ஞாயிறு, 25 மார்ச், 2018

பயம்

வன்புலால் வேலும் அஞ்சேன்
வளக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத்தாடுகின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலாதவரைக் கண்டால் அம்மநாம்  அஞ்சுமாறே

வலிமையான உடல் கொண்டவன் கைவேலுக்கு அஞ்சமாட்டேன் !
பெண்களின் கடைக்கண் பார்வைக்கும் விழுந்து விடமாட்டேன் !
எலும்பும் உருகும் படியாக நோக்கிஇருந்து  - விழித்திருந்து
அம்பலத்தாடுகின்ற என் அற்புத திறம்மிகுந்த மணியை
போற்றி புகழ்ந்து தவம் செய்து பேரின்பம் தரும் இறையருளை
பருக மாட்டாதவரை அப்படிப்பட்டை அன்பில்லாதவரை கண்டால் தான் எனக்கு பயம் என்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்! தவம் செய்யாதவரை கண்டு தான் பயம். வேறு யாருக்கும் எதற்கும் பயமில்லை என்கிறார்!

ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts