வள்ளலார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வள்ளலார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 ஜூன், 2026

வள்ளலார் அற்புத சித்திகள் (miracles) - 1

 

1
தருமச் சாலையிலே பெரும்பாலும் தினமும் வள்ளல்பெருமானின் அருளுரை இருக்கும் !தேனை பருக எங்கிருந்தெல்லாமோ வண்டென ஆன்மதாகம் கொண்டோர் வரலாயினர். மனிதர்கள் மட்டுமா? வள்ளல்பெருமான் பேச்சை தினம்ம் ஒரு கால் ஊனமுற்ற ஆடு கேட்குமாம்!புண்ணியம் செய்த ஜீவன் அது!

ஒரு சமயம் வள்ளலார் பேச்சை கேட்க தொலை தூரத்திலிருந்து வந்த அன்பர், நேரமாகிவிட்டதே என்று குறுக்குப் பாதையில் ஒரு வாழை தோட்டம் வழியாக வேக வேகமாக வந்தார். எதிரே ஒரு நாகம் படமெடுத்து கடிக்கவர ,அன்பர் ,இராமலிங்கம் மேல் ஆணை என பயத்தால் கத்த பாம்பு அப்படியே நின்றது . திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்துவிட்டார். ஆச்சு! வடலூரில் தருமச் சாலையில் வள்ளல் தரிசனமும் உபதேசமும் !உரை கேட்டு திரும்ப யத்தனிக்கையில் வள்ளல் பெருமான் அந்த அன்பரை கூப்பிட்டு உன்னால் ஒரு வாயில்லா ஜீவன் வதைபடுகிறதே விரைந்து சென்று என்மீது விடுத்த ஆணையை விலக்கிவிடு அது போய்விடும் என்றார்?! அப்போது தான் அன்பருக்கு வழியில் நடந்தது நினைவுக்கு வந்தது .பெருமானிடம் ஆசிபெற்றுப் போனார்! ஆணையை விடுவித்தார் பாம்பும் ஓடி மறைந்தது !எங்கோ நடந்ததை வள்ளலார் எங்ஙனம் அறிந்தார்? வாயில்லா ஜீவன் வதைபடுவதை காண சகியாமல் விரைந்து போ என்றாரே எவ்வுயிருக்கும் கருணை காட்டும் அந்த உள்ளம் எத்தகைய மேன்மையானது!! மென்மையானது!


2
இன்னொரு சமயம் அன்பர்களோடு வள்ளல் பெருமான் காட்டு பாதையில் நடந்துவரும் போது ஒரு நல்ல பாம்பு எதிர்பட கூட வந்தவர்கள் ஓட வள்ளலார் நின்றார் .அப்பாம்பு வள்ளலாரின் காலை சுற்றி சிறிது நேரம் இருந்தது .சற்று தூரத்தில் இருந்த அன்பர்கள் கண்டணர். வள்ளலார் ஏதோ சொன்னதும் அப்பாம்பு விலகி அப்பால் சென்றது .வள்ளலாரின் பாத தரிசனம் பெறவந்தது அப்பாம்பு !யாரோ ?எவரோ?எவ்வுயிரும்வள்ளலார் தம் உயிராகவே கருதினார் !மெய்ஞ்ஞானியின் ,கடவுள் மயமானவரின் இயல்பும் அதுதானே!


3
தருமச் சாலையிலே வள்ளல் பெருமான் அருளுரை கேட்கவரும் அன்பர் ஒருவருக்கு ஒரு சந்தேகம் .வள்ளலார் ஏன் முக்காடு போட்டிருக்கிறார்?நேரே கேட்க தயக்கம் பயம். தன் புதல்வனை ஒரு நாள் கூட்டிவந்தார். புறப்படும் போது வள்ளலார் அந்த அன்பரை தனியே அழைத்து இதைத்தானே கேட்க விரும்பினாய் என்று தன் தலைமுக்காட்டை எடுத்தார்!ஒரே ஒளி வெள்ளம் அதை காணப்பொறாத அன்பர் மயங்கிமூர்ச்சையானார்!அன்பர்கள் மூர்ச்சை தெளிவிக்க எழுந்தவரிடம் இது பற்றி எவரிடமும் கூறாதே எனக்கூறி அனுப்பினார் வள்ளலார்!

4
ஒரு சமயம் வள்ளலார் அன்பர்களுடன் சிதம்பரதரிசனம் பெற்று தருமச் சாலை திரும்புகையில் வழியில் பயங்கர மழை. ஒதுங்குவதற்கு இடமில்லா பொட்டல்காடு .என்செய்வது எல்லோரும் மழையில் தெப்பமாக நனைந்து விட்டார்கள் .ஆனால் அதிசயம் அவர்கள் கூடவே நடந்துவந்த மழையில் வந்த வள்ளல் பெருமான் மீது ஒரு துளி மழை கூட படவில்லை !பெருமான் அருகே மழை துளி வந்ததுமே ஆவியாகி விட்டது!? அப்படியானால் வள்ளல் பெருமான் உடல் எத்தகைய ஒளிமிகுந்தது உஷ்ணமாயிருந்தது ?!உடன் வந்தவர்கள் வியந்து போற்றினார். எல்லோரிடமும் இந்த அற்புதக்காட்சியை கூறி மகிழ்ந்தனர்!! வள்ளலாரை பலரும் வெள்ளாடை துறவி முக்காட்டுசாமி ,சித்தர் ,ஞானி ,கடவுளே அவதாரம் செய்துள்ளார் என பலவாராக போற்றி மகிழ்ந்தனர். இறைவன் ஜோதிமயமானவர் என்று கூறி ,அகல் விளக்கேற்றி வைத்து வழிபட உபதேசித்தார். ஆரம்பத்தில் உருவத்தை தான் தியானிக்க வேண்டும் பின் அதுவே ,உருவம் கரைந்து அருவமாகும் தொடர்ந்து தவம் செய்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை காணலாம் என்றார் .சதா சர்வ காலமும் தெய்வ பாவனையை தீபத்தில் கொள்க என்றார்.

5

ஒரு சமயம் தருமச் சாலையிலே அன்பர்களோடு இருக்கையிலே, திடீரென ,ஒரு காவியுடை சடைமுடிருத்திராட்ச பாணியாக துறவி ஒருவர் வள்ளலார் முன் தோன்றி ஒரு லட்டும் கொடுத்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தார்!பின் திடீரென மறைந்தும்போனார். பார்த்துக் கொண்டிருந்த அன்பர்கள் வியப்புமேலீட்டால் வள்ளலாரிடம் கேட்டபோது ,அவர் எம்மை சந்தித்து அளவளாவ வந்த ஒரு சித்தர் என்றும் இந்நேரம் அவர் காசியிலேயிருப்பார் என்று கூற அன்பர்களுக்கோ மேலும் வியப்பு! பாம்பின் கால்பாம்பறியும் !வள்ளல் பெருமான் மகத்துவம் அறிந்து தரிசிக்க வந்தார் ஒருமாபெரும் சித்தர் பெருமான் !

6

தருமச்சாலையில் நிகழ்ந்த மற்றொரு அற்புதம்! சிதம்பரத்திலே ஆனித் திருமஞ்சன விழா .அன்பர்கள் வள்ளலாரோடு போகலாம் என கருதியிருந்தார்கள் . முன்பு சில முறை அப்படி போனதால் இம்முறையும் போக எண்ணினர். குறிப்பிட்ட நாளும் வந்தது .வள்ளலார் கிளம்பிக் காணோம். நேரம் ஆகிக்கொண்டேயிருந்தது. அன்பர்கள் செய்வதறியாது திகைத்தனர். இம்முறை போக முடியாமல் தோய்விட்டதே என வருந்தினர்.வள்ளலார் அவர்களின் எண்ணத்தை அறிந்து தருமச்சாலையினுள்ளே ஒரு திரைகட்டச் செய்து, அதில் பாருங்கள் என்றார்! என்ன அதிசயம்!சிதம்பரம் கோவிலில் நடந்த அபிஷேக ஆராதனைகள் தெளிவாக திரையிலே எல்லோரும் கண்டு சேவித்தனர் .இப்போது தானே சினிமா தொலைக்காட்சி எல்லாம் வந்துள்ளது. வள்ளல் பெருமான் கைகாட்டிய இடத்தில் , எங்கோ சிதம்பரத்தியில் நடந்தவைகளை வடலூர் தருமச் சாலையிலிருந்தபடியே சிதம்பரத்தில் நடராஜர் சந்நிதிமுன்னிருந்து பார்ப்பது போல் பார்த்தார்கள் என்றால் எவ்வளவு பெரிய மகா அதிசயம் இது!! பார்த்த அன்பர்கள் அடைந்த பேரானந்தத்திற்கு அளவேயில்லை!

7

தருமச்சாலைக்கு வெளியே உச்சிவேளையில் வெயிலில் அமர்ந்திருப்பார் நம் பெருமானார். அப்போது பார்த்த சிலர் பெருமான் தலையிலிருந்து மேலே சூரியன் வரை பெரிய அக்னிகம்பம் தோன்றியிருப்பதை கண்டு மெய்சிலிர்த்தனர்!

ஒரு சமயம் உச்சிப் போதில் பெருமானார் தருமச் சாலைக்கு வெளியே சென்றார். சிறிது நேரமாகியும் வராததால் அங்கிருந்த சண்முகம் பிள்ளை வெளியே வந்து பார்க்க பெருமானின் அங்கங்கள் கைவேறு கால்வேறு தலைவேறாக தனித்தனியாக வெட்டுண்டது போல் கிடக்க பார்த்து பதறி கத்தி மயங்கி வீழ்ந்தார். உடனே பெருமானார் அங்கமெல்லாம் ஒன்றாகி அவர் மயக்கம் தீர்த்து இனி இப்படி திடீரென வராதீர் எனக்கூறி இதுவும் ஒரு சாதனையே என்று கூறுவாராயினர். இது தான் நவகண்டயோகம் என்பர்!

சில சமயம் தருமச் சாலை சமையலறையில் அன்பர்களை சொல்லி சுற்றி இரும்பு வாணலியில் நெருப்பு கங்குகளை போட்டு அதன் மத்தியில் அமர்ந்து தியானம் செய்வார். அவரே நெருப்புமயம் .அவரை சுற்றிலும் அனல், இப்படி பலவிதமான கடுந்தவங்களையெல்லாம் செய்தார். இறைவன் நம் வள்ளல் பெருமானுக்கு அற்புத சித்திகள் எல்லாம் வாரி வாரி வழங்கினான்!'ஆடுறு சித்திகள் அனைத்தும் தந்தான் 'என வள்ளலாரே கூறுகிறார்.


8

இன்னொரு முறை பெருமானார் திருவதிகை வழிபாட்டுக்கு சென்றார். பெருமான் மகிமை அறிந்து பெருங்கூட்டம் கூடலாயிற்று .பெருமானை காண முண்டியடித்து வந்தனர். ஆனால் பின் விழா கூட்டம் அமைதியானது! பார்த்தால் பல இடங்களிலும் வள்ளலார் தோன்றி மக்களுக்கு ஆசிவழங்கி அருள் பாலித்தார்! ஒரே நேரத்தில் பல உரு எடுக்கும் ஆற்றல் பெற்ற மாபெரும் சித்தர் பெருமானாகவும் விளங்கினார் வள்ளலார்!


தருமச் சாலையில் ஒருநாள் இரவு உணவு அருந்தும் நேரத்தில் வெளியூரிலிருந்து 100 பேர் வந்து விட்டனர். சண்முகம் பிள்ளை பெருமானிடம் வந்து 10 பேர் உட்கொள்ளவே உணவு இருப்பதை தெரிவித்து ஒன்றும் புரியாமல் நின்றார். பெருமான் உடனே நீங்கள் போய் அனைவருக்கும் இலைபோடுங்கள் நானே பரிமாறுகிறேன் என்றார். வள்ளல் பெருமான் தன் திருக்கரத்தால் அனைவருக்கும் உணவு பரிமாறினார். வள்ளல்பெருமான் எடுக்க எடுக்க அமுதசுரபிபோல உணவு வந்து கொண்டேயிருந்ததை கண்ட சண்முகம்பிள்ளை அதிசயத்து அப்படியே நின்று விட்டார்!

இன்னொரு நாள் சண்முகம்பிள்ளை மறுநாள் சமைக்க அரிசி இல்லையே என்று வள்ளலாரிடம் கூற சரி, போம் நாளை வரும் என்றார்கள். மறுநாள் காலை வண்டி வண்டியாக அரிசி காய்கறிகள் தருமச்சாலைக்கு வந்தது. வந்தவர் நேற்றிரவு கனவில் பெருமான் தோன்றி விபரம் கூற கொண்டு வந்தேன் எனக் கூறிப் போனார்.

10 

ஒருசமயம் கோடைகாலத்தில் மழையின்றி துன்புற்ற மக்கள் துயர் நீக்க பெருமானார் ஒரு செம்பு தண்ணீர் கொண்டு வந்து தம் காலில் ஊற்றும்படி கூறினார். அன்பர்கள் அவ்வாறு செய்த சற்று நேரத்தில் மேகங்கள் சூழ்ந்து பெரு மழைபெய்தது!மக்கள் மகிழ்ந்தனர்.
இதை அறிந்த புதுப்பேட்டை எனும் ஊர் மக்கள் திரண்டு வந்து தங்கள் ஊர் ஏரிகினறு குளம் எல்லாம் வற்றி பஞ்சம் நிலவுகிறது நீங்கள் தான் காக்கவேண்டும் என கதறினர். வள்ளல் பெருமான ஆறுகுடம் தண்ணீரை தன் தலையில் விடச்சொன்னார். அவ்வாறே செய்ததும் புதுப்பேட்டையிலும் பெருமழை ஆறு கிணறு நீர் நிலைகள் நிரம்பின ஊரே செழித்தது. மக்கள் மகிழ்ந்து வள்ளல் பெருமானை போற்றி துதித்தனர்.

11 
ஒரு சமயம் அன்பர் ஒருவருடன் மாட்டு வண்டியில் அவர் ஊருக்கு போகும் வழியில் கள்வர் இருவர் வண்டியை மறித்தனர் .அன்பர் மோதிரத்தை கழற்ற முற்பட்டபோது பெருமான் வெளியிறங்கி அவசரமோ எனகேட்க கள்வர் அடிக்க தடியை ஓங்கினர் .வள்ளலார் பார்த்தார். ஓங்கிய கை அசைவற்று நின்றுவிட்டது. கண்பார்வையும் கள்வர்கள் இழந்தனர் .வந்திருப்பது சாதாரண ஆள் அல்ல என்றுணர்ந்த கள்வர்கள் கதறி தங்களை காப்பாற்றும்படி கெஞ்சினர். மனமிரங்கிய வள்ளல் அவர்களை மன்னிக்க "பிச்" என்றார். கள்வர்கள் முன் போல் சரியாயினர். வள்ளலாரை வண்டியோடு சுற்றி வந்து வணங்கி மன்னிப்பு கேட்டு போயினர்.


12 

வள்ளல் பெருமான் பார்த்தாலே போதும் புலால் உண்பவன் புலாலை மறப்பான் ! தீய எண்ணமுடையவர்களும் வள்ளலை தரிசித்தால் நல்லவர்களாயினர். ஒரு சமயம், பல காலமும் ரசவாதம் கற்றுத்தருக என சதா தொந்தரவு செய்த அன்பரிடம் வடலூரில் கீழேயிருந்து ஒரு பிடி மண் எடுக்கச் சொல்லி தன் கையில் வாங்கி மூடிக் கொண்டு அவர்கையைக் காட்டச்சொல்லி கொட்டினார். என்ன ஆச்சரியம் மணல் அனைத்தும் தங்க பொடியாயிருந்தது !
உடனே வள்ளலார் அவனிடம், "பற்றற்ற ஞானி கைப்பட்டமண்ணும் பொன்னாகும் 'இதற்காக காலத்தை வீணடிக்காதே !அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அடையும் வழியைபாரு! அவர் அருள் கிட்டினால் நீ தொட்டதெல்லாம் பொன்னாகும் என்று நல்ல புத்தி சொல்லி அனுப்பினார்.

13

வள்ளல் பெருமான் பலர் நோயை மருந்துகள் கொடுத்து குணப்படுத்தினார். சித்த மருத்துவத்திலும்  தேர்ந்தவர் ரசவாதத்திலும தேர்ந்தவர். வள்ளல்பெருமானையெல்லா தரப்பு ஆட்களும் காணவந்தனர். அருள்வேண்டி வந்தவர் பொருள் வேண்டிவந்தவர், பொன்செய்ய வேண்டி வந்தவர், நோய் தீர நாடி வந்தவர் ,சித்த மருத்துவம் படிக்க வந்தவர்,வேதபுராணம் இலக்கியம் படிக்க வந்தவர்இன்னும் பல வேண்டுகோள்களோடு வந்தவர் பலர். எல்லோருக்கும் எல்லாம் வழங்கினார் வள்ளலார் .நாடி வந்தோரெல்லாம் நல்லருள் பெற்றனர்.

14 
வேட்டவலம் எனும் ஊர் ஜமீந்தாருக்கு இரு மனைவிகள் . ஒருத்திக்கு மகோதரம் நோய். மற்றொருத்தியை பிரம்மராட்சஸ் பிடித்திருந்தது.வள்ளல் பெருமான் அவர் மாளிகை போனார். வீட்டு வாசலில் கால் வைத்ததும் பிரம்மராட்சஸ் ஓடிவிட்டது !அடுத்த மனைவிக்கு விபூதிகொடுக்க அவரும் குணமானார்! வள்ளலார் திருவடிகள் வீழ்ந்து வணங்கினார்.வள்ளல் பெருமான் வேண்டுகோள்படி அவர் ஜமீனுக்குட்பட்ட எந்த கோவிலிலும் உயிர்பலி கொடுப்பதை தடை செய்தார்!

15

தம்மில் அமிழ்ந்து இருப்பதால் இது "தமிழ்" என்று இலக்கண இலக்கியங்களை ஆதாரமாக காட்டி தமிழின் பெருமையை பாரறியச் செய்தவர் வள்ளலார்!!வள்ளலாரின் பெரும் புகழ் பட்டி தொட்டியெங்கும் பரவலாயிற்று! இறைவன் சந்நிதியிலே வள்ளலாரின் பாடல்கள் எல்லோராலும் பாடப்பட்டது! வள்ளலாரின் மகத்துவம் அறியாத அறிவிலிகள் அவர் மேல் பொறாமைப்பட்டனர். தூற்றினர். வள்ளலாரின் பாடல்களையும் பழித்துரைத்தனர். சமயவாதிகள் வெறுப்பால் பொறாமையால் புழுங்கினர். அவர்களுக்கு பழியேற்க வந்து சேர்ந்தார் யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர். சைவசமய பற்றுள்ளவர் ,வள்ளலார் பாடல்கள் சரியில்லை என நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்தோ பரிதாபம் ஆறுமுகநாவலர் பாடு. குறிப்பிட்ட நாளில் எல்லோரும் நீதிமன்றம் வந்தனர் .வள்ளலாரை கூப்பிட அவர் உள்ளே வர அங்கு அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்று கைகூப்பி வள்ளலாரை வணங்கினர்.வழக்கு தொடுத்த ஆறுமுக நாவலரும் எழுந்து வள்ளலாரை வணங்கினார்.


www.vallalyaar.com 

#உலககுரு வள்ளலார் நூல் 


திங்கள், 26 ஜனவரி, 2026

155-வது தைப்பூச ஜோதி தரிசனம் | வள்ளலார் ஒளியுடலாகிய 153-வது வருடம்


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளிய
மரணமிலா பெருவாழ்வு பெற வாரீர்! கண்மணி" அறிந்து உணர வாரீர்!
கன்னியாகுமரி தங்கஜோதி ஞானசபைக்கு!

சத்திய ஞான சபையில் தங்கஜோதி !!

155-வது தைப்பூச ஜோதி தரிசனம் | வள்ளலார் ஒளியுடலாகிய 153-வது வருடம்

ஆன்மநேய ஒருமைப்பாடுடையிர்

 வந்தனம்! நன்றி நலம்! நாடுவதும் அஃதே! இந்த தைப்பூச நன்னாளில், வடலூர் பெருவெளியில் கிழக்கே சூரியன் வரவும்  மேற்கே சந்திரன் மறைவும் நடுவே சத்திய ஞானசபையில் 'தங்கஜோதி தரிசனமும் நாம் காண வேண்டும் நாம் ஞானம்  பெற வேண்டும் என்பதற்காக உலகை உய்விக்க  வந்த ஞானசூரியன், திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் உருவாக்கியருளினர்" தைப்பூச ஜோதி காண வாருங்கள்! வடலூர் வந்தால்  பெறலாம் நல்ல வரமே! மணமிலா பெருவாழ்வு எவ்வோரும் பெறலாம்!" என உலகர் அனைவரையும் கூவி அழைத்தார் வள்ளலார்!

இதுவரை மறைத்துச் சொல்லப்பட்ட ஞானம், பரிபாஷையாக எழுதப்பட்ட ஞானம், குருகுல வாசம் செய்து தான் பெற முடியும் என்றிருந்த ஞானம் மகான் ஸ்ரீ இராமானுஜரைப் போல, வள்ளலார் ஸ்ரீ இராமலிங்கரும் உலகமக்கள் அனைவரும் ஞானம்பெற மறைத்ததை வெளிப்படுத்தி, பரிபாஷையை விளக்கி நான் உங்களுக்கு வழி - விழி காட்டுகிறேன் எனக் கூறி சத்தியஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் மக்கள் காண, மெய்ஞ்ஞானம் உணர, அறிய வழிவகை செய்தார்கள்! இவ்வுலகில் இதுவரை யாரும் செய்யாத அருஞ்செயல்!

“சத்தியவான் வார்த்தைஇது தான் உரைத்தேன்
கண்டாய் சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்
இத்தினமே அருட்ஜோதி எய்துகின்ற தினமாம்
இனிவரும்அத் தினங்கள்எல்லாம் இன்பம்உறு தினங்கள்
சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகம் தூய்மைஉறும்
நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும் செத்தவர்கள்
எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார் திருவருட்
செங்கோல் எங்கும் செல்லுகின்ற தாமே.

  • திருவருட்பா

சத்திய ஞானசபை நம் தலை அமைப்பை ஒத்தது ஆகும்! “சத்திய ஞானசபையை என்னுள் கண்டனன்” என வள்ளலார் பாடியருள்கிறார். அதாவது, நம் தலை நடுவே - உள்ளே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தங்கம் போல் தகதகக்கும் ஜோதியாக ஒளிர்கிறார்! இதைத்தான் சத்திய ஞானசபை நடுவே உள்ளே காட்டினார்! அதே சமயம் அதிகாலை கிழக்கு திசையில் சூரியன் உதயமாகும்! மேற்கு திசையில் பூரண சந்திரன் அஸ்தமனமாகும். இதை, இந்த சூரிய ஜோதியை, சந்திர ஜோதியை, சத்திய ஞானசபையின் தங்க ஜோதியை வடலூர் பெருவெளியில் நின்றால் தான்! காண முடியும்! அதாவது ஒரே சமயத்தில் மூன்று ஜோதியை காணலாம்! ஞானத்தை விளக்க இவ்வாறு வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனம் உருவாக்கினார்.

இதுபோலவே, நம் தலையின் உள் - நடுவே நம் ஆத்மஜோதி - தங்கஜோதி ஒளிவிட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது! நமது வலதுகண் சூரிய ஒளியாகவும், நமது இடதுகண் சந்திர ஒளியாகவும் இருக்கிறது என்பதே ஞானிகள் கூறும் இரகசியமாகும்!

நாம் ஞானம் பெற வேண்டுமாயின், நம் இருகண் ஒளியினால் நம் சிர நடு-உள் விளங்கும் ஆத்ம ஜோதியை அடைய வேண்டும்! அப்போது காணலாம் அருட்பெருஞ்ஜோதியை! - தங்கஜோதியை! - நம் ஆத்மஜோதியை! எவன் ஒருவன் தன் ஆத்ம ஜோதியை காண்கிறானோ அவனே ஞானம் பெற்றவன்! அவன்தான் இறைவனை காண முடியும்! அவன்தான் முக்தி பெறுகிறான்! மோட்சம் அடைகிறான்! மரணமிலா பெருவாழ்வு பெறுவான்! சிரஞ்சீவியாவான்! அவன்தான் ஞானி! அவன்தான் சித்தன்! அவன்தான் சாகாதவன்! என்றும் இருப்பவன்! இறைநிலை பெற்ற பூரணமானவன்.

மகானுபாவர் ஸ்ரீ இராமானுஜர் தன் குரு தனக்கு உபதேசித்த அஷ்டாட்சர மந்திரத்தை, “நீ இதை வெளியில் சொன்னால் நரகத்துக்குத்தான் போவாய்! இது இரகசியம்!” என்றுரைத்ததை மீறி, உலகர் எல்லோரும் சொர்க்கத்துக்கு போகட்டும் என்று எல்லோருக்கும், ஊர் நடுவே கோபுரம் மீது ஏறி உரைத்தாரே அவரல்லவா ஞானி! தான் நரகத்துக்கு போனாலும் பரவாயில்லை என, மூடகுருவின் வார்த்தையை மீறி சொன்னாரே! அவரல்லவா கருணைக்கடல்! அவர் உலகர் மீது கொண்ட அன்புக்கு ஈடேது!!

மந்திரத்தை சொன்ன மகான் ஸ்ரீ இராமானுஜர் கருணைக்கடல் என்றால், இறைவனை அடைய இதுவரை இரகசியமாக சொன்னவற்றை வெளிப்படுத்திய வள்ளலார் ஸ்ரீ இராமலிங்கர் யார்? கடவுள் யார்? எப்படியிருக்கிறார்? நம் உடலில் நம் கண்களில் ஒளியாக இருக்கிறார்! நம் சிரநடுஉள் ஆத்மஜோதியாக துலங்குகிறார்! அதுவே சத்திய ஞானசபை விளக்கம்! தைப்பூச ஜோதி தரிசன விளக்கம் என்றுரைத்த வள்ளலார் மனித குலத்தை உய்விக்க வந்த மகா ஞானியல்லவா? இதை உலகம் உணர வேண்டாமா?

பக்தியால் பண்படும் மனிதன் இறைநிலை அறிய, உணர, அடைய வள்ளலார் வழி - விழி காட்டுகிறார்! “பழையன கழிதலும் புதியன புகுதலும்” ஞானம் பெறுவதிலும் வந்தது வள்ளலாரால்!! மனிதன் மனிதனாக வாழ வழிகாட்டுவதே நம் நாட்டில் ஆதியிலிருந்தே வந்துள்ள தர்மநெறியாகும்! அறநெறியாகும்! அப்படி வாழும் மனிதன் தன்னை படைத்த பரம்பொருளை அறிவதே! உணர்வதே! அவன் திருவடியை அடைவதே பூரணமான நிலையாகும்! இதை நம் நாட்டில் காலம் அறியப்படாத பல யுகங்களாக சொல்லி வந்தனர் ஞானிகள் பலர்! இதைத்தான் “சநாதன தர்மம்” என்றனர்!

இதைத்தான் வள்ளலார் ஸ்ரீ இராமலிங்கரும் “சன்மார்க்கம்” என்று பெயரிட்டு உபதேசித்தார்!” வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் யானும் ஒருவனன்றோ!” என மிகப் பணிவாக வள்ளலாரே கூறுகிறார்! வள்ளலார் உரைத்த சன்மார்க்க நெறி வேதத்தில் சொல்லப்பட்டதுதான்! 18 புராணங்களிலும் உபநிஷத்துக்களிலும் சொல்லப்பட்டதுதான்! இதுவரை இவ்வுலகில் தோன்றிய ஞானிகள் சொன்னதுதான்! இயேசுபிரான் பைபிளில் சொன்ன ஞானம்! முகமது நபிபெருமான் குர்ஆனில் சொன்ன ஞானம்! திருமூலர் திருமந்திரத்தில் சொன்ன ஞானம்! மணிவாசகர் திருவாசகத்தில் சொன்ன ஞானம்! தேவாரம், திருக்குறள், இன்னும் எத்தனையோ மகான்களின் ஞானம்! குணங்குடி மஸ்தான் உரைத்த ஞானம்! தக்கலை ஞானமாமேதை பீர் முகமது உரைத்த ஞானம்! எல்லோர் உரைத்த ஞானமும் சன்மார்க்கமே!

எல்லா மகான்களும் உலகம் உய்வடையவே போதனை செய்தனர்! எவ்வுயிரும் தன்னுயிர் போல கருதவே உபதேசித்தார்கள்! ஒரே இறைவனை! ஒளியாகவே! இறைவனை கண்டு, போற்றி பாடி, உபதேசித்து நமக்கு அருளினார்கள்! இதில் வேற்றுமை காண்பவன் அறிவிலி!

இறைவனை மட்டுமே காணுங்கள்! அவனை அடைய ஞானிகளின் உபதேச வழிகாட்டுதல்களை படியுங்கள்! அறியுங்கள்! உணர வழிதேடுங்கள்! விழியை காட்டும் ஞானகுருவை தேடுங்கள்! கண்டடைவீர்கள்! இரகசியமில்லாமல், பரிபாஷை விளக்கம் கூறி தங்கஜோதி ஞானசபை பல நூற்களை உலகமக்கள் ஞானம் பெற உதவியாக வெளியிட்டுள்ளார்கள்! ஞான சற்குரு சிவசெல்வராஜ், இராமானுஜரை போல இராமலிங்கரைப் போல ஞானத்தை வெளிப்படுத்தி நூற்கள் வெளியிட்டுள்ளார்!

உலகில் முதலாவதாக "கண்மணி மாலை" என்னும் நூல் எழுதி 1992-இல் இரகசியங்களை பரசியமாக்கினார் ஞானசற்குரு சிவசெல்வராஜ்! அடுத்து, "சாகாக் கல்வி" உலகர் அறிய, விரிவாக, விளக்கமாக எவ்வித மறைப்புமின்றி வெளியிட்டுள்ளார் ஞானசற்குரு சிவசெல்வராஜ். பாருங்கள்! படியுங்கள்! ஞானம் பெறலாம்! இன்னும் பல மெய்ஞ்ஞான நூற்கள் உள்ளன!

சன்மார்க்கம் வெறும் அன்னதானத்தோடு நின்றுவிடக் கூடாது! ஞானதானம் செய்ய வேண்டும் எனக் கருதியே, தங்கஜோதி ஞானசபை கன்னியாகுமரியிலிருந்து கடவுளையடைய வழிகாட்டும் விழியின் மகத்துவத்தை உணர்த்தும் மெய்ப்பொருளின் - திருவடியின் திறத்தை விளக்கி - பரிபாஷைகளை விளக்கி ஞானநூற்கள் வெளியிட்டுள்ளனர்! கண்ணுள்ளவர் நோக்கக்கடவர்! காதுள்ளவர்கள் ஞான சற்குரு சிவசெல்வராஜிடம் உபதேசம் கேட்கக்கடவர்! வள்ளலார் இராமலிங்கர் மட்டுமல்லாது எல்லா ஞானிகளின் அருளும் ஆசியும் பரிபூரணமாக கிட்டும்! வந்தால் பெறலாம் ஞான தீட்சையே!

"குருவில்லா வித்தை பாழ்" "குருவருளின்றி திருவருள் கிட்டாது"

அகவல்பாராயணம் செய்தால் மட்டும் போதாது?! சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து நடந்தாலே மோட்சம்! சன்மார்க்க நெறி - பிராணாயாமம் செய்வது அல்ல! வாசியோகம் செய்வதல்ல! வேறு எந்த கிரியையும் யோகமும் செய்வது அல்ல! ஞானநெறியே சன்மார்க்கம்! ஒளியான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அடைய ஒளிவழியில் தவம் செய்வதே சன்மார்க்க நெறி! ஒளியை பிடிக்க காற்றை ஊதுபவன் அறிவிலியே! வள்ளலார் எங்கே பிராணாயாமம் செய்ய சொன்னார்? திருவருட்பாவை நன்றாக படியுங்கள்!

உன் ஜீவனை, பிறந்து இறந்து துன்பப்படும் உன் ஜீவனை சற்றேனும் கருணையோடு பார்!? உன் ஜீவனை இரட்சிக்க நீ தவம் செய்ய வேண்டும். ஜீவன் - ஆத்துமா - உயிர் - பிராணன் எங்குள்ளது. நாம் எப்படி அறிவது அடைவது அதற்கு எப்படி தவம் செய்ய வேண்டுமோ அந்தப் படி செய்து உன் ஜீவன் மோட்சம் பெற நடந்துகொள்! இதுவே வள்ளலார் உரைத்த "ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்" என்பதாகும்! சாப்பாடு போடுவது சாதாரண மனிதநேயம்! வள்ளலார் சொன்னது ஆன்மநேயம்!! முதலில் உன் ஆன்மாவை கடைத்தேற்ற நல்ல ஒரு குருவைத் தேடி உன் நடுக்கண்ணை திறந்துகொள்! பின் உலகிலுள்ள எல்லா ஆத்மாக்களும் கடைத்தேற ஞானவழி விழிகாட்டு! ஞானதானம் செய்! இதுவே நீ மோட்சம் பெற வழியாகும்! "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்!" உலகர் ஆத்மாக்கள் கடைத்தேற நீ வழி - விழி காட்டினால் ஞான தானம் செய்தால் ஞானிகள் மகிழ்ந்து நீ ஞானம் பெற நல்லருள் தருவார்கள்! ஞானதவம் செய்! ஞானதானம் செய்!

வள்ளலாரைப் போல வேஷம் போட்டு திரிய வேண்டாம்! வள்ளலார் சொன்னபடி, ஞானசரியையில் சொன்னபடி திருவருட்பாவில் கூறியபடி ஞானதவம் செய்! உன் உள்ளொளி பெருகிட தவம் செய்! எழுமின்! விழிமின்! இது சுவாமி விவேகானந்தர் கூறியது! பசித்திரு! தனித்திரு! விழித்திரு! இது வள்ளலார் கூறியது!

கண்ணை மூடி தவம் செய்வது ஞானம் பெற வழியில்லை! தகுந்த குரு மூலம் தீட்சை பெற்று கண்ணை திறந்துதான் - விழித்திருந்து தான் ஞான தவம் செய்ய வேண்டும்! "கண்மூடி பழக்கமெல்லாம் மண்மூடி போக" என வள்ளலார் கூறிவிட்டார்! படிக்கவில்லையா நீங்கள்!?

"நடுக்கண் புருவபூட்டு கண்டு களிகொண்டு திறந்துண்டு நடுநாட்டு!" வள்ளலார் உரைத்த ஞானம் இதுதான்! எல்லா ஞானிகள் கூற்றும் இதுவே! ஏனைய கோவில் திருவிழா போலல்ல தைப்பூச திருவிழா! ஞானம் பெற வழிகாட்டும் அற்புத திருவிழா! இங்கே வந்து வீணே காலத்தை கழிக்காதீர்! ஞானம் பெற வழி தேடுங்கள்! கிட்டும்!

சன்மார்க்க சங்கத்தவரே, தைப்பூச விழா கொண்டாடும் நீவீர், வைகாசி - 11, தர்மச் சாலை விழா கொண்டாடும் நீவீர், புரட்டாசி சித்திரை - குருபூஜை என கொண்டாடாமல் விட்டது ஏனோ?! இதற்கு கூட ஞானம் இல்லையே!? அன்னதானம் போடு என சொல்ல ஒரு ஞானி வரவேண்டியதில்லை! ஆத்மஞானம் பெறவே, வழிகாட்டவே, விழிகாட்டவே வள்ளலார் வந்தார்!! புரிகிறதா!

சாகாதவரே சன்மார்க்கி!
சாகா நிலைபெற்ற ஒளியுடன் பெற்ற ஒப்பற்ற ஞானியே நம் வள்ளலார்
சாகாக்கல்வி உரைத்த மகானுபாவர் அருள்வள்ளலே நம் வள்ளலார்
வள்ளலார் பெயர் சொல்லவே நாம் முற்பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்
எல்லோரும் பெறலாம் ஞானம்!

கன்னியாகுமரி தங்கஜோதி ஞான சபை
,
வடலூர் சத்திய ஞானசபையின் ஜோதி தரிசனத்தை விளக்கி,
திருவடியான் உங்கள் கண்களை திறந்திட வழிகாட்டும்!

உலகிலேயே ஒரே மெய்ஞ்ஞான இணையதளம் www.vallalyarr.com
உலகம் முழுவதும் சன்மார்க்க நெறியை பரப்பி வருகிறது! யாரும் பார்க்கலாம்!
உன்னுள்ளே இருக்குது உலகம்!!


"ஞான தானம் செய்வீர்!"
  
"ஞான தவம் செய்வீர்!"  
"வள்ளலார் பிறந்தநாளை குருபூஜை என புரட்டாசி சித்திரையில் கொண்டாடுக!"
"மரணமிலா பெருவாழ்வு வாழலாம்!"

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா


வெள்ளி, 17 அக்டோபர், 2025

“எழுத்தறிவித்தல்” உத்தமமான காரியம் !

இறைவன்🔥 மெய்ப்பொருளாக நம் உடலிலே இருப்பதையும் அதை அடைய👁️🔥👁️ கண் ஒளி மூலம் தவம் செய்ய வேண்டும் என்பதையும் எல்லோருக்கும் உரைப்பதே ஞானதானம்!

ஒளவையார் கூறிய, "தானமும் தவமும் தான் செய்தல் அரிதே" என்பது இந்த ஞானத்தை கூறுவதும், மெய்ப்பொருள்👁️🔥👁️உணர்ந்து தவம் செய்வதுமேயாகும்!

இதை தான் வள்ளலார், ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்" என்றார்.

இதையேதான் மகாகவி பாரதியாரும், " அன்னசத்திரம் ஆயிரம் கட்டலைவிட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் நன்று" என்று அழகாக கூறியிருக்கிறார் !

ஒரு அன்னசத்திரம் கட்டி ஆயிரம்பேர்களுக்கு அன்னதானம் கொடுக்கலாம் ! ஆயிரம் அன்னசத்திரம் கட்டினால் பத்துலட்சம் பேர்க்கு அன்னதானம் கொடுக்கலாமல்லவா ?

இது ஒன்றும் பெரிய விஷயமல்ல !? இதைவிட மேலானது என்ன தெரியுமா ?

பல லட்சம் பேர்களுக்கு அன்னதானம் கொடுப்பதை விட ஒருவனுக்கு “எழுத்தறிவித்தல்” உத்தமமான காரியம் !

👁️🔥👁️

எது எழுத்து ? 👁️அ, உ👁️ ஆகிய எட்டும் இரண்டுமே எழுத்து - ஞான எழுத்தாம் ! இந்த ஞான எழுத்தை அறிவிப்பதே, ஞானதானம் செய்வதே அரிதினும் அரிதாம் !

மனிதனாக பிறப்பது,நல்லபடியாக பிறப்பது,
ஞானக்கல்வி அறிவது உணர்வது ஞானதானம் செய்வது

இதை தான் அரிதினும் அரிதாக சொல்கின்றனர் எல்லா ஞானிகளும்! ஞானதானமே, அரிதினும் அரிதான, அதி உன்னதமான தானத்தில் சிறந்த அன்னதானத்தை விடவும் சிறந்தது ஆகும்.

பக்கம் - 71,72

உலக குருவின் திருவடிகளே சரணம்

ஞான சற்குருவின் திருவடிகளே சரணம்







www.vallalyaar.com

செவ்வாய், 21 ஜனவரி, 2020

ராமானுஜர் - ராமலிங்கர் - ரகசியம்

மஹானுபவர் ஸ்ரீ ராமானுஜர் தன் குரு தனக்கு உபதேசித்த அஷ்டாச்சர மந்திரத்தை
நீ  வெளியே சொன்னால் நரகத்திற்கு தான் போவாய் இது ரகசியம் என்று உரைத்ததை  மீறி
உலகர் எல்லோரும் சொர்க்கத்திற்கு போகட்டும் என்று ஊர் நடுவே கோபுரம் ஏறி
கூறினாரே அவரல்லவா ஞானி! தான் நரகத்திற்கு போனாலும் பரவாயில்லை
என்று மூட குருவின் வார்த்தையை மீறி சொன்னாரே! அவரல்லவா கருணைக்கடல்!
அவர் உலகர் மீது கொண்ட அன்புக்கு ஈடேது!!

மந்திரத்தை சொன்ன ராமானுஜரே கருணை கடல் என்றால் இறைவனை அடைய
இதுவரை ரகசியமாக சொன்னவற்றை வெளிப்படுத்திய வள்ளலார் ஸ்ரீ ராமலிங்கர் யார்?
கடவுள் யார்? எப்படி இருக்கிறார்? நம் உடலில் கண்ணில் ஒளியாக இருக்கிறார். நம்
சிர நடுவில் ஆத்ம ஜோதியாக துலங்குகிறார் !  அதுவே சத்திய ஞான சபை விளக்கம்!
தை பூச ஜோதி தரிசன விளக்கம் என்று உரைத்த வள்ளலார் மனித குலத்தை உய்விக்க
வந்த மகாஞானியல்லவா இதை உலகம்  உணர வேண்டாமா?

பக்தியால் பண்படும் மனிதன் இறைநிலை அறிய  உணர அடைய வழி-விழி காட்டுகிறார்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் - ஞானம் பெறுவதிழும் வந்தது வள்ளலாரால்!
மனிதன் மனிதனாக வாழ வழிகாட்டுவதே நம் நாட்டில் ஆதியில் இருந்து வந்துள்ள
தர்ம நெறியாகும்! அறநெறியாகும்! அப்படி வாழ்ந்த மனிதன் தன்னை படைத்த பரம் பொருளை
அறிவதே, உணர்வதே திருவடியை அடைவதே பரிபூரண நிலையாகும்! இதை நம் நாட்டில் காலம் அறியப்படாத

பல யுகங்களாக சொல்லி வந்தனர் ஞானிகள் பலர்! இதை தான் சனாதன தர்மம் என்றனர்!
இதைத்தான் வள்ளலாரும் ஸ்ரீ ராமலிங்கரும் சன்மார்க்கம் என்று பெயரிட்டு உபதேசித்தார்
வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபில் யானும் ஒருவனன்றே என பணிவாக கூறுகிறார் வள்ளலார்!

வள்ளலார் உரைத்த சன்மார்க்க நெறி வேதத்தில் சொல்லபட்டதுதான்! 18 புராணங்களில் உபநிஷத்துகளில் சொல்லபட்டதுதான்! இதுவரை இவ்வுலகில் தோன்றிய ஞானிகள் சொன்னது தான்! இயேசு பிரான் பைபிளில் சொன்ன ஞானம்! முகமது நபி பெருமான் குர்ஆனில் சொன்ன ஞானம்! திருமூலர் திருமந்திரத்தில் சொன்ன ஞானம்! மணிவாசகர் திருவாசகத்தில் சொன்ன ஞானம்! தேவாரம் திருக்குறள் இன்னும் எத்தனையோ மகன்களின் ஞானம்! குணங்குடி மஸ்தான் உரைத்த ஞானம் ! தக்கலை ஞான மாமேதை பீர்முகமது உரைத்த ஞானம் ! எல்லார் உரைத்த ஞானமும் சன்மார்க்கமே!

www.vallalyaar.com

வெள்ளி, 24 அக்டோபர், 2014

மனதை நிறுத்தும் இடம் அது புறப்படும் இடமே!


இறைவனை உணரவும் நொந்து வாழாமல் வாழ்வாங்கு வாழவும் ஓர் வழி-உபாயம்  உள்ளது!

அது நம் மனம் அடங்கும் இடத்தில் தவம் செய்வது ஆகும்! அதாவது நம் கண்மணி வாசலில் உள்ள சவ்வே நம் வினை நம் வினைத் தொகுதியான விதி! அதிலிருந்து செயல்படுவதே மனம்!

கண்மணி வாசலில் இருந்து விதியாகிய சவ்விலிருந்து புறப்படும் மனதை வெளியே வர விடாது அதை அதிலேயே நிறுத்துவது தான் சாதனை!  தவமாகும்! மனதை நிறுத்தும் இடம் அது புறப்படும் இடமே! அங்கு மட்டுமே மனம் அடங்கும்! நாம் நம் மனதை அங்கு மட்டுமே நிறுத்த முடியும்!  இப்படி செய்து சும்மா இருப்பதுவே ஞான சாதனை! பரம ரகசியம்!

இது தெரிந்த அறிந்த உபதேசிக்கும் குருமார்களை வணங்கிடவும் தெரியவில்லையே!

எந்தை இறைவன் இருக்கும் மணிமன்றம் கண்மணி உள் போக தெரியவில்லையே! ஞான சற்குரு மூலம் தீட்சை பெற்று தவம் செய்தால் உட்புகலாம்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ் - திருவருட் பாமாலை (106)

ஞாயிறு, 28 ஜூலை, 2013

சோமாஸ்கந்த தத்துவம்

"உச்சிக்குக்  கீழது உண்ணாக்கு மேலது
வைச்ச பதமிது வாய் திறவாதே




என்று திருமூலர் கூறி வாய்திறவாதே சும்மா இரு என்றார்! இடது கண்ணில் தவத்தை ஆரம்பித்து சக்தியில் தொடங்கி வலது கண்ணிலே  தவத்தை தொடர்ந்து சிவத்தோடு சேர்ந்தால் பிறக்கும் நம் இரு கண்ணொளி! ஆறுமுக இரு கண்ணொளி அதுதான் முருகன்!

இதுதான் சிவனும் சக்தியும் முருகனும் சேர்ந்த சோமாஸ் கந்த தத்துவம்! வள்ளலாரின் முதல் அனுபவம் ஞான தவம் இதுவே! கண்ணாடியில் தன் கண்ணை பார்த்துத்தானே தவம் செய்தார்! தன் உருவம் மறைந்தது! ஒளி பொருந்திய இரு கண் மட்டுமே தெரிந்தது! ஆறுமுகங் கொண்ட திருத்தணிகை முருகன் தோன்றினார்! நம் இரு கண்ணே ஆறுமுகம்! எல்லோர்க்கும் கிடைக்கும் முதல் ஞான அனுபவம் இது !

தத்துவத்தையும் அனுபவத்தையும் போட்டு குழப்பிவிடாதீர் !
அனுபவத்தை கூறவே தத்துவம்! 

சிந்தித்தாலே தவம் செய்தாலே தத்துவம் புரியும்! தவம் செய்யாதவருக்கு கதையே! புராணமே ! தவம் செய்யாதவர்கள் உடல் வளர்ந்த குழந்தையே ஆவர்!

மூலாதாராம் கீழே என்றால் அவனுக்கு காமமே மிச்சம்! கடைதேருவது கடினம்!

நாம் இடகலையில் ஆரம்பித்து வலக்கலையில் ஸ்திரமாக நிற்கணும்! நடராஜர் இடது காலை ஊன்றி நிற்பது போலே! நின்றால்; மேலே ஒளியும் ஒலியும் காணலாம் கேட்கலாம் ! நம் ஞான தவ நிலையை குறிப்பதே நடராஜ தத்துவமாம்! இதுவும் சிதம்பர ரகசியம்தான்!

தவத்தால் கண்ணில் மணியில் ஒளியை நினைத்து உணர்பவருக்கு அக்னி உருவாகும் !

அந்த உஷ்ணம்  சுத்த உஷ்ணம் ! அந்த சூடால் உடல் பாதிக்காது ஜோதி சூழ்ந்து வரும் ! குளுர்ச்சி பொருந்திய நெருப்பு! சந்திர ஒளி போல!

இந்த ஜோதியால் சகஸ்ராரம் பூரித்தால் நம்மும்மலம் மட்டுமல்ல உச்சியில் உள்ள  கோழை என்கின்ற மலமும் கழியும்! வினையகலும் அமுதம் பருகலாம்! ஞானம் பெறலாம்!

திருமந்திரம் மட்டுமல்ல எல்லா சித்தர்களும் ஞான அனுபவங்களை தெளிவாக கூறி நாமும் ஞானம் பெற வழி காட்டியுள்ளனர்!



- ஞான சற்குரு சிவசெல்வராஜ்

இறைவனுக்கு ஓரவஞ்சனையா?

 பற்பல காலம் தவம் செய்து உடலை வருத்தி செய்யும் தவ முனிவர்கள் பலர் இருக்க இறைவன் மாணிக்க வாசகருக்காய் இரங்கி அருள் புரிந்து ஆட்கொண்டாராம். ஏன் ? இறைவனுக்கு இந்த ஓர வஞ்சனையா?




யார்?எப்படி? தவம் செய்தார்கள்? என இறைவன் பார்க்கிறார்?! பூடம் தெரியாமல் ஆடுகிறார் என எங்கள் ஊரில் சொல்வார்கள்! இறைவன் எங்கு இருக்கிறார் எப்படி இருக்கிறார் எப்படி அடைவது என தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு தவம் செய்பவருக்கு(இது தவமா?) எப்படி இறைவன் அருள் கிட்டும்!


குருட்டு பூனை கிணற்றிலே விட்டத்தை தாண்டிய மாதிரி தான்! இப்படி கண்னை  மூடி - கண்மூடித்தனமாக தவம் செய்பவர்களை தான்  திருமூலர் இவ்வாறு கூறுகிறார் 'எண்ணாயிரத்தாண்டு தவம் செய்யினும் கண்ணார் அமுதினை கண்டவாரில்லை' கண்ணார் அமுதினை அறிந்து கண்டுணர்ந்து கண் திறந்து நீதவம் செய்தாலே காண்பாய் கடவுளை!

அதற்க்கு நீ முதலில் கட-உள்ளே , உன் கடமாகிய உடம்பினுள்ளே புக வேண்டும்! எப்படி கண்மணி வழி! அது தான் ஒரே வழி! அது அறிய ஞான சற்குருவை நாடு ! காவி உடுத்து உடலெல்லாம் திருநீறு பூசி  நீண்ட சடாமுடி, தாடி வளர்த்து , உத்திராட்சமாலை அணிந்து , உடலை வெறுத்து, பட்டினி கிடந்து , காய் கனி புசித்து இருப்பதால் யாதொரு பயனுமில்லை !

"ஜீவ ஒடுக்கம் பூதவொடுக்கம் ஒரு சேர உதிக்கும் சீதள பத்மம் தருவாயே"என  அருணகிரிநாதர்  முருகப்பெருமானை திருப்புகழ் பாடி வேண்டி பணிகிறார்!

வேஷம் போட்டு ஏமாற்றுபவர் தான் அதிகம் பேர் உலகிலே! நம் ஜீவன் ஒடுங்கியிருக்கும் இடம்  ஐம்பூதங்களும் ஒன்று சேரும் இடம் சீதள பத்மம் - குளிர்ச்சி பொருந்திய  தாமரை மலர் போன்ற உன் திருவடி தருவாயே! இரு கண்களில் தானே ஐம்பூதங்களும் உள்ளது. இறைவன் திருவடி தானே நம் இருகண்கள் ! இரு கண்வழி தானே உள்ளே நம் ஜீவன் ஒடுங்கியிருப்பதை காண முடியும்!

ஞான சற்குரு மூலம் கண்ணை அறி  - உன்னை அறி! அதை விடுத்து வேறு எதை செய்தாலும் கிட்டாது ஞானம்! இல்லை, இறைவன் தான் வர வேண்டும்! இறைவன் இறைவனே உன்னை தேடி வரவேண்டுமெனில் மாணிக்க வாசகரை போல உத்தம பக்தனாக சதா சர்வ காலமும் இறைவனையே எண்ணி வாழ்!  நிச்சயம் வருவார் நம்புங்கள்! தேவரும் மூவரும் காண திருவடியை நீ காண உத்தமனாகு!

உண்மை அறி ! உன் மெய் அறி! மெய் என்றால் சத்தியம் - நித்தியம் - அழியாது - அது மெய்ப்பொருள்! அதுவே இறைவன்! உற்றுப்பார் உன்னிலே !




- ஞான சற்குரு சிவசெல்வராஜ்

திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.

வியாழன், 4 ஜூலை, 2013

மனதை நிறுத்தும் இடம் ?


மதி என்றால் சந்திரன் நமது இடது கண்! நமது கண்ணில் பிறக்கும்போதே விதிக்கப்பட்ட கர்மாக்கள் சேர்ந்தே கண்மணியோடு உள்ளது! அதையே விதி பிராரப்தம் என்பர்! அந்த மத்தியில் உள்ள விதியை இல்லாமல் செய்தாலே வாழ்க்கை மேம்படும்!

இறைவனை உணரவும் விதியை நொந்து வாழாமல் வாழ்வாங்கு வாழ ஒரு வழி  - உபாயம் உள்ளது. அது நம் மனம் அடங்கும் இடத்தில தவம் செய்வது ஆகும்  அதாவது நம் கண்மணி வாசலில் உள்ள சவ்வே நம் வினை தொகுதியான விதி! அதிலிருந்து செயல் படுவதே மனம் !

கண்மணி வாசலில் இருந்து விதியாகிய சவ்வில் இருந்து புறப்படும் மனதை வெளியே வர விடாது அதை அதிலே நிறுத்துவது தான் சாதனை! தவமாகும்! மனதை நிறுத்தும் இடம் அது புறப்படும் இடமே! அங்கு மட்டும்  தான் அடங்கும். நாம் நம் மனதை அங்கு மட்டுமே நிறுத்த முடியும்.இப்படி செய்து சும்மா இருப்பதுவே ஞான சாதனை !  பரம ரகசியம்!

இதை தெரிந்த அறிந்த உபதேசிக்கும் குருமார்களை வணங்கிடவும் தெரியவில்லையே! எந்தை இறைவன் இருக்கும்  மணிமன்றம் - கண்மணி உள் போக தெரியவில்லையே ! ஞான சற்குரு மூலம் தீட்சை பெற்று தவம் செய்தால் உட்புகலாம்!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ மரணமில பெருவாழ்வு பெற்றிட வள்ளலார் வள்ளலார் நம் கண்மணியே மெய்ப்பொருள் என்றும் மணி ஒளியே  சிவம் என்றும் ஞான ரகசியங்களை வெளிப்படுத்தினார்! வருக எல்லோரும் வாழ்வாங்கு வாழலாம்!

-ஞான சற்குரு சிவசெல்வராஜ்

புதன், 1 மே, 2013

நித்தம் பிறந்த இடத்தை தேடுது மனம்!!


சிற்றம் பலமுஞ் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலந்தேடி விட்டோமே - நித்தம்
பிறந்திடத்தை தேடுதே பேதைமட நெஞ்சம்
கறந்திடத்தை நாடுதே கண்  - "பட்டினத்தார் "





ஆன்மாக்களே , இந்நூலை(கண்மணி மாலை) நீங்கள் சரியாக படித்து உணர்திருப்பீர்களானால் இந்த பாடலுக்குரிய ஞான விளக்கத்தை சரியாக புரிந்து கொள்வீர்கள்!

அதை விடுத்து இந்த பாடலை நீங்கள் ஆபாசமாய் நினைத்தால் உங்களுக்கு இது எதுவுமே புரியவில்லை என்று பொருள். சிந்தித்து பாருங்கள். சிற்றம்பலமும் சிவனும்  அருகிருக்க - சிற்றம்பலம் ஆகிய கண்ணும் அதில் ஒளியாக நின்றிலங்கும் சிவனும் அருகிருக்க வெற்றம்பலந்தேடி விட்டோமே - ஒன்றும் இல்லாத வெருமையான வெளியிடங்களை தேடி விட்டோமே; நித்தம் பிறந்த இடத்தை தேடுகிறது. நாம் பிறந்த இடம் எது?

நாம் ஜீவாத்மாக்கள் அல்லவா? நாம் பரமாத்மாவிலிருந்துதானே பிறந்தோம்! நமது பேதை மனம் தினமும் நாம் பிறந்த இடமாகிய பரமாத்மாவையே தேடுகிறது எனக்கூறுகிறார்! கீழான இடத்தை நினைக்காதீர்கள்.கறந்திடத்தை நாடுதே கண்- நமது சூரியனும் சந்திரனும் ஆகும் அல்லவே?  இந்த இரு ஒளிக்களைகளும் அகமுகமாக அக்னி கலையோடு கூடும் போது நாம் நம் ஜீவனை ஒளியாக நம் முன்னே காணாலாம்! நாதத்தொனி கேட்கலாம்! பின்னர் நமக்கு இறைவன் பிரசாதமாக சகஸ்ராரத்திலிருந்து அமுதம் சொட்டும். அந்த மங்காத பால் கறக்கும் இடத்தையே நம் கண் நாடுதே என பட்டினத்தார் கூறுகிறார். எவ்வளவு உயர்ந்த ஞானம்! தவறாக பொருள் கொண்டு மோசம் போகாதீர். எல்லா ஞானவான்களும் மிக உயர்ந்த பொருளையே - இறைவனையே - அடையும் வழியை கூறுகின்றனர்.

எனவே "மெய்ப்பொருளை " உணருங்கள் ! "திருவடியை" சரணடையுங்கள்! "கண்மணிமாலை" யைப்பற்றி கனிந்து நில்லுங்கள் ! மரணமிலா பெருவாழ்வு வாழலாம்!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி

மே தினத்தன்று ஓர் சங்கல்பம் செய்வோம். நம் உயிரை காண, தன்னை உணர பாடுபடுவோம். வாழ்வில் உள்ள அணைத்து பிரச்சனைகளுக்கு முற்று புள்ளி வைப்போம். நமது கர்ம வினையே நமது உயிரை மறைத்து உள்ளது. அதுவே வாழ்வில் உள்ள அணைத்து துன்பத்துக்கும் காரணம். அதை நாம் செய்யும் தவத்தின் மூலம் அழித்து, உயிரை கண்டு - நம்மை கண்டும் பேரின்பமாக வாழ்வோம்.
திருவடி உபதேசம் தீட்சை பற்றி தெரிந்து கொள்ள 

வியாழன், 18 ஏப்ரல், 2013

சிவம் - சக்தி




யாமொன் றிரண்டு நீயென்றா-----பாடல் 120
(இங்கித மாலை - திருஅருட்பா)

யாம் ஒன்று நீ இரண்டு என இறைவன் கூறினாராம். எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே! அவர் எங்கும் நிறைந்துள்ளார்! நம் உடலிலும் உயிராக இருப்பவர் அவரே! அவர் நம் சிரநடுவிலும், தலைமத்தி உள்ளிலும் இரு இடங்களில் துலங்குகிறார்.

அதாவது நம்தலை உச்சி ஒரு இடம்! உச்சிக்கு கீழே அண்ணாவுக்கு மேல - அக்னிகலை ஒரு இடம்! ஆக இரண்டு இடம்.

கீழே சிற்சபை மேலே பொற்சபை. சிற்சபைக்கு போக இருவாசல் இருகண்கள்!

யாம் ஒன்று நீ இரண்டு என்பது இவ்வாறே! இரண்டைபிடித்தால் தான் ஒன்றை அடைய முடியும்! சிவம் வேறு சக்தி வேறாக இருக்கும் நாம் சிவசக்தியாக வேணும்!

சூரிய சந்திரனாக விளங்கும் நம் இரு கண்ணும் உள்ளே அக்னி கலையில் ஒன்றாக வேண்டும். நாம் இரண்டாக இருக்க காரணம் நம்மும்மலங்களே! தவம் செய்து மும்மலங்களை எரித்து விட்டால் ஒன்றாகி விடலாம்! ஒன்றான பின்பே ஒன்றலாம் ஒன்றான இறைவனுடன்! ஒன்றேசெய்! நன்றேசெய்! இன்றேசெய்!

சனி, 16 மார்ச், 2013

வாலை தாய் தருவாள் அமுதம்!!.

அறிந்து பார் ஆதாரப் பொருளைப் பற்றி
வெளியான சோதியிலே  மேவி நில்லு
வருந்தியந்த வாலை ரசங்கொண்டு  - அகஸ்தியர் பரிபூரணம் 1200


ஏ , மனிதா அறிந்து பார்! நல்ல சற்குருவை நாடி உபதேசம் கேட்டு
தெளிந்து பார் ! எது எல்லாவற்றுக்கும் ஆதாரமானது என்று?

அந்த மூலபொருள், மெய்ப்பொருள், ஆதாரப்பொருள் நம் கண்மணி ஒளியை பற்றி நின்று நிலைத்து தவம் செய்க!

தொடர்ந்து விடாமல் சதா காலமும் செய்பவன் சீக்கிரம் ஒளியை காண்பான்.! தன்முன் வெளியான தனக்குள் இருந்து தன முன்  தன் முன் தோன்றிய ஒளியை காண்பான்!

கண்டு அதிலேயே லயித்தால் மனம் ஒன்றி வேறு சிந்தனை ஏதுமின்றி இருந்தால் உன்னை நீ காண்பாய் !

ஞானம் பெறுவாய்! உன்னுள் இருக்கும் உத்தமனை காண்பாய்! அப்போது வாலை ரசம் கிட்டும்! வாலை தாய் தருவாள் அமுதம் ! அனுபவம்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ் (ஞானம் பெற விழி )

சனி, 2 மார்ச், 2013

ஜோதி ஐக்கூ


101 ஐக்கூ  கவிதைகள் 101 தெய்வ திருவுருவங்கள் தாங்கி வருகிறது.

முதலில் ஆதிகுரு ஸ்ரீ தட்சணாமூர்த்தி ,

இரண்டாவது ஆதி சித்தர் ஸ்ரீ சிவன்,

மூன்றாவது சித்தன் ஆகிட அமுதம் தரும் தாய் வாலை கன்னியாகுமரி  ஸ்ரீ பகவதி அம்மன்

நான்காவது சித்தன் என உறுதி தரும் தேவ சேனாதிபதி செந்திலாண்டவர்

ஐந்தாவது கலியுக காவலன் ஞானவான் சிரஞ்சீவி ஸ்ரீ ஆஞ்சநேயர்

ஆறாவது பக்தன் சொல்ல பரமன் எழுதிய ஒப்பற்ற திருவாசகம் உரைத்த
ஞானி ஸ்ரீ  மாணிக்கவாசகர்

தொடர்ந்து 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் 20 சித்தர்கள் ஆக 101 தெய்வ திருஉருவங்கள் - இந்நூலை அலங்கரிக்கின்றது. இது அடியேன் செய்த புண்ணியமே!

ஜோதி ஐக்கூ அந்தாதி இரண்டாம் பதிப்பு ஹோசூர் அன்பர்களால் வெளியிடப்படுகிறது. வள்ளலார் அவர்கள் ஆற்றும் ஆன்மீக பணிக்கு உறுதுணையாக இருக்கிறார் என்பதை உணர்கிறேன்!

என்னையும் ஒரு பொருட்டாக கருதி இப்பணி செய்ய வைத்துகொண்டிருக்கும் உலக குரு திருவருட் பிரகாச வள்ளலார் பொற்பாத கமலங்களுக்கு ஆயிரம் ஆயிரம் வந்தனம்! வந்தனம்!



புதன், 13 பிப்ரவரி, 2013

சமாதியில் மூழ்கினால் குரு எழுப்பி விடுவார்!!



தூக்கத்தில் மனம் ஒடுங்கும்!

ஞான தவம் செய்யும் போது மனதும் பிராணனும் ஒடுங்கும்!

மனம் செம்மையாக பக்தி செய்!
ஞான நூற்களை படி!
கோவிலுக்கு போ!
புண்ணியர்களை தரிசனம் செய்!
சத்சங்கத்தில் கூடு!
எல்லாவற்றிக்கும் மேலாக தாயை பணி!
வாலையை பணி! கன்னியாகுமரிக்கு வா!
பகவதியம்மனை வணங்கு!
அருள் பெறுவாய்! ஞானம் பெறுவாய்!
துர்க்குணங்கலில் இருந்து மனம் விடுபடும் !
நம்மை பெற்றவள் வாலை!
நம்மை வளர்ப்பவள் வாலை!
நம்முள் இருந்து  வாழ வைப்பவளும் வாலையே!
அந்த வாலையை பணிய வேண்டாமா?
அருள் பெறவேண்டாமா?

மனம் ஞான தவத்தால் செயலற்றால் பிராண சக்தி வெளிப்படும்a!
மேலும் மேலும் தவம் தீவிரம் ஆகும் போது  பிராணனும்
நிலை பெறும் ஒடுங்கும்! இதுவே சமாதி!

இங்ஙனம் சமாதி கூடி சமாதி கூடி தவம் செய்து கொண்டே வரவேண்டும்! ஒரே அடியாக சமாதி அனுபவத்தில் ஆழ்ந்து விடக்கூடாது!

இதற்குதான் தக்க  குரு வேண்டும் என்பது! சமாதியில் மூழ்கி விட்டால் குரு எழுப்பி விடுவார்!

ஏனெனில் குரு தீட்சை பெற்றது முதல் உன்னுடன் சூக்சும நிலையில் உன் ஞானசற்குரு கூடவே இருப்பதால்!? சமாதி ப்பழக்கம் பழக்கம் அல்ல
சகஜ ப்பழக்கமே பழக்கம் என வள்ளல் பெருமான் தெளிவாக ஞான
வழியை கூறுகிறார்!

சமாதி அனுபவம் பெறு! சமாதியில் போய்  போய் வா! சமாதிக்கும் மேலான ஞான நிலை பெறுவது தான் நம் ஒரே லட்சியம்!? நம் உயிரான வாலை தாயின் அமுதம் பருகனும்! பேரொளியோடு ஒளியாக , அருட்பெருஞ்சோதி யோடு நம் ஆத்ம ஜோதியை இரண்டற கலக்க வேண்டும்!! இதுவே ஞான நிலை!

அப்போது தான் மோட்ச பிராப்தி ! கடவுள் மயமாதல் ! நான் அதுவாதல் !நான் வேறு அது வேறு இல்லாத ஒன்றான நிலை! இரண்டும் ஒன்றிய ஞான மோன நிலை!

திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.


               

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

முதிர்ந்து நின்ற ஆறு ஆதாரங்கள்!!




நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள் பற்றித்தான் யோக சாஸ்திரங்கள் கூறுகின்றனர். "மூல முதல் ஆறுதலம் கீழே தள்ளி முதிர்ந்து நின்ற மேலாறுதலம் காணு காணு" என சித்தர் பெருமக்கள் கூறியுள்ளனர்.

ஞான அனுபவ நிலைகள் நம் உடலில் தலைபகுதி மட்டுமே! கழுத்துக்கு கீழேயிருப்பது எல்லாம் கர்மாவை செய்பவனயாகும். தலைப்பகுதியிலுள்ள பன்சேந்திரியங்களும் கர்மேந்திரியங்கள்தான். 

தவ நிலையில் கர்மேந்திரியங்களும் மெய், வாய், கண் மூக்கு, செவி எல்லாம் ஞானேந்திரியமாக மாறிவிடுகிறது.

ஐம்புலன்களும் புறத்தே(வெளியே) செயல் படுகின்றது, ஞான சாதகன் தவம் செய்வது புறத்தே அலைவதை நிறுத்தி அகத்தே(உள்ளே) திருப்புவதுதான். இவை அனைத்தும் மனதின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மனம் செம்மையானால் வாயால் மந்திரம் சொல்ல தேவை இல்லை, மூக்கால் காற்று இழுக்க தேவை இல்லை. காதில் தோத்திரம் கேட்க தேவை இல்லை. கண்மூடி வாசியோகம் செய்ய தேவை இல்லை. உடலால் எந்த பணியும் செய்ய தேவை இல்லை. ஐம் புலன்களை வைத்து  புறத்தே செய்யும் எச்செயலும் ஞான நிலையல்ல!

ஐம் புலன்களும் ஐம் பூதங்களும் ஒன்று சேரும் இடத்தில் இவற்றை ஆட்டிப்படைக்கும் இவற்றை ஆட்டி படைக்கும் மனதை இருத்தினால் போதும். ""பொறிவாயில் ஐந்துவித்தான் பொய் தீர் ஒழுக்க நெறி நெறி நின்றார் நீடு வாழ்வார்" ஐம் பொறிகளின் வாயில் - வாசலில் - கண்ணில் ம்புலன்களை - ஐம்பூதங்களை சுட்டு எரித்தவன் அவித்தவன் - உஷ்னத்தால் நீற்றுபவன் , சத்தியமாக நீடு வாழ்வான் - சாகமாட்டான்.

நம் கண்களில் உள்ள ஒளியை பெருக்க பெருக்க ஒளி ஓங்கி எல்லா மலங்களும் கொஞ்சம் கொஞ்சமாக சுட்டு எரிக்கப்பட்டு விடும். புற செயல்கள் அற்று போக போக உள் முகமாக  ஒளி அலைகள் பாயும். உள்ளே அக்னிகலையை அடையும். இது தான் சாதனை.

"சுட்ட சுடுகாடும் வெளியும் அதுவேயாகும்" என சித்தர் கூறுகிறார். நம் மும்மலம்களும் சுட்டு எரிக்கப்படும் சுடுகாடு நம் கண்கள்.

அங்கே தானே நெருப்பு உள்ளது. உள்ளே போனால் பெருவெளி- வெட்ட வெளிதான்.  இதைதான் இன்னொரு சித்தர் ஊசி முனை காடு என்றார்.  ஊசி முனைக்குள் சென்றால் பெரும்காடுதான். காட்டில் தானே காட்டாறு சாரைப்பாம்பு காட்டானை எல்லாம் இருக்கும்!? இவை அனைத்தும் பரிபாசையாக சொல்லப்பட்டதே. ஆறுகுள்ளே சென்றால் நெருப்பாருதான்!
மூலாதாரம் கீழே என்பார் அறிவிலிகள்.

மூல முதல் ஆதாரம் ஆறினையும் கீழே தள்ளி முதிர்ந்து நின்ற மேல் ஆதாரத்தையும் பாரு பாரு! ஆறுதலமாக ஆறுமுகமாக உள்ளது இரு கண்கள் . கண்ணே எல்லா ஆதாரத்திற்கும் மூலம். எல்லாவற்றுக்கும் மூலமான கண்ணே அதில் உள்ள ஊசிமுனை துவாரத்தின் உள் ஒளியே நம் ஜீவ ஒளி!


விநாயகர் அகவலில், மூலாதாரத்தில் மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்து என்று அழகாக பாடி உள்ளார் ஔவையார்! மூல ஆதாரம் கண். அதில் தவம் செய்வதால் எழும் கனல் பெரும்ஜோதியாக எழும்.கால் எனு பாதம், இறைவன் திருவடி. கண்ணாகிய மெய்ப்பொருளில் கருத்து வைத்தால் கனல் மூண்டெழும்.  எவ்வளவு அழகாக சொல்லப்பட்டு உள்ளது பாருங்கள்! கண்ணே இறைவனின் கால் திருவடி!


வினைகளுக்கு காரணம் கண்ணால் பார்ப்பதே! வினை வரக்கூடிய அம்சம் நம் கண்ணில் உள்ளது! அது என்ன? அது வெள்ளை விழி, கருவிழி  அடுத்து கண்மணி. கண்மணியின் மத்தியில் ஊசி முனை துவாரத்தை மறைத்து கொண்டு இருக்கும் மெல்லிய ஜவ்வு. இந்த ஜவ்வு தான் நாம் பார்க்கும் அனைத்துக்கும் காரணம். அது தான் நம் முன்வினை இருக்குமிடம். அதற்க்குத்தக்கபடிதான் இப்போது மனம் செயல்பட்டு மேலும் புதுப் புது  வினை உண்டாக்கும். இப்படியே போனால் இதற்க்கு முடிவு?

வள்ளல் பெருமான் உரைத்த ஞான சரியை வழி தான் தியானம். கண்மணியை நினைந்து நினைந்து கண்ணீரால் உடம்பு நனைந்து நனைந்து இருக்கும் போது கனல் எழும்பும். மனம் அங்கே நிற்பதால் புற செயல்கள் நடைபெறாது புது வினை உருவாகாது. மனம் கண்மணியில் நிற்க நிற்க கனல் ஓங்கி வளரும்.ஞான கனல் பெருகினால் முன் உள்ள ஜவ்வு கொஞ்சம் கொஞ்சமாக உருகி கரைந்து விடும். ஊசி முனை வாசல் அடைத்து கொண்டிதிருந்த ஜவ்வு கிழிந்தவுடன் கண் திறக்கும் என்று ஞானிகள் கூறி இருக்கின்றனர்.

இதுவே சாதனை! இது தான் நாம் செய்ய வேண்டிய தவம்.

ஞான சற்குரு சிவசெல்வராஜ்



திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.





வியாழன், 10 ஜனவரி, 2013

பிறப்பின் ரகசியம் என்ன ?

பிறப்புக்கு ஆதாரம் என்ன? வினை!! வினை 3 வகை. அதில் கொண்டுவந்த பிராரப்தத்தை கழிப்பது எப்படி? புதிதாக ஆகான்மியம் சேராமல் செய்வது எப்படி? நெறிப்படுத்துவது எப்படி? பகவத் கீதையில் கண்ணன்  சொன்னது என்ன?  100% வினை குறைந்தால் ஆன்மாவிற்கு விடுதலை.

நல் வினை தீ வினை அறுப்பது எப்படி? இருக்கும் குப்பை/வினை  வண்டி வண்டி யாக இருக்குது, புதிதாக சேராமல் இருப்பது எப்படி? வினை போகமே தேகம் கண்டாய்!

பாவிகளே மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபத்தில் இருக்கிறது.
நாம் எல்லாம் பாவிகள், ஏன்? கர்மவினை மூட்டை மூட்டையாக உள்ளது.

நமக்கு அறிவே கிடையாது ?  எப்படி ?

இறைவன் இருந்தால் அன்பு மயமாக கருணை மயமான வேலைகள் நடக்கும்.. அப்படி இல்லையே!வினை தீர்க்க என்ன வழி ? இதுவே முதல்பாடம். வினை எந்த ரூபத்தில் உள்ளது ?  எங்கு உள்ளது ? எப்படி அழிப்பது ?

நமக்கு ஒரு விரோதி உள்ளான். அவன் நம்மை விட பலசாலி. அவன் பக்கத்தில் செல்ல முடியாது? ஒரு போக்கிரி அடக்க போலீஸ் சென்று சொல்ல வேண்டும். அவனால் ஒருவருக்கும் நல்லது இல்லை, கெட்டதுதான். அப்புறம்என்ன செய்வது? என் கவுன்ட்டர் தான்!!  அப்படி தான்

நம்ம வினையும் உள்ளது, பலசாலியான இறைவனிடம் முறையிட வேண்டும்.இறைவன் தான் வினையில் இருந்து காக்க வேண்டும் .

இறைவனை நாம் காண முடியாதே? மனோ வாக்கு காயத்திற்கு உட்பட்டவன் மனிதன். குப்பையான வினை யை வைத்து கொண்டு இறைவனிடம் செல்லமுடியாது. குப்பையை நாம் தான் கழிக்க வேண்டும். தவம் செய்தால் வினை அழியும். இறைவன் திருவடியை பிடித்து கொண்டால் புதிதாக கர்மத்தை சேராது பார்த்து கொள்ளலாம்








அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன்
அமுதமும் உண்டேன டி - அம்மா
அமுதமும் உண்டேன டி ஆணி  -


திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.

திங்கள், 24 டிசம்பர், 2012

செத்தபின் ஏதடா மோட்சம்!?


நம் உடலில் உள்ள தசவாயுக்களில் ஒன்று தனஞ்சயன்! ஒரு மனிதன் இறந்தபின் அவன் உடலில் இருப்பது தனஞ்சயன் வாயு மட்டுமே!  உயிர் போன உடல் வீங்க செய்து அழுகச் செய்து புழுக்கூடாக்கி அழிப்பதே தனஞ்சயன் வாயுவின் வேலை! பிணத்தை எரிக்கும் போது டமால் என்ற சத்தத்துடன் பிணம் எழும்பும்! அதன் சிரசு வெடித்து தனஞ்சயன் வெளியேறுவதே! பிணத்தை புதைத்தால் 3 நாட்களில் 72  மணி நேரத்தில் தனஞ்சயன் வெளியேறும்! 

சிலர் சாமியாராய் இருந்து காலத்தை ஓட்டிய பின், காலன் வந்து சீவனை கவர்ந்து செல்வான்! சீவன் போனால் அவன் சாமியல்ல! போலி சாமியாரின், செத்த சாமியாரின் அறியாமையில் மூழ்கிய சீடர்கள் சாமியாருக்கு  கபால மோட்சம் கொடுத்து விடுவர்?! எப்படி தெரியுமா? செத்த சாமியாரின் தலையில் தேங்காயை ஓங்கி அடித்து  கபாலத்தை பிளப்பார்  தனஞ்சயன் வெளியேறும் இரத்தமும் சிறிது வடியும் ! முட்டாள்தனத்திலும் முட்டாள் தனம் இது தான்! 

செத்தபின் ஏதடா மோட்சம்!? 

சாகாமலிருந்து ஞானம் பெற்றால் அல்லவா இறைவன் திருவடியை அடையலாம்! மோட்சம் கிட்டும்! 

ஞான தவம் செய்பவர், கண்மணி ஒளியால் 
கணை எய்துவது போல் ஒளி உள்  போகும் 
போன ஒளி அங்கே உள்ள கசடுகளை நீக்கும்!  

அழுக்கை போக்கும்! 
தனஞ்செயனும் போய் விடும்! 
உயிர் தூய்மை அடையும். 

ஒளி பெருகும் ஞானம் கிட்டும்! இரு கண்ணும் உள் சேரும் அக்னி கலை! சீவனாகிய சிவன் துலங்குமிடம்! வாலை இருப்பிடம் ! சுற்றிலும் அழுக்கு தனஞ்செயனும் ! ஞான தவம் செய்து கண் ஒளி உள் போனால் முதலில் சுத்த படுத்தும் ஒளி மிகுந்து முச்சுடரும் ஒன்றாகும் பின்னரே ஜீவகாட்சி தொடர்ந்து சிவனை அடைய வாலை அமுதம் சாப்பிடனும் இதெல்லாம் ஞான அனுபவம்! திருநாவுக்கரசர் எவ்வளவு உயர்ந்த ஞான அனுபவ நிலையை
கூறி இருக்கிறார் பாருங்கள்

வெள்ளி, 2 நவம்பர், 2012

தன்னை உணர/ஞானத்திற்கு சரியான வழி எது?

தான் என்பது உயிர். இதை அறிய சரியான வழி எது?
பல குரு மார்கள் பல வழி சொல்லுகிறார்கள்.

எது சரி என்று தெரிந்து கொள்வது?

ஒரு பொருள் வாங்கும் போது எவ்வளவு ஆராய்ச்சி செய்கிறோம்.
ரிவ்யு படிக்கிறோம். தன்னை உணர அதை தானே செய்ய வேண்டும்.
எந்த வழி சரியான வழி, எப்படி செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வது?



வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

சாயுச்சிய நிலை!!

சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற்
சமாதி தா னில்லை தானவ னாகிற் "



நம்முடைய லட்சியம் இறைவனோடு இரண்டற கலப்பதேயாகும்! அது  எவ்வாறு எனில், 


இறைவன் பேரொளி 

நாம் ஆத்மாக்கள் சிற்றொளி! 

சிற்றொளியாகிய நம் ஆத்மஜோதியை  தவம் செய்து கண்மணி ஒளியை
பெருக்கி அக்னி கலையான ஆத்மஜோதியுடன்  இணைத்தால் பெரும் ஜோதியாகும்! 


இவ்வாறு தொடர்ந்து தவம் மேற்கொண்டால் ஒளி - ஆத்ம ஒளி மேலும் மேலும் பெருகி தலை உள் நடு ஜோதி உடல் எங்கும் வியாபித்து உச்சி முதல் உள்ளங்கால் வரை பரவி பல்கி பெருகி ஒளியுடலாகும்! அப்போது தான் நாமும் பேரோளியாவோம்! அப்படி பேரொளியாகியே நாம் பேரொளியான இறைவனுடன் இரண்டற கலக்க முடியும்! நான் அவனாவது அச்சமயமே!
 


சமாதி கூடி இருந்தால் போதாது! அதற்க்கு மேல் நிலை இந்த சாயுச்சிய நிலை!  ஒளியுடலாகும் நிலை!

நம் நாட்டில் அங்ஙனம் இறைவனை அடையும் முயற்சியில் தோல்வியுற்று சமாதி பெற்றவர்களும் கோடானகோடி பேர்கள்!! நல்ல சமாதி அனுபவம் பெற்றவர்கள் அவர்கள்! அவர்களெல்லாம் மீண்டும் பிறக்க வேண்டும்! இறைவனை இரண்டற கலப்பது வரை பிறவி தொடரும்! 


ஞானிக்கு உண்டு பிராரத்துவம்!! இறைவன் வகுத்த சட்டத்தில் ஓட்டை கிடையாது! இங்கே யாராயினும் சரி நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றால் தான் பட்டம்! அப்பழுக்கில்லாத, தூய்மையான பரிசுத்தமான ஆன்மாவே அன்பால் மட்டுமே ஆண்டவனை அடைய முடியும்?!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
தங்க
ஜோதி ஞான சபை - கன்னியாகுமரி

புதன், 20 ஜூன், 2012

தவம் பற்றி கேள்விகள்.

1. தீட்சை பெற என்ன தகுதி வேண்டும்?

தீட்சை எல்லா மனிதர்களும் பெறலாம்.

தீட்சை பெற முக்கிய தகுதி :

1 . சைவ உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும்.
2 . போதை , புகை போன்ற பழக்கங்கள் அறவே விடு நீங்க வேண்டும்.
3 . ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.

சுருங்க கூற வேண்டுமானால் பஞ்ச மா பாதகங்கள் செய்யாதவராக இருத்தல் வேண்டும். இப்பழக்கங்கள் இருப்பின் உடனடியாக இவைகளை கைவிட்டு , இனி இவைகளை செய்வதில்லை என சங்கல்பம் செய்து கொண்டு பின் தீட்சை பெறலாம்.


2. தவம் செய்வது எப்படி?

  • தவம் என்றால் மந்திர ஜபம் அல்ல. 
  • தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்பதோ அல்ல. 
  • தவம் என்றால் பிரணாயாமமோ அல்ல. 
  • தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல.
  • கண்மூடி செய்யும் எந்த செயலும் தவம் ஆகாது. 

கண்களை திறந்து தான் “விழி திறந்து” தான் தவம் செய்ய வேண்டும்.


இறைவன் திருவடியில் (நம் கண்ணில்- கண் மணியில் – கண்மணி ஒளியில்) மனதினை நிறுத்துவதே தவமாகும். சும்மா இரு என்பதன் அர்த்தம் இதுவே.

அதாவது நம் மனதை திருவடியில் வைத்து இருப்பதே.

குரு தீட்சை பெற்று நம் கண்ணில் உணர்வு பெற்று அதை
நினைத்து நினைத்து உணர்ந்து உணர்ந்து அதனால் ஏற்படும் நெகிழ்ச்சியில் திழைத்து திழைத்து சும்மா இருக்க இருக்க நம் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து கொட்டும். இங்நனம் தவம் தொடர்ந்தால் பலவித அனுபவங்கள் நாம் பெறலாம்.

 நமது வள்ளல் பெருமான் ஞான சரியையில் கூறியபடி நாம் இவ்வாறு தவம் செய்தால் பெறலாம் நல்ல வரமே.

நம் வினைகள் எல்லாம் எரிந்து விடும். பெறலாம் மரணமிலா பெருவாழ்வே. பிறவாப்பெருநிலை. அருட்பெரும் ஜோதி இறைவனோடு அந்த பரமாத்மாவோடு பேரொளியோடு நாமும் ஒளியாகி இணையலாம்.
பேரின்பம் பெறலாம்.


3 குருடர்கள் ஞானம் பெற முடியுமா?

நம் உயிரை பற்றி உள்ள வினைதிரைகள் நம் கண்மணி மத்தியில் உள்ள ஊசி முனை அளவு உள்ள துவாரத்தில் துலங்கும் ஒளியை (இறைவன் திருவடி) மறைத்து கொண்டு உள்ளது.

இவ்வினைதிரை பார்வை சக்தி உள்ளவர்களுக்கு கண்ணாடி போல் அமைந்து உள்ளதால் கண் ஒளியை கொண்டு பார்க்க முடிகிறது.

இதில் மிக பெரிய பாவம் குருடராக பிறப்பது. இவர்களுக்கு வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளத்தால் கண் ஒளியை கொண்டு பார்க்க முடிவதில்லை.

இதை விட பெரிய துரதிஷ்டம் திருவடியான கண்ணை அல்லது கண் ஒளியை பற்றி தவம் செய்ய முடியாமல் போவதே.

ஆனாலும் இறைவன் கருணை வடிவானவர். குருடர்கள் நேரடியாக தம் ஆன்ம ஸ்தானத்தை நினைத்து , அதில் குரு தீட்சையின் முலம் உணர்வு பெற்று தவம் செய்ய வேண்டும். இவ்வாறு தவம் செய்வது கடினமே என்றாலும் விடா முயற்சியின் மூலமும், வைராக்கியதுடனும் சாதனை செய்தால் வினை திரை அகன்று ஞானம் பெறலாம்.

எங்கள் ஞான சற்குரு நாதர் திரு.சிவசெல்வராஜ் அய்யா 2 கண் இல்லா அன்பர்களுக்கு தீட்சை தந்து உள்ளார்.


www.vallalyaar.com

திங்கள், 18 ஜூன், 2012

வினை திரை எங்கு உள்ளது ?

காணாத கண்ணில் படலமே கண்ணொளி
காணாத வர்கட்கும் காணாதது அவ்வொளி
காணாத வர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்
காணாது கண்டார் களவொழிந் தாரே.


 நம் கண்மணியில் மத்தியில் ஊசிமுனையளவு ஓட்டை உள்ளது!?
அதை மறைத்து ஒரு மெல்லிய கண்ணாடி போன்ற ஜவ்வு-படலம் உள்ளது!?
இதெல்லாம் பெரும் ரகசியம்! இதை தக்கலை பீர் முகமதுவும் பல பாடல்களில் குறிப்பிடுகிறார்! இறைவா என் இரு கண் படலத்தை நீக்கியருள் என வேண்டுகிறார்? ஞானிகள் கூற்று என்பதற்கு இதுவும் சாட்சி!

இறைவனை-ஒளியை காணாத கண்ணில் உள்ளவர் ஒளி படலம் வழியாகவே வெளியே தெரியும்! படலம் தான் நம் மும்மல திரை! (ஆணவம் கன்மம் மாயை) படலம் வழி பார்க்கின்ற மனிதனின் படலம் - வினை எப்படி
உள்ளதோ அப்படி அவன் செயல்படுகின்றான்! பார்வையே வினையாய் செயல்படுத்துகின்றது! 

படலம் இருக்கும் வரை  வினையிருக்கும் வரை சராசரி மனிதனே! சற்குருவை சரணடைந்து உபதேசம் கேட்டு தீட்சை பெற்று படலமாகிய வினை திரை அகல கண்மணி ஒளிபெருக்க தவம் செய்யவேண்டும்! படலம் அகன்றாலே நம் கண்மணி ஒளி நாம் காண நம் கண்முன் தோன்றும்! காணாத காட்சி எல்லாம் கண்ணில் காணுமடா என்கிறார் காகபுசுண்டர் ! உலகில் உள்ள மனிதர் அனைவருக்கும் உள் ஒளியாக துலங்கும் அந்த இறைவனை எல்லோருக்கும் பொதுவில் விளங்கும் பேரொளி, இருகண்ணும் உள்
சேரும் இடத்தில் பெருங்கண்ணாக நெற்றி கண்ணாக  அக்னி ததும்பும் அருட் கண்ணாக துலங்குகிறார் ! அதை கண்டவர் தீச்செயலை விட்டுவிடுவர்! தீச்செயலை விட்டாலே அவ்வொளியை காண்பார்! இதுவரை காணாத அம்மானுடர் கண் படலம் நீங்க பெற்று கண்ணொளி கண்டு தண்ணொளி கண்டு பேரின்பம் அடைவர்! பெறுதற்கரிய பெரும் பேறு இதுவே! குருவை நாடு! கண்ணை மூடிய படலம் நீக்க வழியறி! விழித்திரு!




ஞான சற்குரு சிவசெல்வராஜ்
தங்க ஜோதி ஞான சபை
கன்னியாகுமரி

Popular Posts