சனி, 13 ஜூன், 2026

சத்திய ஞானசபையில் வழிபாடு !!


மாணிக்கவாசகரை தெய்வமாகவே போற்றிய வள்ளலார் அவர் ஆசியோடு ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளோடு உலகிற்கு வழங்கிய ஞானதானமே "சத்திய ஞான சபை ".25-01-1872 பிரஜோற்பத்தி வருடம் தை மாதம் 13-ம் நாள் வியாழக்கிழமை பூச நட்சத்திரத்தன்று முதன்முதலாக சத்திய ஞானசபையில் வழிபாடு தொடங்கப்பெற்றது.


நாம் செய்த தவப்பயன் திருவருட்பிரகாச வள்ளல் இராமலிங்க சுவாமிகள் தமிழ்நாட்டில் வடலூரில் சத்திய ஞான சபையை உருவாக்கினது !!ஒரு ஆண்டாக தானே முன்னின்று சபையை உருவாக்கினார் . "சத்திய ஞான சபையை என்னுடல் கண்டனன் சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்'என்று பாடுகிறார்!நம் தலையின் அமைப்பு தான் சத்திய ஞானசபை!உள்ளே நடுவே சுடர்விட்டு பிரகாசிக்கும் அருட்பெருஞ்ஜோதி !

முன் இருபுறமும் அஞ்செழு பொன்னஞ்செழு ! வள்ளல் பெருமான் சத்திய ஞானசபை இயற்கை விளக்கம் என்பார்! நம் அகத்தே நம் தலையின் உள் நடுவே விளங்கும் நம் ஆன்மஜோதியை காணுதற்குரிய அனுபவத்தைப் புறத்தே அடையாளமாகக் காட்டுவதே சத்திய ஞான சபை!!

நாம் ஜோதி தரிசனம் காண முடியாமல் தடுத்த மாயா திரைகள் ஏழு மறைத்துள்ளது !வடலூரில் சத்திய ஞானசபையில் ஏழு திரை நீக்கிய பின் தானே ஜோதி தரிசனம் காண்கிறோம்? அதுபோல நம் கண்களை மறைத்துக் கொண்டிருக்கும் மும்மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை ஏழு நிலைகளாக ஏழு திரைகளாக உள்ளது! நாம் அஞ்செழு பொன்னஞ்செழுவாகிய நம் இரு கண்மணி ஒளியை நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து தவம் செய்யச் செய்ய இருகண் சூரியசந்திர ஜோதி உட்புகுந்து ஆன்மஜோதியை அடையும் அம்முயற்சியின் போது ஒவ்வொரு திரையாக விலகும்!

என்னென்ன கலர் ஒளி தெரியும் என்றும் நம் உலகிற்கு வள்ளலார் தெளிவாக கூறுகிறார்!முடிவில் நம் ஆன்மஜோதி தரிசனம் நாமே காணலாம்!! ஒவ்வொருமனிதனும் இப்படித்தான் ஞான தவம் செய்யணும்1 இன்னின்ன மாதிரி அனுபவம் கிட்டும் என வள்ளல் பெருமான் மிகமிக தெளிவாக ஞான அனுபவங்களை புட்டு புட்டு வைக்கிறார்! "சிற்சபையும் பொற்சபையும் சொந்தமெனதாச்சு" என்றும் அகவலில் ஒவ்வொரு திரையின் தன்மையும் கூறி நம்மை பரவசத்திலாழ்த்துகிறார்!

உலகில் இதுவரை இதுபோல் யாருமே இவ்வளவு தெளிவாக ஞான உபதேசம் சொன்னதில்லை !!அதை பாமரனுக்கும் விளங்கும்படி உன் தலை அமைப்பே சத்திய ஞானசபை , அதன் உள் நடுவே ஜோதி தரிசனம் காண்பதை போல உன்தலை உள்நடுவே உள்ளுள் ஆத்மஜோதியை காண்!என்றார்!இதுவே ஈடு இணையில்லா ஒப்பற்ற ஞானம் !முதன் முதலாக உலகுகு சொன்னதோடு இம்மாதிரி இருக்கும் என்று சத்திய ஞான சபையையும் கட்டி தத்துவ விளக்கமும் தந்து தம்மை மரணமிலா பெருவாழ்வுக்கு கூட்டிப்போகிறார். யார் செய்வார் இப்படி ஒரு உதவியை ?!ஞானிக்கெல்லாம் பரமஞானி வள்ளலார்!!ஈடு இணையில்லா ஞானி!!

'என்செயல் அனைத்தும் தன்செயல் ஆக்கி
என்னைவாழ் விக்கின்ற பதியைப் பொன்செயல்
வகையை உணர்த்தினன் உளத்தே பொருந்திய
மருந்தையென் பொருளே வன்செயல் அகற்றி
உலகெலாம் விளங்க வைத்தசன் மார்க்கசற் குருவைக்
கொன்செயல் ஒழித்த சத்திய ஞானக் கோயிலில்
கண்டுகொண் டேனே"

6-ம் திருமுறை - திருவருட்பா

இதுதான் ஞானம் !இதுதான் வழி! இதைத்தான் எல்லா ஞானிகளும் இரகசியமாக மறைபொருளாக இதுகாறும் சொல்லிபட்டும் படாமலும் ஞானத்தை வெளிப்படுத்தி சென்றனர்!ஆனால் வள்ளலார் உலககுரு ஆயிற்றே !உலகருக்கு உள்ளதை உள்ளபடி உணர்த்தினார்! எந்த மறைவுமின்றி !பகிரங்கமாக இரகசியம் ஏதுமின்றி இதுதான் இதுதான் என்று போட்டுடைத்துவிட்டார்! காலாகாலமாக உலகை சூழ்ந்த ஆணவ இருள் விலகியது! உலக குரு வள்ளலார் ஏற்றிய ஞானதீபம் பிரகாசிக்கின்றது!!

சன்மார்க்கம் சூதுவாதுவிளையாடும் களமல்ல?!சத்திய ஞானசபையினரேதான்! சாதிமதமா சன்மார்க்கம் ! சாதிப்பற்றோடுங்கொண்டிருப்பவன் சன்மார்க்கன் அல்ல?!உண்மையான சன்மார்க்கரே பசித்திரு தனித்திரு விழித்திரு!வள்ளலாரைப் போல வேடம்போடாதே! வள்ளலார் சொன்னபடி விழித்திருந்து ஞானதவம் செய்!

உலககுரு வள்ளலாரின் கொள்கைகள் ஆன்மநேய ஒருமைப்பாடு ஜீவகாருண்யமுமே!! எவ்வுயிரையும் தம்முயிர்போல் கருதினாலே ஆன்மநேய ஒருமைப்பாடு உனக்குள் உண்டாகும்! பிற உயிரைப்போல உன் உயிரும் ஜீவனும் கடைத்தேறவேண்டுமானால் உன் ஜீவனை கருணையோடு பார் அதுவே ஜீவகாருண்யம்!சாப்பாடு போடுவது , யார் யாருக்கு என்ன தேவையோ அதை கொடுத்து உதவுவது எல்லாமே சாதாரண விஷயம் !? உலககுரு வள்ளலார், நீ உன் ஜீவனை அறிந்து உணர்ந்து ஞானதவம் செய்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அடையவே வழிகாட்டுகிறார்

!விழித்திரு விழித்திருக்க சொன்னாரே! கண்ணை மூடி செய்யும் எந்த பயிற்சியும் ஞானத்தை தராது?! முதலில் புறக் கண்ணைத்திற புறத்தே ஜோதி தரிசனம் காணமுடியும்!! புறக்கண் விழித்து தான் உன் அகத்திலும் ஆத்மஜோதியை காணமுடியும்!! கண்ணைமூடினால் தூங்குவாய், முடிவில் ஒரேயடியாய் நெடுந்தூக்கம்தான் முதலில் புறக்கண்ணைத்திற !உன் அறிவு கண்ணைத்திற!
உன் மனக்கண்ணைத் திற! பின்னர் உன் ஊனக்கண்ணே ஞானக்கண்ணாக மாறும்!!

#உலககுரு வள்ளலார் நூல் 




வெள்ளி, 12 ஜூன், 2026

திருவருட்பா அச்சிடப்பட்டது

 வள்ளல் பெருமானின் அணுக்கத் தொண்டர் இறுக்கம் இரத்தினசாமி முதலியார் வள்ளலாரின் பாடல்கள் தொகுப்பை வெளியிட திருவருட்பா என வெளியிட 1860 ஆண்டு முதல் ஏழு ஆண்டுகள் போராடினார்!விடவில்லை, தினமும் ஒரு வேளையே உண்டு அறப்போராட்டம் நடத்தி வள்ளலார் மனதை கரைய வைத்து அனுமதி வாங்கிவிட்டார்! 

1867 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவந்த திருவருட்பா முதல் நான்கு திருமுறைகள் பதிப்பின் முகப்பேட்டில் முதல் முதலாகத் திருவருட்பிரகாச வள்ளலாரென்னும் சிதம்பரம் இராமலிங்க பிள்ளை அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய "திருவருட்பா"என அச்சிடப்பட்டது . இந்த உலகமே முதலில் நன்றி சொல்ல வேண்டியது இறுக்கம் இரத்தின முதலியாருக்கே !! அவர்தானே ஏழு ஆண்டுகள் விடாமல் நச்சரித்து போராடி அருட்பா வெளியிட வள்ளலார் அனுமதி பெற்றுத் தந்தார்!

இராமலிங்கம் அருளிய பாடல்களுக்கு "திரு அருட்பா" என்றும் ,அதன் பகுதிகளை ஆறாக வகுத்து அவற்றை ஆறு திருமுறை என்றும் ,நமது இராமலிங்க பெருமான்னுக்கு "திருவருட்பிரகாச வள்ளலார்" என்றும் சிறப்பு பட்டம் வழங்கிய பெருமையும் புண்ணியம் உபயகலாநிதிப்பெரும்புலவர் தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களையே சாரும்!

1867-ல் திருவருட்பா முதல் நான்கு திருமுறைகள் முதலில் இறுக்கம் இரத்தின முதலியாரால் வெளியிடப்பட்டது.

1883-ல் திருவருட்பா முதல் நான்கு திருமுறைகள் இரண்டாம் பதிப்பு தொழுவூர் வேலாயுதமுதலியார் வெளியிட்டார்.

1880-ல் திருவருட்பா ஐந்தாம் திருமுறை முதலில் தொழுவூர் வேலாயுத முதலியார் வெளியிட்டார்.

1887-ல் திருவருட்பா ஐந்தாம் திருமுறை இரண்டாம் பதிப்பும் தொழுவூர் வேலாயுதமுதலியாரே வெளியிட்டார்.

திருவருட்பா ஆறாம் திருமுறையை தற்போது வெளியிடவேண்டாம் என வள்ளல்பெருமானே கேட்டுக்கொண்டார்.

திருவருட்பா ஆறாம் திருமுறை முதல் பதிப்பு 1885-ல் வேலூர் பத்மநாபர் பெங்களூர் இராகவலு ஆகிய இருவர் முயற்சியால் திருச்சி ம. லோகநாதர் என்பவர் வெளியிட்டார்.

திருவருட்பா மூல ஏடுகளை நன்கு ஆராய்ந்து பிழையின்றிச் செம்மையாகச் சென்னை முன்னாள் இந்து சமய அறநிலைய ஆணையர் ஆ. பாலகிருஷ்ணபிள்ளை 12 புத்தகங்களாக வெளியிட்டார்!

சன்மார்க்க அறிஞர் ஊரன் அடிகள் வரலாற்று முறைப்பதிப்பாக 24-05-1972-ல் ஆறு திருமுறைகளையும் சேர்த்து வெளியிட்டார்.

தற்போது வடலூர் வள்ளலார் தெய்வ நிலையம் திருவருட்பா ஆறுதிருமுறைகளையும் இரு பகுதிகளாக மலிவுவிலையில் வெளியிட்டுள்ளனர். உரை நடை பகுதி தனி நூலாகவும் வெளியிட்டுள்ளனர்.

#உலககுரு வள்ளலார் நூல் 

வள்ளலார் அற்புத சித்திகள் (miracles) - 1

 

1
தருமச் சாலையிலே பெரும்பாலும் தினமும் வள்ளல்பெருமானின் அருளுரை இருக்கும் !தேனை பருக எங்கிருந்தெல்லாமோ வண்டென ஆன்மதாகம் கொண்டோர் வரலாயினர். மனிதர்கள் மட்டுமா? வள்ளல்பெருமான் பேச்சை தினம்ம் ஒரு கால் ஊனமுற்ற ஆடு கேட்குமாம்!புண்ணியம் செய்த ஜீவன் அது!

ஒரு சமயம் வள்ளலார் பேச்சை கேட்க தொலை தூரத்திலிருந்து வந்த அன்பர், நேரமாகிவிட்டதே என்று குறுக்குப் பாதையில் ஒரு வாழை தோட்டம் வழியாக வேக வேகமாக வந்தார். எதிரே ஒரு நாகம் படமெடுத்து கடிக்கவர ,அன்பர் ,இராமலிங்கம் மேல் ஆணை என பயத்தால் கத்த பாம்பு அப்படியே நின்றது . திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்துவிட்டார். ஆச்சு! வடலூரில் தருமச் சாலையில் வள்ளல் தரிசனமும் உபதேசமும் !உரை கேட்டு திரும்ப யத்தனிக்கையில் வள்ளல் பெருமான் அந்த அன்பரை கூப்பிட்டு உன்னால் ஒரு வாயில்லா ஜீவன் வதைபடுகிறதே விரைந்து சென்று என்மீது விடுத்த ஆணையை விலக்கிவிடு அது போய்விடும் என்றார்?! அப்போது தான் அன்பருக்கு வழியில் நடந்தது நினைவுக்கு வந்தது .பெருமானிடம் ஆசிபெற்றுப் போனார்! ஆணையை விடுவித்தார் பாம்பும் ஓடி மறைந்தது !எங்கோ நடந்ததை வள்ளலார் எங்ஙனம் அறிந்தார்? வாயில்லா ஜீவன் வதைபடுவதை காண சகியாமல் விரைந்து போ என்றாரே எவ்வுயிருக்கும் கருணை காட்டும் அந்த உள்ளம் எத்தகைய மேன்மையானது!! மென்மையானது!


2
இன்னொரு சமயம் அன்பர்களோடு வள்ளல் பெருமான் காட்டு பாதையில் நடந்துவரும் போது ஒரு நல்ல பாம்பு எதிர்பட கூட வந்தவர்கள் ஓட வள்ளலார் நின்றார் .அப்பாம்பு வள்ளலாரின் காலை சுற்றி சிறிது நேரம் இருந்தது .சற்று தூரத்தில் இருந்த அன்பர்கள் கண்டணர். வள்ளலார் ஏதோ சொன்னதும் அப்பாம்பு விலகி அப்பால் சென்றது .வள்ளலாரின் பாத தரிசனம் பெறவந்தது அப்பாம்பு !யாரோ ?எவரோ?எவ்வுயிரும்வள்ளலார் தம் உயிராகவே கருதினார் !மெய்ஞ்ஞானியின் ,கடவுள் மயமானவரின் இயல்பும் அதுதானே!


3
தருமச் சாலையிலே வள்ளல் பெருமான் அருளுரை கேட்கவரும் அன்பர் ஒருவருக்கு ஒரு சந்தேகம் .வள்ளலார் ஏன் முக்காடு போட்டிருக்கிறார்?நேரே கேட்க தயக்கம் பயம். தன் புதல்வனை ஒரு நாள் கூட்டிவந்தார். புறப்படும் போது வள்ளலார் அந்த அன்பரை தனியே அழைத்து இதைத்தானே கேட்க விரும்பினாய் என்று தன் தலைமுக்காட்டை எடுத்தார்!ஒரே ஒளி வெள்ளம் அதை காணப்பொறாத அன்பர் மயங்கிமூர்ச்சையானார்!அன்பர்கள் மூர்ச்சை தெளிவிக்க எழுந்தவரிடம் இது பற்றி எவரிடமும் கூறாதே எனக்கூறி அனுப்பினார் வள்ளலார்!

4
ஒரு சமயம் வள்ளலார் அன்பர்களுடன் சிதம்பரதரிசனம் பெற்று தருமச் சாலை திரும்புகையில் வழியில் பயங்கர மழை. ஒதுங்குவதற்கு இடமில்லா பொட்டல்காடு .என்செய்வது எல்லோரும் மழையில் தெப்பமாக நனைந்து விட்டார்கள் .ஆனால் அதிசயம் அவர்கள் கூடவே நடந்துவந்த மழையில் வந்த வள்ளல் பெருமான் மீது ஒரு துளி மழை கூட படவில்லை !பெருமான் அருகே மழை துளி வந்ததுமே ஆவியாகி விட்டது!? அப்படியானால் வள்ளல் பெருமான் உடல் எத்தகைய ஒளிமிகுந்தது உஷ்ணமாயிருந்தது ?!உடன் வந்தவர்கள் வியந்து போற்றினார். எல்லோரிடமும் இந்த அற்புதக்காட்சியை கூறி மகிழ்ந்தனர்!! வள்ளலாரை பலரும் வெள்ளாடை துறவி முக்காட்டுசாமி ,சித்தர் ,ஞானி ,கடவுளே அவதாரம் செய்துள்ளார் என பலவாராக போற்றி மகிழ்ந்தனர். இறைவன் ஜோதிமயமானவர் என்று கூறி ,அகல் விளக்கேற்றி வைத்து வழிபட உபதேசித்தார். ஆரம்பத்தில் உருவத்தை தான் தியானிக்க வேண்டும் பின் அதுவே ,உருவம் கரைந்து அருவமாகும் தொடர்ந்து தவம் செய்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை காணலாம் என்றார் .சதா சர்வ காலமும் தெய்வ பாவனையை தீபத்தில் கொள்க என்றார்.

5

ஒரு சமயம் தருமச் சாலையிலே அன்பர்களோடு இருக்கையிலே, திடீரென ,ஒரு காவியுடை சடைமுடிருத்திராட்ச பாணியாக துறவி ஒருவர் வள்ளலார் முன் தோன்றி ஒரு லட்டும் கொடுத்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தார்!பின் திடீரென மறைந்தும்போனார். பார்த்துக் கொண்டிருந்த அன்பர்கள் வியப்புமேலீட்டால் வள்ளலாரிடம் கேட்டபோது ,அவர் எம்மை சந்தித்து அளவளாவ வந்த ஒரு சித்தர் என்றும் இந்நேரம் அவர் காசியிலேயிருப்பார் என்று கூற அன்பர்களுக்கோ மேலும் வியப்பு! பாம்பின் கால்பாம்பறியும் !வள்ளல் பெருமான் மகத்துவம் அறிந்து தரிசிக்க வந்தார் ஒருமாபெரும் சித்தர் பெருமான் !

6

தருமச்சாலையில் நிகழ்ந்த மற்றொரு அற்புதம்! சிதம்பரத்திலே ஆனித் திருமஞ்சன விழா .அன்பர்கள் வள்ளலாரோடு போகலாம் என கருதியிருந்தார்கள் . முன்பு சில முறை அப்படி போனதால் இம்முறையும் போக எண்ணினர். குறிப்பிட்ட நாளும் வந்தது .வள்ளலார் கிளம்பிக் காணோம். நேரம் ஆகிக்கொண்டேயிருந்தது. அன்பர்கள் செய்வதறியாது திகைத்தனர். இம்முறை போக முடியாமல் தோய்விட்டதே என வருந்தினர்.வள்ளலார் அவர்களின் எண்ணத்தை அறிந்து தருமச்சாலையினுள்ளே ஒரு திரைகட்டச் செய்து, அதில் பாருங்கள் என்றார்! என்ன அதிசயம்!சிதம்பரம் கோவிலில் நடந்த அபிஷேக ஆராதனைகள் தெளிவாக திரையிலே எல்லோரும் கண்டு சேவித்தனர் .இப்போது தானே சினிமா தொலைக்காட்சி எல்லாம் வந்துள்ளது. வள்ளல் பெருமான் கைகாட்டிய இடத்தில் , எங்கோ சிதம்பரத்தியில் நடந்தவைகளை வடலூர் தருமச் சாலையிலிருந்தபடியே சிதம்பரத்தில் நடராஜர் சந்நிதிமுன்னிருந்து பார்ப்பது போல் பார்த்தார்கள் என்றால் எவ்வளவு பெரிய மகா அதிசயம் இது!! பார்த்த அன்பர்கள் அடைந்த பேரானந்தத்திற்கு அளவேயில்லை!

7

தருமச்சாலைக்கு வெளியே உச்சிவேளையில் வெயிலில் அமர்ந்திருப்பார் நம் பெருமானார். அப்போது பார்த்த சிலர் பெருமான் தலையிலிருந்து மேலே சூரியன் வரை பெரிய அக்னிகம்பம் தோன்றியிருப்பதை கண்டு மெய்சிலிர்த்தனர்!

ஒரு சமயம் உச்சிப் போதில் பெருமானார் தருமச் சாலைக்கு வெளியே சென்றார். சிறிது நேரமாகியும் வராததால் அங்கிருந்த சண்முகம் பிள்ளை வெளியே வந்து பார்க்க பெருமானின் அங்கங்கள் கைவேறு கால்வேறு தலைவேறாக தனித்தனியாக வெட்டுண்டது போல் கிடக்க பார்த்து பதறி கத்தி மயங்கி வீழ்ந்தார். உடனே பெருமானார் அங்கமெல்லாம் ஒன்றாகி அவர் மயக்கம் தீர்த்து இனி இப்படி திடீரென வராதீர் எனக்கூறி இதுவும் ஒரு சாதனையே என்று கூறுவாராயினர். இது தான் நவகண்டயோகம் என்பர்!

சில சமயம் தருமச் சாலை சமையலறையில் அன்பர்களை சொல்லி சுற்றி இரும்பு வாணலியில் நெருப்பு கங்குகளை போட்டு அதன் மத்தியில் அமர்ந்து தியானம் செய்வார். அவரே நெருப்புமயம் .அவரை சுற்றிலும் அனல், இப்படி பலவிதமான கடுந்தவங்களையெல்லாம் செய்தார். இறைவன் நம் வள்ளல் பெருமானுக்கு அற்புத சித்திகள் எல்லாம் வாரி வாரி வழங்கினான்!'ஆடுறு சித்திகள் அனைத்தும் தந்தான் 'என வள்ளலாரே கூறுகிறார்.


8

இன்னொரு முறை பெருமானார் திருவதிகை வழிபாட்டுக்கு சென்றார். பெருமான் மகிமை அறிந்து பெருங்கூட்டம் கூடலாயிற்று .பெருமானை காண முண்டியடித்து வந்தனர். ஆனால் பின் விழா கூட்டம் அமைதியானது! பார்த்தால் பல இடங்களிலும் வள்ளலார் தோன்றி மக்களுக்கு ஆசிவழங்கி அருள் பாலித்தார்! ஒரே நேரத்தில் பல உரு எடுக்கும் ஆற்றல் பெற்ற மாபெரும் சித்தர் பெருமானாகவும் விளங்கினார் வள்ளலார்!


தருமச் சாலையில் ஒருநாள் இரவு உணவு அருந்தும் நேரத்தில் வெளியூரிலிருந்து 100 பேர் வந்து விட்டனர். சண்முகம் பிள்ளை பெருமானிடம் வந்து 10 பேர் உட்கொள்ளவே உணவு இருப்பதை தெரிவித்து ஒன்றும் புரியாமல் நின்றார். பெருமான் உடனே நீங்கள் போய் அனைவருக்கும் இலைபோடுங்கள் நானே பரிமாறுகிறேன் என்றார். வள்ளல் பெருமான் தன் திருக்கரத்தால் அனைவருக்கும் உணவு பரிமாறினார். வள்ளல்பெருமான் எடுக்க எடுக்க அமுதசுரபிபோல உணவு வந்து கொண்டேயிருந்ததை கண்ட சண்முகம்பிள்ளை அதிசயத்து அப்படியே நின்று விட்டார்!

இன்னொரு நாள் சண்முகம்பிள்ளை மறுநாள் சமைக்க அரிசி இல்லையே என்று வள்ளலாரிடம் கூற சரி, போம் நாளை வரும் என்றார்கள். மறுநாள் காலை வண்டி வண்டியாக அரிசி காய்கறிகள் தருமச்சாலைக்கு வந்தது. வந்தவர் நேற்றிரவு கனவில் பெருமான் தோன்றி விபரம் கூற கொண்டு வந்தேன் எனக் கூறிப் போனார்.

10 

ஒருசமயம் கோடைகாலத்தில் மழையின்றி துன்புற்ற மக்கள் துயர் நீக்க பெருமானார் ஒரு செம்பு தண்ணீர் கொண்டு வந்து தம் காலில் ஊற்றும்படி கூறினார். அன்பர்கள் அவ்வாறு செய்த சற்று நேரத்தில் மேகங்கள் சூழ்ந்து பெரு மழைபெய்தது!மக்கள் மகிழ்ந்தனர்.
இதை அறிந்த புதுப்பேட்டை எனும் ஊர் மக்கள் திரண்டு வந்து தங்கள் ஊர் ஏரிகினறு குளம் எல்லாம் வற்றி பஞ்சம் நிலவுகிறது நீங்கள் தான் காக்கவேண்டும் என கதறினர். வள்ளல் பெருமான ஆறுகுடம் தண்ணீரை தன் தலையில் விடச்சொன்னார். அவ்வாறே செய்ததும் புதுப்பேட்டையிலும் பெருமழை ஆறு கிணறு நீர் நிலைகள் நிரம்பின ஊரே செழித்தது. மக்கள் மகிழ்ந்து வள்ளல் பெருமானை போற்றி துதித்தனர்.

11 
ஒரு சமயம் அன்பர் ஒருவருடன் மாட்டு வண்டியில் அவர் ஊருக்கு போகும் வழியில் கள்வர் இருவர் வண்டியை மறித்தனர் .அன்பர் மோதிரத்தை கழற்ற முற்பட்டபோது பெருமான் வெளியிறங்கி அவசரமோ எனகேட்க கள்வர் அடிக்க தடியை ஓங்கினர் .வள்ளலார் பார்த்தார். ஓங்கிய கை அசைவற்று நின்றுவிட்டது. கண்பார்வையும் கள்வர்கள் இழந்தனர் .வந்திருப்பது சாதாரண ஆள் அல்ல என்றுணர்ந்த கள்வர்கள் கதறி தங்களை காப்பாற்றும்படி கெஞ்சினர். மனமிரங்கிய வள்ளல் அவர்களை மன்னிக்க "பிச்" என்றார். கள்வர்கள் முன் போல் சரியாயினர். வள்ளலாரை வண்டியோடு சுற்றி வந்து வணங்கி மன்னிப்பு கேட்டு போயினர்.


12 

வள்ளல் பெருமான் பார்த்தாலே போதும் புலால் உண்பவன் புலாலை மறப்பான் ! தீய எண்ணமுடையவர்களும் வள்ளலை தரிசித்தால் நல்லவர்களாயினர். ஒரு சமயம், பல காலமும் ரசவாதம் கற்றுத்தருக என சதா தொந்தரவு செய்த அன்பரிடம் வடலூரில் கீழேயிருந்து ஒரு பிடி மண் எடுக்கச் சொல்லி தன் கையில் வாங்கி மூடிக் கொண்டு அவர்கையைக் காட்டச்சொல்லி கொட்டினார். என்ன ஆச்சரியம் மணல் அனைத்தும் தங்க பொடியாயிருந்தது !
உடனே வள்ளலார் அவனிடம், "பற்றற்ற ஞானி கைப்பட்டமண்ணும் பொன்னாகும் 'இதற்காக காலத்தை வீணடிக்காதே !அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அடையும் வழியைபாரு! அவர் அருள் கிட்டினால் நீ தொட்டதெல்லாம் பொன்னாகும் என்று நல்ல புத்தி சொல்லி அனுப்பினார்.

13

வள்ளல் பெருமான் பலர் நோயை மருந்துகள் கொடுத்து குணப்படுத்தினார். சித்த மருத்துவத்திலும்  தேர்ந்தவர் ரசவாதத்திலும தேர்ந்தவர். வள்ளல்பெருமானையெல்லா தரப்பு ஆட்களும் காணவந்தனர். அருள்வேண்டி வந்தவர் பொருள் வேண்டிவந்தவர், பொன்செய்ய வேண்டி வந்தவர், நோய் தீர நாடி வந்தவர் ,சித்த மருத்துவம் படிக்க வந்தவர்,வேதபுராணம் இலக்கியம் படிக்க வந்தவர்இன்னும் பல வேண்டுகோள்களோடு வந்தவர் பலர். எல்லோருக்கும் எல்லாம் வழங்கினார் வள்ளலார் .நாடி வந்தோரெல்லாம் நல்லருள் பெற்றனர்.

14 
வேட்டவலம் எனும் ஊர் ஜமீந்தாருக்கு இரு மனைவிகள் . ஒருத்திக்கு மகோதரம் நோய். மற்றொருத்தியை பிரம்மராட்சஸ் பிடித்திருந்தது.வள்ளல் பெருமான் அவர் மாளிகை போனார். வீட்டு வாசலில் கால் வைத்ததும் பிரம்மராட்சஸ் ஓடிவிட்டது !அடுத்த மனைவிக்கு விபூதிகொடுக்க அவரும் குணமானார்! வள்ளலார் திருவடிகள் வீழ்ந்து வணங்கினார்.வள்ளல் பெருமான் வேண்டுகோள்படி அவர் ஜமீனுக்குட்பட்ட எந்த கோவிலிலும் உயிர்பலி கொடுப்பதை தடை செய்தார்!

15

தம்மில் அமிழ்ந்து இருப்பதால் இது "தமிழ்" என்று இலக்கண இலக்கியங்களை ஆதாரமாக காட்டி தமிழின் பெருமையை பாரறியச் செய்தவர் வள்ளலார்!!வள்ளலாரின் பெரும் புகழ் பட்டி தொட்டியெங்கும் பரவலாயிற்று! இறைவன் சந்நிதியிலே வள்ளலாரின் பாடல்கள் எல்லோராலும் பாடப்பட்டது! வள்ளலாரின் மகத்துவம் அறியாத அறிவிலிகள் அவர் மேல் பொறாமைப்பட்டனர். தூற்றினர். வள்ளலாரின் பாடல்களையும் பழித்துரைத்தனர். சமயவாதிகள் வெறுப்பால் பொறாமையால் புழுங்கினர். அவர்களுக்கு பழியேற்க வந்து சேர்ந்தார் யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர். சைவசமய பற்றுள்ளவர் ,வள்ளலார் பாடல்கள் சரியில்லை என நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்தோ பரிதாபம் ஆறுமுகநாவலர் பாடு. குறிப்பிட்ட நாளில் எல்லோரும் நீதிமன்றம் வந்தனர் .வள்ளலாரை கூப்பிட அவர் உள்ளே வர அங்கு அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்று கைகூப்பி வள்ளலாரை வணங்கினர்.வழக்கு தொடுத்த ஆறுமுக நாவலரும் எழுந்து வள்ளலாரை வணங்கினார்.


www.vallalyaar.com 

#உலககுரு வள்ளலார் நூல் 


ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

சற்குரு கோவிந்த சுவாமிகள்



சற்குரு கோவிந்த சுவாமிகள்
மரணமிலா பெருவாழ்வு பெற்ற ஞானிகள், சித்தர்கள் நம் நாட்டில் ஏராளம்!
ஒப்பற்ற இறைவனை உணர்ந்து ஒளி உடல் பெற்ற மகான்கள் ஏராளம்!
இந்தியாவின் பெருமையே இதுதான்!
இந்த ஆன்மீக பூமியில் பிறந்த நாம் மிகவும் புண்ணியசாலிகள்! இறையருள் பெற்றவர்கள்!
அடியேன் பூவுடல் எடுத்த 24 ஆண்டில் திருவடியை சரணடையும் பேறுபெற்றேன்.
எந்தன் வாழ்விலும் அருள்கூட்டிய ஞானிகள் பலர்! வழிகாட்டியோர் பலர்!
"உலகே மாயம் வாழ்வே மாயம்" என எனக்கு உணர்த்தி என்னை நெறிப்படுத்திய மாகுரு சித்தர் பெருமகனார்தான் கோவிந்த சுவாமிகள்!
கன்னியாகுமரிக்கு என்னை அழைத்தது வாலை கன்னியாகுமரி அம்பாள் அருள் பெறச் செய்தது, கன்னியாகுமரியிலே இருக்கச் செய்தது, குருபீடத்தில் அமர்த்தியது எல்லாம் வல்லவரான சற்குரு கோவிந்த சுவாமிகளே! அவரின் ஒப்பற்ற அருளாசியே!
பல ஞானிகள் இன்றும் கூடவே இருந்து எம்மை வழிநடத்துகிறார்கள்!
கோவிந்த சுவாமிகள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலே காட்சி தந்து கருணை புரிந்து வழிகாட்டியதால்தான் அடியேன் இன்று குருஸ்தானத்தில் இருந்து வழிகாட்ட முடிகிறது. வள்ளல் பெருமான் கூடவே இருந்து நடத்துகிறார்!
சூட்சும நிலையில் இருந்து ஆன்மீக ஞானத்தை உலக மக்களுக்கு உணர்த்தி வருவது ஒன்றே அவர்தம் ஒப்பற்ற பணி!
இன்னார் என்று அறிவிக்காமலேயே எனக்கு வழிகாட்டிய தெய்வம் சற்குரு. தேடுகிறேன்! காட்சி தருவாயா? சற்குருவே! எங்கும் இருப்பார்! யாருக்கும் அருள்வார்! அவர்தம் புகழ் பாடுவதே எமக்கு மகிழ்ச்சி.

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

மனிதனாகுக!?

 

மனிதனாகுக!?

உண்பதும், உறங்குவதும், இனவிருத்தி செய்வதும் மட்டும்தான் மனிதனின் வேலையா? மிருகங்களும் இதைத்தானே செய்கிறது!

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது! என ஒளவையார் கூறியது எதற்காக? அறிய வேண்டாமா?

குறையின்றி நல்ல படியாக பிறந்த நாம் பிறவிப்பயனை அடைய வேண்டாமா பிறந்தது சாவதற்கா? வாழ்வதற்கா?

பிறந்து செத்து! பிறந்து செத்து! இப்படியே போனால் அறிவு - பகுத்தறிவு உள்ளவன் - மனிதன் என்று கூற முடியுமா?

மனிதன் என்பவன் யார்?

மனதை இதம் செய்ய - பக்குவப்படுத்த தெரிந்தவனே மனிதன்! அதற்குத்தான் பகுத்தறிவு!

எப்படி பக்குவப்படுத்துவது?

இதைச் சொல்லித்தரும் குருவைத் தேடு!

நாம் சாகப்பிறக்கவில்லை!

வாழப்பிறந்திருக்கிறோம்!

எப்படி வாழ வேண்டும்?

பஞ்சமா பாதகங்கள் பொய் - கொலை - களவு - கள் - காமம் புரியாது நல்ல பழக்க வழக்கம் - ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்!

மீன் முட்டை இறைச்சி உணவுகளை உண்ணாதே! உடலை கெடுக்காதே?

மது, புகை முதலிய போதை பொருட்களை உபயோகிக்காதே! நோய்க்கு இடங்கொடேல்!

எல்லா உயிர்களிடமும் அன்பாயிரு!

எப்போதும் உண்மையையே பேசு!

"ஒருவனுக்கு ஒருத்தி" என வாழ்!

மண், பெண், பொருள் ஆசையை விடு!

இறைவன் திருவடியில் சரண் புகு!?

அப்போதுதான் நீ மனிதனாவாய்!


- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

திங்கள், 26 ஜனவரி, 2026

155-வது தைப்பூச ஜோதி தரிசனம் | வள்ளலார் ஒளியுடலாகிய 153-வது வருடம்


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளிய
மரணமிலா பெருவாழ்வு பெற வாரீர்! கண்மணி" அறிந்து உணர வாரீர்!
கன்னியாகுமரி தங்கஜோதி ஞானசபைக்கு!

சத்திய ஞான சபையில் தங்கஜோதி !!

155-வது தைப்பூச ஜோதி தரிசனம் | வள்ளலார் ஒளியுடலாகிய 153-வது வருடம்

ஆன்மநேய ஒருமைப்பாடுடையிர்

 வந்தனம்! நன்றி நலம்! நாடுவதும் அஃதே! இந்த தைப்பூச நன்னாளில், வடலூர் பெருவெளியில் கிழக்கே சூரியன் வரவும்  மேற்கே சந்திரன் மறைவும் நடுவே சத்திய ஞானசபையில் 'தங்கஜோதி தரிசனமும் நாம் காண வேண்டும் நாம் ஞானம்  பெற வேண்டும் என்பதற்காக உலகை உய்விக்க  வந்த ஞானசூரியன், திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் உருவாக்கியருளினர்" தைப்பூச ஜோதி காண வாருங்கள்! வடலூர் வந்தால்  பெறலாம் நல்ல வரமே! மணமிலா பெருவாழ்வு எவ்வோரும் பெறலாம்!" என உலகர் அனைவரையும் கூவி அழைத்தார் வள்ளலார்!

இதுவரை மறைத்துச் சொல்லப்பட்ட ஞானம், பரிபாஷையாக எழுதப்பட்ட ஞானம், குருகுல வாசம் செய்து தான் பெற முடியும் என்றிருந்த ஞானம் மகான் ஸ்ரீ இராமானுஜரைப் போல, வள்ளலார் ஸ்ரீ இராமலிங்கரும் உலகமக்கள் அனைவரும் ஞானம்பெற மறைத்ததை வெளிப்படுத்தி, பரிபாஷையை விளக்கி நான் உங்களுக்கு வழி - விழி காட்டுகிறேன் எனக் கூறி சத்தியஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் மக்கள் காண, மெய்ஞ்ஞானம் உணர, அறிய வழிவகை செய்தார்கள்! இவ்வுலகில் இதுவரை யாரும் செய்யாத அருஞ்செயல்!

“சத்தியவான் வார்த்தைஇது தான் உரைத்தேன்
கண்டாய் சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்
இத்தினமே அருட்ஜோதி எய்துகின்ற தினமாம்
இனிவரும்அத் தினங்கள்எல்லாம் இன்பம்உறு தினங்கள்
சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகம் தூய்மைஉறும்
நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும் செத்தவர்கள்
எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார் திருவருட்
செங்கோல் எங்கும் செல்லுகின்ற தாமே.

  • திருவருட்பா

சத்திய ஞானசபை நம் தலை அமைப்பை ஒத்தது ஆகும்! “சத்திய ஞானசபையை என்னுள் கண்டனன்” என வள்ளலார் பாடியருள்கிறார். அதாவது, நம் தலை நடுவே - உள்ளே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தங்கம் போல் தகதகக்கும் ஜோதியாக ஒளிர்கிறார்! இதைத்தான் சத்திய ஞானசபை நடுவே உள்ளே காட்டினார்! அதே சமயம் அதிகாலை கிழக்கு திசையில் சூரியன் உதயமாகும்! மேற்கு திசையில் பூரண சந்திரன் அஸ்தமனமாகும். இதை, இந்த சூரிய ஜோதியை, சந்திர ஜோதியை, சத்திய ஞானசபையின் தங்க ஜோதியை வடலூர் பெருவெளியில் நின்றால் தான்! காண முடியும்! அதாவது ஒரே சமயத்தில் மூன்று ஜோதியை காணலாம்! ஞானத்தை விளக்க இவ்வாறு வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனம் உருவாக்கினார்.

இதுபோலவே, நம் தலையின் உள் - நடுவே நம் ஆத்மஜோதி - தங்கஜோதி ஒளிவிட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது! நமது வலதுகண் சூரிய ஒளியாகவும், நமது இடதுகண் சந்திர ஒளியாகவும் இருக்கிறது என்பதே ஞானிகள் கூறும் இரகசியமாகும்!

நாம் ஞானம் பெற வேண்டுமாயின், நம் இருகண் ஒளியினால் நம் சிர நடு-உள் விளங்கும் ஆத்ம ஜோதியை அடைய வேண்டும்! அப்போது காணலாம் அருட்பெருஞ்ஜோதியை! - தங்கஜோதியை! - நம் ஆத்மஜோதியை! எவன் ஒருவன் தன் ஆத்ம ஜோதியை காண்கிறானோ அவனே ஞானம் பெற்றவன்! அவன்தான் இறைவனை காண முடியும்! அவன்தான் முக்தி பெறுகிறான்! மோட்சம் அடைகிறான்! மரணமிலா பெருவாழ்வு பெறுவான்! சிரஞ்சீவியாவான்! அவன்தான் ஞானி! அவன்தான் சித்தன்! அவன்தான் சாகாதவன்! என்றும் இருப்பவன்! இறைநிலை பெற்ற பூரணமானவன்.

மகானுபாவர் ஸ்ரீ இராமானுஜர் தன் குரு தனக்கு உபதேசித்த அஷ்டாட்சர மந்திரத்தை, “நீ இதை வெளியில் சொன்னால் நரகத்துக்குத்தான் போவாய்! இது இரகசியம்!” என்றுரைத்ததை மீறி, உலகர் எல்லோரும் சொர்க்கத்துக்கு போகட்டும் என்று எல்லோருக்கும், ஊர் நடுவே கோபுரம் மீது ஏறி உரைத்தாரே அவரல்லவா ஞானி! தான் நரகத்துக்கு போனாலும் பரவாயில்லை என, மூடகுருவின் வார்த்தையை மீறி சொன்னாரே! அவரல்லவா கருணைக்கடல்! அவர் உலகர் மீது கொண்ட அன்புக்கு ஈடேது!!

மந்திரத்தை சொன்ன மகான் ஸ்ரீ இராமானுஜர் கருணைக்கடல் என்றால், இறைவனை அடைய இதுவரை இரகசியமாக சொன்னவற்றை வெளிப்படுத்திய வள்ளலார் ஸ்ரீ இராமலிங்கர் யார்? கடவுள் யார்? எப்படியிருக்கிறார்? நம் உடலில் நம் கண்களில் ஒளியாக இருக்கிறார்! நம் சிரநடுஉள் ஆத்மஜோதியாக துலங்குகிறார்! அதுவே சத்திய ஞானசபை விளக்கம்! தைப்பூச ஜோதி தரிசன விளக்கம் என்றுரைத்த வள்ளலார் மனித குலத்தை உய்விக்க வந்த மகா ஞானியல்லவா? இதை உலகம் உணர வேண்டாமா?

பக்தியால் பண்படும் மனிதன் இறைநிலை அறிய, உணர, அடைய வள்ளலார் வழி - விழி காட்டுகிறார்! “பழையன கழிதலும் புதியன புகுதலும்” ஞானம் பெறுவதிலும் வந்தது வள்ளலாரால்!! மனிதன் மனிதனாக வாழ வழிகாட்டுவதே நம் நாட்டில் ஆதியிலிருந்தே வந்துள்ள தர்மநெறியாகும்! அறநெறியாகும்! அப்படி வாழும் மனிதன் தன்னை படைத்த பரம்பொருளை அறிவதே! உணர்வதே! அவன் திருவடியை அடைவதே பூரணமான நிலையாகும்! இதை நம் நாட்டில் காலம் அறியப்படாத பல யுகங்களாக சொல்லி வந்தனர் ஞானிகள் பலர்! இதைத்தான் “சநாதன தர்மம்” என்றனர்!

இதைத்தான் வள்ளலார் ஸ்ரீ இராமலிங்கரும் “சன்மார்க்கம்” என்று பெயரிட்டு உபதேசித்தார்!” வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் யானும் ஒருவனன்றோ!” என மிகப் பணிவாக வள்ளலாரே கூறுகிறார்! வள்ளலார் உரைத்த சன்மார்க்க நெறி வேதத்தில் சொல்லப்பட்டதுதான்! 18 புராணங்களிலும் உபநிஷத்துக்களிலும் சொல்லப்பட்டதுதான்! இதுவரை இவ்வுலகில் தோன்றிய ஞானிகள் சொன்னதுதான்! இயேசுபிரான் பைபிளில் சொன்ன ஞானம்! முகமது நபிபெருமான் குர்ஆனில் சொன்ன ஞானம்! திருமூலர் திருமந்திரத்தில் சொன்ன ஞானம்! மணிவாசகர் திருவாசகத்தில் சொன்ன ஞானம்! தேவாரம், திருக்குறள், இன்னும் எத்தனையோ மகான்களின் ஞானம்! குணங்குடி மஸ்தான் உரைத்த ஞானம்! தக்கலை ஞானமாமேதை பீர் முகமது உரைத்த ஞானம்! எல்லோர் உரைத்த ஞானமும் சன்மார்க்கமே!

எல்லா மகான்களும் உலகம் உய்வடையவே போதனை செய்தனர்! எவ்வுயிரும் தன்னுயிர் போல கருதவே உபதேசித்தார்கள்! ஒரே இறைவனை! ஒளியாகவே! இறைவனை கண்டு, போற்றி பாடி, உபதேசித்து நமக்கு அருளினார்கள்! இதில் வேற்றுமை காண்பவன் அறிவிலி!

இறைவனை மட்டுமே காணுங்கள்! அவனை அடைய ஞானிகளின் உபதேச வழிகாட்டுதல்களை படியுங்கள்! அறியுங்கள்! உணர வழிதேடுங்கள்! விழியை காட்டும் ஞானகுருவை தேடுங்கள்! கண்டடைவீர்கள்! இரகசியமில்லாமல், பரிபாஷை விளக்கம் கூறி தங்கஜோதி ஞானசபை பல நூற்களை உலகமக்கள் ஞானம் பெற உதவியாக வெளியிட்டுள்ளார்கள்! ஞான சற்குரு சிவசெல்வராஜ், இராமானுஜரை போல இராமலிங்கரைப் போல ஞானத்தை வெளிப்படுத்தி நூற்கள் வெளியிட்டுள்ளார்!

உலகில் முதலாவதாக "கண்மணி மாலை" என்னும் நூல் எழுதி 1992-இல் இரகசியங்களை பரசியமாக்கினார் ஞானசற்குரு சிவசெல்வராஜ்! அடுத்து, "சாகாக் கல்வி" உலகர் அறிய, விரிவாக, விளக்கமாக எவ்வித மறைப்புமின்றி வெளியிட்டுள்ளார் ஞானசற்குரு சிவசெல்வராஜ். பாருங்கள்! படியுங்கள்! ஞானம் பெறலாம்! இன்னும் பல மெய்ஞ்ஞான நூற்கள் உள்ளன!

சன்மார்க்கம் வெறும் அன்னதானத்தோடு நின்றுவிடக் கூடாது! ஞானதானம் செய்ய வேண்டும் எனக் கருதியே, தங்கஜோதி ஞானசபை கன்னியாகுமரியிலிருந்து கடவுளையடைய வழிகாட்டும் விழியின் மகத்துவத்தை உணர்த்தும் மெய்ப்பொருளின் - திருவடியின் திறத்தை விளக்கி - பரிபாஷைகளை விளக்கி ஞானநூற்கள் வெளியிட்டுள்ளனர்! கண்ணுள்ளவர் நோக்கக்கடவர்! காதுள்ளவர்கள் ஞான சற்குரு சிவசெல்வராஜிடம் உபதேசம் கேட்கக்கடவர்! வள்ளலார் இராமலிங்கர் மட்டுமல்லாது எல்லா ஞானிகளின் அருளும் ஆசியும் பரிபூரணமாக கிட்டும்! வந்தால் பெறலாம் ஞான தீட்சையே!

"குருவில்லா வித்தை பாழ்" "குருவருளின்றி திருவருள் கிட்டாது"

அகவல்பாராயணம் செய்தால் மட்டும் போதாது?! சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து நடந்தாலே மோட்சம்! சன்மார்க்க நெறி - பிராணாயாமம் செய்வது அல்ல! வாசியோகம் செய்வதல்ல! வேறு எந்த கிரியையும் யோகமும் செய்வது அல்ல! ஞானநெறியே சன்மார்க்கம்! ஒளியான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அடைய ஒளிவழியில் தவம் செய்வதே சன்மார்க்க நெறி! ஒளியை பிடிக்க காற்றை ஊதுபவன் அறிவிலியே! வள்ளலார் எங்கே பிராணாயாமம் செய்ய சொன்னார்? திருவருட்பாவை நன்றாக படியுங்கள்!

உன் ஜீவனை, பிறந்து இறந்து துன்பப்படும் உன் ஜீவனை சற்றேனும் கருணையோடு பார்!? உன் ஜீவனை இரட்சிக்க நீ தவம் செய்ய வேண்டும். ஜீவன் - ஆத்துமா - உயிர் - பிராணன் எங்குள்ளது. நாம் எப்படி அறிவது அடைவது அதற்கு எப்படி தவம் செய்ய வேண்டுமோ அந்தப் படி செய்து உன் ஜீவன் மோட்சம் பெற நடந்துகொள்! இதுவே வள்ளலார் உரைத்த "ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்" என்பதாகும்! சாப்பாடு போடுவது சாதாரண மனிதநேயம்! வள்ளலார் சொன்னது ஆன்மநேயம்!! முதலில் உன் ஆன்மாவை கடைத்தேற்ற நல்ல ஒரு குருவைத் தேடி உன் நடுக்கண்ணை திறந்துகொள்! பின் உலகிலுள்ள எல்லா ஆத்மாக்களும் கடைத்தேற ஞானவழி விழிகாட்டு! ஞானதானம் செய்! இதுவே நீ மோட்சம் பெற வழியாகும்! "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்!" உலகர் ஆத்மாக்கள் கடைத்தேற நீ வழி - விழி காட்டினால் ஞான தானம் செய்தால் ஞானிகள் மகிழ்ந்து நீ ஞானம் பெற நல்லருள் தருவார்கள்! ஞானதவம் செய்! ஞானதானம் செய்!

வள்ளலாரைப் போல வேஷம் போட்டு திரிய வேண்டாம்! வள்ளலார் சொன்னபடி, ஞானசரியையில் சொன்னபடி திருவருட்பாவில் கூறியபடி ஞானதவம் செய்! உன் உள்ளொளி பெருகிட தவம் செய்! எழுமின்! விழிமின்! இது சுவாமி விவேகானந்தர் கூறியது! பசித்திரு! தனித்திரு! விழித்திரு! இது வள்ளலார் கூறியது!

கண்ணை மூடி தவம் செய்வது ஞானம் பெற வழியில்லை! தகுந்த குரு மூலம் தீட்சை பெற்று கண்ணை திறந்துதான் - விழித்திருந்து தான் ஞான தவம் செய்ய வேண்டும்! "கண்மூடி பழக்கமெல்லாம் மண்மூடி போக" என வள்ளலார் கூறிவிட்டார்! படிக்கவில்லையா நீங்கள்!?

"நடுக்கண் புருவபூட்டு கண்டு களிகொண்டு திறந்துண்டு நடுநாட்டு!" வள்ளலார் உரைத்த ஞானம் இதுதான்! எல்லா ஞானிகள் கூற்றும் இதுவே! ஏனைய கோவில் திருவிழா போலல்ல தைப்பூச திருவிழா! ஞானம் பெற வழிகாட்டும் அற்புத திருவிழா! இங்கே வந்து வீணே காலத்தை கழிக்காதீர்! ஞானம் பெற வழி தேடுங்கள்! கிட்டும்!

சன்மார்க்க சங்கத்தவரே, தைப்பூச விழா கொண்டாடும் நீவீர், வைகாசி - 11, தர்மச் சாலை விழா கொண்டாடும் நீவீர், புரட்டாசி சித்திரை - குருபூஜை என கொண்டாடாமல் விட்டது ஏனோ?! இதற்கு கூட ஞானம் இல்லையே!? அன்னதானம் போடு என சொல்ல ஒரு ஞானி வரவேண்டியதில்லை! ஆத்மஞானம் பெறவே, வழிகாட்டவே, விழிகாட்டவே வள்ளலார் வந்தார்!! புரிகிறதா!

சாகாதவரே சன்மார்க்கி!
சாகா நிலைபெற்ற ஒளியுடன் பெற்ற ஒப்பற்ற ஞானியே நம் வள்ளலார்
சாகாக்கல்வி உரைத்த மகானுபாவர் அருள்வள்ளலே நம் வள்ளலார்
வள்ளலார் பெயர் சொல்லவே நாம் முற்பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்
எல்லோரும் பெறலாம் ஞானம்!

கன்னியாகுமரி தங்கஜோதி ஞான சபை
,
வடலூர் சத்திய ஞானசபையின் ஜோதி தரிசனத்தை விளக்கி,
திருவடியான் உங்கள் கண்களை திறந்திட வழிகாட்டும்!

உலகிலேயே ஒரே மெய்ஞ்ஞான இணையதளம் www.vallalyarr.com
உலகம் முழுவதும் சன்மார்க்க நெறியை பரப்பி வருகிறது! யாரும் பார்க்கலாம்!
உன்னுள்ளே இருக்குது உலகம்!!


"ஞான தானம் செய்வீர்!"
  
"ஞான தவம் செய்வீர்!"  
"வள்ளலார் பிறந்தநாளை குருபூஜை என புரட்டாசி சித்திரையில் கொண்டாடுக!"
"மரணமிலா பெருவாழ்வு வாழலாம்!"

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா


வெள்ளி, 9 ஜனவரி, 2026

ஆத்ம சாதகர்கள் செய்ய வேண்டியது ஒரே பூசை -அகஸ்தியர்



*அகஸ்தியர் பரிபூரணம் 1200 *

"பூசையென்ன சிவபூசை சத்திபூசை பூரணமாய் வாலையுட
பூசைமைந்தா நேசமுடன் வாலையவள் வாசமானால்
நிசமான மவுனமடா நிலைக்கும் பாரு


பக்தியுடன் பூசை புனஸ்காரங்கள் செய்தால் அந்தந்த தேவதைகள் அருள் கிட்டும். சிவபூசை சக்தி பூசை இப்படி பூசைகள் பல!

ஆனால் ஆத்ம சாதகர்கள் செய்ய வேண்டியது ஒரே பூசை ! அதுதான் வாலை பூசை! எல்லா சித்தர்களும் வழிபடும் ஒரே தெய்வம் வாலை! வாலையின் மகத்துவத்தை உணர்ந்ததால் தான் சித்தர்கள் வாலையை பணிகின்றனர். இவ்வுலகிலுள்ள எல்லா சித்தர்களும் இன்றும் சூட்சும தேகத்தோடு கன்னியாகுமரி வாலையை பணிய வந்து போகிறார்கள்! வாலையை வணங்குவதே எமக்கு வேலை! வாலை குடியிருக்கும் நம் முச்சுடர் முச்சந்தியிலே கண்டு பணிவதே நம் பிறவிப் பயனாகும் ! கண்டால் பணிந்தால் வாலை நம்மில் வாசமானால் வசமானால் அருள்மழை பொழிவாள் அமுத மழை அருள்வாள்! அதுவே கிடைத்தற்கரிய பெரும்பேறு! புண்ணியம்! மவுனமான கண்ணில் மணியில் ஒளியில் மனதை நிலை நிறுத்தி சும்மா இருந்தால்! அப்படியே தியானம் தொடர்ந்தால், நிசமான மவுனமடா உனக்குள் நிலைக்கும் பாரு! இதுதான் உண்மை! உணர்ந்தாயானால் எல்லா சித்துக்களும் கிட்டும்! மேலான பரகதியும் பெறுவாய்! பேரின்பம் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
நூல் -ஞானம்பெற விழி
பக்கம் - 11

சனி, 3 ஜனவரி, 2026

அகஸ்திய மகரிஷி திருவடி கண்டேன் என்கிறார்


"பார்வையினாற் கயிறு கொண்டு கட்டு கட்டு"
செழியான சின்மயத்தின் சொரூபந்தன்னைத் தெரிசித்தேன் நாதலிங்க மூர்த்தி பாதம்
விழியான பொருள் தானே மனதிற் கொண்டு
கற்பூர தீபவொளி காட்சி கண்டேன்
அரகரா உச்சி முடி அகரந்தானே "


நம் தவம் மேலோங்க, பார்வையால் பார்த்து நீயும் படுமுடுச்சு போடடா " என்கிறார் சித்தர் பெருமக்கள் !! நீ பார்த்தால் வெளியே உன் முன்னால் உள்ளது தெரியும் ? பார்வையாகிய கயிற்றால் கட்டினால் உன்னால் வெளியே பார்க்க முடியாதே ! 

அப்போது பார்வை உள்ளே தான் போயாக வேண்டும் ! அகநோக்கம் வேண்டும் ! எப்படி பார்வையை வெளியே கட்டினால் அது உள்ளே தான் போகும் ! 
எவ்வளவு சூட்சமமாக சொல்லியிருக்கிறார் பாருங்கள் ! 

செழுமையான தவத்தால் நம் கண்கள் சிவந்து செங்கண்ணாகும் அது ஒளியேறி செழியான என்றது ! சின்மயம் - கண் ! தவம் செய்து நான் முதலில் தரிசித்தது என் கண்ணைத்தான் ! சின்மயம் ! கண்ணைத்தான் சின்மயம் - பரிபூரணம் மெய்ப்பொருள் திருவடி என பலவாக கூறினர் பரிபாஷையாகவே ! தெரிசித்தது எதை நாதலிங்க மூர்த்தி பாதம்! நாதமயமான லிங்கமூர்த்தி - ஒளிவடிவம் பாதம் திருவடி - கண்! 

அதாவது தவம் செய்து முதலில் பார்ப்பது நம் கண்ணையே ! எப்படி தவம் செய்வது ? "விழியான பொருள் தானே மனதிற்கொண்டு "நம் விழியிலே - அதுதான் நம் மெய்யிலே உள்ள பொருள் அதிலே மனதை கொண்டு ! விழியிலே மனதை வைத்தால் காணலாம் விழிகளையே ! 

முடிவில் கற்பூர ஜோதியும் காணலாம் ! முடிவில் எல்லாம்வல்ல பரம்பொருளை உச்சியிலே 'அ ' காரத்திலே தான் கண்டேன் ! அ வாகிய கண்ணாலே தான் எட்டாலே தான் கண்டேன் என்கிறார் அகஸ்திய மகரிஷி !




நூள் - ஞானம் பெற விழி
பக்கம் 123
குருவே சரணம்

அகத்தியர் மெய்ஞான சூத்திரம் - திருவடி



அகத்தியர் மெய்ஞான சூத்திரம்

"கண்ணில் நின்ற ஒளிபாரு வெளியைப் பாரு
காலடங்கி யாடுகின்ற கருவைப்பாரு
விண்ணில் நின்று பொருள்சொன்ன குருவைப் போற்று "

வெளிப்படையாகவே கூறிவிட்டார் அகத்தியர் ! கண்ணில் நின்ற ஒளிபாரு! இதுவே ஞான தவம்! 

கண் ஒளியை பார்த்து பார்த்து உணர்ந்து உணர்ந்து 
கண்மணி நடுவே ஊசி முனை வாசல் வழி உட்புகுந்து உள்ளே வெட்ட வெளியைப்பாரு! 
நீ உள்முகமாய் உணர்வோடு சும்மா இருக்கும் போது வெளியே கண் இரண்டும் அடங்கிப் போகும் ! 

இரு கண்ணும் உள்ளே உள்ள உன் கருவாம் - உன் உயிரைப் பார்த்து அதோடு லயிக்கும் ! 
இதை விண்ணில் நின்று , எல்லாமே வெட்டவெளி தான் என உணர்ந்து அங்கிருந்து 
உபதேசம் தீட்சை செய்த குருவை போற்று! 

உன் ஞான சற்குருவை எப்போதும் போற்றி பணிந்து தொண்டு செய் ! 

"குருவினடி பணிந்து கூடுவதல்லாங்கு அருவமாய் நிற்கும் சிவம் " என்கிறது ஒளவைக் குறள்! 

குரு நமக்கு அவர் உயிரை கொடுத்தல்லவா நம் உயிரை நமக்கு உணர்த்துகிறார்?! 
நமக்கு இரண்டாவது பிறப்பு தரும் குருவை வணங்காமல் இருப்பது கொடும் பாவமல்லவா? 
குருவைப் பணி! குரு பார்க்க கோடி வினை தீரும்!

நம் மனம் ஒருங்கினால் நாதவிந்து சொரூபம் காணலாம்! 
பஞ்சபூதங்களாலான நம் இரு கண் தான் 
நம் மனம் உதிக்கும் இடம் ஒடுக்கும் இடம்! 

சாதாரண மனிதருக்கு கண் பார்த்து மனம் எண்ணம் உதயத்தால் கர்மவினை நடக்கும் ! 
ஆத்ம சாதகன் எங்கே உதயமாகிறதோ? அங்கேயே கண்ணில் - பார்ப்பதால் உருவாகும் மனதை அதே கண் ஒளியில் வைப்பதால் நினைப்பதால் ஒடுக்கி விடலாம்! மனம் அடங்கும் ஒரே இடம் நம் கண்ணே ! 

" மனமடங்கும் ஓர் இடந்தனில் இருந்தும் அறியேன்" என்றார் ஒரு ஞானி! 

நம் கண்ணில் தான் ஜீவ ஒளி - பரமாத்மாவின் அம்சமான பேரொளி நிறு ஒளியாக துலங்குகிறது. இறைவன் இருக்கும் துலங்கும் இறைவன் திருவடிகளில் நம் மனதை வைத்தால் மட்டுமே இறைவன் திருவடியில் மட்டும் நம் மனம் அடங்கும் ஒருங்கும் !? வேறு எங்கும் யாராலும் அடக்கவோ ஒடுக்கவோ முடியவே முடியாது!!

அக்கினி ஆதித்தன் சந்திரன் கலந்து ஒன்றாய் நின்றதுவே பூரணமாம்! அதுவே வாலையாம்! இதை அறிபவனே புண்ணியவானாம்! இதை சொல்பவனே ஞானசற்குருவாம்! நம் சிரசே ஆயிரத்தெட்டிதழ் தாமரையாம்! அதிலிருந்து உள் பாய்வதே அமுதமாம்! அமுதம் உண்டவன் சாகமாட்டான்! அவனே சிவயோகி ! ஞானி ! சீவனை சிவனாக்கிய சித்தன்!


- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
நூல் - ஞானம் பெற விழி
பக்கம் - 140
குருவே சரணம்

சஞ்சித கர்மம் எப்படி தீரும்?


நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
நனைந்தனைய திருவடி யென் தலைமேல் வைத்தார் "



நினைந்து நினைந்து 
உணர்ந்து உணர்ந்து 
நெகிழ்ந்து நெகிழ்ந்து 
அன்பே நிறைந்து நிறைந்து 
ஊற்றெழும் கண்ணீரதனால் உடம்பு நனைய 
ஞான தவம் செய்யும் அடியாரை நைய வைத்தார்! நைய புடைத்து வாட்டி எடுப்பார். 

நையாத மனிதர்க்கு உய்யாது கண்டு கொள்ளும் என்றே நந்தனார் 
சரித்திரக் கீர்த்தனை உரைக்கிறது! 

நம் சஞ்சித கர்மம் உட்பட எல்லா கர்மமும் பின் எப்படி தீரும்! 
சிலருக்கு கையில் திருவோடும் கிட்டும் தெருவோடும் போவார் ! 
நம்மை நைய புடைத்தாலும் கைவிட மாட்டான் கடவுள்! 
நம் நம்பிக்கையின் ஆழம் பரிசோதிப்பான் ! 

உயிரே போவதாக இருந்தாலும் அவனை திருவடியை விடக் கூடாது !!
சிக்கெனப்பிடிக்க வேண்டும்! காப்பான்? அருள்வான்! கடவுள்! 
எல்லா மும்மல வினைகளையும் நீக்கி அரவணைத்துக் காப்பார்! 

நனைந்த திருவடி - நினைத்து நினைத்து தவம் செய்தால் கண்ணீரால் 
நிரம்பிய நனைந்த திருவடி - நம் கண் குளம் போல் எப்போதும் 
தள தளத்துக் கொண்டேயிருக்கும் ! இதுவே ஆத்ம சாதகன் தோற்றம்!


நூல் - ழூவர் உணர்ந்த முக்கண்
பக்கம் - 145
குருவே சரணம்

Popular Posts