சனி, 20 செப்டம்பர், 2025

அருள் வெளிப்படுவது கண்ணில்



"அருளெங்குங் கண்ணான தாரறிவாரே"


ஞானவிளக்கம் :

அருள் வெளிப்படுவது கண்ணில்தானே !
அன்பு வெளிப்படுவது கண்ணில் தானே !
கருணை வெளிப்படுவது கண்ணில் தானே !
காமகுரோதாதி எல்லாமே கண்ணில்தானே வெளிப்படுகிறது !

கண் பார்ப்பதால் தானே எல்லா செயலும் வினையும் நடக்கிறது !
கண்ணால்தானே எல்லாம் நடக்கிறது.
நமது கண் ! உலக மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியே கண்மணி உள்ளது !
கோலிகுண்டு போல, பூமியைப்போல உருண்டு திரண்ட சதைக்கோளமே கண்மணி !

உலகிலுள்ள 700 கோடி மக்களுக்கும் ஒரே மாதிரி இருக்கும் இந்த கண்மணியின் மத்தியில்தான் ஒளியாக இறைவன் துலங்குகிறான் !

இந்த ஒத்து இருக்கும் கண்ணை அறிந்தவனே உத்தமன் !

மற்றவன் செத்தவன் !
ஒத்ததறிவான் உயிர் வாழ்வான் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts