வியாழன், 30 ஜனவரி, 2014

சிவசெல்வராஜ் அய்யா மஹா சமாதி



தற்போது தங்க ஜோதி ஞான சபையில் ஒன்பது குருவை உருவாக்கி, ஞான சற்குரு சிவ்செல்வராஜ் அய்யா  மஹா சமாதி அடைந்து உள்ளார்கள்.  அவர்கள் பணி சூட்சுமத்தில் தொடர்ந்து கொண்டு உள்ளது.

வள்ளல் பெருமான் அருளால் இதுவரை 3000 பேருக்கு திருவடி-நயன - கனல்  தீட்சை கொடுத்து உள்ளார்கள்.

திருவடி ஞானத்தை உலகிற்கு முதல் முதலாக வெளிப்படுத்தியவர்.
எல்லா ஞானிகளும் சித்தர்களும் திருவடி தவம் செய்து தான் ஞானம் பெற்றனர் என்பதை தனது புத்தகங்கள் மூலம் வெளிப்படுத்தினார்.

வள்ளலார்
அகத்தியர்
அபிராமிபட்டர்
திருமூலர்
பட்டினத்தார்
ஆழ்வார்கள்
பல சித்தர்கள்
ஏசு
பீர் முகமது
நாயன்மார்கள் பலர் 

பணியை கண்டு அருளாசி வழங்கினர்.



:: பல கேள்விகள் எழும்பும் நிலையில் ::


மரணமிலா பெருவாழ்வு பெற கர்ம வினைகள் முழுதும்  தீர வேண்டும்.

கர்ம வினை தீர திருவடி தவம் தவிர வேறு வழி இல்லை.

நாம் எப்போது 0% கர்ம வினை உள்ளதோ அப்போது தான் முடிந்த முடிபான நிலை - சாயுச்சியம் அடைய முடியும்.

தங்க ஜோதி ஞான சபை மட்டுமே திருவடி ஞானத்தை வெளிப்படையாக உலகுக்கு சொல்லி வருகிறது.

திருவடி தீக்சை கொடுப்பது எவ்வளவு பெரிய செயல் என்று அதை கொடுக்கும் குருவுக்கு தெரியும்.

வள்ளல் பெருமான் அருளால் எல்லாம் சிறப்பாக நடந்து வருகிறது.


இப்பாதையில் பயணம் செய்பவருக்கு வள்ளல் பெருமான் துணை எப்போதும் உண்டு.


தங்க ஜோதி ஞான சபையில் தீட்சை பெற

1. சுத்த சைவ உணவு உட்கொள்ள வேண்டும்.
2. மது அருந்த கூடாது
3. புகை பிடிக்க கூடாது
4. கடவுள் பெயரால் உயிர் பலி கூடாது.


செவ்வாய், 7 ஜனவரி, 2014

ஞானம் மிக எளிமையான வழி!!

பக்தி யோகம் எல்லாம் நாம் செய்வது .

ஞானம் - இதில்  நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். சும்மா இருக்க வேண்டும்.  எளிமையான வழி.

உயிரை பற்றி இருக்கும் கருமங்களை விலக்கினால் போதும். அது தான் ஞான சாதனை. பிறவி வர காரணம் இதுவே.

பாவ புண்ணிய வினைகள் எங்கு உள்ளது? எப்படி உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?  உயிரோடு சேர்ந்து உள்ளது.

பிறப்பில் கூடவே வந்து - இறப்பில் நாம் எடுத்து செல்வது பாவ புண்ணிய வினைகள்.

உயிர் எங்கு உள்ளதோ .. வினையும் அங்கு உள்ளது.

-ஞான சற்குரு சிவசெல்வராஜ்




திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 


Popular Posts