய
துலங்கிய பெருங்கருணையாளன் ! அதுவே நம் கண்மணி உள்
துலங்கும் ஒளியே நமக்கு வரும் எல்லா துயரங்களையும் நீக்கும்
மருந்தாகும்!

நல்ல மருந்து இம்மருந்து சுகம் நல்கும் வைத்தியநாத
மருந்து அருள்வடிவான மருந்து அருட்பெருஞ்ஜோதி மருந்து என்று
வள்ளல் பெருமான் போற்றிப் பணிகிறார்!


ஆன்மீக செம்மல் ஞானசித்தர் ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா
தங்கஜோதி ஞானசபை அறக்கட்டளை

www.vallalyaar.com

 

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

ஆன்மீகத்தில் - பெருந்துறை எங்கு உள்ளது?


நம் பெருந்துறை கண்மணி ஊசி முனை வாசலே!

உள்ளே சிவமான ஒளி!ஊசிமுனை வாசல் என்ன பெருந்துறையா?
மிக மிக சிறிய இடம்தானே! ஏன் பெருந்துறை என்று சொன்னார்கள்?

வாசல் ஊசிமுனை அளவு சிறியது தான்!


உள்ளே போனால் பிரபஞ்சமே அங்கேதான் பெரிய அளவிடமுடியாத பெரும் வெட்டவெளி!

அங்கே போகும் வாசலுக்கு அதனால் தான் பெருந்துறை எனப்  பெயர்!

இந்த பெருந்துறையில் என்றும் பிரியாமல் இருக்கும் இறைவனைப் பற்றி பாடு! ஆடு!

வாய் மணக்க அவன் புகழையே பேசு!

பேசிக்கொண்டே இரு!

அடியேன் பரம்பொருளின் பெரும்புகழையே பாடுகிறேன், எழுதுகிறேன்!!

ஞான சற் குரு சிவசெல்வராஜ்



Popular Posts