சனி, 3 ஜனவரி, 2026

சஞ்சித கர்மம் எப்படி தீரும்?


நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
நனைந்தனைய திருவடி யென் தலைமேல் வைத்தார் "



நினைந்து நினைந்து 
உணர்ந்து உணர்ந்து 
நெகிழ்ந்து நெகிழ்ந்து 
அன்பே நிறைந்து நிறைந்து 
ஊற்றெழும் கண்ணீரதனால் உடம்பு நனைய 
ஞான தவம் செய்யும் அடியாரை நைய வைத்தார்! நைய புடைத்து வாட்டி எடுப்பார். 

நையாத மனிதர்க்கு உய்யாது கண்டு கொள்ளும் என்றே நந்தனார் 
சரித்திரக் கீர்த்தனை உரைக்கிறது! 

நம் சஞ்சித கர்மம் உட்பட எல்லா கர்மமும் பின் எப்படி தீரும்! 
சிலருக்கு கையில் திருவோடும் கிட்டும் தெருவோடும் போவார் ! 
நம்மை நைய புடைத்தாலும் கைவிட மாட்டான் கடவுள்! 
நம் நம்பிக்கையின் ஆழம் பரிசோதிப்பான் ! 

உயிரே போவதாக இருந்தாலும் அவனை திருவடியை விடக் கூடாது !!
சிக்கெனப்பிடிக்க வேண்டும்! காப்பான்? அருள்வான்! கடவுள்! 
எல்லா மும்மல வினைகளையும் நீக்கி அரவணைத்துக் காப்பார்! 

நனைந்த திருவடி - நினைத்து நினைத்து தவம் செய்தால் கண்ணீரால் 
நிரம்பிய நனைந்த திருவடி - நம் கண் குளம் போல் எப்போதும் 
தள தளத்துக் கொண்டேயிருக்கும் ! இதுவே ஆத்ம சாதகன் தோற்றம்!


நூல் - ழூவர் உணர்ந்த முக்கண்
பக்கம் - 145
குருவே சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts