திருமூலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமூலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 நவம்பர், 2024

🔥 திருமூலர் கூறும் ஞானம் 🔥



🔥 திருமூலர் கூறும் ஞானம் 🔥

"திருவடியே சிவ மாவது தேரில்
திருவடியே சிவலோகஞ் சிந்திக்கில்
திருவடியே செல் கதியது செப்பில்
திருவடியே தஞ்சம் உள்தெளி வார்க்கே"

திருமந்திரம் - 138

இறைவனின் திருவடியே நமது கண்கள் !
சற்குரு உபதேசம் பெற்று தவம் செய்தால் நம் உள்ளம் புரிந்து கொண்டால் நம் கண்களே சிவமாகிய ஒளி உள்ளது என தெளிவாக உணரலாம் ! தேறிட்டாம்பா ! என நம் உறுதியை பார்த்து மற்றவர் கூற வேண்டும் !

திருவடியாகிய நம் கண்களே ஒளியுள்ள ஆத்ம ஸ்தானத்திற்கு நம்மை அழைத்துச் செல்லுமாதலால் அதுவே சிவலோகம் அல்லவா ?

எப்படிபோகும் ? நாம் கண்ணில் மணியில் ஒளியை வைத்து சிந்தித்தால் அல்லவா செல்லும் !
மணியில் மனதை இருத்து !

திருவடியே நமக்கு கதி மோட்சம் தருவதாகும்.
திருவடி மூலமாகத் தானே சிவலோகம் சேரலாம் !
சேர்ந்து சிவ நடனம் காணலாம் ! கண்டால் தானே கதி மோட்சம் !
திருவடியே தஞ்சம் என பரிபூரண சரணாகதியானாலே நம் உள்ளம் தெளிவாகும் ! அதாவது வினைகளற்று பரிசுத்தமாகும் ! அழுக்காகிய மும் மலம் அகன்று ஆத்மா தெளிவாக துலங்கும் !

▪️எல்லாவற்றுக்கும் தேவை திருவடி !
▪️எல்லாம் பெற தேவை திருவடி !
▪️நாம் நாட வேண்டியது திருவடி !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

திங்கள், 5 ஜூன், 2023

தொடர்ந்து நின்றானைத் தொழுமின்

"முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த அடிகள் உறையும் அறனெறி நாடில்" 

திருமூலர் பாடல் - 20

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த ஒவ்வொரு மனிதனும் என்று பிறக்க வேண்டும் எப்படி அதன் முடிவு அமைய வேண்டும் என்பதை முன்னரே வகுப்பவன் யாராக இருக்க முடியும்? எல்லாவற்றையும் நடத்துபவன் இயக்குபவன் தானே இறைவன்! இதுவே தேவ இரகசியம்! நாம் என்று? எங்கு? யாருக்கு? பிறக்க வேண்டும் என தீர்மானித்து நம்மை இந்த உலகில் பிறப்பிக்க அருள்பவன் இறைவன் அல்லாமல் வேறு யார்? அடிகள் உறையும் அறனெறி நாடு - அடிகள் - திருவடிகள் இறைவனின் திருவடிகள் தான் நம் கண்கள் என பற்பல ஞானிகள் பகர்ந்துள்ளனர். வேதங்களும் அவ்வாறே கூறுகின்றன. அங்ஙனம் திருவடியாகிய நம் கண்களில் உறையும் ஜோதியை உணர்ந்து தவம் செய்வதே உத்தமம்! கண்களில் ஜோதி இருப்பதை உணர்ந்து அதை நினைத்து உணர்ந்து நெகிழ நெகிழ தவம் செய்வதே தூய நெறி என அற நெறி என இறைவனை அடைய வழி காட்டும் ஒப்பற்ற வழி நெறி என்று திருமூலரும் தெளிவாக உரைக்கின்றார்.

 "தொடர்ந்து நின்றானைத் தொழுமின்" 

திருமூலர் பாடல்-26

நாம் எத்தனை பிறவி எடுத்தோமோ தெரியாது? பிறவி தோறும் நம்மோடு உடனிருந்தவன்! தொடர்ந்து ஒவ்வொரு பிறவியிலும் நம்முடனேயே நம் உடலுள்ளேயே நம் உயிராக இருந்தவன் அவன் தானே! அந்த இறைவன் தான்! எல்லா பிறப்பிலும் நமக்கு உற்ற துணை பரம் பொருளான நம் உயிர் அல்லவா? அதை தொழ வேண்டாமா? அதை அறிய, வேண்டாமா? இப்பிறப்பிலுள்ள அப்பா அம்மா மனைவி மக்கள் சொந்தம் பந்தம் நட்பு எதுவும் நம்முடன் இல்லை! அப்பன் எத்தனை அப்பனோ? அம்மை எத்தனை அம்மையோ இன்னும் எத்தனை பிறவியோ, முன்னும் எத்தனை ஜன்மமோ? யாரறிவார்? ஒன்றுமட்டும் உண்மை எல்லா பிறவியிலும் உயிராக இருந்தது இறைவன் தானே! அப்படியானால் எல்லாம் அவர் அறிவார் அல்லவா? அவரை சரணடைந்தால் நாம் உண்மை அறிய முடியுமல்லவா? எல்லாம் அறிந்த அவரால் நம்மை வழி நடத்த முடியும்? அந்த பரம்பொருளை சரணடைந்தால் தானே நாம் உருப்பட முடியும்! உன்னுள் இருக்கும் ஒண்பதத்தை தொழு! நீ கதி மோட்சம் பெற இது ஒன்றே வழி!

(ஒண்பதத்தை தொழு!)

இறைவன் திருவடியாக விளங்குகின்ற நமது கண்மணியில் உணர்வுடன் தவம் செய்.  

ஞான சற்குருவின் திருவடியே சரணம்  🙏🙏🙏


www.tamil.vallalyaar.com

செவ்வாய், 22 மே, 2018

நடுமூக்கு – இது பரிபாசை.

மெய்ப்பொருள் பரிபாஷை விளக்கம் :-->
திருமூலர் திருமந்திரத்தில்

                 “நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
                  வாட்டம் இல்லை மனைக்கும்  அழிவில்லை “

                               என்கிறார்.

இங்கு திருமூலர் நமது நாட்டம் நடுமூக்கில் வைக்கணும் என்கிறார்.

ஒரு சித்தர் புருவமத்தி என்றார், இங்கு திருமூலர் நடுமூக்கு என்கிறார்.

எது சரி.?

நடுமூக்கு – இது பரிபாசை. ஞானத்திற்கு பொருள் காணனும்.! மேலோட்டமாக பார்த்து மூக்கு என்று ஏமாந்து போகாதீர். மூக்கை பார்த்து மோசம் போனவர் ஏராளம். இதன் விளக்கம் என்ன?

தண்ணீர் ஊற்றும் பாத்திரம் உண்டல்லவா அதில் நீர் வரும் பகுதியை மூக்கு என்று தானே சொல்வோம். நமக்கு கண்ணீர் வரும் கண்ணே மூக்கு அதன் நடுபகுதியே ஊசிமுனை துவாரம் உள்ளதாகும் அதனுள் தான் ஊசிமுனை அளவு ஜோதி உள்ளது! இதில் தான் நம் நாட்டம் இருக்க வேண்டும். கண் என நேரடியாக சொல்லாமல் நடுமூக்கு என்றது நாம் சிந்தித்து தெளிய வேண்டும். குரு மூலம் உபதேசம் பெற்று தெளிய வேண்டும் என்பதற்காக. தான்.

மேல் கூறிய விளக்கத்திற்கு சான்று மற்றும் ஒரு திருமந்திர பாடலே

                           “நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்

                           தோட்டத்து மாம்பழந்தூங்கலு மாமே” 

நயனம் என்றால் கண். இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை.

மேலும் பார்க்க Www.VallalYaar.Com

வெள்ளி, 29 ஜூன், 2012

வாலையை பணியாமல் சித்தராக முடியாது!

"அவளை யறியா அமரரும் இல்லை
அவளின்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளின்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளின்றி யூர் புகு மாறறி யே னே"






அவள் - சக்தி - வாலை - தாய் - 'உ' இடது கண்மணி  ஒளி!
சக்தியை அறியாத தேவர் யாருமில்லை? ஏன் தெரியுமா?
சக்தி அருளால் அமுதம் உண்டு தான் அமரத்துவம் பெற முடியும்!
அப்படியாயின் அமரர் சக்தியை வாலையை அறியாமலிருப்பரா?
சக்தியில்லையேல் நம்மால் எதுவுமே செய்ய முடியாதே! உடலில் சக்தி
இருந்தால் தானே நடமாட முடியும்! பின்னரல்லவா தவம் செய்வது?!
ஆக சக்தி இல்லையெனில் ஒன்றும் செய்ய இயலாது! சக்தி - வாலை
துணையின்றி பஞ்சகிர்த்தியம் புரியும் மூர்த்திகளாலும் ஒன்றும் செய்ய
இயலாது!  பஞ்ச பூதங்கள் இயங்க சக்தி வேண்டும். நம் புலன்கள் இயங்க
சக்தி வேண்டும்!. ஏன்? சிவத்தோடு சக்தி இருந்தாலே இயக்கம்! எங்கும்
சிவமயம்! சிவம் சக்தி மயம்!



அவளே வாலை! தாய்! கன்னி 'ய' குமரியில் குடிகொண்டு முக்கடல்
தீரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் தாய்! பாலா பரமேஸ்வரி
சக்தியில்லையேல் ஒன்றுமில்லை! அசைவற்றிருக்கும் சிவம், அசையா
கல்போன்ற ஒளி களிநடம் புரிய சக்தி தான் தேவை! அந்த தாய் வாலை அருள்
தந்து அமுதம் ஊட்டி அவள் ஆசி பெற்றே சிவன் இருக்கும் ஊருக்கு போக முடியும்! சிவனருள் பெற முதலில் சக்தியருளே வேண்டும்! நம்மை கருவாய்
வயிற்றில் சுமந்து பெற்ற தாயை விட கோடி கோடி பங்கு நம்மை அன்புகாட்டி
அமுதூட்டி அரவணைபவள் வாலைதாயே! நமது உடலுக்கு சக்தி யூட்டிய தாய்!

 உலக அன்னை ! அண்டமெல்லாம் நிறைந்த அகிலாண்டேஸ்வரி ! ஆதிபராசக்தி! கன்னிகா பரமேஸ்வரி! நம் கண்ணுக்கு கண்ணாக விளங்குபவள் ! நம் உயிர் துலங்க உறுதுனையானவள் சக்தியே! தாயே!
தாயை வணங்கும் முதல் தெய்வம் தாயே என இன்று எல்லோரும் கூறுவது
உடல் கொடுத்த தாயை பற்றி! உயிராய் இருந்து வளர்க்கும் தாயை அறிவார்
இல்லை! இறைவனை அடைய அமுதூட்டி  வழிகாட்டும் உலகத்தாயை அறியவில்லை!

அவளை அறியாத பேர்க்கு மாயை! மகாமாயை அவளே! அறிந்து
பணிந்தவருக்கு அமுதூட்டும் அன்னை! வாலையை  பணியாமல் யாரும்
தேவராக முடியாது! சித்தராக முடியாது! ஞானியாக முடியாது! சிவமே சக்தியை தன்னோடு சரிபாதி யாக கொண்டார் எனில் சக்தியின் மகத்துவம்
புரியவேண்டாமா? அந்த சக்தி மாமாயை வாலை கன்னி 'ய' குமரி அடியேனை
கன்னியாகுமரி யிலே சற்குருவாக இருத்தி தங்க ஜோதி  ஞான சபை தந்து
இத்தனை ஞான நூற்களையும் எழுதி வெளியிட்டு உலகத்துக்கு சேவை செய்யும் அருள் புரிந்தவள்! தாயை பணிந்தால் தயவுடையவனானேனே! அதனால் தான் எல்லோருக்கும் ஞான இரகசியங்களை போதிக்கிறேன்!
எழுதுகிறேன்!

 
"சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
செம்பவள மேனி கொண்ட சக்தியவள் வாலையே!
முக்கடலும் சங்கமிக்கும் முக்தி யருள் தலமாம்
கன்னியவள் குமரி யிலே  கண்டு கொள் பணிந்தே"









திங்கள், 18 ஜூன், 2012

வினை திரை எங்கு உள்ளது ?

காணாத கண்ணில் படலமே கண்ணொளி
காணாத வர்கட்கும் காணாதது அவ்வொளி
காணாத வர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்
காணாது கண்டார் களவொழிந் தாரே.


 நம் கண்மணியில் மத்தியில் ஊசிமுனையளவு ஓட்டை உள்ளது!?
அதை மறைத்து ஒரு மெல்லிய கண்ணாடி போன்ற ஜவ்வு-படலம் உள்ளது!?
இதெல்லாம் பெரும் ரகசியம்! இதை தக்கலை பீர் முகமதுவும் பல பாடல்களில் குறிப்பிடுகிறார்! இறைவா என் இரு கண் படலத்தை நீக்கியருள் என வேண்டுகிறார்? ஞானிகள் கூற்று என்பதற்கு இதுவும் சாட்சி!

இறைவனை-ஒளியை காணாத கண்ணில் உள்ளவர் ஒளி படலம் வழியாகவே வெளியே தெரியும்! படலம் தான் நம் மும்மல திரை! (ஆணவம் கன்மம் மாயை) படலம் வழி பார்க்கின்ற மனிதனின் படலம் - வினை எப்படி
உள்ளதோ அப்படி அவன் செயல்படுகின்றான்! பார்வையே வினையாய் செயல்படுத்துகின்றது! 

படலம் இருக்கும் வரை  வினையிருக்கும் வரை சராசரி மனிதனே! சற்குருவை சரணடைந்து உபதேசம் கேட்டு தீட்சை பெற்று படலமாகிய வினை திரை அகல கண்மணி ஒளிபெருக்க தவம் செய்யவேண்டும்! படலம் அகன்றாலே நம் கண்மணி ஒளி நாம் காண நம் கண்முன் தோன்றும்! காணாத காட்சி எல்லாம் கண்ணில் காணுமடா என்கிறார் காகபுசுண்டர் ! உலகில் உள்ள மனிதர் அனைவருக்கும் உள் ஒளியாக துலங்கும் அந்த இறைவனை எல்லோருக்கும் பொதுவில் விளங்கும் பேரொளி, இருகண்ணும் உள்
சேரும் இடத்தில் பெருங்கண்ணாக நெற்றி கண்ணாக  அக்னி ததும்பும் அருட் கண்ணாக துலங்குகிறார் ! அதை கண்டவர் தீச்செயலை விட்டுவிடுவர்! தீச்செயலை விட்டாலே அவ்வொளியை காண்பார்! இதுவரை காணாத அம்மானுடர் கண் படலம் நீங்க பெற்று கண்ணொளி கண்டு தண்ணொளி கண்டு பேரின்பம் அடைவர்! பெறுதற்கரிய பெரும் பேறு இதுவே! குருவை நாடு! கண்ணை மூடிய படலம் நீக்க வழியறி! விழித்திரு!




ஞான சற்குரு சிவசெல்வராஜ்
தங்க ஜோதி ஞான சபை
கன்னியாகுமரி

Popular Posts