திங்கள், 22 ஜூலை, 2019

சீடனாகாதவன் தெளிவில்லாதவன்

"தெளிவறி யாதார் சிவனை யறியார்
தெளிவறி யாதவர் சீவனுமாகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே"
                       பாடல்−1480
           
குருவிடம் உபதேசம் தீட்சை பெற்றாலே தெளிவு பெறலாம்!? குருஉபதேசம் தீட்சை பெறாதவர்களே தெளிவில்லாதவர்! அறிவில்லாதவர்! சீடனாகாதவன் தெளிவில்லாதவன் முட்டாள்! முட்டாள் எப்படி சிவனை இறைவனை அறிவான்?

இறைவனைப் பற்றிய தெளிவான கருத்து இல்லாதவன் எப்படி இறைவன் திருவடியை அறிவான்?! அறிந்தால் தானே தெளிந்தால் தானே, தான் தான் சீவன் அந்த சிவனின் அம்சம் என அறிவான்! சீவனான சிவனே நம் உள்ஒளி! ஒளியே சிவம்! என சிந்தை தெளியாதவன், குரு உபதேசம் பெறாதவன், சீடனாகாதவன் உணர மாட்டானே!

குரு உபதேசம் பெற்று சிந்தை தெளிந்து திருவடியறிந்து தவம் செய்து சீவனே சிவன் அவனே நம் உள்ஒளி என உணர்ந்தால்லவா பிறவிப் பிணிதீரும்! இந்த தெளிவில்லாதவன் இனியும் பிறப்பான்! சிந்தை தெளிய சீடனாகு!

மந்திரமணிமாலை
ஞான சற் குரு சிவசெல்வராஜ்

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts