ஞாயிறு, 14 அக்டோபர், 2018

வாலையின் கடைக்கண் பார்வை

அபிராமியே காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி,காந்திமதி, கற்பகாம்பாள்,
வடிவுடை நாயகி, அகிலாண்டேஸ்வரி, இப்படி எண்ணிலா பெயரோடு
வடிவோடு விளங்குபவளே கன்னியாகுமரி பகவதியம்மனாக, பாலா,
வாலைக்குமாரியாகவும் விளங்குகிறாள்.  அருள்பலிக்கிறாள்!

மலையாக, அலையாக, கலையாக விளங்குபவளும் இவளே!

வாலையின் கடைக்கண் பார்வை பட்டாலே போதும்  நாம் கடைத்தேற
நம் இருகண்ணும்  உள் போகையில் ஒளி பெருகி உட்செல்லும் போது
கடைசியாக சென்றடைவது அக்னிகலை, ஆத்மஸ்தானம், அது தான்
மூன்றாவது கண். நெற்றிக்கண் ஞானக்கண்! அந்த இடமே
வாலையின் இருப்பிடம்.

அந்த கடைசியிலுள்ள கண் நம்மை பார்த்தால்
நமக்கு இடர் இல்லையே! பேரின்பமே! ஞானமே! மோட்சமே! 
வாலையின் கடைக்கண் பார்வை கிட்டிட ஞான தவம் செய்!
அம்பிகையிடம் யாசி!  வாலையை சரணடை! வெற்றி கிட்டும்!

காமாக்ஷி , மீனாக்ஷி, விசாலாக்ஷி என்பதில் "அக்ஷி"  என்ற
சமஸ்கிரத சொல்லுக்கு கண் எனப்பொருள்! காமாக்ஷி ஜோதியே,
 மீனாக்ஷி மெய் ஞானமே, விசாலாக்ஷி வினை அறுத்தலே தந்து
அருள் புரியும் தாயாம்!


www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts